தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தாய்

வினோத்குமார் கோபால்
விதையாய் விழுந்து எனை!
உன்னில் புதையலாய் இட்டேன்!
விதையதனில் துளிர் தெரிக்க!
உதிரம் உருக்கி உரமாய்!
எந்தனில் உயிர் ஊறினாய்!
திங்கள் பத்து களைய!
நின் வயிற்றுத் தொடிலில்!
எனை ஊஞ்சல் இட்டாய்!
பெண் எனும் போர்வைக்குள்!
சேய் பின்பு தாரமாகி!
என்னுடையத் தாய் ஆனாய்!
உன்னை பற்றி எண்ணியே!
வியப்புற்றேன் என் தாயே!

வைரம்

வினோத்குமார் கோபால்
மலையிரண்டில் மையத்தில்!
தலையெட்டிப் பார்த்திருக்கும்!
விடியற்பொழுது நாயகனின்!
சிரிப்பிற்கு ஒப்புமையோ!
விரலெட்டிப் பார்க்கும்!
மோதிரம் அமர்ந்த!
விரல் கிளையின்!
மேல் மலர்ந்த!
வெண்குடை விரித்து!
நின் விழி நோக்கும்!
வைரக் கல்!

அன்பெனும் ஒளி

வினோத்குமார் கோபால்
கருப்பு நிறத்தையும் தோற்கடிக்கும்!
நிறத்தை உமிழ்ந்திருக்கும் இடமதில்!
முருக்கித் திரித்த வெண்நாவுடைய!
மண்ணெரித்து எண்ணெய் உண்ட!
வெண்நா எரிக்கும் விளக்கே...!
நீயறிந்த திசை எல்லாம்!
வெளிச்சமெனும் புகழ் நீட்டி!
ஒளி வரவைக் காட்டுகிறாய்!
எந்தாயும் உனை காட்டில்,!
வெளிச்சம் அதிகம் தருவாள்!!
அவளின் அன்பெனும் ஒளியதற்கு!
உன்னிடம் ஈடு உண்டோ?!

தாயெனும் தேவதை

வினோத்குமார் கோபால்
சிறகுகள் சுழலும்!
செயற்கைக் காற்று!
பஞ்சு பொதித்த!
தலையனை, மெத்தை!
எதுவுமிங்கு எனக்காக!
தரையமர வேண்டாமே!
தாயெனும் தேவதையின்!
மடியெனக்காக காத்திருக்க...!

தொடரு

செண்பக ஜெகதீசன்
முன்னேறத்துடிக்கும் இளைஞனே!
முடங்கிவிடாதே சோம்பலில்,!
முன்வைத்த காலை!
நடை!
முடியுமுன்னே எடுக்காதே..!
போய்க்கொண்டே இரு!
பாதை இருப்பது உனக்காக,!
பாதையில் வருவது!
பாலைவனமானாலும்!
பயணத்தை நிறுத்தாதே-!
புசிக்கக் கிடைக்கும்!
பேரீச்சம்பழமும்,!
பருகத் தண்ணீரும்...!!
பாதையைப் பார்த்து!
பயணத்தைத் தொடரு,!
வராது!
தோல்வியாம் இடரு

மனிதன் காட்டிய பாடம்

செண்பக ஜெகதீசன்
கன்றுக்குட்டி!
கற்றுக்கொடுத்த பாடம்-!
முட்டினால்தான்!
கிட்டும் பால்..!
எல்லோரையும்!
முட்டாளாக்கிவிட்டு!
மனிதன்!
காட்டிய பாடம்-!
வைக்கோலிலே கன்றுக்குட்டி…!!

சேர்ந்து

செண்பக ஜெகதீசன்
மனிதனே,!
ஒன்று சேர்ந்த நூல்களால்!
உன் மானம் காக்கப்படுகிறது-!
உடையாகி..!
நீமட்டும் ஏன்!
நின்று தவிக்கிறாய்!
தனியாய்…!!
சேர்ந்து வாழ்!
சோர்வு இல்லை…!!

அடுத்தொரு நாளில்

ரசிகன்!, பாண்டிச்சேரி
சொல்ல வந்ததை!
முதலில் சொல்லிவிடுவதாக கூறி!
மௌனம் பேச தொடங்குகிறாள்!!
முன் பொழுதும்!
முன்பெப்பொழுதும்!
ஆரம்ப நிலை இதுவாய்தானிருந்தது!!
இன்றேனும் சொல்லிவிடுவதை போல!
உடல் மொழிகள்!
அறிவித்தவண்ணம் இருந்தன!!!!
பொறுமையிழந்த நேரம்!
பின் சந்திப்போம் என்றவாறு கடக்க!
இவளும்!
அடுத்தொரு நாள்!
நமக்கானதாய் இருக்கிறதென்பதை!
சொல்லாமல் சொல்லியவாறு!
விடைபெறுகிறாள் கனத்த இதயத்தோடு

அவள் நினைவுகளோடு போராடுகிறேன்

ரசிகன்!, பாண்டிச்சேரி
உங்கள்!
எவரையும் போல் நானில்லை!!
ஒரு நட்பு மட்டுமல்ல...!
ஒரு காதலையும் தோற்றவன்..!
என்னையும் தான்!!
என்னைப்போல!
நீங்களும்!
ஏதேனும் ஒரு நினைவோடு/ தோல்வியோடு !
புழுங்கிக்கொண்டு தான் இருக்கிறீர்கள்...!
என்ன ஒன்று...!
அதை வாசிக்கவோ / ரசிக்கவோ!
உங்களிடம் நீங்கள் இல்லை!!
இப்படியான நினைவுகளை விட!
ஒரு கொடூர விலங்கொன்று இருக்குமாயின்!
நிச்சயம்!
அது நானாகத்தான் இருக்கக்கூடும்-!
என் ஆசைகளை கொன்று திண்கிறேன்!!
நிழலை!
விழுங்க முயற்சிக்கும் என் இரவில்!
பேய் என படரும்!
அவள் நினைவுகள்!
இம்மனித பிசாசை!
தூங்க விடப்போவதில்லை...!
அவளின்!
தீரா தாக நினைவுகள் பட்டு!
தெறிக்கிறது என் மௌனம்...!
ஒன்று கவிதையாகி விட்டது!!
மற்றவை அனாதையாகி விட்டது

பெண்ணிலா

ரசிகன்!, பாண்டிச்சேரி
இருட்டணைத்த மொட்டைமாடியில் !
முதலில்!
ஒரு வால் கொண்ட விண்மீன் தான்!
போரிட எத்தனித்திருந்தது!!
மின்னல் வேகத்தில்!
மடிந்து போனது!
மற்ற மீன்களுக்கு!
ஒரு கிலியை ஏற்படுத்தியிருக்கக்கூடும்!!
சீற்றத்துடன்!
வெள்ளொளியை கக்கியவாறு!
ஆணவத்துடன் முதல் அடி எடுத்துவைக்கிறாள்!
வெண்ணிலா!!
பின்னடி வைக்காமலே!
விண்மீன்கள் ஒன்றுவிடாமல்!
பின்வாங்கி கொண்டன!!
நீயா நானா என்ற!
தீர்மானம் கொண்டு!
அவள் நெருங்கிவரவும்!
என்னவள் !
தலை சுற்றியிருந்த!
நூலாடை மெல்ல நழுவவும்!
சரியாய் இருந்தது!!
தோற்ற பொலிவில்!
தோற்றுப்போனவள் !
ஒத்துக்கொள்ளாமல் ஒளிந்துகொண்டாள்!
மேகமூட்டத்தினூடே