தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தலைப்புத்தேடும் கவிதைகள்

ஷக்தி

சேலை!
அதிகாலையில் எப்போதும்!
மூடுபனிச்சேலை கட்டி,!
மோகமுள் கொண்டு நிற்பாள்!
என் வீட்டு வெள்ளை ரோஜா.!
அனுதினமும் வந்து!
வேகமாய் துயிலுரித்து!
தாகமாய் முறைப்பான்,!
சூரிய துரியோதனன். !!!
---!
என்றும்,!
தணியாததோர் தேகதாகம்.!
எதற்கும்,!
பணியாததோர் தாகதேகம்.!
முற்றும் துறந்தவனையும்!
விட்டுவைப்பதில்லை.!
மண்டியிடவே வைக்கிறது!
இந்தியத்தொலைக்காட்சிகளின் முன்.!!!
---!
எந்த நொடியிலும்!
சறுக்கி விழுந்தோடி!
சாகவும் துணிந்துதான்,!
இந்த நொடியிலும்!
ஜூலியட் ரோஜாவின்!
சுழல்போதை இதழ்மேல்!
குலைந்து நிற்கிறதோ!
அந்த அதிகாலை தேசத்து!
ரோமியோ பனித்துளி. !!!?!
---!
காதலில்!
உனது வாழ்வு, பயணம்!
எனது வாழ்வு, பணயம்.!
வாழ்வில்!
உனது காதல், முதலீடு!
எனது காதல், முறையீடு.!
என்னில் உனது காதல், காமம்!
உன்னில் எனது காதல், காயம்.!
மண்ணில் நமது காதல், பாடம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

நிஜம்

யாயினி , கனடா

காற்றும் ஒருகணம் வீசமறந்தது!
கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது...!
தேற்றுவாறின்றி நம் தேசம் தேம்பி நிற்குது!
தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........!
சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்.......!
மகிழ்ச்சிகள் எல்லாம்.!
இன்று முட்கம்பி வேலிக்குள்...!
முடங்கிக் கிடந்திட!
நான்கு சுவற்றுக்குள்!
நடப்பவை எல்லாம்!
கந்தல் துணியால் கட்டிய முகாமில்.....!
வேட்டை நாய்களுக்கு நடுவில்!
வேதனையுடன் நடக்குது.......!
குளவி முதல் கிளவிவரை....!
மாற்ற ஒர் உடையில்லை...!
அன்றொரு நாள் நம் இளசுகள்!
காத்திருந்து காதல் செய்த!
வீதிகள் எல்லாம்!
வேதனை தாங்கி!
விம்மியே நிற்கின்றன.....!
தண்ணீர் ஊற்றி!
நாம் வளர்த்த நந்தவன!
மரம்,செடி,கொடிகளெல்லாம்...!
உறவுகள் இன்றி!
கோடைபற்றிப்போய் நிற்கின்றன......!
திசைகள் பார்த்துக்!
கட்டிய வீடுகள்!
அரக்கனின் குண்டுமழையிலே!
சின்னா பின்னமாகி!
சிதவுற்ற நிலையில் இன்று!
பேய்கள் உலாவும்!
வீடாகிப் போனது......!
களிவறைமுதல் கொண்டு!
உணவறை வரைக்கும்!
கூப்பன் கடையிகளின்!
வரிசை போல் நிற்குது....!
காரிகையே காத்திரு நான்!
என் கடமையால் வரும்வரைக்கும் என்று!
முத்தத்தால் திலகமிட்டு!
முடிவாக சென்றவனை!
பிரியமுடியாத பிரியமான காதலி!
கையசைத்து விடைபெற்று இன்றும்!
கடைசிவரை காணாத!
உறவுகள் படும் பாடு!
மகிந்தாவே நீ....அறிவாயா.......?!
நாடு,நாடாய் நாங்களெல்லாம்!
ஊனுமின்றி உறக்கமின்றி!
என்ன செய்தி என் நேரம்!
எப்படி வருமென்று தெரியாமல்!
நிமிடத்துக்கு ஓர் தடவை!
தொலைபேசியைப் பார்த்திடுவோம்!
அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்.....!
தவிப்பவர்களின் தவிப்புகளை!
என் உள்ளத்து குமுறல்களை...!
எங்கிருந்து யார் அறிவார்....?!
இறுதியாய் தெரிந்துகொண்டோம்!
உலகத்தின் சதிகளினால்!
இன்று தமிழனின் இறப்பு மட்டும்!
தடையேதும் இன்றி!
வரிசைக்கு நிற்காமல்!
மிகவும் வேகமாய் செல்கிறது