தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நகர்வு

மு. பழனியப்பன்

மு. பழனியப்பன் !
!
இடம் விட்டு நகர்வதாய் முடிவாகிவிட்டது !
எல்லாம் உறுதி !
எவர் வந்தும் எங்களைத் தடுத்துவிட முடியாது !
மகிழ்வோடு நாங்கள் கிளம்புகிறோம் !
வரும்போது பெரிதாய் எண்ணி !
வந்தோம் !
போகும்போது பெரிதாய் எண்ணி வந்திருக்கத் தேவையில்லை !
என்று தோன்றுகிறது !
வாழ்க்கையின் ஒரு காட்சி இது !
இது நிறைவுக் காட்சியுமல்ல தொடக்கக் காட்சியுமல்ல !
இடைவேளைக் காட்சி !
அவ்வளவுதான் !
வந்தோம் !
ஆனால் செய்ததெல்லாம் நன்மை !
அது மட்டும் உறுதி !
இதனால் !
இருப்பவர்களைக் குறை கூற முடியாது !
அவர்களின் இருப்பின்படி !
இருக்க வேண்டிய கட்டாயம் !
சரி !
நாங்கள் கிளம்பிவிட்டோம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

ஆட்சி அவள்நெஞ் சினிலே

எசேக்கியல் காளியப்பன்

வீட்டினின் மனைவி கூட்டிய குழம்பைச்!
சூட்டுடன் அருந்திச் சுவைத்து மகிழ்ந்து!
மாட்சிமை பேசும் மனத்தினன்!
ஆட்சிசெய் யானோ அவள்நெஞ் சினிலே