தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

அவளுக்கென்று ஓர் மனம் !

ப.மதியழகன்

உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே

தமிழ் ராஜா

சித்திரப் பெண்ணழகே ! உன்னை!
என் சிந்தையில் வைத்திடவே!
கண்மலர் பூத்தி டம்மா பாவையே!
பார்வை ஒருங்கிடவே !
என்னையே மனதில் வைத்தாய் !
என்னுடன் நினைவையும் சேர்த்து வைத்தாய்!
கண்ணிலே காதலையே கன்னியே!
என்னுள் ஏன் வைத்தாய் !
காலத்தின் வர்ணணையில் கன்னியே!
காதலின் சொல்லினிக்கும்!
வாழும் தீரத்தில் உள்ளதடி!
நம் காதலின் கண்ணியமே !
சேர்ந்து பிரிந்திடினும்!
பிரிந்து சேர்ந்திடினும்!
இருக்கும் பொழுதினிலே!
ஆன்மா இன்பம் களிக்குமடி !
சேர்ந்தப் பொழுதினிலே!
உன் அன்பு சாரம் புரியலையே!
உனை பிரிந்த காலத்தினிலே!
உனை தவிர யாரும் தெரியலையே !
சோகத்தின் ஆழத்திலே !
உயர்காதல் புரியுமடி!
அது காமத்தின் இன்பத்திலே!
ஊறி மகிழுமடி !
மனதில் பாட்டு உதிக்குதடி!
நீ என் பக்கமிருக்கையிலே!
அதனுள் இசையும் இணையதடி!
நீ என்னை விட்டுப் பிரிகையிலே !
உள்ளத்தில் குற்றமேதுவுமில்லை!
உன்னுடன் கூடி மகிழ்வதிலே !
ஊடலில் உனக்கு நிகருமில்லை!
குற்றமுண்டா! உன்னைப் புகழ்வதிலே.......... !