தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

காதலே உன்னை என்ன செய்ய

றஞ்சினி

பகலா இரவா புரியாத காலநிலை!
எப்போதுமின்றி!
என்வீட்டு மரங்கள் வெறுப்பை தருகிறது!
இதயம் விட்டு விட்டு அடிக்கிறது!
என்னை அந்தரத்தில்!
தவிக்க வைத்து தாலாட்டு கேட்கிறது!
சில மணித்தியால சலனங்கள்!
தொ¤ந்தும் ஏன் இப்படி தவிக்கிறது மனம்!
ஆசையாய் உன்னை முத்தமிட முடியாது!
அன்பாய் உன்னை வருட முடியாது!
காதலாய் உன்னை அணைக்கவும் முடியாது!
ஆயிரம் தடைகள் சம்பிரதாயங்கள்!
அவனுக்கும் இப்படித்தான் இருக்குமா!
இருக்க வேண்டுமென்கிறது மனம் ஆசையாக!
என் உணர்வுகளே உங்களுக்கு !!
மதிக்கத்தான் நினைக்கிறேன் முடிவதில்லை!
எப்போதும்!
அறிவாக நினைத்தால் சி£¤ப்புத்தான் வருகிறது!
அறிவாக நினைக்க மனம் அனுமதிக்கப்!
போவதுமில்லை இப்போ.!
காதலே ! திரும்பத்திரும்ப உனது அடிமையாக!
இன்னும் எத்தனை காலம்தான் நான்..!
வயது வரம்புகள்!
எப்போ எங்கு யாருடன் என்றெல்லாம்!
பார்க்காது!
வினோதமான உறவுகளை எப்போதும்!
விதைத்த படி நீ.!
உதறிவிட்டு போனாலும் தொடர்கிறாய்!
என்னுடனே!
கொன்றுவிட்டு வாழவும் முடிவதில்லை என்னால்!
என்ன செய்ய காதலே உன்னை என்ன செய்ய

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

காதல் தீபம்

கலாநிதி தனபாலன்

விண்ணினைத் தொட்டிடும் விரக தீயினால் !
விழி எனும் விளக்கிலே விாித்த!
விருப்பு எனும் நெடும் திாியிலே!
தீபம் ஏற்றினாள் காதல் தீபமேற்றினாள்!
மாம்பழ மதுரமேனி மங்கையின் கண்ணிலே!
கண்ட காதலால் கன்னியுடன் சென்று!
காமம் கலந்துண்டு களிப்புற்று கழித்திட்ட!
கனிந்த பொழுதுகள் காலத்திற் புதியது!
மனம் புதியதென்று பூமகளைப் புாிகையிலே..!
நெருப்பென்ன நின்ற நெடும் குமாி!
நெருங்கி வந்ததுவும் நிசம் தானோவென்று!
நின்று நினைக்கையிலே கருத்தைப் பிழைப்பித்து!
கட்டியவள் அணைக்கையிலே காதல்தான் பெருகியது!
ஆசையினாலுண்டான அறியாத ஆயிரமாயிரம் உணா்வுகளில்!
அன்பேதான் ஆதிக்கம் செலுத்தியது ஆதலினால்!
அழகுத் திருமகள் ஆசையுடன் கூடிவந்து!
கொண்டு வந்த காதலெனும் தீபமது!
ஆண்டாண்டு காலமதாய் அணையாது எாியட்டும்