தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிதைகின்றக் கனவுகள்!

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
வீட்டில் உட்கார இடமில்லை !
நாற்காலிக் கேட்டு வந்திருந்தார். !
சென்றமுறை வாங்கிச் சென்றதிலிருந்து இன்னும் !
எழுந்திருக்காத எங்கள் தலைவர். !
கனவுக் காற்றால் !
நிரப்பப்பட்ட !
எங்கள் வாழ்க்கை பந்து !
விளையாடப் படுகிறது !
தேர்தல் மைதானங்களில் !
யார் யாரோ !
உதைத்துதைத்து !
விளையாடியபோதும் !
காற்றுப் போகாத பந்தால் !
வெற்றிக் கொண்டவர்கள் !
இறுதியில் காற்றைப் !
பிடுங்கிவிடும் !
வரலாறுகளிலிருந்து !
எழுந்திருக்க முடியாத வகையில் !
சிதைந்து போவது பந்தல்ல !
எங்கள் கனவுகள்!

அமைதி!

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
பூங்காற்றின் அரவணைப்பில் பூவிதழை மெத்தையாக்கி!
பொன்னெழிலாய் பனியுறங்கும் அமைதி.!
நீங்காமல் நெஞ்சமதில் நிலைத்திருக்க நாள்தோறும்!
நினைக்கின்ற சுகமுமொரு அமைதி!
தேங்காய்க்குள் ளிருக்கின்ற தீர்த்தத்தப் போலினிக்கும்!
தெய்வீகத் தன்மையுள அமைதி!
வாங்காத கடனுக்கு வட்டியுடன் முதலாக!
வந்துவிடும் ஆனந்தம் அமைதி.!
தூங்காமல் வதைக்கின்ற துயரத்தில் வாடுகையில்!
தூரத்தே போய்நிற்கும் அமைதி!
தாங்காத துயரங்கள் தனைஏந்தி வைத்தமனம்!
தூர்வார ஊற்றெடுக்கும் அமைதி!
ஏங்காத இதயத்தில் இதமாக பதமாக!
என்றென்றும் குடியிருக்கும் அமைதி!
தீங்கற்ற எண்ணத்துள் திளைக்கின்ற ஆசைக்கு!
தேனாலே நீராட்டும் அமைதி.!
இல்லாத பேருக்கு இருப்பதிலே ஏதேனும்!
ஈவதிலே கிடைக்கின்ற அமைதி!
பொல்லாத மனிதர்களின் புகழ்வாக்கின் போதையிலே!
புளகாங்கிதம் கொள்ளாத அமைதி!
கல்லாத பேர்களிடம் கவலையற்றுக் கிடந்தேனும்!
கண்ணுறக்கம் கொடுத்துவிடும் அமைதி!
சொல்லாத வார்த்தைகளின் சுகமான அர்த்தத்தில்!
சுகராகம் இசைத்துவிடும் அமைதி!
உனக்குள்ளே உனைத்தாங்கும் உயிர்த்தூணாய் இருக்கின்ற!
உள்ளத்தின் உறுதியெனும் அமைதி!
தனக்கென்றக் கொள்கைக்கு தடைபோட்டு பிறர்க்கென்று !
தான்வாழச் சொல்கின்ற அமைதி!
இனத்துக்கும் சனத்துக்கும் எப்போதும் போராடி!
இழக்கின்ற சந்தோசம் அமைதி!
எனக்கென்றும் உனக்கென்றும் எல்லாமே பொதுவானால்!
இழப்பற்று இருந்துவிடும் அமைதி

மரணம், மரணம், மரணத்திற்கு நிகர்;மரணமே!!!

