தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

எனது பாத்திரம் இதுவாகி

டீன்கபூர்

நேற்றும் பசி விழுங்கியது என்னை.!
இன்னும் அது வயிற்றுக்குள் ஊடுருவி!
அட்டகாசித்துக்கிடக்கிறது. !
நான் ஏந்தும் பாத்திரத்தின் சரியான வடிவத்தை!
எவரும் கண்டுகொள்ள மறுத்துப்போய்!
நான் அணியும் உடையின் !
அழுக்கைச் சுவாசித்தபடியாக!
நழுவுகிறது மானிடம்.!
என் குழந்தைகளின் வாழ்வின் வடிவம்;!
எனது வாழ்வின் வடிவம் பற்றியெல்லாம்!
என் அழுகைக்குள் முடங்கிக்கிடக்க!
என்னை அயராது பாடுபொருளாகிக் கிடக்கிறது!
தனிமை.!
பிசின் தள்ளிய முருங்கைக்காய் கறிபோல!
வாழ்க்கை உப்புச்சப்பில்லாமல் நகர்வதாக!
ஒருவன் பேசினான்.!
குயிலின் வழுவழுத்த தனம்!
காக்கையின் கூட்;டை கள்ளத்தனமாக்கும்.!
அழகிய குரலில் என்னதான் மிஞ்சும்.!
ஒரு கூட்டிற்கு உழைக்க இயலாத வாழ்வு.!
எனது பாத்திரம் இதுவாகி…………..!
என்னிடம் பேசுகிறது.!
- டீன்கபூர்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

தமிழ் இனி மெல்லச் சாகும்

சத்தி சக்திதாசன்

தமிழ் இனி மெல்லச் சாகும்!
தமிழ்ப் புலவனின் கூற்றினை!
தவறென புரிந்திடாதீர் தமிழர்காள்!
தமிழ்ப் பாட்டனை உணர்ந்திடுவீர்!
புலம் பெயரட்டும் நம் தமிழ் உறவுகள்!
புதுக்கலைகள் பெருகட்டும் தமிழில்!
புலரட்டும் புதுமையான தமிழ்ச் சமுதாயம்!
புதுமைப் பெண்கள் தோன்றட்டும்!
ஓடாத நதி, நீந்தாத மீன், பாயாத புலி!
ஒருநாளும் காணாது வளர்ச்சியை!
ஓதியதந்த உண்மையைத்தான் பாரதி!
ஒருபோதும் தவறாகப் புரியாதீர்!
தமிழைத் தன் உயிராகக் கொண்டவன்!
தமிழுக்காய் தன்னையே தேய்த்தவன்!
தமிழையே உணவாக புசித்தவன் - அவன்!
தமிழை என்றாவது இகழ்வனோ ?!
தமிழ்ப் பாவலன் பாரதி பா தனைப் படித்து!
தமிழை மற்றொருவன் பழித்ததை!
தாங்காமல் தமிழன்னை அழுவதாய் அவன்!
தமிழாலே நம்மிடம் கலங்கினான்!
தமிழ் இனி மெல்லச்சாகும் என்றந்தப் பேதை!
தமிழை பழித்தான் ஆதலினால் என்!
தமிழ்ச் செல்வங்கள் திக்கெட்டும் சென்று!
தமிழ் வளர்க்கக் கலை கொண்டு வாருங்கள்!
கற்பனை உலகில் தமிழன்னையின் கவலையை!
கவிஞர்களின் தலைவன் பாரதி சொன்னான்!
கருத்துக்களை கட்டிப்பிடித்து தமிழ் வளருங்கள்!
கதைபேசி வீணாக காலத்தைக் கழியாமல்!
!
- சக்தி சக்திதாசன்