தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

கதவு

அஷ்ரஃப் சிஹாப்தீன்

உங்கள் வருகைக்காய்த்!
திறந்து வைக்கப்பட்ட கதவு!
நீங்கள் வந்தவேளை!
சாத்தப்பட்டிருந்தது கண்டு!
திரும்பியதறிந்தேன் !
திறக்கவும் மூடவும்!
மற்றும்!
பாதுகாப்புக்குமானவை!
கதவுகள் என்பதை!
நீங்கள் உணர மறுத்தது!
உறுத்துகிறதெனக்கு !
குரல் வழங்கப்பட்டிருப்பது!
கூப்பிடுவதற்கும்!
கைகள் தரப்பட்டிருப்பது!
தட்டிப் பார்ப்பதற்கும்தான் !
உள்ளே தாழிடப்பட்ட!
தட்டினால் திறக்கப்படாத!
கதவுகளேதும்!
உலகத்தில் கிடையாது

சமீபத்திய கவிதை

வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்

குரு

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்..

வலுக்கட்டாயமாக
ஒரு முத்தம்...

மண்ணில் மழைத்துளி

குறிப்பில்லாக் கவிதை (random)

நான் கேவலமானவனே

சம்பத்குமார்

புதிதாக நான் எதை பற்றி!
எழுதப் போகிறேன்!
எல்லாமே பழகிப் போய்விட்டது!
என் கனவுகளையோ!
மகிழ்வுகளையோ!
ரணங்களையோ...!
கண் நிறைத்த இடங்களையோ!
கவர்ந்த பெண்களையோ!
ரசித்த கவிதை ஒன்றை பற்றி சிலாகித்தோ!
வேறு என்ன இருக்க போகிறது!
என் கவிதைகளில்....!
என் தவறுகளை மறைத்து!
எழுதும் இவற்றில் என்ன உண்மை!
இருக்கப் போகிறது!
நெருப்பால் சுட்டால் எரிவது போல‌!
என் நிதர்சனமும் தினமும் !
சுட்டு பொசுக்குகிறது என்னை...!
என் கேவலங்கள், காம வக்கிரங்கள்!
சுயனலம், பொறாமை மறைத்து!
காதலையும்,மலர்களையும்!
தென்றலயும் மட்டுமே!
எழுதுவதால் நான் என்னில் !
யோக்கியமாகி விட முடியாது..!
இங்குள்ள அனைவரையும் விட‌!
நான் கேவலமானவனே