தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

கவிதை

முருகடியான்

குரங்கென ஒருபொருள் குறிக்கிறது!
குலத்தமிழ்ப் பாட்டென விரிகிறது!
திறந்தருங் கதையது விளைக்கிறது!
திரண்டநல் விதையதில் முளைக்கிறது!
வரந்தரும் தையெனும் திங்களையும்!
வைத்தவள் தைத்தவள் தையலவள்!!
ஆறந்தரும் முனைவரின்ழூ விளக்கமிது!
அடுத்தொரு முறையிலும் விளங்குமிது!!
முதலெழுத் தழித்தால் விதையாகும்!
நடுவெழுத் தழித்தால் கதையாகும்!
முதலும் நடுவும் அழித்தால் தை!
வினையும் பெயரென வருவாள்தை!
முதலிரண் டெழுத்தில் பாட்டுவரும்!
முள்மர மேறும் குரங்குவரும்!
முதல்தாய் மொழியின் பெருமையிது!
மூன்றெழுத் தின்ப அருமையிது!!
!
-முனைவர் சுப.திண்ணப்பன்!
பாத்தென்றல்.முருகடியான்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

ப்ரியனின் 4 கவிதைகள்

ப்ரியன்

கன்னத்தில் முத்தம் !
எனக்கு !
கவிதையெல்லாம் !
எழுத தெரியாதென்றபோது !
கன்னத்தில் !
அழுத்தமாய் ஆழமாய் அழகாய் !
முத்தமிட்டு இப்போது !
எழுதென்றாய்! !
இப்போதும் சொல்கிறேன் !
உன் இதழ் என் கன்னத்தில் !
எழுதிய அளவுக்கு !
எனக்கு கவிதை எழுத வராது! !
- ப்ரியன். !
!
தூரம் !
***** !
உனக்கும் எனக்குமான !
தூரம்! !
அது !
விழிக்கும் இமைக்குமான !
தூரம்! !
- ப்ரியன் !
!
குறுநகை !
******** !
என் யுக யுகத்திற்கான !
சந்தோசம்; !
நீ சிந்தும் ஒற்றை !
குறுநகையில் !
ஒளிந்திருக்கிறது! !
- ப்ரியன். !
!
குறிப்பு !
******* !
கவிதை ஒன்றின் ஓரமாய் குறிப்பெழுதி வைத்தேன்! குறிப்பை ஆளாளுக்கு அலசிப் போனார்கள்! யாருமே கண்டுகொள்ளாமல் அனாதையாய் கிடந்தது கவிதை! !
- ப்ரியன்