தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விமானம்

ஆ.முத்துராமலிங்கம்
சிறு பிராயத்தில்!
அலாதிப்பிரியம் விமானங்கள் மீது.!
!
வெகு உயரத்தில் குச்சியாய் செல்லும்!
விமானத்தை பலமுறை பார்த்தும் அதன்!
ஆச்சரியம் குறைந்ததில்லை.!
!
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கூட!
அதன் இறைச்சல் கேட்டு!
வெளிமுற்றத்திற்க்கோடிவந்து!
பார்த்திற்கின்றேன்.!
!
கோவில்கொடையில்!
சந்தையில் எங்கும் என்!
விளையாட்டுப் பொருளில் முதன்மை!
வகித்தது விமானம்.!
!
சில தினங்களுக்கு முன் கூட!
அதன் நினைவுகள்!
பூட்டிய என் உதடுகளுக்குள்!
சிறு புன்னகையை மிச்சம் வைத்திருந்தது.!
!
ஆனால் இன்று என் பிள்ளைகள்!
விமானச்சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று!
பதுங்குக்குழிக்குள் புகும் அவலம் பார்த்து!
அறைகின்றது! விமானம் ரசித்த என் நெஞ்சை.!
!
விமானம் குறித்த என்!
ரசனையும், ஆச்சரியமும்!
கைநழுவி விழுந்த பீங்கான்!
கோப்பையைப் போல!
உடைந்து சிதறிவிட்டது.!
!
பாட்டி சொல்லும் பேய் கதைகளைப் போல்!
பயத்தை நிறப்புகின்றது விமானங்களும்!
அதன் செயல்களும்.!
!
-ஆ.முத்துராமலிங்கம்!
சாலிகிராமம்

போரபிமானம்

ரவி (சுவிஸ்)
அழிவுகளைக் கணக்கிட்டுக் கொள்ளும்!
காலங்கள் இவை.!
இராணுவவீரன் களைத்துப் போய் இருக்கிறான்.!
குண்டுவீசி பெயர்த்த இடிபாடுகளின் நடுவே!
இவன் ஒரு சிகரட்டையோ கட்டையோ ஊதியபடி!
இளைப்பாறுகிறான்.!
பதவிநடை பிசகாமல் அரசியல்வாதிகள்!
ஒலிவாங்கி; நோக்கி நடக்கின்றனர்.!
பத்திரிகையாளர்கள் குறிப்பெடுக்கின்றனர்.!
ஒருவன் தன்னை பாதுகாக்கும் உரிமை என்பது!
இன்னொருவனை!
அல்லது இன்னொருவளை அழிப்பதாகும்!
என்பது கோட்பாடாகிறது.!
ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியவனுக்கு!
பயங்கரவாதி பட்டமளிக்கப்படுகிறது.!
போர்விமானத்தின் இரைச்சலில் ஊர்!
ஒளித்துக்கொள்கிறது பதுங்கு குழிகளினுள்.!
குண்டுகள் வலைவீசி இழுத்த!
கட்டடங்களின் சிதைவுக்குள்!
குழந்தை அந்தரிக்கிறது.!
நாய் இருப்புக் கொள்ளாமல் ஓடித்திரிகிறது.!
கிற்லரின் யூதவதை முகாமிலிருந்து கிளம்பிய!
ஒரு பிசாசுபோல்!
புகைமண்டலங்களின் நடுவே!
வெளித்தெரிகிறது இஸ்ரேல்.!
மீண்டும் லெபனானுக்குள் புகுந்துகொள்கிறது.!
ஆயுதங்களை பிரசவிக்கும் ஆலைகளில் இங்கு!
இயந்திரங்கள் சூடாகிக்கொண்டிருக்கின்றன.!
இவர்களுக்கான சொர்க்கங்கள்!
தமது மண்ணிலேயே எழுதப்பட!
ஏழைநாடுகளுக்கான சொர்க்கங்கள்!
அடுத்த பிறவியில் என!
சிலுவையை உயர்த்துகின்றனர் பாதிரிமார்!
வத்திக்கானின் மேலாக.!
அவர்கள் எம்மிடம் காவிவந்த பைபிள்!
இப்போதும் எம்மிடம் இருக்கின்றன.!
எமது வளங்கள் எம்மிடம் இல்லை.!
சபிக்கப்பட்ட பூமியின் ஏழ்மைக்கு!
சபிப்பவன்!
போரை முதலுதவியாய் வழங்குகிறான்.!
அழி! எஞ்சிய எல்லாவற்றையும் அழி!!
மனிதாபிமானம் பற்றிப் பேசு!
போர்நெறி பற்றிப் பேசு!
ஓயாது குண்டுவீசு, கொல்!
கொன்று போடு ஒரு தாயையோ!
குழந்தையையோ அன்றி ஒரு நாயையோ!
கிடையாதபோது!
அசையாமல் நிற்கும் ஒரு பல்லிக்குமேல் தன்னும்!
குண்டுவீசு.!
தன்னைப் பாதுகாக்கும் உரிமை என்பது!
மற்றவனை அழிப்பதென்பதாகும்.!
வீசு!!
- ரவி (05082006)

