தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

தியாகம்

ஆனந்தன்

வியர்வையை இரத்தமென சிந்தி !
உடலை வில்லாய் வளைத்து !
நிலம் உழுதவர் சிலர் !
உலி அடிக்கும் கனத்தில !
விரலை நசுக்கிக்கொள்ளும் !
தட்டர்கள் சிலர் !
தன் பசி அடைக்க !
மாட்டின் பசியடைத்த !
மயக்கத்தில் சிலர் !
உண்மையில் !
தலைக்கு மேல் வேலை !
செய்தவர்கள் சிலர் !
மாடு கட்டி அதே !
இடத்தில் சுற்றி சுற்றி !
செக்கடித்தவர்கள் சிலர் !
அங்கங்கு சிலர் சேர்ந்து !
பலராகக் கூடி இருந்தனர் !
அந்த மாலைப்பொழுதில் !
நான்கு பல்லாங்குத் தாண்ட !
மிதி வண்டி மிதித்து !
வந்து சேர்ந்தார் !
அடுத்த கிராமத்து !
ஆசிரியர் !
அங்கு நடக்கப் போவது !
மாலை வகுப்புக்கள் !
முதியோருக்காக !
அரசியல் வாதிகள் !
படிக்காவிட்டால் என்ன !
நம் கிராமமாவது படித்திருக்கட்டுமே... !
நூறு சதவிகித கல்விக்கு !
என அவர் சொல்லக் !
கேட்டிருக்கிறேன் !
தன் கடமை செய்ய !
கையூட்டுக் கேட்கும் !
காலத்தில் !
தன் நேரத்தை !
செலவு செய்து !
பலனையும் எதிர்பாராமல் !
தியாகத்தை கடமையாக !
செய்பவரை எதில் சேர்ப்பது ?

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பார்வையற்றவர்கள்.. உலக மொழிகளின்

இரா.இரவி

மூலம் தமிழ்மொழி!
01.!
பார்வையற்றவர்கள்!
----------------------!
புறப்பார்வை இரண்டு இல்லா விட்டாலும்!
அகப்பார்வை ஆயிரம் பெற்றவர் நீங்கள்!
சாதாரண வாழ்க்கை எங்களுக்கு!
சாரனை வாழ்க்கை உங்களுக்கு!
சராசரி மனிதர்கள் நாங்கள்!
சரித்திர மனிதர்கள் நீங்கள்!
வாழ்க்கையில் போராட்டம் உண்டு எங்களுக்கு!
வாழ்க்கையே போராட்டம் உங்களுக்கு!
நூறு கோடியில் சிறு புள்ளி நாங்கள்!
கோடியில் ஒருவர் நீங்கள்!
சிறு துன்பத்திற்க்கு கலங்கும் நாங்கள்!
பெரும் துன்பத்திற்க்கு கலங்காதவர் நீங்கள்!
வாழ்க்கையில் இருட்டு என வருந்துபவர் நாங்கள்!
இருட்டே வாழ்க்கை என்ற போதும்!
ஒளி ஏற்றுபவர் நீங்கள்!
இருக்கை பின்னத்தெரியாது பார்வையுள்ள!
எங்களுக்கு!
இருக்கையை சிறப்பாக பின்னுபவர்கள் நீங்கள்!
விழியில் தூசி விழுந்தால் துடிப்போம் நாங்கள்!
விழியே தூசியானதால் துடிப்பதில்லை நீங்கள்!
பிறந்தோம் இறந்தோம் என்பது எங்களுக்கு!
பிறந்தோம் சாதித்தோம் என்பது உங்களுக்கு.!
!
02.!
உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி!
------------------------------------------- !
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி!
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி!
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி!
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி!
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி!
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி!
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி!
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி!
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி!
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி!
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி!
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி!
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி!
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி!
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி!
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி!
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி!
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி!
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி!
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி!
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி!
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி!
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி!
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி!
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி!
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி!
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி!
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி!
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி!
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி!
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி!
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி!
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி!
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி!
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி!
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி!
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி!
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி!
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி!
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி