தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அன்பெனும் ஒளி

வினோத்குமார் கோபால்

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

தேம்ஸ் நதிக்கரையில்

சத்தி சக்திதாசன்

இனிமையான மாலைப் பொழுதினிலே!
இலண்டன் தேம்ஸ்நதிக் கரையினிலே!
இளந்தென்றல் காற்றின் அணைப்பினிலே!
இதயம் பறக்குது வண்ணக் கவிதையுலகில்!
வந்தன பலநூறு வசந்தங்கள் வாழ்க்கையில்!
தந்தன வாசம் வீசிடும் இன்பப் பொழுதுகள்!
நின்றன ஏனோ சோகவேளைகள் மனதில்!
சென்றன பலமைல்கள் வாழ்க்கைப் பயணத்தில்!
அன்னை நாட்டை துறந்தொரு பயணம்!
அன்று நான் கண்டது வாழ்க்கைப் பாடம்!
அகலமான அடியெடுத்து நடந்ததும் பின்னால்!
அடைந்த அனுபவங்கள் ஆயிரம் தேறும்!
இன்றைய பொழுது இடைவேளை வாழ்வில்!
இதயத்தின் ராகங்கள் எழுத்தாய் இசைக்கின்றன!
இணைந்த சொந்தங்களின் தூய்மை எனை!
இன்பவனத்தினுள் கொண்டு தொலைத்தன!
காதிலொரு செய்தி காற்று வந்து சொல்லும்!
கண்ட துன்பம் யாவும் கானல் போல மறையும்!
கவிதை எந்தன் மனதில் என்றும் வந்து துள்ளும்!
கனத்த நெஞ்சின் பாரம் பஞ்சு போல மாறும்!
வசந்த கால அழகினைப் பருகிக் கொண்டே!
வந்திடுவோம் கோடைகால வெப்பத்தினுள்!
வண்ணஓவியமாய் கண்முன் இலையுதிர் காலம்!
வெள்ளைப்பட்டு உடுத்தும் மாரிகாலப்பனிமழை!
நதிக்கரையின் ஓரத்திலே நான் நீந்திய!
நினைனு நீரில் கண்ட காட்சிகள் என்!
நடந்து வந்த பாதையினை நன்கு!
நினைவூட்டிய பொழுது தெரிந்ததுவே!
உண்மை ஒன்று என்னுள்ளத்திற்கு!
உன் வாழ்க்கைப் பயணம் உன் கையிலில்லை!
உனக்குக் கிடைத்த வாழ்க்கையை உண்மையாய்!
உவகை பொங்க வாழ்ந்திடுவதே கடமை!
!
-சக்தி சக்திதாசன்