தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இருப்புணர்ந்து இளகும் நெஞ்சு

வ.ந.கிரிதரன்
உன்னைப் பார்க்கும் போதெல்லாம்!
உனக்குள் எனக்குள்!
பரவிக் கிடக்கும் வெறுமை!
கண்டு மனம் அதிரும்.!
உள்ளூம் புறமும் வெளியாய்ப்!
பரவிக்கிடக்குமிந்தப் பெருவெளி.!
சோகமேன் சகியே!!
உனைப் பார்த்து மட்டுமல்ல!
உன்னருகே கிளைதாவுமந்த!
அணில், அதனருகே தனித்துணவு!
தேடுமந்தச் சிட்டு,!
அவசர அவசரமாய் வீடு!
விரையுமந்த அந்த அராபிய மனிதன்!
ஆபிரிக்க அணங்கு!
ஆலயம் விட்டு ஆடிவரும்!
அந்த முதிய சிறிலங்காத் தமிழன்!
அந்த இந்திய மனிதன்!
அந்த எருது!
அந்த அமெரிக்கன்!
அந்த ஆங்கிலேயன்!
இவ்விதம் யாரைப் பார்த்தாலும்!
எதனைப் பார்த்தாலும்!
எனக்குத் தெரிவதெல்லாம்!
வெளியும்,கதியும்,முகிலும்,!
சுடரும்,சக்தியும் தானே.!
வெறுமைக்குள் வெறுமையாய்!
அரங்கேறும் நாடகங்கள்.!
சிறுதுளியாய்க் கணநேர இருப்பு.!
இருப்பினை இருத்திவிடுமொரு!
பொறுப்பு மட்டுமில்லையென்றால்...!
அதற்குள் தானெத்தனை ஆட்டங்கள்!!
அடிப்படையில் அனைத்துமொன்றே.!
இது கூடப்!
புரியாத பொழுதெனவே!
போகுமிந்த இருப்பினிலே!
இருப்புணர்ந்து இளகும் என் நெஞ்சே!.!

ஊதா நிற யானை !

சமீலா யூசுப் அலி, மாவனல்லை
சுத்தமாய் வெள்ளைத்தாள்!
சிதறிய கிரெயோன் கலர்கள்!
இரண்டு கோடுகள்!
ஒரு கோணல் வட்டம்!
நம்பிக்கையோடு!
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று !
குழந்தைக்கோ கர்வம்!
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று. !
யானைக்கு ஊதாநிறமா?!
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை!
இரண்டு கால் யானை எங்குள்ளது!
அடித்துத் திருத்தினார் !
குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக!
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க!
நடந்து போனார் ஆசிரியை. !

பால்ய பாடம்

ஜெ.நம்பிராஜன்
படிக்கும் புத்தகத்தை!
பறித்துக்கொண்டு ஓடுகிறாய்!
புத்தகத்தை மறந்து விட்டு உன்னைப்!
படிக்கிறேன்...நான்!
மாறாத மழலைப்பாடல்களை!
மறந்து மறந்து பாடுகிறாய்!
மறக்காமல் மீண்டு வருகிறது!
எனது பால்யம்!
பூச்சாண்டி என்றால் என்னவென்றே!
தெரிவதில்லை...'மெக்காலே' குழந்தைகளுக்கு!
காட்சில்லாவையும் டைனோசரையும்!
துணைக்கு அழைக்க வேண்டியிருக்கிறது!
சோறு ஊட்ட

எல்லாமே முடிஞ்சு போய்ச்சு

பர்ஸான்.ஏ.ஆர்
பின் இரவின் கருக்களினூடாய்!
ஆந்தையின் மரணச்செய்தி கேட்டேன்.!
என் இருதயத்தில் அடிக்கடி மோதிவிடும்!
ஒரு சுவாசத்திற்கான படியாய்!
இந்த ஆந்தையின் அலறல் விழும்.!
என் இரவுகளின் கடத்துகைக்கு!
மிக உட்சாகமாய் துணைவருவதும் இதுவே.!
ஆனால்,!
இறைவனின் விதிக்கோலங்களில்!
வாழ் நாட்களிற்கான இணைபாடியாய்!
இணைந்த அலறல்களுடன் வாழ்ந்தோம்.!
அன்பின் மையச்சுவையின் திளைத்தலில்!
பல நூறு காலம்!
உயிர்ப்புப்பெற்ற ஆந்தைகளாய் இருந்தோம்.!
சற்றென்று,!
எங்களின் வாசஸ்தளத்தில்!
மிகப் பெரியதொரு விண்கல் விழுந்து!
நூற்றாண்டுகால மரக்கிளை மாளிகையை!
அடையாளமின்றி துவைத்துவிட்டது.!
அன்று அலைந்த ஆந்தையின்!
மரணச்செய்தி இன்று கேட்டது.!
நிமிர்ந்தும் பார்க்க முடியாமல்!
என்னை விட்டுச்சென்றது அலறும் ஆந்தை.!
எல்லாம் முடிஞ்சு போய்ச்சு..!
!
01.01.2008

