தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்!

எம்.ரிஷான் ஷெரீப்
பாகங்களாக உடைந்திருக்கிறது!
அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு!
தென்படும் முழு நிலவு!
விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன!
வனத்தின் எல்லை மர வேர்களை!
தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில்!
இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள்!
காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை!
ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும்!
வலையினில் சிக்கிக் கொள்கிறது!
தண்ணீரில் முளைத்த பௌர்ணமி!
வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று!
ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ!
எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல்!
சலசலத்து எழுப்பும் இசை!
தேனீக்களுக்குத் தாலாட்டோ!
எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர்,!
சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு!
தூய மலர்களோடு அணிவகுக்கும்!
வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு!
வழிகாட்டும் நிலவின் விம்பம்!
அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது!
நீரின் மேல் மிதந்த நிலவு!
அசைந்து அசைந்து மூழ்கும் காலை!
தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில்!
தொலைதூரச் செல்லும் பறவைகள்!
தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு!
தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான்!
சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

துயர் விழுங்கிப் பறத்தல்!

எம்.ரிஷான் ஷெரீப்
பறந்திடப் பல!
திசைகளிருந்தனவெனினும்!
அப் பேரண்டத்திடம்!
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ!
சௌபாக்கியங்கள் நிறைந்த!
வழியொன்றைக் காட்டிடவெனவோ!
கரங்களெதுவுமிருக்கவில்லை !
ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி!
ஒவ்வொரு பொழுதும்!
காற்று ரணமாய்க் கிழிக்கையில்!
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல!
தன் சிறகுகளால்!
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்!
முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்!
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து!
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்!
மிதந்தலையும் தன் கீழுடலால்!
மிதித்திற்று உலகையோர் நாள்!
பறவையின் மென்னுடலின் கீழ்!
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்!
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து!
தெறித்த குருதியைப் பருகிப் பருகி!
வனாந்தரங்களும் தாவரங்களும்!
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட!
வலி தாள இயலா நிலம் அழுதழுது!
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து!
ஓடைகள் நதிகள்!
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட!
விருட்சக் கிளைகள்!
நிலம் நீர்நிலைகளெனத் தான்!
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்!
தடயங்களெதனையும் தன்!
மெலிந்த விரல்களிலோ!
விரிந்த சிறகுகளிலோ!
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு!
வெளிறிய ஆகாயம் அதிர அதிர!
தொலைதுருவமேகிற்று!
தனித்த பறவை

சாகசக்காரியின் வெளி!

எம்.ரிஷான் ஷெரீப்
அதீத மனங்களில் மிதந்து வழியும்!
ஆசைகளை அவளறிவாள்!
தன் வஞ்சக விழிகளில் சிரித்து!
மென்மை வழியும் குரலினை!
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி!
தூண்டிலென எறிவாள்!
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட!
பிஞ்சுமனங்களை அவளிடம்!
கொடுத்துப் பார்த்திருங்கள்!
அல்லது!
உலகம் மிகவும் நல்லதெனச்!
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை!
அவளிடம் விடுங்கள்!
அம் மனிதன் தானாகவே!
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை!
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான!
நஞ்சை மிடறாக்கி!
அருந்த வைத்திருப்பாள் அவள்!
கைவசமிருக்கும்!
எல்லா நெஞ்சங்களையும்!
கெட்டதாக்கி அழுகவைத்துப்!
பின்னொருநாள் புது இதயங்களுக்கு!
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்!
அழுதழுது நீங்கள்!
அவளைத் தேடிச் சென்றால்!
உங்களைத் திரும்பச் சொல்லி!
மென்மையானதென நீங்கள் சொல்லும்!
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்!
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்!
எச்சிலோடு காறி உங்கள்!
வாடிய முகங்களில் துப்பிடுவாள்!
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை!
வக்கிரங்களறியவென!
அவளிடம் கொடுத்த நீங்கள்!
இதையெல்லாம்!
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
ஏனெனில் அவள்!
சாகசக்கார வெளியில்!
வன்முறைகளை விதைப்பவள்!
சாகசக்காரியின் வெளி!
அதீத மனங்களில் மிதந்து வழியும்!
ஆசைகளை அவளறிவாள்!
தன் வஞ்சக விழிகளில் சிரித்து!
மென்மை வழியும் குரலினை!
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி!
தூண்டிலென எறிவாள்!
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட!
பிஞ்சுமனங்களை அவளிடம்!
கொடுத்துப் பார்த்திருங்கள்!
அல்லது!
உலகம் மிகவும் நல்லதெனச்!
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை!
அவளிடம் விடுங்கள்!
அம் மனிதன் தானாகவே!
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை!
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான!
நஞ்சை மிடறாக்கி!
அருந்த வைத்திருப்பாள் அவள்!
கைவசமிருக்கும்!
எல்லா நெஞ்சங்களையும்!
கெட்டதாக்கி அழுகவைத்துப்!
பின்னொருநாள் புது இதயங்களுக்கு!
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்!
அழுதழுது நீங்கள்!
அவளைத் தேடிச் சென்றால்!
உங்களைத் திரும்பச் சொல்லி!
மென்மையானதென நீங்கள் சொல்லும்!
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்!
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்!
எச்சிலோடு காறி உங்கள்!
வாடிய முகங்களில் துப்பிடுவாள்!
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை!
வக்கிரங்களறியவென!
அவளிடம் கொடுத்த நீங்கள்!
இதையெல்லாம்!
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்!
ஏனெனில் அவள்!
சாகசக்கார வெளியில்!
வன்முறைகளை விதைப்பவள்!

