தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எனது பாத்திரம் இதுவாகி

டீன்கபூர்
நேற்றும் பசி விழுங்கியது என்னை.!
இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி!
அட்டகாசித்துக்கிடக்கிறது. !
நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை!
எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்!
நான் அணியும் உடையின் !
அழுக்கைச் சுவாசித்தபடியாக!
நழுவுகிறது மானிடம்.!
என் குழந்தைகளின் வாழ்வின் வடிவம்;!
எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்!
என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க!
என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது!
தனிமை.!
பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல!
வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக!
ஒருவன் பேசினான்.!
குயிலின் வழுவழுத்த தனம்!
காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.!
அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.!
ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.!
எனது பாத்திரம் இதுவாகி…………..!
என்னிடம் பேசுகிறது.!
- டீன்கபூர்

முடிந்து போனதாய் இல்லை

p.ஆயிஷாசுதன்
இன்னும் பதிவுகளாய் இருக்கும் !
பள்ளிப் பருவ வாழ்க்கையும்,!
இன்றைய என் வாழ்வும்,!
ஒரு கணம் சிந்திக்கவைத்தது.!
அரைவயிறுக் கஞ்சியோடு !
அம்மா பள்ளி அனுப்பிவிட்டு !
அந்திவரை அவளும் இருப்பாள்.!
அன்னத்தை அள்ளியூட்ட.!
பள்ளி போகும்போது !
தாயவளின் முகம் பார்க்கமுடியாத!
ஒரு பரிதாபநிலை.!
ஐயோ!.......... !
பிள்ளை சாப்பிடாமல் போகுது.........!
ஐயோ!!
அம்மா...............!
வருத்தப்படுகிறாவே - எனக்கு !
பசியில்லையம்மா.!
கண்கள் மட்டும் பேசி !
விடைபெற்ற நாட்கள்!
எத்தனையோ..............!
என் மகன் வாழ்வான் !
என்னைப் பார்ப்பான்.!
வயிறு நிறைய - சாப்பாடு போடுவான்.!
அம்மா கற்பனையில். !
நானோ அம்மா வயிற்றை !
சின்னனில் அன்பாலும்,!
வளர்ந்த பின் ஏழ்மையை போக்கி !
இன்பப் படுத்தவும் எண்ணிய மனம்.!
அம்மா - இது எதுவுமே!
முடிந்து போனதாய் இல்லை.!
இன்னும் அரை வயிறுக் கஞ்சி !
ஆன சாப்பாடில்லை.!
நிலத்தில் சுருண்டு படுத்த வாழ்க்கை !
அம்மாவின் கற்பனைகள் !
இன்னும் கண்ணீரால் !
நிரப்பப்படுகின்றன...............!
-p. ஆயிஷாசுதன்!
ஸ்கந்தபுரம

காதல்

மு.கந்தசாமி நாகராஜன்
மு.கந்தசாமி நாகராஜன் !
மறப்பது... !
நினைப்பது... !
மறக்க நினைப்பது... !
நினைக்க மறப்பது.. !
ஒரு !
குழப்பமான !
கவிதை தான் !
காதல் !
வந்த காதலால் !
வருகின்ற நல்வினையை !
வெல்லத்தான் இயலுமோ !
புல்லர்தம் !
உலகினிலே...? !
தீராத !
துன்பமென்றும் !
தெவிட்டாத !
இன்பமென்றும் !
போற்றினாலும் !
தூற்றினாலும் !
அறிந்தவர் யார் !
அவனியிலே !
உண்மைக் காதல் !
என்னவென்று...? !
வருடும் போது !
அழுகை தரும் !
வலிக்கும் போது !
சிரிப்பைத் தரும் !
விந்தையான !
வியாதி !
இதன் பெயரென்னவோ? !
காதல்தானே...? !
வெல்லும் வரை !
துடித்த மனது !
வென்ற பின்னர் !
மருளுவதேன்? !
பாவை உந்தன் !
பாதம் தொட !
பாதையாக மாறிடவா? !
தென்றலாக மாறி !
தேவி உந்தன் !
கூந்தலினை வருடிடவா? !
மாலை !
நிலை கொள்ள !
மருளும் நெஞ்சத்தைத் !
தருகின்ற !
காதல்... !
கேலிக் கூத்தாகிக் !
கொடியவரின் !
இரவுக்குப் !
பெயராகிப் !
போனதென்ன..? !
!
மயில் மகளே... !
உனை !
மாலை சூட !
குயில் போலக் !
கூவி அழைக்கிறேன் !
நெஞ்சத்தில் !
மஞ்சம் கொள்ள !
நீ !
வஞ்சமின்றி !
வந்து விடு !
அழைப்பது காதலா? !
இதயத்தைத் !
தொலைப்பது காதலா? !
தொலைந்து போன !
இதயத்தைத் !
தொலைவிலிருந்தும் !
அழைப்பதே !
காதல்! !
காதல் !
காதல் !
காதல் !
காதல் போயிற் !
சாதல் !
சாதல் !
சாதல் !
பாரதி !
மொழிகளே வேதம் !
படைப்போம் !
புதியதோர் !
காதல் கீதம்

