தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

சமீபத்திய கவிதை

என் தோட்டத்தில் நீ

வேதா மஹாலஷ்மி

நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
என் தோட்டத்தில் எல்லாமே நீதான்... !
பச்சை இலையின் இடுக்கெல்லாம் !
பாசி படர்ந்த கொடிக்காம்பு - உன் !
இச்சை திறக்கும் இடுக்கெல்லாம் !
உஷ்ணம் கலக்கும் நரம்பைப்போல்.... !
மிச்சம் வைத்த பூவையெல்லாம் !
உச்சியில் உதிர்க்கும் பூங்கொன்றை, !
இடம்பார்த்து, விதம் பார்த்து.. !
குணம் பார்த்து, மனம் பார்த்து - நீ !
சிரித்து வைக்கும் சிரிப்பைப் போல்..... !
மழை முடிந்த மரக்கிளை.. !
வியர்வை பூக்க விறுவிறுக்க, !
என்னைப் பார்த்து, !
ஒரு பக்கமாய் காலை !
ஊன்றி நிற்கும் உன்னைப் போல்.... !
என் தோட்டத்தில் !
இப்படி எல்லாமே நீதான்... !
நின்ற இடம் இன்னும் !
நிச்சயமாய் அதே வாசம்... !
நடந்த இடம் கொஞ்சம் !
வேதனையை வழித்தெடுக்கும்... !
இருந்த இடம் கண்ணில் !
பத்திரமாய் ஒளி வீசும்... !
கிடந்த இடம் , !
உயிரில் பாதி துளைத்தெடுக்கும்!! !
நின்றதும் நடந்ததும் !
இருந்ததும் கிடந்ததுமாய் !
இங்கு எல்லாமே நீயேதான்... !
மனதில் நின்றதும் மாலை நடந்ததும் !
அருகில் இருந்ததும் உயிராய் கிடந்ததும்... !
துளைத்ததும் முளைத்ததும் !
பூத்ததும் பூக்க வைத்ததுமாய்... !
என் உலகில் !
இன்று எல்லாமே நீயே தான்!! !

குறிப்பில்லாக் கவிதை (random)

உறைவு

அசரீரி

நாலே வருடங்கள் புணர்ந்ததும்!
ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக் கொண்டதுமான!
யோனியையுடையவளாய்!
பெருமூச்சையும் சேர்த்தே!
நீள் கபுறுக்குள் அடக்கிவிட்டவள்!
அவளின் இளமையைப் பற்றியோ!
பற்றியெரிந்த ஏக்கங்கள் பற்றியோ!
பீறிட்டு வரப்பார்த்த விரகம் பற்றியோ!
குஞ்சி விறைக்காத காலம்!
எதையுமே பேசாமல் நகர்ந்திற்று!
இப்போது வருவதும் நின்றுபோயிருக்கும் அவளுக்கு!
எல்லா உணர்ச்சிகளும் சேர்த்துத்தான்!
மலைகளென உருவகம் செய்தெழுதிய!
அவளின் விதவைத் துயர் பற்றிய காலத்துக் கவிதையெல்லாம் பிழையோவென்று தோன்றுகிறது!
இக்கணம்!
அதையும் சுமந்து கடந்து விட்ட வலியும் திடமும்!
அவள் கொண்டிருக்கும் நியாயத்தால்!
இருபது வயதில் பிள்ளையிருக்கும் அவளின்!
உம்மாத்தனத்தின் புனிதத்திலிருந்தே!
வரலாறு அவள் பற்றி முதலாவதாகக்!
கதைக்கத் தொடங்கலாமினி!
அப்படியும் இல்லாமலும் போகலாம்!
ஆயினும்!
பெரும் பாறைக்கனத்துடன்!
துணியோடு உறைந்து தீர்ந்த அவளின்!
சுக்கிலத் துளிகளுக்கு நியாயம் தேடி!
அவர்கள் வருவார்கள்!
நீ முக்கியமாகத் தெரிந்து கொள்!
அவர்களுக்காய் சூரியன் கலந்த இந்திரியம்!
செலுத்தப்பட்டிருக்கும்!
!
-அசரீரி