தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கைதட்டுங்கள்! காதல் தோற்றுவிட்டது

ரசிகவ் ஞானியார்
அன்று பார்த்தது போலவே..!
இன்றும் இருப்பாயோ?!
பரிட்சை தோல்விக்கே!
பயந்தாயே..?!
இப்பொழுது!
சின்ன சின்ன தோல்விகளை ...!
எப்படித் தாங்கிக்கொள்கிறாய்?!
யதேச்சையாய்!
கடைவீதியில்….!
காணநேர்ந்தால் புன்னகைப்பாயோ?!
கல்லூரி இருக்கை மீது!
தாளம் போடும் பழக்கத்தை...!
விட்டுவிட்டாயா? இன்னமுமிருக்கிறதா?!
அன்றுபோலவே இன்றும்!
மழைத்துளிக்குள் ...!
முகம்புதைத்து விளையாடுகிறாயா?!
ஒரு இலையுதிர் காலத்தில்!
சருகு மிதித்து ...!
சந்தோஷப்பட்ட அந்த!
குழந்தைதனம் இன்னமும் இருக்குமா?!
இப்படி!
எங்கு இருந்தேனும்!
எல்லா சந்தர்ப்பங்களிலும்..!
சின்ன சின்ன நிகழ்வுகளிலிருந்து கூட!
காதலைப் பிரித்தெடுக்கத் தவறுவதில்லை...!
பிரிந்து போன காதலர்கள்!!
ஆயுள் முழுவதும்...!
ஆழமாய் மிக ஆழமாய்!
காதல் நினைவுகளை...!
அசைபோடுவதற்காகவேனும்!
காதல் பிரிவு அவசியம்தானோ?!
!
- ரசிகவ் ஞானியார்
K.Gnaniyar!
Dubai

பின்னங்கால் வடு

எம்.ரிஷான் ஷெரீப்
உதிர்ந்த சருகு போலாகிவிட்ட!
அப்பாவுக்கு முந்தியவர்கள்!
எப்பொழுதோ நட்டுச் சென்ற!
முற்றத்து மாமரம்!
அகன்ற நிழலைப் பரப்பி!
மாம்பிஞ்சுகளை!
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்!
தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்!
என் பெயர் செதுக்கினார் அப்பா!
தடவிப்பார்க்கிறேன்!
கசிந்து காய்ந்த தழும்பின்!
நெருடலும் அப்பாவுமாக!
விரல்களில் உறைகிறது நினைவுகள் !
இறுதியாக அவர் மடியிலமர்த்திச்!
சொல்லித்தந்திட்ட வேளையில்!
விரிந்திருந்த அரிச்சுவடியின்!
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்!
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்!
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது!
எழுத்துக்கள் குறித்துநின்ற!
விலங்குகளுக்கும் கூட!
உயிரிருந்திருக்கும் அப்பொழுது !
வீட்டின் கொல்லையில்!
அகன்ற பெருங்கூட்டுக்குள்!
அழகிய பூமைனா வளர்ந்தது!
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று!
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள!
நாற்சூழலுக்கும் கேட்கும் படி!
தன் சொண்டுகளிலிருந்து!
எப்பொழுதுமேதேனும்!
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்!
அதுதான் முதலில் அலறியது!
கப்பம் கேட்டு!
ஆயுதங்கள் நுழையக் கண்டு !
பீதியில் நடுங்கிப்!
பதைபதைத்து நாங்கள்!
ஒளிந்திருந்த தளத்துள்!
பலத்த அரவங்களோடு!
அப் பேய்கள் நுழைந்திற்று!
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்!
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த!
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்!
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு!
மேலுமச்சத்தில் விதிர்விதித்து!
மூர்ச்சையுற்றுப் போனேன் !
விழித்துப் பார்க்கையில்!
பிணமாகியிருந்தார் அப்பா!
ஊனமாகியிருந்தேன் நான்!
அம்மாவும் அக்காவும்!
எங்கெனத் தெரியவில்லை!
இன்றுவரை !
குறி பிசகிய!
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற!
ஒற்றைக்காலின் சாம்பல் வடு!
அப்பா, அம்மா, அக்கா, சுற்றம் குறித்த நினைவுகளை!
இனி வரும் நாட்களிலும் ஏந்தி வரக்கூடும்

