தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பேசும் யானை

ஜான் பீ. பெனடிக்ட்
பெரிசா எங்களைப் படைச்சதால!
பெரிய கோயிலில் நிறுத்திப்புட்டான்!
பேச முடியா ஊன ஜாதியை!
பிச்சை எடுக்கவும் பழக்கிப்புட்டான்!
முழங் கையளவு குச்சியை வைச்சு!
முட்டிக்கு முட்டி தட்டுறிய!
கால் நகர முடியாம!
கட்டிப் போட்டு வாட்டுறிய!
கட்டுக்கட்டா கரும்பு திங்கும்!
கம்பீரக் கூட்டம் நாங்க!
காய்ஞ்சு போன தட்டையை!
கால் வயிற்றுக்குப் போடுறிய!
சாமி பேரைச் சொல்லிச் செஞ்சா!
சாகடிக்கிறதும் உங்களுக்குக் குத்தமில்லை!
சதா காலம் சாவுறதை விட!
சட்டுனு சுட்டுப்போடும் வீரப்பன் தேவலைங்க!
வருஷத்துல ஒருமாசம் முதுமலை கேம்ப்!
வாஸ்து பொலிட்டிசியன் போட்ட பிச்சை!
வருஷம் முழுக்க காட்டுக்குள்ளே கூட்டமா!
வாழ்வது தானே எங்க ஜனத்தின் ஆசை!
வாய் பேச முடிஞ்சதால!
வந்தேன் ஜார்ஜ் கோட்டைக்கு!
வனத்துறை மந்திரியைப் பாத்து!
வயிற்றெரிச்சலைக் கொட்டிப் போட

சிகரெட்

நாவிஷ் செந்தில்குமார்
அதிகம் சாப்பிட்டால்!
ஆரோக்கியத்துக்குக் கேடுயென!
எனக்கு ஒற்றைச் சாக்லேட்டோடு!
நிறுத்திக் கொண்ட அப்பா!
தனக்கு மட்டும்!
பாக்கெட் சிகரெட்!
வாங்கிக் கொண்டார்!!
யார் சொன்னது!
தன் வினை!
தன்னைச் சுடும் என்று?!
பொறுப்பில்லாதவன்!
புகைத்த பின்!
அணைக்காமல் போட்ட சிகரெட்!
செருப்பில்லாதவன்!
காலையல்லவா சுட்டது

நிதானம் இழந்தால்

இமாம்.கவுஸ் மொய்தீன்
படிக்கும் காலத்தில்!
நிதானம்!
இழந்ததால்!
பாதியில் முடிந்தது!
கல்வி!!
ஆடிய விளையாட்டில்!
நிதானம்!
இழந்ததால்!
இழப்பில் முடிந்தது!
ஆட்டம்!!
போதை மயக்கத்தில்!
நிதானம்!
இழந்ததால்!
பலனாய் கிடைத்தது!
சிறைவாசம்!!
இல்லற வாழ்வில்!
நிதானம்!
இழந்ததால்!
விவாகரத்தில் முடிந்தது!
இல்லறம்!!
வாகனம் ஓட்டுகையில்!
நிதானம்!
இழந்ததால்!
விபத்தில் முடிந்தது!
பயணம்!!
பதவியில் இருக்கையில்!
நிதானம்!
இழந்ததால்!
பாதியில் பறிபோனது!
பதவி! !
பணியின் போது!
நிதானம்!
இழந்ததால்!
பரிசாய் கிடைத்தது!
பணி நீக்கம்!!
விவாதத்தின் போது!
நிதானம்!
இழந்ததால் !
கொலையில் முடிந்தது!
விவாதம்!!
நிதானம் தவறி!
நடந்து கொண்டால்!
நிச்சயம் !
இழப்பே!
வாழ்வில்!!
நித்தம் நித்தம்!
நிதானம் கொண்டால்!
நிதமும் !
உயர்ந்திடும்!
வாழ்க்கை!!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

