தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

வேட்கை முந்துறுத்தல்

கி. கண்ணன்

நெருப்பு நெய்யிட்டு  மூடுதலால்
அணையா தென்றுணர்க
அதுப்போல்-
நின்மீது யான்கொண்ட காதலும்
மறைத்திட கூடுதில்லை

உன்னிடம் தஞ்சம்
அடைந்தன நெஞ்சம்

உனது-
மார்பக புள்ளிமீது
கோலமிடும் நாள் வருமா ?

முதுகில் நகக்குறி
இடுவ தெப்போது

மெத்தை உறை
கறை படியட்டும்

தாழா தனங்கள்
தாழட்டும்

முக்கால் அழகு
மூடிய ஆடை

முற்றும் துறந்து
ஒளிபெற செய்

பெண்மை படை
எதிர்த்து போரிடு

தலைவ!
பூரித்து நிற்கின்ற அல்குல்
ஐவிரல் கைக்குள்ளே அள்ளியெடுத்து
அதன்வழி அதன்வழி
மேலாய் துடித்திடும் உயிர்
கீழாய் எடுத்திட வருகவே

பெண்ணாய் வழிந்து
காம வேட்கைக் கூறல்
பெண்மைக் கிழிவு

இந்த-
முகிழம் பூவை
முயங்கி கசக்க இச்சையுறு

கச்சை அவிழ்த்து
கல்மார்பு தளர்த்து

இன்பம் ஈந்து
இயலாமை ஏற்படுத்து

காமம்
இழந்து பெறுதல்

காதல்
பெறுதற்கு இழத்தல்

மித்திரனே-
மிதலைக்குள் வாய்போடு
மறுபடியும் மழலையாக்கு

பள்ளியறை
முதல் பாடம்

முத்த படலம்

இரண்டாம் படலம்
துகிலுரிக்கும் படலம்

இழக்க இழக்க ஊறுகின்ற
அமுத சுரபிதானே உணர்ச்சி

உணர்ச்சி உள்ளிழுத்து
மாதரார்-
பார்வையில் வெறி புலப்படுதல் தானே
பாலுணர்ச்சி

உணர்ச்சி நசுக்கும்
வலிமை உண்டு

உயிர் சுமக்கும்
திறன் இல்லாள்

தீ அணைக்க
நீ வாராய்

நீ அணைத்தால்
தீ ஓங்கும்

அணைத்தாலும் அடங்காதது
அடங்கினால் அணைந்துவிடும்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

தொப்புள் கொடி

த.சரீஷ்

என்னால் அவளைப்போல் !
நடந்துகொள்ள முடிவதில்லை. !
இருப்பினும்... !
இதை அவளிடம் !
சொல்லிக்கொள்வதும் இல்லை..! !
உள்ளங்காலில் அடிபட்டால் !
உச்சந்தலைவரை வலிக்கிறது !
அவளுக்கு. !
காயங்கள் குறித்த !
வேதனைகளை !
என்னைவிட அவள்தான் !
உணர்ந்துகொள்வது அதிகம். !
இது ஒரு !
உயிருள்ள உறவு தொடர்பான !
உணர்வின் வெளிப்பாடென்று !
எங்களில்... !
இதுவரை பலர் !
விளங்கிக்கொள்வதில்லை. !
பாசத்தின் கோடுகளையும் !
மனிதத்தின் அடையாளத்தையும் !
இதயத்தின் சத்தங்களையும் !
கன்னத்தின் காயங்களையும் !
உணரமுடிகின்ற குறியீடாகத்தான் !
இன்னும் அவள். !
தாலாட்டுப்பாடி !
சமாதானமாகப்பேசி !
ஒருவழியாக... !
உறங்கவைத்த பின்பும் !
காயம்பட்ட !
குழந்தையின் அழுகுரல்கேட்டு !
இதோ வருகிறேன் என !
குரல்கொடுத்தபடியே !
பக்கத்து அறையிலிருந்து !
பதறிக்கொண்டு ஓடிவருகிறாள். !
இப்படித்தான்... !
எங்களின் கதறல்கள் கண்டு !
தாங்கமுடியாமல் !
பக்கத்துநாட்டிலிருந்தும் !
பல இதயங்கள் !
எங்களுக்காகவே உரத்தகுரலில் !
பேசிக்கொண்டிருக்கின்றன என்பது !
இன்னும்... !
எத்தனைபேருக்கு தெரியும்...? !
--- த.சரீஷ் !
03.02.2006 (பாரீஸ்)