தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

துடிக்கும் ஆசைகள்

தீபா திருமுர்த்தி
அக்கறையை கூட !
அடக்கமாய் !
அறிவிக்கும் !
எனக்குக் கிடைத்த !
நீயோ !
ஆதங்கமாகவே தெரிவிக்கிறாய் !
ஆறுதலையும் !
தேறுதலையும் கூட! !
மின்னிச் சிரித்த !
கண்கள் !
உப்பு நீர் உகூக்கிறது..., !
பிறர்க்காய்! !
எழுதிய வார்த்தைகளெல்லாம் !
வாடி வதங்கி !
வெளுத்துக் கிடக்கின்றன..., !
மன கருப்பறையில்! !
எனக்கின்றி !
குழைந்து வரும் வார்த்தைகள் !
இழைத்தெடுக்கின்றன !
இன்னொருத்தியாய்...., !
உன்னிலிருந்து எனை! !
எனதறிவிற்குத் தெரியும் !
வேப்பிலையின் !
கசப்புத்தான் என்று...., !
நீ! !
மனத்திற்கு? !
வளர்ந்திருந்த எனை !
குழந்தையாக்கி !
குழந்தையாய் இருந்த நீயோ !
குயவனாய் !
வநைகிறாய்..., !
சில்லுகளை மட்டும் !
சேகரிக்கும் !
பானையை! !
தங்கிவிடுகின்றன !
மடித்து கடிதங்கள் !
எடுத்துத் தராமலேயே! !
காதலின் நிறமேறா !
என் வாழ்வில் !
பச்சைச் சாயம் ஏற்றி !
கருப்பு நிறம் !
இறக்கிய பிறகும்...., !
தனியறையில் !
சந்திக்கும் காதலரின் !
இதயத் துடிப்பை விடவும் !
ஆயிரம் மடங்கு !
அதிகமாய்த்துடிக்கிறது !
ஆசைகள்

இரயில்

ப்ரியன்
என் கையசைப்பு !
உணர்ச்சியில்லாமல் !
ஓடிக்கொண்டிருக்கும் !
அந்த மனிதர்களுக்கானதல்ல; !
என்னைக் கடக்கும்போதெல்லாம் !
மறக்காமல் !
உற்சாகமாய் கூவிச் செல்லும் !
அந்த இரயிலுக்கானது! !
!
- ப்ரியன்

