தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அலைகளின் காதல்

கற்பகம்

உறுமிக்கொண்டு...புரண்டுத் திரண்டு,
காதுகளைக் கிழிக்கும் கர்ஜனையுடன்
கரைதனைத் தேடி மீண்டும் மீண்டும்
வருகின்றன அலைகள்!
பக்குவமில்லாத பார்வையில் இது
சண்டை போலவும், ஒரு போர் போலவும்
தோன்றக் கூடும்!
இடி விழுவது போலந்த வெள்ளம் முழங்குவதெல்லாம்
தனக்குள் நிறைந்த காதல் தனையே!
களைப்புறாமல் போராடிப் போராடி அது உரைப்பதெல்லாம்
மணற் பரப்பின் மேல் அது கொண்ட அன்பினையே!
அதுபோலவே உன்னை நேசிக்கிறேன் உயிரே!
நான் என்ன சொன்னாலும், செய்தாலும்...
உன்னிடமே மீண்டும் வருவேன்,
அந்த அலைகளைப் போலவே

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

அவன் பயணம்

மனோகர் ஞானா, பஹ்ரைன்

சுடுமணலில் புதையும்!
பாதங்களுடன்!
நடந்துகொண்டிருந்தான்.!
சொற்ப நேரமே!
இப்பயணமாயிருக்குமென !
தேற்றியபடி!
கால்களுக்கு சமாதானம்!
சொல்லிக்கொண்டான்.!
வெக்கையின்!
பின்புலத்தில் வேக நடை!
பயின்றிருக்கவேண்டிய!
நாட்களை!
தவறவிட்டிருந்தான்!
முற்காலத்தில்.!
இப்போது!
ஒருகோப்பைக்!
கண்ணீர் சேமித்தவன்!
நனைத்து அழுதுவிடவோர்!
தோளைக் கற்பனைச் செய்ய!
பசுங்கிளையொன்று!
நிழல்கொடுக்கத்!
துவங்கியிருக்கிறது!
அவனுக்கு