சுவாசம்

வேல் கண்ணன்
மீன் விற்கும் ஒருத்தியும்!
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்!
ஒரே வீட்டில் இருந்தார்கள்!
இவர்கள்!
கண்ணயர்ந்தவேளையில் !
சுவரில் சாய்ந்திருக்கும்!
கூடைகள்!
நூகர்தலுக்கு!
இடம் வலம் ஏது?!
கலந்தேயிருந்தன!
வாசனையும் வீச்சமும்!
ஆத்திரமோ அவசரமோ!
நாள் ஒன்றில் மாறிப்போன!
கூடைகளிருந்து கூடுதலாகவே!
விற்றும் தீர்த்தன !
சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து!
கலந்தே வெளியேறுகிறது!
நாசிகள் தேர்ந்தெடுத்து!
கொள்கின்றன தேவையானவற்றை

திருமண நாள்

பாரதிமோகன்
அதி வேக உலகம் !
ஒயாத உழைப்பு !
நின்று பேசி !
நலம் விசாரித்து செல்ல கூட !
நேரமின்மை !
முந்தி செல்லும் !
சக மனிதனை !
தோற்கடித்து !
முன்னேற துடிப்பு !
இவற்றுகிடையில் !
மனைவி குழந்தை !
குடும்பம் என்பதெல்லாம் !
மூன்றாம்பட்சமாகி விட்ட !
எனக்கு !
அன்பை !
அவசரமாக பரிமாற !
ஒரு வாய்ப்பு !
திருமண நாள்

அரவிந்தன் கவிதைகள் 02-12-07

எம்.அரவிந்தன்
அரவிந்தன் கவிதைகள்!
மௌனத்தை!
கிழிக்கிற!
சத்தம் !
அடங்கியபின்!
அதை விட சத்தமாய்!
மீண்டும்!
அறையும்!
மௌனம்.!
---------------------!
குழந்தைகள்!
போட்டிக்கு இல்லாத!
இரவில்!
பூங்கா ஊஞ்சலில்!
ஆடுகிறது!
காற்று.!
----------------------!
இலை சிந்தும் !
மரமொன்றை!
படமாக!
வரைந்து வைத்தேன்!
அதை யார் யாரோ!
எடுத்துப் பார்க்கையிலெல்லாம்!
விழுந்தது!
இன்னுமொரு இலை

மயிலே இறகாய்

ஆ.மணவழகன்
============= !
- ஆ. மணவழகன் !
புத்தகத்தின் நடுவில் !
புதைத்து வைத்த மயிலிறகு !
குட்டி போடவில்லை இன்னும்... !
இறகு கொடுத்த உன் நினைவோ !
'குட்டி மேல் குட்டி'

