தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தீபாவளி

ரா.கணேஷ்

ஊரெங்கும்!
புஸ்வாணங்களும்!
சங்கு சக்கரங்களும்!
தீபாவளியாய்!
சிரித்தன!
முடிந்து போன!
கம்பி மத்தாப்புக்களையும்!
புஸ்ஸான வெடிகளையும்!
கைகளில் ஏந்தி!
முனுசாமியின் மகன்!
தன்!
கனவுகளைக்!
கொளுத்தினான் !!
- ரா.கணேஷ்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பாரதி வாழி

பாண்டூ

பாரதிபோல் பாரதனில் பார்த்ததுவும் உன்டோ ? - நம் !
பாரதத்தைப் பாட்டதனால் பாலித்தவர் உண்டோ ? !
பா-ரதத்தில் ஏறியே பவனியவன் வந்தான் - நல் !
பாரதத்தை உய்வித்திட பாடல்பல தந்தான்! !
சுதந்திரத் தேரதனில் சாரதியாய் நின்றான் - பெண்!
சமத்துவத்தை யேதனது சுவாசமெனக் கொண்டான்!!
மதவெறி கொண்டோரின் முகத்தினிலே உமிழ்ந்தான் - பொய் !
நிதம்கூறித் திரிவோரை நிந்தனைகள் புரிந்தான்! !
கந்தைக்குக் கூடகையில் காசிலாமல் கிடந்தான் - நம்!
சிந்தைக்கு சிந்துதந்து பாவரசாய் நடந்தான்! !
எந்தையர் நாடிதென எண்ணத்திலே பதித்தான் - வெறும் !
மந்தையான மக்கள்மனம் மாறிடவகை உரைத்தான்! !
மேலிவன் கீழிவனென மனிதருள் உண்டோ? - இம்!
மடமைதனைப் போக்கிநல் மாண்பினை வளர்த்தான்!!
ஆழ்கடலும் மலைகளுமே அரும்தோழர் என்பான் - சிற் !
அறிவுயிர் ஆயினும் அன்போடு அணைப்பான்! !
தமிழ்வாழ வேண்டும்மெனத் தினம்தினம் நிணைத்தான் - இவன் !
தான்வாழ நிணையாதத் தூயவனாய்த் திகழ்ந்தான்! !
அமிழ்தினும் இனியதமிழில் அரும்கவிகள் குவித்தான் - இவன் !
அச்சமது மடமையென அஞ்சாமை விதைத்தான்! !
ஒப்பில்லா உலககவி யெனவேதான் உயர்ந்தான் - நம் !
ஒருமைப்பாடு ஓங்கிடவே ஓய்வின்றி உழைத்தான்! !
செப்பும்கவி யாவும்நம் சிந்தணையை ஏற்றும் - இவன் !
செத்தான் என்பதில்லை சிரஞ்சீவி தான்நாளும்! !
!
பாண்டூ ... !
சிவகாசி.
+91 98421-42192