தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

என் பாகிஸ்தான் சகோதரிக்கு!

பால்ராஜன் ராஜ்குமார்

நீ நலமாயிருக்க!
நான் நலமாயிருக்கின்றேன்!
நான் நலமாயிருக்க!
நீ நலமாயிருக்கின்றாயா?!
சீதனமாய்த்தானே கொடுத்தோம்!
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்!
பாகப்பிரிவினைனு!
சொல்லிவிட்டார்கள் பாவிகள்!
நம்முடைய பலத்தை!
அன்பைவைத்து அளப்போம்!
அணுகுண்டுகளை!
வைத்து வேண்டாமே!
நம் நாட்டின் எல்லையில்!
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்!
ஒட்டை விழுவது என்னவோ!
நம் இதயத்தில்தானே!
உன் தேசம் தண்ணீரில்!
மூழ்கியிருந்த போது!
நான் கண்ணீரில்!
மூழ்கினேன்!
உன்மேல் என் அன்பையும்!
என்மேல் உன் அன்பையும்!
சிந்துவும் பிரிக்கமுடியாது!
இந்துவும் பிரிக்கமுடியாது!
நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்!
நான் எப்படி வாழ முடியும்!
ஜெய் பாகிஸ்தான்!
ஜெய் இந்தியா

குறிப்பில்லாக் கவிதை (random)

உயிர் மழை

கீதா ரங்கராஜன்

மழையே உன்னைத் தூமலர் தூவி வரவேற்கிறேன்!
உன் தூரலை இனிய சாரலை தூற்றுவோர் பலர்!
அவருக்கெல்லாம் உரக்கச் சொல்வேன் உன் பெருமையை!
உணரட்டும் அவர்கள் உன் அருமையை!
உன் நிர்மலத்தின் புனிதம் புரியாத பலர்!
உனக்கு களங்கம் கற்பிக்கின்றனர்!
மானிடர் செய்யும் பிழையிலே உன் பங்கென்ன!
பருவ காலத்தே பெய்யும் மழையை பொய்க்க!
அவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் என்னென்ன!
னிழல் தரும் தருவினை!
கனித் தரும் உயிரினை!
அழித்திடும் மனிதனே!
அமுதெனும் நீரினை!
அருளிடும் மழையினை!
பழித்திடும் உரிமையும்!
உனக்குண்டோ!
பயிர் செழிக்க பொழிகிறது மழை!
உயிர் அழிக்க விழைகிறான் மனிதன்!
குற்றமில்லாத மழையை குறை கூறும் மனிதனே!
சொல்கிறேன் கேள்!
கருப்பு குடை பிடித்து நீங்கள் தடுத்தாலும்!
சிகப்பு கம்பளம் விரித்து நான் அழைத்திடுவேன்!
உன்னை எங்கனமும் வரவேற்க!
அமிர்த வர்ஷினி பாடிக் கொன்டே இருப்பேன்!
விரைந்து வா!
-- கீதா ரங்கராஜன்