இரண்டற கலத்தலென்பது

கோகுலன்
கிழியாத வானம் போல்!
பிரியாத உறவு!
இந்த ஜோடிப்புறாக்களுடையது!
ஒன்றாய் பறக்கையிலும்!
ஒன்றின் இறகு !
விசிறித்தரும் காற்றே!
மற்றொன்றின் சுவாசம்!
இவை,!
மூச்சுவிட்ட எண்ணிக்கையினும்!
முத்தமிட்ட எண்ணிக்கை அதிகம்!
இறகுகளின் அசைவைவிட!
இதயங்களின் இசைவுகள் அதிகம்!
மழைநேரத்தில் !
இரண்டுமே தாயாகும்!
ஒன்று மற்றதை அடைகாப்பதில்!
இன்று காலையில் பறந்த!
உண்டிவில் கல்லொன்று!
ஒன்றின் உயிரை பறித்துப்போகஇ!
கண்ணீருடன் தன்னுயிரை உதிர்த்தது !
தனியான மற்றொன்று!
இறக்கும் வரை இணைந்தேயிருக்கும் !
தெய்வீக காதலரின் முன்னால் !
இவையோ இறந்தபின்னும் !
இணைந்திருந்தன!
அன்பிலும் அடுப்பிலும்!
ஒன்றாய்த்தான் கொதித்தன!
பரிமாறப்பட்டதுவும் அப்படியே!!!
-கோகுலன்

அதுவும் ஒருநாள்

துர்ரத் புஷ்ரா
சிநேகிதியே,!
ஞாபகமா அந்த நாள்...?!
நீயும் நானும்...!
மாலை வகுப்புக்காய் !
நடை பயில்வதைப்போல்...!
என் பின்னால் நீயும் உன் பின்னால் நானுமாக!
மறைந்து மறைந்து சென்றோமே...!
நினைக்கும்போது பற்கள் விரிகிறது.!
ஆமாம்,!
கேட்கிறேன் இப்போ நானும் உன்னை-!
ஏன் தானோ நாமும் ஒளிந்தோம்?!
அதிகம் சிரிக்காதே!!
நம் சிரிப்பொலி எட்டும் விண்ணை.எஜமானின் கையிலிருந்து!
சக்கரை கொட்டும் வரை!
காத்திருக்கும் எறும்புகளைப்போல்,!
நம் விடுதி வாயில் திறக்கும் வரை காத்திருந்த!
அந்த ஜீவன்களை ஞாபகமா?!
பார்க்கப்பரிதாபம்...!!
'பொத்தினால் கண்ணை பிடுங்கிடுவோம்' என்று யார் தான் சொன்னார்கள்?நேரத்தை கழிக்க ஒன்றும் இல்லை என்று!
எட்டிப்பார்த்தன அக்கண்கள்.!
பாவம்!!
இச்சூழ்ச்சிகளை அறியாது ஒளிந்தார்கள் இப்பாவைகள்.ஞாபகமா அந்த குட்டிச்சுவரை?!
'மடல் மடிக்காத பார்வைகளின் ஊற்று'-அது!
பெண்களின் ஏச்சுக்களால் சற்று புதையுண்டு கிடக்கிறது.நம் விடுதி பொலித்தீன் மதிலை சற்று உன் கண் முன்னே நிறுத்து...!!
அவர்களின் வில்லாம் - அக்கண்களிலிருந்து வந்த பார்வை அம்புகளால் - அது கிழிந்து!
கிடக்கிறது.!
புதுப்பித்தும் திரும்பத் திரும்ப கிழிந்ததும் ஏன் தானோ?நினைவலையிலிருந்து...!
கவிதை சொன்ன அந்த நாட்கள்,!
நீ ஒளிந்து கிழிந்த என் சட்டை'!
என்றும் நட்பை புதுப்பித்துக்கொண்டே இருக்கும்...!
அதுவும் ஒரு காலம்!!!!!!
!
-துர்ரத் புஷ்ரா அனஸ்

