அந்த வறண்ட!
வான் நிலத்தில்!
மின்னல்கள்!
வேர்களாய்த் துளிர்விட்டு!
சூய மரமாகி!
ஒளிக்கதிர்கள்!
கிளைகளாக விரிந்தபோது!
வானவில்லாய்!
நிறம் மாறி உதிர்ந்த!
இலைகளின்அசைவில் மேகக் கூட்டங்களின்!
திரை விலக.....!
நட்சத்திரப் பூக்களின்!
நிழலில்!
பல கோள்களும்!
சுழல!
வளர்ந்து!
தேய்ந்து கொண்டிருந்த!
அந்த நிலவின் கூட்டில்.........!
காயமில வாயுக்களும்!
பிராண வாயுக்களும்!
புணர்தலும் புணர்தல்!
நிமிர்த்தமான வேளையிலே!
எறிகற்களின் விழுதுகள்!
ஒன்றுடன் ஒன்று!
ஒன்றி உரச!
எறும்புக் கூட்டங்கள்!
தனது கருமுட்டைகளோடு!
அதள பாதளம் நோக்கி!
பூமியைக் குடைந்தபோது!
விஞ்ஞான மனிதர்கள்!
உருவாக்கிய ஏவுகணை!
முடியைத் தேடிப் பறந்தன!
பன்றி வேடமிட்ட!
மனிதர்கள்!
கடவுளின் கால் தடத்தைத்!
தேடி அலைந்தனர்......!
இயற்கையின் பிடியில்!
இறுகிய!
இந்தப் பூமியின்!
தொங்கு தோட்டமான!
சகாரா!
சாகா வரம் பெற்ற!
திரிசங்கு சொர்க்கம்
இன்பசுதேந்திரன்