தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சுவாசலயம்

புதியமாதவி, மும்பை
மௌனவெளியில் !
என் இருத்தலை !
நிச்சயப்படுத்தும் !
சுவாசத்தைப்போல !
சத்தமின்றி ஒலிக்கிறது !
காற்றுடன் கைகோத்த !
சங்கீதம். !
செவிப்பறைகள் தீண்டாத !
ஒலியின் அலைகளில் !
எழுதப்பட்டிருக்கிறது !
இதன் சங்கீத மொழி. !
எப்போதும் என்னுள் இசைக்கும் !
பின்னணி இசையாய் !
என் சுவாசலயத்துடன் !
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும் !
உன்னத ராகத்தில் !
பாடிக்கொண்டிருக்கிறது !
அந்தப் பறவை. !
பெயர் தெரியவில்லை. !
பெயரிடவும் விருப்பமில்லை. !
எனக்காகப் பாடுகிறதா? !
எல்லாமே கற்பனையா? !
விழிதிறக்க அச்சப்பட்டு !
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது !
வெளிச்சத்தின் கைகள். !
கண்விழித்தால் !
கண்ணில் பட்டுவிடும் !
பட்டுப்போன மொட்டைமரங்களின் !
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு. !
------------------------------ !
புதியமாதவி

கனவின் துண்டு

டீன்கபூர்
கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
துண்டு துண்டுகளாக !
அந்தரத்தில் தொங்கும் என் இளமை!
பழுக்கத் தொடங்கிவிட்டது.!
ஒரு மயிர்!
கோழி கிளறிய என் குப்பைக்குள்!
மின்னியது.!
நெஞ்சுக்குள் உடைந்த!
மலை முகட்டின் பாறை!
வேர்விட்ட நிலையிலே!
அண்ணார்ந்து பனிப்படரின் வீதியில்!
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்!
கனிந்த மாம்பழத்தின் பக்கம்!
அணில் ஆட்கொள்ளவில்லை!
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.!
ஒரு பாதி இரவுக்குள்!
இன்னும் என் கனவு வாயு கலையாத வயிறு.!
கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
-- டீன்கபூர்!
திண்ணைக் கவிதைகள் தொகுப்பிலிருந்து

மீண்டும் பிறந்திருப்பேன்

எசேக்கியல் காளியப்பன்
உன்றன் அருகில் வந்தேன் – உனது!
உணர்ச்சிக் காற்றேடுத்தேன்!
இன்றும் வாழ்ந்திருப்பேன் –என்!
இதயம் நன்றிசொலும்!!
உன்முகம் அருகில் கண்டேன் – அது!
உதிர்த்த பூக்கள் கொண்டேன்!!
என்மனம் மணக்குதடீ –அங்கே!
இன்றுமுன் பூசையடீ!!
காந்த விழிகள் கண்டேன் ! –எனக்குள்!
காயங்கள் ஆறுதடீ!!
மாந்த அருகில்வந்தேன் –இதழ்கள்!
மறுக்கப் பசித்திருப்பேன்!!
சேர்ந்த கருங்கோந்தல்- எனக்குள்!
சிலிர்ப்பைத் தந்தடீ!!
நேர்ந்த கவிதைகளை –உலகும்!
நித்தம் படிக்குதடீ!!
மீந்த நாட்களிலே –உந்தன்!
மெல்லிய நினைவுகளைச்!
சோர்ந்தே விழும்வரைக்கும் –நெஞ்சில்!
சுகமெனப் பூட்டிவைப்பேன்!!
மீண்டும்,உன் நாள் வரவே –இறையை!
வேண்டித் தவமிருப்பேன்!!
மாண்டும்,அந் நினைவுகளில் –நான்!
மறுபடிப் பிறந்திருப்பேன்!

என்ன தான் தேடுகிறான்???

ரம்சின் நிஸாம்
இயந்திர வாழ்க்கையின்!
இயக்கத்தில் மனிதனின்!
இதயம் இயங்க மறுத்துவிட்டதில்!
பிழை யாரிடம்?!
பணத்திடமா?!
பதவியிடமா?!
ஏக்கங்களை மறந்து விட்டு!
தூக்கங்களை தொலைத்துவிட்டு!
துரத்திக் கொண்டிருப்பது!
காசையா?!
கல்வியையா?!
எல்லோருமே மறந்து விட்டோம்!
அந்த அழகான நாட்களையும்!
அமைதியான நிமிஷங்களையும்!
நகர வாழ்க்கையில்!
நரக வாழக்கை தான் தெரிகிறது.!
எல்லாப் புன்னகைகளும்!
எதையோ நாடுகிறது!
எல்லாப் பார்வைகளும்!
ஆதாயத்தின் அருவைகள் தான்..!
இருப்பாதோ ஒரு வாழ்க்கை!
அதையும் தொலைத்து விட்டு!
இருண்ட காண்டத்துக்குள் இன்பம்!
தேடுகிறான் மானிடன்.!
வசீகரமான இளமையை!
காலத்தின் கைப்பிடிக்குள்!
கருவருத்து விட்டு!
வயோதிபத்தின் போது முயல்கிறான்..!
இளமையாய் இருக்கக் கொஞ்சம்…

தனிமையின் பிடியில்

மதியழகன் சுப்பையா
மதியழகன் சுப்பையா !
மும்பை !
ஒன்று !
புத்தகங்களை !
புரட்டியாயிற்று !
தொலைக்காட்சியின் !
அலைவரிசைகளையும் !
அலசியாயிற்று !
நான்கைந்து முறை !
தேனீர் குடித்தாயிற்று !
கோட்டோவியத்தில் !
உருவம் எழுத !
முயற்சித்தாயிற்று !
இறுதியாய் !
கவிதை எழுத அமர்ந்தேன் !
வெறுமை நீங்கி !
இருமையாகிப் போனேன். !
இரண்டு !
கிறுக்கல்கள் !
கிழிசல்கள் !
சிதிலமடைந்த சுவர்கள் !
ஓவியப் பரப்பாய் விரிகிறது. !
சிறிய அசைவுகள் !
நிச்சய விணைகள் !
அற்ப பொருட்கள் !
உன்னத இசையாய் !
ஒலிக்கிறது. !
தட்டப் படாத கதவு !
ஊமையான தொலைபேசி !
வெளிச்சமில்லா வீடு !
அடிக்கடி திறந்து !
மூடப்படுகிறது !
கழிப்பறையின் கதவு. !
மூன்று !
இன்று காலை !
பேரூந்தில் பார்த்தவள் !
தொடங்கி !
பட்டியல் முடிந்து போகவே !
தளர்ந்த நடையுடன் !
வண்ண அட்டை !
வார இதழ் தேடுகிறேன் !
உருவங்கள் வேண்டி. !
நான்கு !
ஒற்றை பிம்பம் காட்டி !
அலுத்துக் கொள்கிறது !
நிலைக் கண்ணாடி. !
இளையராஜாவின் !
இசையில் பிசிரடிக்கிறது. !
ஆயுள் தூக்கம் !
தூங்கியாயிற்று. !
புழுங்கி நாறுகிறது !
உடலும் உடையும். !
சுவர்கள் நெருங்க !
பரப்பு குறைகிறது. !
காற்று வரவே !
கதைவை திறந்தேன். !
கூறை அகற்றினால் !
ஒளியும் வருமே. !
ஐந்து !
எலிகளுக்கு !
விசம் வைப்பதில்லை. !
ஒட்டடை அடித்து !
காலங்களாகி விட்டது. !
கரப்பான்களுக்கும் !
பாட்சைகளுக்கும் !
மருந்து தௌ¤ப்பதில்லை. !
கொசுவத்திகள் !
கொளுத்துவதே இல்லை. !
ஆனாலும் !
எப்பொழுதாவது !
வாசல் வழி !
எதிரொளி மட்டுமே !
எட்டிப் பார்க்கிறது

