தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வழியில்

செண்பக ஜெகதீசன்
வாழ்க்கை !
வழிப்போக்கன் நான், !
வழியில் பார்த்தேன் -!
காலம் என்னைக் !
கடந்து சென்றது, !
கண்ணாடியில் பார்த்தபோது !
கண்டது -!
களவாடப்பட்டது !
என் !
இளமைதான்...!!

முடித்திடு

செண்பக ஜெகதீசன்
இனிமேல் வராது !
இந்த இளமை, !
வந்த முதுமை !
வழி திரும்பாது, !
பழியைப் போடாதே !
பரமன் மீது, !
இருக்கும் வரையில் !
இயன்ற வரையில் !
முயன்று முடித்திடு கடமையை, !
வந்திடும் !
வெற்றி உந்தன் உடமையாய்....!!

சிகரம் தொட்டவர்கள்

அட்டாளைச்சேனை அபாம்
அற்பமான விடயங்களையும்
நுட்பமாக கையாண்ட
சொற்பமான சிலரே
சிற்பமாக்கப்பட்டுள்ளனர்.

மரங்கொத்தி

டீன்கபூர்
வரலாம் இனி!
தென்னையைப் போல வெறும் ஈர்க்குக் குடல்…!
இவனிலிருந்து வராது!
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்!
உன் சொண்டில் வரும்!
நரம்புகளும் அதில் சிக்கும்.!
உலாவப் பிறந்தவன் மனிதன்!
தென்றலை உடலுக்குள் குடில் கட்டிக் கொடுப்பவன்!
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்!
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று!
வளரும் மரம் போல நகராமல்!
அடியைப் பதி;க்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்!
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.!
கடல் சார்ந்த இடம்!
வயல் சார்ந்த இடம்!
யுத்தம் மேய்கின்ற பூமியாகக் கிடக்கின்றது.!
மொத்தத்தில் இவன் ஜடம்!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை!
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி !
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து!
‘போர்’ ஒன்றைச் செய்து!
இல்லறம் நடத்திய போதும் குருவி….!
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்!
நம்பி!
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை!
இவன் உடம்பில் வந்து தங்கு!
தோளில் நின்று எச்சில் அடி…!
ஒரு போரை வடிவமைக்க!
இவன் நெஞ்சிலோ!
முதுகிலோ நின்று கொத்து!
மரமான இம்மனிதனின்.!

நீர்க்குமிழி

ஷம்மி முத்துவேல்
ஆழ்ந்தமனப்பரப்பில்!
விட்டு எறிந்த!
நினைவு கல் ஒன்று....!
செதுக்கியபடி உள்செல்ல ....!
வட்ட சக்கரவியூகம் !
ஒன்றுக்குள் ஒன்றாய் விரிந்தபடி ......!
ஆழ அமிழ்கையில் ....!
மெல்ல!
மேலே எழும்புது!
ஓர் அடங்கலற்ற நீர்க்குமிழி

நங்௯ரம்

ஷம்மி முத்துவேல்
நினைவுகள் பாய்மரம் விரிக்க ....!
நங்௯ரமிட்டது தொலைந்து போன கனவுகள் !
முன்னும் பின்னுமாய்!
ஊஞ்சலாடியபடி!
உள் வாங்குது எண்ண அலைகள் .... !
அது ஒரு நிலாக்காலம் .....!
உன் மூச்சை சுவாசித்த காலம் ....!
கடிகார முள்ளாய் சேர்ந்தும் பிரிந்தும்!
பகா பதமாய் தனித்து பொருள்படாமல்!
இருந்த வசந்த காலம் .....!
பயணங்கள் பட்டயம் எழுதிவிட்டு!
பதுவிசாய் பதுங்க!
மீண்டும்....!
பழையன கழியாமல் ....!
புதியன சேர்ந்தபடி!!!!

