தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்

வித்யாசாகர்
I.!
நீ -!
காற்றில் அசைபவள் !
கிளையுரசி உடைபவள்!
விழுந்ததும் பறப்பவள் !
பயணித்துக் கொண்டேயிருப்பவள்;!
நான் நின்று !
நீ வருவதையும் !
போவதையுமே பார்த்திருக்கிறேன்;!
கணினி வழி தெரியும் !
கண்களிலேயே !
உயிர்திருக்கிறேன்;!
வாழ்வதை அசைபோட்ட படி !
உன்னையும்!
நினைத்துச் சிரித்திருக்கிறேன்;!
வாசலை !
பசியோடு திறக்கக் கேட்காமல் !
சந்திக்கவேக் கேட்டிருக்கிறேன்!
நீயும் சம்மதித்தாய் !
பேசினாய் !
பார்க்கிறாய் !
இருக்கிறாய்!
நீ !
இருக்கிறாய் என்பதில் மட்டுமே!
உயிர்த்திருக்கிறேன்..!
!
II.!
கைதொடும் !
உனதுணர்வு!
மின்சாரம் கொண்டது;!
பார்க்கும் தருணங்கள் !
யாவும் !
தவத்தை உடையது;!
பேசும் !
அவகாசமெல்லாம் !
பாக்கியத்தைப் பொறுத்தது;!
உனக்கான எல்லாமே !
எனக்குத் தலைமேல்!
கிரீடம் இருப்பதற்குச் சமம்!!
!
III.!
பேச்சில் !
பாதி மறைக்கிறாய்,!
பேசாமலே !
உயிர்த்தீ அணைக்கிறாய்,!
நேசத்தின் !
எல்லை விரிக்கிறாய்,!
நெருங்கி என் !
நிஜத்தை தொலைக்கிறாய்;!
காற்றில் !
பொம்மையும் பூவும் !
பரிசென்கிறாய் !
கடவுச்சொல்லினும் இரகசியமாகிறாய்;!
பேஸ்புக் !
டிவிட்டர்!
ஜி-பிலஸ்!
எங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும், !
தெரியாத நாளிலென் உயிர்பிரியும்..!
IV.!
உனக்கானச் !
சொற்கள் !
மௌனத்தை அணிந்தவை;!
வார்த்தைகளைக் களைந்து !
இதயத்தை !
பார்வையால் அறுப்பவை;!
காத்திருப்பிலும் !
தவிப்பிலும் !
நினைவுகளால் வலிப்பவை;!
என்ன செய்ய !
உனக்கானச் சொற்களை?!
இதோ -!
எழுதாமலே விட்டுவிடுகிறேன் போ

உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது

வித்யாசாகர்
முகப்பூச்சு தடவு!
வாசனைதிரவியம் வாரியிடு !
வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து !
வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு;!
பொய்சொல்!
பொறாமை கொள் !
புகழுக்கு அலைந்து எல்லாம் செய் !
உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு;!
புகையிலை உண் !
புட்டியில் வாழ் !
போதையில் புத்தியை அறு !
பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; !
பெண்ணிற்கு ஏங்கு !
பாரபட்சம் பார் !
ஏற்றத் தாழ்வில் எள்ளி நகை !
உடம்பின் ரசாத்தால் மனதை நஞ்சாக்கு;!
அரசியல் ஆதாயம் செய் !
அடுத்தவர் சொத்திற்கு ஆசைப்படு !
விட்டது கிடைக்காவிட்டால் ஒரு கண்ணை எடு !
ஆண்டோர் நற்போக்கை மாற்றி அமை!
உடம்பை உடம்பிற்கு எதிரியாக்கு;!
இடையே ஒரு சின்ன காய்ச்சல் வரும் !
தலைவலிக்க உலகம் மறக்கும் !
வயிறுவலி வாழ்க்கையைக் கொல்லும்!
கைகால் கொஞ்சம் உடைந்தாலும் காண்பதெல்லாம் !
முடமாய்த் தெரியும்-!
கட்டை சாய்ந்தால் அத்தனையும் சாயும் !
உடம்பென்னும் கோயில் உள்ளவரைதான் எல்லாம் !
உயிர் போவதெனில் சட்டென விட்டுப் போகும்!
உடல் தேவையெனில் உயிரையும் பிடித்துநிறுத்தும்!
உடலைக் காத்து கொள்; உயிர் வேண்டுமெனில்

