பனி காலத்து..அநாதரவாய்..ஆலோசனை
ஜே.பிரோஸ்கான்
பனி காலத்து தேநீர்.. அநாதரவாய் பெய்த மழை.. ஆலோசனை பண்ணும் மனசு!
01.!
பனி காலத்து தேநீர்!
------------------------------!
அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்!
செவியுற்றேன்.!
சிரிக்கவும, அழவும் சொன்னார்கள்!
சிரித்துக் கொண்டே அழுதேன்!
பின்!
கண்களை திறந்து கொண்டு !
உறங்கச் சொன்னார்கள்!
உறங்கிக் கொண்டேன்.!
தங்களது ஆறு கால்களைக் கொண்டு !
என் கழுத்தில் மிதித்து விளையாட !
ஆசையென்று மொழிந்து,!
அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர்!
குழந்தையாகி மகிழ்வுற்றதையும்!
நான் ரசித்துக் கொள்கிறேன்.!
மீதம் வைக்க மனசு இல்லாத!
பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல...!
02.!
அநாதரவாய் பெய்த மழை!
----------------------------------!
நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை!
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்!
அச்சமற்று துயிலே தயாராகுறேன்!
பழகிப்போன தவளைகளின் கத்தளை மறந்தபடி.!
இப்படியாய் பின் தொடரும் தூக்கத்தில்!
கனவு காண்பதற்கான அறிகுறி தோன்றி மறைகிறது!
மூடியே என் விழிகளுக்குள்.!
இருளடைந்து தூசிபடிந்து கிடக்கும்!
சிநேகங்களின் முரண் அவ்வப்போது!
மின்னலாய்இ இடியாய் மழை இராக்கனவை வேகப்படுத்தியது.!
ஆனால் நான் கனவை முறிக்கும் முயற்சியில்!
துயில் களைந்தேன்.!
அநாதரவாய் பெய்து கொண்டிருந்தது வெளியே மழை...!
03.!
ஆலோசனை பண்ணும் மனசு!
-------------------------------------!
இடை விடாது தொடரும்!
மாரி மழை இரவுகளில் தான்!
வெயிலை விரும்புவது பற்றி!
ஆலோசித்துக் கொள்கிறது !
தனியாக மனசு