தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பெண் மனம்

சு.திரிவேணி, கொடுமுடி
சக்தியின் மறுவடிவமாய் !
கலைகளின் உறைவிடமாய் !
எழுத்திலும் ஏட்டிலும் !
அழகாய் தான் இருக்கிறாள் !
நாற்பதாயிரம் மனைவியருள் !
ஒருத்தியாய் !
நாற்புறமும் வேட்டை நாய்கள் !
சூழப் பரிதவிக்கும் !
ஒற்றை மானாய் !
நீரில்லா மீனாய் !
செல்லரித்துப் போன சமூகத்தால் !
சிதைக்கப் படுகிறாள்! !
கல்வி கலவி கடமை என !
எந்தச் சூழலிலும் !
பிறர் வடிக்கும் !
ஓவியத்த்திற்கு நிறமாய் !
மட்டுமே பொருந்துகிறாள்! !
நிறத் தேர்வும் இவளதல்ல! !
தனக்கேற்ற தேவையை !
பெண்ணுக்கான வாழ்வாய் !
மொழிகிறது சமூகம் !
வந்ததன் நோக்கம் அறியாமலே !
வாழ்ந்து முடிக்கிறாள் பெண் !
கறையான் அரித்த கோட்டையாய் !
காற்றில் கரைந்து போகிறாள்! !
செயப்படு பொருளாயிருத்தல் இயல்பு !
செய்பொருளானால் இழிவாய்க் கொள்ளும் !
மனித வர்க்கம்! !
பெண்மைச் சிதைவுக்கும் !
பெண் மனச் சிதைவுக்கும் !
பெரிதும் இல்லை வித்தியாசம்! !
இந்த உலகிற்கு !
பெண்மை தேவைப்படுகிறது !
பெண் மனம் தான் !
தேவைப்படுவதில்லை

மண்டலத்தில் ஒரு நாடு

நவஜோதி ஜோகரட்னம்
நாம் சிரித்த காலமுமிருந்தன!
நம்முறவுகள் நசுக்கப்பட்டு!
இப்போ!
சிரிப்புக்களும் கலகலப்புக்களும்!
தலைமறைவாகிய வாழ்க்கை!
இரும்பு!
உருக்கு!
நெருப்பு!
அழிப்பு!
எரிப்பு!
கண்ணீர் வடிவிலே என்னுடைய தேசம்!
ஆடுகள் மாடுகள்!
மேய்வது மேய்ச்சல் நிலம்!
அங்கே!
மனிதமிருகங்களாக!
நிலத்துக்கடியில் புதைந்து கிடந்த எம்மக்கள்…!
வகை வகையான அழுகைகள்!
வதைவிட அறையிலிருந்து…!
எங்கள் குழந்தைகளிடமிருந்து…!
எங்கள் அம்மாவிடமிருந்து…!
எங்கள் அக்காவிடமிருந்து…!
மின் வேலி முகாம்களுக்குள்!
பலமுறை அவர்கள் இறந்து பிறக்கலாம்!
ஓடோடி அவர்கள் உருக்குலைந்து போகலாம்!
தட்டிக் கேட்காமல் அவர்கள்!
மௌனித்து மாளலாம்!
கட்டிளங்காளையும்!
பெட்டைக் குருவிகளும்!
முட்கம்பி வேலியுள்ளும்!
தெருவிலும் உறங்கலாம்!
புரியவில்லை!
உரிமைகளைப் பறித்து!
பூட்டாது உறங்கும் இரவுகளில்!
பெண்டாட்டியாகும் விசித்திரம்!!
சோகம் நிறைந்த தேசப்படத்தின்!
மனிதர்கள் நிலத்தை!
ராணுவம் எடுக்கலாம்!
உலக மக்களே கூறுங்கள்!!
மண்ணிலே இலங்கைபோல் நாடு!
மண்டலத்தில் கண்டதுண்டோ!!
31.7.2009

ஒரு வாழ்த்துப்பாடல்

கருணாகரன்
யாருந்திரும்பவில்லை!
நினைவுகளைப் புதைக்கமுடியாச் சகதியில்!
கிழிபட்டுக்கிடந்ததென் பறவை.!
பிரிவு சொல்ல யாருமில்லை!
வரவுசொல்லவும் யாருமில்லை!
கண்ணெதிரே ஒளியைத்திருடிப்போகிறான் பகற்கள்வன்;!
சகதியில் சிக்கிய பிணமாகக்கிடக்கிறேன்!
இருள்!
பயங்கர வனாந்திரமாக திரண்டு வருகிறது.!
யாரிடம் முறையிடுவேன்?!
!
அன்னா அக்மதோவா!
என்னரும் சோதரி!
துயரம் உன்னுடன் மட்டும் முடியவில்லை!
இதோ என்னுடைய காலடியிலும்!
பாம்புகள் சூழ்கின்றன!
கொட்டும் பனியில்!
இரும்புக்கதவுகளின் வெளியே நீ நின்றாய்!
!
உள்வெளியென்றெல்லாப்பிராந்தியத்திலும்!
வெக்கை தகிக்க!
நானோ!
உள்ளுமில்லை வெளியுமில்லை!
!
கதவிடுக்கில்.!
--கருணாகரன்

