தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

இரவு மரம்

தீபச்செல்வன்

இரவு முழுவதும் நிலவு!
புதைந்து கிடந்தது!
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்!
எங்கள் கிராமமே!
மண்ணுக்குள்!
பதுங்கிக் கிடந்தது!
வானம்!
எல்லோரும் வெளியேறிய!
வீட்டின்!
சுவரில் ஒட்டியிருந்தது.!
நேற்று இறந்தவர்களின்!
குருதியில்!
விழுந்து வெடித்தன!
குண்டுகள்!
நாயும் நடுங்கியபடி!
பதுங்குகுழியின்!
இரண்டாவது படியிலிருக்கிறது.!
ஒவ்வொரு குண்டுகளும்!
விழும் பொழுதும்!
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்!
தொங்கு விளக்குகளை!
எங்கும்!
எறிந்து எரியவிட்டு!
விமானங்கள்!
குண்டுகளை கொட்டின.!
எங்கள் விளக்குகள்!
பதுங்குகுழியில்!
அணைந்து போனது!
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது!
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது!
எங்கள் சின்ன நகரமும்!
சூழ இருந்த கிராமங்களும்!
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.!
மெதுவாய் வெளியில்!
அழுதபடி வந்த!
நிலவை!
கொடூரப்பறவை!
வேகமாய் விழுங்கியது.!
இரவு முழுக்க விமானம்!
நிறைந்து கிடந்தது!
அகோர ஒலியை எங்கும்!
நிரப்பிவிட!
காற்று அறைந்துவிடுகிறது.!
தாக்குதலை முடித்த!
விமானங்கள்!
தளத்திற்கு திரும்புகின்றன!
இரவும் தீப்பிடித்து!
எரிந்துகொண்டிருந்தது!
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன!
சிதறிய பதுங்குகுழியின்!
ஒரு துண்டு!
இருளை பருகியபடி!
எனது தீபமாய் எரிந்து!
மரமாய் வளருகிறது.!
!
-தீபச்செல்வன்!
தீபம்

சமீபத்திய கவிதை

வலுக்கட்டாயமாக ஒரு முத்தம்

குரு

அனுமதி கேட்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...

ஆனால்..

வலுக்கட்டாயமாக
ஒரு முத்தம்...

மண்ணில் மழைத்துளி

குறிப்பில்லாக் கவிதை (random)

விமானம்

ஆ.முத்துராமலிங்கம்

சிறு பிராயத்தில்!
அலாதிப்பிரியம் விமானங்கள் மீது.!
!
வெகு உயரத்தில் குச்சியாய் செல்லும்!
விமானத்தை பலமுறை பார்த்தும் அதன்!
ஆச்சரியம் குறைந்ததில்லை.!
!
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கூட!
அதன் இறைச்சல் கேட்டு!
வெளிமுற்றத்திற்க்கோடிவந்து!
பார்த்திற்கின்றேன்.!
!
கோவில்கொடையில்!
சந்தையில் எங்கும் என்!
விளையாட்டுப் பொருளில் முதன்மை!
வகித்தது விமானம்.!
!
சில தினங்களுக்கு முன் கூட!
அதன் நினைவுகள்!
பூட்டிய என் உதடுகளுக்குள்!
சிறு புன்னகையை மிச்சம் வைத்திருந்தது.!
!
ஆனால் இன்று என் பிள்ளைகள்!
விமானச்சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று!
பதுங்குக்குழிக்குள் புகும் அவலம் பார்த்து!
அறைகின்றது! விமானம் ரசித்த என் நெஞ்சை.!
!
விமானம் குறித்த என்!
ரசனையும், ஆச்சரியமும்!
கைநழுவி விழுந்த பீங்கான்!
கோப்பையைப் போல!
உடைந்து சிதறிவிட்டது.!
!
பாட்டி சொல்லும் பேய் கதைகளைப் போல்!
பயத்தை நிறப்புகின்றது விமானங்களும்!
அதன் செயல்களும்.!
!
-ஆ.முத்துராமலிங்கம்!
சாலிகிராமம்