தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்

அத்திவெட்டி ஜோதிபாரதி
அத்திவெட்டி ஜோதிபாரதி !
போகியில் தீயன போகி!
யோகமும் போகமும் பொங்க!
இல்லம் புதுப்பிப்பு!
இரவல் பொருள் திருப்பி ஒப்படைப்பு!
வசதிக்காரர் வீட்டில்!
வண்ண வண்ண சாயங்களும்!
வகை வகையான பொருட்களும்!
நடுத்தர குடும்பம்!
நமக்கு வெள்ளை மட்டும் தான்!
நகை போதும் புன்னகை!
ஏழை மக்கள்!
ஏங்கி மொழுகினார் சாணத்தால்!
ஏற்றம் வரும் என நம்பி!
மதுக்கூர் சந்தையிலே!
மஞ்சள் கொத்து,!
வாழைத்தார்கள்!
வகைவகையாய்!
செங்கரும்பு வாங்கி!
செழிக்க வைப்போம் -நம்!
செவ்வேர் விவசாயியை!
வறுத்தெடுக்க வாளை மீனும்!
வகை வகையாய் காய்கறியும்!
வண்ண வண்ண கொம்புச்சாயம்!
வசீகரிக்கும் நெத்திசுட்டி!
சின்ன சின்ன இதழ் தொடுத்த!
சிங்கார மாட்டு மாலை!
தேடித் தேடி வாங்கி வந்து!
தேக்கி வைத்த நன்றிதனை!
தெவிட்ட தெவிட்ட தந்திடுவோம்!
அதிகாலை பொங்கலன்று விழித்து!
வீட்டை சுத்தம் செய்து கழுவி!
விதவிதமாய் கோலங்களால் தழுவி!
மங்கையர்கள் மகிழ்ந்து மகிழ்ந்து உலவி!
மற்றவர்கள் இல்லங்களில் போய்!
மகிழ்ந்து மகிழ்ந்து!
கோலங்களைப் பார்ப்பர்!
கூடிப் பேசி குதூகளிப்பர்.!
சரியான நேரத்தில்!
சரமாக கோடு திறந்து!
தளமேடை அமைத்து!
சாணத்திலே அருகம்புல் பிள்ளையார்!
கிழக்குப்பக்கம் பார்க்கவைத்து!
வாழைப்பழ சீப்பும், செங்கரும்பும், மஞ்சள் கொத்தும்!
வழமை போல் சர்க்கரைப்பொங்கல் வெற்றுப்பொங்கல்!
பொங்கி வரும் நேரந்தனில்!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலே பொலிக!!!
பொங்கலே பொலிக!! -என்று!
கூவிக் கூவிக் குதூகளிப்போம்!
பொங்கிய பொங்கலுக்கு!
மஞ்சள் கொத்தால்!
மாலையிட்டு!
ஞாயிறு தொழுது குடும்பத்தோடு!
நன்றிக்கடன் தீர்த்துவைப்போம்.!
ஆண்டிற்கு ஒருமுறை!
அறுதியிட்டு கூறாட்டால்!
அதனையும் மறந்து விடுவோமோ?!
மறுநாள் மாட்டுப்பொங்கல்!
மகிழ்வுடனே எதிர்பார்த்து!
வருடமெலாம் திங்கும் வைக்கோலுக்கு!
வசதியாய் விடைகொடுக்க!
வந்தது பொங்கலென்று!
வாரி வாரி அறுத்திடுவோம்!
வயல்களிலே வளர்ந்த புல்லை!
காலையிலிருந்து கால்நடைகளிடம்!
கனிவுடனே நடந்துகொள்வோம்!
களத்துமேட்டிலே நற்ப் புல்!
கண்ட இடம் மேய்த்து!
கானோடை ஓடை செவந்தான்,!
சாமந்தி பிச்சினி ஒடப்பா!
திரிகுளம் வீரையன்குளம் வன்னார்குளம்!
தண்ணீர் காட்டி குளிப்பாட்டி!
வீட்டுக்கு ஓட்டிவரும் முன்னே!
செங்கல் மாவில் கோலமிட்டு!
மங்கையர்கள்!
மகிழ்வுடனே காத்திருப்பார் வரவேற்க!
குங்குமமும் இட்டிடுவார்!
கோலமிடும் பொற்ச்செல்வி!
சங்கதனைக் கட்டிடுவார்!
சரஞ்சரமாய் வண்ண மாலையும் இட்டு!
செதுக்கப்பட்ட கூரிய!
கொம்புக்கு வண்ணம் தீட்டி!
பெரியவன் வைரவன் வனத்தில் பெற்ற!
ஈச்சை மட்டை கசங்கை!
மெல்லிய சுத்தியால் இழைத்து!
மாவிலை வேப்பிலை பெரண்டை!
ஆவாரம்பூ கன்னிப்பூ நெல்லிக்கொத்து!
மாலையாய் தொடுத்து ஒற்றைப்படையில்!
மகிழ்வுடனே மாட்டுக்கு மாலையிட்டு!
பொங்கிய பொங்கலை ஊட்ட!
தண்ணீர் நல்லெண்ணெய் அரப்பிட்டு!
தண்ணீரிட்டு கழுவி!
பொங்கலூட்டி வாய் கழுவி!
தாரை தப்பட்டையோடு!
பொங்கலோ பொங்கல்!!
பொங்கலோ பொங்கல்!!!
பொங்கலே பொலிக!!
பொங்கலே பொலிக!! -என்று!
போற்றிடுவோம் மாடுகளை என்றும்...!
திட்டியதை சுற்றியும் போட்டு!
மாட்டை தாண்டவிட்டு!
கட்டிடுவோம் புது அச்சில்!
கொட்டிடுவோம் புல்லதனை!
தெவிட்ட தெவிட்ட!
பசியறியா விரதம் இன்று!
விருந்தினரை உபசரித்து -பின்!
பசியாறி விருந்தோம்பல் போற்றிடுவோம்!
கண்ணுப் பொங்கலை!
காணும்பொங்கலாய்!
கன்னிப் பொங்கலாய்!
கவின்மிகு கலைநிகழ்ச்சிகளும்!
களித்திடுவோம் பிள்ளைகள் விளையாடக் கண்டு!
காத்திடுவோம் தமிழர் பண்பாடு என்றும்

ஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்

கோகுலன்
நான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்!
நீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்!
யார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்!
சற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்!
அடுத்த சற்றுநேரத்திற்கெல்லாம்!
அந்த ஒற்றையடிப்பாதையை பகிர்ந்து!
ஓரோரமாய் நடைபோயிருந்தோம்!
இருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி!!
தூரமாய் கேட்டதொரு காட்டாற்றின் !
துல்லிய சப்தத்தை சாட்சியாய்க்கொண்டு!
காட்டுப்பூக்களின் மகரந்த தூவல்களுடனும்!
மழைத்தூரல்களின் தோரணைகளுடனும்!
பழகினோம் சிரித்தோம் களித்தோம்!
இன்னும் பிறந்திராத நம்!
இருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்!
தும்பிகளுடன் விளையாடியும் !
சாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்!
சிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின் !
அச்சிறு பயணம் முடித்து !
அகலவிரிந்தந்த பெருஞ்சாலை கண்டபொழுதுதான்!
நம்மிருவரின் பாதைகளும் எதிரெதிர்த்திசையில் !
அமைந்திருந்ததை அறிந்தோம்!
அதன்பின், உன்னுடையது என்னுடையதென!
பிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில் !
உதட்டில் திணிக்கப்பட்ட புன்னகையுடனும்!
ஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்!
நினைவுகளை சுருட்டி பிரியத்துணிந்தோம்!
மீண்டும் இணையுமந்த பாதைதேடியே!
நீளுமிந்த கண்ணாமூச்சி ஆட்டத்தின் !
ஒவ்வொரு தேடலிலும் நம்மைபார்த்து !
அர்த்தமாய் புன்னகைக்கிறன காட்டுப்பூக்கள்

எதையோ தேடி எதையோ பெற்று

நிர்வாணி
இதைத்தான் தேடினேன் என்று!
பொய் சொல்லி!
அவர்களின் பொறாமையை!
கொஞ்சம் ரசித்து!
என் தோல்வியின் சோகத்திலிருந்து!
விடுபட முயற்சி செய்வேன்!
என்னையும் ஏமாற்றி!
அவர்களையும் ஏமாற்றி!
வாழும் வாழ்க்கை தேவையா எனக்கு ?

