தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எழுதப்படுகின்ற புத்தகம்

வல்வை சுஜேன்
மானிட ஜீவனின் கூடு !
எழுதப் படுகின்ற ஒரு புத்தகம்!
ஒவ்வொரு கூட்டினதும் !
முகப்பு அட்டையினை!
தாய் தந்தையர் வரைகின்றனர் !
மர்ம நாவலோ மானிடக் காதலோ!
புறட்ச்சிப் புயலோ புதுக் கவியோ!
அவரவர் எழுதித் தந்த !
அத்தியாயங்களே !
தத்தித் தவழும் காலத்தில் !
முகவுரை எழுதும் மானிடன் !
பருவ காலத்தின் வர்ண மாயைக்குள்!
தான்னொரு பட்டாம் பூச்சி என்பதை!
மறந்து போவதுண்டு!
தேனிலும் இனியது காதல் என்பதும்!
தேய்ந்திட்ட உலா வாழ்வில்!
சாதல் என்பதும் !
இவன் கண்ட தத்துவம் !
அவரவர் எழுதும் பக்கங்களில்!
வாழ்க்கை புத்தகம் வரையப்படுகின்றன!
பிறப்போ இறப்போ !
இவன் எழுதுவதில்லை!
இறைவன் ஒருவனே !
இறுதி உரை எழுதி!
முற்றுப் புள்ளி வைக்கின்றான்

தோல்வியில் வெற்றி(ப்) படி

நாகினி
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
காதல் விழி பேசி!
காத்திருந்த கனவுகளைக்!
கானலாக்கும் கடமை!
காலத்தின் கட்டாயமாகிட!
காத்திருப்பு சிதறல்!
காயங்கள் கரைய எழுச்சிநடை பழக்கி!
காலக்கரங்கள் நீட்டும் தன்னம்பிக்கை!
காக்கும் வெற்றி(ப்) படி சுகமே..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
ஓடி வந்தென் தோள் சேர்ந்து!
மங்கல நாண் கழுத்தணியாக்கிட!
பெற்றிருப்பேன் ஒன்றிரண்டு மழலைகள்..!
தேடி வராமல் எறியப்பட்டு!
எரிந்த காதல் புண்ணுக்கு மருந்தென!
தொண்டுள்ளம் துணையாகிட ஈன்றேன்!
பல்லாயிரம் மலர்களின் அன்னையெனும்!
பாக்கிய மகுடம்..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
தோல்வி நிலையென கருதாஉள்ளம்!
தன்னம்பிக்கை சிறகு முளைக்க!
மனவேதனை மை நிரப்பி!
தோல்விப் பாடங்களை வரிகளாக்கி!
கவிதை வாசம் தெளித்து ஈட்டுவேன்!
திறன்மிகு படைப்பாளியாய்!
வாழ்த்து வெகுமதி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?!
மனம் நோக தோல்வி வடு தந்து!
மணமாலை சூடும் மறுப்புள்ளம்!
என்னுள் முகிழ்க்கக்!
காரணியாம் உனையேச் சேரும்!
மணமேடை ஏற அருகதையற்ற!
முதிர் (கன்னி/காளை) இவரென!
சமூகம் எள்ளிநகையாடித் தூற்றும்!
பாவச் சவுக்கடி..!
போ போ!
நீ வராமல் போனதால்!
இழப்பென்ன எனக்கு..!?