பால் நிலா

ராமலக்ஷ்மி
மொட்டுஅதுத் தானாகக்!
கட்டவிழும் முன்னே!
பட்டுடுத்தி அலங்கரித்துப்!
பாதத்தினைப் பற்றியெடுத்து!
அம்மிமேல் வைத்தழுத்தி!
அருந்ததியைப் பார்க்கவைத்து!
கட்டிவைக்கிறார் அவசரமாய்!
கடமையை முடித்திட..!!
ஈரைந்து திங்களேலே!
ஆடுகிறது தொட்டில்.!
தொலைத்திட்ட அவள்!
பருவம்போலத் துலங்குகின்ற!
பால் நிலவை-!
அழைக்கின்றாள் தேன்குரலில்!
அழகாகத் தன்தாலாட்டில்!
குழந்தைக்கு அமுதூட்டத்!
துள்ளியோடி வருமாறு

சீற்றம்

ராமலக்ஷ்மி
ஆறுவது சினம் !
ரெளத்திரம் பழகு !
முரண்களாய்த் தோன்றும் இவற்றின்!
தேவைகள் சந்திக்கும்!
கூர்வாளின் முனைபோன்ற புள்ளியில்!
அடங்கிய ரகசியமாய் சீற்றத்தின் சூத்திரம்!
சரியான நபரிடத்தில்!
சரியான காரணத்துக்கு!
சரியான நேரத்தில்!
சரியான கோணத்தில் !
சரியான அளவிலும்!
வெளிப்படுத்தவேண்டிய ஓர் உணர்வாய்..!
புரிந்தால் !
வாழ்வோடு வசப்படும் வானமும்

இதம் மறந்த இயல்புகள்

ராமலக்ஷ்மி
மற்றவரை மட்டம் தட்டுவதில்!
மனிதமனம் அடையுது குதூகலம்!
ஒருவர் எட்டி மிதித்ததாலே!
இமயமலையின் உச்சி சரிந்ததாய்!
இல்லை ஏதும் சரித்திரம்!
துரும்பெனப் பரிகசிக்கப்பட்டவர்!
இரும்பை விட உறுதியாய்!
முன்னேறிய கதைகளோ!
வரலாற்றில் ஆயிரம்!
இளக்காரங்களால்!
எவர் தரமும் தாழ்ந்ததில்லை!
இகழ்ந்தவரும் உயர்ந்ததில்லை!
தெரிந்தாலும்!
தேன்குடித்த வண்டு போல!
இன்பங்கண்ட உள்ளங்கள்!
தொடர்கின்றன களிப்பாக!
இதிலென்ன பாவமென!
இல்லை பெருங்குற்றமென!
சடசடவென்று!
சன்னல் கதவுகளை விடாது தட்டி!
இடிமின்னலுடன்!
அடித்துப் பெய்தது கோடைமழை!
சீறிய இயற்கை!
பார் என்றழைக்க!
சிந்தனை கலைந்து நின்றது ஆய்வு !
இதம் மறந்த புயல்காற்றால்!
முற்றமெங்கும் இறைந்து கிடந்த!
தடித்த பெரும் ஆலங்கட்டிகள்!
பளபளத்துத் தெரிந்தன ஏனோ!
பண்பு துறந்த ஏளனங்களாய்!
நிமிடத்தில் கரைந்து!
அடையாளம் தொலைத்தாலும்!
அடங்கோம் யாமென!
நிற்காத அடைமழையினூடே!
கெக்கலிப்பாய் சேதி சொல்லி.!

