தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அன்பெனும் ஒளி

வினோத்குமார் கோபால்

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பிழைப்பைத்தேடி

நதீர் சரீப்

பிழைப்பைத்தேடி
பறந்து சென்ற என்
ப்ரியமான கணவனுக்கு!

வேர்களை யாரும் இறந்த பின் புதைப்பதில்லை
சாகும் முன்பே புதைந்து வாழும் வேர்களாய் நீயும்
மறைந்து வாழும் அர்த்தம் என்ன?

நீர் தேடும் வேர்களாய் நீ
எத்தனை தூரம் ஓடினாலும்
பூத்துக் குலுங்குவதும் வெளிச்சத்தில் நிற்பதும்
பூக்களும் காய்களும்தான்...நீயல்ல

தூரத்தில் பொழியும் மழை வேண்டாம்
நமதருகில் விழும் சிறு தூறல் போதும்
வா!
உன்னை வேர்களாய் தொலைத்து
உன் வேர்வை உறுஞ்சல்களில்
நாம்
பூத்துக்குலுங்க வேண்டாம்.

அந்த வறுமையின் இருட்டிலும்
சேர்ந்துதானே இருந்தோம் - நீ
வெளிச்சம் வாங்க பறந்து சென்றாய்.
நம் பார்வையையே தொலைத்து விட்டது - 'தூரம்'.!
இரண்டுமே இருட்டுதான்!
வா!
பிரிவில் பார்வை இழப்பதை விட
ஏழ்மையின் இருட்டில் இருப்போம்.

வாழ்வின் வரைவிலக்கனத்திற்கு
வார்த்தைகள் தேடிச் சென்றாய்,
மொழியை மறந்து விட்டாய்.

எல்லாமே போதும்
நீ மட்டும் வந்து விடு!

- நதீர் சரீப் , அக்கரைப்பற்று