சுட்டெரிக்கும் மனசாட்சி

பனசை நடராஜன், சிங்கப்பூர்
சந்தோஷமே அவர்களின் !
சர்வதேச மொழி ! !
சிரிப்பைத் தேனாகச் !
சிந்துகின்ற இளமலர்கள் ! !
சருகானக் காட்சியினைக் !
கண்டதற்கே நம்இதயம் !
குண்டுவிழுந்த நகராய் !
குலைந்து போனது ! !
இந்தக் கொடுமைகளை !
இன்னும் கொஞ்ச நாளில் !
மறந்து விட்டு !
'எந்த நடிகர் அரியணை !
ஏறுவார்?' என்றும், !
சந்திரனும், சனியனும் !
தக்க இடத்தில் ஒன்றாய் !
வந்துவிட்டால் பெருகிடும் !
வசதிகள்.. என்றும் பேசும் !
மந்தபுத்திக் காரர்கள் நாம் ! !
அந்தச் சந்தடி நேரத்தில் !
சந்தேகத்தைப் பலனாக்கி !
சாதகமாய்த் தீர்ப்பு 'வாங்கி' !
வந்திடுவார் வெளியே !
வஞ்சகப் படுபாதகர்கள் ! !
என்றாலும்.., !
கொடுமைக்குக் காரணமாகிக் !
கொலைகாரன் ஆனோமென்றக் !
குற்ற உணர்விலிருந்துத் !
தப்பவிடாமல் சுட்டெரிக்கும் !
அவர்களின் மனசாட்சி !!! !
-பனசை நடராஜன், சிங்கப்பூர்

தேவதைகளின் ஊர்வலம்

தொட்டராயசுவாமி.அ, கோவை
01.!
குடைக்குள் காளான் !
-------------------------!
உன்னோடு!
மழையில்!
நனைந்த சமயங்களில்தான்!
குடைக்குள்!
பூத்த காளான்கள்!
போலே!
என்னுள்ளே!
மழைபொழிந்த!
மௌனங்களை!
உணர்ந்தேன்.!
02.!
விக்கல் !
------------!
நீ தனியாக!
அமர்ந்து!
நம் நினைவுகளை!
விழுங்கும் போதெல்லாம்!
அன்பே!!
விக்கல் எடுத்தே!
வியர்த்து போகிறது!
என் மனசு.!
03.!
தேவதை மட்டும் !
-------------------!
!
நீ தலைசாய்ந்து!
பார்க்கும் போதெல்லாம்!
குடைசாய்கிறது!
என் மனசு.!
எத்தனை முறை!
சொல்லியிருக்கின்றேன்!
பெண்கள் மட்டும்!
என்றெழுதி வைத்த!
இருக்கையில்!
பயணிக்காதே என்று!
தேவதையே?!
04.!
பாரடி என் மோகினி !
----------------------!
!
சொன்னால்!
நம்பமாட்டேன்!
என்கின்றாய்!
முகம் திருப்பிக் கொண்டு!!
முகர்ந்துப் பார்!
கவிதையில்!
உன் வாசம்!
வருடிப்பார்!
காகிதத்தில்!
உன் பரிசம்!
வாசித்துப்பார்!
உன்னை நேசிக்கும்!
என் இதயம்!
நம்பிக்கை வரவில்லையா?!
கசக்கி எறிந்துப்பார்!
நான் இறந்துக்கிடப்பது!
புரியும்.!
05.!
ஏன்டீ என்னை இப்படி!
இம்சை செய்கிறாய்?!
நான் தந்த முத்ததில்!
என்ன குறைக்கண்டாய்!
திருப்பி வாங்கிக்கொண்டு!
வேறொன்று தா என்று,!
உன் விழியடியில்!
கிரங்கிக் கொண்டிருக்கும்!
இவனிடம், தலையனை கொண்டு!
அடிக்கின்றாய்.!
06.!
நீ கோபமாக!
இருக்கின்றாய்.!
சரி, பிறகென்ன!
நீ முத்தம்!
தந்து என்னிடம்!
கெஞ்சுவாய்!
இனிமேல்!
இப்படி நடந்துகொள்ளமாட்டேன்!
என்று.!!
அதற்கேனடி!
இவ்வளவு நேரமாக!
காற்கவைக்கின்றாய் என்னை?!
07.!
மக்கு,!
உன் தவறுகளில்,!
சரியாக செய்ய!
கற்றுத்தருபவள்!
நான்.!
அதற்காக!
முத்தத்தை கூடவா!
ஒழுங்காக இடமாட்டாய்?!
!
08.!
திகட்டாத இம்சை !
--------------------!
என்னை!
நிலைக்கண்ணாடியில்!
காணும் எல்லா!
தருணங்களிலும்!
திகட்டாத இம்சையாக!
எனக்குப் பின்னால்!
நீ தெரிந்து!
தொந்தரவு செய்கின்றாய்!
தினமும்!
இப்பொழுதாவது!
காட்டு உன்!
கண்ணாடி கண்னை!
உன்னுள் இருக்கும்!
என் முழுமையை!
கண்டுகொள்கிறேன்.!
09.!
எதைக் காட்டி அழைத்தாயோ!
தெரியவில்லை!
தாய்முகம் கண்ட!
சேய் போல்!
உன்னை நோக்கி!
தவழ்ந்தது!
மனசு.!
10.!
நகங்களின் இடுக்கினில்!
-------------------------!
நீ தவறுகள் செய்யும்!
பொழுதுகளிலெல்லாம்!
எப்போதும் போல!
இன்றும் மறந்து!
என்னை உன் எச்சிலால்!
நனைத்துவிட்டாய்!
உன் நகங்களின்!
இடுக்கினில்!
வாழ்ந்துக் கிடப்பதுதான்!
எவ்வளவு சுகம்.!
-தொட்டராயசுவாமி.அ!
கோவை