ஒற்றை மொக்கும் தொடர்ந்த எண்ணங்களும்

இப்னு ஹம்துன்
அன்றைக்குப் பார்த்தேன்!
தனித்ததொரு ஒற்றை மொக்கு!
தெருவில்.... புழுதியில்....!
அவ்வழி சென்ற பூக்கூடையிலிருந்து!
தவறி விழுந்திருக்குமோ..!
அலங்காரக் கூந்தலில்!
அழுந்தியிருக்கப் பிடிக்காமல்!
வெளியேறியதாயிருக்குமோ...!
ஒருவேளை...!
அங்கே செல்கின்ற!
இறுதி யாத்திரையின்!
இரங்கல் துளியோ...!
எப்படியோ....!
பறிக்கப்பட்டபின்!
பறிகொடுக்கப்பட்டதாய் இருக்கும் அது!!
!
- இப்னு ஹம்துன்!
-------------------!
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

ஒன்று பட்டால்

ராமலக்ஷ்மி
உள்ளத்தை உணர்த்துகின்ற!
ஒலிவடிவே மொழி என்றால்!
உலகம் உய்த்திருக்க!
ஒருவழிதான் ஒருமொழிதான்!
அதுவே அன்புமொழி.!
வாழ்க்கைக்கு வழிகாட்டும்!
ஒளிவிளக்கே மதம் என்றால்!
வையகத்தை வாழ்விக்க!
'ஒன்றேகுலம் ஒருவனேதேவன்'!
என்பதுவே வேதம்.!
மொழியின் ஒலிவகை!
பலவாக இருப்பினும்!
பண்பெனும் பாதையிலே!
அம்மொழிப் பாதங்கள்!
பயணிக்கையிலே!
பாஷைகளின் ஓசைகள்யாவும்!
நேசத்துடன் இனிமையாய்!
தேசிய கீதத்துக்கு!
இசை அமைத்திடாதோ!!
மதங்களிலே இந்துமதம்!
எடுத்துரைக்கும் அறநெறிகளும்;!
விவிலியம் கற்பிக்கும்!
கருணவடிவாம் கர்த்தரின்!
வாழ்வும் போதனையும்;!
குர்ஆன் உரைக்கும் உயர்நெறிகளும்;!
மாற்றானை நேசிக்கவும்-!
மனசாட்சிக்கு பயப்படவும்-!
மனிதநேயம் வளர்க்கவும்-!
வலியுறுத்தும் வழிகாட்டிகளாய்த்தான்!
விளங்குகின்றன திகழுகின்றன!!
சமுத்திரத்தில் சங்கமமாகும்போது!
சகலநதிகளின் சிறப்புச் சரித்திரங்களும்!
சமத்துவமாகி விடுகின்றன.!
ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கிடையே-!
அந்நதிகளின் அமுதநீர் இன்னதென்று!
பிரித்தறிந்திட இயலுகிறதா?!
வார்த்தைகளால் வர்ணிக்க வாராது!
விவரிக்க விவரிக்க வியப்பேற்றும்!
வரலாற்றுச் சிறப்புகள்!
ஒவ்வொரு மொழிக்கும்!
ஒவ்வொரு மதத்துக்கும்!
உண்டென்றாலும் கூட!
இந்திய சரித்திரமெனும்!
மகா சமுத்திரத்தில்!
சங்கமிக்கையில் அவற்றினிடையே!
பேதம்பார்ப்பது பேதமையல்லவா?!
கடலிலே கலந்திட்ட மழைத்துளியைக்!
கண்டெடுப்பது ஆகிற காரியமல்ல.!
அன்புக்கடலிலே மக்கள் கலந்துவிட்டால்!
அவர்களைப் பிரிப்பது சுலபமல்ல.!
பாஷைகள் பலவானால் என்ன ?!
மதத்தால் மாறுபட்டால் என்ன ?!
பார்க்கின்ற பார்வையிலே!
பாசத்தைப் படரவிட்டால்!
வாழ்கின்ற வாழ்க்கை வசந்தமாகுமே!!
தேசத்தில் ஒற்றுமையுணர்வு!
தேனாறாய் ஓடுமே!!
எந்தத்தாயும் தன் குழந்தைகள்!
ஒன்றுபட்டு வாழ்வதை!
விரும்பிடல் இயல்பு.!
பாரதமாதாவும் அதற்கில்லை!
பாருங்கள் விதிவிலக்கு.!
நம்போல வேற்றுமையிலே!
ஒற்றுமைகாண வேறெருதேசம்!
இனிப்பிறந்துதான் வரவேண்டுமெனப்!
பெருமிதமாய் பேசிப்பூரித்திருந்த!
பொழுதுகள் யாவும்-!
