தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அண்ணா நூற்றாண்டு நூலகம்

மு.வெங்கடேசன்

இது  கோட்டூர்புரத்தின்
நுழைவாயில் மட்டுமல்ல
கோடிக்கணக்கானோர்  
நுழைந்த கோவிலும் கூட

நூலகத்தின் முன்னே
அறிஞர்  அண்ணாவின்
உருவக் காட்சி
நுழைந்த பின்னே
பல அண்ணாக்கள்
உருவாகும்  காட்சி

நூலகத்தை சுற்றி
ஜாதி பூக்கள்
பூத்திருந்தாலும் இங்கு
சாதி பூக்கள்
பூக்க   இயலாது .

இங்கு
நாளன ஏடுகளும்  உண்டு
நாளேகளும் உண்டு

இங்கு தான்
தமிழ் நூல்கள்
தன்மானத்துடன்  இருக்கின்றன
ஏனெனில் இங்குதான்
ஆங்கிலம்  அல்லாத
தமிழ்நூல் பிரிவு

இது
கன்னிமார  நூலகத்தையும்
கவர்ந்து இழுக்கும்
ஏனெனில் இங்குதான்
வயதுக்கு வந்த
வரலாறு  நூல்கள் அதிகம்

சூரிய குடும்பத்தை காண
சுற்றி  சுற்றி பார்க்க
வேண்டாம்.
இதோ
ஒன்பது கோளும்
ஒரே புத்தகத்தில்

அதுமட்டும்மல்ல
பத்தாவது புத்தகத்தை
பற்றிய பக்கம்
பக்கமான புத்தகங்கள் .

இந்த நூலகத்தில்தான்
வினை கூறும்
வேதியல் நூல்கள்
வினைபடாமல் இருக்கும்

இந்த நூலகத்தில்தான்
இசை அறிவியல் கூறும்
இயற்பியல் நூல்கள்
இதய துடிப்புடன் இயங்கும்

இந்த நூலகத்தில்தான்
உயரியல் நூல்கள்
பெயருக்கேற்றார் போல்
உயிருடன் இயங்கும் .

இந்த நூலகத்தில்தான்
சூத்திரம் சொல்லும்
கணித நூல்கள்
ஆத்திரமின்றி அடுக்கி
வைக்கப் பட்டிருக்கும்

இந்த நூலகத்தில்தான்
காலத்திற்கேற்ற
கனினி நூல்கள்
கன்னி நூல்கள்
கவர்ந்து இழுக்கும்

இந்த நூலகமானது
போண்டா  விற்பவனையும்
போட்டி தேர்வு  எழுதவைக்கும்
ஏனெனில் இந்த நூலகம்
போட்டி தேர்வுக்கான
பொக்கிஷம் கிடைக்கும்
பத்மநாத  சுவாமி கோவில்

நூலகத்தை
மாற்ற நினைக்கும்  திறனாளிகள்
இங்கு படிக்க வரும்
மாற்று   திறனாளிகளையும் சற்று
நினைத்து பார்க்க  வேண்டும்

நீங்கள்
குழந்தை நல மருத்துவமனை
கட்டினால்  கூடவே
குழந்தை மனநல  மருத்துவமனையும்
கட்டி விடுங்கள்

ஏனெனில் இந்த
நூலகத்தில்தான்  ஒவ்வொரு
புத்தகமும் ஒரு  மருத்துவர் .

அரசே
மாணவர்களாகிய  நாங்கள்
மதிப்புமிக்க உங்களிடம்
எதிர்பார்ப்பது  இடமாற்றமல்
மனமாற்றமே

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

சொரணையுள்ள சுடுகாட்டுப் பிணங்கள்

மகரந்தன்

கேட்பாரற்று !
குப்புறக்கிடக்கும் !
பேய் இரைச்சலில் !
சிகரெட்டின் முனைதவிர்த்த !
இடங்கள் அனைத்திலும் !
அடர்ந்துகிடக்கிறது !
கருப்பு. !
ஓயாமல் பேசும் வாய் !
பதில் கதவைத் திறக்காமல் !
சொற்களைப் பிணமாய் !
இருத்தி வைத்திருக்கிறது. !
கூட்டம் கூட்டமாக !
தனியாக !
வரிசையாக !
இணைந்து !
முன்னேமுன்னேவென்று !
புகை அப்பிய !
வானத்தை நோக்கி !
உணர்ச்சியற்று !
உட்கார்ந்திருக்கிறது !
எதிர்காலம் குறித்த !
ஒற்றைச் சம்பவம் !
என்ன ஒரேமுட்டா யோசனை ? !
முப்பாட்டனை நெனைச்சிக்கிட்டிருந்தேன் !
கனன்றுகொண்டிருக்கிறது !
கருஞ்சுருட்டு முனையின் கங்கு !
வெளிச்சத்தின் எல்லைதொட்டு. !
எரிதழல் கேட்கிறது !
சொரணையுள்ள !
சுடுகாட்டுப் பிணங்கள்