தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நீரோடை குறிப்புக‌ள்

ராம்ப்ரசாத், சென்னை
நினைவுகளின் ஆழ்ந்த கடலுக்குள்!
ஒரு நீரோடையாய்!
நினைத்துப்பார்க்கவும்!
விரும்பாத சில நிகழ்வுகள்...!
தொட‌ர்ந்து ஓடிக்கொண்டே!
இருக்கின்ற‌ன‌...!
நீரோடையின் க‌ரைக‌ளை!
நிக‌ழ்கால‌த்தின் ஏதோவொரு முனை!
எப்போதும் தொட்டுக்கொண்டே!
இருக்கிற‌து...!
தூக்க‌ம் தொலைந்த‌!
அட‌ர்ந்த‌ இர‌வுக‌ளில்!
த‌லைய‌ணைக்குள் புதையும்!
விசும்ப‌ல்க‌ள்!
நீரோடை ப‌ற்றிய‌ குறிப்புக‌ளை!
வாசித்த‌ப‌டி இருக்கின்ற‌ன‌...!
காலப்புத்தகத்தில்!
அந்த‌ இர‌வுக்குரிய‌!
ப‌க்க‌த்தின் வ‌ரிக‌ளை!
க‌ட்டாய‌மாய் ப‌டிக்க‌ வேண்டிய‌!
நிர்ப‌ந்த‌ம் அந்த‌ கண்விழிப்பிற்கு

அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

ராம்ப்ரசாத், சென்னை
பிறந்த நாள்முதலாய்!
பெயரறியாப் பழமொன்றைக்!
கையில் பிடித்தபடி நிற்கிறாள்!
முந்தானை நழுவிய!
பெண்ணொருத்தி,!
என் அறை சுவற்றில்...!
பெய‌ர‌றியா ப‌ழ‌மோ,!
ந‌ழுவிய‌ முந்தானையோ!
அள்ளிக்கொள்ளாத‌ என் க‌வ‌ன‌ங்க‌ளை!
மிக‌க் க‌வ‌ன‌மாய் சேக‌ரிக்கின்ற‌!
அவ‌ளின் க‌ண்க‌ளில்!
என்னை பார்த்துச் சிரிக்கிறான்!
அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

கோல‌மும் அவ‌ளும்

ராம்ப்ரசாத், சென்னை
அதிகாலைகளில் நீ குனிந்து!
கோலமிடுகையில்!
கருமேகங்களெல்லாம்!
நீர்வீழ்ச்சியாய் வீழ்கின்றன‌!
உன் கருங்கூந்தலாய்...!
உன் கூந்தல் !
சூடும் மல்லிகையில்!
பிரதிபலிக்கும் அதிகாலைச்சூரியனின் !
பேரொளி...!
உன் விரல்கள்!
உதிர்க்கும் கோலப்பொடியில்!
நீரின்றி நீந்துகின்றன‌!
அழகான வெள்ளை மீன்கள்

எச்சில் மனிதர்கள்

கிளியனூர் இஸ்மத் துபாய்
சேற்று மனிதர்கள்!
வீட்டின் வாசல்வரை!
நேற்றைய்ய துளசி!
பூஜையறை வரை!
உண்டதுபோக!
மிச்சத்தை கொடுப்பதிற்கில்லை!
அவர்கள்!
எச்சத்தைக் கொடுக்கும்!
எச்சில் மனிதர்கள்!
இடுப்பில் துண்டு!
அடுப்பில் கஞ்சி!
உழைப்பில்லா சோம்பேறிகளா!
இல்லை!
இல்லை!
இவர்கள் இயந்திர மனிதர்கள்…!
உற்பத்தியாகும் பொருளுக்கு!
முகவரி கொடுத்துக் கொள்வது!
முதலாழித்துவம்!
இயந்திரமல்ல!
சுயத்தை அறியாத சுப்பிகள்!
மனிதநேயம் பேசுவது!
மேடையில்சோடா குப்பிகள்!
சமத்துவம் பேசும்!
அவத்தம்வாதிகள்!
இன்னும் தேவைப்படுகிறது!
ஜாதிச் சான்றிதல்கள்!
எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்தாலும்!
விழுக்காடுகள் கூடலாம்!
மாறாது சுடுக்காட்டுக் குடிசைகள்!
கருவறிந்த மனிதர்கள்!
அருவறிந்த புனிதர்கள்!
அரசியல் களம் காணும்போது!
சுயமறிந்த சூரிய்ய வாழ்க்கை!
தலித்க்களுக்கு மட்டுமல்ல!
தன்னையறிந்த!
மனிதர்களுக்கு…!!
-கிளியனூர் இஸ்மத்

