தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அவளுக்கென்று ஓர் மனம் !

ப.மதியழகன்

உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

போதுமடா சாமி...2

த.சு.மணியம்

நாற்சார வீடுமங்கே நடுவாய் நிற்க!
நாலுபக்க வேலிகளும் முருங்கை காய்க்க!
காற்றோடு சலசலத்து தென்னை வாழை!
காலையிலே சாமி வைக்க மரத்தில் பூவும்!
தூற்றோடு துரவுகளும் சுரத்து முட்ட!
சுற்றிவந்து நீர் பருகும் கோழி, ஆடும்!
நேற்றோடு முடிந்திடுத்தே அவளின் வாழ்வில்!
நெஞ்சமின்று கலங்குகுதே நினைவை எண்ணி.!
பிள்ளைகளின் பின்னலினால் விமானம் ஏறி!
பிறந்தமண்ணைப் பிரிந்துவந்த அவளின் வாழ்வும்!
கொள்ளைபோயோ வருடமது இரண்டாய் நீள!
கொடுத்தஅந்த சோசல் பணம் எதுவோ ஆக!
பிள்ளைபெறு பார்க்கவந்து வருடம் இரண்டும்!
பெரும் பகுதி அவள் உழைப்போ சமையல்கட்டாய்!
வெள்ளையென நம்பி வந்தாள் கள்ளும் வெள்ளை!
வேதனையில் குமுறுகிறாள் மகனாய்ப் போச்சே.!
போகவிடு என்றவளும் பல நாட்கேட்க!
பொறுத்திரணை பேரனுக்கு ஆண்டு இரண்டும்!
தாகமுடன் களைப்படைந்த தாயின் சோகம்!
தனம்தேடும் தவிப்புடனே தனயன் ஏக்கம்!
வேகமுடன் முடிவெடுக்கும் திறனும் உள்ளாள்!
வேற்றிடத்தில் ஏதறிவாள் ஏதைச் செய்வாள்!
சோகமுடன் வாழ்வுமது கழிந்தே போக!
சொற்பதினம் பொறுத்திருக்காள் ஊர் போய்ச்சேர.!
கேடுகெட்ட மானுடனே கேளும் கொஞ்சம்!
கேள்வியது உன் வாழ்வோ தினமும் இங்கே!
பாடுபட்டு வழர்த்துவிட்ட பாசத்துக்கா!
பணம் தேட பக்குவமாய் இதனைக் கொண்டாய்!
கூடுகட்டி முட்டையிட்ட குற்றம் என்றால்-நீ!
கூண்டோடு இங்கிருக்க ஏதோ காதை!
நாடுவிட்டு நாடு வந்தும் உன்தன் மூளை!
நல்லவற்றை நினைக்குதில்லை ஏனோ தானோ.!
த.சு.மணியம்