தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அறியாத வயது...ஊடலுக்குப் பின்

ஜெ.நம்பிராஜன்
அறியாத வயது!
பள்ளி செல்லும் வழியில்!
பழுதடைந்து நின்றது பேருந்து!
வயல்வெளிச் சாலையில்!
இறங்கி நின்ற மழலைகள்!
பள்ளியை மறந்து பரவசமாயினர்!
குயில்களின் கூவலோடு சேர்ந்தது!
குழந்தைகள் குரல்!
குழந்தைப் பருவம் தொலைத்த!
நடுத்தர வயது ஆசிரியை!
எரிச்சலோடு சொன்னாள்!
டோண்ட் டாக். !
-ஜெ.நம்பிராஜன்!
ஊடலுக்குப் பின்...!
அழுது கொண்டிருந்தாய் நீ!
அமர்ந்திருந்தேன் நான்!
கொஞ்சகொஞ்சமாய்!
கண்ணீரோடு 'நீ' வழிந்தோட!
கண்ணீரில் 'நான்' கரைந்தோட!
என்னைத் தொலைத்த நான்!
உன்னை மறந்த நீ என!
நாமானோம் நாம்.!
-ஜெ.நம்பிராஜன்

என் நண்பனே!.. சொல்லடி என்.. என்ன‌வ‌ளு

சிபி பாபு
என் நண்பனே!.. சொல்லடி என் செல்லமே..என்ன‌வ‌ளுக்காக‌...!
01.!
என் நண்பனே!!
---------------------!
உடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே!
இடுக்கண் களைவதாம் நட்பு.!
வள்ளுவர்.!
என் நண்பனே!!
உன் துயில்தனை!
எழுதும் இந்தப் பேனாவின்!
உயிர்தனைக் குடிக்கும்!
இக்காகிதம் போல்!
என் உயிர்தனைக்!
குடிப்பதுன் துயில்தானோ?.!
செடியினின்றுப் பூத்திருக்கும்!
மலர்கள்தனை கொய்யாதே!
செடியின் கவலை !
உனக்கு புரியாது என்றாய்!,!
விளையாட்டாய் நானும்!
அறியாமலேயே!
இருந்துவிட்டேன்!!
இறைவன்!!
அவனை நினை-நமக்கு !
அவன் இருக்கின்றான் என்றாய்!!
உன்னை ஏளனமாய்ப் பார்த்து!
நீயெல்லாம் எனக்கு நண்பன்.!
என்று சொல்லிச்சென்றேன்!.!
கார்கிலில் எவனோ!
இறந்ததற்காக ஒரு நிமிடம்!
மெளனம் செலுத்தச் சொன்னாய்!!
எவனோ இறந்ததற்கு!
நாம் ஏன் செய்யவேண்டும்?!
என்று விளையாட்டாய்ச் சொன்னேன்!!
யார் மீதும் !
அதிகமாய் அன்பு கொள்ளாதே!
அதுவே உன்னை !
கொன்று விடும் என்றாய்!!
ஒன்றும் புரியாதவனாய்!
இருந்து விட்டேன்!!
என் இனிய !
சினேகிதனே...!
இன்றுதான் புரிந்துபோனது!
மலர்தனை இழந்த!
செடியின் வலி.!
கார்கிலில் செந்நீர் சிந்தியவன்!
தாயின் கண்ணிர் சிந்திய!
இதயத்தின் வலி.!
யார் மீதும் அதிகமாய்!
அன்பு கொள்ளாதே!
கொண்டுவிட்டேனே!
உன் மீது!.!
விளையாட்டாய் இருந்ததினால்!
உன்னை இழந்தேன்!!
இனி...!
உன் விதையாய்!
நான் வளரப்போகிறேன்!!
உன்னுடன்!
என் இதயத்தைத்தான்!
எடுத்து சென்றிருக்கிறாய்!!
உன் இதயம்!
பத்திரமாய் என்னிடம்...!
விளையாட்டாய் இருந்த!
என் இதயம்!
உன்னுடனே இறந்து-உன்!
இதயம்!
என்னுடன் இருப்பது போதுமடா!!
இறைவன் இறைவன்!
என்றாய்!!
இதோ என்னில் இருக்கும்!
உன் இதயம்தானா அது?.!
!
02.!
சொல்லடி என் செல்லமே...!
------------------------------------!
உன் கரங்கள் பற்றி!
என் கன்னங்களில் வைத்தும்!!
சில நேரங்களில்!
உன்கரங்கள்-என் !
கன்னங்களை பதம்பார்த்தும்!!
உன் மடிதனில்!
என் துயில்தனையும்!!
உன் தோல்தனில்!
என் கைப்போட்டு!
ஆல்பம் பார்த்தநாட்களும்!!
உன் பிஞ்சுப் பாதங்களை!
என் பாதங்கள் மீது வைத்து!
என் இருகரம் பற்றி!
நன்றாய் நான் நடக்க!
நடுவே உன்னிடம்!!!!
விழுந்துடப்போற பார்த்துடா,!
என்ற நாட்களும்!!
என்றோ சில சமயம்!
உன் கரங்கள் எனக்கு!
உணவூட்டிய நாட்களும்!!
உன்னிடம் பேசாததற்காய்!
நீ அழுத நாட்களும்!!
பிரியும்போது எப்படா வருவ,!
என்ற உன் வார்த்தையும்!!
உனை இழந்த எனக்கு!
மீண்டும் ஒருமுறை வருமா?...!
சொல்லடி என் செல்லமே...!
!
03.!
என்ன‌வ‌ளுக்காக‌...!
-----------------------!
என் !
இத‌ய‌மெனும் கோவிலில்!!
ஏற்றி வைத்த‌ தீப‌மாய்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என்!
க‌ண்க‌ளெனும் நில‌த்தில்!!
நீரோடையாய் க‌ண்ணீர்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என் !
முக‌மெனும் வானில்!!
இன்றேனோ அமாவாசை!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
என்!
சுவாச‌மெனும் பூத‌த்தில்!!
இன்றேனோ புய‌ல்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்.!
தென்ற‌ல‌லைக‌ள்!
எனைத்தாண்டிச் செல்லுகையில்!!
என் !
இத‌ய‌த்தை வ‌ருடிச்செல்லும்!!
என் அவ‌ளின் நினைவுக‌ள்

