தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தீதும் நன்றும் பிறர்தர வாரா

அருண்மொழி தேவன்
நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.!
சத்தியமாக‌!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ !
உடை கொண்டு உடம்பு மறைப்பதை!
நாகரிகம் என்றவன்!
இன்று!
உடை விலக்கி உடம்பு காட்டி!
நாகரிகம் என்னும்போது !
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
எரிதழல் எடுத்து,விலங்கு விரட்டிய‌!
மனிதனவன்!
இன்று!
எரிதழல் கொண்டு,மனிதம் கொன்று!
விலங்காய் மாறும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
காணிநில‌ம்,க‌ண‌நேர‌ ஆகாயம்,!
சின்ன‌ தீப்பெட்டி,!
சுவாசிக்க‌ !
சுத்தமான‌காற்று,!
சின்ன‌ சின்ன‌ பொட்ட‌ல‌ங்க‌ளில்!
சிறை இருக்கும் குடிநீர்.!
ப‌ஞ்ச‌பூத‌ங்களை !
ப‌ண‌த்தின் மறுவ‌டிவ‌மாய் பார்க்கும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ !
மழை கொடுக்கும் மரங்களையிம்!
பச்சை நிற உயிர்களையிம்!
துண்டு துண்டாய்!
வெட்டிய‌வ‌ன்!
இன்று!
பயிர் பச்சை செழிக்க வேண்டி!
வான் நோக்கி!
தவமிருப்பதை காணும்போது!
நீ நம்பித்தான் ஆகவேண்டும்!
தீதும் நன்றும் பிறர்தர வாரா.!
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥!
நண்பா!நீ நம்பித்தான் ஆகவேண்டும்.!
சத்தியமாக‌!
தீதும் நன்றும் பிறர்தர வாரா

முழுமை

s.உமா
ஆண்மை என்றால்!
ஆளுமை!
அறிவு!
வலிமை!
வீரம்!
தலைமை!
தைரியம்!
வேகம்!
உறுதி!
பெண்மை என்பது!
மென்மை!
பொருமை!
கணிவு!
பரிவு!
பாசம்!
அன்பு!
அடக்கம்!
அடக்கமில்லா ஆளுமை - ஆகங்காரம்!
அன்பில்லா அறிவு - வீணாகும்!
அறிவில்லா அன்பு - வீணாக்கும்!
பரிவு இல்லா தலைமை - சர்வாதிகாரம் !
தைரியமில்லா அடக்கம் - கோழையாக்கும்!
கணிவு இல்லா வீரம் - அழிக்கும் !
மென்மையில்லா உறுதி - உடைக்கும்!
விவேகமில்லா வேகம் - பாழாகும்!
ஆண்மை கொண்ட பெண்ணும்!
பெண்மை கலந்த ஆணும்!
புகழ் பெரும்!
பெருமை தரும்!
பேராற்றல் பெரும்!
முழுதாகும் வாழ்வு!
முயன்றுதான் பாருங்களேன்...!
உமா

தேவதையவள்

ராம்ப்ரசாத், சென்னை
உன் வீட்டு!
நிலைக் கண்ணாடியை!
தொல்லியலாளர்கள்!
எடுத்துப் போய்விடுகிறார்களா!!...!
சரிதான்...!
ரவிவர்மாவின் ஓவியங்கள்!
பாதுகாக்கப்பட வேண்டியவை!
ஆயிற்றே !!!!

கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும்

வசீகரன்
பதுங்குகுழிகள்!
---------------------------------------------------------!
நிலங்களை விழுங்கும்!
சிங்கத்தின் திறந்த வாய்க்குள்!
எறும்புகள் போல் நுழைந்து!
போர்முகங்கள்!
தற்கொலை செய்கிறது!
ஒருவேளை கஞ்சிக்காய்!
உயிர் சுமக்கும் கோப்பையில்!
உச்ச துன்பங்களை அணைத்தபடி!
உறங்கும் எலும்புக் கூடுகள்!
தொண்டு நிறுவனங்களும்!
எட்டாத தூரத்தில்!
தொலைந்து போனது!
எலும்புக் கூடுகளில்!
பட்டினிப் பதாகைகள்!
ஏந்தியபடி காலில்லாத!
கைகள் அசைகிறது!
அழித்து அழித்து!
ஆனா எழுதிய மண்ணில்!
உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும்!
உயிர் இழந்து கிடக்கிறது!
கண்ணீர் வெடித்துச் சிதறியபடி!
”ஐயோ அறுவான்கள்!
பல்குழல் அடிக்கிறாங்கள்”!
மௌனக் குரல்கள் கொதிக்கிறது!
வல்லினம் மெல்லினம்!
இடையினம்!
எல்லாம் வேடிக்கை பார்க்க!
பீரங்கிகள் வாய்திறந்து!
பிசாசுகள் போலவே!
குண்டுகளைத் துப்புகிறது!
நீலக் கடல் எழுந்து!
குருதியில் தோய்ந்து குளிக்க!
நீந்திப் போகிறது!
சிங்கத்தின் பற்களில்!
சிக்கிக் கிழிந்த மீன்கள்!
எறிகணை வீச்சில்!
தலைகள் பறக்க!
விமானக் குண்டு வீச்சில்!
விரல்கள் பறக்க!
வானம் இடிந்து விழுகிறது!
மரணத்தின் வாடையில்!
உலாவும் மூச்சுக்காற்றை!
பொசுபத்து வெப்பம் தின்ன!
சாம்பல் பறக்கிறது!
ஒரு கூட்டில் இழவு நடந்தால்!
ஊரே கூடி ஒப்பாரி வைக்கும்!
ஊரே இழவாய் வீழ்ந்தால்!
ஒரு கூடு என்ன செய்யும்?!
!
-வசீகரன்!
நோர்வே!
01.03.2009

முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான்

ப.மதியழகன்
முடிவை நோக்கிய நெடிய பயணம்.. நான் !
01.!
முடிவை நோக்கிய நெடிய பயணம் !
--------------------------------------------!
நீலவானம் மேகங்களற்று!
நிர்வாணம் கொண்டிருந்தது!
வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகு!
கோழிக்குஞ்சுகளை நோக்கி!
சடாரென்று விரைந்தது!
காலாதீதம் அக்கழுகின்!
அசுரவேகத்தில்!
என்னால் கண்டுணரப்பட்டது!
ஆதியிலிருந்த உயிர்களை!
அச்சம் கொள்ளச்செய்யும்!
மரணபயம்!
அந்தக் கோழிக்குஞ்சுகளைத்!
துரத்தியது, ஆனால்!
அந்தக் கூட்டத்தில்!
ஒரே ஒரு சேய் மட்டும்!
கழுகின் கால்களுக்கிடையே !
சிக்கிக் கொண்டது!
தற்போதைக்கு மரணபயம் நீங்கிய!
கோழிககுஞ்சுகள்!
சிறிது நேர கூச்சலுக்குப்பின்!
மண்குவியல்களை கால்களால் !
துழாவித் துழாவி!
இரையை பொறுக்க ஆரம்பித்தன!
சகதியின் அடியிலிருந்த மண்புழு!
உயிர் பயத்தில்!
மண்ணுக்குள் தனதுடலை!
விரைந்து இழுத்துக்கொண்டது. !
மரணபயம் வெவ்வேறு உருவில்!
உயிரினங்களை துரத்திக் கொண்டேயுள்ளது!
செய்கின்ற ஒவ்வொரு செயல்களும்!
எடுக்கின்ற பல முயற்சிகளும்!
மரண நிகழ்வுக்கே!
நம்மையறியாமல் நம்மை!
இழுத்துச் செல்கின்றன. !
!
02.!
நான் !
----------!
பறவைகள்!
பாடுகின்றன!
குதிரைகள்!
கனைக்கின்றன!
யானைகள்!
பிளீறிடுகின்றன!
நாய்கள்!
குரைக்கின்றன!
குழந்தைகள்!
மழலை பேசுகின்றன!
எவற்றையும் செய்ய!
தடையெதுவுமில்லை அதனுலகில்!
எல்லாவற்றுக்கும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது!
இவ்வுலகில்!
சுவர்கள் சிறையாகிப்போனதால்!
நான் கைதியானேன்!
ஏற்கனவே எழுதப்பட்ட!
தீர்ப்புகளுக்கு!
என்னையும் இரையாக்குவார்கள்!
இவ்வுலகத்தினர்!
பலிபீடமான இவ்வையகத்தில்,!
சுற்றித்திரியும்!
மந்தையாடுகளாய் நாம்

