தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

குழுக்களா.. கூட்டமு..நல்லறி..வெருவினார்

எசேக்கியல் காளியப்பன்

குழுக்களாய் முன்னே செல்வோம்!.. கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!..வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
01.!
குழுக்களாய் முன்னே செல்வோம்!!
---------------------------------------------!
நேரு வேலை வாய்ப்புத் திட்டம்!
கூறி அழைத்துக் கொடுத்த வேலையைச்!
சீருடன் செய்து சிறப்புடன் முடித்து!
நேரிய வழியில் நிதம்பெறும் கூலி!
சேரிடம் மதுக்கடை இலதாய், உள்ளம்!
தேரிய மக்கள் திருந்திய பேராய்!
வாரி முடித்து,அவர் வாரிசுக ளுடனே!
பூரித் திருக்கும் பூவையர் கைகளில்!
சேர்த்து மகிழும் சிறப்பினைப்!
பார்த்தெம் மனமும் பரவசம் உறுமே!!
நாட்டிலே ஆட்சி செய்வோர்!
-நலம்பல பெருகும் வண்ணம்!
கூட்டிடும் திட்டம் எல்லாம்!
-குறித்தவா றெடுத்துச் செல்ல!
நாட்டமும் மக்கள் கொள்ள!
-நன்மைகள் விலகிப் போமோ?!
கோட்டமும் மனத்து நீக்கிக்!
குழுக்களாய் முன்னே செல்வோம்?!
02.!
கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!!
-------------------------------------------------!
விதியென் றென்னை!
வீதியில் விட்டவன்!
கதியினை எனது !
கைகளில் எடுத்தேன்!!
களிமண் பிசைந்தேன்;!
கடவுளாய் மாற்றினேன்!!
ஒளிர்வண்ணக் கலவையை!
ஊற்றியே மினுக்கினேன்!!
விழியெலாம் திறந்து!
வியப்புடன் பார்த்தனர்!!
வழியெலாம் வைத்து!
வழிபா டெடுத்தனர்!!
படைத்தவன் என்னைப்!
பாடிட மறந்து!
படைப்பினைப் போற்றிப்!
பாடியே மகிழ்ந்தனர்!!
அலைகடல் அடைந்தே!
ஆட்டமும் நிற்கும்;!
சிலைகளாய்க் கடவுளர்!
சிறுத்துள் மறைவர்!!
கூட்டமும் மறையும்;!
கூறுகள் கலையும்!!
பாட்டினை அலைகள்!
பாடியே திரும்பும்!!
03.!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
-----------------------------------------------------!
ஏட்டினிலே இருப்பதையே எடுத்துச் சொல்லி!
எக்கேடும் கெட்டுப்போ என்றி ராமல்!
கூட்டினிலே மகிழ்ந்திடவும் குறிக்கோள் தன்னைக்!
கூடிவரும் மாணவர்க்குக் காட்டி நின்றும்,!
ஆட்டபாட்டம் இருந்தாலும் அறிவுத் தாகம்!
அமைந்தவொரு பருவத்தின் அழகை யூட்டித்!
தோட்டமிந்த உலகிதிலே மலர்கள் நீங்கள்!
தொடர்ந்துமணம் வீசுமென அனுப்பி வைக்கும்!
நாட்டமெலாம் நன்மைக்காய் நாடு யர்த்தும்,!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
வாட்டமிலா இளைஞரினம் வளர நாடும்!
வளருமென அவர்பணியை வாழ்த்து வோமே!!
04.!
வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
---------------------------------------------------------!
புரணிகள் தவிர்க்க வாரீர்!!
பூசலை ஒழிக்க வாரீர்!!
கரணிகள் கண்ட றிந்து !
[கரணி= மருந்து]!
காழ்ப்புகள் போக்க வாரீர்!!
பரணியும் பாட வாரீர்!;!
பாரிதில் மகிழ வாரீர்!!
தரணியை வெல்ல வாரீர்!!
தமிழையும் உயர்த்த வாரீர்!!
சிரசினில் கோபம் ஏறச்!
சிந்தனை கெட்டுப் போகும்!
உரசிடும் பொருட்கள் சூட்டை!
உதறிடப் போமோ? காந்தி!
பெருமையை மறந்து விட்டோ!
பிரிவினைக் குதவி நிற்போம்!!
விரலென அழுக விட்டால்!
விக்கினம் உடலுக் கன்றோ?!
ஒருவிரல் என்று நாட்டை!
உயர்த்தியே காட்டி அன்றே!
உருவிய வாளைக் கூட!
உறையினுள் அனுப்பக் கண்டோம்!!
வெருவினார்க்(கு) அஹிம்சை வாழ்க்கை!
வீரமாய்த் தோன்றி டாது!!
பொருதலால் அழிவே மிஞ்சும்!
புரிய ஏன் மறுக்கின் றீரோ?

