தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

வாராமைக்கு அழிதல்

கி.கண்ணன்

மானசிகனே
எங்கு போனாய்!

உடம்பிலிருக்கும்
உயி​ர் காணோம்

இமை சேர்க்கும்
துயில் காணோம்

மூவேளை பசிக்குமேயந்த
குடல் காணோம்

நீதந்த நாணம்
முகத்தில் காணோம்

பருக்கள் இரண்டில்
இருக்க காணோம்

நெய்யற்ற விளக்கு
ஒளியிடுவதில்லை

பெண்ணரசி மேனியில்
சுயநினைவில்லை

சுயம் புடைபெயர்ந்து
மாயமாய் போனது

போனதால்…

பொன்னிறம் பசலை
உடுத்திக் கொண்டது

வந்தால்…

ஓர்கட்டை ஆவேன்
வரமாட்டானாயின்-
உடன்கட்டை ஏறுவேன்

அவர்-
கைபடா பூச்சர​ம்

மண் தின்னட்டும்
தீ தின்னட்டும்

வலக்கண் துடிக்கிறது
வருவானா?

இடக்கண் வழியே
வெளியேறி போவானா?

எங்கு போனாய்…

“திரும்புவேன் என்றீர்
ஆண்கள் சொன்னால்

அதற்கு-
வாராது போவேனென்று
பொருளா”?

நம்ப வைத்தீர்

கன்னி விழியிற்
அம்பு வைத்தீர்

தீ சாட்சியோடு
அம்மி மிதித்து
திருமணம் முடிப்பாய்
என்றிருந்தேன்
உன்மனமே-
அம்மியாய் இருப்பதை
இக்கணம் கண்டுணர்ந்தேன்.

ஆடவன் காதல்
உடலோடென்பது மெய்தான்

உடலே மெழுகாய்
உச்சியே திரியாய்

காதல் தீயினில்
கடைசிவரை-
உருவழிப்பது பெண்தானே

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பா நந்தனின் 2 கவிதைகள்

பா நந்தன்

தேடல் !
சாலையில் அடிபட்ட !
சாமானியன் ஒருவன், !
அவசரமாய்க் கடக்கும் !
ஒவ்வொரு முகத்திலும் !
தேடுகிறான் !
தான் என்றோ தொலைத்துவிட்ட !
மனிதத்தை!!! !
!
- பா நந்தன் !
!
யாரிடம்? !
!
அமெரிக்கனுக்கு அடாவடித்தனம் !
ஆங்கிலேயனுக்கு ஆணவம் !
இந்தியனுக்கு பேச்சு !
ஜப்பானியனுக்கு சுறுசுறுப்பு !
மற்றதெல்லாம் இருக்கட்டும் !
மானிடம் யாரிடம்? !
- பா நந்தன்