தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

எனது பாத்திரம் இதுவாகி

டீன்கபூர்

நேற்றும் பசி விழுங்கியது என்னை.!
இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி!
அட்டகாசித்துக்கிடக்கிறது. !
நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை!
எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்!
நான் அணியும் உடையின் !
அழுக்கைச் சுவாசித்தபடியாக!
நழுவுகிறது மானிடம்.!
என் குழந்தைகளின் வாழ்வின் வடிவம்;!
எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்!
என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க!
என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது!
தனிமை.!
பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல!
வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக!
ஒருவன் பேசினான்.!
குயிலின் வழுவழுத்த தனம்!
காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.!
அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.!
ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.!
எனது பாத்திரம் இதுவாகி…………..!
என்னிடம் பேசுகிறது.!
- டீன்கபூர்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

உன்னின் அறிமுகம்

பொன்னியின் செல்வன்

உதிரும் சருகுகள்!
சத்தமின்றி!
காற்றின் போக்கில்..!
விருட்சத்தின் வரலாற்றை சுமந்த படி..!
வார்த்தைகள் செதுக்கும்!
மனதிற்கு தெரியும்!
காற்றின் திசையில்!
பயணித்தல் .. வாழ்க்கையென...!
என்னின் வேர்களின்!
முடிச்சுகளில்!
இன்னும் மூச்சுவிடா..!
விருட்சங்கள்!
தூங்கிகொண்டிருகின்றன...!
பிரபஞ்ச வெளியில்!
முகவரி சொல்லா!
பயணம் ..!
விதைகளும் தூசிகளாகும்போது ....!
ஆயின், தூசிகள் இடம் சேர்ந்தால்!
தூண்களாகும்..!
அதுவரை!
எனது பயணத்தின்!
படிமானங்களாய்!
பயணம் செய்கிறேன்..!
காற்றின் திசையில்..!
காற்றின் வலு குறையின்!
விழுந்த இடத்தில்தான்!
உன்னின் அறிமுகம்