கடவுள்

முருகு கார்தி
சித்தர்களால் சிந்திக்க முடியாமலும்!
புத்தர்களால் வர்ணிக்க முடியாமலும்!
உள்ள ஓர் உருவம்!
சிற்பியால் செதுக்கப்படுகிறது

தனி மரமாய்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
துயரினைக் கண்டால்!
இதயம் நோவும்!
வேதனை தொடரும் ..!!
மனப் பூ வை!
நுகர ...!
சுவாசம் தேவை ..!!
தேடிய செல்வமெல்லாம்!
இயற்கை அழிவுகளில்!
தொலைந்து போகும் ..!!
தனி மரமாய் ..,!
மணம் _!
தலை நிமிர்ந்து நிற்கும் ...!!
உற்றோர் .,.!
உறவினரெலலாம்!
எனக்கு!
துரத்து உறவுகளாகும்!
எழுத்து மட்டும்!
எனக்கு _!
மன ஆறுதல் கொடுக்கும்

வாசம் சுமக்கும்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மனங்களில்!
மலர்ச்சிப் பூக்கள்!
விரியும் போது!
மனசு மணக்கும்!
வாசம் சுமக்கும்.!
எதிர்பார்ப்புக்கள்!
உள்ளச் சுவரில்!
நிழலாடுகையில்!
பின் தொடர்கின்ற!
நினைவுகள்!
நிழல்ளாகும்!
நம்பிக்கை!
தொலைக்கப்படும் போது!
இதயம்!
தீக்குள் சுடரினைத் தேடும்!
உண்மைகள்!
போலியாகிப் போகையில்!
மனம்!
பொன்னாடைகள்!
போர்த்திக் கொள்ளும்!
கவிதைகளை!
விதைத்து விட்ட மண்ணில்!
விமர்சகர்களின்!
போலித் தூறல்கள் !
புனிதம்!
தீமைகளை புதைத்து விட்டு!
நல்லவர்களுக்கு !
வழிகாட்டுகிறது!
இறைவா!
இந்த சோதனையாளர்களுக்கு!
நல்வழி காட்டு!
மனங்களின் பிராத்தனை!
துளிகளில்!
பொறாமைகளை -!
போட்டிகளை -!
தாக்குதல்களை -!
வளரவிடாது தடுப்பதை!
எல்லாம் ஒன்று சேர்த்து!
கழுவிக் கொள்ளட்டும்!!
அல்லது சுத்தம் செய்யட்டும்