ஒரு பயணியின் வாழ்வு... வாசனை

வ. ஐ. ச. ஜெயபாலன்
1. ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்!
!
சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில்!
கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது!
வசந்தத்தின் வருகையை எழுதியபடி!
ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது!
ஒரு தனித்த காட்டு வாத்து.!
சிறகுகளால் என்!
கண்ணீர் துடைத்தபடி.!
!
அம்மாவின் மரணத் துயரோடு!
வெண்பனியையும் உருக்கிவிட்ட!
காலம் வலியது.!
ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில்!
குனிந்துவந்த சூரியன்!
ஒளி விரல்களால் !
மிலாறுகளை வருடிவிடுகிறது.!
மொட்டை மரங்களின்மீது !
பசிய அறோரா துருவ ஒளியையும்!
வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். !
எங்கும் பசுமையும் பூக்களும் !
பட்டாம் பூச்சியுமாய்!
வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும்.!
!
உலகம் சிருஸ்டி மூர்க்கத்தில் அதிர்கையில்!
தனி ரக்கூன் கடுவனாய் !
அடி நகரில் அலைந்து கொண்டிருந்தேன்.!
!
என்னோடு படகில் ஒரு புதிய நாள். !
எனக்காக நடுத்தீவின் கரைகளில்!
சுவர்க்கம் காத்திருந்தது.!
ஒற்றைத் தமிழனாக அங்குபோய் இறங்கினேன். !
ஏனைய தமிழருக்கு!
வசந்தம் வந்ததென்று யாராவது சொல்லுங்கள்.!
!
பாவம் என் நண்பர்கள்!
முன்னர் வந்திருந்தபோது!
ரொறன்றோ அடிநகர் பொந்துகளில் !
வாழ்வு இல்லை என்றார்கள்.!
வாழ்வு நிறைந்த ஸ்காபறோ வீடுகளை மடக்க!
மூன்று வேலை செய்தார்கள்.!
இம்முறை வந்தபோது !
வாழ்வு பற்றிய புதிய கண்டுபிடிப்புகளோடு!
வரவேற்றார்கள்.!
416 தொலைபேசி வட்டத்துள் அது இல்லை என்றார்கள்.!
905 வட்டத்துள் அது இருக்கிறது என்றபடி !
மூன்றாவது வேலை தேடிஅலைந்தார்கள். !
அவர்களது பெரிய வீடுகளும்!
பெரிய கார்களும் பெருமூச்சுவிட்டபடி!
வெறுமையாய்க் கிடந்தன. !
!
ஊர் பார்க்கவந்த என்னை!
எங்கும் வழிமறித்தது வாழ்வு. !
அந்த வசந்தம் முழுக்க!
அடி நகரின் பூத்த சதுக்கங்கள்!
பாணர்களும் கூத்தர்களும் கைப்பற்றிய தெருக்கள்!
மதுக்கடை !
ஒன்ராறியோ ஏரித் தீவு என்று!
வாழ்வின் மேச்சல் நிலங்களில்!
வசந்ததின் பொற்காசுகளைக் கறந்தேன்.!
!
இங்கும் வீட்டு முன்றலில் !
பூஞ்செடிகள் சிர்க்கின்றன.!
எங்கள் ஊர் வசந்தமோ!
அகதிக் குடிசை முன்றில்களில்கூட !
செவ்வந்திக்கும் அவரைக்கும் மலர் சூடி!
