தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் உங்களுடையது
என எழுதும் கவிதைக்கு
முன்பே வரிகள் இருந்தன
நீங்கள் அமிழ்கிற ஆறு
ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் பார்க்கிற சூரியன்
பார்த்திருக்கிறது எண்ணற்றவர்களை
உங்களுடைய சாப்பாட்டுத்
தட்டில் இருக்கிற பருக்கைகளில்
நேற்றின் எச்சில்.
உங்களுக்குப் பின்னாலும்
வர இருக்கிறார்கள்
நிறைய பேர்கள்
அடித்தல் திருத்தல் அற்று- கல்யாண்ஜி (காலச்சுவடு)

கல்யாண்ஜி