தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

சிட்டு க்குருவி !

வி. பிச்சுமணி

சிட்டு க்குருவிகளின் கிசு கிசுத்த!
காதல் பேச்சில்!
தூக்கம் கலைந்த ஆதவன்!
சினம் கொண்டு சிவந்தான்!
சுட்டெரிக்க பின் தொடர!
மரங்களில் மறைந்தன குருவிகள்!
கோபத்தில் தவறுதலாக கழுகுகளின்!
கழுத்தை கறுக்கினான்!
குருவிகள் கொரில்லா போர் முறையில்!
ஆதவனிடம் விளையாட்டு காட்டின!
நடுவானம் வந்து!
மனிதனை வெறுப்பேற்றினான்!
குடைகொண்டு தன்னாட்சி செய்த!
மனிதனின் அறிவு வியந்து!
சிட்டுக் குருவி மீதான கோபம் சொன்னான்!
ஆதவனுக்கு உதவ!
மனிதன் கைபேசி கோபரங்களை நட்டு!
சிட்டு குருவிகளின் சிறகுகளை!
காட்டுக்குள்ளே முடக்கினான்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

பறந்து போவதில்லை

நட்சத்ரவாசி

அடித்து துவைக்கும்!
பெண்களை!
எதிரொலி!
எழுப்பி!
நகைக்கிறாயே!
உன் சப்தத்தின்!
கூடு எங்கே!
திறந்து காட்டு!
**!
பூக்களைக் கொய்யும்!
சிறுமிகளை கவனியுங்கள்!
அவர்களின் கொய்தலுக்கும்!
சேகரிப்பிற்க்கும் இடையே!
எத்தனை சிரிப்புகள்!
யாராவது சொல்லியிருக்கவேண்டும்!
மறு நாளும் சிரிப்பொலிக்காகவே!
பூத்து குலுங்கும்!
மரத்தின் காத்திருப்பை!
**!
மழை பெய்து ஓய்ந்தாலும்!
வெள்ளம் கட்டி கிடக்கும்!
முற்றம் மாத்திரம்!
மழையை தானோ!
ஞாபக படுத்துகிறது!
வெறுங்கல்லோ!
மழையில் அடித்து!
வரப்பட்டதோ!
பூமியிழகி மேலெழுந்ததோ!
முற்றத்தை பெருக்காத!
போதும்!
முற்றத்தை யன்றோ!
பார்க்க தோன்றுகிறது!
**!
எழுதி எழுதி களைத்தாயோ!
என்று கேட்குமட்டும்!
ஆன உனக்கு!
நீண்ட நெடிய!
ஒரு இருப்பு!
ஆகவே ஆகாதடி!
கிளியே!
**!
பழைய கல்மண்டபத்தின்!
தூணிலிருக்கும்!
நாட்டிய மங்கை!
தீராத நடனத்தை!
முடிக்க கூடாதோ!
காலம் முடித்து!
வைக்கும்!
என்றொரு!
யோசனையோ?