தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நம்பிக்கை வை

கலைமகன் பைரூஸ்

வாழ்க்கை
இது மானுடனுக்கு மட்டுமல்ல
ஏனைய சீவராசிகளுக்குந்தான்!
திமிர்பிடித்த
ஏறுகள் உன்மேலேறி
உனை மிதிக்க வரும்.
எடுப்பார் கைப்பிள்ளையாய்கொண்டு
மேலே தூக்கி கீழேபோடுவர்
மிட்டாய்கள் காட்டி
தலையைத் தடவி
கண்மயிரைப் பிடுங்குவர்.
உன் திறமைகளை எள்ளி நகையாடுவர்
உன்னில் நீ நம்பிக்கைவை!
உன்னை நம்பு
உனக்குள் ஆயிரமாயிரம்
வேர்கள் முளைகொள்வதைத்தெளி!

நானோ நன்குபட்டவன்.
சமூகம் – சகபாடிகள்
நாடு -பெரியவர்கள் என்போர்
பேச்சளவில் உயரப்பேசுவர்
பூச்சியம்...
எல்லாம் பூச்சியம்.


உன்கையெழுத்தை கண்டு
உன் தலையெழுத்தைச்சொலும்
சூன்யங்களும் உண்டு!

சுரமில்லா கீதங்கள்கொண்டு
உனையேற்றிப் புகழ்வர்
ஈரமில்லா நெஞ்சுடையாரின்
ஈசல் வார்த்தைகளுக்குள்
உனை இழக்காதே!

வறுமை உன்னோடு ஒட்டிப்பிறந்த்து
அதற்காக
எருமைகள் குட்டையைக் குழப்புவதை
ஏரெடுத்தும் பாராதே!
உன்னில் நீ நம்பிக்கைவை
நம்பி நீ எதிலும்கைவை
வாழ்க்கையில் சறுக்காதவர்கள்
எவர் உளர்? புன்னகை
உன்னில் புன்னகை மலரும்


இன்று
உயரப் பேசப்படுபவர்கள்
அன்று
துன்பத்தின் சிகரத்தில்
ஊசிக்கயிறில்
நடந்து
சிறந்து பேறுகண்டவர்கள்!
உன்னில் நம்பிக்கைவை!

உன் மயிர்பிடுங்கி
உனைத் தரமிறக்கி
உன்னிதயத்தை
சல்லடையாக்கி
சந்தர்ப்பம் வரும்போது
உனை மேலேஅனுப்பிட
உள்ள சாரார்பற்றி
தெள்ளத் தெளி!

வாழ்வில் சறுக்கல்களுக்கு
துவண்டுவிடாதே!
உனை நம்பி கிழக்கில்
ஒளிக்கீற்றுக்கள் வருவதைப் பார்!
பார் ஒருநாள் உனை ஏத்தும்!
ஏன்
உனை இழிந்தோர்கூட
உன்பாதம் போற்றிநிற்பர்

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

ஓலைக்குடில்

ப. கரிகாலன்

கடல் உப்புக்காற்று சில்லென மேனி தடவ !
உச்சி வெய்யில் உசிரை உலுப்ப!
துடுப்பின் வலிப்பில் !
நீரினோசை நிசப்தத்தை !
நிர்மூலமாக்க!
கடல் நாரைகளின் நாட்டம் !
படகின் மீன்களை நாட!
கரையைத் தேடி!
ஓய்வின்றி வலிக்கின்றான்….!
நிலையற்ற இவ்வாழ்வில்!
நிம்மதி தேடும் ஈழத்து மீனவன்!
ஓலைக்குடிலில் ஒரு கஞ்சி சோற்றுக்கு!
நாய் படாப்பாடு என எண்ணத் !
தோன்றாதவனாய்!
கடலன்னையின் அரவணைப்பில்!
பழகிப்போன அவன் வாழ்வில் நித்தமும்!
ஒரு நம்பிக்கை பெருமூச்சு.....!
ஈழப்போரிலும்!
ஆழிப்பேரலையிலும் !
உருக்குலைந்த வாழ்க்கையை!
செப்பனிட நாதியற்றவனாய்...!
ஏலேலோ ஐலசா காற்றினில் மிதந்துவர!
அவன் மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்!
கரையைத்தேடி படகை வலிக்கின்றான்…