வித்யாசாகர்
வாழ்வின் சுவர்களில்!
கொட்டை எழுத்தில்!
எழுதப் படுகிறது மரணம்;!
படிக்க மட்டுமே நாளாகிறது!!
!
எ த்தனையோ பேரின் மரணத்தில்!
நிகழ்வதில்லை பாடம்;!
என் வீட்டின் ஒரு சின்ன மரணம்!
மாற்றி விடுகிறது என் பாதையையும்!
வாழ்க்கையையும்,!
வாழ்க்கையை கடைசியாய் புரட்டும் நாளில்!
பாடம் புகுத்தப் பட்டுள்ளது புரியும் புள்ளியில்!
நிகழ்கிறது -!
தனக்கான மரணம்!!
!
யாரும் பயந்துவிடாதீர்கள்!
பயம் கொள்வதால்!
விட்டாசெல்கிறது மரணம்?!
விட்டு செல்லுங்கள் மரணத்தை!
துணிவிருந்தால் வந்து நம்மை!
பெற்றுக் கொள்ளட்டும் மரணம்;!
பெறாத மரணத்தில்!
எனக்கென்னவோ வாழ்வதாகவே!
தெரியவில்லை -!
நிறைய பேரின் வாழ்க்கை!!
!
எ ன்ன தான் மனிதன்!
செய்தாலும் - மனிதனை!
செத்து தொலை என்று!
சொல்ல விடுவதேயில்லை மரணம்;!
மீறி சிலர் சொல்கிறார்கள்!
ஏன்; கொலை கூட செய்கிறார்கள்!
மனிதரற்றோர்;!
மரணம் அவர்களை!
மன்னிப்பதேயில்லை, மாறாக!
தினம் தினம் கொள்கிறது,!
கடைசி ஓர்நாளில்!
அவர்கள் சடலம் மட்டும் எரிக்கவோ புதைக்கவோ!
தூக்கி எங்கேனும் வீசவோ செய்யப் படும் நாளில்!
அவர்களை இறந்ததாக -!
கருதி மட்டுமே கொள்கிறது (அவர்களின்) உடல்!!
!
பெரிய மிராசுதார்!
பிச்சைக்காரன்!
ஆண்!
பென்!
சாமி!
குடிகாரன்!
திருடன்!
நல்லவன்!
கெட்டவன்!
யாரையுமே பார்ப்பதில்லை மரணம்;!
ஆனால் -!
நெருங்கும் முன்!
நன்றாக; பார்த்துக் கொள்கிறது

குடைக் கம்பிகள் எழுதும் கதைகள்

கலாசுரன்
மழை தாண்டி வந்ததும்!
திண்ணையில் விரித்து!
வைக்கப்பட்டிருந்தது குடை!
தரை தொடும் அதன் ஒவ்வொரு!
கம்பிகளும் தரையில்!
விழிநீர் வழிய எழுதிக்கொண்டிருந்தது!
தன் கதைகளை .....!
யாரும் வாசிப்பதற்க்காக இல்லை எனினும்!
தன்னை சுருட்டி ஓரமாய் வைக்கையில்!
சோகங்கள் மறந்து!
தன் கனவின் மடிப்புகளுடன்!
அடுத்த மழைவரைக்கும்!
நிம்மதியாக தூங்கும்படிக்கு

ஏனோ இந்த வாழ்க்கை?

