தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

கையூட்டு!

ப.மதியழகன்
அரசு அலுவலகங்களில்!
கோப்புகள் இடம் மாறுவதற்குள்!
குதிரைக்கு கொம்பு முளைத்துவிடும்!
ஒரு ரப்பர் ஸ்டாம்புக்காக!
குடிமகனின் பாக்கெட்டில் உள்ளதை!
மொத்தமாக கறந்து கொண்டு!
தான் விடுவார்கள்!
உடைகளெல்லாம் பைகளாக!
இல்லாவிடில்!
குடிமக்கள் கொண்டுவந்து!
கொட்டுவதை!
அள்ளிப்போக முடியாது!
அரசு கருவூலம் கொடுக்கும்!
சம்பளம் போதாதென்று!
பொது மக்களின் வயிற்றெரிச்சலை!
கொட்டிக் கொள்வார்கள்!
தரகரின்றி நேரில்!
அணுக முடியாத!
அரசு அதிகாரிகளும்!
இருக்கத்தான் செய்கிறார்கள்!
லஞ்சம் கொடுத்து அரசு பணிக்கு!
வரும் போது கைகள் பரபரக்கும்

இலக்கு

ப.மதியழகன்
மரணமே இன்று வராதே!
முடிக்கப்பட வேண்டிய வேலைகள்!
நிறைய இருக்கின்றன!
சம்பளத் தேதியில் இறக்க!
யாராவது சம்மதிப்பார்களா!
கட்டப்பட்ட வீட்டில் குடிபுக!
ஆசையிருக்காதா!
தவழும் குழந்தை!
தத்தி நடப்பதை காணாமல்!
போய்விடத் தோன்றுமா!
மனிதனின் சராசரி வயதின்!
பாதியைக் கூட இன்னும் கடக்கவில்லை!
நரைமுடி கூட ஆங்காங்கே!
இன்னும் தோன்றவில்லை!
உறுப்புக்கள் எதுவும் செயலிழக்கவில்லை!
பார்வைத்திறனும் குறையவில்லை!
அன்பிற்கினியவர்கள் ஒவ்வொருவராய்!
காலனின் அம்பு பாய்ந்து!
வீழ்ந்த போது!
தெரிந்து கொண்டேன்!
எனக்குத் தான்!
குறி வைக்கிறார்களென்று.!

அவளுக்கென்று ஓர் மனம் !

ப.மதியழகன்
உனது புகைப்படத்தைக் காண்பித்து!
பிடித்திருக்கிறதா என்றார்கள்!
உனது குடும்பத்தைக் காண்பித்து!
ஒத்துவருமா என்றார்கள்!
உனது மெலிந்த சரீரத்தைக் காண்பித்து!
பரவாயில்லையே என்றார்கள்!
உனது அழகை காண்பித்து!
கொடுத்து வைத்தவன் என்றார்கள்!
உனது பணிவைக் காண்பித்து!
புரிஞ்சுநடந்துக்க என்றார்கள்!
உனது வீட்டின் சீர்வரிசையை காண்பித்து!
போதுமா என்றார்கள்!
இவ்வளவு கேள்விகள்!
என்னைக் கேட்டார்களே!
என்னைப் பிடித்திருக்கிறதா என்று!
உன்னை கேட்டார்களா

அன்னை இட்ட தீ !