வெறும் கற்குவியலாய்

ப.தியாகு
எண்ணற்ற ஒழுங்குகளை!
கருக்கொண்டிருந்த பாறையில்!
வேண்டாதவை என!
தான்!
வரையறுத்துக்கொண்ட பகுதிகளை!
களைந்தேடுத்தவாரிருக்கிறான் சிற்பி!
ஒன்று இறுதி செய்யப்பட்டபின் !
மற்றொன்று வெளியேறிவிடுவது !
என்பதான நியதியின்படி !
உளி பிளக்க !
நிலம் சேருகின்றன !
ஏனைய ஒழுங்குகள்!
ஒழுங்கற்றவையாய் !
வெறும் கற்குவியலாய்

அணங்குகள்... இங்கே இருக்குது ஜாதி

ஜோதி - த.ஜெயபால்
அணங்குகள்... இங்கே இருக்குது!
----------------------------------------------!
1.அணங்குகள்!
வாசற்படி நின்று!
வசந்தப் பூக்களை!
கண்களில்!
நிதம் நிதம்!
மலர்விக்கின்ற!
மாதவிக் கொடிகள்.!
எப்போதோ!
சந்தோஷிக்கப் போகின்ற!
ஒரு பொழுதிற்காக!
காத்திருக்கின்ற!
சமுத்திர விழிகள்.!
புத்தகங்களைப்!
பரிமாறி!
இதயங்களை!
விலைப்பேசும்!
தரகர்கள்.!
நிகழ்காலங்களை!
நிர்வாணமாக்கிய!
துச்சாதனர்கள்.!
கடற்கரை மணலில்!
நாணத்தைப் புதைக்கும்!
நெருப்புக் கோழிகள்.!
புலிக்குகை உலகில்!
எதற்கோ அலையும்!
பேய்த்தேர் மான்கள்.!
!
2.இங்கே இருக்குது ஜாதி!
அல்லி குளக்கரையில்!
தாமரை!
அலரும் புலர்பொழுதில்!
குளிக்கும் மலர்களோ!
ஜாதிப் பூ!
சேரி உடல்களுக்கு!
அங்கே!
தடை விதிப்பு.!
தினம் தினம் நிகழும்!
எம் சந்திப்பு!
இன்றென்ன ஆனது!
நெஞ்சில் தவிப்பு!
இன்னும் வரவில்லை!
என் காதலி!
ஏன்தான் விடிந்ததோ!
காலைத் தீ.!
குனிந்த தலை!
குனிய குளிப்பாள்!
குள மீன்கள்!
கண் பார்க்க நகைப்பாள்!
எத்தனைக் கோடி கதிர் வீசும்!
இளைய!
என் காதலி மேனியிலே.!
இப்படி பறந்த!
என் மனக் குதிரை!
இடறி விழுந்தது!
குரல் கேட்டு.!
�யாரடா படுவா படித் துறையில்!
என்ன உன் ஜாதி?!
படித்த திமிர்�......!
பண்ணையார் நின்றார்!
என் எதிரில்!
பயத்தில் உறைந்தேன்!
நான் சின்ன ஜாதி.!
அம்பது சுதந்திரம்!
கண்டது பூமி!
ஆனாலும் என்ன!
இங்கே இருக்குது ஜாதி.!
-ஜோதி - த.ஜெயபால்

இறப்பின் சிலகணங்களின் பின்

எதிக்கா
அண்ட வெளியெங்கும் !
அல்லாடித்திரிஞ்சு !
காதுகிழியும் வரை !
ஓலமிட்டு ஓலமிட்டு !
விதியோடும் !
மதியோடும் !
போட்டியிட்டு !
களைத்தவளானேன் !
சுற்றியிருந்த இருளில் !
நட்சத்திரங்களின் !
பிரகாசம் கடுகளவானது !
விண்கலங்களின் !
அதிர்வொலிகள் !
அண்டவெளியெங்கும் !
அதிர்ந்து கொண்டேயிருந்தது !
சுற்றியிருந்தவர்களின் !
உருவங்கள் !
பார்வைக்குளிருந்து !
வெளிறிப்போய் !
சற்றுக் கணங்கள்கூட !
ஆவதன் முன் !
விண்வெளியினூடே !
பயணம் சொல்லிலடங்கா !
வேகத்துடன் !
ஆரம்பமானது !
எங்கே தான் போகிறேன்? !
வினாவுக்கே விடைதெரியவில்லை !
பீதி பெருக்கெடுக்க !
பழகிய பாசங்கள் !
நினைவினில் நீழமாக !
இத்தனைக் கூடாகவும் !
நாதியற்ற மனிதனாய் !
பரந்திருந்த பால்வீதியிலே !
பயணித்துக்கொண்டிருந்தேன் !
என் !
மூர்ச்சையை நிறுத்திவிட்ட !
உடலைவிட்டுப் பிரிந்து !

பிரிவின் துயர்.. இயலாமைக்கோர் நன்றி

மு.கோபி சரபோஜி
01.!
பிரிவின் துயர்!
------------------------!
ஊரில் உள்ள!
கடவுளையெல்லாம் வேண்டி!
கண்ணீரோடு அம்மா….!
புத்தியோடு பிழை!
கவனமாய் இரு!
வழக்க வாசிப்போடு அப்பா……!
அடிக்கடி பேசு!
யாரிடமும் சண்டைபோடாதே!
அக்கறையோடு தங்கை……..!
வார்த்தைகள் தேடும்!
மெளனத்தின்!
பிரிவு துயரோடு மனைவி…..!
எத்தனையாவது!
படிக்கும் போது வருவீங்க!
ஆவல் கேள்வியோடு மகள்……!
இத்தனையவும் கடந்து!
நகர்ந்து போகின்றேன்!
அயல் நாட்டு!
அடிமை வேலைக்கு!!
!
02.!
இயலாமைக்கோர் நன்றி.!
---------------------------------!
உன் வருங்கால கணவனிடம்!
என்னை !
உன் சினேகிதனாய்!
அறிமுகப்படுத்திய!
அந்த நொடியில்!
நன்றி கூறிக்கொண்டேன்....!
உன்னை காதலித்த!
உண்மையை!
உன்னிடம் சொல்ல விடாமல்!
ஊனமாக்கிய!
என் இயலாமைக்கு

சம்மதமில்லாத மவுனங்கள்.. கவலை

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
01.!
சம்மதமில்லாத மவுனங்கள்..!
-------------------------------!
எனக்கு பிடித்தமில்லாத!
தெருக்களில் எல்லாம்!
உன் பாதங்கள் பதிகின்றன!
உனக்கு மட்டுமே!
நிலவு காய்வதாயும்!
பூக்கள் பூப்பதாயும்!
சூரியக் கதிகள் பிறப்பெடுப்பதாயும்!
நீ நினைக்கின்றாய் !
உன் பாடுபொருள்களில்!
இந்த பிரபஞ்சம் முழுவது!
பற்றியும் பேசுகின்றாய்!
எனது எண்ணங்களின்!
வியாபிப்புகள் பற்றியும்!
எனதான கனவுகள் பற்றியும்!
அக்கறையற்ற சடப்பொருலாகவே!
உனது நடத்தைகள்!
என்வரையில் இருக்கின்றது...!
என் விழி இடுக்கில்!
இமகளுக்குப் பின்னால்!
மூடி வைத்துள்ள!
இரசனைக் குறிப்புகள் பற்றிய!
ஆலாபனை உன்னிடம்!
இல்லவே இல்லை!
என் மவுனங்களின் மீதேறி!
நடை பயிலும்!
உனதான பயணத்தின்!
வேகம் நமது புரிதலை!
கேள்விக் குறியாக்கி விட்டது!
எனதான விட்டுக் கொடுப்புகளை!
உன் பிழையான மொழிபெயர்ப்புகள்!
எத்தனை நாட்கள்!
என் தூக்கத்தை விழுங்கி!
உள்ளது தெரியுமா?!
!
02.!
கவலை..!
----------------!
தூறல் வானத்தை!
இரசித்து மகிழ்ந்த!
எனக்கு கவலை தந்தது!
உடைந்து போன தூக்கணம் குருவிக்கூடு

நான் திறந்துவிடப்பட்ட சாளரம்

டீன்கபூர்
இது ஒரு மனித வீட்டின் சாளரம்!
இதில் மெல்லிய காற்று நழுவி !
கட்டாந் தரையில் உட்காரும்.!
நாற்றமும் கலந்த மனிதனின் உஷ்ணத்தை!
வரவழைத்து விசாரிக்கும் வழி.!
வலக்கையும் இடக்கையும் சந்திக்காமல்!
பெரிய தொரு மலையை நகர்த்தி!
ஒய்யாரமாய் படுத்து அசைபோட!
வைக்கோலும் பசுமைப் புல்லும்!
ஒரு மாட்டு வண்டியில் சுமந்த நற்செய்தியை!
இந்த சாளரம் வழிவிட்டு மூடியதும் உண்டு.!
யாரையும் அறியாத!
தென்றலை மட்டும் சுவாசிக்கச் செய்ய !
ஒரு அறிவை இழந்து நிற்க இயலாத சாளரம்.!
யாரையும் நம்பி!
யாருக்கும் !
அகழி யுத்தம் புரிய முடியாது!
நாம் தோண்டப்படும் மடுவுக்குள் வைத்து!
முடப்பட்டுவிடுவோம்.!
எப்போதும் கட்டுப் பெட்டியை கவனமாக வைக்க.!
- டீன்கபூர்