தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தமிழன்

இ.இசாக்
சாதி கலவரம் !
கேட்பாரற்று கிடக்கிறது !
மனிதநேயம். !
0 !
இந்து முசுலீம் கிறித்து !
கீழ்சாதி மேல்சாதி..செருப்பு !
பிணம். !
0 !
தமிழன் தான் !
தமிழனிடம் !
“ஹலோ“ !
0 !
தேர்தல் காலம் !
கையில்மட்டுமா முகத்திலும் !
மை. !
0 !
நானே பரவாயில்லை !
கழுதை சிரிக்கிறது !
ஆங்கிலப்பள்ளி செல்லும் குழந்தை. !
0 !
குறிப்பு:: !
விரைவில் வெளிவரவிருக்கும் “மழை ஓய்ந்த நேரம்“ தொகுப்பிலிருந்து கவிதைகளை அனுப்பியமைக்கு கவிஞருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்

மடல்

மழை காதலன்
அன்புள்ள மகளுக்கு,!
புன்னகைக்கும் பூவே நலமா....!
உன் சின்ன சின்ன சிரிப்புகளோடும்!
சிதறிக்கொண்டிருக்கும் நினைவுகளோடும் !
தூரமாய் நான்....!
!
நீ சாய்ந்துறங்கும் தோள்களும்!
எதிர் தருணங்களில் நீ இதழ் பதித்த!
கன்னத்தின் ஈர சுவடுகளும்!
மார்பு சூட்டில் கண்ணுறங்கிய தருணங்களுமாய்!
தொடர்கிறது என் நொடிப் பொழுதுகள்....!
பால் சோறு உண்ணும் போது பங்கு !
வைக்கும் செல்ல பூனைக்குட்டி சுகமா?!
இல்லத்திற்கு யார் வரும் போதும் உறுமலோடு!
உனை அழைக்கும் அன்பு நாய்க்குட்டி சுகமா?!
பூ பறிக்கும் பெண்களிடையே சிரிக்கும் மலரை!
தொடாமல் ரசிப்பாயே அந்த பூந்தொட்டி சுகமா?!
ஜன்னலில் வந்தமர்ந்து உன்னோடு கதை பேசும்!
குருவிக் கூட்டங்கள் சுகமா?!
வேப்ப மரத்து அணில் சுகமா?!
வெயில் விளையாடும் முற்றம் சுகமா?!
தண்ணீர் தெளித்து கோலமிட்டு!
அழகு பார்க்கும் வாசல் சுகமா?!
உன் உறக்கத்தோடு வரும் கனவுகள் சுகமா?!
அனைத்தும் சுகம் தானே!!!!!
உனக்கு பிடித்த பாடல் வானொலியில்!
நீயும் வாயசைத்து பாடுகிறாய் இங்கு...!
நீர் குடிக்கும் போதெல்லாம் நினைவில் வருகிறது!
ஜி என நீ வைத்த புனைப்பெயர்...!
வீடு மாறி விட்டதாய் கேள்விப்பட்டேன்!
எப்போது வரப்போகிறாய் நம் வீட்டிற்கு...!
கூடு கட்டும் பறவை சேகரிக்கும்!
சுள்ளிகள் போல சிறிது சிறிதாய் சேர்க்கிறேன்!
உனக்கான என் வார்த்தைகளை...!
எப்போதும் நாம் விளையாடும்!
கண்ணாமூச்சி போல நீ ஒளிந்து கொள்கிறாய் !
என் கவிதைகளின் பின்னால்...!
உன்னை கண்டு பிடிக்கும் பொழுதுகளில்!
காணாமல் போகிறது என் கவிதை...!
என்னிடம் இருக்கும் வெற்று தாள்களுக்கு!
கனவுகளால் நிரப்பும் கவிதைகளை தந்தவள் நீ...!
இறுதியாய் ஒன்று..,!
நான் அங்கு வரும் வரையோ!
நீ இங்கு வரும் வரையோ!
புன்னகையோடு காத்திரு!
என்னை விட்டு உன் தாய் உயிர்த்திருப்பது!
உன் புன்னகையில் மட்டுமே...!
பிரிவுகள் சுகம் தான்!
காத்திருத்தல் தவம் தான்!
நான் இங்கு காத்திருப்பதற்காக!
பிரிந்திருப்பவன்....!
இப்படிக்கு,!
கை கோர்த்து நடை பழக்கும் நினைவுகளோடு!
கனவுகள் சுமக்கும்!
மழை காதலன்

