தமிழ் சொட்டும் கவிதைகள்!

உலகெங்கிலும் உள்ள தமிழ்ப் பிரியர்களின் இலக்கிய சுவைக் கூட்ட,

தமிழரின் குரல் வளையாக கவிதை.காம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது!

உலகெங்கும் தமிழ் குரல் ஒலிக்கட்டும்!

இன்றையக் கவிதை

நிலை

முஹம்மட் மஜிஸ்

வண்ணத்துப்பூச்சிகள்!
பறக்கும் அழகையும் !
இறக்கைகளின்!
ஓவியத்தையும்!
அதன்-சுதந்திரத்தையும்!
நான்!
இரசிக்க மறந்ததில்லை!
இறக்கைகள்-பிய்த்து!
குருதி கசிந்த அதன்!
வலியை நான்!
உணராதபோதும்!
ஒரு கணத்தின்!
இடைவெளியில்!
அதன் - காருண்யம்!
பற்றி நான் !
சிந்திக்கத்தவறியதுமில்லை!
சந்தேகமற்ற!
வன்முறை விரும்பாத ஒரு மனிதாபிமானிதான்!
நான்!
ஆனா போதும்!
ஒரு நாளேனும்!
தலையிட முடிவதில்லை!
என் மகனின்!
விளையாட்டில்

சமீபத்திய கவிதை

மலரட்டும் புத்தாண்டு

எழிலி

வருடமெல்லாம் வசந்தம் மலரும்!
வறுமை தொல்லை யாவும் தீரும்!
மழலைகள் சிரிப்பு  போலே
கவலை மறந்த வாழ்வு காலமெல்லாம்
நம்மைத் தொடரும்!

சிறகு விரிந்த பறவையாகி
சிந்தனை கடந்த உலகில் பறப்போம்!

பரந்த   பூவுலகில் பரம் பொருளை
சிரம் தாழ்த்தித்தொழுது மகிழ்வோம்!

ஒளிவுண்டு,மழையுண்டு!
உயிர்களெல்லாம் நட்புண்டு!
ஒவ்வொன்றும் நமக்கென்று
படைப்பாக அமைந்ததுண்டு!

உயர்வு தாழ்வென்ற ஒப்புமை
கண்டு கண்டு இருக்கும் நலத்தைக்
கெடுத்தல்  எதற்கு!  பிறந்தோமே
நல் நிலையில் --, நிகழ்விலும்
எதிர்விலும் நன்மையே கொண்டு
நிஜத்தை  மட்டும் சுவைப்போம்
இது  முதற் கொண்டு

குறிப்பில்லாக் கவிதை (random)

உன்னையே நினைப்பதனால்

நித்தியசார்லஸ்

நேரத்தைதிருடும்
நினைவுகளை
தண்டிக்கமுடிவதில்லை.
எல்லாநாளும்
ஒருநாள்போல
இருக்காதென்கிறார்கள்
உன்னையே நினைப்பதனால்
எனக்குமட்டும்
எல்லாநாளும்
ஒருநாள்போலவே இருக்கின்றன
நீ பிரிந்து
போனதாலே
நான்மட்டும்
சிக்கிக்கொண்டேன்
உன்காதலிடம்.
இனி எந்தப்பெண்ணையும்
பார்க்கமுடியாதபடி