தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நான் இறங்கிச் செல்வேன்

வையவன்

முதல் மாடியின் கைப் பிடிச்சுவர்
பிடித்து நான் கவனிப்பேன்
எதிர் மரங்களில் அமர்ந்து
காக்கை நேசர் ஒருவர் பிட்டுப் பிட்டு
எறிகிற இட்டிலித் துண்டுகளுக்காக
காக்கைகள் தம் மொழியில்
கூவிக்கரைந்தே நன்றி தெரிவிப்பதை,
உயரத்தில் இருந்து தாழ்ந்து அவை
கொத்திச் செல்வதை ,
நான் பார்த்துக்கொண்டே இருப்பேன்
எல்லாம் தீர்ந்ததும் வரும்
விளங்காத மொழியை
வீம்புக்குக் கற்றுக்கொண்டிருக்கும்
என் மகளின் பள்ளிக்கூட பஸ்
இறங்கிச்செல்வேன் அவளை
அனுதாபத்தோடு அனுப்பி வைக்க

மாலை வந்துவிடும்
நான் வேலை முடிந்து திரும்பும் வேளையில்
அதே மரங்களில் இப்போது புறாக்கள்;
காதலுக்குத் தூது விட்ட
மன்னர்களை நினைத்தபடி
பார்த்துக் கொண்டே நிற்பேன்
நாட்டியம் ட்யூஷன் முடித்து வரும்
மகளின் வரவை எதிர்நோக்கி
சைக்கிளில் பூ விற்பவன் மணியடிப்பான்.
சாலை ஓரத்துப் புல்
அசையும் காற்றில்.
மூழ்கத் தொடங்கியிருக்கும்
சூரியன் மேற்கில் .
நான் இறங்கிச் செல்வேன்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

விந்தை உலகம்

ராமலக்ஷ்மி

வாட்டும் நோயினால்!
வருத்தத்தில் அவன்-!
இறுகிய முகமும்!
குன்றிய உள்ளமுமாய்...!
நலம் விசாரிக்க!
வலம் வந்த மருத்துவர்!
இவன் இருக்கும் இடம்!
வந்து நின்றார்-!
வெளிர் உடையும்!
பளீர் சிரிப்புமாய்...!
'கலக்கம் விலக்கிடு!
காலத்தே குணமாவாய்!!
பரிந்துரைத்த பயிற்சிகளைப்!
பழகச் சலிப்பதேன் ?!
படுத்தே இருந்தால்!
அடுத்துநீ எழுந்து நடப்பது!
எப்போதாம்?' கேட்டார்!
புன்னகை பூத்தபடி.!
மீண்டும் சொன்னார்:!
'மலர்ச்சியுடன் மருந்துகளை!
உட் கொள்வாய்,!
உற்சாகமாய் இருந்திட்டாலே!
தேறிடலாம் விரைவாய்!'!
நம்பிக்கை ஊற்றினிலிருந்து!
நன்னீர் வழங்கிய!
திருப்தியுடன்!
திரும்பி நடந்தார்.!
'மிடுக்காக வந்து!
துடுக்காகச் சொல்லிவிட்டாரே,!
பட்டால் அன்றோ புரியும்!
வலியின் ஆழமும்-!
கதிகலங்கி நிற்குமென்!
உள்மனதின் கோலமும்!'!
தெளிக்கப்பட்டது பன்னீர் என்ற!
தெளிவில்லாமல வென்னீரென்றே!
நினைத்துச் சலிக்கின்றான்.!
வாழ்வோடு வலியும்!
காலத்தோடு கவலையும்!
கலந்ததுதான் மானுடம் என்பது!
இறைவனின் கணக்கு.!
இதில் எவருக்குத்தான்!
தரப்படுகிறது விதிவிலக்கு?!
சொன்னவரும் மனிதர்தான்!
அவருக்கும் இருக்கக்கூடும்!
ஆயிரம் உபாதை என்பதனை!
ஏனோ மறக்கின்றான்.!
ஆறுதலாய் சொல்லப்படும்!
வார்த்தைகள் கூட சிலருக்கு!
வெந்த புண்ணில் பாய்ச்சப்படும்!
வேல்களாய்த் தோன்றுவது!
வேதனையான விந்தை!!
துயரின் எல்லை என்பது!
தாங்கிடும் அவரவர்!
மனவலிமையைப்!
பொறுத்ததே!!
ஆயினும் கூட...!
'பாவம் பாவம்' எனப்!
பரிதவிப்பைப் பன்மடங்காக்கும்!
உற்றார் பலர் உத்தமராகிறார்.!
விரக்தியை விடச் சொல்பவர்!
வேதனை புரியாதவராகிறார்!!
சோதனைமேல் சோதனையென!
சோர்ந்தவனின் சோகத்தை!
மென்மேலும் சூடேற்றுபவர்!
மனிதருள் மாணிக்கமாகிறார்.!
மனதைரியத்துடன் இருக்கும்படி!
மனிதநேயத்துடன் மன்றாடுபவரோ!
அடுத்தவர் அல்லல்!
அறிய இயலாத!
அற்பப் பதராகிறார்!!
அக்கறையை அனுபவத்தை!
ஆக்கப் பூர்வமாய்!
நோக்கத் தெரியாமல்-!
அன்பை ஆறுதலை!
இனம் புரிந்து!
ஏற்கத் தெரியாமல்-!
இருக்கத்தான் செய்கிறார்!
சிலர்...!
அத்தகு!
இடம் அறிந்து!
மெளனிகளாகத்!
தெரியாமலேதான்!
பலர்