தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

ஒற்றை பூமாலை.. லஞ்சம்

கி.அற்புதராஜு

01.!
ஒற்றை பூமாலை !
---------------------!
மனைவியின் !
வேண்டுதலை !
நிறைவேற்ற !
ஞாயிறு மாலை !
கோவிலுக்கு !
பேருந்தில் செல்லும் முன் !
கோவில் அருகில் !
பூமாலை கிடைக்குமோ, !
கிடைக்காதோ என எண்ணி !
ஏறுகின்ற பேருந்து நிலையம் !
அருகிலிருந்த பூக்கடையில் !
ஒற்றை பூமாலையை !
விலைப் பேசி வாங்கி !
பேருந்தில் ஏறினோம். !
!
ஒற்றை பூமாலையைப் !
பார்த்த சகப் பிரயாணி !
சற்றே தள்ளி உட்கார்ந்தார். !
!
இறங்கும் பேருந்து நிலையம் !
அருகிலேயே கோவில் !
இருந்ததால், நாங்கள் !
கோவிலுக்குள் நுழைவதை !
அவர் பார்த்திருந்தால் !
திருப்தி அடைந்திருப்பாரோ !
என்னவோ..! !
!
02. !
லஞ்சம் !
-------------!
அரசாங்கம் தினந்தோறும் !
500 ரூபாய் கொடுத்தும் !
வேலை செய்யாத !
அரசு அதிகாரி, !
நான் 50 ரூபாய் கொடுத்ததும் !
செய்து முடித்தார் !
அந்த வேலையை

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

மௌன மொழி

உமா

மாறி தான் போய் இருக்கிறாய்
மறந்து போய் விட வில்லை என
நம்பிக்கை நங்கூரம் போட்டும்
கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கும்
காகித கப்பலாய் என் மனம் !
 
முன்னறிவிப்பில்லா உன்
மௌன சூராவளியால்
என்னுள் கண்ட விளைவு இது !
 
எதிர்கால வாழ்க்கைக்கான வழிகளை விட
ஏக்கத்தின் வலிகள் தான் எனக்கு அதிகம்
 
உனக்கு தெரியுமா?-உன்
மௌனத்தால் நீ அமைத்த
உனக்கும் ,எனக்குமான
இடைவெளி பாலத்தின் மீது
உன் நினைவலைகளின்
நடமாட்டம் மட்டுமே
நிறைந்துள்ளது!
நிலைத்துள்ளது!
 
அங்கு ஒரு முனையில் நானும் ,
மறு முனையில் என் மனமும் நின்று
உரையாடி கொண்டே இருக்கிறோம்
உன்னை பற்றியே இன்னும்!
நீ உன் சுயத்தை
இழந்து விட்டதாய் நானும்...
சுதந்திரத்தை இழந்து விட்டதாய்
என் மனமும்...
 
நிஜமானதாக இல்லா விட்டாலும்
நியாயமானது என எதேனும்
காரணம் முன் வைத்துப்போய்
இருக்கலாம் -ஆயினும்
தவறியும் உன்னை காய படுத்த கூடாது
என்பதற்க்காகவே உன் மௌனத்தை
அறுத்தெரியும் ஆயுதம்
எது என்பதை கண்டு அறிய
என் மனம் மறுத்து
கொண்டே இருக்கிறது!
நீயோ தொடர்ந்து மௌனம்
தரித்து கொண்டே இருக்கிறாய்!
 
நம் உரையாடல்களை மிஞ்சிய
இந்த மௌன மொழி எனக்கு
உரைக்கும் செய்தி என்ன தெரியுமா?
இது பிரிதலுக்கான மௌனம் இல்லை
நம்மை பற்றிய நம்
புரிதலுக்கான மௌனம் என்று