இன்று கனவுக்காட்சிகளோ எனக்!
காற்றோடு காற்றாய்க் காணமல்!
போய்க் கொண்டிருக்கின்றன.!
மனம் வலித்தாலும்!
மறுக்க முடியவில்லையே!!
கணக்கிட்டால் நாம் களித்திருந்த!
கணங்களை விடவும் மனம்!
வலித்திருந்த கணங்கள்தாம் அதிகம்.!
அவர் தம் மொழியினரே;!
ஆயினும் தம்மதம் இல்லையென!
அடித்துக் கொள்கிறார்.!
அவர் தம் மதத்தவரே;!
ஆயினும் தம்சாதி இல்லையென!
வெட்டி வீழ்த்த விழைகிறார்!
சுட்டுத் தள்ளவும் துணிகிறார்.!
இன்னாரின் தொழில் இதுவென்றறிய!
அன்னாளில் தோன்றியதே சாதி.!
திறமையிருந்தால் எந்தத் துறையிலும்-!
எவரும் பிரகாசிக்க வாய்ப்புக்கள்!
வரிசைகட்டி நிற்கின்ற இந்த!
இருபத்தோராம் நூற்றாண்டிலும்!
சாதி எனும் சங்கடத்தைப்!
பாரமாய்ச் சுமந்து திரியவேண்டுமா ?!
நீ இந்தஇனம் நான் அந்தஇனமென!
உயர்வுதாழ்வு பார்ப்பது நம்மைநாமே!
இழிவுபடுத்துதல் ஆகாதா?!
'சுதந்திரம் ' என்ற குறிக்கோளுக்காக!
அன்று ஒன்றுபட்டு நின்றதால்தான்!
'இந்தியா 'வை முழுமையாகப் பெற்றோம்.!
இன்று சிதறிவிடுவோமோ என்கின்ற!
அச்சம்ஒன்றே மிச்சமாகி நிற்கின்றோம்.!
சுனாமிநம்மைச் சூறாவளியைப் போலச்!
சூரையாடிய போது மொழிம்தம்இனம்!
மட்டுமின்றி தேசமும் தாண்டிய!
மனிதநேயம் பார்த்து!
மலைத்துப்போனோமே!!
அந்தநேயம் கண்டு நெஞ்சுருகி!
நின்ற யாவரும்-!
'மனிதம்' கற்ற மகத்தானநேரமது.!
இந்திய இதயங்களிலும் ஈரம்!
முற்றிலுமாய் வற்றிவிடவில்லையென!
நம்பிக்கை விதைகள் விழுந்ததருணமது.!
இயற்கையின் சீற்றத்தால்-!
இழப்புக்கள் நேர்வது விதி.!
மனிதனின் சீற்றத்துக்கு-!
மனிதன் பலியாவது வலி.!
வந்துபோன சுனாமி மற்றுமொரு!
வரலாற்று வேதனையெனக்!
குறிப்பெழுதி ஒதுக்கி விடாமல்;!
வரும்நாளில் கற்றுணர்ந்த மனிதத்தை!
கணநேரமும் மறவாதிருப்போம்.!
பலிவாங்கும் பழிவாங்கும்!
பாவ காரியங்களுக்குப்!
பலம் கொடுப்பதில்லை!
படை திரட்டுவதில்லையெனப்!
பத்திரம் எழுதிடுவோம்.!
விவேகத்தை வளர்த்துக் கொண்டால்!
விரோத நினைப்புக்கள் விடைபெறும்.!
துவேஷத்தைத் துடைத்து விட்டால்!
துர்எண்ணங்கள் தோற்று விடும்.!
மாசற்ற மனமே பாசம்வளர்க்கும்,!
தேசம் தாண்டியும் நேசக்கரம்நீட்டும்.!
நம் 'மக்கள்சக்தி ' கண்டு!
மாபெரும் தேசம் யாவும்!
மருண்டு மலைத்து!
வியந்து நிற்கின்றன.!
நம்உதவியில் உயரஉவந்து!
விரைந்து வருகின்றன;!
உதவியபடியே நம்மையும்!
உயர்த்திக்கொள்ள உன்னதநேரமிது.!
இன்று உலகமே நம்!
ஒவ்வொரு அசைவையும்!
கூர்ந்து கவனிக்கிறது.!
இழை பிசகினாலும் இந்தியாவுக்கு!
இறங்கு முகமே!!
வேண்டாமே அந்த வேதனை.!
கடந்து வந்த சோதனைகள்!
கற்பித்தப் பாடங்கள் போதுமே.!
வரும்நாளில் இந்தியா வல்லரசாய்!
வளர்ந்திடத் தெளிவோடு ஒன்றுபட்டால்..!
சாதனைகள் சத்தியமாய் சாத்தியம்,!
சிகரத்தை எட்டிடலாம் சீக்கிரம்

