தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தான் .. மாற்றான் தோட்டத்து காந்த

வி. பிச்சுமணி

தான் (Ego).. மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
01.!
தான் !
-----------!
உன்னை மாற்றிகொள் எனும் சொல்!
உனது தான் விழிக்க செய்துவிட்டது!
நம்மிடையே அமைதி பள்ளத்தாக்கு!
உன் மனதில் வெறுப்பு மண்டியது!
விரோத கொடி ஆக்டபஸ் கையாய் பரவுகிறது!
உனக்கும் எனக்கும் உள்ள பகைவர்கள்!
சந்தர்ப்பத்தை சாதகமாக்க வளையவருகிறார்கள்!
வெறுப்பு அவர்களை விரட்ட மறுக்கிறது!
தூபங்கள் நம்மை அந்நியபடுத்துகின்றன!
எனக்கெதிராய் கனைகளை ஏவுகிறாய்!
எனது தற்காப்பு கேடயத்தை தாக்கும் ஆயுதம் என்கிறாய்!
சூரியனின் அண்மையினால் நிலவே!
புளுட்டோவின் கோள் அந்தஸ்தை நீக்கிறாய்!
இன்றைய வெற்றி உனதாக இருக்கலாம்!
நாளைய வெற்றி நான் அடையலாம்!
பேசினால் பிரச்சனை தீர்ந்துவிடும்!
யார்வந்து முதலில் பேசுவதென்பது!
அலை நின்றபின் நீந்த கரையில் காத்திருக்கிறது!
நமது நட்பு உதிர்ந்த மலர்களா!
உடைந்த கிளைகளா காலத்தின் கையில்!
02.!
மாற்றான் தோட்டத்து காந்த மல்லிகை!
---------------------------------------------------------!
தொடர்வண்டியில் எதிர் இருக்கை!
பெண்ணின்அப்பழுக்கற்ற பழுப்பு நிற கண்கள்!
மது உண்ட மந்தி போல் மயங்கிபோக வைக்க!
ஏற்றி சீவிய முன்தலையில் நீளம் குறைந்த மயிர்கள் நின்று ஆடிகொண்டிருந்தன!
பின்தலையில் இருக்கை கட்டிய சின்ன குதிரை வால் கொஞ்சம் உயரமாயிருக்க!
சிவந்த நெற்றியில் வைத்த குங்குமம் நீண்ட பயணத்தில் கலைந்து இருந்தாலும்!
புருவங்களில் இடையே சிவப்பு ஒட்டுபொட்டு உதித்து கொண்டேயிருந்தது!
முகத்திறகேற்ற அளவான மூக்கில் சின்ன வெள்ளை மூக்குத்தி!
அடுக்கு முக்கோண கம்மல் அதற்கு மேல் பாந்தமாய்சின்ன சிகப்பு கம்மல்!
நீல வண்ண புட்டா வைத்த சேலை அவளை சுற்றி வளர்ந்திருந்தது!
சட்டை எப்போ இருந்த பெருங்காய பாத்திரம் போல்!
அவளுடைய ஒரு பையன் ஒரு பொன்னும் செய்த குறும்புகளை!
பொய் கோபம் காட்டி அடக்கிய போது ஒர் அழகு மின்னல் ஓடியது!
குளிர் பானத்தில் குளித்த போதும் மேல் உதடைவிட கீழ் உதடு இளம் ரோஜா வண்ணத்தில்பளபளப்பாய் காய்ந்து மின்னின!
நடுவில் அவள் வைத்த ஒரு விரல் இருபக்கமும் இதழ்கள் சமம் என பறைசாற்றியது!
அவள் வயிற்றில் ஆடிய தாலியில் இருந்த கருமணிகள்!
தமிழமகள் இல்லை என்று சொன்னாலும் அவள் பேச்சு செந்தமிழாள் என்றுரைத்து!
புறவழிச்சாலையில் செல்லும் மகிழ்உந்து போல் மெல்லிதாக சிரிப்பு!
ஏறி அமர்ந்ததிலிருந்து அவளையே நோக்கிய உணர்வில் கண்களை திருப்ப எத்தனித்து தோற்று போனேன்!
என்பார்வைகள் அவளிடம் செல்லாத காசாய் திரும்பவந்தன!
அவள் முந்தி பிறந்திருக்கலாம் நானாவது பிந்தி பிறந்திருக்கலாம்!
திருமணங்களுக்கு முன் சந்திக்க வைத்திருக்கலாம்!
இப்படி காலம் கடந்தபின் வந்த தேவதை நான் வாழும் ஊரில் இறங்க!
என்றாவது அவளை ச்ந்திக்கும் சந்தோஷம் மனதில் என்னுடன் இறங்கி வந்தது

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

வாழ்க்கை பயங்கள்

பாலசுப்ரமணியன்

வாழ்க்கையைக் கண்டு
பயந்தேன்!!
அதன்
வசந்தத்தை அனுபவிக்காத
வரை!!

அன்பைக் கண்டு
பயந்தேன்!!
அது என்
இதயத்தில் இருள்
போன்ற கருமையை
நீக்கி,
நிகரில்லா
வெளிச்சத்தை வீசும் வரை!!

வெறுப்பைக் கண்டு
பயந்தேன்!!
அது
அறியாமை என்று
அறியும் வரை!!

ஏளனங்களைக் கண்டு
பயந்தேன்!!
எனக்குள்
சிரிக்கத் தெரியாதவரை!!

தனிமையைக் கண்டு
பயந்தேன்!
நான் தனியாக
இருக்கக் கற்றுக்கொள்ளும் வரை!!

தோல்விகளை கண்டு
பயந்தேன்!!
தோல்வியே
வெற்றிக்கு அறிகுறி என்று
உணரும் வரை!!


வெற்றிகளை கண்டு
பயந்தேன்!! வெற்றியே
வாழ்க்கையின் சந்தோஷம்
என்று அறியும் வரை!!

மற்றவர்களின் விமர்சனங்களுக்கு
பயந்தேன்!! அவர்களுக்கும்
என்னைப் பற்றிய கருத்துக்கள்
இருக்கும் என்று உணரும் வரை!!

ஒதுக்கப்படுவதைக் கண்டு
பயந்தேன்!! எனக்குள்
தன்நம்பிக்கை வரும் வரை!!

வலிகளை கண்டு
பயந்தேன்!! அது
வளர்ச்சிக்கு தேவை
என்று அறியும் வரை!!

உண்மையைக் கண்டு
பயந்தேன்!! பொய்மையின்
முகங்களை பார்க்கும் வரை!!

வயதானதை அறிந்து
பயந்தேன்!! வாழ்க்கையில்
பண்பட்டு விட்டேன் என்று
உணரும் வரை!!

நடந்ததை நினைத்து
பயந்தேன்!! அது இனி
நடக்காது என்று
நம்பும் வரை!!


நடக்கப் போவதை
நினைத்து பயந்தேன்!!
நடந்தது எல்லாம்
நன்றாகவே நடந்தது,
நடக்கப் போவதெல்லாம்
நன்றாகவே நடக்கும்
என்று உணரும் வரை!!!

மரணத்தைக் கண்டு
பயந்தேன்!! அது முடிவல்ல
புதிய ஆரம்பத்தின் தொடக்கமே
என்று உணரும் வரை!!!