தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மீண்டும் போருக்கான அறைகூவல்

நடராஜா முரளிதரன், கனடா

நான் கேளிக்கைகளில்!
திளைக்கின்றேன்!
ஆனாலும் அவர்களைப்!
போரிடுமாறு அழைக்கின்றேன்!
ஏனெனில் அவர்கள்!
அடக்குமுறைக்கு உள்ளாவதால்!
எனது பங்குகளை உரியமுறையில்!
செலுத்துவதாகவும்!
கதை சொல்லுகின்றேன்!
ஆனால் அவர்கள்!
கரங்கள் துண்டிக்கப்பட்டு!
கால்கள் தறிக்கப்பட்டு!
குதத்தால் உண்டு!
வாயால் கழிவுப்பொருட்களை!
வெளியேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!
பத்திரமாக எனது பிள்ளைகள்!
பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில்!
மகுடங்களைச் சூடிக் கொள்கின்றார்கள்!
வாழாத நாடொன்றின் தலைவிதியைத்!
தீர்மானித்தற்காய்!
மக்களே திரண்டெழுங்கள்!
என்ற கோசத்தை!
அடிக்கடி முழங்குகின்றேன்!
அதன் தொடர்ச்சியாய்!
இப்போது நான்!
மாலைநேர மேடையொன்றிலே!
எழுச்சி உரையொன்றை ஆற்றுதற்காய்!
என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

கனா கண்டேன்

மலர்

இரவின் இருளில்
இமைகளில் ஒளிர்ந்த
உன் நிழலின் பிம்பம்,
நிஜத்தில் என்னை தீண்டுவதாய்
நினைக்கிறேனடி.

உன் ஒரப் பார்வையில் - என்
உயிரோட்டத்தை நிறுத்தியவளே!

ஒளித்து வைத்த இரகசியங்களை
அம்பலபடுத்த செய்கிறாயடி.

உன் அழகின் ஆணவம்
என் ஆண்மைக்கு சவால் விடுகிறது.

பூவிதழின் மென்மையான புன்னகை
புவியின் சுழலை நிறுத்துகிறது.

தென்றலினும் மெல்லியதான் உன் சுவரிசம் - என்
சுவாசத்தை மூர்ச்சையடைய செய்கிறது.

"செல்"லரித்த பேச்சுகள் -
நீ பேசும் பொழுது மட்டும்
சிலிர்த்தே கேட்கிறேன்!

மழைத்துளிச் சாரல்
என் மீது படர்வதாய் உணர...

சாத்தானின் சத்தம் - காதோரத்தில்
"சனியனே! இன்னும் என்ன தூக்கம்..??"
தந்தையின் அறைகூவல்...
விடியலை உணர்கிறேன்!
கனா கண்டேனடி தோழி