தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

வாழ்க உன்..முடி வெட்டிய..மன்னித்துவிடு

முல்லை அமுதன்

வாழ்க உன் அரசியல்..முடி வெட்டிய ஒரு நாளில்.. மன்னித்துவிடு!
01.!
வாழ்க உன் அரசியல்!
----------------------!
இருக்கும் வரை!
ஏமாற்றிக்கொள்!
அழகு-!
அரசியல்வாதியாய் இருப்பது..!
கிடைத்தவரை!
வசதியாக!
உட்கார்ந்து கொள்!
கதிரை கவனம்...!
உட்கார்ந்திருக்கையிலேயே!
களவாடப்படும்!
அபாயமும் இருக்கிறது..!
மக்களைப்!
பற்றிய கவலை!
எதற்கு?!
கட்சி சொன்னதைச் செய்..!
விரும்பினால்!
விபச்சாரமும் செய்..!
அடுத்த தேர்தல்வரை!
யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள்.!
மக்கள் பற்றிய!
கவலை!
இல்லாதபட்சத்தில்!
இனம் பற்றிய கவலை எதற்கு?!
சமயங்களில்!
உன் இனம் என்ன!
என்பதையே மறந்துவிடு..!
எப்போதும் பெட்டி!
நிரம்பியே இருக்கட்டும்.!
கட்சித்தலைவர்!
வனவாசம் போகச் சொன்னாலும்!
தேவைப்படலாம்.!
தலைவர் பதவிக்கும்!
தேவைப்படலாம்.!
உன் பாட்டில் முன்னேறு..!
உலகம்!
அரசியல் பற்றி!
இப்படித்தான்!
சொல்லி வைத்திருக்கிறது..!
அடுத்த தேர்தல் வரை!
உனது ராஜாங்கம்..!
கிரீடம் பத்திரம்..!
சாமரம்!
வீசுபவர்களை!
முடிந்தவரை அதிகரித்துக் கொள்.!
எப்பவும்!
கொன்று வா என்று சொல்..!
பிறகு சொல்!
கொண்டு வா என்று தானே சொன்னேன் என்று...!
கட்சி எவ்வழி!
நீயும் அவ்வழி!
வாழ்க உன் அரசியல்..!
02.!
முடி வெட்டிய ஒரு நாளில்..!
-----------------------------------!
முடியைச் சரிசெய்து!
இப்போதுதான்!
வந்தேன்..!
தொட்டுக்கொள்ள!
எதுவும் இல்லை!
என்று!
மகள் சிணுங்கினாள்.!
முத்தமிடும் பொழுதுகளில்!
கோட்திக் கொள்ளும்!
சுவாரஸ்யம் !
எனி!
இல்லை!
என்று மனைவி!
காதில் கிசுகிசுத்தாள்.!
முன்பு!
ஊரில் அப்பாவும்!
முடி வெட்டிக்கொள் !
என்று!
நச்சரித்தார்.!
முடியுடன்!
அழகாய் தெரிகிறீர்கள்!
என்ற!
அவளின்!
கனவுகளும் கண்களில்!
தெரிந்தன.!
அம்மாவும்!
வசதியாக!
கோபப்படும் போது!
முடியைப் பிடித்திழுத்து!
ஒங்கி அறைவது!
இப்போதும்!
வலிக்கிறது.!
இப்படிப் பரட்டையாய் வராதே!
என்!
கல்லூரி!
அதிபரும் முழங்காலில்!
நிற்கும் தண்டனையை!
அந்!
நாளில்!
தந்ததை!
முழங்காலும் மறக்காது.!
புகைவண்டிப் பயணதில்!
சன்னல்கரையோரம்!
உட்கார்ந்தபடி!
வெளியே தோழிகளுடன்!
நடக்கும்!
அவள்களை!
பார்த்தபடி!
முடியை சரிசெய்யும்!
குதூகலம்!
இப்போதும் இனிக்கிறது...!
நண்பனுடன் சண்டையிடுகையிலும்,!
அக்காளின் !
கோபத்திற்காளாகும் போதும்!
என் முடி தப்புவதில்லை...!
இப்போது முடி!
குறைந்துவிட்டது!
பற்றி!
எனக்கில்லாத !
கவலை இவர்களுக்கெதற்கு?!
முடி இல்லாமல்!
வாழ்ந்து பார்!
கவரிமான் தோற்றுப்போகும்...!
!
03.!
மன்னித்துவிடு!
---------------------!
உனக்கு!
வாழ்த்துச் சொல்லமுடியாதபடி!
முடமாய் நான்..!
77இன் பின் !
தெளிக்கப்பட்ட அரசியல்!
சாக்கடை நாற்றம்!
என் நாசியில்!
ஒட்டிக் கொண்டிருக்கிறது.!
அரசியல் கதிரைகள்!
உன்னால் கழுவப்படுமானால்!
சந்தோசப்படுவேன்.!
ஆனாலும்,!
மக்களின்!
மரணதிற்கு!
உன் அரசியலும் காரணம் தானே?!
இறந்து வீழ்ந்த!
என் குழந்தையின் முண்டத்தை!
தூக்கிய!
கைகளின் குருதி ஈரம் காய்வதற்குள்!
விரல்களைக் கேட்கிறாய்..!
புள்ளியிட-!
விரல்கள் இல்லையே

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

எனது மண்ணும் எனது வீடும்!

நடராஜா முரளிதரன், கனடா

என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக!
எனது வீட்டுக்குச் செல்லும்!
வாகனத்தை எதிர்நோக்கிக்!
காத்திருக்கின்றேன்!
எந்த வாகனங்களும் என்னை!
ஏற்றிக் கொள்ளவில்லை!
காலணியற்ற பாதத்தோடு!
எவ்வளவு காத தூரம்!
நடந்து விட்டேன்!
எத்தனை கனவுகளோடு!
எனது வீடு நோக்கிய!
பயணத்தை ஆரம்பித்திருப்பேன்!
வீட்டு வாசலிலே எனக்காக!
வேம்புகளும் பூவரசுகளும்!
இன்னும் காத்தபடியிருக்கின்றன!
என்ற நம்பிக்கைகளை!
என்னால் இழக்க முடிவதில்லை!
ஆனாலும் எனது வீடு!
அழிந்து தரை மட்டமாகி!
மண்மேடாகி இருப்பதாகவும்!
அதன் மீது பற்றைக் காடுகள்!
செழித்து வளர்ந்திருப்பதாகவும்!
சேதிகள் வருகின்றன!
ஆயினும் நான்!
அங்கு சென்றடைந்தால்!
ஒரு சிறு குடிலையாவது!
என்னால் அமைத்து விட முடியும்!
அங்கு எனக்கான வானமும்!
நட்சத்திரங்களும் காற்றும்!
என்னோடு உரையாடுவதற்காக!
எதிர்பார்த்தபடியிருக்கின்றன!
எனது முன்னோர்கள்!
எரியுண்ட புதையுண்ட!
அந்த இடுகாட்டு மண்ணிலே!
எஞ்சியிருக்கும் எலும்புத் துண்டுகளில்!
ஒன்றையேனும் நான்!
மாலையாக அணிந்து கொள்வேன்!
ஆலமரத்துக் காளியிடம்!
பகிர்ந்து கொள்வதற்காக!
நான் பல கதைகளை!
என்னுள்ளே வைத்திருக்கின்றேன்!
அருகிலே சூலத்தோடு வீற்றிருக்கும்!
வைரவர் முன்னே!
சுடலைச் சாம்பரைப் பூசி!
கலையொன்றை ஆடுவதற்கு!
உடுக்கை அடிப்பவர் எங்கே!