தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

பறவைகள் உலகம்

வசந்த் கதிரவன்

எல்லாப் பறவைகளுமே !
கழுகின் கண்ணும் !
கிளியின் மூக்கும் !
மயிலின் தோகையும் !
தேடி ஓடுகின்றன !
குயிலின் குரலை !
வாங்கிய சேவலொன்று !
’நல்ல டிமாண்ட் சார், ரேட் தான் ஜாஸ்தி’ !
படியேறி வந்து புலம்பியது !
பறக்க ஆசை தான் !
பறப்பது பற்றி பேசும் போதெல்லாம் !
முதலில் பறப்பது பற்றி !
விளக்க வேண்டியிருக்கிறது !
உயரம் கூறும் போது தான் !
கவலை கொள்கின்றன !
இந்தப் பறவைகள் !
இட்ட முட்டைகள் !
இங்கே தான் இருக்கின்றன !
ரைட்டும் லெப்ட்டும் !
ஸ்ட்ரைட்டுமே திசைகளாய் !
பதிக்கப்பட்ட குஞ்சுகள் உறையும் !
அக்மார்க் முட்டைகள் !
றெக்கைக்கு உறையிட்டு வெளி வந்த குஞ்சொன்று !
பைக் உதைத்துக் கடந்தது !
நிறமற்ற நாயும் பின் சென்றது

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

செந்தமிழ்

த.தயாநிதி

செந்தமிழ் உறவுகள் சிந்திய சென்னீர்!
சொந்தமாய் தேசம் அமைந்திடத் தானே !!
பைந்தமிழ் தாயின் விலங்கினை உடைத்து!
சுதந்திர ஈழம் அமைத்தவர் வாழ்க.!
யாகங்கள் நடத்தி தியாகங்கள் செய்த!
புலி வீரரை மனதினில் நிறுத்து.!
ஈகங்கள் புரிந்த புலி வீரரின்!
நாமத்தை உந்தன் பிள்ளைக்கு சூட்டு.!
சிங்கள வெறியரின் ஊழிக் கூத்திற்கு!
மங்களம் பாடிய தலைவனைப் பாடு.!
மலர்ந்த நம் ஈழத்தில் கலைந்த எம்!
சொந்தங்கள் கூடியே குலவிடும்!
காட்சியை பெருமையாய் பாடு.!
விதியினை விரட்டிய வீரரை வாழ்த்திட!
வீதிக்கு வீதி விரைவதைப் பாரும்.!
மட்டில்லா மகிழ்வோடு வெற்றியின் முரசம்!
கொட்டுது கேளும். மாவிலை, தோரணம்,!
வாசலில் தொங்கிட, மங்கள வாத்திய!
வரவேற்பை, பார்க்கலாம் வாரும்.!
வல்லரசின் வல்லமைகள் விழி அகல!
வியந்து வருவதைக் காணலாம் வாரும்.!
தனி ஒருஅரசென அமைந்ததை பாரும்.!
இனி ஒரு துயர் எமக்கேது கூறும்?!
த.தயாநிதி!
பிரான்ஸ்!
23.03;.08