ராஜ்பவன் கனவுகள்

புதியமாதவி, மும்பை
புதியமாதவி, மும்பை. !
கனவு காணுங்கள் !
விடிந்துவிடும் !
நம் கலாம் சொல்லலாம் !
எங்கள் கவிதைகள் !
சொல்லுமோ? !
கனவுகள் காண விழிகள் வேண்டுமே !
கனவுகள் எழுத இமைகள் வேண்டுமே !
விழிகளில்லாத இமைகள் !
இமைகள் எரிந்த விழிகள் !
எப்படி எழுதுவது !
எங்கள் கனவுகளை. !
இமயத்தைப் புரட்டிப்போடும் !
நெம்புகோல் கவிதையை !
இந்த நொடியிலும் !
என்னால் !
உங்கள் அவைக்குத் தரமுடியும் !
அதனால் என்ன பயன்? !
கங்கையும் காவிரியும் !
இணைந்திடவா போகிறது? !
எல்லோருக்கும் விடுதலை !
எல்லோருக்கும் சம உரிமை !
மக்களாட்சியின் மகத்துவத்தை !
எழுதிய சட்டங்கள் !
வாழ்ந்து கொண்டிருக்கிறது !
செங்கோட்டையில். !
ஆனால் !
நாங்கள் மட்டும் எப்போதும் !
வெண்மணியில் எரிந்து !
தாமிரபரணியில் கரைந்து !
ஊடகங்கள் காட்டமறுக்கும் !
கோர முகத்துடன் !
புதைந்து கொண்டிருக்கிறோம். !
டாலர்க் கனவுகளில் !
கணினி மூலைகள் !
கடவோலைக்காக காத்திருக்கின்றன. !
இரட்டைக் குடியுரிமைப் பேசும் !
பச்சை அட்டைகளின் !
பாதம் நக்கிய !
இந்திய நாக்குகள் !
வல்லரசுகளின் ஒப்பந்தகோப்பையில் !
மதுவருந்தி !
மயங்கிக் கிடக்கின்றன. !
சட்டம் ஒழுங்கு !
கெட்டுப்போனதாய் !
நித்தமும் குரைக்கின்றன !
அரசியல் மேடைகள். !
மறதி எப்போதும் !
மனிதகுணம் என்பதால் !
வாழ்ந்துகொண்டிருக்கிறது !
கூட்டணி பேரங்கள். !
குடிசைகள் இல்லாத !
மும்பையின் சாலைகள் !
சாத்தியப்படுமா? !
எத்தனைக் கோடிகள் !
எத்தனைச் சட்டங்கள் !
எத்தனைத் திட்டங்கள் !
அத்தனையும் தலைகுனிகிறது !
ஓட்டைக்குடிசைகளின் !
கிழிசல்கள் கண்டு. !
புரிந்துகொள்ள முடிவதில்லை !
சமுதாய ரசனையை. !
சந்திரமுகியுடம் ஆடிய கண்கள் !
தவமாய்த் தவமிருக்கும் !
விசாலமான பார்வை !
விசித்திரமான காட்சிகள் !
எப்போது நடக்கிறது !
எங்கள் நாடகமேடையில். !
எங்கள் பதினாறு வயதில் !
எந்தை சொல்லுவார் !
எப்போதும் !
உதவி வேண்டுமானால் !
கேட்டுவிடு காவல்துறையிடம். !
இன்று- !
எங்கள் புதல்விகளுக்கு !
எங்கள் தந்தையர் சொன்ன மந்திரத்தை !
தரணியில் சொல்லமுடியாமல் !
தலைகுனிந்து நிற்கிறது !
எங்கள் சரித்திரம். !
'விடுதலை விடுதலை !
எல்லோருக்கும் விடுதலை' !
இப்படி எல்லாம் !
விடுதலைப் பண்பாடி !
விண்ணதிர ஆடிட !
எனக்கும் ஆசைதான் !
ஆனால் !
ரத்தம் சிந்தாத போராட்டங்களில் !
ஆயுள்கைதியாகும் விடுதலை !
சமத்துவமில்லாத சமுதாயத்தில் !
தூக்கிலிடப்படுகிறது. !
எங்கள் !
போராட்டக்களத்தில் மட்டுமே !
எழுதப்பட்டிருகிறது !
சமுதாய மீட்சி. !
எதிரிகளை வீழ்த்தும் !
இமாலயப் போர்களின் !
வெற்றி முரசுகள் !
வெற்றி மயக்கத்தில் !
எதிரிகளிடமே !
விற்கப்படுவதும் !
விலைபோவதும் !
தொடர்கதையாக !
தொடரும்வரை !
எப்படி எழுதுவேன் !
சமத்துவ சமுதாயத்தின் !
சரித்திரக் கனவுகளை? !
தோற்றுப்போவது !
கனவுகள் மட்டுமல்ல !
கனவுகளைச் சுமந்த !
எங்கள் தலைமுறையின் !
போராட்டங்களும்தான். !
இனி- !
நாங்கள் கனவுகளை !
விலக்கி வைக்கின்றோம் !
மன்னிக்க வேண்டும் !
வல்லரசு கனவுகாணும் !
ராஜ்பவன் தோட்டங்கள். !
மன்னிக்க வேண்டும் !
கனவுகளைத் தின்று கொழுத்த !
எங்கள் கவிதைராசாக்கள். !
மன்னிக்க வேண்டும் !
கனவு வரிகளில் !
உங்கள் விருதுகளுக்காக !
காத்திருக்க மறுக்கும் !
எங்கள் கறுப்பு கவிதைகளை