அவ‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
முழுக்க நனைந்தபின்!
முக்காடெதற்கு?!
ஒத்துக்கொள்கிறேன்..!
உன் பார்வை!
பெய்த மழையில் நான்!
முழுக்க நனைந்த பிறகும்,!
முக்காடாய் உன் பர்தாவை!
விலக்கவில்லையே நீ!
இன்னும்...!
கண்மணி உன்னருகே!
வந்தமர ஆசையெனக்கு..!
உன்னிரு விழிமீன்கள்!
நீரின்றி நீந்துமழகை!
கிட்டத்தில் கண்டு!
ரசிக்கத்தான்...!
கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த‌!
எட்டப்பனை அடியோடு!
வெறுத்த என்னால்,!
கருப்புத் திரைதாண்டி!
அழகுப்பதுமை உன்னை!
காட்டிக்கொடுக்கும் அந்த!
இரட்டைப்பிறவிகள் உன்னிரு!
கண்களை மட்டும்!
விரும்பாமலிருக்க முடியவில்லை!
என்னால்

க‌ட‌லுக்கு ஓர் வேண்டுகோள்

சிபி பாபு
முய‌ன்றால் முடியாத‌து ஒன்றுமில்லை,!
எங்க‌ளுக்கும் புரிகின்ற‌து!.!
உன் பிள்ளைக‌ளை!
க‌ரையேற்ற‌ப் போகின்றாய்!
என்றாவ‌து ஒருநாள்!.!
அப்பொழுது நாங்க‌ளும்!
உன்னுட‌ன் இருப்போம்...!
ம‌கிழ்ச்சியாய் அல்ல‌!
அமைதிச்ச‌மாதியாய்!
உன் ம‌டியில்!!
முன்னொரு ஜென்ம‌த்தில்!
எங்க‌ள் மேல்!
உன‌க்கென்ன‌ ப‌கை?...!
இன்றுவ‌ரை உன்!
குழ‌ந்தைக‌ளை‍‍ க‌ரையேற்ற‌!
க‌ற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கின்றாய்?...!
ம‌ற‌ந்துவிடு!!
உன்குழ‌ந்தைக‌ளைக் க‌ரையேற்றுவ‌தை!!
ம‌ன்னித்துவிடு!!
இது தெரியாம‌ல்!
இவ‌ர்க‌ள் உன்னை!
இர‌சித்துக்கொண்டிருக்கிறார்க‌ள்!.‍ ‍‍‍!
-சிபி.பாபு.!
----------------------------------------!
நாள்:28.02.2000!
இட‌ம்:புதுச்சேரியின் க‌ட‌ற்க‌ரையில்!
ந‌ண்ப‌ர்கள் ர‌சித்து எழுதிய‌ க‌விக்கு,!
நான் எதிர்த்து துளிர்த்த‌ வ‌ரிக‌ள் இவை.!
இங்கே உங்க‌ளுக்காக‌