யாழ்.நகரம்

தீபச்செல்வன்
ஒரு கொத்துரொட்டிக்கடை!
இனந்தெரியாத பிணம்!
நீளும் அமைதி:யாழ் நகரம்.!
01!
எனது சைக்கிள்!
சந்தியில்!
குருதி வழிய வழிய!
உடைந்து கிடக்கிறது!
நாட்குறிப்புக்களை!
காற்று வலிமையாக!
கிழித்து போகின்றன!
எனது பேனா!
சிவப்பாகி கரைகிறது.!
மதிய உணவிற்கு!
வாங்கப்பட்ட!
அரை ராத்தல் பாணை!
நாய்கள் அடிபட்டு!
பிய்த்து தின்னுகின்றன!
வாழைப்பழங்களை!
காகங்கள்!
கொத்தி தின்னுகின்றன.!
எனது பிணம்!
உரிமை கோரப்படாமல்!
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.!
வீட்டின் கூரை!
உக்கியிருக்கிறது!
சுவர்கள் கரைந்து!
சரிந்திருக்கின்றன!
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்!
அழுகையில்!
கூடியிருக்கிறார்கள்.!
வீதி மயானமாகிறது!
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன!
மின் தூன்கள்!
உயிரை குடிக்கின்றன.!
யாரோ சாப்பிட வருகிறார்கள்!
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.!
02!
நான் யாரென்பதை!
நீங்கள் அறியாதிருப்பீர்கள்!
ஆவலற்றிருப்பீர்கள்!
நீங்கள் சாப்பிடும்!
கொத்துரொட்டி!
மேசையில் பரவியிருக்க!
எனது பிணம்!
பின்னணியாய் தெரியும்.!
இவன் ஏன் சுடப்பட்டான்!
என்பது பற்றிக்கூட!
நீங்கள் சிந்திக்கமாட்டீர்கள்!
உங்களால்!
தொடர்ந்து அமைதியாய்!
சாப்பிட முடியும்!
நாளைக்கு வெடிக்கப்போகிற!
வன்முறைகளுக்கு!
ஊரடங்கு அமுலுக்கு!
நீங்கள் தயாராகுவீர்கள்.!
03!
கடையில் இருக்கும்!
பொருட்களில்!
சிலவற்றை முண்டியடித்து!
வாங்கிவிட்டு!
குறைந்த பொருட்களோடு!
கூடிய பாரத்தோடு!
வீட்டிற்கு வருவீர்கள்!
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி!
கூப்பிட்டு!
அவதானமாக கதவை திறந்து!
உள் நுழைவீர்கள்!
கதவுகளை ஜன்னல்களை!
இறுக சாத்திக்கொள்வீர்கள்.!
அவன் என்ன செய்திருப்பான்!
என்ற கேள்வி!
நீர் தீர்ந்து காற்று வரும்!
குழாயை உலுப்புகையிலும்!
எழாமலிருக்கும்.!
ஒரு பக்கத்துடன் வெளிவரும்!
நாளைய தினஇதழ்!
அதில் அவன் சாவு!
இனங்காணப்பட்டிருக்கும்!
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்!
மின்சாரம் துண்டிக்கப்பட்டு!
ஏழு மணியுடன்!
கண்னை மூடிக்கொள்கையில்!
இரவு பெரிதாக விரிகையில்!
எதுவும் நினைவு வராது.!
நாளை அந்த கொத்துரொட்டிக்கடை!
பூட்டியிருக்கலாம்!
வேறு எங்கேனும்!
ஒரு கொத்துரொட்டிக்கடை!
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.!
கொஞ்ச பொருட்களுடன்!
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.!
!
04!
நான் என்ன செய்தேன்!
எதை விரும்பினேன்!
யாரை நேசித்தேன்!
யாரை எதிர்த்தேன்?!
எனது வீடு எந்த!
கிராமத்திலிருக்கிறது!
எனது பேஸில்!
யாருடைய படம் இருந்தது!
எந்த பிரதேச வாடையுடைய!
உடைகளை!
நான் அணிந்திருந்தேன்!
எனது தலைமுடி!
எப்படி சீவப்பட்டிருந்தது?!
யார் என்ன கவனித்தார்கள்!
எந்த முகாங்கள்!
அமைந்திருக்கும் வீதியால்!
நான் பயணிக்காதிருந்தேன்?!
எந்த சீருடைகளுக்கு!
நான் அச்சமாயிருந்தேன்!
ஏன் பொது உடைகளுடன்!
வந்தவர்களால்!
நான் சுடப்பட்டேன்?!
எனது பிணத்தில்!
எத்தனை கேள்வியிருக்கிறது!
எப்பொழுது நான்!
இனங்காணப்படுவேன்?!
!
05!
நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?!
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?!
குறிப்பிட்ட நேரங்களுக்குள்!
என்ன இருக்கிறது?!
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்!
என்ன நடக்கிறது?

மரணத்தின் வாசல்

எதிக்கா
கோடை விடுமுறை!
கொண்டாட ஒரு!
சுற்றுலா !
குடும்பத்தோடு!
பாதித்துராத்தில்!
கண்கள் மேலே சொருக!
நாக்கு ஒருபக்கமாய் இழுக்க!
அப்படியே மூர்ச்சையற்று!
மயங்கியபடியே!
ஒருகணத்தில்!
எல்லாமே போயின!
திடீர் மார்படை!
அருந்தப்பில் !
மரணத்தின் வாயிலை !
தொட்டுவந்தாள் என் தாய்

அன்பு

சு.சிவா
தங்கா!
உனது கையெழுத்து!
கண்களில் ஒற்றிக்கொள்ளும்!
அழகு என்றேன்!
நீ!
எனது கையெழுத்தே!
அழகு என்றாய்!
உண்மைதான் சகோதரி!
அன்பை எப்படி எழுதினாலும்!
அழகாகத்தான் இருக்கும்.!
!
-சு.சிவா

