தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தலைப்புத்தேடும் கவிதைகள்

ஷக்தி

சேலை!
அதிகாலையில் எப்போதும்!
மூடுபனிச்சேலை கட்டி,!
மோகமுள் கொண்டு நிற்பாள்!
என் வீட்டு வெள்ளை ரோஜா.!
அனுதினமும் வந்து!
வேகமாய் துயிலுரித்து!
தாகமாய் முறைப்பான்,!
சூரிய துரியோதனன். !!!
---!
என்றும்,!
தணியாததோர் தேகதாகம்.!
எதற்கும்,!
பணியாததோர் தாகதேகம்.!
முற்றும் துறந்தவனையும்!
விட்டுவைப்பதில்லை.!
மண்டியிடவே வைக்கிறது!
இந்தியத்தொலைக்காட்சிகளின் முன்.!!!
---!
எந்த நொடியிலும்!
சறுக்கி விழுந்தோடி!
சாகவும் துணிந்துதான்,!
இந்த நொடியிலும்!
ஜூலியட் ரோஜாவின்!
சுழல்போதை இதழ்மேல்!
குலைந்து நிற்கிறதோ!
அந்த அதிகாலை தேசத்து!
ரோமியோ பனித்துளி. !!!?!
---!
காதலில்!
உனது வாழ்வு, பயணம்!
எனது வாழ்வு, பணயம்.!
வாழ்வில்!
உனது காதல், முதலீடு!
எனது காதல், முறையீடு.!
என்னில் உனது காதல், காமம்!
உன்னில் எனது காதல், காயம்.!
மண்ணில் நமது காதல், பாடம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

நினைவு

தென்றல்.இரா.சம்பத்

சகியே.....!
புதைத்துவிடச் சொன்னாய்!
நானும் செய்தேன்!
ஆழமாய்தான் புதைத்தேன்-ஆனால்!
விதைத்து விட்டதாய் எண்ணி!
விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது!
என் இதயப்பரப்பு பூராவும்!
உன் நினைவு.!