சிறகு கொள்

ரவி (சுவிஸ்)
வார்த்தைகளுள் தமது !
கவலைகளை புகுத்தி !
தனக்களவாய் !
முடிந்தால் கனதியாய் !
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா !
குழந்தைகளின் !
போர்ச்சோகம் கொடியது. !
பனிக்காலம் !
கொண்டுபோயிற்று அதன் பசுமையை !
மழலை இழந்த சோகத்தில் !
வாடும் ஓர் தாய்போல் !
இந்த மரமும் ஏதும் இழந்ததுவோ !
அன்றி !
சூரிய முகட்டுக்கு தன் பசுமையை !
அனுப்பிவைத்து - அதன் !
வரவுக்காய் காத்திருக்கிறதுவோ !
அறியேன் நான். !
பனிப்போரில் இழந்த தன் !
பசுமையை எண்ணி !
சோகம் கொள்கிறது இந்த மரம் !
என்று நான் !
எடுத்துக் கொள்கிறேன். !
சிறகொடுக்கி தனியாக !
கொடுங்குகிறது ஓர் குருவி !
போர்பட்ட குழந்தையொன்றின் !
புரியாத சோகங்களும் ஏக்கங்களும் !
இந்தக் குருவியின் இறக்கையுள் !
புகுந்ததோ என்னவோ !
அது கொப்புதறி பறப்பதாயில்லை. !
சூரிய ஒளி !
பனிப் புகாரினூடு வடிந்திருக்கும் இந்த !
மங்கிய பொழுதில் !
ஈரம்பட்டு காட்சிகள் கலைகிறது - !
பார்வைகளை முறித்தபடி. !
அவரவர் பார்வையில் !
சமாதானக் கனவு !
விதம்கொள்கின்றது. !
குழந்தையின் உலகையே !
அங்கீகா¤க்காத அதிகாரப் பிறவி நீ !
அதன் உளம்புகுந்து சோகம் அறிய !
முடியுமா உன்னால் !
என்கிறது வேகமுறும் காற்று !
பனித்திரளை துகளாக்கி !
வீசியடிக்கிறது !
குளிர்கொண்டு அறைகிறது என் !
முகம் சிவக்க. !
போரின் இறப்பை !
கொத்திவரும் ஓர் செய்திக்காய் !
இந்தக் குருவியும் காத்திருக்கிறது! !
- !
(010302)

கனவு - நனவு

காசிகணேசன் ரங்கநாதன்
1. !
கனவுகள் !
நெஞ்சில் நெருப்பாய்ச் !
சுடுகின்ற வேளையில்.. !
மெலிந்த !
கோடைக் காலத்து ஓடையாய் !
நனவுகளின் நீண்ட நடைப் பயணம்... !
2. !
பழம் நினைவுகளாய் !
நீண்டு கிடக்கும் !
கோடைக் காலத்துச் சாலைகளில் !
வியர்த்துப் புழங்கிப் !
பன்னெடுந்தூரம் கடக்கையில் !
ஒரு விநாடி !
நிழல் ஒதுங்கக் !
கிடைத்த !
ஒரு நனவு மரம், !
எத்தனையோ கோடி கனவுகளில் !
ஒரு துளி நிறைந்ததென்று தேற்றும். !
!
3. !
சில விநாடிகளில், !
மீண்டும் கிளைதாவும் குரங்குபோல் மனம். !
கனவே, கனவே, !
காலத்துள் அடங்காத கனவே, !
நீ !
காலத்தில் சிக்கினாய் !
கழிவதெப்போது ?

உரையாடல்களின்

றஞ்சினி
பரப்பிய தாள்களாய்!
அறையெங்கும்!
கலைந்து கிடக்கிறது!
அன்றைய உரையாடல்!
கலவியில் கிறங்கிய!
பொழுதுகள்போல!
மயங்கிக்கிடக்கும் !
உடலையும் !
தாகத்துடன்!
வார்த்தைகளுக்காய்!
அலையும்!
என் கவிதையையும்!
வெற்றுத்தாளின் !
வேதனையையும் !
என்னையும்!
உணரமுடியுமா !
உன்னால்!
-றஞ்சினி

