தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அர்த்தமிழந்து போன அர்த்தங்கள்

நேற்கொழுதாசன்

நிலாக்கரையும் பொழுதொன்றில் !
உலர்ந்த உதடுபிரித்து !
பேசத்தொடங்கினேன் !
ஒலிக்குறிப்பற்ற சொற்களால். !
நிசப்தமுடைக்கும் !
மிக நிசப்தமாய் !
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .!
இலையில் பின்னிய வலைக்குள் !
இறந்துபோன புழுவாய் !
உக்கத்தொடங்கியது மனம் !!
இடைவெளிகளை !
முரண்களால் நிரப்பி!
இணைப்புக்களை தயக்கங்களால் !
சோடித்துத்திரும்பியபோது, !
வறண்டு வெடித்துப்போயிருந்த!
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்!
விதைகளை எரித்து கருக்கின ..........!
மரண ஊர்வலம் போன !
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல் !
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள் !
காயத்தின் ஊனநீர் நாற்றம் !
ஒடுங்கி !
ஒன்றுமில்லாத ஒன்றாக !
மீண்டும் மீண்டும் !
ஒடுங்கி கொள்கிறது !
இந்த நாட்கள் மீதான இருப்பு !
மெல்ல மெல்ல !
கரைந்து மறைகிறது நிலவு !
அர்த்தங்கள் எல்லோராலும் !
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக !
அவளிடமிருந்தும்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

யாரறிவார் ?

சத்தி சக்திதாசன்

தண்ணீரில் மீன்!
உன்!
தாகத்தை யாரறிவார் ?!
நீலவானத்துள் உறைந்த!
நீலம் நீ - உன்!
நிறத்தை யாரறிவார் ?!
தென்றலின் குளிர்மை நீ!
உன் கூதலுக்கு போர்வை!
யார் தருவார் ?!
அருவத்தின் நிழல் நீ!
உன்!
உருவத்தை யாரறிவார் ?!
இரவின் இருட்டு நீ!
உன்!
வெளிச்சத்தை யாரறிவார் ?!
கதிரவனின் வெப்பம் நீ!
உன்!
தகிப்பை அறிந்தவர் யார் ?!
காதலென்னும் ஆலயத்தில் நீ!
கற்பூரம்!
கண்டவர் யார் அதன் வாசத்தை ?!
அன்புடன்!
சக்தி சக்திதாசன்