தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

மௌன மர்மம்

முஹம்மட் மஜிஸ்

பிரபஞ்ச பெருவெளியில்!
நம் தேசம் சபித்த ஓர்!
பொழுதில்!
அமானுஷ இரவுகளில்!
நித்திரை நிராகரித்த!
கண்கள்!
வழக்கமற்ற பகல்!
தூக்கத்தில்!
விசித்திர கனவெனக்கு!
வேற்றுக்கிரகத்திலிருந்து!
பல பறக்கும் தட்டுக்கள்!
நம் தேசம் நோக்கி வந்தன!
அதில்!
முகமூடி சப்பாத்து!
குருதி பருகும் ஒரு புது வகையான!
ஆயூதமென!
சில தடடுக்கள்!
நிரப்பப்பட்டிருந்தது!
கனவிலும் ஆச்சியமெனக்கு!
பல தட்டுக்களில்!
முற்றுமுழுதாக!
கிறிஸ் கொண்டு நிரப்பியிருந்தது!
இன்னும் சிலவற்றில்!
பாதி மனிதன் கலந்த!
புது சிருஷ்டிப்புக்கள்!
இருந்தன!
பெயர் சொல்ல தெரியவில்லை!
எனக்கு!
இன்னும் சில பறக்கும்!
தட்டுக்களில்!
சீருடைகளும்!
அடையாளம் காணாத வகையில்!
வெள்ளை நிறத்தில் சிலவூம்!
இருந்தன!
அது வெள்ளை வான் ஆகத்தான்!
இருக்கனும் போல!
கனவின்!
கடைசிக்கட்டத்தில்!
நான்!
கைது செய்யப்பட்டிருந்தேன்!
காரணமென அலரிய ஆபோது!
நாட்டில் மர்ம மனிதர்கள் என!
வதந்தி பரப்பினேனாம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

திக்கெட்டும் ஒலிக்கட்டும் தேமதுரத் தமிழோசை !

ப. மதியழகன்

சொற்கள் தீயை கக்கின!
அதைப் படித்தவர்கள் உள்ளம்!
விம்மி அடங்கின!
கலைத்தாயின் மகுடத்தில் வைரக்கல்லானான்!
தமிழ்த்தாயின் தவப்புதல்வர்களில்!
தங்கமகனானான்!
வறுமையின் கோரப்பிடி!
வாழ்விலோ பசி, பிணி!
சுற்றத்தினரின் கேலிச்சிரிப்பொலி!
உள்ளத்திலோ, பரங்கியர்களால்!
நயவஞ்சகமாக பந்தாடப்பட்டதனால்!
உண்டான வலி!
சிறைக்கதவுகளால் அவனது சிந்தனையை!
சிறைப்படுத்த இயலவில்லை!
அவனது சுதந்திர தாகம் மட்டும்!
இறுதி வரை தணியவே இல்லை!
முறுக்கு மீசை கொண்டவன்!
முத்தமிழையும் ஆகாய கங்கையென!
தமிழ் மண்ணெங்கும் பாய்ந்தோடச் செய்தான்!
முண்டாசு அணிந்தவன்!
ருத்ர தாண்டவமாடினான், கவிநாதனாக!
விடுதலை எழுச்சியை தேசத்தில் தோற்றுவிக்க!
மேற்கொண்ட பெரும் முயற்சிகளில்!
அவனே வித்தானான்!
அந்த விதை அழிந்த பின்பு தான்!
புரட்சி முளைவிட்டு விருட்சமாய்!
எழுந்து நின்றது!
காணி நிலம் அவன் கேட்ட போது!
கொடுக்கவில்லை பராசக்தி!
இன்று தமிழ் மண்ணெங்கும் பரவிக்கிடக்கின்றது!
அவனது உயிர்சக்தி!
ஆழிப்பேரலையை!
நேரில் கண்டுவிட்ட நாமனைவரும்!
அஞ்சிநடுங்குகிறோம், அல்லல்படுகின்றோம்!
அன்று செந்தமிழ்ச்சுனாமி மானிடனாய்!
வாழ்ந்து காவியங்கள் பல படைத்து!
பின்பொரு நாள் மத்திம வயதிலேயே!
மாயமானதை!
காலச்சுவடுகள் மூலம் அறிகிறோம்!
கோயில் யானை பாரதியின் தேகத்தை!
தனது துதிக்கையால் வீழ்த்தியது!
கருவறையில் சயனத்திலிருந்த பார்த்தசாரதி,!
கோயிலுக்கு உள்ளிருந்து ஓடோடி வந்தானய்யா!
குவளைக் கண்ணனாய்!
மகாகவிஞனை தனது தோளில்!
சுமந்தானய்யா!
யானை அறியாமல் செய்த பிழைக்கு!
பரிகாரம் செய்தானய்யா!
பார்த்தனுக்கு மட்டுமல்ல!
பாரதிக்கும் தானொரு சாரதி - என்று!
அன்று நிரூபித்துச் சென்றானய்யா!
அவன் பிராணன் அடங்கிய போது!
சடலத்தைச் சுமந்து மாயனம் நோக்கிச் சென்ற!
இறுதி ஊர்வலத்தில்!
விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச்சிலருடன்!
இடுகாடு வரை தமிழன்னை வந்தாள்!
தனக்காக வாழ்ந்தவனுக்கு!
வாழ்த்தி விடைகொடுக்க.... !