தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

காயங்களுடன் ஒரு கன்னி மனசு

துர்ரத் புஷ்ரா

அசைந்தாடும் மரமே,!
நீ அசைந்தாடி என் மேனி முழுக்க பரவசப்படுத்துகிறாய்..!
நினைத்தேன் -நீ காற்றை தந்து மனம் மகிழ்விக்கும் மகா வள்ளல் என்று,!
உணர்கிறேன் -யான் கண்ட குட்டி அனுபவங்களால்,,!
நீ உன் மனம் குளிர!
கிளைக்கரம் உதரி-!
உன் களைகளான காய்ந்த சருகுகளை அகற்றுகிறாய் அல்லவா?!
நானும் என் மனத்தை கீரி களைகள் தேடுகிறேன்,!
காயம் தான் மிச்சம்,!
தேடிய களைகளை காணவில்லை..!
சடத்துவம் இல்லா ஒரு வெறுமை-!
உள்ளத்தின் ஒரு டம்மி வெடிப்புக்குள்..!
ஒரு வெளிச்சம் புகாதா?!
ஏங்குகிறது -நீரின்றி கண்ட கோடை வரட்சி...!
ஒரு மின்மினி பூச்சியும் இனி கதிரோன் தான்-!
இவ்வவலநிலை தொடர்ந்து விட்டால்..!
என் இரவுக்கும் ஒரு சூரியன் வராதா??!
அணை கடந்த வெள்ளமாய், பல சிகிச்சைகளுடன் -ஒரு கன்னி மனது

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

இனியும் பொழியேன்.. அரூபமானவன்

கிண்ணியா பாயிஸா அலி

01.!
இனியும் பொழியேன்!
---------------------------!
கத்தி முனையில் நடப்பதாகவும்!
நொறுங்கும் மெலிதான!
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான!
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்!
அலுவலகத்தில் வேணுமென்றால்!
தொடர்பாடலாம்.!
ஆனாலும் உன்னோடுமா..?!
பகலவன் வெம்மையில்!
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்!
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு!
உன் தொடர்புறக்கணிப்புகளால்.!
இன்னமும் எத்தனை தடவைகள்தான்!
தன்மானத்தைப் பிணை தருவது?!
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.!
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன!
இறுதிக்கணங்களில்கூட!
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்!
காயங்களின் அனுக்கங்களோடே!
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்!
அவமானங்களைச் சொட்டியபடி.!
முன்னைய தடவையும் போலல்லாது!
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்…!
இனியும் பொழியேனென் கிரணங்களை!
வெறுமனேயும்!
இனி!
ஒரு உலர் காட்டில் பரவும்!
பெருந்தீயின் அதிவேகங்களோடே!
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்!
பசியவனம்;!
இப்பிரபஞ்சமும் தாண்டியே…!
!
02.!
அரூபமானவன்!
--------------------!
அதீத முயல்வுகளினூடே சுபமாய் முடிவடைவதான!
மிகச்சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயெனை!
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட!
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்.!
வென்றுவிட வேண்டுமே யென்ற பதகளிப்போடு!
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.!
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று!
மிக அகங்காரமாய் தம்துர்க்கரங்களை!
உயர்த்தி உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட!
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.!
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே!
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே.!
நானறியாமலே நீர் பொசிந்து பொசிந்து!
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய!
நிறை கொள்கலனோ காலியாகிற்று!
சப்தமின்றியே.!
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா!
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.!
என்றைக்கும் என்றைக்கும் போலவே!
என் தொழுகைப்பாய் மட்டுமே!
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.!
நீ மட்டுமேன் மௌனமாகவே இருக்கிறாய்?!
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்!
முரண்கள் நெருக்கீடுகள் போலவே!
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?