தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

பர்ஸான்.ஏ.ஆர்

என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.!
காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே!
கொஞ்ஞம் கொஞ்ஞமாக கால் பதித்து!
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.!
என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்!
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.!
நீண்ட தூரங்கள் கடந்துசென்று!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்!
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.!
!
வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று!
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.!
!
வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்!
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்!
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
நீல நிழலின் அழகில் நின்றது.!
காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்!
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.!
!
நிறங்களுடன் மெய்த பெருமழையில்!
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.!
!
நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்!
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது!
சிறிய கடலின் நீண்ட வெளியில்!
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.!
!
பர்ஸான்.ஏ.ஆர் !
20.02.2008

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

சப்தம் கண்டுபிடித்த மௌனம்

சிலம்பூர் யுகா துபாய்

பெண்ணே!!
காட்டுத்தீயாய்!
கிடந்த அழகு!
உன்மீது!
விழுந்தபோதுதான்!
தீபமானது.!
மொழியாய்!
கிடந்த தமிழ்!
உன் உச்சரிப்பிற்குட்பட்டு!
இசையாகிப்போனது.!
பெண் இலக்கணம்-இனி!
உன்னளவாகவே!
உருமாறிப்போகும்.!
நீ!
பேசத்தொடங்கினால்!
வாய் மூடிக்கொள்ளும்!
உன்கொலுசு.!
எல்லோரும்!
மொழிக்குள்!
கவிதை தேடும்!
முயற்சியிலிருக்க!
உனக்கு மட்டுமெப்படி!
கவிதையே!
மொழியாகிப்போனது!!
மரபை நிராகரித்த!
பெண்களுக்கு கூட!
கற்பு நிலையில்!
உன் மார்க்கமே!
நெறியாகிப்போனது.!
எங்கிருந்து பெற்றாய்!
இருபத்திரெண்டு வயதில்!
இத்தனை பக்குவம்!!
உன்னை!
பார்த்தபோது மட்டும்தான்!
என் பேனா!
கொஞ்சம் பிரமித்து நின்றது!
மனம் சல சலத்து போனது!
ஆணென்ற அகம்பாவமும்,!
கர்வமும்-கொஞ்சம்!
கரையத்தொடங்கியது.!
பிழையின்றி செய்த!
பிரம்மனின்!
ஒரே படைப்பு நீ!!
நான்!
சப்தமென்றால்!
நீ!
மௌனம்.!
ஒவ்வொரு சப்தமும்!
ஏதோ ஒரு!
மௌனத்திற்காக வேண்டிதான்!
கர்ஜிக்கிறது!
அப்படித்தான் நானும்.!
ஒவ்வொரு மௌனமும்!
ஏதோ ஒரு!
சப்ததிற்காக வேண்டிதான்!
தவமிருக்கிறது!
அப்படியா நீ?!
----------------------------------!
இடுப்புக்கடியிலா இதயம்!
!
இதயம் வேண்டியே!
எப்போதும்!
காதிருப்பதாய்!
சொன்னவனே!!
துண்டுஇருட்டில்!
அதை!
தொடையில் தேடுகிறாயே!
இதயமிருப்பது!
இடுப்புக்கடியிலா?