சுடும்வரையில் நெருப்பு - ஆ.மணவழகன்

Photo by FLY:D on Unsplash

************************ !
அன்போ, கோவமோ !
உள்ளத்து உணர்வுகளை !
ஒளிகாமல் காட்டிவிட்டால்... !
சிறுபிள்ளைப் புத்தி என்பீர் !
'சிடுமூஞ்சி' இவன் என்பீர்... !
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை, !
பக்குவமாய்ச் சொன்னாலும்... !
உதவாது வாதம் என்பீர்.. !
'ஊதாரி' இவன் என்பீர்...! !
தென்றல் அது மாடிக்குச் சொந்தம்... !
தீ மட்டும் தெரு கோடிக்குச் சொந்தமா? - இனியாவது !
திருந்தச் சொன்னால்... !
திரும்பாதே பக்கம் என்பீர், !
'தீவிரவாதி' இவன் என்பீர்! !
பருத்தியும் பழுக்கும் - இலவம் !
பஞ்சியும் பழுக்கும்! !
பசிபோக்குமா இவையாவும் ! !
பணம் பார்த்துப் பழகாதே - நல்ல !
குணம் பார்த்துப் பழகு என்றால்.... !
மெத்த படித்த திமிரா என்பீர்... !
'மேதாவி' இவன் என்பீர்! !
பிள்ளையார் பால் குடிக்கிறாரா? - அட !
பித்தனே - இங்கே !
பிறந்த குழந்தைப் பாலுக்கழுகிறதே...- மனம் !
பரிதவித்துச் சொல்லிவிட்டால்... !
பார்த்துக் கொள்வார் கடவுள் என்பீர்... !
'பைத்தியமோ' இவன் என்பீர்! !
தன்மானம் இழக்கும் செயல் !
தாங்கிக்கொள்ள முடியாது! !
தயங்காமல் கேட்டுவிட்டால்... !
'தலைகீழ்' நடப்பான் என்பீர், !
'தலைகனம்' இவனுக்கென்பீர்! !
கை நீட்டி தாலி அறுப்பான்! !
கண் முன்னே கழுத்தும் அறுப்பான்! !
கோணலாக புத்தி கொண்டு - பல !
கொடுமைகளைச் செய்திருப்பான் ! !
கொதித்தெழுந்துக் கேட்டுவிட்டால்... !
கொஞ்சம் கூட பொறுமை இல்லை... !
'கோவக்காரன்' இவன் என்பீர் ! !
அள்ளி அள்ளி கொட்டிடுவீர் !
அத்தனையும் உண்டியலில்! !
அநாதை இல்லங்கள் அநாதையாய் இங்குண்டு! !
அடுத்தவேளை உணவிற்கு ஆளாய் பறந்திருக்கும் !
ஆட்கள் இங்கே கோடி உண்டு! !
மனம்கலங்கிச் சொல்லி விட்டால்... !
மாரியாத்தா குத்தம் என்பீர், !
'மடையனே ' இவன் என்பீர் ! !
உதவாததை எடுத்துச் சொல்லி - மக்களுக்கு !
உதவும் வகைச் சொல்லிவிட்டால்... !
ஒட்டு மொத்தப் பெயராக !
'நாத்திகன்' இவன் எப்பீர்... !
நட்பே ஆகாதென்பீர்...! !
நாட்டுக்கு நல்லது நினைப்போன் !
நாத்திகன் என்றிட்டால் ... !
போடா போ...! !
இருந்து விட்டுப் போகிறேன் !
நான்.. !
'நாத்திகனாகவே'
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.