நான் நானாகவே.... நீ?

ஆ.மணவழகன்
நீயா?!
நீயாகத்தான் இருக்குமோ?!
ஒருவேளை!
நீ நீயில்லையோ!!
நீ இல்லையென்றால் அப்போ நீ யார்?!
நெடுந்தொகையாய்!
நெடுநேரம் இல்லை!!
குறுந்தொகையாய்!
கொஞ்சவுமில்லை!!
முல்லைப் பாட்டாய்!
முகம் மலரவுமில்லை!!
குறளாய்.. குறைவில் விளக்கமாய்..!
கோடிட்டுக் காட்டவும் இல்லை!!
'ஆத்திச்சூடியாய்' ஒற்றை வரியில்!
நான்மறுபடி பிறக்க!
நீ ஒரு முறை பூத்தாய்!!
அன்றும் இல்லை!!
அன்றுமுதல் என்றும் இல்லை!!
என் விழிகளுக்கும் மனதிற்குமான உறக்கம்!!
நீயே தானா?!
நீதான் என்றால்..!
நிமிடத்தில் உணர்வாயே!!
நான் நான்தான் என்பதை!!
வருடங்கள் பலவற்றை வாங்கிக்கொண்டது!!
வயிற்றுக்காக நான் வந்ததும்...!
வாழ்க்கைக்காக நீ சென்றதும்....!
இன்றும் கூட என் நினைவில் - என்னைப்!
புரட்டிப்போட்ட உன் முதல் புன்னகை!!
நீதான் என்றால் ...!
நீ நீயாகத்தான் இருக்கிறாயா?!
ஆம்! ஆம்!!
நீ! நீயேதான்!!
தூவானக் குளியல் முடித்த!
பறவையின் சிலிர்ப்பாய்....!
அதே படபடப்பு!
உன் கண்களில்...!!
**********!
ஆ. மணவழகன்