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

எம்.ரிஷான் ஷெரீப்
நான் மழை!
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்!
உன் பழங்கால ஞாபகங்களை!
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன் !
எனை மறந்து!
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்!
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென!
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்!
ஆனாலும்!
உன் முன்னால் உனைச் சூழச்!
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன் !
உனைக் காண்பவர்க்கெலாம்!
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்!
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்!
எனக்குள்ளிருக்கும் உன்!
மழைக்கால நினைவுகளைத்தான்!
நீ மீட்கிறாயென!
எனை உணரவைக்கிறது!
எனது தூய்மை மட்டும் !
இன்னும் சில கணங்களில்!
ஒலிச் சலனங்களை நிறுத்திக்!
குட்டைகளாய்த் தேங்கி நிற்க!
நான் நகர்வேன் !
சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி!
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'!
எனக் கோபத்தில் நீ அதிர்வாய் !
எனைத் தனியே ரசிக்கத் தெரியாத!
நீ மட்டும் மனிதனா என்ன?

பங்கருக்குள் இருந்து ஒரு

தம்பா
மூச்சுக்காற்று!
----------------------------------------------------!
கனரக பீரங்கிகள்போல் அதிர்ந்து எழுகின்றன!
பேச்சுக்கள்.!
தலைக்குமேல் செல் போல் கூவிச் செல்கின்றன!
அறிக்கைகள்.!
கிளஸ்தர் குண்டுகள் போல் சிதறி விழுகின்றன!
உறுதி மொழிகள்.!
கூத்தும் கரணமும் !
இது ஒரு தேர்தல் காலம்;;!
இழப்பும் அவலமும் !
எமக்கு யுத்தகாலம்.!
நேற்றைய பேச்சு !
இன்று இல்லை!
இன்றைய உயிர் !
நாளை இல்லை.!
நாங்கள் இழப்பது !
நீங்கள் பெறுவதற்கு!
இழப்பதோ உயிர்கள் !
பெறுவதோ வாக்குகள்.!
போதும்!!
எதிர்பார்த்து ஏமாந்து போவதிலும்!
எதிர்கொண்டு எழுவதே மேல்

இடம்.. அலைபாயுதே.. மேய்ச்சல் நிலம்

கி.அற்புதராஜு
01.!
இடம் !
--------------!
பேருந்தில்.... !
குழந்தையுடன் நின்ற !
அம்மாவுக்கு !
எழுந்து இடம் கொடுத்தார் !
பெரியவர் ! !
அம்மா உட்கார்ந்ததும் !
குழந்தை தாவியது !
நின்றுக் கொண்டிருந்த !
அப்பாவிடம்...! !
!
02.!
அலைபாயுதே !
---------------------- !
என்னதான் நம் !
உடம்பு ஆண்டவனை !
தரிசித்தாலும்... !
மனசு என்னவோ !
வெளியில் விட்ட !
செருப்பின் மீதுதான்...! !
!
03.!
மேய்ச்சல் நிலம் !
--------------------------- !
'பயணங்களில்... !
ஜேம்ஸ் ஹார்ட்‌லீ சேஸோ, !
சுஜாதாவோ... !
யாருடைய நாவலை படித்தாலும், !
ஆவலுடன் மேய்கிறோம்... !
பக்கத்து இருக்கையில் இருப்பவர் !
படிக்கும் தினசரியை..!'

பூக்குங்காலம்

கருணாகரன்
நான் நானாக இருப்பதிலும் !
நீ நீயாக இருப்பதிலும் !
ஏன் நம்மிடையே ஓயாத பிணக்கு? !
உன்னை என்னுள் திணிப்பதையும் !
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன். !
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும் !
என் பாடல்களை நானே இசைப்பதிலும் !
ஆனந்த முண்டல்லவா? !
உனது கனவுகளை நீயே வரைந்துகொள் !
எனது வண்ணங்களை நானே குழைக்கின்றேன் !
காலம் ஒரு பதிய பூவாய் மலரட்டும் !
வானத்தில் அதன் மலர்ச்சி ததும்பட்டும். !
-கருணாகரன் !
நன்றி: !
’ஒரு பொழுதுக்காகக் காத்திருத்தல்’ !
மகிழ் வெளியீடு (ஈழம்)

தப்பித்து வந்தவனின் மரணம். !

ரோஷான் ஏ.ஜிப்ரி
நன்பனும் இல்லை,உறவும் இல்லை அவன்.!
முகம் மளித்து மூன்று,நான்கு வருடம் இருக்கவேண்டும்.!
தாடிக்குள் ஒளிந்திருந்தான் கரடியாய்.!
எங்கேயோ பார்த்த பரிற்சயத்தில்தான் பேசத்தொடங்கினான்.!
வாழ்வது பற்றிய கனவுகளின் மூட்டைகளை!
மாராப்பாய் கட்டி தோளில் போட்டபடிதான் வந்திருக்க வேண்டும் .!
சட்டி ,பானை ,உலாமூடி,பிங்கான் ,அகப்பயேன குடும்பமா!
வாழ்வதிலிருக்கும் அலாதியை சொல்லிவிட முடியாது எளிதில் என்றான்.!
காண்டா மிருகங்களின் கால்களின்கீழ் பட்டு !
அவனது உலகமே தொலைந்ததாய் கதறினான் .!
நெருப்புமழை பொழிந்த வானத்தின் கீழ் வசித்ததாகவும்,!
குரூரமான எல்லா விஷஜந்துக்களையும் பார்த்ததாகவும்,!
பயத்தின் நடுக்கம் மேலிட தழுதழுத்த குரலில் சொன்னான்.!
வாழ்வு பற்றிய பசி, தாகம்!
அவனது கண்களிலிருந்து உதிர்ந்து விழுந்தது நெருப்பின் சாயலில்.!
வயிற்றை இறுக தடவிய படி ஐயா என்றவாறு சரிந்தான் !
மீண்டெழ முடியாதபடி சாவின் மடியில்.!
இறுக மூடிய விரல்களை பிரித்தபோது .....,!
உள்ளங்கையில் ஒரு பிடி மண்ணிருந்தது .!
அவனது ஊரினுடயதாய் இருந்திருக்க வேண்டுமது.!
மரண வாக்குமூலமாய் என்னிடம் கூறியதை பார்த்தால்!
இவன் பொய் சொல்லியிருக்க மாட்டான். !
என்பதை எண்ணியெண்ணி,பேய் பிடித்தது போல் !
அதற்கு பின்வந்தநாட்கள் தூங்கவே இல்லை.!

மதம் விரும்பும் மந்தைகள்

முத்துசாமி பழனியப்பன்
மதம் அது களிருடைய வளம்!
பெருங்கடன் கொண்டாயோ நீ மனிதனிடம்!
வராக்கடன் வசூலித்திட - கட்டாயப் பறிமுதலாய்!
தன்வசப்படுத்தினான் உன் ஒரே வளத்தை!!
இப்போதும் அப்போதும் எப்போதுமாய்த்தான்!
மதம் அதற்குப் பிடித்துப் போகிறது!
மனிதா காடு கண்டதுண்டா நீ? - களிறு!
மதம் கொண்ட வேளையிலே!
மதமடைந்து செய்வதும்!
மதம் பிடித்துச் செய்வதென்பதும்!
வேறுவேறு - குற்றங்களில்!
சிறிதென்றும் பெரிதென்றும் இல்லை!
சேருடல் கொண்ட களிறாய் - தரந்தாழ்த்திக்!
கொள்கிறாய் உன் மதம் சிறிதென்றும் பெரிதென்றும்!
யானை மதம் பிடித்து எப்போதாவது தான் சாகிறது!
மானுடா நீ சாகும் போதும் மதம் பிடித்துச் சாகிறாய்!
அறிந்த வேற்றுமைகளெல்லாம் - அறிவு!
எண்ணிக்கையில் மட்டும் தானா?!
சாதி இரண்டொழிய வேறில்லை என்றானே - பாரதி!
கனவு எப்போது மெய்ப்படுமடா?