அரங்கேற்றம்

தி.ராஜகோபாலன்
கடவுள் இல்லையென்று யார் சொன்னது ? !
இல்லாவிட்டால் நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறேன் ? !
பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் திருஒடு இலவசம். !
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ... !
என்றைக்கும் போவேன் வேலைக்கு நேர்காணல். !
இன்றைக்கும் வேலை எமக்கு காணல்நீர். !
வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார். !
முன்னதின் மதிப்பு உயர்ந்துகொண்டே போகும். !
பின்னதில் மதிப்பு குறைந்துகொண்டே போகும். !
!
மாநிலத்தை மூன்றாக பிரிப்பது. !
முடிவு எடுக்கப்பட்டது. !
தலைவருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தவுடன்... !
கருவூலத்தில் நெல் கொள்முதல் !
கேரளத்தில் அரிசி பறிமுதல்

மன்னராலும் கரையிடமுடியாத

வேதா. இலங்காதிலகம்
25-9-06. !
மனம் நெகிழ்ந்த போதும், !
மனம் மகிழ்ந்த போதும், !
மனம் குலைந்த போதும், !
மனம் அனாதரவான போதும், !
மனம் கனத்த போதும் !
மணித் துளியாகத் துளிர்க்கும். !
மனம் பின்னர் இலேசாகும். !
மாய மந்திரமானது கண்ணீர். !
-------------------- !
வல்லின மனதையும் கரைக்கும். !
நல்லின மனதையும் சாய்க்கும். !
விழியின் கரையுடைத்து, சமயத்தில் !
வழியும் வெண்படலம் உருகி !
வழியும் உயர் பனித்துளி. !
விழிச்சிப்பி விரிந்து கணத்தில் !
வழியும் முத்துகள் கண்ணீர். !
-------------------- !
கண்களில் பளபளக்கும் அபிசேகக் !
கனகதுளி வெந்நீர் திரையிட்டால் !
மன்னராலும் கரையிட முடியாது. !
தேசியச் சாரல் கண்ணீர். - சமயத்தில் !
தந்திர உபாயக் கருவி. !
தூசி விழுந்தாலும் இது ஓர் !
ஆசி பெற்ற பொது நீர். !
அரிய உயிரை அரிக்கும் நீர். !
------------------- !
உப்புக் கரிக்கும் கண்ணிர். !
உழைப்பாளி, பணக்காரன், ஏழை !
இந்து, கிறிஸ்து, இஸ்லாம் !
கிறுக்கன் மேதையென எண்ணாதது. !
சம்பந்தன் கண்ணீருக்குப் பாலமுதை !
சர்வேசுவரி இரங்கி ஊட்டினாள். !
வானத்துக் கண்ணீர் மழையில் !
வளமாகிறது அற்புதப் பூவுலகு. !
------------------ !
வேப்பமரத்துக் கண்ணீர் !
அப்புதலுக்கு ஒரு பிசின். !
இறப்பர் மரத்துக் கண்ணீரில் !
இராச்சியப் பொருளாதாரம் உயர்வு. !
மனிதக் கண்ணீரின் சாதனையன்றி !
மரத்துக் கண்ணீரும் உயர்வுதான். !
கண்ணீர் வடிக்கும் துன்பத்தால் !
கட்டுடலே தளர்கிறான் மனிதன். !
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம். ஓகுஸ், டென்மார்க்

