தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அவளுக்காக

சென்னை - நவின், இர்வைன்
அவளுக்காக!!
என் இதயத்துடிப்பைச் !
சற்றே நிறுத்திவைத்தேன் !
என்னவள் எந்தன் !
மார்பில் முகம்புதைத்தபோது! !
அவள் தூக்கம் !
கலைந்துவிடக்கூடாதென்பதற்காக! !

தண்ணீர்ப் பஞ்சம்

சென்னை - நவின், இர்வைன்
தண்ணீர்ப் பஞ்சம்!
என்னவளே! !
உன் புருவங்களின் ஓரத்தில் !
பொதிந்து நிற்கும் !
அந்த வியர்வை முத்துக்களைச் !
சற்றே உன் சுண்டுவிரலால் !
சுழற்றிவிடு!!
தண்ணீர்ப் பஞ்சமாவது தீரட்டும் !
இந்தத் தமிழகத்தில்!!

பிறைநிலா

சென்னை - நவின், இர்வைன்
சொந்தமண்ணிலிருந்து!
துரத்தப்பட்ட அகதி!
துடுப்பற்ற பரிசல்!
பிறைநிலா

அன்னையர் தினம்!

சென்னை - நவின், இர்வைன்
அதிகாலையில் !
அழைத்து!
வாழ்த்துச் சொன்னால்!
அன்னையின் அயர்ந்த !
தூக்கம் கெட்டுவிடும் என்று!
அலுவலகம் சென்றவன்!
அனுமதி பெற்று !
அவசர அவசரமாகக் காரில் !
பறந்து வந்தான்!
பார்வையாளர் நேரம் முடிவதற்குள்…!
ஆதரவற்றோர் இல்லம் நோக்கி!!

ஈரம்!

ரோஷான் ஏ.ஜிப்ரி
முன்பு போல் இதுவும்!
விசா வாழ்விற்குள் நுழைய!
விடை பெறுவதற்கான கணம்!
ஈர முத்தங்கள்!
இரக்க முத்தங்கள்!
இனிப்புப் பதார்த்தங்கம் என!
எதிர் பார்ப்பின் பொதிகள்!
என்மேல் ஏற்றப் படுகின்றன!
வெளியே சிரித்தும்!
உள்ளே சலித்தும்!
கவலை தோய்ந்த!
கழுதை போல் நான்!
அவர்கள் என்னை!
வழியனுப்பும் வாஞ்சையுடன்!
மனசை அசைக்காமல்!
கையை அசைக்கிறார்கள்!
இப்போது அம்மாவின் நேரம்..!
அவளிடம் ஒன்றுமில்லை!
எனக்காய் தர!
உயிரை வைத்திருக்கிறாள்!
குரல் குழைய!
கண்ணீரில் மிதந்த படி!
கவனமாக போய் வா என்ற!
தாயிடம் தோற்றுத்தான் போகிறேன்!
ஒவ்வொரு முறையும்

மரண ஒத்திகை

ப.மதியழகன்
எனக்கான அழைப்பு வந்துவிட்டது!
கையூட்டு கொடுத்து காரியம்!
சாதிக்க முடியாது அங்கே!
நாட்கள் நத்தை போல்!
நகர்ந்ததாக நினைவிலில்லை!
எனது வாழ்க்கை கோப்பை!
நிரம்பி வழியவில்லை!
எனது மரணமொன்றும்!
உலகுக்கு இழப்பில்லை!
வாழ்க்கை என்னை!
சாறாகப் பிழிந்து!
என்ன சாதிக்க நினைத்ததோ!
துயரங்களை மூட்டையாகச் சுமந்து!
உடல் கோணிப் போனது!
எனது உறுப்புகள்!
எனது கட்டளைக்கு!
இணங்க மறுத்தன!
இவ்வுலகத்தில் எனது இருப்பு!
கேள்விக்குறியானது!
மரணத்திற்குப் பிறகு வாழ்வுண்டா!
என்ற கேள்விக்கு விடை!
கிடைக்கப்போகிறது!
வாழ்க்கையெனும் மைதானத்தில்!
மற்றவர்கள் கால்களில் உதைபடும்!
பந்தாகத்தான் இருக்க முடிந்தது