முகமூடி

ப.மதியழகன்
சாமியென்பார், பூதமென்பார்!
வாய்வழியே லிங்கமெடுப்பார்!
காவியணிவார், விபூதியணிவார்!
அடியேன் எனதுள்ளம்!
மாசற்ற வெள்ளையென்பார்!
கணக்கில் வராத கறுப்புப் பணத்தை!
பீரோவில் பூட்டி வைத்துக்கொண்டு !
அவனியிலே!
பெண்களைத் தெய்வமென்பார்!
தேடிப் போய் அருள் வேண்டி!
காலில் விழும் மங்கையருடன்!
மணக்கோலத்தில் காட்சியளிப்பார்!
மறுநாள் செய்தித்தாள்களிலே !
புலால் உண்பது மகாபாவமென்பார்!
ஜீவன்களனைத்திலும் ஒளிரும்!
தெய்வச்சுடரை வணங்குவதே!
ஜீவகாருண்யமென்பார்!
தன் ஆயுள் அதிகரிப்பதற்காக!
செய்யப்படும் மகாயாகங்களில்!
ஆடுகளைப் பலிகொடுப்பார் !
நீ குடியிருக்கும் வீட்டின் அடியில்!
தங்கப் புதையலிருக்கு!
அதைக் காவலிருக்கும் மோகினியைச்!
சாந்தப்படுத்த உரிய பரிகாரமிருக்கு என்பார்!
சில மாதங்களில்!
கிடைக்கப்போகும் புதையல் கனவில்!
வீடு,நகை சொத்தனைத்தையும்!
கபடவேடதாரியிடம் இழந்துவிட்டு!
அடுத்த வேளை உணவிற்கு!
வாசலில் கையேந்தி நிற்பவரை!
ஆத்திரங்கொண்டு கையாட்களை ஏவி!
துரத்தியடிப்பார் !
அப்பன் சொல்பேச்சு கேட்டு!
அடங்கி நடக்காத பாலகனை!
அழைத்து வந்தால்!
அவனுள்ளே இருந்து ஆட்டுவிப்பது பேயென்பார்!
வேப்பிலையால் ஓட்டுகிறேன் அப்பேயையென்று!
அச்சத்தை அவன் இளரத்தத்தில் செலுத்திடுவார் !
கரியமிலவாயு கலந்து!
காற்று மாசடைந்து வருவதால்!
பூமி வெப்பமாகி!
வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு!
மழை பொய்த்துப்போனதை உணராமல்!
ஊரைக் காவலிருக்கும்!
‘ஆத்தா’ வின் கோவம் எனக் கருதி!
கழுதைக்கு கல்யாணம் செய்து வைக்கும்!
ஜனக்கூட்டம் இருக்கும் வரை!
முகமூடி அணிந்துள்ள போலிகள்!
முற்றும் துறந்த முனிவராக மகுடமணிந்து!
மண்ணில் மன்னர்கள் போல்!
வலம் வருவர். !

நிலவு தள்ளிப்போகிற இராத்திரி

தீபச்செல்வன்
எதாவது பேசிவிட்டுப்போ.!
நிலவு தள்ளிப்போகிற!
இராத்திரியில்!
லட்சம் தனிமைகளில்!
துடிக்கிறேன்!
சாதுவான உனது!
மௌனத்தில்!
ஆயிரம் முகங்கள் விரிகின்றன.!
உன்னை நிரப்பி!
வைத்திருந்த எனது பாடலில்!
வழிகிறது!
நீ இல்லாத கண்ணீர்.!
நாம் பேசிக்கொண்டிருந்தபொழுது!
வானம் வெளித்திருந்தது.!
என்னைப்போலவே!
கறுப்பாய் கிடக்கிறது வானம்!
காற்றில்!
மீட்கப்போன உனது!
சொற்களை!
தேடியலைந்து தோற்றுக்கிடக்கிறது!
என் தொலைபேசி.!
நிலவு குறைந்து விட்டது.!
மீதியில் வடிகிறது நமது பிரிவு!
நீயும் நானும்!
முகங்களை மறைத்து!
கடந்து போகிற!
தெருவில்!
நமது கால்களுக்குள்!
மிதிபடுகின்றன!
நமது காதலின் சொற்கள்.!
முற்றி விளைந்த!
இருள் மரத்தின் கொப்பில்!
நான் ஏறியிருந்தபோது!
உடைந்து விழுகிறது!
கொப்பு!
இரவுக் கிணற்றில்!
கயிறாய் வந்து!
உக்கி அறுகிறது உன் மௌனம்.!
நிலவு இன்னும் குறைகிறது.!
நீ வாசிக்காத!
எனது கவிதையும்!
செத்துக் கிடக்கிறது!
சூரியன் இல்லாத காலையில்...!
-தீபச்செல்வன்

