தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மனசு

நளாயினி

அதெப்படி இருக்கும்?!!
ஆராய்ச்சி ஏதும்!
இதுவரை செய்யதில்லை.!
ஆனாலும் நான்!
ஒரு போதுமே!
அதை எடுத்து!
தொட்டுப் பார்த்ததுமில்லை!
உணர்ந்து!
படித்ததுமில்லை.!
எங்காவது தன்னை மறைத்தபடி!
இந்த உடம்புள்!
எந்த இடுக்குகளுக்குள்!
இதுவரை இருந்திருக்கும்.!!!!
இப்போதாவது!
கண்டெடுத்தேனே!!!
காமக்கிளர்வுகள் ஏதுமின்றி!
உன்பாதச்சுவடுகளையும்!
நினைவுகளையம்!
சி£¤ப்பொலிகளையும்!
துன்பங்களையும்!
தாங்கியபடி!!!
நட்பா ? காதலா?!
பி£¤த்தப்பார்க்க முடியவில்லை.!
எப்படி வேண்டுமானாலும்!
இருந்து விட்டுப்போகட்டும்.!
இப்போவதாவது கண்டு பிடித்தேனே!
உன் நினைவுகளோடு.!
--------------------------------!
நளாயினி தாமரைச்செல்வன்!
சுவிற்சலாந்து.!
15-01-2003

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

அகதி மடி

கருணாகரன்

வெளியற்ற வெளியில்!
ஊற்றிய தீயில்!
தலையசைக்க முடியாமற் திணறும் காற்று!
ஒடுங்கியது!
இந்தக் குடியிருப்பில்!
புழுதித் தெருவில்!
படுத்துறங்க முடியாமல் அலையும் !
நாயின் மடியில்!
திண்ணையில்!
விட்டுச் சென்ற வழிப்போக்கனின்!
துயரம் !
அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!
யாரையும் நெருங்க விடாமல்.!
துடைத்தளிக்க முடியா !
ஞாபகத்தோடு!
தாத்தாவின் கைத்தடி !
தனியே நடந்து சென்றது!
வெளியம்பலக் கோவில் முற்றத்தில்!
விளையாடும் குழந்தைகளிடம்.!
ஒரு சொட்டு நீரில்லாத !
அகதி முற்றம்!
இவ்வெளி கடந்து !
இத்திசை கடந்து!
சடைக்கிறது ஜெயமோகனின்!
டார்த்தீனியமாய்.!
ஆப்கான் மலைச்சரிவுகள்!
பெரும் பள்ளமாகின!
அகதிப்போக்கரின்!
துயர் நிறை சுமை கூடி.!
பார்த்தேன் !
சிதறியோடும் குர்திஸியையும்!
பற்றியெரியும் தீயில்!
கருகும் ஈராக்கியையும்!
தலையில் காஸாவை !
தூக்கியபடி !
போகும் வழியும் நிற்குமிடமும் !
தெரியாமற் தடுமாறும்!
பலஸ்தீனியையும்!
தெருவான என்முற்றத்தில்!
துக்கமொழுக!
மட்டக்களப்பின் பெரு வாவிகளில்!
நிறைந்தது பெரிய காக்காவின் கூக்குரல்!
நிலவை ஊடுருவி!
பெரிய தம்பிரான் பாடுகிறார்!
தன் துயர் குத்தும் வலி!
பொறுக்காமல் வெடித்த சொற்கொண்டு!
வன்னியிலும்!
புத்தளத்திலும்!
அனற்காற்றடித்து!
ஊற்றிய தீயில்!
வெளியான வெளியில்!
படுத்துறங்க முடியா நாயின் மடியில்!
ஆற்றவியலாப் புண்ணென!
சாம்பல் பூத்துக்கிடக்குமென்!
அகதி மடி