தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

பூம்

சித்தார்த்

இதோ இன்னொன்று. !
மிக அருகில். !
மிக மிக அருகில். !
சதை கருகும் வாசம் தலையை கனக்கவைக்கிறது. !
மனதையும். !
இது நரகம். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
ஆனாலும் இது நரகம். !
நரகத்தில் மரணம் இல்லை. !
அங்கு வாழ்வும் இல்லை. !
நரகத்தில் இழப்பே மிஞ்சும். !
அல்லது இழப்பின் அச்சம். !
நாகரீகம் வளர்த்தவர்கள் நாங்கள். !
இன்று காட்டு மிராண்டிகளாய் சித்தரிக்கப்படுகிறோம். !
இருப்பவனுக்கு பதவி வேண்டும். !
வருபவனுக்கு பணம் வேண்டும். !
இடையில் உருளும் பகடைகள் நாங்கள். !
உண்மை. நாங்கள் குறிபார்க்கப் படவில்லை. !
விழும் குண்டுகள் எங்களுக்கானவை அல்ல. !
எங்கள் மேல் விழுந்தால் தான் என்ன? !
இரண்டு வரி மன்னிப்பும், !
ஒரு நிமிட மௌன அஞ்சலியும் (நேரம் இருந்தால்) !
செலுத்தினால் போகிறது. !
வாழ்க மானுடம்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

கவிதைக்காரன்

சிவ. தினகரன்

கவிதைக்காரன்!
சொந்தமாய்!
ஏதும்!
எழுதுவதில்லை!
எதிரில் !
சுருங்கிய!
தேகத்துடன்!
வரும்!
மோர்!
கிழவியின்!
கூடையிலிருந்து!
முதல் கவிதை!
பருகிவிடுகிறான்!
ஓடும்!
ரயிலில்!
நடந்து!
வரும் !
விழியிழந்த!
பாட்டுக்காரனின்!
சட்டைப்பையிலிருந்து!
மற்றொன்று!
மருத்துவருக்கு!
காத்துக்கிடக்கும்!
இருக்கையின்!
பின்புறமிருந்து!
கிழித்துக்கொண்டு!
மருந்தை!
மறந்து!
வெளியேறுகிறான்.!
இருள்!
வீட்டின்!
கொல்லைபுற !
குழாயில்!
சொட்டும்!
இசையிலிருந்து!
யாருக்கும்!
தெரியாமல் !
எடுத்ததை!
எழுதுகிறான்!
திருடி!
எடுத்த!
மகிழ்ச்சியை!
இறகை வருடி!
கிடைத்த!
சோகத்தை !
சேர்த்து!
இனிதாய்!
முடிகிறது !
ஒரு!
தொகுப்பு.!
எல்லா!
வெளியும் !
கவி!
நிறைவதால் !
சொந்தமாய்!
ஏதும் !
எழுதுவதில்லை!
கவிதைக்காரன்.!
!
- சிவ. தினகரன்!
குன்றத்தூர்