காதலுக்குள்

அகிலன் லெட்சுமணன்
காதலுக்குள் .... !
எல்லா திசைகளிலும் !
தேடிவிட்டேன் !
ஆழம் தோண்டி !
பார்த்துவிட்டேன் !
உதிரம் கலந்த காற்றாய் !
உணர்வுகள் கலந்த உடலாய் !
எங்கு ஊற்றெடுக்கிறாய் ? !
இதயத்தின் எந்த மூலையில் !
துடித்துக் கொண்டிருக்கிறாய் ? !
என் தேசத்தின் எந்த மூலையில் !
படையெடுத்தாய் ? !
என்றாவது கண்டுப்பிடிப்பேன் !
காதலுக்குள் உன்னை ! !
- அகிலன் லெட்சுமணன் !
A33-4-38, Jalan Puchong Permai 1/14 !
Taman Puchong Permai !
47100 Puchong, Selangor !
012-2581393

மரணம்

சிலம்பூர் யுகா துபாய்
1!
அழையாவிருந்தாளி!
வந்தாலும்!
யாரும் வரவேற்பதில்லை!
ஆனாலும் வருவாய்!!
கதவைத்தட்டி வரும்!
கண்ணியமெல்லாம்!
உனக்கில்லை.!
அழுகை காண்பதும்!
ஒப்பாரி கேட்பதும்!
உனது!
ஒப்பில்லாபொழுதுபோக்கு.!
அழிப்பதையே!
படைப்பாய் கொண்ட!
வக்கிர படைப்பாளி!
உன்னை!
விரும்பியவர்களை கூட!
பூமியில்!
விட்டுவைப்பதில்லை!!
எங்கிருந்து வந்தாய்!
எவருக்கும்தெரியாது!
எங்குசென்று முடிவாய்..!!
உன்!
தலையெழுத்து!
தயாராகிவிட்டது.!
உன்னிடம்!
தோற்று தோற்றே!
உன்னை!
வீழ்த்தும் வத்திரம்!
கண்டுபிடித்திருக்கிறோம்!
அதில்!
ஒரு எழுத்தும்!
ஒரு எண்ணுமே!
விடுபட்டிருக்கிறது,!
ஏதோ ஒரு!
சகோதரனோ,!
சகோதரியோ-அதை!
கண்டெடுத்துவிடுவார்கள்.!
அப்போது!
உன் வாழ்வும்!
கதையாகிப்போகும்!
எங்கள் கனவெல்லாம்!
நிஜமாகிப்போகும்.!
உன் இறப்பிற்கு முன்!
ஒரே ஒரு வேண்டுகொள்!
இரக்கமற்றவர்களையெல்லாம்!
எடுத்துச்சென்றுவிடு!!
கோபமின்றி!
கேட்டதற்கு நன்றி!!!
!
2!
இருமுறை வேண்டாம்!
ஒரேமுறை வா.!!
!
எங்கோ!
நிகழுகின்றபோது!
செய்தியாய்!!
ஊரில்!
நடக்கின்றபோது!
காரியமாய்!!
உறவில்!
சம்பவிக்கும்போது!
துக்கமாய்!!
இல்லத்தில்!
ஏற்படுகின்றபோது!
இழப்பாய்!!
சம்பவம் ஒன்றாயிருந்தும்!
வலியில் ஏன்!
இத்தனை வித்தியாசம்?!
மரணமே!!
இயலுமேயானால் - இந்த!
வித்தியாசத்தை!
விலக்கிக்கொடேன் !!
இரண்டுமுறை!
வந்து செல்கிறாய்!
முதல் முறை!
மௌனமாய் வந்து!
மனதைக்கொன்று செல்கிறாய்,!
இரண்டாம்முறை!
ரகசியமாய் வந்து!
ஊரறிய உயிரைக்கொன்று!
கொண்டு செல்கிறாய்!!
இரண்டுவருகைக்குமிடையில்!
இனி!
கால இடைவெளி வேண்டாம்!!
மனித உறவுகள்!
மனதில் நீர்த்தபின்!
உடல் உலகம்சுற்றுவதில்!
அர்த்தமுமில்லை.!
அன்புமில்லை!!
அதனால்!
சம்பவிக்கட்டும்!
இனி இரண்டுமரணமும்!
ஒருமித்தே!!
சர்வம் முழுதும்!
நடக்கட்டும் மானுடம்!
கைகோர்த்தே

