தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சவரம்

மு.வெங்கடேசன்
 
சவரம் செய்துகொள்ள
சலூன்னில் நுழைந்தேன்

செவ்வாய் என்பதால்
செவ்வந்தியர்கள் வரவில்லையாம்

கடை திறந்தும்
காசு கிடைகவில்லையாம்

இதானால்  தான்
செவ்வாய் வெருவாயோ

ம்ம் .............சீரிபுத்தான் எனக்கு

பக்தி இருபவர்களிடம்
பகுத்தறிவும் இருந்திருக்கல்லாம்

சீரிபுடன் சிம்மாசனத்தில்
சிங்கமென அமர்தேன்

அமரிந்த நாற்காலி
அதுவாக சுற்ற

பலேவென்று பாராட்டுவதற்குள் 
பட்டனும் பாதியவிழிந்தது 

முன்னும் பின்னும்
முக கண்ணாடி

காலதாமதத்தால் காத்திருபவர்களுக்கு
கால்கொண்ட பலகை

தினமொரு  செயதியாய்
தினகரனும் கூட

பலபளிப்பன மேசையில் 
பவுடர் டப்பாக்கள்

வளவளப்பான டப்பாவில்
வாசனை திரவியங்கள்

முடி திருத்த
முள்ளான சீப்பு

சீப்புக்கு  சித்தப்பா
சின்ன கத்தி

கத்தியின் கணவராம்
கரடான  கதேரிகோல்

சேவல் கழுதென
தண்ணீர் தெளிப்பான்

விட்டு விட்டு
தெளித்த தண்ணீரால்

இமை இரண்டும்
தொட்டு தொட்டு திறந்தது

இது கண்களுக்கான
கண்ணாம்பூச்சி விளையாட்டு

பொண்விழnவன்று பொன்னாடை
போர்துவதாய் 

சலூன் காரன்
சால்வை போர்தீணன்

என் மனமோ
எதிர்காலம் நோக்க

சரித்திர மேடையில்
சால்வை கிடைப்பதாய்

கண்டேன் கனவு
நினை வnகும்மென்று

சொக்கிய  கண்கள்
சொர்க்கம் செல்ல

குறுகிய நேரத்தில்
குட்டி தூக்கம்

கண் விழித்தாள்
கழுத்தில் கத்தி

வெள்ளை திரவம்
கொள்ளை தடவி

சவரம் செய்தான்
சருக் சருக்கென்று

கத்தி ஏந்திய
நிறவெறி(கருப்பு-வெள்ளை) அழுக்கை

கட்சிதமாய்  தடவினான்
உள்ளங்கை  ஓரமாக

சவரம் செய்தபடியே
சற்ரே  வினவினான்

நகைகடி கnரமகள்
நாட்டம்  இட்டnலவென்று

நானோ -
நான் நோட்டமிட்டும்
அவள் நாட்டமில்லை என்றேன்

அவனோ
காதலிக்கும் காலம்தான்
காத்திருங்கள் என்றான்

முக கண்ணாடியில்
முகத்தை தடவியபடியே

அழகுடா செல்லம்மென்று
ஆனந்தமாய் வெளியேற

நகைக்கடை கnரமகளோ
நாட்டதுடன்  சென்றால்

அவள்
சிந்திய  சிரிப்பிள்
சிலிர்த்தது என்னுடல்

அப்புறமென்ன
சவரம் செய்த எனக்கு
சவரனும் கிடைத்தது
 

கடவுள்

எழிலி
 
எவரும் நேரில்  பார்த்ததில்லை
எந்த இன்பதுன்பத்திற்கும்
இதைத் தவிர வேறு பெயரில்லை!

கண்கள்  மூடி நினைத்துப்
பார்த்தால்- கடவுள்
தெரியும் பொய்யில்லை!

இதுவரை பாராத (ஏதோ ஓர்)
புது உருவம்-நிமிடத்தில்
நூறு முறை வந்து போகும்
மனக்  கண்ணின் அந்த நிழலுக்கு
மறுக்க முடியாத  பெயர் கடவுள்!

ஒருமித்த உணர்வுகளின் வடிகாலாய்
உளத்துள் கட்டளையிடும் அருவமது!

திமிறிடும் மனக் குதிரைக்குத்
திசையைக் காட்டும் கடிவாளமது!

ஒவ்வொருவருள்ளும்   ஒளிந்திருக்கும்
நம்பிக்கை என்னும் ஒரே சக்தி அது!

