தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அர்த்தமிழந்து போன அர்த்தங்கள்

நேற்கொழுதாசன்

நிலாக்கரையும் பொழுதொன்றில் !
உலர்ந்த உதடுபிரித்து !
பேசத்தொடங்கினேன் !
ஒலிக்குறிப்பற்ற சொற்களால். !
நிசப்தமுடைக்கும் !
மிக நிசப்தமாய் !
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .!
இலையில் பின்னிய வலைக்குள் !
இறந்துபோன புழுவாய் !
உக்கத்தொடங்கியது மனம் !!
இடைவெளிகளை !
முரண்களால் நிரப்பி!
இணைப்புக்களை தயக்கங்களால் !
சோடித்துத்திரும்பியபோது, !
வறண்டு வெடித்துப்போயிருந்த!
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்!
விதைகளை எரித்து கருக்கின ..........!
மரண ஊர்வலம் போன !
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல் !
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள் !
காயத்தின் ஊனநீர் நாற்றம் !
ஒடுங்கி !
ஒன்றுமில்லாத ஒன்றாக !
மீண்டும் மீண்டும் !
ஒடுங்கி கொள்கிறது !
இந்த நாட்கள் மீதான இருப்பு !
மெல்ல மெல்ல !
கரைந்து மறைகிறது நிலவு !
அர்த்தங்கள் எல்லோராலும் !
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக !
அவளிடமிருந்தும்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

வார்த்தைகளற்ற இடம் தேடி; நீயும் நானும் போவோம் வா

வித்யாசாகர்

ஒரு சின்ன முத்தத்தில் இதயம்!
ஒட்டிக் கொள்ளவும் -!
உதடுகள் ஈரமாகவும் ஒரு பூ உள்ளே பூக்கிறது.!
நெருக்கத்தின் நெருப்பில் அன்பு வார்க்கவும்!
பண்பின் நகர்தலில் காதல் கற்கவும் -!
ஒரு சப்தம் இசையாய் காற்றிலே கலக்கிறது..!
முகத்தின் மாயயை உடலால் உரசி கிழித்து!
உள்ளத்து கதவுகளை வாழ்விற்காய் திறந்துவைக்க!
உலகதத்துவம் வெற்றிடமாய் உள்ளே பரவுகிறது..!
பேசிக் கழிக்காத பொழுதொன்றாய்!
ஒவ்வொரு நாளினையும் - வாழ்ந்துக் காண்பிக்க!
காலக் கணக்கின் அச்சாணி புடுங்கி -!
ஒரு அசட்டுத் தைரியம் உட்புகுந்து!
வருடங்களை எல்லாம் நாட்களாய் மாற்றி!
நாட்களை நொடிகளாய் திரித்து - யுகம் பல உன்னுள் தொலைக்க!
உனை மட்டுமே தேடி -!
யாருமிலா அண்டப் பெருவெளியில்!
அலைகிறதென் இமைப் பூட்டாத யிக் கண்களிரண்டும்..!
உச்சி நடுக்கோட்டில் முத்தம் பதித்து!
பாதபஞ்சுதனில் பூமிபடாதுனை - நெஞ்சுக் கூட்டில் தாங்கிக் நிற்க!
நித்தமும் நித்தமும் ஓர் தவம்!
காத்திருப்பின் கண்ணீர்பெருக்கில் கரைந்தேப் போகிறதெனில்!
நம்புவாயா???!
சப்தமிடாத வானத்தின் இரவொன்றில்!
நட்சத்திரம் பொருக்கி பெயர்கோர்த்து!
அதற்கு வானவில்லில் கோடுகிழித்தா லென்ன யெனும் கற்பனை!
உனை எண்ணும் போதெல்லாம் -!
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் - உன் நினைவுகளாய் உள்ளே!
பெருக்கெடுக்கிறது...!
காலத்திற்குமான சாபமாக காதலை திரித்த!
பொய்யர்களின் முகத்தில் - எது காதலென எழுதிவிட்டு!
ஜாதியின் மதத்தின் வெறியை!
ஒரு முத்தத்தில் அழித்துவிட்டு -!
வெறுமனே திரும்பிப் படுத்துக் கொள்ளும்!
ஒரு இள-ரத்த துணிவல்ல யிது;!
உன்னோடு வாழமட்டுமே -!
கனவின்றி காத்திருக்கும் ஒரு வாலிபனின் உணர்வு.!
உனக்கும் பிடிக்குமெனில் சொல் -!
இரு கைவிரித்து -!
இதோ இந்த கனம் முதல் நமதென்று முழங்கி!
வார்த்தைகளில்லா ஓரிடம் நோக்கி!
நீயும் நானும் பறந்துபோவோம்