உடையாத கண்ணாடியில் உலகிற்கு

வித்யாசாகர்
உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!!
-----------------------------------------------------------!
நாட்கள் தொலைத்திடாத!
அந்த நினைவுகளில்!
சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ;!
உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய!
முதல் பொழுது முதல் தருணம் -!
உடையாத கண்ணாடியின் முகம் போல!
பளிச்சென இருக்கிறது உள்ளே;!
ஓடிவந்து நீ!
சட்டென மடியில் அமர்ந்த கணம்!
என்னை துளைத்து துளைத்து பார்த்த!
இருவிழிகள்,!
எனக்காக காத்திருக்கும் உனது தவிப்புகள் என!
எல்லாமே உன்னை எனக்குள் -!
மறவாமல் வைத்திருக்கிறது இன்னும்;!
எனக்காக இல்லையென்றாலும்!
உனக்காகவேனும் வந்து -!
உன் வாசலில் நின்று நீ ஓடிவந்து கட்டிக் கொள்ளுமுன்!
ஸ்பரிசத்தை எல்லாம் சேகரித்து -!
இன்றுவரை பத்திரமாக உணர்வுகளில்!
வைத்திருக்கிறேன்;!
பெரிதாக அதையெல்லாம் எண்ணி!
கதையெழுதும் காதலெல்லாம்!
அல்ல; நம் காதல்;!
காதலென்ற வார்த்தை கூட நம்!
உதடுகளை ஒருவேளை சுடச்செய்யலாம்,!
அதையெல்லாம் கடந்து!
நமக்கிடையான ஒரு புரிதல்; ஒரு ஆழமான அன்பு அது.!
திரும்ப எடுக்க இயலா நீளக் கிணற்றுக்குள்!
தவறிப் போட்டுவிட்ட - கல் போல!
மனதிற்குள் மனதை போட்டுவிட்டு!
யாரிடமே சொல்லிக் கொள்ளாத தவிப்பு அது.!
சொல்லியிருந்தால் மட்டும் உலகம்!
அதற்கு என்ன பெயர் வைத்திருக்குமோ!
தெரியாது - ஆனால் -!
காதலென்னும் அவசியமோ!
நட்பென்று சொல்லும் பெரிய வார்த்தைகளோ!
அல்லது 'அத்தனை' இடைவெளியோ கூட!
அவசியப்பட்டிருக்க வில்லை நமக்கிடையே;!
அப்படி -!
சேருமிடமே தெரியாத!
வானமும் பூமியும் போல்!
எங்கோ ஒரு தூரத்தில்!
ஒட்டிக் கொண்டு கிடந்தது நம் மனசு;!
நானென்றால் நீ ஓடிவருவதும்!
நீயென்றால் நான் காத்திருப்பதும்!
எச்சில் பாராமல் -!
தொடுதலுக்கு கூசாமல் -!
ஆண் பெண் பிரிக்காமல் -!
எந்த வரையறையுமின்றி -!
உரிமையே எதிர்பாராது - மனதால் மட்டும்!
நெருங்கியிருந்த உணர்வு!
சொன்னால் மட்டுமிப்போ யாருக்குப் புரிந்துவிடும்???!
தெரிந்தால் புரிந்துக் கொள்ளக் கூட!
திராணியின்றி நகைக்கும்!
உலகம் தானே இது;!
அட, உலகமென்ன உலகம்;!
உலகத்தை தூக்கி வீசிவிட்டு!
நாம் கூட நம்மை வெளிப் படுத்திக் கொள்ள!
தயாரில்லை என்பதற்கான காரணத்தை!
காலம் மட்டுமே ஒருவேளை!
அறிந்திருக்கக்கூடும்;!
எப்படியோ; யார்மீதும்!
குற்றம் சொல்வதற்கின்றி பிரிந்தபின்!
இன்று - அறுத்துப்போட்ட உயிர்போல வலிக்கிறதே!
உனக்கும் எனக்கும் மட்டும்;!
தூரநின்று கண்சிமிட்டும்!
அந்த குழந்தையின் சிரிப்புப்போல!
நீ சிரிக்கும் அந்த சிரிப்பின்!
நினைவுகளில் தான்!
கட்டிவைத்திருக்கிறேன் என்னை -!
வாழ்விற்குமாய்; இப்போதும்!!!
இப்படியே கடந்து கடந்து!
ஓர்நாளில் -!
என் உயிர்முடுச்சு அவிழ்ந்து!
நான் கீழே விழுகையில் -!
ஒரு சொட்டுக் கண்ணீராகவாவது!
நீ வந்து நிற்கையில் -!
என் உடம்பு சாம்பலாய் பூத்திருக்கும்!
நீ விழுந்து அழுது புரண்டால் - உனக்கு!
வலிக்காமல் தாங்கிக்கொள்ளும்

