தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

ஒட்டு மாமரம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) !
அந்தப்பக்கம் போய் !
ஆண்டுகள் ஆகிவிட்டன !
ஒரே ஊருக்குள்ளிருந்தும் !
எட்டிப்பார்க்காமல் திரும்பியது !
என் மனத்தில் சுமைதான் !
அதன் நினைவையும் !
நிழலையும் !
நான் அதிகமாகத்தான் !
எழுதியிருந்தேன் என்பதைவிட !
ஆழமாய் உணர்ந்து !
அவதிப்பட்டிருக்கிறேன் !
எட்டிப்பார்க்காததை எண்ணி !
அது ஏதோ வாய்திறந்து !
அழுவதாக நினைத்து !
மனம் தானாகக்கனத்துக் !
கரைகிறது கண்களில் !
கோடையின் வாடையை !
வரவிடாமல் தடுத்த !
அதன் அடர்த்தியை !
உணர்ந்தவர்கள் எல்லாம் !
கைதிகள் ஆனார்கள் !
விடுதலை வேட்கையை !
விட்டுத்தொலைத்தார்கள் !
சூரியக்குதிரைகள் !
நுழைய முடியா !
அடர்த்தி அரண் !
நான் !
அதன் அணைப்பில் !
தூங்கி விழித்தவன் !
அதன் பரிசுகளைச் !
சுவைத்து ருசித்தவன் !
எப்போதோ வரும் !
மின்னல் நினைப்போடு இருந்துகொண்டு !
எழுதிக்குவிப்பதில் !
எத்துணைப் போலித்தனம் !
என்னிடம்

சமீபத்திய கவிதை

வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்

குரு

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்..

வலுக்கட்டாயமாக
ஒரு முத்தம்...

மண்ணில் மழைத்துளி

குறிப்பில்லாக் கவிதை (random)

ஆனாலும் புடிச்சிருக்கு

சங்கீதா

"எழுதி எழுதி
என்னத்த கண்ட?"
மனசாட்சி என்னைக் கேட்டாலும்
எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
எழுதிக் குவிக்கின்றேன்.
உள்ளுக்குள் போராட்டம்
ஓராயிரம்.
ஆனாலும் புடிச்சிருக்கு
அவளைப் பற்றி எழுதுவதற்கு