ஐஸ் பழம்

அக்மல் ஜஹான்
தெருக்களில் சுற்றும்!
ஐஸ் பழ ஹோன்களை!
சில்லறைகளோடு துரத்தும்!
ஒரு இறந்தகாலம்.........!!
முட்டாசி கலர் பழத்துக்கு!
முண்டியடித்து!
ஒழுக ஒழுக மல்லுகட்டி!
தின்றதும் திங்காததுமாய்!
கடைசியில் காம்பிலிருந்து கழன்று!
மண்ணில் விழும்...!!
ஒரு கோடி துயர் விதைத்து......!
வாழ்வும் அப்படித்தான்......!!!
குச்சியில் எஞ்சியிருக்கும்!
பச்சை தண்ணி பழம் மாதிரி!
ஏதுமற்று கிடக்கும்...!
எப்போதோ!
விழுந்து விடுமோவென்ற பயங்களோடு

இரயில் சிநேகம்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
புத்தக இரவல் கோரல்களிலும்!
அசௌகரியச் சூழ்நிலைச் சீர்கேட்டின் நொந்தல்களிலும்!
முளையிட்டுத் தொடங்கும் இரயில் சிநேகம்!
அடுத்துப் பின் பெயர் பரிமாற்றங்கள்!
எங்கே எதற்காய் எப்பொழுதென்ற!
ஒவ்வொருவருக்கான பயணப் பிரயாசைகள்!
அப்படியா! அங்கேயா!!
எதிர்பட்டவரின் தனக்குண்டான ஏரியாத் தொடர்புகளை!
இழுத்து வளைத்து நுழைத்து!
பேச்சிழுக்கும் கைங்கர்யங்கள்!
பின் இருந்ததை விடுத்து இல்லாததை எடுக்கும்!
சிறிய மற்றும் பெரிய தத்தமது உண்டி மாற்றங்கள்!
வழிப்படும் வழிகளையும்!
அப்பகுதி மொழிகளையும்!
அவரவர் ஆய்வுகளில் நிறைதல்களும் குறைதல்களும்!
நிறைந்து கிடக்கும் உறவுக் குவியல்களில்!
புதியதோர் மாமா அத்தையை!
மழலைக்குச் சொல்லிப் பின் கேட்டு!
மகிழ்ச்சியில் மனங்கள் குதூகலிட்டு!
கண்டிப்பாய் தன்னில்லம் வர வேண்டுமென்றும்!
இயல்கையில் தானும் வருவதாகவும்!
உறுதி மொழிகள் கூடிய முகவரிகள் மாற்றி!
என்னதான் உறவுக் கீதமிசைத்தாலும்!
சலவையில் சிக்குண்டுச் சீரழிந்த!
அச்சிதிலத் துண்டுச்சிட்டு காண நேர்கையில்!
நெற்றி சுளிக்கவே செய்கிறேன் யாரென்று!!
!
-எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

