தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

பூமியை மிஞ்சிய பொறுமைக்கு

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்

ஓட்ட பந்தயத்தில் !
ஆமையோடு போட்டியிட்டு!
தோற்றுப்போ. !
நத்தையோடு கைகோர்த்து!
நகைச்சுவையாய்!
பேசிக்கொண்டு !
நடைபயிற்சி சென்று வா. !
நுளம்புகளின் நூலகத்தில்!
முகம்சுழிக்காமல் !
சத்திய சோதனை !
புத்தகம் படி. !
அட்டைகளுக்கும்!
மூட்டை பூச்சிகளுக்கும் !
இரத்த தானம் வழங்கி!
ஆனந்த படு . !
பிரதான சாலையோரங்களில்!
வாகனங்களில்!
மோதிவிடாதவாறு!
எருமை மாடுகளை!
மேய்த்துப்பார். !
முதியோர் இல்லங்களில் !
ஆதரவற்றோர் படும்!
அவஸ்தைகளுக்குள்!
ஐக்கியப்படு !
மதுபான சாலைகளில் !
தேநீர் குடித்துவிட்டு!
புகை பிடிக்காமல் !
வெளியே வா !
உண்மை பேசு !
அறுநூறு அங்கங்கள் !
கடந்து விட்டாலும்!
இப்போதுதான் தொடங்கியுள்ளது!
என்ற உற்சாகாத்தோடு!
அறுவையானபோதும்!
அமைதியோடு!
ஒன்று விடாமல் !
தொலைக்காட்சித் தொடர்களை!
தொடர்ந்து பார் !
கிராமத்து ஒற்றையடி!
பாதைகளில் மாட்டு வண்டி !
ஒட்டு !
வாகன நெரிசல்களில்!
உன்னை தாண்ட !
எத்தனிக்கும் !
எவருக்கும் வழி கொடுத்து!
சமிக்ஞை ஒலி!
எழுப்பாமல் வாகனம் ஒட்டு !
ஒலிவாங்கி மன்னர்களின் !
அண்ட புளுகுகளை !
சலிக்காமல் செவிமடு !
இது போன்று!
உன்னால் முடியாதது !
எதுவானாலும் உனக்கது !
சாத்தியப்படுமானால் !
உண்மையில் நீ!
பொறுமையில் இந்த!
பூமியை மிஞ்சலாம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எழுதப்படும் வரலாறு

செண்பக ஜெகதீசன்

விழுந்தவன் !
எழுந்திருக்கும்போதுதான் !
எழுதப்படுகிறது, !
ஒரு !
வெற்றியின் வரலாறு…!!