தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

பயணம்!

மாவை.நா.கஜேந்திரா

நடந்துகொண்டிருக்கிறேன்!
மனிதரில்லாத உலகில்!
மதங்கள் எல்லாம்!
மண்ணாய்போக!
மனித மதம் கொண்ட!
யானைகள் உருள்கிறது!
புரள்கிறது…!
தனிமை விரும்பாத !
உயிர்களுக்கு!
நிழல்களே துணையில்லை!
தொடர்ந்து கொண்டேயிருக்கிறேன்!
மனிதனைக் காண்பதற்காக

குறிப்பில்லாக் கவிதை (random)

ஆய்வு

காருண்யன்

ஊரின் கிழக்குக் கோடிதீரம் !
ஓங்கும் நெடிய அத்தி !
சும்மா உலவப்போன காலை !
அதனை மேலே நிமிர்ந்து பார்த்தேன் !
இலை செறிந்தவோர் கிளையில் !
எவரும் கண்படாத மறைவில் !
செக்கல் வானச்சிவப்பில் !
கோரிக்கையற்றுத் தொங்குது !
ஒரு பெரிய தேன் செறிந்த வதை !
தேனீக்கள் ஒன்றும் இல்லாமல் !
கூடு மட்டுந்தனியாக !
தபஸிருக்கக் கண்டேன் !
மழை வந்து கழுவிப்போச்சோ !
கொள்ளைதான் கொண்டு போச்சோ !
முற்றும் கூட்டாகக் கலைந்துபோக !
எரிபந்தம் யார்தான் பிடித்தார் !
கல்லெறிந்து யார் கலைத்தார் !
உயிர் தப்பக் கலைஞ்சு போச்சோ !
உயிர் கொண்டு பிரிஞ்சு போச்சோ !
இங்கே கூடு மட்டும் தனியாகத் !
தொங்கும் சோகமென்ன? !
கூடுவிட்டு கலைந்துபோக !
நேர்ந்ததின் அவலம் என்ன? !
காரணகாரியத்தை நண்பன் !
அறிவானோ !
விண்டுரைத்தேன் பூராவும் !
கேட்ட பின் !
அவன் பகர்ந்தான்: !
தேனீக்கள் எங்கே போனால் !
குறைஞ்சதெனன உனக்கு? !
கண்டவுடன் குலையை !
கெட்டோடு கொண்டராத !
அரைவேக்காட்டுக் கவிஞா....... மூடா