தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அந்த நாட்கள்

சிலம்பூர் யுகா துபாய்

மனிததொழிற்சாலை!
மாசு நீக்கம்!
செய்யப்படுகிறதா!!
மழலைவேண்டி!
கருவறை!
மையாய்!
மடலெழுதுகிறதா!!
மாதம் ஒருமுறை!
மலர்களுக்குள்ளும்!
ரத்தபலியா!!
என்!
கிராமத்து சகோதரி!
கிழிந்தபாவாடைக்காரி!
இப்படித்தான்!
எண்ணுவாள்!
இந்த நாட்கள்மட்டும்!
இல்லையெனில்!
ஒட்டுபோட்டபாவாடையில்!
இன்னும்!
ஓராண்டுகழித்திருப்பேன்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

விபத்து.. காதல்.. வில்

ராம்ப்ரசாத், சென்னை

விபத்து!
--------------------!
அபாய வளைவை!
புருவங்களிலா வைப்பாய்!!
அடிக்கடி விபத்தில்!
சிக்கிக்கொள்கிறதே!
என் கண்கள் .....!
!
காதல்!
-------------!
நமக்குள் காதல்!
வந்து விட்டது...!
இனி,!
நீ யும் நானும்!
போய்த்தான் ஆகவேண்டும் ....!
!
வில்!
-------------!
ராமன் வளைத்த வில்!
ஒன்று என்கிறது சரித்திரம்...!
இரண்டு என்கிறேன் நான்...!
உன் புருவங்களைப் பார்த்துவிட்டு ...!
!
-ராம்ப்ரசாத், சென்னை