தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நிலை கொண்டுவிட்டது

இமாம்.கவுஸ் மொய்தீன்

எக் காலத்தில்!
எச் சூழ்நிலையில்!
எப் புண்ணியவானால்!
எந் நோக்கத்தில் !
வரையப்பட்டதோ?!
இவ்வளவு!
முன்னேற்றம்!
கண்ட பின்னும்!
நம்நாடு!
இது நாள்வரையிலும் !
தொலையவுமில்லை!!
அழியவுமில்லை!!
பூமத்திய ரேகை போல்!
இதுவும்!
நிலை கொண்டுவிட்டிருக்கிறது!
'வருமைக் கோடு'!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எங்கள்வீட்டு லட்சுமி

ரவிஉதயன்

கத்தும் கன்றுகளைக்கடந்து!
பசியபுல்வெளியைக் கடந்து!
குன்றெனக் குவிந்துகிடக்கும்!
வைக்கோல் போர்களைக்கடந்து!
அருந்தி குளித்துமகிழ்ந்த!
குளத்தைக்கடந்து!
வீழ்ந்தமரத்தில்!
தான்வாழந்த இடத்தை!
வெறித்து நோக்குகிற!
ஒரு பறவயையப்போல்!
விழி பிதுங்கி நுரைசிதற!
அசை போட்ட வண்ணம்!
அண்டை மாநிலத்திற்கு!
லாரியில் அடிமாடாய்போகிறது!
நாங்கள் விற்று காசாக்கிவந்த!
எங்கள்வீட்டு லட்சுமி