திசைகளின் வாசல்களில் தடுப்புக்கள்

நிந்தவூர் ஷிப்லி
அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
எதற்கு!
ஏன்!
எப்படி!
என்றில்லாமல்!
அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
இழந்து விட்ட!
அல்லது!
பெறத்தவறிய!
ஏதோ ஒன்றுக்காக!
மனசாலோ!
கண்களாலோ!
அழுது கொண்டிருக்கிறாள்!
அவள்!
எப்படியும்!
அவள்!
அழுதாக வேண்டும்!
என்பது!
எழுதப்படாத விதி!
வலிக்க!
வலிக்க!
அழுது கொண்டிருக்கும்!
அவள் கண்களை!
நோக்கி!
எந்தக்கருணை!
விரல்களும் நீள்வதாயில்லை!
ஆதிக்கமும்!
அடக்குமுறையும்!
அவள்!
புன்னகைகளை!
களவாடி விட்டன!
அவளது!
ஒவ்வொரு!
கண்ணீர்த் துளிக்கும்!
பின்னால்!
உதிர்ந்து கொண்டிருக்கிறது!
வெகுண்டெழும்!
நம்பிக்கையின்!
வரட்டு முகங்கள்!
அவளுக் கென்று!
ஆயிரம்!
திசைகள்!
அத்தனையும்!
ஆண்டாண்டு காலமாய்!
பூட்டப்பட்டுள்ளன!
என்றோ!
ஒரு நாளில்!
அவளுக்கான!
திசைகளின்!
வாசல் கதவுகள்!
உடைத்தெறியப்படலாம்!
அப்படி!
நேர்ந்தபின்!
எதற்கு!
ஏன்!
எப்படி!
என்றில்லாமல்!
அழுது கொண்டிருப்பான்!
அவன்…

மாட்டுக்கு மாலை போடு…

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
காலினைப் பிடித்தேன் என்றன்!
கழுத்துக்கு மாலை வேண்டாம்!!
எழுத்திலே காணின் ஏதும்!
எழுதுவீர் அதுவே போதும்!!
வாலினை பிடிப்ப வர்தான்!
வாழுவர் தெரியும் கெட்ட!
தேளினை பிடித்தோர் கூட!
தேம்புவர் எனவே உங்கள்!
காலினைப் பிடித்தே னையா!
கழுத்துக்கு மாலை வேண்டாம்!!
கழுதையும் குரங்கும் மாடும்!
கழுத்திலே மாலை பூண்டு…!
மூலைக்கு மூலை கூடி!
“முதுகினை சொரிந்து” எங்கும்!
“போட்டோக்கு” பல்லைக் காட்டி!
“போஸினை’’ கொடுத்து பின்னர்!
எங்களை வெல்லும் கொம்பன்!
எவனடா இங்கு உண்டு…? !
என்றுதற் புகழ்ச்சி தன்னில்!
எம்பித்தான் குதிக்கும் போது!
அற்பன்நான் அவைகள் பாத!
அடியிற்கு இன்னும் கீழே!
ஆகையால் மாலை வாங்க!
அடியேனுக் காசை யில்லை!
காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’!
கழுத்துக்கு மாலை வேண்டாம்! !
மாண்டுநாம் மடிந்த பின்தான்!
மனதினால் மாலை இடுவர்!
ஈண்டிவர் போடும் மாலை!
இதயத்த லல்ல வேசம்..!
மாலையில் மாலை போட்டு!
மாலைதான் மறையுமுன்னே!
கூழையன் நாங்கள் போட்ட !
“கூழுக்கு” ஆடிப் போனான…!
ஆளினைப் பிடித்து வைத்தால்!
ஆளலாம் என்பீர் உங்கள்!
காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’!
கழுத்துக்கு மாலை வேண்டாம்!!
எலும்புக்காய் எச்சிலைக்காய்!
எங்கள்நாய் வாலை ஆட்டும்!
பிணமான பின்தான் உண்மை!
பிரியத்தை அதுவும் காட்டும்!
ஆகையால் மாலை சூட்ட!
ஆருமே வராதீர் தேடி!!
எழுத்திலே ஏதும் காணின்!
எழுதுவீர் அதுவே கோடி