வித்யாசாகர்
மூணு வேளை சோறு!
ஒரு வேளை ஆனது,!
பத்து மணிநேர தூக்கம்!
ஐந்து மணிநேரமானது,!
மாதத்திற்கு ஒரு முறை !
வெட்டும் - முடி கொட்டி - மொட்டைதலையானது,!
ஒரு நேர உடல்பயிற்ச்சிக்கும் !
அவகாசமின்றி -!
தொப்பை வேறு சட்டி போலானது,!
இனிப்பு தின்பதோ!
காரம் விரும்பித் தின்பதோ!
சிகடை, தேன்மிட்டாய், கைவிரல் அப்பளம்,!
அச்சுமுறுக்கு, தட்டை, ஒட்டையடை சமாச்சாரமோ!
அறவே மறந்து போனது,!
ஸ்டைலுக்கு பிடித்த சிகரெட் அணைந்து!
ருசிக்க குடித்த பீரும் விஸ்கியும்!
பழக்கத்திலிருந்து தீர்ந்து போனது,!
சினிமா -!
எப்பொழுதாவது!
பொழுதை ஆக்கும் படங்கள் வந்தால்!
மட்டுமே என்றானது,!
ஊர் சுற்றும் அளவு நேரமோ!
அத்தனை அதிக பணமோ!
கையிருப்பில் - இருப்பதில்லை,!
எங்கு போய் எங்கு வந்தாலும்!
கணக்குப் பார்த்து பார்த்து!
வட்டிக்குக் கடன் வாங்கும் அளவிற்குக் கூட!
வாழ்தலின் நிம்மதியை!
வாங்க இயலா அன்றாட போக்கு,!
இதில் வேறு -!
அம்மா, அப்பா,!
உறவு, நட்பு, சுற்றத்தார் என!
இறப்பின் இழப்பு!
சொல்லி மீளா வலியும் அழுத்தமுமாய்!
தன் மரணம் வரை நீளும் கொடுமை -!
தாங்க முடியா ரண பாரம்; வேதனையின் உச்சம்,!
என்றோ பார்த்தவன்!
எங்கோ பழகியவனை கூட!
நினைத்து வருத்தப் படுமளவிற்கு!
பாதிக்கப் பட்ட ஒரு!
பண்பட இயலா பதட்டமான மனநிலை,!
வாழ்வின் தூரகால!
இடைவெளிக்குப் பின்!
திரும்பிப் பார்க்கையில் -!
எதையுமே!
பெற்றுக் கொண்டதாய் இல்லாமல்!
விட்டுசெல்லவே வந்ததாய் உறுத்தும்!
ஒரு பாவப் பட்ட பிறப்பு,!
ஆக, எத்தனையோ வலியினூடே !
பல போராட்டங்களை தாண்டியும் !
வாழ முற்படுகையில் -!
உள்ளே ஒரு மனசு!
கூட்டி கழித்துப் பார்த்து!
'ஏனோ' இந்த வாழ்வென!
நொந்துக் கொண்டு தானிருக்கிறது.!
முடிவாய்;!
நொந்து போகையிலும்!
சிந்திப்பது தான் -!
வாழ்க்கை போலும்

அடர் மழை வனாந்தர நேசம்

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட !
உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று !
கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன. !
அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை !
அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று. !
பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த !
கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம். !
உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம் !
அழியாது, என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று !
நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும் !
இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்

சாத்திய யன்னல்கள் !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை!
வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்!
உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.!
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான் அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்!
அறுதியான வாதம்.!
ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென!
தூங்குவதாயொரு பாவனை.!
நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்!
எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…!
நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்!
துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா யன்னல்களையும்.!
அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்!
வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.!
அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு!
விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர… !

வாழ்தலை மறந்த கதை!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அவளிடம் சொன்னேன்!
அடுப்படி தாண்டு!
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக!
விஷயங்கள் இருக்கின்றன!
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்!
வித்தை சொல்லித் தருகிறேன் !
அவள் வந்தாள்.!
சுமக்க முடியாத சங்கிலிகளையும்!
முடிவற்ற சந்தேகங்களையும்!
சுமந்து கொண்டு !
மிகுந்த பிரயாசையோடு!
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்!
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்!
நீண்டு நெடித்தலைந்தன. !
இனி என்ன!
களைப்போடு கேட்டாள்.!
இனி நீ வாழத் துவங்கு !
வாழ்தல் என்றால்!
அயர்வோடு நோக்கினேன்.!
அவள்!
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன

கவிஞனின் மனைவி !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
அபூர்வமான சொற்களைப் பின்னும்!
பொன்னிற சிலந்தி அவன் !
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்!
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான். !
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்!
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்!
பார்த்தவாறே உறங்கிப்போவாள். !
அவன் எழுதும் எதையும்!
அவள் வாசித்ததில்லை!
அவனது விசாரங்களும் தனித்துவமான!
சிந்தனைகளும்!
அவளுக்குப் புரிந்ததேயில்லை.!
அதிகம் பேசுவது அவனை!
ஆத்திரமூட்டும்.!
அவள் மொழி மறந்தவள் ஆயினள். !
கிராமத்துக்கிளி மொழிகள்!
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்!
அடங்கியிருந்தாள். !
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து !
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்!
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது. !
புழுங்கிய சமையலறையில்!
நெடுங்காலமாய் திறவாதிருந்த!
‘ஜன்னல்’ தான் அது !
அதனூடே அவள்!
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்!
வானவில் எழுதும் ஓவியங்களையும்!
வாசிக்கத் தொடங்கினாள். !

வலி!

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி!
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்!
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.!
ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க!
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.!
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம் !
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்!
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.!
வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது!
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்!
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து!
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்!
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு