தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அவளின் விசனம்

துர்கா
அவமானங்கள் அறுத்தெறியப்பட்டு!
அங்கங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன!
வெட்டவெளியில் நீதிதேவதை!
மடிந்து கிடக்கிறாள்!
அப்பட்டமாக்கப்பட்ட பின்பு!
ஏனோ?!
மௌனமான மனம்....!
வடிந்தொழுகும் குருதியின்!
வாடை பகிர்ந்து கொண்ட!
பின்பு மறைவிடத்தை எங்கு போய்!
தேடுவது......?

விழி

முத்துக்குமார்
அந்தப் பார்வை..!
எந்தப் பார்வை!
என ஊருக்குத் தெரியாது!
ஆனால்!
உனக்குத் தெரியும்!
இதயத்தை!
தீப்பற்ற வைத்துவிட்டு!
காதலை அதில்!
குளிர்காய வைத்த!
என் முதல் பார்வையைத்தான்!
நான் அப்படிச் சொன்னேன்!
மௌன மொழிகளின!
ஊடகமான!
அந்ந கருப்பு வெள்ளைத் தடாகத்தின் மூலம்!
எத்தனை உணர்வுகளை!
என்னோடு பரிமாறி இருப்பாய்!
கண்ணடிப்புகள் முதல்!
கண்டிப்புகள் வரை!
உன் விழிகளில்தான்!
தேய்ந்திருக்கக் கூடும்!
சில வேதனைகளையும்!
பல போதனைகளையும்!
சாதனைகளாக்க.!
உன்னை விலைக்கு வாங்கிய!
என் விழிகளையும்!
என்னை விலைக்கு வாங்கிய!
உன் விழிகளையும்!
தத்துக் கொடுப்போம்!
தான வங்கியிடம்!
பார்வையுதிர் காலத்தில்!
இருக்கும்!
சில விழிகளுக்கு!
அது வசந்த கால!
வாழ்த்து சொல்லட்டுமே!
விழிகளில் மலர்ந்த!
நம் காதல்!
மலர்ந்தே இருக்கட்டும்..!
வாழையடி வாழையாய்!
இம்மண்ணில்!
நாம்!
வாழ்வதற்கு அடையாளமாய்!