தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

விதி வசத்தால்

அனாமிகா பிரித்திமா

உங்களை கைப்பிடிக்கும் வரை...!
தமிழ் தெரியாது...!
முழுமையாய்...!
பிடித்தபின் உங்களை...!
ரசித்ததாலேயே...!
தமிழைக் கற்றுக்கொண்டேன்...!
முழுதாய் கற்று...!
முடிக்கும் முன்னே...!
விதி வேறு விதமாக...!
இருவரையும் இழுத்துச்சென்றது...!
கவிதை எழுதுவேன் என்று...!
கனவிலும் நினைக்கவில்லை...!
கற்று கொடுத்த ஆசான் நீங்கள்...!
கண்ணீருடன் என் நன்றிகள்...!
பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...!
நான் கவிதைக்காரி அல்ல...!
ஆனால் இன்று விதி வசத்தால்...!
எழுதுகிறேன்...!
எழுதுவேன்...!
!
-அனாமிகா பிரித்திமா!
()

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

களவு கூட சந்தோஷம்தான்

செயவேலு வெங்கடேசன்

குளிர்கால ரயில்வே ஸ்டேஷன்!
சிமெண்ட் பெஞ்சில்!
தி ஜாவின் மோகமுள்!
உடனான தணிமை,!
முன் வராண்டா வேப்பமர!
முன்னிரவு தென்றலில்!
இளையராஜாவின் இசையுடன்!
ஜென்சியின் இனிமையுடனான!
எப் எம் அலைவரிசை.!
அலுவலகம் முடிந்து!
நண்பர்கள்!
பாய் கடை டீ பிஸ்குத்!
தம் அரட்டை,!
காலை செய்தித்தாள்,!
மாலை தொலைக்காட்சி,!
செய்திஇ மெகா சீரியல்,!
பின்னிரவு பால் பழம் தம்,!
மற்றும் எத்தனை எத்தனையோ?!!..!
களவு போயும்கூட!
கவலையில்லை,!
சந்தோஷமே!!..!
என்னுடனான என்!
குழந்தையின் திருடப்பட்ட!
சந்தோஷ தருணங்கள்!
களவு போனதில்..!
!
-க.செ.வெங்கடேசன்.. அபுதாபி