ஞாபக மழை

ஸ்ரீமங்கை
கடந்தநிகழ்வுகள், எதிர்பார்ப்புகள் என சிந்தனை நிகழ்வின் வழியே செல்கிறதோ? இறந்தகாலமும், எதிர்காலமுமற்ற ஒரு நொடியில் நம் பயணத்தை உணர்வதென்பது எத்தகைய அனுபவம்..? ஒரு பயணத்தின் சாட்சியாக இருப்பது ஈரமாக்கிய நினைவுகளேயன்றோ? என்ன பயணம் வாழ்க்கை..ஞாபகங்களன்றி.? !
ஞாபக மழை !
காலங்கள் கரைந்து !
சகதியாய்க் கிடந்த !
ஏதோவொரு வெளியில் !
மிதந்து வந்த நீலப்பேருந்தில் !
என்னை நான் ஏற்றிக்கொண்டதாய் !
இப்பயணம் தொடங்கியது... !
ஞாபகத்தில் சாரலினூடே !
உணர்வுகள் இணைந்து !
சுழித்துச் சுழித்தோட !
கவனமின்றி சக்கரம் பதித்துச் !
செல்லும் இப்பேருந்தின் !
பல சன்னல்களில் !
கண்ணாடிகள் !
நொறுக்கப் பட்டுவிட்டன. !
சில, சாலைகளின் !
அதிர்வுகளுக்குச் சற்றும் !
சம்பந்தமில்லாமல் ஆடிக்கொண்டிருக்கின்றன. !
எத்தனை முறை !
மூடினாலும் திறந்துகொள்வதென்பது !
அவற்றுக்குச் சாத்தியமாயிருக்கிறது. !
பல இருக்கைகள் மாறியமர்ந்தபின் !
எனது இப்போதைய இருக்கையினருகே !
சன்னலை சரியாக மூடிவிட்டேன் !
மழைத்துளிகள் என் தோள்களை !
இனி நனைக்காவண்ணம். !
முன்வரிசையில் திடீரெனத் !
திறந்துகொண்ட சன்னலில் !
தெறித்த மழைத்துளி !
தூவானமாய் என் !
மூக்குக்கண்ணாடியில் !
புகையடித்து, கன்னங்களில் சிலீரிடுகிறது. !
முழுதாய் நனைக்கும் !
பெருமழையை விட !
இத்தூவானம் !
மிகமோசம். !
தொடங்கிய இடத்திலோ !
அல்லது வெகுதொலைவிலோ !
வட்டத்தின் அடுத்த இரு புள்ளிகளைப்போல !
அருகிய வெகுதூரத்தில் !
இறக்கிவிட்டுக்கொண்டேன் !
ஓட்டுனரும் போய்ச்சேர !
ஒடும் பேருந்தும் போய்ச்சேர !
உள்ளிருப்பவனும் போய்ச்சேர.... !
யார் போய்ச்சேருவதற்கென !
யாரை யார் ஓட்டுகிறார்கள்? !
மீண்டும் ஒரு ஞாபக மாரிக்காலத்தில் !
என் பயணம் தொடரும். !
காத்திருப்பேன், !
சாரலில் நனைந்து கனத்தவாறு, !
சன்னல்களின் கண்ணாடிகள் !
நொறுங்கிய நீலப்பேருந்துக்காய் !
அன்றும்.. !
- ஸ்ரீமங்கை

எரிந்த நூல் அகம்

நளாயினி
அகரம் எழுதிய மண்ணில்!
கல்வித்தடம் பதிக்க!
தமிழன் மூச்சாய்!
நிமிர்ந்து நின்ற!
நூல் அகம்!
எரிந்து தவித்த கோரம்.!
தழுவிப்புரட்ட!
துடித்த கைகள்!
சாம்பரை மட்டுமே!
தொட்டழுத கோரம்.!
விழி வர மறுத்த கண்ணீர்!
முளைத்துப்பெருத்த உறுதி!
இனவெறிக்கெதிராய்!
சபதமெடுத்து!
சங்கு முழங்கி!
உயிர்த் தீ வளர்க்கும்!
வேங்கைகள்.!
நற்சிந்தனையை தரமறுத்து!
ஏட்டுக்கல்வியையும்!
பறித்த இனவெறி!
முடிந்ததா?!
தலைக்கனம் பிடித்த!
தமிழன்.!
ஓ! தலைக்கனம்!
கல்விக்கனம்!
வீரக்கனம்.!
இனவெறி அரசால்!
என்ன செய்ய முடிந்தது.!
_____!
நளாயினி

நிழல் நிஜம்

கவிதா. நோர்வே
எது நிஜம்?!
எது நிழல்?!
வெளிச்சம் நிஜமா?!
நிழல்கள் பொய்யா?!
நிழல்களை ஏன் நாம்!
நிஜமற்றவைக்கு ஒப்பிடுகிறோம்.!
வெளிச்சம் யார் கொடுத்தது?!
ஞாயிறு அனுப்பி வைக்கும்!
அற்புத கதிர்களோ?!
நிழல் எங்கிருந்து வந்தது?!
கடன் வாங்கிய கதிர்கள்!
தடைபடும் போது!
தோன்றுவதானே.!
பகல் மாயை.!
இரவு உண்மை.!
வெளிச்சம் பொய்.!
நிழல் மெய்.!
இரவென்பது நிழல்.!
இருட்டென்பதும் நிழல்.!
நிழல் என்பதே நிஜம்.!
-கவிதா நோர்வே

