தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

துளிகள் நிரந்தரமில்லை

நட்சத்ரவாசி

நிலவொளியில்
மல்லாந்து
படுத்துக்கொண்டு
சுயமைதுனத்தில்
ஆள்கிறான் அவன்
தரையில்
ஆங்காங்கே
விந்து துளிகள்
நிலவொளியாய்
--
நீ பெண்மையை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
மௌனத்தை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
என்னொரு நீயை எழுதிய போது
வார்த்தைகள் கலைந்தன
ஒரு சொல் கவிதை.
--
ஒரு பொழுதில்
கடலலை சீறும்
பின் தணியும்
உள்வாங்கும்
எப்போதும்
இப்படியாக தான்
போகுமோ
பொழுது

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

மனித நேயக் கிரீடம் அணியுங்கள்

வேதா. இலங்காதிலகம்

குழந்தைச் செல்வங்கள், குமுதமலர்க் கொத்துகள்.!
குடும்ப விளக்குகள், குளிர் தென்றல் அலைகள்.!
உவகைமிகு சர்வதேச உயிர்ச் சிலைகள்.!
உயிர் அதிசயங்கள், உணர்வுக் காவியங்கள்.!
தாழ்வது வந்தாலும் தைரியம் தருகின்ற!
வாழ்வுக் கடலின் வைரத் தெப்பங்கள்.!
!
உலகத்து உதடுகள் உணர்ந்து புகழும்!
உன்னத தீபங்கள் உளி செதுக்காச் சிலைகள்.!
மனவாதை இருளின் ஒளி தேவதைகள்.!
மனங்கவர் புன்னகை, மழைமின்னற் கீற்றுகள்.!
வாழ்க்கைச் சுவடுகளின் காலடித் தடங்கள்.!
வாழும் கவிதையாய் நடமிடும் மழலைகள்.!
பெற்ற செல்வங்களைப் பேணத் தவறிடில்!
சுற்றம் தொலைந்திடும், பற்று அறுந்திடும்.!
குற்ற உணர்வுடன் வெற்றி தொலைப்போம்.!
மற்றவர் போற்றிடும் நிலை விலகிடும்.!
காற்றுள்ள போது கறைகளைத் தூற்றாவிடில்,!
ஆற்றில் வெள்ளமாய் சேற்றோடவர் புரள்வார்.!
கற்ற அறிவாலெவரும் கொற்றம் பெறலாம்,!
நற்றமிழ் வானில் துருவ நட்சத்திரமாகலாம்,!
பண்பு மேடையில் அன்பு வாழ்வமைக்கலாம்,!
இன்ப நகரத்துச் சரித்திர நுழைவாயிலாகலாம்,!
மழலைப் பூக்களை மதித்து அணைத்தால்.!
மனிதநேயக் கிரீடம் மகிழ்ந்து அணியலாம்.!
!
பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.!
ஓகுஸ் டென்மார்க்