தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அவளுக்கென்று ஓர் மனம் !

ப.மதியழகன்

உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

நானொருவன் மட்டிலும்

ஜதி

நான்தான் உங்களிடமிருந்து !
தனிமைப் படுகிறேனோ !
என்ற ஐயமிருந்தது !
ஆனால் காலமும் நிகழ்வுகளும்!
உரைத்துவிட்டன உண்மையை!
'உங்களைப்போல்தான் நானும்'!
என்று நான் சொல்லவில்லை!
ஆனால் இச்சமுதாயச் சமுத்திரத்திலே!
அயராது நீந்தப் போராடும் !
மற்றொரு மீன்தான் நானும்.!
நேற்றைய நேற்றுகளின் நினைவுகளும்!
நாளைய நாளைகளின் கனவுகளும்!
எனக்குமுண்டு. !
எதனைக் கொண்டு !
என்னைத் தணிக்கை செய்கிறீர்கள் !
என்ற திட்டவட்டமில்லையெனக்கு.!
தீப்பட்ட முதுகின்மேல் மூட்டைப்பூசிகளாய்!
அவ்வப்போது வந்து!
தனியாய்த்தான் இருக்கிறேனா என!
எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறீர்கள்...!
அருவருப்பாயிருக்கின்றது.!
சிரித்துக் கொள்கிறீர்கள்!
களித்துக் கொள்கிறீர்கள்!
மறக்காமல் என்னைமட்டும்!
முறைத்துக் கொல்கிறீர்கள்.!
ஜன்னலின் திரைச்சீலையினால்!
ஒரு கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்க!
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப் !
போகும் தென்றலைப் போல!
வார்த்தைகளினால்!
என்னைப் புரியவைக்க !
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப்!
போகிறேன்.!
என்னைத் தனிமைப்படுத்தியவர்களே...!
இறுதியாய்க் கேட்கின்றேன்!
இப்படியேதான் இருக்கப்போகிறீர்களா இனியும்?!
அப்படியே ஆகட்டும்; நான் விடைபெறுகிறேன்...!
ஆம்!!
நகரத்து வீதியில்!
அநாதைப்பிணமாய்க் கிடப்பதிவிடப்!
பாலைவனத்தில் புதையுண்டு போவது!
குறைவான அவலமே...!
போகும்முன் ஒரேயொரு வேண்டுதல்...!
எதற்காக என்னைத் தனிமைப்படுத்தினீர்கள் என்று!
எக்காலத்திலும் எனக்குத் தெரிவிக்கவேண்டாம்.!
!
-ஜதி!
14-03-2008