தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

காண வேண்டி

உமா

வியாபித்து இருந்தன
என் கனவுகள் புவனமெங்கும்
என்று உன்னை கண்டேனோ
அன்று முதலாய்
முகவரி கூட அறியா
உன் நினைவுகளுடனே
முடங்கி போயின அவை

வாகன நெரிசலில் கூட
பறந்து செல்லும்
பட்டாம் பூச்சியாய்
எங்கும்  உன்னை
தேடி  தொலைகிறது
என் மனம்!

என் வாழ்க்கை திருப்பத்தில்
தேடாமலே    கிடைத்தாய்!
கிடைத்தும்  தொலைத்தேன்!
தொலைத்தும்  தேடுகிறேன்!
தேற்றம்  அடைய  முயன்று
மறுபடி  தோற்கிறேன்
என்னிடமே  நான்!

என் இதய தோட்டத்தில்
காதல் மொட்டுக்கள்.
தவிப்பு  எனும் நெருப்பில்
ஜனகனின்  மகளாய்
தினம் தினம்
தீ குளிக்கிறது  என் மனம்
பூக்க  துடிக்கும்  அவைகளுக்கு
கண்ணீர் அல்ல
தரிசனம்  என்னும்
தண்ணீர் ஊற்றி  விட்டு  போ
உயிர் பெற்று விடும்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எங்கே சென்றாய் ? தனிமையில் நான் இங்கே

ஜெயந்த் கிருஷ்ணா

தூரமாகிறாயா இல்லை
மறைகிறாயா
என்னை தனியாக விட்டு
போகிறாயா.

எதற்காக நாம்
சேர்ந்தோம்?
எதற்காக நாம்
பிரிகிறோம்?

அந்த கண்கள்
அந்த புன்சிரிப்புகள் என்றும்
என் மனச்சிறையில்

தெரியாமல் தேடுகிறேன் என்றும்
காதலாய் நீ
என் அருகிலிருந்தாலும்.

எங்கே மறைந்தாய் நீ
ஒரு வார்த்தை கூட சொல்லாமல்
தூரமாய்.

காண்கிறேன் உன் முகம்
கேட்கிறேன் உன் குரல்
இடறாமல் பதறாமல் என்றும்.

தேவதையாய் நீ
வரும் நாள் பார்த்து
தனிமையில் நான் இங்கே