கனவாய் மறந்து போய்விடுமோ

இளந்திரையன்
வெள்ளைப் பனி நாட்டினிலே !
வெறுமைத் தனி சிறையினிலே !
உள்ளம் தடுமாறுதையோ - எம் !
உயிரும் நொந்து போய்விடுமோ !
!
விருட்சமாய் வளர்ந்த எம்மை !
வேரறுத்து பிடுங்கி வந்து !
பதி வைத்தால் முடியுமோ - எம் !
பசுமை மீண்டும் வந்திடுமோ !
!
இளந்தென்றல் காற்றில் சிரித்தும் !
இளவேனிலிற் காய்ந்து உலர்ந்தும் !
மாரியில் தழைத்து மலர்ந்தும் -எம் !
மனதினில் பூரித்தது மறந்திடுமோ !
!
செம்பாட்டு மண்ணில் சிவந்தும் !
செந்நெற் கழனியில் உழைத்தும் !
பாட்டினில் களைப்பு மறந்தும் - எம் !
பண்பாட்டில் உயர்ந்தது அழிந்திடுமோ !
!
அப்பன் அம்மா பேச்சினிலே !
அன்னை தமிழின் மூச்சினிலே !
செல்வம் கொழித்த மண்ணினிலே - எம் !
சிரித்த இதயம் அழுதிடுமோ !
!
ஆலய மணியின் ஓசையினிலே !
அருளும் அன்பின் மூச்சினிலே !
பெரியவர் புரவலர் சேர்த்துவைத்த - எம் !
பெருமை எல்லாம் மறைந்திடுமோ !
!
புரவிகள் பாய்ந்த புரங்களும் !
புகழுடன் வாழ்ந்த இடங்களும் !
கட்டி வைத்த கோட்டைகளும் - எம் !
கனவாய் மறைந்து போய்விடுமோ !
!
தமிழின் புகழும் அழிந்திடுமோ !
தரணி எம்மை மறந்திடுமோ !
யாரெனக் கேட்கும் சரித்திரம் - நாம் !
யாரெனச் சொல்வோம் சந்ததிக்கு

மறுபடியும் பூக்கும்

அன்பாதவன்
மறுபடியும் பூக்கும் எனது தொட்டிச் செடி !
இன்றில்லாவிடில் நாளை !
மறுநாள் அதற்கும் பின்னாளில் !
நிச்சயமாய்ப் பூக்கும் !
மறக்கவியலாது !
தினம் மலர்ந்து சுகந்தம் பரவிய நாட்களை !
என்னாலும் செடியாலும் !
இன்றும் மணக்கிறதெனக்குள் !
நல்லதொரு தோட்டக்காரனாய் நானில்லாததை !
மவுனத்தால் உணர்த்தி !
முட்களால் குத்தும் சிலநேரம் !
வேர் பாவியிருப்பதென்னவோ !
வீர்யமிக்க காதலில் !
காலத்தின் மெல்லிய சுழற்சியில் மாறு மெல்லாம் !
மாற்றங்களோடு பூக்கும் மறுபடியும் !
என் செடி எனக்காக

மனம்

பேதை
பணிதேடி அலைவதுவே!
பணியான காலத்தில்!
தருமமென இரந்தொருவன்!
வரும்பொழுது மனம்நினைக்கும்!
நல்லதொரு வேலைகிட்டி!
செல்வமும்கை சேர்ந்தபின்னே!
அல்லலுறும் வறியவர்க்கு!
இல்லையெனா தீந்திடுவோம்!
வருகின்ற முதல்வருவாய்!
இருபங்காய் ஆக்கிஅதில்!
ஒருபங்கு நாமெடுத்து!
மறுபங்கை ஈந்திடுவோம்!
மனதிலொரு உறுதியுடன்!
அனுதினமும் நினைத்திருந்தும்!
அலுவலகம் முதன்முதலில்!
செலும்பொழுது மனம்பதறும்!
வருவாயில் ஒருபாதி!
இருந்தாலும் மிகஅதிகம்!
பத்தில்ஓர் பாகத்தை!
முத்தாக ஈந்திடுவோம்!
பத்திலொரு பகுதியினை!
பத்திரமாய் எடுத்துஅதை!
இல்லார்க்கு கொடுத்திடுமுன்!
பொல்லாத மனம்மாற!
இருக்கின்ற நண்பருக்கு!
விருந்தொன்று தந்துவிட்டு!
இல்லாத எளியவர்க்கு!
சில்லரையைத் தேடுகிறேன்.!
!
-பேதை