நீ!!
என் மழை நாட்களின்
இருளை விழுங்கி
என்னை ஆர்ப்பரிக்க வைக்கும்
என் வனப்பான வானவில்
நீ!!!
என் வசந்த காலங்களின்
மிச்ச சொச்ச நினைவுகளை
பத்திரப்படுத்தும்
என் அமுதான தேனீ
நீ!!
என் பின்பத்தை மட்டுமே
சுகமாக விழுங்கும்
என் வீட்டு நிலைக்கண்ணாடி
நீ!!!
நடுங்கும் குளிரில்
என்னை ஆரவரம்
இல்லாமல் அரவணைத்து
ஒரு கோப்பையில் அன்பை தேக்கி
கசப்புகளை தனியே வடிகட்டும்
அன்பான தேநீர்....
நீ!!
நான் என்பதை
அடிக்கடி நினைவு படுத்தும்
என் அழகான நினைவோடை!!
நீ!!!
நான்!!
நாம்!!!
செ.இராமதனவந்தினி