தன்னை தான் உணர்வதே ஞானம்

வித்யாசாகர்
முதுகெலும்புகள் நிமிர்ந்திருந்தும்!
முடிவுகளால் தளர்ந்தவர்கள்,!
நினைத்ததைச் சாதித்தும்!
நடக்காததில் நோகும் பிறப்புகள்;!
ஏக்கப் பெருமூச்சினுள் வெந்துவெந்தே!
நித்தம் வாழ்பவர்கள்,!
என்றேனும் மாறும் வாழ்க்கைக்கு!
என்றென்றும் கனாக்காணும்; ஈசல் பூச்சிகள்;!
வந்தவர் போனவர் பற்றியெல்லாம்!
பகடி பேசும் பழையப் போர்வாள்கள்;!
அடிப்பவன் ஓங்கியடித்தால் - அதிர்ச்சியிலேயே!
மூச்சைவிடும் அற்ப உயிரின் பாவப் பிராணிகள்;!
எதிலெல்லாம் ஏற்றம் உண்டென!
தேடித் தேடியே இருப்பதை தொலைப்பவர்கள்,!
இருக்க இருக்க மேலேறி!
பேராசையின் பள்ளத்தில்வீழ்ந்து தானேஒழிபவர்கள்;!
குடிக்க கஞ்சு போதும்!
உடுத்த ஆடை போதும் என்றிருந்திருந்தால்!
அடுத்தது மகிழ்ச்சி மகிழ்ச்சி என்பதை!
அறிந்தும் ஆழ்கடலை தொடாதவர்கள்;!
பிடித்தது பிடிக்காதது என்று பகுத்துப் பகுத்தே!
உணர்ச்சிகளைக்கூட ஏற்றயிறக்கத்துள் தள்ளியவர்கள்,!
பின் தவிக்கத் தவிக்க மூச்சடக்கி!
வாழ்க்கையை ஞானம்தேடியே இழப்பவர்கள்;!
இருப்பது ஒரு வாழ்க்கை யென்றதே - நாம்!
இருப்பதைச் சிறப்பாக வாழ்வதற்கன்றி வேறென்ன? இன்னும்!
நீள்வது உண்டெனில் பிறப்புகள் நீளட்டுமே – நாம்!
பெறுவதைப் பேறென்று வாழுவமே' என உணர்தலேப் பேரறிவு;!
இருப்பதும் மறைவதும் இயல்பு தானே!
கிடைப்பதும் தொலைப்பதும் இயல்பு தானே!
பிறப்பதும் அழிவதும் கூட இயல்பு தானே,!
இயல்பில் - மாற்றமும் தோற்றமுமே மாறாதது;!
ஏற்றத்தை இறக்கத்தை கண்டதும் ஆடாத!
கிடைத்ததும் தொலைத்ததும் சட்டென மாறாத!
இருப்பதை பகிர்ந்து இருப்பதில் சிறந்து!
இயல்பின் அசைவுகளை முடியக் கண்களுள் பார்த்தால் -!
மூளும் நெருப்பிலிருந்து பெய்யும் மழை!
வீசும் காற்றுவரை தன்னுள் அடக்கமென்று தானே தெரியும்,!
அதற்கும் ஆடாத எதற்கும் அசையாத மனமது!
எப்போதும் தனித்திருக்கும், ஏகத்திலும் சுகித்திருக்கும்.,!
கலங்காத மனம் அறியாமை நோயின்றி!
கேட்பதையெல்லாம் பெற்றுத்தரும், எதைக்!
கேட்பது கேட்க மறுப்பதென்பதையும்!
இயல்பிலடங்கி எண்ணம்வழியே எடுத்தியம்பும்!!
எங்கும் அமைதி நிலவும், எவ்வுயிரும் சுகம் பெரும்!!!
யாவருக்கும் மங்களம் மங்களமே யுண்டாகும்!!!

