தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

இசைப்புயலுக்கு வாழ்த்து

ரமேஷ் சிவஞானம்

நீ தான்
இசைப்புயல்
உனக்கு வாழ்த்து சொல்லுது
இந்தப்புயல்




நீ இளவயதிலே
இசையில் முற்றியவன்
நான் வயசு பத்திலே
உன்னைப்பற்றியவன்

சின்னச்சின்ன ஆசைகளில்
உன் இசை ரோஜாக்களை
நாம் பறித்தோம் முதலில்

மெல்லிசை ஞானியர்
கொடிகட்டிபறந்த
தமிழ் திரை இசையில்
நீ தானே
கொம்புயூட்டர்
இசைக்கொடி ஏற்றியவன்

இன்று உனக்கு 44 ஆ??
யார் சொன்னது?
ஒரு வீர தீரனின்
இளமையும் துடிப்பும்
உன்னிசைப்புயலில் இருக்க
உனக்கு வயது
கணிப்பில் இல்லை
இசையால்
உன்னை உலகுக்கு காட்டியது
தமிழ்சினிமா - அதுதான்
நான்கில் மூன்று முறை
தேசியவிருதுகள்
உன் தமிழுக்கு

இசை உனக்கு கிடைத்த
வரம்
நீ சினிமாவுக்கு கிடைத்த
இசைச்சொத்து

விருதுகள்
நீ வாங்கும் போது
உண்மையில்
விருதுகள் தான்
விருதுவாங்கிக் கொண்டன

ஒஸ்கார் விருது கூட
உனக்கு சாதாரணம்
அன்று
அந்தமேடையில்
உன்தாய்மொழியில்
வார்த்தை சிதறியதே இது
ஒஸ்காருக்குப் பெருமை
ஓ...
நீயும்
தமிழ்தாய் பிள்ளையல்லவா!

நீ தான் பல
புதிய புதிய
பாடகர்களை மேடையேற்றும்
அறிவிப்பாளன்

இசைகளையும் புதிய
இசைக் கலைஞர்களையும்
புதுப்பிக்கும் இசைப்
புத்தகம் நீதான்

இசையால் உலகை
இயக்கும் விற்பன்னன்
இப்போது நீதான்

உன் இசைப்பயணத்தில்
நான் பல தடவைகள்
பயணித்திருக்கிறேன்
வெறும் இசை ரசிகனாய்
ஆனால்
ஒருமுறை ஏறிய
இசை வண்டியில்
இன்னொருமுறை ஏறவில்லை
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு பயணங்கள்

நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள்

இசை மனதில் நின்று
உயிர் வளர்க்கும்
மறந்துவிடாதீர்கள்

நான் கண்மூடினாலும்
காதோரம் விழும்
உன் மெல்லிசையில் தான்
என் நித்திரை
ஒரு சொட்டுக்கண்ணீரும்
ஓரவிழியில் கசியும்
உன்னிசை மனதில்
குளிரும்போது....
இசைப்புயலே
வாழ்க
நீ

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

தொலைவு

ரசிகன்!, பாண்டிச்சேரி

பயணத்தின்!
பெயர் மற்றும் முகவரி!
நட்பென குறிப்பெடுக்கப்படுகிறது!!
மெல்லினம் அவளெனவும்..!
வல்லினம் நானெனவும்,!
முரண்பாடுகள் ஒன்றுவது போல்!
சித்தரிக்கப்படுகிறது பயண வழி !!
தோள் சாய்தல் பகிர்வதாகவும்!
கரம் கோர்த்தல் பிணைப்பதாகவும்!
மடிசாய்தல் இளைப்பாறுவதாகவும்!
வழித் தடங்களில் சுட்டப்பட்டுள்ளது!!
இந்நெறிமுறைகளுக்குட்பட்டு!
பாதைகள் தீர்மானப்பட.. !
நடுவானத்தில் ,!
பிறிதொரு வழிப்போக்கனின் விழியில்!
மெல்லினம் காதல் சுவையுணர்கிறாள் ,!
முடியாது நீளும்!
என் பயணத்தில்!
இன்று நட்பிற்குப் பதில்!
தனிமை விரல்கள்! !