தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அன்பெனும் ஒளி

வினோத்குமார் கோபால்

கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எங்கிருந்தோ வந்தாள்

அகணி

மல்லிகைப் பூவற்ற பூந்தோட்டத்தில்!
மல்லிகை வாசத்தை தாங்கி வந்தாள்!
இவனுக்காய் காத்திருக்கும்!
இடைஞ்சல் இல்லையென்ற உணர்வை!
சுந்தரியின் சிரிப்பழகு!
சொல்லிக் கொண்டது!
இவளுக்காய் காத்திருந்ததில்!
எனக்கும் ஓர் இன்பம் இருந்தது!
இவள் நடையை பார்த்து ரசிக்க!
எனக்கு கிடைத்த பலனே அது!
நிறையவே பேசினோம்!
நீண்ட நேரம் காதலும் செய்தோம்!
சின்ன சண்டைகள்!
நேரத்தைக் கொன்றன!
மாலையாகி மதியும் தோன்றினன்!
மனமற்று மெல்லப் பிரிந்தோம்!
காதல் சவாரியை நினைத்துக்!
களிப்புறத் துடிக்கையில்!
கற்பனைக் குதிரையின்!
கனைப்புக் கேட்டது!
குதிரைக் கடிவாளத்தை மெல்லப்பிடித்து!
கீழே இறங்கி மெல்ல நடந்தேன்!
இன்றைய சவாரி இத்துடன் போதுமென