தண்டனையின் பிடியில்

இமாம்.கவுஸ் மொய்தீன்
காலம் மாறிவிட்டது!!
நீதிமன்றங்களிலும்!
பெரும்!
மாற்றம்!!
நீதி -!
நிதியின்பக்கம்!!
நியாயம் -!
விலையின் பக்கம்!!
அநியாயங்களின்!
கைகளில் நியாயம்!!
இப்போதெல்லாம்!
கட்டப் பஞ்சாயத்துக்கள்!
வெளியில் நடப்பதில்லை!!
கண்கள்!
கட்டப்பட்ட நிலையில்!
நீதி தேவதை!!
வெற்றிக் களிப்பில்!
சீருடை அணிந்தோர்!!
சட்டம் தன் கடமையில்!
தவறுவதில்லை!!
தண்டனையின்!
பிடியில் தான்!
தர்மம்!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

பல்லிகள் இல்லாச் சுவரில் மேயும் வண்ணத்துப் பூச்சிகள்!

எஸ்.நளீம்
வெளியில் முகம் காட்டி!
செடிகள் படர்ந்தன!
பச்சிலைப் பாம்பின் உயிர்ப்புடன்!
காற்றிறுகிய சதுர அறைக்குள் என்ன இருந்தன!
அந்த கதவு ஜன்னலின் துவார வழியால்!
கனிவு கசிந்தது!
இப்போ!
வெளிச் சுவர்களெல்லாம்!
கொடிகளை விளைத்தது!
கொடிகளெல்லாம் பூக்களை விதைத்தது!
பூக்களெல்லாம்!
வண்ணத்துப் பூச்சிகளைப் பூத்தது!
பல்லிகள் இல்லாத சுவரில் மோதி மோதி!
மலர்களைப் புணர்ந்து காற்று மணந்தது!
தட்டத் தட்டத் திறக்காத அறை திறந்தது!
உள்ளே!
பேனா ஊன்றிய தாளுடன்!
ஒரு கவிதை இருந்தது!
நம் சுதந்திரத்தைப் பாடியபடி

