தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

காயங்களுடன் ஒரு கன்னி மனசு

துர்ரத் புஷ்ரா

அசைந்தாடும் மரமே,!
நீ அசைந்தாடி என் மேனி முழுக்க பரவசப்படுத்துகிறாய்..!
நினைத்தேன் -நீ காற்றை தந்து மனம் மகிழ்விக்கும் மகா வள்ளல் என்று,!
உணர்கிறேன் -யான் கண்ட குட்டி அனுபவங்களால்,,!
நீ உன் மனம் குளிர!
கிளைக்கரம் உதரி-!
உன் களைகளான காய்ந்த சருகுகளை அகற்றுகிறாய் அல்லவா?!
நானும் என் மனத்தை கீரி களைகள் தேடுகிறேன்,!
காயம் தான் மிச்சம்,!
தேடிய களைகளை காணவில்லை..!
சடத்துவம் இல்லா ஒரு வெறுமை-!
உள்ளத்தின் ஒரு டம்மி வெடிப்புக்குள்..!
ஒரு வெளிச்சம் புகாதா?!
ஏங்குகிறது -நீரின்றி கண்ட கோடை வரட்சி...!
ஒரு மின்மினி பூச்சியும் இனி கதிரோன் தான்-!
இவ்வவலநிலை தொடர்ந்து விட்டால்..!
என் இரவுக்கும் ஒரு சூரியன் வராதா??!
அணை கடந்த வெள்ளமாய், பல சிகிச்சைகளுடன் -ஒரு கன்னி மனது

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

என்ன கொடும சார் இது

மணிமேகலை

என்ன கொடும சார் இது !
தான் வாழ்ந்த மண்ணை
காப்பாற்ற நினைப்பவன்
நாட்டை காக்கும் பயங்கரவாதியாம்

தன்னை  வாழ வைக்கும் தொழிலாளியின்
ரத்தத்தை உறிஞ்சும் முதலாளிவர்க்கம்
நாட்டை சுரண்டும்  மிதவாதியாம்

அறிவு கண்ணை திறக்கும்
கல்வி கூடங்கள் அனைத்தும் தனியார் மயம்

கண்ணை நிரந்தரமாக மூடவைக்கும்
சாரயக்கடை அரசு மயம்

இலங்கை தமிழனை காப்பாற்ற முடியவில்லையாம்
தமிழையாவது காப்பாற்றலாம் என
செம்மொழி மாநாடாம்

என்ன கொடும சார் இது !