தெருவிற் தொலைந்த நிரபராதிகளின் மீட்கவியற்பாடல்

போஸ் நிஹாலே
மீந்திருந்த எல்லாச் சொற்களையும் !
அவர்களை நோக்கி வீசியாயிற்று !
அவர்கள் !
சிலுவையில் எழுதிய உனது முகம் பற்றிய கதைகளை !
அவற்றில் தேடுகிறார்கள் !
எக்காலத்திலும் திரும்பிவராத அச்சொற்கள் !
நீ ஒரு பறவையைப் போலிருந்தாய் என்பதைத் தவிர !
வேறெதையும் கொண்டிருக்கவில்லை !
உன்னால் நேசிக்கப்பட்ட !
நூற்றுக்கணக்கான கவிதைகளின் காதல் ததும்பும் வார்த்தைகளை !
நான் வைத்திருந்தேன்: !
குடிமயக்கத்திலும் !
சிகரெட் புகை நாற்றத்திலும் !
நீ எங்களோடிருந்ததற்கான அடையாளங்களை !
நான் வைத்திருந்தேன் நான் வைத்திருந்தேன் !
அவர்களோ அவற்றில் மின்கம்பிகளைச் செருகினார்கள் !
எல்லாம் முடிந்த பாழ் மௌனத்தில் விசமுட்களை ஏற்றினார்கள் !
அவ்வாறு நடக்காதென நானிருந்த கணத்தில் !
பார்வையைப் பிடுங்கி !
இந்தப் பிரபஞ்சவெளியில் ஒலியெழ வீசியதை நான் உணர்ந்தேன் !
குயில் தனது பாடலை பாலைவனங்களுக்கப்பால் !
எடுத்துச்சென்றுவிட்டது !
அவர்களோ !
எமது வாழ்வு பற்றிய அடையாளங்களனைத்தையும் கடலுக்கப்பால்: !
யாருக்கும் தெரியாத உவர்க்காடுகளில் புதைத்துவிட்டார்கள் !
நான் உணர்கின்றேன் !
நீயோ நானோ !
எமது தாய்களின் கலைந்தகேசத்தையும் !
கலங்கித் ததும்பும் விழிகளையும் !
அவர்களின் உள் விசும்பும் மன ஒலிகளையும் !
இனி எப்போதும் கேட்கவோ பார்க்கவோ போவதில்லை !
சிறைக்கதவின் துவாரங்களுக்கு வெளியே !
போஸ் நிஹாலே 03-1999 !
நன்றி சரிநிகர்

ஊரோவியம்

ரவி (சுவிஸ்)
ஒரு கனவாவது கண்டுவிடவேண்டும்!
என்!
சிறுபருவ நாளொன்றை.!
நாளும் பொழுதுமாய் அன்று நான்!
இளந் து£ரிகை கொண்டு!
வரைந்த!
எம்ஊர்ச் சித்திரத்தை!
இப்போதைய என் ஊர்சுற்றலாலும்!
அழிக்கமுடியவில்லை.!
பதினெட்டு ஆண்டுகளை!
பனித்தேசத்தில் படரவிட்டு இப்போ!
படர்ந்தும்போனேன்தான்.!
ஆனாலும் எனது ஊர்!
என்னிடம் ஓவியமானது.!
யுத்தம் நடந்துசென்ற வீதிகளெல்லாம்!
சிதைந்து!
மணல்வாரி ஒழுங்கைகளாக,!
ஒழுங்கைகள் ஒற்றையடிப்பாதையாகிப் போன பின்னும்!
எதுவும்!
என் இளமைப்பருவ ஊரை!
அழித்துவரையமுடியாமல் போனதுதான், போ!!
எனது இளமைப்பருவ ஊர்!
அழிக்கப்பட முடியாததாய் மனசில்!
மாட்டப்பட்டே இருக்கிறது.!
எனது இளமைப்பருவ நட்புகளும்!
என்னிடமே இருக்கிறது.!
என் பால்ய நண்பர்களை கண்டதும் பேசியதும்!
மிக சாதாரணமாகவே இருந்தது.!
அம்மாவைக் கண்டதும்!
பேசியதும், ஏன் கோபித்ததும்கூட!
இயல்பாகவே இருந்தது.!
குறுகிய சந்திப்பின் பின்னான ஒரு நீள்!
பயணத்தின்பின்!
எதுவெதுவெல்லாமோ பேசியிருக்கலாம் என்ற!
நினைவுகளின் முளைப்புகள் இப்போ!
வயற்காடுபோல் விரிகிறது.!
வலிந்து நான் பிரதியீடு செய்யும்!
முனைப்பிலிருந்து ஊர்ச் சித்திரம்!
நழுவிவிடுகிறது.!
எனது பயணத்தின் வலிமை!
அதன் காத்திருப்பு வருடங்கள்!
எல்லாமே!
தோற்றுத்தான் போயிற்று.!
இன்னொரு பயணத்தின் உந்தல் எனது!
இளமைப் பருவத்து ஊரோவியத்தால்!
வளைந்துபோயுள்ளது.!
சிறுபராய நாளொன்றை நான்!
கனவில் பயிரிடும் கணமொன்று!
எனக்கு வேண்டும்!
பசித்துப்போயிருக்கிறேன்.!
- ரவி (சுவிஸ், 070104)!
*** கவிஞர் அனுப்பிவைத்த படங்கள்