தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

விதி வசத்தால்

அனாமிகா பிரித்திமா

உங்களை கைப்பிடிக்கும் வரை...!
தமிழ் தெரியாது...!
முழுமையாய்...!
பிடித்தபின் உங்களை...!
ரசித்ததாலேயே...!
தமிழைக் கற்றுக்கொண்டேன்...!
முழுதாய் கற்று...!
முடிக்கும் முன்னே...!
விதி வேறு விதமாக...!
இருவரையும் இழுத்துச்சென்றது...!
கவிதை எழுதுவேன் என்று...!
கனவிலும் நினைக்கவில்லை...!
கற்று கொடுத்த ஆசான் நீங்கள்...!
கண்ணீருடன் என் நன்றிகள்...!
பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்...!
நான் கவிதைக்காரி அல்ல...!
ஆனால் இன்று விதி வசத்தால்...!
எழுதுகிறேன்...!
எழுதுவேன்...!
!
-அனாமிகா பிரித்திமா!
()

சமீபத்திய கவிதை

இரண்டாவது பழம்!

கவிதா. நோர்வே

பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

குறிப்பில்லாக் கவிதை (random)

உதிரி பூக்கள்

பாரதிபிரியா

 
நின் நினைவுகலில்லாமல் என்
ஒரு பொழுதும் கரைந்ததில்லை.....
அனைத்துமாயிருப்பேனென்றாய்..
ஆற்றில் விட்டு சென்றுவிட்டாய்!

கல்லெறிபட்டு சிலையாகலாம்..
சொல்லெறிபட்டு மெளுகானேன்!
வார்த்தைகளின் வலிமையால்
வாழ்க்கை வினாவாகிப்போனது! ஆனாலும்

காற்றுவெளியில் உன் அன்பை
சுவாசித்து... சின்ன உயிரை
இன்னும் சுமக்கிறேன்...
நிச்சயமாக நீ வருவாயென்று!

நீ பேசிய வார்த்தைகள்....
நீ செய்த சத்தியங்கள்.....
நீ தந்த வாக்குறுதிகள்....
எல்லமே என்னோடு மண்ணாகிடலாம்..! ஆனாலும்

நான் கொன்ட பாசம்
நான் உள்ளவரை உன்னோடுதான்!
நீ நிலை மாறினாலும்... நான்
நானாகவே ... உன் நினைவோடும்!

காத்திருந்த பொழுதுகளெல்லாம்....
ஏளனமாய் நகைக்கிறது!
கடந்து வந்த பாதையெல்லாம்
தீயாய் சுடுகிறது....!

பூக்காட்டில்  நானிருந்தும்
கூந்தலில் பூக்களில்லை....!
சுடுகாடு சேரும் நாளிலேனும்....
மலர் மாலையோடு வந்துவிடு..!