காதல் கொள்

தமிழ்ஹாசன்
காதல்!
இந்த மூன்றெழுத்தில்!
முக்குளிக்காதவர் !
எவரும் இல்லை.!
இந்த!
ஒற்றை வார்த்தையில்தான்!
ஓராயிரம் மின்சாரம்.!
இது மனிதனின்!
மிருக எண்ணங்களை!
தோலுரிக்கிறது!!
காதலின் தனித்துவமே!
மனிதர்கள் இன்றி!
மற்றவைகளும் அதனை!
காதலிப்பதுதான்!!
வானம்-மேகத்தை!
காதல் கொள்கிறது!
மழைகளாய்......!
இரவு-நிலவை!
காதல் கொள்கிறது!
நட்சத்திரங்களாய்......!
கடல்-கரையை !
காதல் கொள்கிறது!
அலைகளாய்......!
பூ- காற்றை!
காதல் கொள்கிறது!
நறுமணமாய்......!
பூமி-நிழலை!
காதல் கொள்கிறது!
சுவடுகளாய்......!
தேகம்-நிர்வாணத்தை!
காதல் கொள்கிறது !
ஆடைகளாய்......!
கவிஞன்-கவிதையை!
காதல் கொள்கிறான்!
பொய்களாய்......!
காதல் கொள்ளாத!
எவையும் காற்றில்!
காணமல் போய்விடும்.!
காதலிக்காதவனும்,!
காதலிக்கப்படாதவனும்!
பூமியில் பாரமே!!
காதல் கொள்பவரிடம்!
பொய்கள் இன்றி!
பொறுமையே!
மிகுதியாய்ப் பிறக்கும்.!
ஆயுதமின்றி!
அமைதியே!
அதிகமாய் இருக்கும்.!
காதலர்க்கு,!
இதயங்கள் தவிர!
மற்றவை களவாடத்!
தெரியாது!!
இரண்டு கருவி!
இணையும் போதுதான்!
இசை பிறக்கிறது!!
இரண்டு வார்த்தை!
சேரும் போதுதான்!
கவிதை பிறக்கிறது!!
இரண்டு இதயம்!
மாறும் போதுதான்!
காதல் பிறக்கிறது!!
காதல்,அங்கே!
யுத்தம் இருக்காது!
முத்தத்தின் சத்தம்!
மட்டுமே இருக்கும்.!
அங்கே,!
வன்முறை இருக்காது!
வாழும் வரை வயது!
மட்டுமே பாதியாய்!
இருக்கும்.!
ஆதலால் மனிதா,!
ஒருமுறையேனும்!
கனவிலாவது காதல்கொள்.!
கனவுகள் அர்த்தப்படும்!!
உன் கனவுகள்!
மெய்ப்பட வேண்டுமானால் .....!
உன் காரியம்!
நிறைவேற வேண்டுமானால்......!
உன் கரங்கள்!
கண்ணீரை துடைக்கவேண்டுமனால்.....!
உன் காலடியில்!
பூக்கள் பூக்கவேண்டுமனால்.....!
ஒன்று செய்!
அதுவும்!
இன்றே செய்.!
கட்டாயம்!
'காதல் கொள்'

பாசமான பாட்டிக்கு

வே .பத்மாவதி
அம்மாவ பெத்தவளே !
ஆசையா வளர்த்தவளே !
மூனாங்கிளாசு படிக்கையில!
முன்னாடியே கட்டிக்கொடுத்தா!
மிச்சம் கிச்சம் வச்சுபுடுவேன்னு!
மூணுவேள சோறும் ஊட்டிவிட வருவ!
வெட்கம் விட்டு!
சொல்லுறேன்!
வத்தக் குழம்பு சாப்பிட்டு!
வருஷக்கணக்காகுது!
மணத்தக்காளி சாப்பிட்டு!
மாசக்கணக்கு ஆகுது!
நல்ல காப்பி குடிச்சே!
நாலு நாளு ஆகுது!
உலையில அரிசிபோட கத்துக்கோ!
ஒத்தாசையா இருக்கும்னு!
சொன்னதா ஞாபகம்!
ஒரு நாளு பசியில!
உலையில சோறு வைக்க!
வந்த சாதம்!
வேகாத கதை சொல்லவா!
வெந்து போன!
விரலோட வினையச் சொல்லவா!
வகையா வந்த கஞ்சிய!
குடிச்ச விஷயம் சொல்லவா!
பத்து மணி ரயிலுக்கு!
ஆறு மணிக்கே நீ வருவ!
பத்து நிமிஷம் தாமதம்னா!
பதறிப்போவ!
விமானத்துல போறேன்!
வெளிநாடு போறேன்!
விடிய விடிய நானும்தான்!
வேலைக்கும் போறேன்!
விடிஞ்சு வரும் போது!
விழுந்ததும்!
நான் துடிச்சதும்!
ரெத்தம் வழிஞ்சதும்!
தண்டவாளதுக்கு!
மட்டுந்தான் தெரியும்!
அஞ்சு மணிக்கு!
எழுந்தரிச்சு!
அரக்க பறக்க சமைச்சு!
அக்கா தங்கச்சி!
சண்டையெல்லாம்!
சமாளிச்சு!
என்!
ஆறடி முடிய!
சிக்கெடுத்து சீவி!
அரைமுழ!
ரிப்பன் கட்டி!
அனுப்பிவச்ச!
ஆறடி முடி இப்ப!
அரையடி ஆச்சு!
அதை சீவாம!
இருப்பதே!
பேஷனா!
போச்சு!
சொர்கத்து பாட்டிக்கு!
சொப்பனத்துலேயே!
கடுதாசி எழுதற!
இந்த பேத்திக்கு!
இன்னும்!
ஒரே ஒரு ஆசை பாக்கி!
முழுகாம இருக்கறேன்!
மூணு மாசம் ஆச்சி!
கத்திரி போட்டு கிழிச்சாலும்!
கத்தி வலிச்சு பிரசவிச்சாலும்!
ரெத்தின வாக்கு!
மாறாம!
முத்து முத்தா!
என் வயித்துல!
வந்து!
புறந்திடு தாயி