எங்கள் தேசம் இந்திய தேசம்

நா.முத்து நிலவன்
நா.முத்து நிலவன் -- !
(NCERTவெளியிட்டுள்ள 'ஹிந்த் தேஷ்கீ நிவாஷி' எனும் இந்திப் பாடலின் 'இசைபெயர்ப்பு' ) !
--பல்லவி-- !
எங்கள் தேசம் இந்திய தேசம் !
வாழ்க வாழ்க வாழ்கவே! !
இந்து முஸ்லீம் கிறிஸ்துவர்கள் !
எல்லாரும் சகோதரர்கள்! !
--சரணங்கள்-- !
வேறு வேறு வண்ணப் பூக்கள் !
சேர்ந்த வாச மாலை நாங்கள்! !
வண்ணம் வேறு வேறென் றாலும் !
வாசம் நெஞ்சில் ஒன்றுதான்! !
--1(எங்கள் தேசம்... !
சிந்து கங்கை பிரம்ம புத்ரா !
கிருஷ்ணா காவேரி !
சென்று சேரும் கடலில் என்றும் !
நீரின் தன்மை ஒன்றுதான்! !
--2(எங்கள் தேசம்... !
பேசும் மொழியும் வாழும் இடமும் !
வேறு வேறு ஆனால் என்ன? !
பாச உணர்வும் பண்பும் அன்பும் !
தேசம் முழுதும் ஒன்றுதான்! !
--3(எங்கள் தேசம்... !
இமயத் தலையில் பனிப்பூ மேகம் !
குமரி அலையில் கொலுசுகள் நாதம் !
குஜரத் வங்கத் தோளில் மோதும் !
கொஞ்சும் தாயின் ஒற்றுமை கீதம்! !
--4(எங்கள் தேசம்... !
(இந்தப் பாடல், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., தமிழ் இலக்கிய வகுப்பிற்குப் பாட நூலாக வைக்கப்பட்டுள்ள கவிஞரின் புதிய மரபுகள் எனும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அருப்புக்கோட்டை ம.தி.தா. தேவாங்கா அரசுக் கலைக்கல்லூரி மாணவர்களால் பாடப்பட்டு, அனைத்துக்கல்லூரிப் பாடல் !
போட்டியில் முதல் பரிசு பெற்று, மதுரை வானொலியின் தேசபக்திப் பாடல் வரிசையில் அடிக்கடி இசைக்கப்பட்டு வருகிறது) !
------------------------------------- !
!
வறண்டது காவிரி மட்டுமா? !
- நா.முத்து நிலவன். !
வறண்டது காவிரி மட்டுமா? - மக்கள் !
வாழ்க்கை நெறியும்,பண் பாடும்கிழிந்ததே ஒட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! -அட !
ஈராயிரத் தாண்டு, பாரம்பரியமும் நாணுதே! -1 !
எங்கெங்கு காணினும் வழ்ச்சியா! - அதில் !
ஏழை நிலைமையை மூடி மறைத்திடும் வீழ்ச்சியா! !
அங்கங்கும் 'ஒளிர்கிற' காட்சியா! -அவை !
அப்பாவி மக்களின் அம்மணத்தை விற்ற சாட்சியா! -2 !
அறிவியல் வளர்ந்ததே போதுமா? - அவை !
அடிமட்ட ஏழையை அப்படியே விடல் நீதமா? !
பொறியியல் வளர்ந்தென்ன லாபம்? - ஒரு !
போக்கிலா மாந்தர்க்குப் புகலிடமில்லையே பாவம்! -3 !
‘பாவேந்தன் பாரதி தாச! - உன் !
பாட்டு வழிஎங்கள் நாட்டுவழி’ எனப் பேச -பல !
நாவேந்தர் எம்மிடம் உண்டு!- எனில் !
நாவேறு! செயல்வேறு என்பதே எம்மனோர் தொண்டு! -4 !
‘மலைவாழைக் கல்வி’யை உண்டோம்! - அறிவு !
மட்டும் வளர்ந்தது, நாட்டையே காடாகக் கொண்டோம்! !
விலைபேசி வாங்கினோம் வம்பை - உள்ள !
வேற்றுமை யைஊதிப் பெரிதாக்கி விடுகிறோம் அம்பை! -5 !
கல்வியில் லாததோர் பெண்ணை - நீ !
களர்நில மேயெனக் கவிபுனைந் தாய்,தஞ்சை மண்ணை !
புல்விளை யாததோர் புதராய் - நாங்கள் !
போட்டுவைத் தோம்,பெண்ணைப் போற்றிவைத் தோம்ஒருபுதிராய்! -6 !
‘உலகமே உண்ண உண்’ என்றாய்! - 'இந்த !
உலகையே நானெடுத்(து) உண்பேன் தனியாக' என்றார், !
கலகமே நடத்திய போதும் -அதைக் !
'காவல் பணி'யெனக் காட்டுவதே எங்கள் வேதம்! -7 !
வறண்டது காவிரி மட்டுமா? - இல்லை !
வளத்தமிழ் நாட்டினில் பண்பாடும் கிட்டுமா? !
இருண்டது போலவும் தோணுதே! - இதை !
எப்படியும்,இனி மாற்றிடவே வழிகாணுவோம்