ஹவ்வா

ஹெச்.ஜி.ரசூல்
ஹெச்.ஜி.ரசூல் !
1)தனது இடப்பக்க விலாஎலும்பை !
தேடிக் கொண்டிருந்த ஆதம் !
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து !
மூர்ச்சையாகி விழுந்தான் !
தன்னிடம் இல்லாத மார்பகங்கள் !
ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..? !
2)நிகழும் அதியசத்தை கண்ணுற்ற !
ஆதமின் நினைப்பு அலைக்கழிந்தது !
ஒவ்வொரு மாதமும் ரத்தப்பெருக்கால் !
உடல் நனைக்கும் ஹ்வ்வா !
திடீரென ரத்தத்தை நிறுத்துவதெப்படி.. !
தன்னுடம்பில் வெளித்தெரிய !
சுரக்காத ரத்தத்தை !
வரவழைத்துப் பார்த்த ஆதம் !
தன் குறியை !
தானே வெட்டிக் கொண்டான் !
சுன்னத் செய்யபட்ட குறிகள் எங்கும். !
3)அதிசய மாறுதல்கள் எப்போதும் !
வெட்கி தலை குனிகிறேன் !
இந்திரியத்துளியை கருப்பையில் சுமந்து !
காற்றும் உணவும் கொடுத்து !
குழந்தையைப் பெற்றுப் போடும் போது !
உருமாறும் உடம்பின் வண்ணங்கள் !
மாயஜாலம் காட்டுகிறது !
உயிருக்குள் இன்னொரு உயிர் !
உடலுக்குள் இன்னொரு உடல் !
பிரபஞ்சத்திற்குள் இன்னொரு பிரபஞ்சம் !
முலைப்பால் கசிந்து வழிகையில் !
நாக்கால் நக்கிக் குடித்து !
சிசுவின் அழுகை முடிகிறது. !
எதுவும் யாருக்கும் தெரியவில்லை!
முலைப்பால் ரத்தமாகும் !
இன்னொரு ரகசியம்

கடைசி இருக்கையில் வந்தமரும்

துவாரகன்
சின்னப்பறவை!
---------------------------------------------------!
மண்டபத்தின் கடைசி இருக்கையில்!
வந்தமர்கிறது ஒரு சின்னப் பறவை!
மனிதர்கள் இல்லாத நாற்காலிகளுடன்!
அமைதியே வழிந்து ஒழுகும் மண்டபத்தில்!
திறந்த கதவினூடாக!
வந்தமர்ந்த அந்தப் பறவை!
ஒரு மனிதனைப் போலவே!
யோசனையில் ஆழ்கிறது.!
ஒரு மரக்கிளை!
ஒரு வீட்டு முகடு!
ஒரு மின்கம்பம்!
எல்லாம் இருக்க!
மனிதர்களை இழந்த இந்த!
மண்டபத்தில் ஏன்தான் வந்தமர்ந்தது?!
தன் இனத்திடம் பகிர முடியாது!
நெஞ்சை அடைத்து விம்மும்!
சஞ்சலமோ?!
மனிதர்களை இழந்த!
அந்தக் காலியான கடைசி இருக்கையில்!
அந்தச் சின்னப்பறவை வந்தமர்கிறது.!
உறவுகளை இழந்து தனித்துப் போன!
ஒரு சிறுவனைப்போலவே