விளக்கை ஏற்று பாதை தெரியும்

சத்தி சக்திதாசன்
ஆம் ! !
என் தோட்டத்து மண்ணில்!
மீண்டும் பசுமை படர்கின்றது!
கடுங்குளிரைத் தாங்காது!
மண்ணில் தம்மை புதைத்து!
மறைந்திருந்த செடிகள்!
மரணிக்கவில்லை நாம் பூமியில்!
மறைந்து தான் போயிருந்தோம் என்றே!
பச்சைத் தளிர்களின் மூலம் தமது இருப்பை!
பறைசாற்றிக் கொண்டே புன்னகைக்கின்றன!
இளவேனிற் காலம் தன்!
இளமையை காட்சிக்கு வைக்க!
இயற்கையின் செல்வங்களின் துணையோடு!
இயம்புகின்ற வாழ்க்கைத் தத்துவம்!
இதயத்தின் ஓரங்களில் கொஞ்சம்!
ஈரத்தைத் தடவுகின்றன.!
காலத்தின் மாற்றத்தை!
கண்முன்னே நடத்தி எமக்கு!
கட்டாயப் பாடம் போதிக்கும்!
கனிவான தோட்டத்துச் செடிகள்!
அவைகூறும் செய்திகள்!
அவல வழ்க்கையில் சுழன்றாடும் எம்!
அகலமான செவிகளில் விழுகின்றனவா ?.......!
இளவேனில் துணையோடு வரும்!
இளங்காற்றின் குளிர்மையில்!
இதயங்களை மகிழ்விக்கும் அந்த!
வசந்தத்தின் வரவை எண்ணி!
வந்திருக்கும் அந்த பச்சிலைக்குருத்துகள்!
விளையாடும் வேளை நோக்கி!
விழிபூத்துக் காத்திருக்கின்றன!
குளிர்கால வாடலில் காய்ந்திருந்த!
குளிர்ந்த தோட்டத்து மண்ணில்!
குதிர்த்திருக்கும் அச்செடிகளின் இளம்!
குருத்து இலைகளினூடாக பாய்ந்து!
புதைத்து வந்திருக்கும் விதையைத் தேடி!
புதிராக என்னைப் பார்த்தபடி!
மண்ணைக் கிளறும் அந்த அணிற்பிள்ளை!
அணிலின் விழிகள் கூறும் கதைகள்!
அவற்றிற்கு பேசும் சக்தி மட்டும்!
இருந்து விட்டால் ......!
பேராசை கொண்ட மனிதர் எமை!
பெயர்த்துவிடும் தன் வினாக்களினாலே!
இயற்கை அன்னையின் மடியில்!
இயல்பாகத் தவழும் அனைத்துக்கும்!
தார்மீகக் கடமைகள் உண்டு !
தயங்காமல் அவைதனை நிறைவேற்றும்!
அற்புதக் காட்சிகளைக் கண்டும்...!
பாவம் மனிதர் இவர்....!
முணுமுணுத்தபடி எப்போதும் பரபரப்பாய்!
முட்டாள்கள் போலே தமக்கு வாழ்வளிக்கும்!
இயற்கைதனை கற்பழித்துக் கொண்டே!
எதிர்காலம் தேடுகின்றார்.....!
ஓ .....!
அவர் இருட்டினில் இருந்து கொண்டே!
விளக்கை அணைத்து விட்டு!
பாதை தெரியவில்லை என்று!
புலம்பும் வர்க்கம் அன்றோ! !
-- சக்தி சக்திதாசன