சுடும்வரையில் நெருப்பு

ஆ.மணவழகன்
************************ !
அன்போ, கோவமோ !
உள்ளத்து உணர்வுகளை !
ஒளிகாமல் காட்டிவிட்டால்... !
சிறுபிள்ளைப் புத்தி என்பீர் !
'சிடுமூஞ்சி' இவன் என்பீர்... !
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, !
பக்குவமாய்ச் சொன்னாலும்... !
உதவாது வாதம் என்பீர்.. !
'ஊதாரி' இவன் என்பீர்...! !
தென்றல் அது மாடிக்குச் சொந்தம்... !
தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா? - இனியாவது !
திருந்தச் சொன்னால்... !
திரும்பாதே பக்கம் என்பீர், !
'தீவிரவாதி' இவன் என்பீர்! !
பருத்தியும் பழுக்கும் - இலவம் !
பஞ்சியும் பழுக்கும்! !
பசிபோக்குமா இவையாவும் ! !
பணம் பார்த்துப் பழகாதே - நல்ல !
குணம் பார்த்துப் பழகு என்றால்.... !
மெத்த படித்த திமிரா என்பீர்... !
'மேதாவி' இவன் என்பீர்! !
பிள்ளையார் பால் குடிக்கிறாரா? - அட !
பித்தனே - இங்கே !
பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே...- மனம் !
பரிதவித்துச் சொல்லிவிட்டால்... !
பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்... !
'பைத்தியமோ' இவன் என்பீர்! !
தன்மானம் இழக்கும் செயல் !
தாங்கிக்கொள்ள முடியாது! !
தயங்காமல் கேட்டுவிட்டால்... !
'தலைகீழ்' நடப்பான் என்பீர், !
'தலைகனம்' இவனுக்கென்பீர்! !
கை நீட்டி தாலி அறுப்பான்! !
கண் முன்னே கழுத்தும் அறுப்பான்! !
கோணலாக புத்தி கொண்டு - பல !
கொடுமைகளைச் செய்திருப்பான் ! !
கொதித்தெழுந்துக் கேட்டுவிட்டால்... !
கொஞ்சம் கூட பொறுமை இல்லை... !
'கோவக்காரன்' இவன் என்பீர் ! !
அள்ளி அள்ளி கொட்டிடுவீர் !
அத்தனையும் உண்டியலில்! !
அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு! !
அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும் !
ஆட்கள் இங்கே கோடி உண்டு! !
மனம்கலங்கிச் சொல்லி விட்டால்... !
மாரியாத்தா குத்தம் என்பீர், !
'மடையனே ' இவன் என்பீர் ! !
உதவாததை எடுத்துச் சொல்லி - மக்களுக்கு !
உதவும் வகைச் சொல்லிவிட்டால்... !
ஒட்டு மொத்தப் பெயராக !
'நாத்திகன்' இவன் எப்பீர்... !
நட்பே ஆகாதென்பீர்...! !
நாட்டுக்கு நல்லது நினைப்போன் !
நாத்திகன் என்றிட்டால் ... !
போடா போ...! !
இருந்து விட்டுப் போகிறேன் !
நான்.. !
'நாத்திகனாகவே'

இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே

ராஜா ராஜா
மயிரில் மையிட்டு!
உயிரில் பொய்யிட்டு வைக்கும்!
நாகரீக ஊனப்புத்தி உன் புத்தியென்றால்!
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே!
மூடிக் கிடத்தல்களை விட!
ஆடிக் கழித்தல்களில் அரங்கத்தோடு சேர்த்து!
அங்கங்களுமதிரும் அரைகுறை அம்மண!
அந்நிய கலாச்சார ஒத்தூதி நீயென்றால்!
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே!
வடித்துத் தீர்த்துக் களைத்த!
இல்லாதார் வியர்வையுறிஞ்சி!
உன் பித்தட்டிட்டு நிரப்பும்!
உயிர் பேணா உயர் ஜாதி நீயென்றால்!
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே!
உன் ஒத்தார்களுக்கு உச்சங்களும்!
பின் மத்தார்களுக்கு மிச்சங்களுமெனும்!
மூர்க்க முதலாளி ஜாதி நீயென்றால்!
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே !
வெண் பால் சுரக்கும் தாய் முலை விட்டு!
வன் கள் வடியும் அந்நிய முலை தேடியோடும்!
அறிவு கெட்ட அந்நிய ஆதரவன் நீயென்றால்!
இருந்து போகிறேன் பட்டிக்காட்டானாகவே!
இறந்தும் போகிறேன் பட்டிக்காட்டானாகவே.!
-ராஜா ராஜா