தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வரமா, சாபமா?

சிலம்பூர் யுகா துபாய்
என் வீட்டுதொலைபேசியில்!
இரண்டு மணியடித்து நின்று!
இரண்டாவது!
அழைப்பு வந்தால்,!
எதிர் முனையில்!
நீயிருக்கிறாய்!
என்று அர்த்தம்.!
பிழையான எண்!
எனக்கூறி!
நான் பின் வாங்கினால்!
அருகில்!
அப்பா இருக்கிறார்!
என்று அர்த்தம்.!
இப்படி எத்தனையோ,!
எத்தனையோ.....!
விளையாட்டு!
இப்போதும் தொடருகிறது.!
ஆட்டத்தில்!
தங்கையுடன் யாரோ..!
நான்!
தொலைபேசி!
தொடுவதையே!
துறந்துவிட்டேன்!
யார் கழுத்திலோ!
நீ தாலி கட்டியதிலிருந்து!!
இந்த தொலைபேசி!
தங்கைக்காவது!
வாழ்க்கையை!
வாங்கித்தருமா,!
இல்லை!
மணமாகாத விதவையாய்!
அவளையும்!
விட்டுவிடுமா?!
!
கவசங்களும் காயப்படுத்தும்..!!
!
முட்களை!
எனக்கு!
காவலென்றுதான்!
கருதியிருந்தேன்.!
தென்றல் காதலன்!
தீண்டியதும்!
முதுகை காயப்படுத்தியபோதுதான்!
புரிந்தது!
பூக்களுக்குமட்டுமல்ல!
காதலுக்கும்!
முட்கள்!
எப்போதும்!
எதிரியே என்பது!!
!
காலம் மருந்தா, திராவகமா?!
!
எல்லா காயங்களையும்!
ஆற்றிவிடும் வல்லமை!
காலத்திற்கு உண்டாம்!!
அது ஏன் காதலி!
என் காயங்களை மட்டும்!
காலம்!
ரணமாக்கிக்கொண்டே இருக்கிறது!
உன்னை கனவனோடு!
காண்பித்து,!
காண்பித்து?!
!
நானும், நீயும், காதலும்..!!
!
என் ரணங்களையும்!
வலிகளையும்!
சுமந்து!
ரத்தம் சொட்டச்சொட்ட!
வந்து நிற்கிறேன்!
உன் வாசலில்!
நம் காதல் வேண்டி!!
காதலை!
கோமோவாக்கி!
உள்ளே நீ!
உன் குழந்தையுடன்!
விளையாடியபடி....!!
சாமர்த்தியமா, சதியா?!
!
ஒரே நேரத்தில்!
ஒரு கண்ணால் சிரிக்கவும்!
ஒரு கண்ணால் அழவும்!
உனக்கு!
சாத்தியப்படுவது எப்படி?!
இது!
சாமர்த்தியமா,!
இல்லை!
சதியா?!
இது!
நம் காதலை வளர்க்குமா,!
இல்லை!
என் உயிரை எடுக்குமா?!
!
காதல்!
நான்!
கோபமில்லாமல்!
மிகவும்!
கோபப்படுகிறேன்.!
நீ!
வார்த்தைகளில்லாத மொழியில்!
வசைபாடுகிறாய்.!
நம் காதல்!
சிரித்து நிற்கிறது!
மகளின் வடிவில்!
வலியே இல்லாமல்!!
எதார்த்தம் வலியதா இதயத்தை விட!!
!
தீயாய்!
இருந்த எனக்கு!
திரியானாய்!
நாராய்!
இருந்த என்னில்!
பூவானாய்!
அன்பாய்!
இருந்த போது!
தோழியாய்!
என் கனவுகளின்!
அதிபதி நீ!
என் கவிதைகளின்!
ராஜகுமாரி நீ!
என் ஆத்மாவிற்கு!
நீதான் ஜீவன்!
என் சொகுசுவாழ்விற்கு!
நீதான் வத்திரதாரி!
என் ஆயுள்வரை!
நீதான் காதலி!
ஆனாலும்!
என் மணமேடையில்!
விருந்தாளியாய்!
நீயும் உன் கனவனும்

பூவாய் மலரும் நாள்

வேதா. இலங்காதிலகம்
பூவாய் மலருமொரு நாள்!
பூமியில் இந்த நாள்!
பூவாசனை வீசட்டும் செயலில்.!
பூரிப்பை அள்ளித் தரட்டும்.!
புது அனுபவம் காத்திருக்கும்!
புதுச் சரித்திரம் தொடங்கலாம்.!
பூத்திடும் பல முயற்சிகள் !
பூரணத்துவம் ஆகலாம் நிதம்.!
நீவிடும் பூபாளமாய் விரியும்!
நாள் எம்மை ஆள்கிறதா!!
நாளை நாம் ஆள்கிறோமா!!
கோள்களின் வெற்றி வினையா!!
புதிய உயிர் பிறக்கும்.!
புன்னகை, புளகாங்கித நாளாகும்.!
புகழுடை உயிர் மறையும்!
புதிராகித் துயில் துறக்கும்.!
அவமானம் அள்ளி வராத !
சுயமானம் காக்கும் ஒரு!
வெகுமானம் நிறையும் நாளாகிக் !
கவலைகள் தெரியாத நாளாகட்டும்.!
அருவியென அறிவுச் சாரலான!
அரும் வாசிப்பில் மூழ்கும் !
ஒரு விவரத்திரட்டான !
பெரும் அறிவு நாளாகட்டும்.!
நுரை பொங்கி அருவருப்பூட்டி!
திரையிடும் பல வினைகளிற்கு !
இரையாகும் நாளாகவின்றி!
இரையாகாத நன் நாளாகட்டும்

நந்திகிராமம்

ஜெ.நம்பிராஜன்
செய்தி !
'பரபரப்பான சூழ்நிலையில் !
பாராளுமன்ற கூட்டத்தொடர்' !
'சட்டசபையில் எதிர்க்கட்சிகள் !
கூண்டோடு வெளியேற்றம்' !
போன்றே அன்றாட செய்திகளில் !
ஒன்றாகி விட்டன !
நந்திகிராம படுகொலைகளும். !
எங்கள் கவலை !
அரசி சாக கிடக்கிறாள் !
அபியோ கோமாவில் இருக்கிறாள் !
அஞ்சலி வேறு சிறையில் இருக்கிறாள் !
எங்களுக்கு இப்படி ஆயிரம் கவலைகள் !
யாருக்கய்யா நேரமிருக்கிறது !
நந்திகிராமம் பற்றியெல்லாம் கவலைப்பட. !
சிவப்பு கம்பளம் !
சிவப்பு கொடி மாறியது !
சிவப்பு கம்பளமாக !
பெரு முதலாளிகளுக்கு. !
-ஜெ.நம்பிராஜன்

வீதியை காணவில்லை

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
காலையில் எழுந்து!
கதவை திறந்தேன்!
வானம் என் வாசலில் !
வீழ்ந்து கிடந்தது.!
ஆங்காங்கே நட்சத்திரங்கள்!
சருகாய் கிடந்தன.!
சுற்றுமுற்றும் !
தேடிப்பார்த்தேன்!
சூரியனை காணவில்லை...!
உடைந்து விழுந்த நிலா!
புற்தரையெங்கும்!
பனியாய் படர்ந்திருந்தது....!
வீதிக்கு வந்தேன்!
வீதியை காணவில்லை!
இரவோடு இரவாக வெள்ளம்!
இழுத்துக்கொண்டு போனதாக சொன்னது!
மூழ்கி கிடந்த மின்சார கம்பம்.!
அழுவதற்காக உதடுகளை!
திறக்க முயன்றேன்!
ஆமைப்பூட்டுக்கொண்டு!
யாரோ பூட்டியிருக்கின்றார்கள்.!
விறுவிறு என்று ஓடிச்சென்று!
நேற்று கவிதை எழுதிய !
நோட்டை திறந்தேன்!
கவிதையையும் !
காணவில்லை!
எஞ்சியிருந்தன!
வெறுஞ் சொற்கள் மட்டும்

முதுகுமுறிய பொதிசுமக்கும் ஒட்டகங்கள்

துவாரகன்
நாங்கள் பொதி சுமக்கும் ஒட்டகங்கள்!
முதுகு முறிய பொதி சுமக்கும் ஒட்டகங்கள்!
மூச்சிரைக்க இழுத்துச் செல்லும் !
வண்டில் மாடுகள் போல்!
நாங்கள் !
முதுகுமுறிய பாரம் சுமக்க தயாராய் இருக்கிறோம்.!
சாட்டையும் விரட்டும் இலாவகமும்!
உங்களிடம் இருக்கும் வரை !
நாமும் சுமந்துகொண்டே இருப்போம்.!
செல்லும் தூரமோ,!
பொதிகளின் அளவோ !
எதைப் பற்றியும் நீங்கள் !
கணக்கிடத் தேவையில்லை.!
ஏனெனில் சுமக்கப் போவது நாங்கள்தானே.!
ஓய்வு கிடைக்கும்போது அசைபோடவும்!
நீர் கண்டபோது நிரப்பவும்!
பாலைவனம் கடப்பதற்கு உம்மைச் சுமக்கவும்!
நாங்கள் ஒட்டகங்கள் தயாராய் இருக்கிறோம்.!
இன்னமும் வானம் பார்க்கும் கூரையும்!
சில்லறை பொறுக்கும் கரங்களும் !
கூடவே எங்களுடன்தான்.!
என்றாலும் நீங்களும் நாங்களும் !
சாப்பிடுவது ஒரு சாண் வயிற்றுக்குத்தானே.!
-துவாரகன்!
04092007

உன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை

மன்னார் அமுதன்
உன் நினைவோடு நானிங்கு.. அவளும் எச்சிலிலையும்...!
!
01.!
உன் நினைவோடு நானிங்கு!
------------------------------- !
நீயங்கு..!
நானிங்கு..!
நாம் வாழும் வாழ்க்கையின்!
முகவரி வெவ்வேறு!
உணர்வுகள் உளறலாய்!
வெளிப்படும் இரவுகள்!
கழிவது எவ்வாறு!
பறக்கும் இறகினுள்!
முகம் மறைத் தழுதிடும்!
பறவையைப் பார்த்தாயா…!
நானும் அதுபோல்!
அழுதுடும் காட்சியைப்!
பார்த்தால் ஏற்பாயா…!
கானல் நீராகா!
வாழ்க்கையில் சேர்வோம்!
ஒன்றாகும் நேரம்!
கனவிலும் வாழ்வோம்!
கரம் பற்றி!
நான் அணைப்பேன்!
காத லினால்!
நீ நனைப்பாய்!
உன்னில் வாழும்!
நாட்களிலேதான்!
உவகை கொள்கின்றேன்!
உயிரே உன்னைச்!
சேர்வதற்காக!
உலகை வெல்கின்றேன்!
!
02.!
அவளும் எச்சிலிலையும்...!
-----------------------------!
என்றோ.... !
எவனோ வீசிய!
எச்சில் இலைகளைத் !
தின்று உயிர்க்கும்!
பிச்சைக்காரி!
“பாவம்,!
தின்னட்டும்” !
குரல் கொடுக்கும்!
கனவான்கள்!
உண்டதைத் தின்று!
மீந்ததை ஈந்து!
சில நாய்களோடு !
சொந்தம் சேர்வாள்!
நன்றிப் பெருக்கால்!
நாய்களும் பின்செலும் !
இருளைப் போர்த்தியவள்!
உறங்கும் இரவுகளில்!
நாய்கள் துணை தேடித்!
தெருவிற்குள் செல்லும்!
குப்பை மேட்டில்!
வெறித்த கண்களால்!
அவள் கிளிந்த உடைகளுள்!
எதையோ தின்று கொண்டிருப்பான்!
இலை வீசியவனும் ...!
குரல் கொடுத்தவனும்

நானும் கவிதையும்

சம்பத்குமார்
புதிதாய் ஒரு கவிதையை!
சிந்திக்கும் போது!
என்னை கடந்து செல்கிறது!
ஒரு வண்ணதது பூச்சி.....!
ஒற்றை வார்த்தைக்காக!
நான் காத்து கிடந்த போது!
காதுகளில் நிறைகிறது!
குயிலின் குரல்.....!
மூளையின் அணுக்களில்!
பரவி கிடக்கிறது!
குழந்தையின் புன்னகை....!
தெருவோர நாய் குட்டியின்!
தனிமை தவிப்பு.....!
போக்குவரத்து நெரிசசலில்!
கையேண்தும் சிறுவன்....!
நிமிடங்கள் சிதறி!
கலைகையில்!
வந்து நிற்க்கும்!
முதல் வரியொன்று....!
எழுத முடியாமல்!
தடுக்கிறது!
புகை படத்தில்!
என்னை பார்க்கும்!
அம்மாவின் பார்வை

கறுப்பு யூலை

த.சரீஷ்
உரிமையின் பரிசாகக் கிடைத்த!
கறுப்பு யூலை...!!
மரணங்கள் மலிந்தமண்ணில்!
உடலங்கள் எரிந்துபோக!
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்!
தினம்தினம்...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...!
துயரங்கள் சுமந்துகொண்டு!
தொடரும் காயங்களுக்கு நடுவில்!
நாளைய பொழுதின்!
விடிவுக்காக ஏங்கும்!
ஒரு இனமாகத்தான் இன்றும் தமிழ்...!!
நீதி!
என்றைக்கோ செத்துப்போனது!
மனிதனேயம்!
எப்போதோ தொலைந்துபோனது!
அன்றில் இருந்து...!
நியாயத்தின் அர்த்தம்!
என்னவென்றே தெரியாத ஆட்சியில்!
இன்றுவரை...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
தொப்புள்கொடி உறவுகளின்!
தலைகள் அறுபட்டு!
உடல்வேறு தலைவேறாய்!
தூக்கி எறியப்படும்!
பிஞ்சுகளின் உடலங்களில்!
தோட்டாக்களால்...!
துளைகள் இடப்பட்டு!
தூக்கில் இடப்படும்!
தாய்குலத்தின்!
உயிரிலும் மேலான கற்ப்பு!
களவாடப்பட்டு உடல்மட்டும்!
வீதியில் வீசப்பட்டிருக்கும்!
மரணங்கள் மலிந்தமண்ணில்!
உடலங்கள் எரிந்துபோக!
அவலங்கள் நிறைந்தவாழ்வாய்!
தினம்தினம்...!
தொடர்கிறது கறுப்பு யூலை!
அமைதியின் பரிசாக மரணம்!
அகிம்சையின் பரிசாக மரணம்!
பொறுமையின் பரிசாக மரணம்!
உரிமையின் பரிசாக்கூட மரணம்!
தவறேதும் இல்லாத!
தண்டணைகளாக...!
மனிதப்புதைகுழிகள்!
வங்காலைத் துயரங்கள்!
அல்லைப்பிட்டி அவலங்கள்!
இன்னும் சொல்லமுடியாத சோகங்களாய்!
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை!
வாழ்க்கைபற்றி!
எதுவுமே அறியாத பிஞ்சு!
வாழவென்று...!
நேற்றுப்பிறந்து இன்று மடிந்துபோகும்!
எதிர்காலக் கனவுகளோடு!
எங்களின் நாளைய தலைவர்கள்!
இன்றைய சிறுவர்களாய்!
பலியாகிப்போவார்!
பத்தோடு பதினொன்றாய்...!!
வாழ்வதற்கு ஏங்குகின்ற!
ஒரு இனம்!
கலையும் பண்பாடும்!
மிகநீண்ட வரலாறும்!
சொந்தமாகக்கொண்ட ஓர் இனம்!
சர்வாதிகார அரசின் இரும்புக்கரங்களால்!
நசுக்கப்பட்டு...!
பூவும் பிஞ்சுகளுமாய்!
தாயும் குஞ்சுகளுமாய்!
இன்றும் தொடர்கிறது கறுப்பு யூலை!
புதைகுழி வயல்கள் நீண்டுசெல்ல...!
துயரங்கள் சுமந்துகொண்டு!
தொடரும் காயங்களுக்கு நடுவில்!
நாளைய பொழுதின்!
விடிவுக்காக ஏங்கும்!
ஒரு இனமாகத்தான்!
இன்றும் நாங்கள்...!!
இருப்பினும்...!
எவராலும் அழிக்கமுடியாத இனமாய்!
பல்லாயிரக்கணக்கில்!
வேர் ஊண்றி விழுதெறிந்து!
பாரெங்கும் பரவியிருக்கிறோம்...!!
காயம்பட்டு...!
இரத்தக்கறைபடிந்த!
எங்கள் உறவுகளின்!
கன்னத்தைத்துடைத்து அணைத்திடவே!
நாங்கள் இங்கு இருக்கிறோம்...!!
பாசங்கள் அறுபட்டு!
எங்கேயோ தொலைந்துபோன!
உறவுகள் அல்ல நாங்கள்...!!
தொலைவினில் இருந்தாலும்!
தொப்புள்கொடி அறுபடாத!
குழந்தைகளாய்த்தான் நாங்கள்!
இங்கு இருக்கிறோம்.!
அதனால்த்தான்...!
அல்லைப்பிட்டியில் அடிபட்டால்;!
ஐரோப்பாவில் வலிக்கிறது...!!!!
இந்த...!
தொப்புள்கொடி உறவு இன்னும் நீழும்!
அகலங்கள் இன்னும் விரியும்!
இன்றைய!
மரணத்தின்வாழ்வு மறையும்வரை!
நாளை...!
கறுப்பு யூலை மரணங்கள் முடியும்வரை

இதுவும் விபச்சாரமே

சித. அருணாசலம்
ஆன்மீகத்தைக் கையிலெடுத்து!
அனைவரையும் தன்பின்னால்!
அணிவகுக்கச் செய்து,!
காவி உடையின் மகத்துவத்தில்,!
களங்கமாய்க் கறை சேர்த்து!
முற்றும் துறந்த வேடத்தில்,!
எங்கே திறந்தார் !
என்று ஏளனம் பேசுமளவு!
நம்பிக்கையைத் தகர்த்த !
நயவஞ்சகம் விபச்சாரம் என்றால்,!
அந்த அந்தரங்க அசிங்கத்தை!
விலைபோட்டு இணையத்தளத்தில்!
வியாபாரம் செய்து,!
நீலப் படத்தை விடக் கேவலத்தால்,!
நிறையவே பணத்தை!
முதலில்லாமல் முழுவதும் சேர்த்து,!
மஞ்சளைப் பூசிக் கொண்டதால்,!
நெற்றிக் கண்ணைக் காட்டுகிற போதும்,!
குற்றம் குற்றமே!!
புரிந்த செயல்!
முற்றிலும் விபச்சாரமே

இல்லம்

பனசை நடராஜன், சிங்கப்பூர்
அப்பா சூரியனுக்கு !
அன்றாடம் இரவு வேலை! !
எப்போது போவாரென்று !
இரவு வரக் காத்திருந்து !
ஆகாயப் புல்வெளியில் !
அம்மா நிலாவையும் !
அழைத்து வந்து விளையாடும் !
நட்சத்திரப் பிள்ளைகள்! !
விரைந்தோடும் நிலவைச்சுற்றி !
'வெள்ளைவட்டம்' போடுவதும் !
மறைந்து கொண்டும் !
காற்றுக் கையால் !
திறந்து முகம் மூடுவதுமாய் !
கருப்புமேகப் போர்வைக்குள் !
கண்ணாமூச்சி ஆட்டம்! !
அதிகாலை வேலை முடிந்து !
அப்பா சூரியன் திரும்பி வர !
ஒளியிழந்து நிலவுத்தாய் !
ஒடுங்கி நிற்க... !
துள்ளாட்டம் போட்ட விண்மீன்கள் !
துளிர்த்த வியர்வைப் 'பனித்துளியை' !
துடைத்தெறிந்து விட்டு !
அப்பா அடிப்பாரெனத் !
தப்பியோடி மறைகிறதோ! !
!
ஏவுகணை வீச்சால் - கூரை !
இடிந்த வீட்டில் பெற்றோர் !
வருந்தியிருக்க...... !
வானை வியந்து ரசிக்கிறது... !
குழந்தை! !
- பனசை நடராஜன், சிங்கப்பூர்