அரங்கேற்றப்படும் அகவை
துர்கா
நினைவுகள்!
எனக்கு!
உரித்தாக்கப்பட்டுவிட்டன!
தயவு செய்து தஞ்சம் புகுந்துவிடு!
ஒவ்வொரு கணமும், நாளும்!
உனக்காகத் தான் பிறக்கின்றன!
சத்தமின்றி ஆரவாரிக்கும்!
எனதிதயம்,!
தடுமாறும் உனது நினைவேட்டில்!
ஏதேதோ!
பிதற்றுதல்கள்!
பொருளற்ற மொழியாகின்றன!
நித்தமும்!
ஓடிக்கொண்டே இருக்கும்!
நினைவுகள் இளைப்பாறும்!
நிழலாய் உனைத் தேடுகிறது!
ஏக்கமுடன்.....!!
!
-துர்கா