மீண்டும் உன் மடி

பாரதி ஜேர்மனி
இடர்கள் வந்து சூழ்ந்தபோதும் !
மிடியில் நானும் வீழ்ந்த போதும் !
மிதந்த விழிநீர் வழிந்த போதும் !
மிஞ்சும் வார்த்தை அம்மா தானே !
அன்பு என்னும் தளையிட்டு !
அகிலத்தையே அரவணைக்கும் !
தாய்மை என்னும் தெய்வீகத்தால் !
தவமாய்க் கிடைத்த என் தாயே !
சேயாய் பிறந்து மண்மீது !
மீண்டும் உந்தன் மடி தவழ்ந்து !
து£ய்மையான உன் அன்பில் !
துளிர்த்து வளர வரம் கேட்பேன் !
மீளாத்துயிலில் நான் ஆளும்போதும் !
மீண்டும் உன் மடி உறங்கும் குழந்தையாய் !
!
பாரதி ஜேர்மனி

கடவுள் அற்ற நிலம்

கிருத்திகன்
சிறகில்கனத்தபறவையின்!
துயரத்தை!
காலம் தின்ற!
மரணக்கூடுகள் உதிர்த்தன!
நொதிந்துபோன!
கனவுகளின் வெளியில்!
சிதறிய ரத்தம்!
கனவின் தாகத்தை களுவி!
விலகிக்கொண்டது!
கடவுள் அற்ற வெளியில்!
யன்னல் உடைத்த நிலம்!
விரும்பிக்களித்த!
இரவின் நினைவினை!
பெருத்த ஏவறைகளால்!
நிரப்பிக்கொண்டது

தமிழ்பேசும்.. பே(தா)ய்நாடு.. பசி

முனைவென்றி நா சுரேஷ்குமார்
தமிழ்பேசும் மனிதஜந்து!..பே(தா)ய்நாடு!!!.. பசி...!
01.!
தமிழ்பேசும் மனிதஜந்து!!
--------------------------!
குடிநீர் வராவிட்டாலும்!
குடிநீர் வரி...!
தொடர் மின்சாரத்தடை என்றாலும்!
மின்சார வரி...!
வாடகைவீடு என்றாலும்!
வீட்டுவரி...!
விலைவாசி ஏற்றத்தோடு!
போராடும் அளவுக்கு!
வருமானமில்லை என்றாலும்!
வருமானவரி...!
இருசக்கர வாகன!
எரிபொருளின் விலைமட்டும்!
உயர்வதைச் சமாளிக்க முடியாமல்!
அவசரத்தேவைக்குமட்டும் பயன்படுத்த!
சாலைவரி...!
வறண்ட விவசாயவயல்மட்டுமே!
சொத்து என்றாலும்!
சொத்துவரி...!
என வரிப்பணத்தையே!
இலவசத் திட்டங்களாக்கி!
சமுதாயத்தொண்டு!
செய்வதாகச் சொல்லிக்கொண்டு!
வாக்கு வங்கிகளை!
பலப்படுத்தும்!
ஊழல் ‘அம்மா’க்களையும்!
பெருச்சாளி ‘ஐயா’க்களையும்!
குண்டு வைத்துக் கொல்லத்!
துணிவில்லாத கோழைகளாய்!
தமிழகத்தில் வாழும்!
தமிழ்பேசும் மனிதஜந்துக்களில்!
நானும் ஒருவன்!!!!!
!
02.!
பே(தா)ய்நாடு!!!!
-------------------!
பணக்காரர்கள் பயன்படுத்தத்!
தேவையே இல்லாத!
பேருந்துகளை!
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்!
ஏழைஎளியவர்களும்!
வசதி குறைந்த!
நடுத்தர வர்க்கத்தினரும்!
மட்டுமே..!!!
இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்!
இருகைகளின் உதவியோடு!
நின்றபடியே பயணித்து!
சேருமிடம் செல்லநினைக்கும்!
அன்றாடங்காய்ச்சி எவனும்!
சொகுசுப்பேருந்துகளையோ!
குளிர்சாதனப்பேருந்துகளையோ!
எதிர்பார்க்காத சூழலிலும்!
உலக வரலாற்றிலேயே!
பயணச்சீட்டுகளின் மூலம்!
பகல்கொள்ளையடிக்கும்!
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட!
போக்குவரத்துக்கழகம் அமைந்த!
பெருமைமிக்க(?????????????)!
எங்கள் பே(தா)ய்நாடு!
இந்தியா தான்!!!!!!
03.!
பசி...!
-------------!
விளைநிலங்களெல்லாம்!
விலைநிலங்களாகிப் போனதால்!
சுவரொட்டிகளைக்!
கிழித்துத் தின்று!
பசியாறிக் கொள்கின்றன!
எங்கள்ஊர்ப் பசுக்கள்