நேரத்தின் காட்சி

ரேவா
இது அதன் பெயரால் !
அப்படியே அழைக்கப்படும் !
தனக்கான அந்தரவெளிகளோடு !
தனித்தே தான் இருக்கும் !
துயரத்தின் காட்சியையும் !
பாவத்தின் நீட்சியையும் !
துறத்தும் பாவனையை !
தொடர்ந்தே தான் கொடுக்கும் !
தப்பிக்கும் நேரமும் !
தப்பிழைக்கும் காலமும் !
தப்பாமல் தவறுக்குள் !
வரவொன்றை வைக்கும் !
இருப்பின் ஓடமதும் !
சுழல் காற்றின் கையில் சிக்கி !
சிருங்காரமாய் ஆடும் !
ஆடுமிந்த ஆட்டமது !
முடிந்த பின்னும்!
முயற்சிக்கு முற்றுவைத்து!
முடிவைத்தேடி தொடருமிதை !
அதுவென்றே !
நல்லுழகம் கூறும்

தக்கை அழகி

சுபா
மரகத பச்சை புல்வெளி
படக்கென்று பட்டழகி
பனி சிதறல்
பாந்தமாய் பதுங்கி
சிறகை விரி
சிருங்காரமாய்
சில்வண்டுகளை
சிதறாமல் சிறையிடு
சின்னதாய் சித்திரமாய்
சுறு சுறு வென்று சுழன்று
சுற்றும் சுட்டிப்பெண்
தக்கை அழகி அவள்

சொல்லப்படாத கவிதைக்கு !

ச இரவிச்சந்திரன்
எழுப்படாத புகழுரை !
வாசிக்கப்படாத வரையில் கவிஞனின் நெஞ்சில் !
சிம்மாசனமிட்டமர்ந்தாய் !
வெளிப்பட்ட அக்கணமே !
விமர்சங்கனங்களின் தாக்கங்களுக்கு !
ஆட்பட்டாய் !
என் கவிதை பெண்ணே !
உனக்கு எத்தனை எத்தனை அணி செய்து வைத்தேன் !
உன்னை என் நெஞ்சில் பூட்டியல்லவா வைத்திருந்தேன் !
உன்னை வாசித்தவுடனே !
என்னை விட்டு எப்படி மாறி போனாய் !
வாசகர்களின் வார்த்தைகளுக்குள் சிறை பட்டாய் !
ஆசிரியர்களின் கைகளால் மோட்சம் பெற்றாய் !
கவிதை நங்காய் ! !
என்னை மறந்தும் இருந்து விடாதே !
நீ தவழும் வரையே நான் கவிஞன் !
நீ என்னை புறக்கணித்து விட்டாலோ !
நான் வெறும் மனிதன்

நமது வாழ்வு

வீ.இளவழுதி
உன்னின் ஒவ்வொரு!
நொடியிலும் - உடனிருந்து!
உனது வெற்றிகளுக்கெல்லாம்!
ஊன்றுகோளாக இருந்து!
உன்னை உற்சாகப்படுத்திடவேண்டும்!
என்னவளின் திருக்கரங்களால்!
எண்ணற்ற வெற்றி மாலைகள்!
என் தோள்களை!
அலங்கரிக்க வேண்டும்!
இயற்கையின் அழகினை!
இயன்றவரை உன்னுடன்!
இருந்து இன்புற்று!
ரசித்திட வேண்டும்!
இப்படி எண்ணற்ற!
ஆசைகளை என்னுள்!
சுமந்து திரிகின்றேன்!
என்னவளே!
என்று நிஜமாகும்!
நமது கனவுகள்....!

ஏனடி சென்றாய்

வீ.இளவழுதி
அர்ச்சுனனின் வில்லை!
அச்சுபுத்தகத்தில் பார்த்தவனிடம்!
உன் இதழ்களில் பார்க்கவைத்து!
ஏதும் அறியாதவனாக!
ஏதோவென்று வாழ்ந்தவனை!
எல்லாராலும் அறியபட்டவனாக்கி!
என் வாழ்வினில் வந்து!
ஏதும் அறியாதவள் போல!
ஏனடி சென்றாய்?!

உன்னருகில் நான்

வீ.இளவழுதி
எந்நேரமும் புன்னைகையுடன்!
எல்லோரையும் அரவணைத்து - நீ!
இருக்குமிடத்தில் மகிழ்ச்சியை!
இருக்க செய்பவளே!... - ஒரு!
நாழிகை உன்னருகில்!
நானிருந்தால்...!
ஒரு யுகம் வாழ்ந்த!
அர்த்தம் கிடைக்குதடி

அன்பே

வீ.இளவழுதி
அருகினில் இருந்த!
அற்புத தருணங்களில்!
அவை நாகரிகம் கருதி!
அமைதியாக நாம் பிரிந்தாலும்!
அல்லல்படும் மனம்!
அனுதினமும் நினைத்திடுதே!..!
அன்பே உன்னையே!
அணுவணுவாய் ரசித்திடுதே