நீலக்கண்கள் சூடிய வினோத பட்சி

ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல்!
தலையால் நடந்து கொண்டிருக்கும்!
ஒரு வினோத பட்சியின் பின்னே!
துரத்தப்பட்டு அலைக்கழிக்கப் படுகிறேன்!
கைகால் முளைத்த மரங்கள்!
ரத்தம் சிதறும் நரம்புகளின் வேதனையை!
பூமியில் வரைந்து செல்கிறது!
எனக்கென தென்பட்ட திசையெங்கும்!
வருடிப் புணர்ந்த கனவின் துளிகள்!
ஒன்றின் மேல் மற்றொன்றாகி!
சமாதிகளில் புதைக்கப்பட்ட!
உடல்களின் பெருங்கூட்டம் எங்கும்!
அலையடித்து கிளம்பும் பரவெளியில்!
மூங்கில் காடெங்கும் சாய்ந்தலைந்து!
அறுபட்ட காதுகள் தொங்க!
விழிகளற்ற கொடிமர வேலிகள்!
உமிழ்நீர் துப்பல் சிதறல்களில்!
துருப்பிடித்து கருகி சாம்பலாகின.!
பேராறுதல் சொல்ல வார்த்தைகளற்ற !
தலைகீழ் பட்சியின் நாவுகளில்!
பிரபஞ்ச ரகசியம் ஒளிந்து கிடந்த்து.!
நீலக்கண்கள் சூடி பட்சியை தொட எத்தனித்த!
ஒவ்வொரு விரல்களின் நுனிகளையும்!
நெருப்புப் பந்துகள் பற்றி எரித்தன.!
போதை வெறியூட்டப்பட்ட சுழற்சியில்!
இறக்கையின் திமிறடக்கி!
பட்சியை இறுகி கட்டியணைத்தபோது!
நானுமொரு கருவண்டாகி சுழன்றேன்

எழுதப்படுகின்ற புத்தகம்

வல்வை சுஜேன்
மானிட ஜீவனின் கூடு !
எழுதப் படுகின்ற ஒரு புத்தகம்!
ஒவ்வொரு கூட்டினதும் !
முகப்பு அட்டையினை!
தாய் தந்தையர் வரைகின்றனர் !
மர்ம நாவலோ மானிடக் காதலோ!
புறட்ச்சிப் புயலோ புதுக் கவியோ!
அவரவர் எழுதித் தந்த !
அத்தியாயங்களே !
தத்தித் தவழும் காலத்தில் !
முகவுரை எழுதும் மானிடன் !
பருவ காலத்தின் வர்ண மாயைக்குள்!
தான்னொரு பட்டாம் பூச்சி என்பதை!
மறந்து போவதுண்டு!
தேனிலும் இனியது காதல் என்பதும்!
தேய்ந்திட்ட உலா வாழ்வில்!
சாதல் என்பதும் !
இவன் கண்ட தத்துவம் !
அவரவர் எழுதும் பக்கங்களில்!
வாழ்க்கை புத்தகம் வரையப்படுகின்றன!
பிறப்போ இறப்போ !
இவன் எழுதுவதில்லை!
இறைவன் ஒருவனே !
இறுதி உரை எழுதி!
முற்றுப் புள்ளி வைக்கின்றான்

தோல்வியில் வெற்றி(ப்) படி

நாகினி
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
காதல் விழி பேசி!
காத்திருந்த கனவுகளைக்!
கானலாக்கும் கடமை!
காலத்தின் கட்டாயமாகிட!
காத்திருப்பு சிதறல்!
காயங்கள் கரைய எழுச்சிநடை பழக்கி!
காலக்கரங்கள் நீட்டும் தன்னம்பிக்கை!
காக்கும் வெற்றி(ப்) படி சுகமே..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
ஓடி வந்தென் தோள் சேர்ந்து!
மங்கல நாண் கழுத்தணியாக்கிட!
பெற்றிருப்பேன் ஒன்றிரண்டு மழலைகள்..!
தேடி வராமல் எறியப்பட்டு!
எரிந்த காதல் புண்ணுக்கு மருந்தென!
தொண்டுள்ளம் துணையாகிட ஈன்றேன்!
பல்லாயிரம் மலர்களின் அன்னையெனும்!
பாக்கிய மகுடம்..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
தோல்வி நிலையென கருதாஉள்ளம்!
தன்னம்பிக்கை சிறகு முளைக்க!
மனவேதனை மை நிரப்பி!
தோல்விப் பாடங்களை வரிகளாக்கி!
கவிதை வாசம் தெளித்து ஈட்டுவேன்!
திறன்மிகு படைப்பாளியாய்!
வாழ்த்து வெகுமதி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
மனம் நோக தோல்வி வடு தந்து!
மணமாலை சூடும் மறுப்புள்ளம்!
என்னுள் முகிழ்க்கக்!
காரணியாம் உனையேச் சேரும்!
மணமேடை ஏற அருகதையற்ற!
முதிர் (கன்னி/காளை) இவரென!
சமூகம் எள்ளிநகையாடித் தூற்றும்!
பாவச் சவுக்கடி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?

சுட்டெரிக்கும் மனசாட்சி

பனசை நடராஜன், சிங்கப்பூர்
சந்தோஷமே அவர்களின் !
சர்வதேச மொழி ! !
சிரிப்பைத் தேனாகச் !
சிந்துகின்ற இளமலர்கள் ! !
சருகானக் காட்சியினைக் !
கண்டதற்கே நம்இதயம் !
குண்டுவிழுந்த நகராய் !
குலைந்து போனது ! !
இந்தக் கொடுமைகளை !
இன்னும் கொஞ்ச நாளில் !
மறந்து விட்டு !
'எந்த நடிகர் அரியணை !
ஏறுவார்?' என்றும், !
சந்திரனும், சனியனும் !
தக்க இடத்தில் ஒன்றாய் !
வந்துவிட்டால் பெருகிடும் !
வசதிகள்.. என்றும் பேசும் !
மந்தபுத்திக் காரர்கள் நாம் ! !
அந்தச் சந்தடி நேரத்தில் !
சந்தேகத்தைப் பலனாக்கி !
சாதகமாய்த் தீர்ப்பு 'வாங்கி' !
வந்திடுவார் வெளியே !
வஞ்சகப் படுபாதகர்கள் ! !
என்றாலும்.., !
கொடுமைக்குக் காரணமாகிக் !
கொலைகாரன் ஆனோமென்றக் !
குற்ற உணர்விலிருந்துத் !
தப்பவிடாமல் சுட்டெரிக்கும் !
அவர்களின் மனசாட்சி !!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்