பார்வையின் புருவங்களாய்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
பாசம் தொலைந்து விட்டது!
எம் உறவு!
புழுதி கெழம்பிய மணலாய்-ஈரமிழந்து!
வரண்ட நிலமாகிய பின்...!
பார்க்கும் இடமெல்லாம் கவி வரிகள் போல்!
நினைவுத் துளிகள்...!
வாசித்த நா மட்டுமல்ல!!
எந்த நட்புக்கும் அடிமைப்படாத நீ!
சந்தர்ப்பவாதியோடு இணைந்த காலங்கள்!
அதுவும்!
வேஷங்களோடு வேஷங்களாயிற்று!!
(தீயோடு-தீயாயிற்று)!
இன்று!
மனசு துடிக்க துடிக்க உணர்விழந்து...!
உறவிழந்து!
உன்னை பிரித்து வைத்து மகிழ்ந்தந்தவர்கள்,!
மெளனித்துள்ளனர்,பொறாமைகளோடு!!
உன் எழுத்தில்!
உன் பேச்சில்!
உன் அன்பின் ஆழம் கண்டு!!
நாம்-!
ஒவ்வொரு நிமிடமாய்!
சுவாசித்து...சுவாசித்து-!
மூச்சிடும் வேளை,!
அதில் உன் உருவம் இல்லை!!
இதயச் சுவடுகளின் ஞாபங்கள் நிறைந்து!
மறக்க முடியாத உன்னை நினைவுபடுத்தி!
உரிமையாக்கி விடுகின்றன...!
நீ!
கலக்கமில்லாத வெள்ளையுமாம்!!
நீ-!
இன்னுமின்னும் நேசிக்க விரும்பும் இதயத்துக்கு!
பார்வை புருவமாம்!!
பிரிக்க முடியாதாம்!!!
பிரிவை துயரங்களாக்கி வாடிய மனங்களோடு!
நிம்மதியிழந்து இருந்தோம்.!
உறவுக்கு இனி தொடர்புயிருக்காதென!
ஆறுதல்படுத்திச் சென்றனர்,!
உன் குழந்தைகள்..!
நட்புகள் என்று தான் மாறும்....?!
தூயவுள்ளங்களைத் தானே அது!
தேடியலைகிறது....!!

சோகம் சுரந்த கோபம்

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
வாழ்வில் !
பிரச்சினைகளை விட்டு மாறிச் செல்வதை விட , !
வேறு வழி புரியவில்லை ..!!
எல்லா விதமான தொல்லைகளையும் !
அகற்றி விட்டால்,!
வாழைப்பழத்தை விட மென்மையானது !
இதயம் ..!!
நீ-!
செய்வது தான் சரியென்று நடந்தால் ,!
நாயின்வாலை நிமிர்த்த முடியுமென்றசெயலாகும் ..! !
நான் -இனி !
விலகித்தான் போக வேண்டும் ..!!
வி!ளங்கித்தான் ஆக வேண்டும் ..!!
சோகம் சுரந்த கோபம் !
என்னுள்ளே நினைத்துப் பார்க்கலாம் .! !
உனக்காக மனம் திருந்தி வருவாளென்று !
நீ , !
நினைத்துப் பார்க்கலாம் .!!
பாசவுள்ளம்சாம்பலாகிப் போனது ..!!!
உன்,!
தொல்லைதரும் நிகழ்வுகள் ...!
எனக்குள் வந்து நிழலாடும் போது ....,!
தீயாய் எரியும் விறகுகளாய் !
என் ஆத்மா !
எரிந்து கொண்டிருக்கிறது ..!!
புகைந்து கொண்டிருக்கிறது

அற்புதத்தைக் காட்டு

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
மன சாட்சியே நீ யொருதரம் நல்லவனாய் மாறு !
கேவலமான செயல் தனை நன்மையாய் மாற்று !!
இப்புவியில் உன் பிறப்பின் தூய்மையைக் காட்டு .!
மக்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்திப் பாரு !!
கன்னீயரை மிதித்து நிதம் மகிழ்வு கண்டு !
நேயமில்லா படுபாவி !உள்ளங் கொண்டு ,!
வாழுகின்ற காளையர் தம்மை !வாட்டு !
நொந்தழும் பெண்களுக்கு கருணை காட்டு !!
வெளிநாடுக்கு படித்தவரை அனுப்பி விட்டு .!
கொள்ளையருக்கு நாட்டில் இடமிட்டு !
உருமாறும் கொடுமைகளுக்கு அழிவை யூட்டு!
உலகெங்கும் இருளுக்கு ஒளியைக் கூட்டு !!
கண்ணீர்விட்டு கவலைப்பட்டு இந்த மண்ணில் !
வேதனைப் பட்டு வாழுகின்ற அப்பாவி மக்கள் !
நிம்மதி பெற்று உன்னாலே !ஆறுதல் பெற்று!
மகிழ்ச்சியாய் மூச்சிவிடவுன் அற்புதத்தைக் காட்டு !!