கூரைகளில்!
பாகல் சுரைப் பூக்களின் மகரந்ததைச் சிந்திவிடுகிறது.!
இடிபாடுகளூடும்!
தன் பூவை நீட்டிவிடுகிற புல்லைப்போல!
இறுதியில் வென்று விடுகிறது வாழ்வு.!
!
மலர் அருந்தும் தேன்சிட்டின்!
சிறகுகள் எனக்கு.!
இலை பிடுங்கும்!
மஞ்சள் காலத்தின் முன்னம் !
நெடுந்தூரம் போகவேண்டும். !
- வ.ஐ.ச.ஜெயபாலன்!
!
2. வாசனை!
அத்திலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது!
அவளது வாசனையை உணர்ந்தேன்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும்!
ரொறன்ரொவை நீங்கின.!
ஒன்ராறியோ ஏரியின்மீது!
தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள்!
கண்ணீரை மறைத்தபடி!
நாம் விடைபெற்றோம்.!
!
அந்த வசந்தத்தில்!
சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய!
ஒன்ராறியோ ஏரிக்கரையின்!
எந்தச் செடிகளை விடவும்!
பூத்துப்போயும் !
வாசனையோடும் என் படகில் இருந்தாள். !
!
படகை விட்டு இறங்கும்போது!
ஈழத் தமிழர் தலைவிதி என்றாள்.!
நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில்!
சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள்.!
வானை வெண்பறவைகள் நிறைத்தன.!
ஒருகணம் போர் ஓய்ந்தது.!
வடமோடிக் கூத்தர்களின் மத்தளமும்!
மங்களப் பாடலும்!
பாங்கொலியும் கேட்டேன்.!
மீன்பாடும் முழு நிலவில்!
அவள் கமழும் ஒரு படகு!
நெஞ்சுள் நுளைய நெடுமூச்செறிகின்றேன்.!
!
எங்கள் பிள்ளைகளை அறிமுகப் படுத்தவேணும்!
நாங்கள் இழந்த!
விருந்துகளையும் கந்தூரிகளையும்!
மட்டுநகர் வாவியையும்!
அவர்களாவது மகிழட்டும் என்றாள்.!
வெல்க பெடியள் என்றேன்.!
வெல்க நம் பெட்டையள் என்றாள்.!
கைகோர்த்தும் இருவேறுலகம்.!
!
நாங்கள் பிரிந்தபோது!
மேப்பிள் மரங்கள் பசுமை இழந்தது.!
கறுப்பு அணில்கள் !
எதிர்வரும் பஞ்சம் உணர்ந்து!
ஓக் விதைகளை மண்ணுள் புதைத்தன.!
ஒவ்வொரு தடவையும்!
சுவர்க்கங்களைத் தாண்டி!
நினைவுகளில் முடிந்த !
வண்ணத்துப் பூச்சி வழிகள் எங்கும்!
மேப்பிள் சருகுகள் மிதிபட!
உரித்துக் கொண்டு காரில் ஏறினோம்.!
ஸ்காபரோவில் பசித்திருந்த!
கொங்கிரீட் டைனசோர்களின் முன்னம்!
கைவிட்டுப் பேருந்துச் சாரதிபோல் போய்விட்டாள்.!
!
உடைகளுள் தாழம்பூ வைப்பதுபோல!
என் நினைவுகளின் அடுக்கில்!
அவள் தனது!
இறுதி அணைப்பின் வாசனையை!
இப்படித்ததன் விட்டுச் சென்றாள். !
-வ.ஐ.ச.ஜெயபாலன்

அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக

தீபச்செல்வன்
நாம் வழங்கிய பூக்கள்!
----------------------------------------------------------------------!
அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான்.!
யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான்.!
நான் இப்பொழுதும் கேட்கிறேன்!
அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும்!
குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று.!
என் அன்பு மிகுந்த சனங்களே!!
எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க!
இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை!
நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள்.!
எங்கள் கோரிக்கைகளும்!
அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும்!
நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன.!
துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும்!
எங்கள் தந்தையே!!
ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடையில் பதுங்கியிருந்த வேளை!
நடு சமங்களில் எழுந்து நின்று!
சிலுவைத் தூக்கியபடி மன்றாடிக்கொண்டிருந்திர்களே!!
எங்களுக்கு முன்னால்!
இறந்து சிதைந்த குழந்தைகள்தானே வந்து விழுந்துகொண்டிருந்தன.!
அரசன் எல்லாக் குழந்தைகளையும்!
வெட்டும்படி கட்டளை பிறப்பித்தபொழுது!
எல்லாச் சனங்களையும் சிறையிலடைத்துக்கொண்டபொழுது!
குழந்தைகளுக்காகவும் சனங்களுக்காகவும்!
நீர் உபவாசம் செய்து கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தீர்.!
பெற்றோர்களை பிரிந்து துயர் மிகுந்த அறைகளில்!
துடித்துக்கொண்டிருந்த பிள்ளைகளுக்கு!
உணவும் வார்த்தைகளும் கொடுத்த தந்தையே!
அரசனின் பழங்கள் குறித்து உங்கள் ஒரே குழந்தைக்கு!
என்ன சொல்லப் போகிறீர்கள்?!
ஆடைகளை களைந்து சோதனையிடவும்!
ஆடைகளை கிழித்து!
நிருவாணமாக நாம்மை ஓட வைக்கும்படியும்!
அரசனே கட்டளை பிறப்பித்திருந்தான்.!
அவனுக்கு நாங்கள் பொன்னாடை போர்த்தியிருக்கிறோம்.!
எங்கள் நிர்பந்தங்களும் சபிக்கப்பட்ட வாழ்வும்!
ஒவ்வொருவரையும் கொலை செய்துகொண்டிருக்கிறது.!
எங்கள் கனவை சிதைத்துப்போட்டவன்!
நிலத்தை அள்ளிச் சென்றவன்!
தெருக்களை சூறையாடியவன்!
குழந்தைகள்மீது பிரமாண்டமான சிறையினைப் பின்னியவன்!
சனங்களின் குருதியில் முகம் கழுவிக்கொண்டிருந்தவன்!
தந்திரமான கதிரையால் வனையப்பட்ட!
கூடையில் யுத்ததில் பிடுங்கிய பழங்களை கொண்டு வந்திருக்கிறான்.!
அவற்றை நாமும் புசித்து குழந்தைகளினது!
கைகளிலும் சொருகி!
சனங்களின் குருதியில் நனைந்த பூக்களை பரிசளித்திருக்கிறோம்.!
அரசன் அழகான பூக்களுடன் செல்லுகிறான்.!
10.01.2010

கடவுள் முகமூடி

ப.மதியழகன்
அழைப்பு மணி ஒலித்தது!
கதவைத் திறக்க மனமில்லாமல்!
படுக்கையில் கிடந்தேன்!
பிறரிடம் மன்னிப்பு!
கேட்குமளவுக்கு!
எந்தத் தவறும் இதுவரை!
செய்ததில்லை!
எதிர் நீச்சல் போடுபவர்கள்!
கரை சேர முடியாது என!
நான் இப்போது தான்!
புரிந்து கொண்டேன்!
சாக்கடையில் விழுந்த!
மழைத்துளி சந்தன மணம்!
கமழுமா!
பசி மயக்கத்தில் விழுந்தவனுக்கு!
ஆகாரம் தான் கடவுளல்லவா!
பாவம் செய்யய பயப்படுபவர்களை!
ஆண்டவன் சோதிப்பது ஏன்!
இம்சை செய்து மகிழ்பவர்கள்!
இறைவனின் குமாரரர்களாக!
பூஜிக்கப்படுவது விநோதமல்லவா!
அருளுக்கு பிரதிபலனாக!
ஏதாவது எதிர்பார்த்தால்!
அவன் கடவுளா!
வாழ்விக்க உன்னிடம் வேண்டவில்லை!
குப்பையாக வந்த உடம்பை!
ஆராதனை செய்பவன்!
பிரபஞ்சத் தலைவனா!
மோகத்தை வெல்ல!
முடியாதவனுக்கு பெயர்!
தாயுமானவனா?!