தேவதைகளின் ஊர்வலம்

தொட்டராயசுவாமி.அ, கோவை
01.!
குடைக்குள் காளான் !
-------------------------!
உன்னோடு!
மழையில்!
நனைந்த சமயங்களில்தான்!
குடைக்குள்!
பூத்த காளான்கள்!
போலே!
என்னுள்ளே!
மழைபொழிந்த!
மௌனங்களை!
உணர்ந்தேன்.!
02.!
விக்கல் !
------------!
நீ தனியாக!
அமர்ந்து!
நம் நினைவுகளை!
விழுங்கும் போதெல்லாம்!
அன்பே!!
விக்கல் எடுத்தே!
வியர்த்து போகிறது!
என் மனசு.!
03.!
தேவதை மட்டும் !
-------------------!
!
நீ தலைசாய்ந்து!
பார்க்கும் போதெல்லாம்!
குடைசாய்கிறது!
என் மனசு.!
எத்தனை முறை!
சொல்லியிருக்கின்றேன்!
பெண்கள் மட்டும்!
என்றெழுதி வைத்த!
இருக்கையில்!
பயணிக்காதே என்று!
தேவதையே?!
04.!
பாரடி என் மோகினி !
----------------------!
!
சொன்னால்!
நம்பமாட்டேன்!
என்கின்றாய்!
முகம் திருப்பிக் கொண்டு!!
முகர்ந்துப் பார்!
கவிதையில்!
உன் வாசம்!
வருடிப்பார்!
காகிதத்தில்!
உன் பரிசம்!
வாசித்துப்பார்!
உன்னை நேசிக்கும்!
என் இதயம்!
நம்பிக்கை வரவில்லையா?!
கசக்கி எறிந்துப்பார்!
நான் இறந்துக்கிடப்பது!
புரியும்.!
05.!
ஏன்டீ என்னை இப்படி!
இம்சை செய்கிறாய்?!
நான் தந்த முத்ததில்!
என்ன குறைக்கண்டாய்!
திருப்பி வாங்கிக்கொண்டு!
வேறொன்று தா என்று,!
உன் விழியடியில்!
கிரங்கிக் கொண்டிருக்கும்!
இவனிடம், தலையனை கொண்டு!
அடிக்கின்றாய்.!
06.!
நீ கோபமாக!
இருக்கின்றாய்.!
சரி, பிறகென்ன!
நீ முத்தம்!
தந்து என்னிடம்!
கெஞ்சுவாய்!
இனிமேல்!
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்!
என்று.!!
அதற்கேனடி!
இவ்வளவு நேரமாக!
காற்கவைக்கின்றாய் என்னை?!
07.!
மக்கு,!
உன் தவறுகளில்,!
சரியாக செய்ய!
கற்றுத்தருபவள்!
நான்.!
அதற்காக!
முத்தத்தை கூடவா!
ஒழுங்காக இடமாட்டாய்?!
!
08.!
திகட்டாத இம்சை !
--------------------!
என்னை!
நிலைக்கண்ணாடியில்!
காணும் எல்லா!
தருணங்களிலும்!
திகட்டாத இம்சையாக!
எனக்குப் பின்னால்!
நீ தெரிந்து!
தொந்தரவு செய்கின்றாய்!
தினமும்!
இப்பொழுதாவது!
காட்டு உன்!
கண்ணாடி கண்னை!
உன்னுள் இருக்கும்!
என் முழுமையை!
கண்டுகொள்கிறேன்.!
09.!
எதைக் காட்டி அழைத்தாயோ!
தெரியவில்லை!
தாய்முகம் கண்ட!
சேய் போல்!
உன்னை நோக்கி!
தவழ்ந்தது!
மனசு.!
10.!
நகங்களின் இடுக்கினில்!
-------------------------!
நீ தவறுகள் செய்யும்!
பொழுதுகளிலெல்லாம்!
எப்போதும் போல!
இன்றும் மறந்து!
என்னை உன் எச்சிலால்!
நனைத்துவிட்டாய்!
உன் நகங்களின்!
இடுக்கினில்!
வாழ்ந்துக் கிடப்பதுதான்!
எவ்வளவு சுகம்.!
-தொட்டராயசுவாமி.அ!
கோவை

ஒரு பயணியின் வாழ்வு... வாசனை

வ. ஐ. ச. ஜெயபாலன்
1. ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்!
!
சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்!
கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது!
வசந்தத்தின் வருகையை எழுதியபடி!
ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது!
ஒரு தனித்த காட்டு வாத்து.!
சிறகுகளால் என்!
கண்ணீர் துடைத்தபடி.!
!
அம்மாவின் மரணத் துயரோடு!
வெண்பனியையும் உருக்கிவிட்ட!
காலம் வலியது.!
ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்!
குனிந்துவந்த சூரியன்!
ஒளி விரல்களால் !
மிலாறுகளை வருடிவிடுகிறது.!
மொட்டை மரங்களின்மீது !
பசிய அறோரா துருவ ஒளியையும்!
வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். !
எங்கும் பசுமையும் பூக்களும் !
பட்டாம் பூச்சியுமாய்!
வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.!
!
உலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்!
தனி ரக்கூன் கடுவனாய் !
அடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.!
!
என்னோடு படகில் ஒரு புதிய நாள். !
எனக்காக நடுத்தீவின் கரைகளில்!
சுவர்க்கம் காத்திருந்தது.!
ஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன். !
ஏனைய தமிழருக்கு!
வசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.!
!
பாவம் என் நண்பர்கள்!
முன்னர் வந்திருந்தபோது!
ரொறன்றோ அடிநகர் பொந்துகளில் !
வாழ்வு இல்லை என்றார்கள்.!
வாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க!
மூன்று வேலை செய்தார்கள்.!
இம்முறை வந்தபோது !
வாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு!
வரவேற்றார்கள்.!
416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.!
905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி !
மூன்றாவது வேலை தேடிஅலைந்தார்கள். !
அவர்களது பெரிய வீடுகளும்!
பெரிய கார்களும் பெருமூச்சுவிட்டபடி!
வெறுமையாய்க் கிடந்தன. !
!
ஊர் பார்க்கவந்த என்னை!
எங்கும் வழிமறித்தது வாழ்வு. !
அந்த வசந்தம் முழுக்க!
அடி நகரின் பூத்த சதுக்கங்கள்!
பாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்!
மதுக்கடை !
ஒன்ராறியோ ஏரித் தீவு என்று!
வாழ்வின் மேச்சல் நிலங்களில்!
வசந்ததின் பொற்காசுகளைக் கறந்தேன்.!
!
இங்கும் வீட்டு முன்றலில் !
பூஞ்செடிகள் சிர்க்கின்றன.!
எங்கள் ஊர் வசந்தமோ!
அகதிக் குடிசை முன்றில்களில்கூட !
செவ்வந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி!
கூரைகளில்!
பாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.!
இடிபாடுகளூடும்!
தன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல!
இறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.!
!
மலர் அருந்தும் தேன்சிட்டின்!
சிறகுகள் எனக்கு.!
இலை பிடுங்கும்!
மஞ்சள் காலத்தின் முன்னம் !
நெடுந்தூரம் போகவேண்டும். !
- வ.ஐ.ச.ஜெயபாலன்!
!
2. வாசனை!
அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது!
அவளது வாசனையை உணர்ந்தேன்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்!
ரொறன்ரொவை நீங்கின.!
ஒன்ராறியோ ஏரியின்மீது!
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்!
கண்ணீரை மறைத்தபடி!
நாம் விடைபெற்றோம்.!
!
அந்த வசந்தத்தில்!
சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய!
ஒன்ராறியோ ஏரிக்கரையின்!
எந்தச் செடிகளை விடவும்!
பூத்துப்போயும் !
வாசனையோடும் என் படகில் இருந்தாள். !
!
படகை விட்டு இறங்கும்போது!
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.!
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்!
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.!
வானை வெண்பறவைகள் நிறைத்தன.!
ஒருகணம் போர் ஓய்ந்தது.!
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்!
மங்களப் பாடலும்!
பாங்கொலியும் கேட்டேன்.!
மீன்பாடும் முழு நிலவில்!
அவள் கமழும் ஒரு படகு!
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.!
!
எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்!
நாங்கள் இழந்த!
விருந்துகளையும் கந்தூரிகளையும்!
மட்டுநகர் வாவியையும்!
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.!
வெல்க பெடியள் என்றேன்.!
வெல்க நம் பெட்டையள் என்றாள்.!
கைகோர்த்தும் இருவேறுலகம்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.!
கறுப்பு அணில்கள் !
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து!
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.!
ஒவ்வொரு தடவையும்!
சுவர்க்கங்களைத் தாண்டி!
நினைவுகளில் முடிந்த !
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்!
மேப்பிள் சருகுகள் மிதிபட!
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.!
ஸ்காபரோவில் பசித்திருந்த!
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்!
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.!
!
உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல!
என் நினைவுகளின் அடுக்கில்!
அவள் தனது!
இறுதி அணைப்பின் வாசனையை!
இப்படித்ததன் விட்டுச் சென்றாள். !
-வ.ஐ.ச.ஜெயபாலன்