தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

வாழ்க்கை

முல்லைக்கேசன்

வாழ்தல் என்பது உடலை!
மண்ணுக்கு!
உரித்தெழுதிக் கொடுத்துவிட - அது!
ஒன்றும்!
சரணாகதி யல்ல!
பிரசவிக்கப்பட்ட ஒவ்வொரு ஜீவனும்!
பிறர் சபிக்கச் சபிக்க!
மடிந்து போவதும்!
ரோஜா மலரொன்று மங்கையின்!
குழலுக்கென்று பறிக்கப் பட்டு!
பதாகைகளுக்கு தாரை!
வார்ப்பதும்!
ஒன்று!
மேட்டுக் குடிகளெல்லாம் அதிகாரத்!
தந்திகளை!
அடுத்தவன் தலையிலும்!
அடுத்ததை நெஞ்சிலும் இழுத்து!
இறுகக் கட்டி!
சோம பானத்திற்கு சொகுசான!
இசையொன்றாய்!
கட்டை விரல் கொண்டு கடின அழுத்தொன்றில்!
இசைக்கு கோலமிடும்!
இறுமாப்புக்!
கலைஞர்கள்!
அதிகாரப் பெருவாரி ஒரு நாள்!
இடிந்து விழும்!
அன்றொரு பொழுதில் அதன் அருகில்!
சென்று!
நுகர்ந்து பாருங்கள்!
அடிமைகளையும், அப்பாவிகளையும்!
அடி நெஞ்சில் !
அழுத்தி அழுத்தியே வெடித்துச்!
சிதறிய மனிதக்!
குலத்தின்!
நெஞ்சுக் கூடுகள் காறித் துப்பிய இரத்தச்!
சுவாலைகள் இன்றும்!
அணையாமல் ஆடி அசைகின்ற!
தியின் மணம் உம்!
நாசிகள் வழினுளைந்து துன்பங்களை!
துலக்கிவிடும்!
ஆட்சியாளன் ஒவ்வொருவனும் அத்திபாரம்!
என நினைப்பது!
கல்லுக்காய் சிதைகளையும்!
நீருக்காய் இரத்தக்காறைகளையும்!
தான்!
கால்ம் போயினும்!
கசிகின்ற வலிகள் இன்னமும்!
கறை படியாத!
பளிங்குகளாய்!
காயத்தின் விளிம்புகளுக்கு களிம்பு!
பூசுகின்றன!
அடிமேல் அடி அடித்தும் அசையாத!
உரு ஒன்று!
நிலையாக நிலத்து விடின்!
அடுத்த நாள்!
உதயம் அதற்கு பெயரொன்றை தரும் அடித்தவன்!
யாரென்றும்!
அதிலேயே பொறித்திருக்கும்!
சீறுகின்ற சிறுத்தையும்!
மாறுகின்ற மாற்றமும்!
மாறும் வரையிலும் மனைவிக்கும் தெரியாது!
இவையெல்லாம் கீழேகிடந்து!
கால்களில்!
இடறுப்பட கவிதைப் பொலிவுக்கும் கவர்ச்சி!
உயர் நயப்புக்குமாய்!
சொற்களுக்கும், வரிகளுக்கும் பலவந்த முடிச்சுப்!
போடுபவன் கவிஞன் என்ற பெயரை!
களவாய்!
உறவு கொள்பவன்.!

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பாடும் போது

ஜான் பீ. பெனடிக்ட்

பப்ளிக்ல பாடுவது!
பாரின்ல நியூசென்சு!
பக்குவமா பாடிப்புட்டா!
பலரை மயக்க இது லைசென்சு!
வாய்விட்டு நான் பாடும்போது!
வாசிங்டனே வணக்கம் சொல்லும்!
இறுக்கமான சூழ்நிலையும்!
இமைப் பொழுதில் இளகுவாகும்!
தனிமையில தவிக்கையில!
தலைமுடியை வருடிவிட்டு!
தாவி வந்தென்னை அணைச்சுக்கும்!
தாளமில்லா எம் பாட்டு!
பாடிக்கொண்டு நடக்கும் போது!
பாரம் கொஞ்சம் குறையுது!
பார்ப்பவர்கள் முகங்களெல்லாம்!
பள பளப்பாய் ஒளிருது!
இசை கேட்கும் திசை நோக்கி!
ஓசையின்றி பலர் புன்முறுவ!
உள் மனதின் வேதனையோ!
ஓடி எங்கோ ஒழியுது!
வேலை நேரத்திலும் பாடுவேன்!
வேண்டாதவரிடத்திலும் பாடுவேன்!
வேகமாய் நடக்கும்போது!
விறுவிறுப்பாய் நானும் பாடுவேன்!
கதவு மூடிய லிப்ட்டில்!
கனவுப் பாட்டு நான் பாடுகையில்!
காரியதரிசி கேட்டாள்!
Are you happy, J?!
கண் திறந் துரைத்தேன்!
Singing makes me happy!!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்