ப.மதியழகன்
மதத்தின் பெயரால் நடந்த சமர்களில்!
மண்ணில் உதிரம் சிந்தி!
மாண்டவர்கள் எத்தனை கோடி !
கிணற்றுத் தவளையாய்!
தாங்கள் சார்ந்துள்ள மதமெனும் கேணியே!
சமுத்திரத்தைவிடப் பெரியது - எனச் சவடால்பேசி!
உண்மைக் கடலைக் காணாது!
காணாமல் போனவர்கள்!
எத்தனை கோடி !
சத்தியத்தின் பொருட்டு!
பல இன்னல்களை அனுபவித்து!
உத்தமராய் ஒருவர் வாழ்ந்தாரென்று!
அவரைப் புகழ்ந்து!
அன்றாடம் பாக்கள் பாடிக்கொண்டிருப்பதை விட!
அந்த நேரத்தில்!
அவ்வாய்மையின் வழியே!
நம் வாழ்க்கைப் பாதையை!
அமைத்துக் கொண்டிருக்கின்றோமா-என!
எண்ணுபவர் எத்தனை பேர் !
நியாயத்தராசில் நிறுத்தால்!
தயை சிறிதுமின்றி!
சொர்க்கத்தை அடையும் பொருட்டு!
வெளிப்பூச்சாக செய்யப்படும் நற்காரியங்கள்,!
பகுத்தறிவால் விழிப்புணர்வை பரப்புவர்!
மனவளர்ச்சிக் குன்றியவர்களுக்கு!
மனித நேயத்தோடு செய்யும் காரியம்!
சிறிதெனினும்!
அதற்கு ஈடாகுமா !
இன்னும் உங்களுக்கு!
மனிதர்கள்பால் பாகுபாடு தென்படுகிறதா!
அப்படியென்றால்!
மதமெனும் மூக்குக்கண்ணாடியை!
கழட்டிவைத்துவிட்டுப் பாருங்கள்!
உண்மையில் ஒரு தெய்வம்!
உன்னைப் பற்றிய நினைப்பிலேயே!
உறங்காமல் வீட்டில்!
தினம் உனது புகைப்படத்தை!
உச்சிமுகர்ந்து கொண்டிருக்க!
உயிர் தந்து, உண்டி கொடுத்து வளர்த்த!
உன் தாயைவிடவா!
உயர்ந்த தெய்வம் இத்தரணியிலிருக்கு?!

உன்னின் அறிமுகம்

பொன்னியின் செல்வன்
உதிரும் சருகுகள்!
சத்தமின்றி!
காற்றின் போக்கில்..!
விருட்சத்தின் வரலாற்றை சுமந்த படி..!
வார்த்தைகள் செதுக்கும்!
மனதிற்கு தெரியும்!
காற்றின் திசையில்!
பயணித்தல் .. வாழ்க்கையென...!
என்னின் வேர்களின்!
முடிச்சுகளில்!
இன்னும் மூச்சுவிடா..!
விருட்சங்கள்!
தூங்கிகொண்டிருகின்றன...!
பிரபஞ்ச வெளியில்!
முகவரி சொல்லா!
பயணம் ..!
விதைகளும் தூசிகளாகும்போது ....!
ஆயின், தூசிகள் இடம் சேர்ந்தால்!
தூண்களாகும்..!
அதுவரை!
எனது பயணத்தின்!
படிமானங்களாய்!
பயணம் செய்கிறேன்..!
காற்றின் திசையில்..!
காற்றின் வலு குறையின்!
விழுந்த இடத்தில்தான்!
உன்னின் அறிமுகம்

விழுதுகள்

ஸ்ரீகாந்த்
விதையில் இருந்து
வருவது வேர்கள்,
தன் வினைப்பயனை
ஆற்ற விழைவது விழுதுகள்,

விண்ணோக்கி போகும்
திறன் இருந்தும்,
தன்னை தாங்கிய
மண்ணோக்கி செல்வதை
கடமையாக கொண்ட விழுதுகள்,

அகழ்வாரை தாங்கும்
நிலமாக இல்லாவிடினும்,
தன்னை உருவாக்கிய மரத்தை
தாங்கும் விழுதுகள்.

ஆசீர்வாதங்கள் மேலிருந்து
கீழ் நோக்கி போகும்,
விழுதுகளும் அப்படியே..

சில விழுதுகளை மரம் இழந்தாலும்,
அந்த பணியை பங்கிட்டுக்கொள்ள
பலநூறு விழுதுகள் உயிர்ப்புடன் உள்ளன.

மனிதர்கள் கேட்பதனால்
மரம் குடுப்பதில்லை,
விழுதுகளும் அப்படியே,
மரம் கேட்டதனால்
தாங்க வருவதில்லை..