கால காலமாய்

ராமலக்ஷ்மி
கோவிலில்!
அர்ச்சனைக்குக் கொடுத்திருக்கிறாளாம்!
அவர் பெயரில்!
அழைத்து நின்ற மனைவிக்கு!
அவள் செல்லமகன் கடைக்குட்டியை!
கைகாட்டி விட்டு!
மனையெங்கும் நிறைந்திருந்த!
மற்ற உறவுகளைக்!
கூட்டினார் ஒன்றாகக் கூடத்தில்!
அடுத்த ஐந்து தினங்களில்!
வரவிருந்த தன் ஐம்பதாவது!
மணவிழாக் கொண்டாட்டத்தில்!
எவரெவருக்கு என்ன பொறுப்பெனப்!
பிரித்துக் கொடுத்துவிட்டுப்!
பெருமிதமாய் நிமிர்ந்தமர்ந்தார்!
வருகின்றயாவரும் வாய்பிளந்து!
ஆச்சரியப் பெருமூச்செறிந்து!
கண்ணிமைக்கவும்தான் மறந்து!
போகின்ற வண்ணமாய்!
பரிசொன்றைத் தரவேண்டும்!
சபையிலே தன்னவளுக்கு!
கவுரவத்தைக் காக்கும்வகையில்!
கச்சிதமான பொருளினைப்!
பரிந்துரைக்கும் நபருக்கும்!
தருவேன் என்றார் அன்பளிப்பாய்!
தங்கத்தில் மோதிரமொன்று!
நடுவில் உயர்ரத்தினம் பதித்து!
முன்வந்து சிலாகித்தாள்!
மூத்த கொழுந்தியாள்!
அன்றொருநாள் போத்தீஸில்!
வியந்துபார்த்து வாங்காதுவிட்ட!
பாட்டுப்பாடும் சீலையை!
'வைரத்தில்ஆரம் வனப்பாய்!
இருக்கும் அண்ணிக்கு'!
குரல் கொடுத்தாள் தங்கை!
வேண்டும் போது பெற்றிடலாம்!
உரிமையோடு இரவல் என்று!
'தனியாகக் கார் இருந்தால்!
சவுகரியம் பாட்டிக்கு'!
ஊர்சுற்ற தனக்கும்!
உள்ளுக்குள் நினைத்தபடி!
செல்லமகளின் சீமந்தப் புத்திரன்!
'ப்ளாஸ்மா நல்லாயிருக்குமே'!
தென்றலும் திருமதிசெல்வமும்!
இனிவிரிவார்கள் பெரியதிரையில்!
கற்பனையில் அகமகிழ்ந்தபடி மருமகள்!
பெரியமகன் சொன்னது!
சகலைக்குப் பிடிக்கவில்லை!
அயித்தான் சொன்னது!
அத்தைக்கு ஒப்புதலில்லை!
அவரவர் ஆசைக்கு!
அடுத்தவர் சொல்வது!
அத்தனை ரசிக்கவில்லை!
ஆனாலும் பெரிதுபடுத்தாது!
நவநாகரீக பிளாட்டின நகைமுதல்!
அதிநவீன கைபேசி வரை!
ஒவ்வொருவர் ஒன்றைச் சொன்னார்!
தவற விடுவானேன்!
தனிபரிசையெனப் பலபேரும்!
அக்கறையில் வெகுசிலபேரும்!
எவர்சொன்னதிலும் திருப்தியின்றி!
அவகாசம் வாங்கிக்கொண்டு!
கூட்டத்தைக் கலைத்திட்டார்!
குழப்பத்துடன் எழுந்திட்டார்!
ஓய்வாக உள்ளறையில்!
ஆழ்ந்துபோனார் சிந்தனையில்!
ஆடியதுநிழல் வாசற்படியிலே!
அன்னைக்குத் துணையாக!
ஆலயம் சென்றிருந்தவன்!
நின்றிருந்தான் நெடுமரம்போலே!
ஏனோ தன்னோடு அதிகம்!
ஒட்டுவதில்லை எனும்!
நெஞ்சடைக்கும் ஏக்கத்தால்!
அதீத பிரியம்தான்!
எப்போதும் இவன்மேலே!
சொல்லெனக் கண்ணாலேபேசிக்!
கனிவாய்ப் பார்த்திருந்தார்!
ஆடும் நாற்காலியில்!
முன்னும்பின்னும் போனபடி!
சின்னத் தயக்கத்துக்குப்பிறகு!
திறந்தான் சின்னவன் மனதை!
இனியாவது அம்மாவுக்கு!
மதிப்பு சந்தோசம் நிம்மதி!
நின்றது நாற்காலி!
நிற்காமல் காலகாலமாய்!
ஓடிக் கொண்டிருந்தது!
அறைமூலையில்!
ஆளுயரப் பாட்டன்கடிகாரம்!
திருகப்பட்ட சாவிக்குத்!
தடையற்ற!
சேவையைத் தந்தபடி!
கடந்துபோன!
நிகழ்வுகளுக்கு எல்லாம்!
கனமான மவுனசாட்சியாய்..?