தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

ஓடு மீன் ஓட

இப்னு ஹம்துன்

ஆழ்ந்தும்...!
ஒருமித்த மனதோடும்....!
என்னுள்ளும் தேடிப்பார்க்கிறேன்!
இன்னும் பணம்...!
இன்னும் பணம்... என!
எண்ணும் முதலாளிகளைப்போல!!
பறந்துவரும்!
பட்டாம்பூச்சியைப் போல!
வண்ணங்களாலும்!
வாசனைகளாலும்!
ஈர்க்கப்படவே செய்கிறேன்.!
காணும்போதெல்லாம்!
காதலை எதிர்பார்க்கும்!
விடலையைப் போல்!
கண்ணில் படுபவற்றை!
நிராகரிக்காமல்!
நிறுத்துப்பார்க்கிறேன்.!
பாகுபாடில்லாமல்!
ஏற்றுக்கொள்கிறேன் நதிகளை!
ஒரு கடலைப்போல்!!
என்றாலும்...!
எப்போதாவது தான்!
அகப்படுகின்றன!
எதிர்பார்க்கும் விதத்தில்!
கவிதைகள்!!
!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

ஜன்னல்

செ.இராமதனவந்தினி

என் வீட்டு ஜன்னலுக்குள்
சிறைபட்ட
நிலவை விடுவிக்க
சூரியனைத் தவிர வேறு
யாரால் முடியும்???