கறுப்பு நாய்

கருணாகரன்
கறுப்பு நாய்!
அதன் நிழலை விடக் கறுப்பாயிருக்கிறது!
அதன் குரைப் பொலியை விடவும்!
நிழலின் மௌனம்!
வலியது, பெரியது!
கறுப்பு நாயின் !
கோபத்துக்கும் பாய்ச்சலுக்கும்!
ஈடு கொடுத்தபடி நிழலும்!
நாய் தூங்கும் போதும் !
உறங்குகிறது நிழலும்!
நிழல் நாய்க்கிருக்குமா!
மோப்ப வாசனையும்!
பழகிய திசைகளின் ஞாபகமும்!
கறுப்பு நாய் சார்;ந்திருக்கிறது!
எப்போதும் நிழல் நாயில்!
நிழல் நாயின் மௌனத்திலிருக்கிறது!
கறுப்புநாயின் !
உயிர்

இது உண்மை

நிர்வாணி
நான் அவர்களோடு இருக்கும்போது!
எதை எதையோவெல்லாம்!
பேசிச் சிரித்தார்கள்!
!
நான் இல்லாதபோது!
எனக்குள் எதையோ தேடுகிறார்கள்!
!
ஈழத்தில் என் குடும்பத்து வாழ்க்கை!
எனக்கு முத்திரையிட்ட சாதி உட்பட!
!
இவர்களுக்கு ஏன் இன்னமும்!
சாதி அவசியமாகிறது ?!
!
தாயகத்திலிருந்து தொலைந்து போனாலும்!
தொப்பிள்க்கொடியோடு வந்த சாதி!
அவனவன் இறக்கும்வரை அவசியமாகிறது!
!
என்னையும் அவனையும் ஒரு!
ஓட்டத்தில் பிரித்துப்பார்க்கும் சாதி!
உடல் எரிக்கப்படுகின்றவரையில்!
எரிந்துகொண்டுதானிருக்கும் போல்

பெண் மனம்

சு.திரிவேணி, கொடுமுடி
சக்தியின் மறுவடிவமாய் !
கலைகளின் உறைவிடமாய் !
எழுத்திலும் ஏட்டிலும் !
அழகாய் தான் இருக்கிறாள் !
நாற்பதாயிரம் மனைவியருள் !
ஒருத்தியாய் !
நாற்புறமும் வேட்டை நாய்கள் !
சூழப் பரிதவிக்கும் !
ஒற்றை மானாய் !
நீரில்லா மீனாய் !
செல்லரித்துப் போன சமூகத்தால் !
சிதைக்கப் படுகிறாள்! !
கல்வி கலவி கடமை என !
எந்தச் சூழலிலும் !
பிறர் வடிக்கும் !
ஓவியத்த்திற்கு நிறமாய் !
மட்டுமே பொருந்துகிறாள்! !
நிறத் தேர்வும் இவளதல்ல! !
தனக்கேற்ற தேவையை !
பெண்ணுக்கான வாழ்வாய் !
மொழிகிறது சமூகம் !
வந்ததன் நோக்கம் அறியாமலே !
வாழ்ந்து முடிக்கிறாள் பெண் !
கறையான் அரித்த கோட்டையாய் !
காற்றில் கரைந்து போகிறாள்! !
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு !
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும் !
மனித வர்க்கம்! !
பெண்மைச் சிதைவுக்கும் !
பெண் மனச் சிதைவுக்கும் !
பெரிதும் இல்லை வித்தியாசம்! !
இந்த உலகிற்கு !
பெண்மை தேவைப்படுகிறது !
பெண் மனம் தான் !
தேவைப்படுவதில்லை