விதியின் வழியில் நடவாமல்
நாம் விலகிச் சென்றிட எச்சரிக்கும்!
ஆபத்தின் போது கேட்கின்ற
அபயத்தின் அசரீரி  அதுவாகும்!

வேண்டிய எல்லாம் கொடுத்திடும்!
நாம் வேண்டாத போதும் தானாய்
நம் பின் தொடரும்!

ஆயிரம் முறை நாம் மறந்தாலும்-
அயராது நமைக் காத்திடும்! 
தாய்மையின் மறு ரூபமது!
தயவென்னும் ஒரு வழிச் சாலையது!

நித்தம் நம்முடன் இருக்கிறது!
நாம் முயன்று உணராத வரை 
ஒரு போதும் தெய்வம் தென்படாது

நம்பினால் நம்புங்கள்

மணிமேகலை
வால்மீகி எழுதினான்
ராமன்  கடவுளானான்

வியாசமுனிவர் எழுதினான்
கிருஷ்ணன்  கடவுளானான்

நாளை ஹாரிபாட்டரும்
சக்திமானும் கூட
கடவுள் ஆகலாம்

எனக்கென்னவோ

ப.மதியழகன்
விழியிரண்டால்
மாயம் செய்தாய்
இதய அறையில்
நீயாய் நுழைந்தாய்
களங்கமில்லாச் சந்திரனே
பூமிக்கு எதற்கு
வருகை தந்தாய்
நகம் வளர்ந்தால்
வெட்டிவிடலாம்
உனது ஞாபகங்களை
என்ன செய்வது
உனது கண்ணொளியிலிருந்து
கடன் வாங்கித்தானோ
கதிரவன் பிரகாசிக்கிறான்
வானம் போல தூரச் செல்கிறாய்
மனக்குளத்தில் ஏன் கற்களை
எறிகிறாய்
தாயைப் போல
கேசம் வருடுகிறாய்
என்ன வரத்தை
தெய்வத்திடம் கேட்கிறாய்
அலைகடலில் கால்
நனைக்கிறாய்
தோள் மீது
சாய்ந்து கொள்கிறாய்
காற்றில் தவழந்து வரும்
இசை மழையில்
மெய் தீண்டத் தீண்டத் தானே
நாணம் வெட்கி வெட்கி விலகும்
என்ற வரிகளை
நான் முணுமுணுக்கிறேன்

அலைபேசி

வாணிகல்கி வனிதா
நீ விடும் மூச்சு
கேட்காது யார்க்கும்...
ஒரு
பொத்தானைத்
தட்டினால்
உலகெங்கும் கேட்கும்
பேச்சு.
பிச்சையையும்
பிச்சையெடுத்து
பிரத்தியோகப்
படுத்தக் கூடும்.
சடலமும் சட்டென்று
பேசி முடிவுக்கு வரும்
எமனிடம்,
சொர்க்கம்? நரகம்?
என்று.
காலம் நகன்றால்
கருப்பையிலும்
கட்டாய உருப்பாகக்கூடும்
கைபேசியும் ஒரு நாள்

என் வீட்டு தலையணை

சீமான்
என் கனவுகளை,
கவிதைகள் தின்று,
எச்சத்தை
என் வீட்டு தலையணை தின்று
பெருத்து கிடக்கிறது

அதுவும்
காதல் கற்று கொண்டது போல
துணை வேண்டி
ஆர்ப்பாட்டம் செய்கிறது
இரவில் அதன் தொல்லை
தாங்கமுடியவில்லை

நீயாவது ஜோடியோடு இரு
என்று துணைக்கு ஒரு
தலையணை வாங்கி போட்டேன்
இப்போதெல்லாம் அவர்கள்
செய்யும் குறும்புகள்
தாங்கமுடியவில்லை

வழக்கமான காதலர்கள் போல்
தொட்டுக்கொள்ள ஆரம்பித்து
இப்போது கட்டிக்கொள்ளும்
வரை வந்து நிற்கிறது

தலை அணைப்பதற்கு பதிலாய்
தலைவனையே அணைத்து கிடக்கிறது
தலைவி தலையணை

உயரம் வேண்டி அடுக்கிவைத்து
உறங்கும்போது
முத்த சத்தம்வேறு
இரண்டாம் சாமத்தில்

அவள் நினைவில் கட்டிக்கொண்டு
உறங்கும்போது
அவைகள்
உறங்குவதும் இல்லை
உறங்க விடுவதும் இல்லை
அரை தூக்கம் குறை தூக்கமாய்
இருந்த என்னை
அறவே தூக்கம்
இல்லாமல் செய்து விட்டன

உறை மாற்றும் வேளையில்
வெட்கப்பட்டு போர்வைக்குள்
ஒளிந்து கொள்கின்றன...