மன்னித்து விடு தாயே

புஸ்பா கிறிஸ்ரி
இறந்தவள் உன் மகள் தான் !
உன்னிடம் சொல்லிக்கொள்ள !
என்னிடம் தைரியம் இல்லை !
வயதான உன் மனம் !
தாங்கிக்கொள்ளும் சக்தியை !
இழந்து விட்டதால் !
உன் உருவம் மாறியது போல் !
உன் இதயம் மாறி !
உன் நினைவுகள் மாறி !
உன் கனவுகள், கற்பனைகள் !
யாவுமே மாறி !
நீ நிம்மதியற்ற உறக்கத்தில் !
உழலும் போது, !
என்றோ இறந்து போன !
உன் சோதரன் !
இன்று தான் இறந்தான் என்கிறாய். !
இன்று இறந்த உன் !
மகளின் மரணமும் உன்னை !
உருக்குலைப்பதை !
நான் அனுமதிக்க விரும்பவில்லை !
மரணம் வரும்வரை மயானத்தை !
நினைத்து நீ !
தினம் தினம் விடும் !
கண்ணீர் போதும்.. !
மன்னித்துவிடு என்னை.. !
உன் மகளின் மரணத்தை !
உன்னிடமிருந்து நான் !
மறைத்து விட்டேன்... !
(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி

தாழ்திறவாய்

ரவி (சுவிஸ்)
காயமே இது பொய்யடா காற்றடைத்த பையடா!
என்கிறான் தாடியை புதராய் வளர்த்தவன்.!
கொலைகொலையாய் விழுகிறது,!
இதிலென்ன புதுவருடமும் மண்ணாங்கட்டியும்!
என்கிறான் என் மறுநண்பன்.!
நான் எனது நண்பர்களோடு!
ஆடவைக்கும் இசைநடுவே!
உட்கார்ந்திருக்கிறேன்.!
விரல்கள் தொடும் ஒவ்வொரு கணமும்!
எனது வைன் கிளாஸ் சூடாகிறது.!
குழந்தைகள் ஆடிக் களிப்பித்தனர்!
போதையில் என் நண்பர்களும் நானுமாக!
இடையிடையே கோணலாட்டம் நடத்துகிறோம்.!
பிறக்கும் புதுவருடத்துக்கான ஒரு கவிதையை!
எழுதும் நினைப்பே அக்கணத்தில் எனக்கு வந்ததில்லை,!
வலிந்து மறுத்தலின் மீதான கவனிப்புகளை!
கவிதை கேட்படி நின்றதால்.!
போர்ப்பறை விளாசுகிறது!
மரணஒலிகள் காற்றின்மீது தாக்குதல் தொடுக்கிறது!
சற்றுமுன் பேசிக்கொண்டிருந்தவன்(ள்)!
பிணமாய்க் கிடக்கிறான்(ள்)!
வாழ்வின்மீதான ஆசை அவர்களை அவசரப்படுத்துகிறது!
ஓட்டம் நடை பதுங்கல் எல்லாமுமாக அவர்கள்!
வாழ்வினை நேசித்தபடி விரைகின்றனர்,!
அழிவுகள் கடந்தும்!
உயிரின்மீதான நேசிப்போடும்.!
எனது அறைகளில் இசையொலிகள் மோதி மோதி!
எழுகின்றன.!
நான் நண்பர்களுடன் நடனமாடுகிறேன்!
நான் சந்தோசித்திருந்தேன்!
நேரம் நடுநிசியை அண்மிக்கிறது!
அப்போதும் நான் எனது புதுவருட கவிதையை!
எழுதுவதாயில்லை.!
போதையிலும் வாழ்வின்மீதான நேசிப்பை மறுத்துவிட!
என்னால் முடியாமலிருந்தது.!
மரணத்தின் மிரட்டலிலும்!
வாளுருவி அலைந்துதிரியும் போரின் வெறியிடையும்!
வாழத்துடித்தவர்களை எனது தத்துவம்!
கோமாவரை அடித்துவிழுத்த!
காத்திருந்த பொழுதில்... எனது கவிதை பிறந்தது,!
மறுத்தலின் மீதான கவனிப்புகளோடு!!
-ரவி (02012008)

ஞாபக முட்கள்

ஜாவிட் ரயிஸ்
என் அரைசாண் இதயத்தின்!
அந்தம் வரை தொட்டவளே!!
ஆழமான உன் மனதை!
ஆக்கிரமித்து- இன்று!
ஓரமாய் கிடப்பவன் நான் !!
பனித்துளி-!
சூரியனில் நிழல் கண்டதும்!
சூரியன் சென்று!
பனியில் குளிர்க்காய்ந்ததும்!
ஒரு காலம்!
பனித்துளியே சூரியனை!
சுட்டெரிப்பது என் நிகழ்காலம்!
ஒற்றை பார்வையிலே!
உயிரை இடம் பெயர்த்தவளே!
இன்று!
பெயர்த்த இதயத்தை!
ஒளித்துகொண்டதேன்?!
உன் நினைவுகளை வரவேற்க!
என் இதயத்தில்!
அரண்மனை அமைத்து வைத்திருக்கிறேன்!
நீயோ!
புதைகுழி தேடிக்கொண்டிருக்கின்றாய்!
என் நினைவுகளை புதைப்பதற்கு!
உன் மனதை நானும்!
என் மனதை நீயும்!
உடுத்திக்கொண்டு!
என்னில் நீயும்!
உன்னில் நானும்!
உறைந்துபோன!
அந்த நிமிஷங்கள்!
என் சவப்பெட்டியை கண்டதும் தான்!
உன் நினைவுக்கு வருமா?!
போகிறேன் என்றதுமே!
போய் வா! என்று சொல்ல!
பொய்த்துப்போன!
உன் நாவு!
வந்திருக்கிறேன் என்றதும்!
போய்விடு! என்று சொல்ல!
வழி பார்த்துக் கொண்டிருந்ததேன்?!
என் நினைவுகள் வராமலிருக்க!
உன் மனதுக்குள் - என்ன!
ஊரடங்கு சட்டமா?