இயல்பினை இழக்கையில்

இளங்கோ
தொலைதூரத்துப் பயணங்கள் !
எப்போதும் !
மனதிற்கு !
கிளர்ச்சியைத் தருபவை !
நேரே காணவிருக்கும் !
மனிதர்களின் !
அன்பின் நினைவுகளுக்கு !
பெருந்தெருக்களைத் தாண்டி !
விரியும் !
நதிகளும் பெருங்காடுகளும் !
சுவை சேர்க்கும் !
'இரட்சிக்கும்' அமெரிக்காவும் !
இந்தியச் சினிமாவும் !
இல்லாமல் எந்தப் பயணமும் !
நிறைவேறியதாய் !
நினைவினில்லை !
அயல்வீட்டுக்காரி !
வேற்றினக்காரனோடு ஓடிய விந்தை !
பையன்களோடு !
பிருஷ்டம் உரசியபடி !
திரியும் தமிழ்ப்பெண்களின் திமிர் !
இப்படி... !
இந்தமுறை !
கூட பயணித்தவரின் !
கதைகள் முடிவற்ற கிளைகளாக விரிய !
நான் திணறினேன் !
முடியும் திசையின் தொலைவு தெரியாது !
வயதானவர் என்றபோதும் !
விருந்தாளியாக வந்தவர் !
பக்கத்து வீட்டுக்காரரின் !
கதை அளந்தபோது !
இப்படிப் பேசுவதென்றால் !
இங்கே வரவேண்டாமென !
முகத்திற்கு நேரே !
முன்னெப்போதோ சொன்னது !
நினைவினில் எழுந்தது !
எனினும் !
எதற்கும் உடனே !
எதிர்வினை செய்யும் !
பொறுமையற்றவன் !
எனும் !
அப்பாவின் முணுமுணுப்புக்களை !
இந்தமுறையாவது !
பொய்யாக்கும் முனைப்புடன் !
நான் !
செவிகளாக மட்டுமே ஆயினேன் !
என் மௌனம் !
பயணித்தவருக்கு !
உற்சாகம் தந்திருக்கக்கூடும் !
தான் கொடுத்த !
பெரும் கடனையும் !
மீளப்பெற முடியாத !
இயலாமையையும் !
இனி ஒரு வாழ்வு !
இயல்பாய் அமைதல் கடினமெனவும் !
துயரத்தை விரித்தார் !
பெரும் நாவலைப்போல !
'கடன் வாங்கியவன் !
மூன்றாவதும் பெத்துப்போட்டு !
இலங்கைக்கும் !
சுற்றப்போய்விட்டான் !
நான் !
காசில்லாது உழலும் பிச்சைகாரன் !
ஒரு டொலர் கோப்பிகுடிக்கக்கூட !
எத்தனை முறை யோசிக்கவேண்டும் !
எங்கிருந்தாலும் !
அவன் உருப்பப்படமாட்டான்' !
கவலை சாபமாய் விகசித்தது !
இளைப்பாற நின்ற !
ஓர் கோப்பிக்கடையில் !
நாமெல்லாம பலவீனர்கள்தான் !
எப்போதாவது சறுக்கிவிழுபவர்கள்தான் !
என்று சமாளித்தபடி !
ஏதோவெல்லாம் சொல்லி !
பயணியின் சோகம் கரைக்க முயன்றேன் !
செல்லவேண்டிய நிகழ்விற்கு !
ஒரு மணித்தியாலயம் தாமதாய் !
வந்ததைக்கூட !
அசட்டை செய்யாது !
விடைபெறும்போது, !
'தம்பி !
படிப்பு முடிந்து !
இந்த நகரிற்கு !
இடம்பெயர்வதாய் இருந்தால் சொல்லும் !
என்ரை மூன்றாவது வீடு !
இங்கை சும்மாதான் கிடக்கு !
வாடகைக்கு வந்து குடியமரலாம்' !
என்னைப் பார்த்துச் சிரித்தது !
எனது சுயம். !
!
இளங்கோ !
2003.06.09

குளம்படி சப்தங்கள்.. வீதிவழியே.. வெளிச்ச

முனைவென்றி நா சுரேஷ்குமார்
குளம்படி சப்தங்கள்.. வீதிவழியே ஒரு பயணம்.. வெளிச்ச தேவதை!
01.!
குளம்படி சப்தங்கள்!
--------------------------!
ஆளரவம் எதுவுமில்லை!
நள்ளிரவு நிசப்தம்!
கேட்டுக்கொண்டே இருக்கின்றன!
குளம்படி சப்தங்கள்!
காதுகளில்...!
எந்தத் திசைநோக்கியும்!
செல்லலாம்!
அந்தக் குதிரை!
கடிவாளமும் அணிந்திருக்கலாம்!
காற்றாய் பறக்கும்!
அந்தக் குதிரை!
கனமழை பொழிவதற்காய்!
கூடிய மேகங்களை!
கலைத்துவிட்டும் போகலாம்!
அந்தக் குதிரை!
தூக்கத்திலிருந்து பலரை!
தட்டியெழுப்பியிருக்கலாம்!
அதன் கணைப்பொலி!
நிச்சயமாய் ஒருவன்!
அமர்ந்திருப்பான்!
அதன்மேல்...!
என்ன அவரசம்!
அந்தக் குதிரைக்கு?!
கேட்டுக்கொண்டே இருக்கின்றன!
குளம்படி சப்தங்கள்!
காதுகளில்...!
02.!
வீதிவழியே ஒரு பயணம்!
-------------------------------!
வந்து போனதற்கான !
தடயங்கள் ஏதுமின்றி !
அமைதியாய்க் கிடக்கின்றது !
அந்த வீதி!
மணம்வீசி!
அடையாளப்படுத்திக் கொண்டிருக்கின்றன !
அந்த மலர்கள் !
துள்ளித் திரிந்த !
மழலைகளும் !
நின்று கவனிக்கின்றன !
விபரமேதும் அறியாமல்...!
கண்கள் கலங்கும் !
வானம் !
வீதிவழி மௌனமாய் !
ஒரு பயணம் !
நெஞ்சமெங்கும் !
பிரிவின் வலி!
நெருப்பை அணைக்க முயன்று !
தோற்றுத்தான் போகின்றன!
அந்தக் கண்ணீர்த் துளிகள் !
03.!
வெளிச்ச தேவதை!
-------------------------!
ஒவ்வொருநாள் உறக்கத்திலும்!
கனவில் நீ !
வந்துவிடுகிறாய் என்றபோதும் !
எந்தக் கனவாலும் !
தந்துவிட முடியாது!
அதிகாலை என்னை தட்டியெழுப்பும் !
தேவதையான உன்னை...!
-----!
நீ குட்டிப்பாப்பாவாய் !
என் அத்தையின் வயிற்றில் !
கருவானபோதே !
உருவாகிவிட்டது !
நமக்கான காதலும்...!
-----!
நான் கண்மூடி உறங்கியபின் !
என் கனவுலகில் !
எப்போதும் இருள்சூழ்ந்ததில்லை. !
அதோ தூரத்தில் தெரிகிறாள் !
என் வெளிச்ச தேவதை !
-----!
படிக்கும்போதும் !
வீட்டுநினைவு வந்ததாய்!
சொன்னாய் நீ.!
அந்த நூலக வாசலில்!
ஆறுதல் சொன்னேன்.!
நீ அன்பாய் பார்த்த!
அந்த நொடியில் !
விதையாய் விழுந்து !
விருச்சமானதடி !
நம் காதல் !
-----!
தோழியென்றே பழகிவந்தாய் !
யாரையாவது காதலிக்கிறாயா?'!
என்றாய்.!
இல்லையே' என்றேன்.!
பொய் சொல்லாதே' என்றாய்.!
நிஜமா இல்லப்பா' என்றேன்.!
அதான் !
என்னைக் காதலிக்கிறாயே...'!
சொல்லிவிட்டு !
ஓரக்கண்களால் முறைத்தவாறே !
எதிர்த்திசை நோக்கி !
மெல்லமெல்ல தவழ்ந்தாய் !
வேற்றுகிரக வாசியாக !
மாறிக்கொண்டிருந்தேன் நான்.!
-----!
என் வீட்டில் தவழ்கிறது!
என் மகளென்ற பெயரில் !
ஒரு பொம்மைக்குட்டி !
உன்னைப் போலவே...!
----!
நம் குழந்தையை !
கொஞ்சும் சாக்கில் !
என் மீசையை பி(க)டித்திழுத்து !
விளையாட ஆரம்பித்தாய்.!
உனக்கு !
இன்னொரு குழந்தையாய் !
மாறிப்போனது !
என் மீசை!
----!
வாழைக்கன்று மாங்கன்று !
மல்லிகைக்கொடி ரோஜாச்செடி !
என எனக்காக !
நீ வளர்த்ததைப் போலவே !
நீ பி(க)டித்திழுத்து விளையாட !
உனக்காக வளர்த்து வைத்திருக்கிறேன் !
என் மீசையை...!
----!
இனிமேல் உன்னை நினைத்து!
கண்ணீர் விடப்போவதில்லை நான்!
என்னுள் இருக்கும் நீ!
என் கண்ணீர் வழி!
கரைந்து விடுவாய் என்பதால்...!
---!
உன்னை !
செல்லங்கொஞ்சி அழைப்பதால் !
நீ என் !
செல்லமாகி விடவில்லை.!
நீ செல்லுமிடமெங்கும்!
என் நினைவுகள் சுழல்வதால் தான் !
நீ என் !
செல்லமாகி விட்டாய்!
----!
உன்னைத் தேடி வேறெங்கும் !
அலையப் போவதில்லை !
நான்.!
கண்கள் மூடி !
எதைப் பற்றி யோசித்தாலும் !
முண்டியடித்துக் கொண்டு !
முதலாவதாய் வந்து நிற்கிறாய் !
நீ

நினைவுகளின் சுமை

க.அருணபாரதி
நினைவுகளின் சுமையால்!
நகர்கிறது வாழ்க்கை..!
நிலைக்காது எனத்தெரிந்தும்!
அடங்காத வேட்கை..!
இமைகளின் துடிப்போடு இயங்கிடும் நாட்கள்..!
இனியவள் பிரிவாலே!
வழியெங்கும் முட்கள்..!
வனங்களில் திரிகின்ற!
விலங்குகள் போல!
மனம் அலைகிறதே!
உன்நிழல் தேடி..!
சினங்களை மறைத்தேன்!
சிரித்தேன் திரிந்தேன்!
கனவினில் உன்னோடு!
கதை பேசியபடி..!
துன்ப வெயிலில்!
கால் சிவந்தபோது!
தூரிகையாய் மனதை!
வருடிய கனவே..!
இன்பத் தமிழிலே!
உனைபாடித் திரிவேன்!
இருந்தாலும் இறந்தாலும்!
இதுவென் உணவே...!
!
-க.அருணபாரதி