தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மனசு

நளாயினி

அதெப்படி இருக்கும்?!!
ஆராய்ச்சி ஏதும்!
இதுவரை செய்யதில்லை.!
ஆனாலும் நான்!
ஒரு போதுமே!
அதை எடுத்து!
தொட்டுப் பார்த்ததுமில்லை!
உணர்ந்து!
படித்ததுமில்லை.!
எங்காவது தன்னை மறைத்தபடி!
இந்த உடம்புள்!
எந்த இடுக்குகளுக்குள்!
இதுவரை இருந்திருக்கும்.!!!!
இப்போதாவது!
கண்டெடுத்தேனே!!!
காமக்கிளர்வுகள் ஏதுமின்றி!
உன்பாதச்சுவடுகளையும்!
நினைவுகளையம்!
சி£¤ப்பொலிகளையும்!
துன்பங்களையும்!
தாங்கியபடி!!!
நட்பா ? காதலா?!
பி£¤த்தப்பார்க்க முடியவில்லை.!
எப்படி வேண்டுமானாலும்!
இருந்து விட்டுப்போகட்டும்.!
இப்போவதாவது கண்டு பிடித்தேனே!
உன் நினைவுகளோடு.!
--------------------------------!
நளாயினி தாமரைச்செல்வன்!
சுவிற்சலாந்து.!
15-01-2003

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

அப்துல் கலாம்

வாணிகல்கி வனிதா

எழுபது ஆண்டுகளாய்
விண்ணில் சுற்றித்
திரிகிறது ஒரு விண்மீன்!

அருந்தவம் பெற்ற
பத்தினியருள் ராமேஸ்வரத்தையும்
இணையுங்கள் ,
பதினொன்றாம் கோளை
பெற்று எடுத்ததற்காக.

நாளுக்கொரு அறிவு
என்று ஆறறிவு
எழுபதாய் வளர்ந்து
நிற்கிறது.

எண்ணத்தில் பல்லாயிரம்
ஏவுகணைகளை சுமந்து
வாழும் ஏசுநாதர்.

நாட்டை நேர்வழி படுத்தும்
எண்ணத்திலா நும் தலை
நடுவே வாகு எடுத்தீர்கள்?

நீர் நடக்கும் இயந்திரமாய்
அடிவைக்கும் போது
இந்தியாவே கொடிகட்டிப்
பறந்தது நும் கற்பனைச் சிறகால்.

தலையில் முண்டாசு ,
முகத்தில் மீசை,
மனதில் மதமும்
விடுத்தது வந்த பாரதியின்
மறுபிறப்போ?

நீர் சோதனை செய்ய
பொக்ரான் மட்டுமே
போதுமானதா?
அல்ல..
இந்திய மனங்களில்
வேதனை கொண்ட
மனங்கள் காத்திருக்கின்றன,
உம் சோதனைக்காக.

குழந்தைகளின் மனங்களில்
குறையாத மகிழ்ச்சி நீ.
இளைஞர்களின் இமைகளில்
இமைக்காத கருமணி நீ.
முதியவர்களின் உள்ளங்களில்
முளையாத முயற்சி நாற்று நீ.

தமிழைத் தலைத் திருப்ப
வைத்த தலைமகனே.
எங்களுக்கு முன்னோடியான
இந்தியாவின் குடிமகனே.
எங்கிருந்து திரட்டினாய்?
இவ்வளவு ரசிகர் மன்றங்களை?

நீ பிறந்த நாளன்று
சூரியனும் ச்தம்பிதிருப்பான்,
நம் கண்ணில் ஊசி ஏவ
ஒரு விண்மீன் பிறக்கிறதே என்று.

அன்று நீ படித்தை
திருச்சி ஜோசப் கல்லூரியில்
இன்று கல்லூரியே உன்னை
படிக்கிறது ,
புத்தகத்தில் பாடமாய்.

கர்ணன் கவசகுண்டலதுடன்
பிறந்தாற்போல் நீ
ஏவுகணையின் தாரக
மந்திரத்தை மனதிற்கொண்டு
பிறந்தாயோ?

வருடத்தில் ஓர் நாள்
நானும் ஆகிறேன்
அப்துல் கலாமாய்,
தீபாவளி இராக்கெட்டுகளை
விண்ணில் பறக்க விடும்போது.

நீர் சொன்னாற்போல் தான்
காணுகிறேன்.
என் கனவை,
உம் கண்களில்