தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

பனி காலத்து..அநாதரவாய்..ஆலோசனை

ஜே.பிரோஸ்கான்

பனி காலத்து தேநீர்.. அநாதரவாய் பெய்த மழை.. ஆலோசனை பண்ணும் மனசு!
01.!
பனி காலத்து தேநீர்!
------------------------------!
அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்!
செவியுற்றேன்.!
சிரிக்கவும, அழவும் சொன்னார்கள்!
சிரித்துக் கொண்டே அழுதேன்!
பின்!
கண்களை திறந்து கொண்டு !
உறங்கச் சொன்னார்கள்!
உறங்கிக் கொண்டேன்.!
தங்களது ஆறு கால்களைக் கொண்டு !
என் கழுத்தில் மிதித்து விளையாட !
ஆசையென்று மொழிந்து,!
அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர்!
குழந்தையாகி மகிழ்வுற்றதையும்!
நான் ரசித்துக் கொள்கிறேன்.!
மீதம் வைக்க மனசு இல்லாத!
பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல...!
02.!
அநாதரவாய் பெய்த மழை!
----------------------------------!
நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை!
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்!
அச்சமற்று துயிலே தயாராகுறேன்!
பழகிப்போன தவளைகளின் கத்தளை மறந்தபடி.!
இப்படியாய் பின் தொடரும் தூக்கத்தில்!
கனவு காண்பதற்கான அறிகுறி தோன்றி மறைகிறது!
மூடியே என் விழிகளுக்குள்.!
இருளடைந்து தூசிபடிந்து கிடக்கும்!
சிநேகங்களின் முரண் அவ்வப்போது!
மின்னலாய்இ இடியாய் மழை இராக்கனவை வேகப்படுத்தியது.!
ஆனால் நான் கனவை முறிக்கும் முயற்சியில்!
துயில் களைந்தேன்.!
அநாதரவாய் பெய்து கொண்டிருந்தது வெளியே மழை...!
03.!
ஆலோசனை பண்ணும் மனசு!
-------------------------------------!
இடை விடாது தொடரும்!
மாரி மழை இரவுகளில் தான்!
வெயிலை விரும்புவது பற்றி!
ஆலோசித்துக் கொள்கிறது !
தனியாக மனசு

சமீபத்திய கவிதை

சிதம்பர ரகசியம்

ஜெயானந்தன்

அருகில் வா
ரகசியம் சொல்வேன்
இதோ பார்
கோவிலின் கோபுரக்கலசம்
அண்டவெளி நிசப்த உண்மை
சுடர்விடும் ஒளிவிளக்கு
கல்தச்சன் உளிச்சலங்கை காட்டும்
கற்சிலை சுவர்க்கம்
வெளவால் புறாக்கள்
வழிந்திடும் எண்ணெய் சுவர்கள்
விபூதிப்பட்டை வெண்மை செம்மை
கோடுகள் கோலங்கள்
சம்சாரிகள் சந்நியாசிகள்
பண்டாரங்கள் பசுக்கள்
குமரிகள் குழந்தைகள்
கோட்டான்கள் சாத்தான்கள்
நிரம்பி வழியும் மனசுக்குள்
எரியும் திரி விளக்குகள்
இன்றோ நாளையா என்றோ
உடையும் தீச்சுடர் நாக்குகள்
முள்ளாய் குத்தும் முட்புதர் எண்ணங்கள்
திரும்பிப்போ
எதுவும் எடுக்காமல்

குறிப்பில்லாக் கவிதை (random)

புலராதோ நாளை ? கவிதை எழுத காத்திருக்கிறேன்

சத்தி சக்திதாசன்

நிலவில் களங்கமாமே !!
நேற்றொருவன் என் காதோடு!
சொன்ன கதை கேட்டுக் கொஞ்சம்!
சோபை இழந்தேன்.!
கவிதை பாடும் மனிதனல்லவா நான் ?!
கருத்துக்கே ஒளி கொடுக்கும் என்!
நிலவுக்கே களங்கம் என்றால்!
நிம்மதி அடையுமா என் நெஞ்சம் ?!
கைவிரல்கள் அசைய மறுத்ததால்!
கவிதைச் சுனை ஊற மறுத்ததால்!
கண்களை மூடிக் கொஞ்சம் தூக்கத்தோடு!
போராடிக் கொண்டிருந்தேன்!
சயனத்தின் சங்கீதம் இசைத்ததால்!
சத்தமின்றி என்னை!
நித்திரை அணைத்துக் கொண்டது!
கனவிலொரு ஒளியாக காற்றிலேறி!
கண்முன்னே புன்னகைத்தாள் என் தாய் !!
தமிழ்த்தாய் ......!
நித்தமும் கவிபாடி களித்திருந்தாய்!
நித்திரையில் கூட உன் கைகள்!
மனத்திரையில் வரைவது கவிதை வரிகள் தானே ...!
ஏன் மைந்தா உனக்குக் கலக்கம் ?!
எவர் சொன்னார் உனக்கு எதனை ?!
தாய்மைக்கே உரித்தான கனிவோடு!
தலை நிமிர்த்தி எனை நிறுத்தி!
தாங்கிக் கொண்டாள்.....!
புரிந்து கொண்டேன் மகனே!
காய்ந்து போன உன் கவிதைச்சுனையின்!
காரணத்தை நானும்!
நிலவில் களங்கள் என்று சொன்னவன்!
நீரிலே எழுத்துப் போன்றவன்!
மகனே !!
கவிஞன் ....!
காற்றுப் புக முடியா இடையினுள்!
கண்மூடித்திறப்பதற்குள்!
களவாகச் சென்று வருபவன்!
சூரிய ஒளி பட முடியாத இடத்தின் மீது!
குளிர்மையாகப் படர்ந்து!
குறுங்கவிதை படிப்பவன்!
பைத்தியக்காரன் அவன்!
பத்தும் சொல்வான்!
பற்றியெறியும் நெருப்பின் மேல்!
படர்ந்திருக்கும் பனி போல!
நியாயமற்ற இந்தச் சமூகத்தில்!
நாளைய நடப்புக்களைச் சொல்வோர்!
நேற்றைய தவறுகளை அறிவோர்!
எனதருமைக் கவிஞர்களே ....!
தளராதே...!
தனயா... கண்விழித்து எழுந்ததும்!
கருத்து மேகத்தைக் குவித்து!
கவிதை மழையெனப் பொழிந்து விடு!
குளிர்காலத் தென்றலென!
நிலவுதனை உனது கவிதை தழுவட்டும்!
அப்போது....!
நிலவு உன்னைப் பார்த்துப் புன்னகைக்கும்!
நிலவில் களங்கமுண்டா ? எனக் கண்டு கொள்வாய்...!
நெஞ்சம் நிறைவாக!
அன்னை பாதம் பணிந்து!
அடுத்தநாள் காலை தனை!
ஆவலாய்ப் பார்த்திருந்தேன்!
!
-சக்தி சக்திதாசன்