செங்குருவி!

எம்.ரிஷான் ஷெரீப்
மான்கள் துள்ளும் அவ் வனத்தில்!
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்!
தனித்த மீன்கொத்தியொன்று அமரும் கிளைக்கு!
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்!
செங்குருவிக்குப் பிடித்தமானது!
அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து!
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்!
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்!
குளத்தில் விட்டு வரும் செங்குருவி!
கிளையில் அமர்ந்திருக்கும்!
தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு!
சொன்ன கதைகளையெல்லாம்!
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி!
வானவில் விம்பம் காட்டும்!
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்!
அருந்தித் திளைத்திருக்கும்!
அச் செங்குருவிக்கின்று!
எந்தத் தும்பி இரையோ!
இல்லை எக் கிளைக் கனியோ!
நடுநிசியொன்றில் அகாலமாய்!
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்!
அதன் ப்ரியத்துக்குரிய மரத்திலேறிய சர்ப்பம் குறித்த!
செய்தியை அறிந்துகொள்ளும்!
அல்லிப் பூக்களும்!
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன!
மேகங்களும்!
பின்னர் துயரத்தில் கதறும்

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி!

எம்.ரிஷான் ஷெரீப்
மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது!
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது!
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு!
மலட்டு வேப்ப மரத்திடம்!
நீவியழித்திடவியலா!
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்!
நீயொரு மண்பொம்மை!
உனது கண் பூச்சி!
செவி நத்தை!
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்!
உன்னிடமும் வேம்பிடமும்!
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன!
திசைகளின் காற்று!
விருட்சத்துக்குள் சுழல்கிறது!
தன் மூதாதையர் நட்ட மரத்தில் இதுவரை!
ஆசைக்கேனுமொரு பூப் பூக்கவில்லையென!
தொலைவிலிருந்து வந்த புதுப் பேத்தியிடம்!
கதை பகர்கிறாள் மூதாட்டி!
வேப்பமரத்தடி வீடெனத் தன் வீட்டிற்கேவோர்!
அடையாளம் தந்திருக்கும் மரத்தை!
வெட்டியகற்ற மறுக்கிறாள் கிழவியென!
மருமகளொருத்தி முணுமுணுக்குமோசையை!
சமையலறை ஜன்னல் காற்று!
உன்னிடம் சேர்க்கிறது!
மனித ஓசைகள் கேட்டிடக் கூடாதென!
காதுகளை மீண்டும்!
நத்தைகளால் அடைத்துக் கொள்கிறாய் - பிறகும்!
கண்களை மூடும் பூச்சிகள் தாண்டி!
வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்கிறாய்!

உடைந்த கண்ணாடியும் ! தலைவி குறித்த நினைவுகளும்!

ராம் சந்தோஷ்
ஒரு நிலைக் கண்ணாடி !
சில்லுகளாக உடைக்கப்பட்டபோது!
ஒற்றைத் தலைவி பல்லாயிரத்தவளாக !
பார்க்கக் கிடைத்தாள்!
புரான மலர் உருவமுடையவள்!
வாடியும் வாசமற்றவளாகவும்!
தன் மயிர்க் கொடிகளைக்!
காற்றில் துழாவி நடக்கையில்!
கால்கள் புண்பட்டு!
சில்லுகள் சிவப்பாகின்றன

மழை நீர்

பிரசாத்
பூமித் தாயின் மடியில் தவழும்
மேகத் தாயின் குழந்தை
~மழைநீர்

இன்று மட்டும்

செண்பக ஜெகதீசன்
சென்ற ஆண்டுகள் !
சென்றது எங்கே, !
இனி !
வரும் ஆண்டுகள் !
இருப்பது எங்கே !
தெரியவில்லை எவர்க்கும், !
தெரிந்தது இதுதான்- !
இன்று, !
இன்று மட்டும்.. !
இருக்கிறது அது !
இப்போது நம்முடன், !
தப்பாது செய்திடு கடமையை,!
இன்றுபோல் இருக்கும் !
என்றும் இனிதாக…!!

முற்றுப் புள்ளி

செண்பக ஜெகதீசன்
இரவின் பயணத்திற்கு !
இவள் வைக்கிறாள் !
முற்றுப்புள்ளி- !
முற்றத்தில் புள்ளிவைத்து !
முறையாய்க் கோலமிட…!!

நாடகமாய்

செண்பக ஜெகதீசன்
முன் அனுபவங்களை !
மேலுக்குத் தெரியாமல் மறைத்து, !
நாலு சுவர்களுக்குள் நடக்கும் !
நாடகம்தான்- !
முதலிரவு என்பது…!!