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

திறக்கும் உடல்..மௌனம்.. முதல் காதல்

ப . ஜெயபால்

திறக்கும் உடல்!
01.!
---------------------!
என் உடலை!
படிக்கும் பொழுது!
நிசியில்!
கனவு எழுதும் விடை!
கடவுளாக, மானிடனாக, பிணமாக!
சில பக்கங்களை நிரப்பிக்கொள்ள!
சில பக்கங்கள்!
ஆடை இழந்தும்!
சில பக்கங்கள்!
புணர்ச்சிக்குள்ளாகியும்!
சில பக்கங்கள்!
ஓட முடியாமல்!
களைப்படைந்தும் போகின்றன!
மரத்தினைச் சுற்றித்திறியும் !
பித்தனாகவும்!
நடைபாதையில் தர்க்கமிட்டுத்திறியும்!
தத்துவனாகவும்!
சில காட்சிகள் அகப்படுகின்றன!
சம்மந்தமற்ற!
சில பக்கங்கள்!
இடைச்செருகலாகிப்போக!
பேய்களின் வயற்றுப்பசிக்கு!
இரையாகிப்போன!
சில பக்கங்களையும் காணமுடிந்தது!
ஒவ்வொரு நாள் இரவும்!
படிக்கப்படும் கடைசிப்பக்கம்!
முடிவற்று நிற்கிறது..!
களைப்படைந்து கண்கள்!
விழிக்கும் தருணங்களில்!
உடல் மூடிக்கொள்கிறது..!
மறுநாள் திறக்கப்படும் உடல்!
என்னவாக இருக்கும்...!
02.!
மௌனம்!
-----------------!
இந்த நிமிடம்!
அவன் மௌனித்ததற்கு...!
அவனை விட்டுச் சென்ற!
காதலை நினைத்திருக்கலாம்!
நீண்ட நாட்களுக்கு முன் கூறிய!
ஒரு பொய்யை நினைகூட்டியிருக்கலாம்!
பிரிந்து வந்த வீட்டை!
நினைவுப்படுத்தியிருக்கலாம்!
பழைய நண்பரை..!
கோபத்தை..!
பாவத்தை..!
பழிச் சொல்லை..!
சபலத்தை..!
வலியை..!
வேதனையை..!
ஏன் வெறுமனேகூட!
மௌனித்திருக்கலாம்..!
அவன் மௌனம்!
ஏதோ ஒன்றினால்!
இப்பொழுது நிரம்பிக்கொண்டிருகின்றது...!
!
03.!
முதல் காதல்!
-----------------!
உதிரும் மலர்!
உதிரும் பனித்துளி!
உதிரும் சிரிப்பு!
உதிரும் பேச்சு!
உதிரும் வெட்கம்!
உதிரும் பார்வை!
உதிரும் மௌனம்!
இவைகளில் முளைத்துவிடுகிறது!
காதல்