இப்போதெல்லாம்...
ஏன்டா எங்களை
இருவேறு உறைகள் இட்டு பிரித்து
வைக்கிறாய் என்று திட்டி
தீர்த்துவிடுகின்றன

என் கண்ணீர் தொட்டு
கவிதைகளும் எழுத கற்று
கொண்டு விட்டன.

ஒரேஒரு குறை,
அவைகள் இன்னும்
குட்டிபோட
கற்றுக்கொள்ளவில்லை

ஏறக்குறைய மனிதன்

என்னுள்
கொஞ்சம் கடவுள், நிறைய மிருகம்
 
முகமறியா இணைய நண்பர்களுக்கு
தினமும் முதல் வணக்கம் புன்சிரிப்பு கலந்து
 
லாட்டரி சீட்டுக்கு
பத்து ரூபாய்
பத்துநாள் பட்டினிப்
பிச்சைகாரனுக்கு ஒரு ரூபாய்
 
என்னுள்
கொஞ்சம் கடவுள்
நிறைய மிருகம்
நான்
ஏறக்குறைய மனிதன்

மெளனப்போலி

சலோப்ரியன்
தனிமையில் நான்
தேநீர் அருந்தும் போதும்
நாற்காலியில் கண்கள் மூடி
சாய்ந்திருக்கும் போதும்
வியர்வை சிந்த விளையாடி விட்டு
தரையில் வீழ்ந்திருக்கும் போதும்
சிந்துகின்ற மழையை பலகணி வழி
பார்த்து ரசிக்கின்ற போதும்
இதயம் வருடும் இசையை
செவிகள் கேட்கும் போதும்
தூக்கம் தொலைத்த
நீண்ட இரவுகளின் போதும்
ஏன் சில வேளைகளில்
தூங்குகின்ற போதும்
இப்படி தனிமையென்னைத்
தவிக்கவிடும் பொழுதுகளிலெல்லாம்
மெளனம் வந்து மனதுள் அமரும்.
ஆனால் நீயோ
மெளனத்தை விரட்டி விட்டு
மகுடம் சூடிக் கொள்வாய்.
தனிமையின் பொழுதுகளில்
என்னோடு பேசுகின்ற மெளனம் நீ!

- சலோப்ரியன் (ஆன்டணி)

நேற்றின் எச்சில்

கல்யாண்ஜி
தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே வரிகள் இருந்தன
நீங்கள் அமிழ்கிற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை
உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.
உங்களுக்குப் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று- கல்யாண்ஜி (காலச்சுவடு)

நீ வேண்டும்

எட்வின் பிரிட்டோ
அப்படி என்னத்தான் இருக்கிறது
உன்னிடம் என்று என்னையே இன்னும்
கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன்!
விடை தெரிய நீ வேண்டும் எனக்கு!

வாழ்க்கைக்குச் சுவையாய்
சின்ன சின்னக்குழந்தைகள்,
வந்துபோக சுகமாய் சுற்றுங்கள்,
இவைகளோடு நான் சுமக்கும்
சுகமான சுமையாய்
என் வாழ்வில் நீ வேண்டும்.

துளி துளியாய் சந்தோஷம் குவித்து,
தொல்லையில்லா நேசம் சேர்த்து,
துன்பமில்லா ஓர் வாழ்க்கைக்கு
துணையாய் நீ வேண்டும்.

பத்தாம் வகுப்பு காதலி, பழங்கதை,
பக்கத்து வீட்டுப் பருவப் பெண்,
பாரதி என பலவும் பகிர்ந்து கொள்ள
பக்கத்தில் நீ வேண்டும்!

எப்போதும் சலிக்காத உன் பேச்சு
எப்போது சலிக்கிறதென்று பார்க்க
என்னருகே நீ வேண்டும்...
எப்போதும்!

கவிதைப் போல் ஒரு வாழ்க்கை
காலமெல்லாம் வாழ
கனவிலாவது நீ வேண்டும்... எனக்கு