ரயில் சிநேகம்

செ.இராமதனவந்தினி
நம்
நினைவுகளின்
கனம் தாங்க முடியாமல்
ரயில் கூட
இன்று
ஒரு நிமிடம்
பெருமூச்சு விட்டபடியே
கிளம்புகிறது....

நீ

செ.இராமதனவந்தினி
உனக்குள்
உன்னை தொலைத்து விடு
தவறு ஒன்றும் இல்லை
சில காலம்
முகவரி அற்றி திரிவாய்
ஊர் உன்னை
பித்தன் என்று கூறும்
இருப்பினும்
உன்னை வென்று விடுவாய்
உன் நிழலை ஒட்டியே நடப்பாய்
உன் உள்ளங்கை
உனக்கு உரமாக அமையும்
தலையெழுத்து அழிந்தே போகும்
அச்சத்தை கழற்றி எரிவாய்
நிலம் உன்னை சுமக்கும் வரை
நிம்மதியுடன் கண் அயர்வாய்.....

என் பாகிஸ்தான் சகோதரிக்கு!

பால்ராஜன் ராஜ்குமார்
நீ நலமாயிருக்க!
நான் நலமாயிருக்கின்றேன்!
நான் நலமாயிருக்க!
நீ நலமாயிருக்கின்றாயா?!
சீதனமாய்த்தானே கொடுத்தோம்!
ஹரப்பாவையும் மொகஞ்சதாரோவையும்!
பாகப்பிரிவினைனு!
சொல்லிவிட்டார்கள் பாவிகள்!
நம்முடைய பலத்தை!
அன்பைவைத்து அளப்போம்!
அணுகுண்டுகளை!
வைத்து வேண்டாமே!
நம் நாட்டின் எல்லையில்!
யார் சுட்டாலும் யார் மாண்டாலும்!
ஒட்டை விழுவது என்னவோ!
நம் இதயத்தில்தானே!
உன் தேசம் தண்ணீரில்!
மூழ்கியிருந்த போது!
நான் கண்ணீரில்!
மூழ்கினேன்!
உன்மேல் என் அன்பையும்!
என்மேல் உன் அன்பையும்!
சிந்துவும் பிரிக்கமுடியாது!
இந்துவும் பிரிக்கமுடியாது!
நான் மட்டும் வாழ்ந்து நீ வீழ்ந்தால்!
நான் எப்படி வாழ முடியும்!
ஜெய் பாகிஸ்தான்!
ஜெய் இந்தியா

அலகு தீட்டி சுள்ளி முறித்து!

எஸ்.நளீம்
காட்டில் வாழ்ந்த பழக்கமில்லை!
காக்கையென்று கழித்தாயோ!
முற்றம் வந்து குறிசொல்லி!
ஒட்டி வாழ்ந்த உறவுக்காரன்!
மரக்கிளையில் அலகு தீட்டி!
சுள்ளி முறித்துப் பறக்கும்!
ஒரு காக்கையின் கனவுமில்லா அற்பன் நீ!
நான் என்ன குறைந்தவனா?!
உற்றுப் பார்க்கும் கண்கண்டு!
கூடு காத்து குழந்தை காத்து!
போராடி வாழ்பவன் நான்!
புயல்காற்றில் பேயாடி!
பாதகன் நீ பிய்த்தெறிந்த கூட்டுக்குடும்பம்!
வீதியிலே வெட்டையிலே!
புத்தளத்துப் புழுதியிலே!
அகதியென அரவணைக்க யாருமில்லை!
கொவ்வைப்பழ வாய்விரித்து!
உம்மா என்னும் என்குஞ்சு பொன்குஞ்சு!
காற்றாடி களைப்படையும்!
களைப்படையா இறக்கையாலே!
சுழன்றாடிக் காத்திருக்கேன்!
மிருகம் நீ!
உன் நெஞ்சில் காதலில்லை கவிதையில்லை!
வாழ்வோரை வாழவிட!
ஈனஇரக்கமில்லை!
உன்னையும் கொல்லுமது!
ஒருபோதும் துப்பாக்கி துணையாகா