தீரா.. ஆவது

சேரல்
01.!
தீரா!
-------!
இரை தேடவும்!
இரை தின்பதற்கென்றுமே!
விடிந்து தொலைக்கிறது!
ஒவ்வொரு நாளும்!
முடிந்தும் போகிறது!
தின்று தீர்த்ததும்!
உச்சி வெயில் பார்த்து!
மல்லாந்து கிடந்து!
மரித்துப்போன எலியின்!
வளையிலும்,!
கொத்திக்கொத்தி!
இறைச்சி சேகரித்த காக்கையின்!
கூட்டிலும்,!
காத்திருக்கும்!
சில பசித்த குஞ்சுகள்!
02.!
ஆவது!
----------!
எப்படியெல்லாமோ!
ஆக வேண்டுமென்று!
ஆசையிருந்து!
எப்படியெல்லாமோ ஆகியும்!
விட்டாச்சு!
இப்போது யாருமே கேட்பதில்லை!
என்னவாகப்போகிறாய்?!
என்னுள் ரகசியமாய்!
முளைவிடத் தொடங்கியிருக்கிறது ஆசை!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய மலையோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய கடலோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய வானமோ,!
ஒரு பெரிய்ய்ய்யய்யய்ய்ய்ய பூதமாகவேனும்!
ஆகிவிடுவதென்று!
ஆனபின் ஏதுவாயிருக்கும்!!
எப்போதும் விரிந்தேயிருக்கும்!
கதைசொல்லும் குழந்தைகளின் கைகளுக்குள்!
என்னைச் சரியாகப் பொருத்திக்கொள்ளலாம்

அலைவியல்

ராம்ப்ரசாத், சென்னை
உன் கவிதைமொழிகளைப்!
பிரசவிக்காத‌!
மலடாய் இருக்கிறது!
என் அலைபேசி!
இப்போதெல்லாம்...!
சினுங்கிச்சினுங்கி,!
உன் சினுங்கலை!
எனக்குள் கடத்த,!
மறந்து கிடக்கிறது!
அது மெளனமாய்...!
என்னை என் விர‌ல்க‌ள்!
நினைவுகூறுவ‌த‌ற்காய்!
இன்றும் காத்திருக்கிறேன்!
நானும் அதை!
வெறுமையாய் பார்த்த‌ப‌டியே...!
க‌ட‌ல் அலைக‌ளில்!
ந‌னையும் உன் பாத‌ங்க‌ளில்!
தொலைத்த‌ என்னை இந்த‌!
மின்ன‌லைக‌ளில்!
தேடிக்கொண்டிருக்கிறேன்...!
என்னுயிரின் விசும்பலை!
உன்னழகால் பிடுங்கி!
அதனிடம் தந்துபோனவளே...!
அள்ளித் த‌ருகிறேன்!
என்னுயிரை...!
வைத்துக்கொள்வாயா ப‌த்திர‌மாக‌!
உன் இத‌ய‌த்தில்

வெற்றுப் பேப்பரோடு சிலநேரம்

வைகறை நிலா
பிறர் கவிதையை !
வாசிப்பது சுகம்.!
ரசிப்பது சுகம்.!
பிடித்திருந்தால்!
தனியே எடுத்து!
வைத்துக் கொள்வது!
தனி சுகம்.!
எல்லாவற்றிலும் சுகம்!
காதலில் விழுந்து!
கவிதை எழுத வேண்டுமென்ற !
எண்ணத்தோடு!
வெற்றுப் பேப்பரோடு!
வெகுநேரம் அமர்ந்திருப்பது…!
- வைகறை நிலா