வானம்

ப.மதியழகன்
வானமே!
இரவுக்கு விடை கொடுத்து!
பகலுக்கு குடை பிடிக்கும்!
மேகமே!
இரவின் எச்சிலாக!
மரங்களில் படிந்திருக்கும்!
பனித்துளியே!
ஆகாயக் கோட்டையில்!
அழகு நிலா காய்கிறது!
குழந்தைகளுக்கு ஊட்டும் உணவை!
தின்று தானோ!
தினம் தினம் வளருகிறது!
பூமியில் உள்ள உயிர்களெல்லாம்!
உன்னை நோக்கி வளருகிறது!
தாகம் தீர்க்கும் மழை மட்டும்!
கீழ்நோக்கிப் பெய்கிறது!
சிதறிக் கிடக்கும் வைரங்களைப் போல்!
நட்சத்திரங்கள் ஜொலிக்கிறது!
இரவு என்ன நாத்திகனா!
ஏன் கறுப்பு ஆடை தரிக்கிறது!
தூரத்து இடிமுழக்கம்!
மழையின் வரவை உணர்த்துகிறது!
யாசகம் கேட்கும் பிச்சைக்காரர்களைப் போல்!
மரங்கள் தவம் கிடக்கிறது!
இரவுக்கு விடைகொடுக்க!
தயக்கமாக இருக்கிறது!
பகலில் தானே பிரச்சனைகள்!
விஸ்வரூபம் எடுக்கிறது!
பகலை துரத்தும் இரவும்!
இரவை விரட்டும் பகலுமாக!
இருளுக்கும் ஒளிக்கும் இடையேயான!
போட்டியினால் தான்!
பூமி இன்னும் பிழைத்திருக்கிறது.!

நிகழ்வு

ப.மதியழகன்
வெளி!
அனைத்தையும்!
உள்ளடக்கி இருக்கிறது!
தண்ணீர் தனது!
உள்ளக்கிடக்கையை!
முகிலாகித் தணித்தது!
கூண்டுப் பறவை!
இறக்கையைக்!
கோதிக் கொள்ளும்!
வான விதானத்தைப்!
பார்த்தபடி!
கருடன் நிழலைக் கண்டு!
அஞ்சும் கோழிக் குஞ்சுகள்!
பரிதி முளைக்கும் வானம்!
தங்க நிறத்தில் மின்னும்!
ஒரு மிடறு நீர்!
உள்ளே சென்றவுடன்!
உடல் ஆசுவாசம் கொள்ளும்!
மழையின் ரூபம்!
விழும் இடத்தைப் பொறுத்து!
மாறும்!
ருசி கண்ட பூனை!
நடுநிசியில் பாத்திரத்தை!
உருட்டும்

கடன்!

நடராஜா முரளிதரன், கனடா
சகல மூலைகளிலும் இருந்து!
தனித்துவிடப்பட்ட போதும்!
தாக்குவதற்கான படையணிகள்!
இல்லாதபோதும்!
கண்ணுக்குப் புலப்படாத!
பிரதேசங்களிலிருந்து!
கொடூரமான அம்புகள்!
பாய்ச்சப்படுகின்றன!
பெரும்பாலானவை!
அது பற்றியதாகவே!
இருக்கின்றது!
வறுமை எவ்வளவு!
கொடியதாக இருக்கின்றது!
நேரகாலத்துக்கு!
அது கணக்குகளை!
முடித்துவிட!
அனுமதிப்பதில்லை!
அதனால்!
முகம் குப்புறக்!
கவிழ்க்கப்படுகின்றது!
அதனைக் கண்டு!
பலர் சிரித்தும்!
சிலர் அனுதாபப்பட்டும்!
எல்லாவற்றையும்!
வென்று விடுவதற்கான!
வைராக்கியத்தை இழந்து!
நடந்து கொண்டிருக்கின்றேன்!
மாலைச் சூரியன்!
தெறித்து விழுந்து!
நிழலாகிப் போகின்றது!
என் நிழல் என்னை!
விழுங்கி விட்டிருந்தது!
பனிக்கும்பியின் உச்சிகள்!
தகர்ந்து கொண்டிருந்தன!
தோலைக் கிழித்து!
நாளங்களின்!
இரத்த ஓட்டத்தில் கலந்து!
உடலின் மூலைமுடுக்குகளில்!
குத்திக்கொண்டு நின்றன!
அம்பின் கூரிய முனைகள்

புரட்சி!

நடராஜா முரளிதரன், கனடா
மக்களுக்கு வேண்டியதை!
நான் தீர்மானிக்க வேண்டும்!
பகடைகளை உருட்டுகின்றேன்!
உன்னுடைய தகமையையும்!
நானே தீர்மானிப்பதாக உள்ளேன்!
துரும்புச் சீட்டால் வெட்டுகின்றேன்!
மக்கள் எதை எதிர்பார்க்கின்றார்கள்!
கிளித்தட்டு மறிக்கின்றேன்!
நான் எதைக் கொள்ள விரும்புவேனோ!
அதையே அவர்களும் விரும்புவார்கள்!
காயா பழமா!
அதற்காக அவர்கள் எத்தகைய!
அர்ப்பணிப்புக்களையும் தியாகத்தையும் புரிவார்கள்!
மற்றவர்கள் எல்லோரையும்!
எம் எதிரிகளாய் பிரகடனப்படுத்துவோம்!
நான் தத்துவவாதி!
எனவேதான் புரட்சியை வழி நடத்துகின்றேன்