ரயில் பயணம்

ப்ரியன்
அடுத்தப் பெட்டியில் இருக்கும் !
போதே !
காட்டிக் கொடுத்துவிட்டது !
அவனை !
கட்டைக்குரலில் அந்த !
சோகப்பாட்டு! !
முந்தைய நிமிடம் வரை சும்மா !
இருந்தவர்கள் !
அவசர அவசரமாய் செய்திதாளில் !
மூழ்கிப் போனார்கள்! !
கண் தெரியாதவனுக்கு !
சில்லறை இல்லேப்பா !
சைகை மொழி சொன்னார்கள் சிலர்! !
ஒரு சிலர், !
முன்னங்காலில் முகம் புதைத்து !
தற்காலிகமாய் !
செத்தும் போனார்கள்! !
இவன் நகர்ந்தால் போதுமென !
அவசரமாய் அம்பது நூறு காசுகள் !
இட்டனர் இன்னும் சிலர்! !
தகரத்தில் காசு விழுந்த ஒலியில் !
மனம் நிறுத்தி !
கொஞ்சம் சந்தோசமாகவே !
அடுத்தப் பெட்டிக்கு !
நகர்ந்தான் அவன்! !
யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில் !
அந்தப் பாட்டு !
அழுதபடியே போனது !
அது பாட்டிற்கு! !
- ப்ரியன்

வலி(மை)

பா.நேருஜி
எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை!
விளைவிக்கும் என்ற வரிகள்!
என் மனத்திற்குள் !
ஓடிக்கொண்டே இருக்கிறது,!
ஒவ்வொரு முறையும்!
வேலை வாய்பிற்கான!
விண்ணப்ப படிவத்தினை !
நிரப்பும் தருணங்களில்..!
எனினும்,!
ஏமாற்றத்தை தாங்கும்!
வலி(மை)யுடன்!
காலிக்கட்டங்கள்!
நிரம்பிய படிவத்தின்!
கருவறைகளை !
எழுத்துப் பிள்ளைகளை!
பிரசவித்து நிரப்புகின்றது!
எனது எழுதுகோல் - தன்!
மை என்ற கண்ணீரால்!
எதிர்பார்ப்புகளுடன்…

மீண்டும் பிறப்போம்

நவஜோதி ஜோகரட்னம்
மரணக் காட்சிகள் மறுபடியும் மறுபடியும்;!
பிணக் காடுகளாய்!
மனதில் விரிகின்றன!
நரம்புகளின் வீம்பும்!
விரக்தியும்!
மாறி மாறிப் பாய்ந்து!
நினைவின் கதியால்!
துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன!
மிரண்டு விழிக்கின்ற குழந்தைகளின்!
இளஞ்சிவப்பும் தோய்ந்து!
கண்ணீர்த் துளிகளாகி!
முற்றிலும் உலகை!
மூடித் ததுப்புகிறது கருநீலம் !
வானத்தில் தொங்கும் நட்சத்திரங்கள்!
என்றுமே கண்டிராத ஒரு மாபெரும் பறவைபோல்!
மிதப்பதைப் பார்க்கிறேன்!
தோலைக் கிழித்து !
அலகுகளால் குருதியை உறுஞ்சும்!
ஆசுவாசமான காற்றோடு அளைகின்றேன்!
இன அழிப்பின் அந்த மரண ஓலங்கள்!
என்னை உலுக்கி அசைப்பதை உணர்கின்றேன்!
உறுப்புக்கள் சிதைந்து !
செயலிழந்து ஆசைவின்றி ஆழ்ந்து!
அழுகுவதைப் பார்த்து!
இறப்பு என்ற !
பிரக்ஞைக் குறிப்பு மட்டும்!
எப்படி இன்னும்!
இறக்காமல் இருக்கிறது என்று எண்ணுகின்றேன்!
உண்மை !
உலகத்தில் இரகசியமாகவே உலவுகிறது…!
நம்பிக்கை…!
ஒடுக்கப்படுபவர்கள்!
ஓங்கி எழுவார்கள்…!
உயிர்பறிக்கும் உடமைகள் எல்லாம்!
சுட்டுப் பொசுங்கட்டும்!!
உறுதி வாய்ந்த சூரியன் மெல்லெழுந்து!
வசந்த பருவத்தின் புதுமையிலே!
கத கதப்பைப் பொழிவான்!
உலகத் தமிழர்களின்!
பரவசக் கணங்கள் விரைவில் மலரட்டும்!!
உலகத் தமிழர்களே! !
உயிரிழந்த உறவுகளால் நிலை குலைய வேண்டாம்!
கடுமையான உழைப்பினால் விளைவதே மன!
எழுச்சி என்பதை உணர்ந்திடுவோம்!!
நம்மால் முடியும்!
பீனிக் பறவைகள்போல்!
திரும்பவும்!
உருவெடுத்து வாழ்வோம்! !
!
23.5.2009

மாறாப்பில்லா .. இருக்கின்றான்

வல்வை சுஜேன்
மாறாப்பில்லா மானஸ்தர் !
01.!
மாறாப்பில்லா மானஸ்தர் !
-----------------------------!
மானம் உண்டேல் அது எதற்கு!
வீறாப்பை விட்டு விட்டு !
மாறாப்பை விலக்கி விட்டோம்!
தேசியம் தேய்ந்தாலும் தேசியக்!
கூட்டமைப்பை தேயாது காத்திடவே !
சிங்களமும் கிந்தியும் சேர்ந்து சித்தரிக்கும்!
அடிமை தமிழன் மெகா தொடருக்கு !
தமிழருக்கான!
சங்கீத கதிரை போட்டி நடக்கிறது!
தாயகத்தில் !
இறந்தவர் போக இருப்பவர் வாருங்கள்!
கற்பிளந்தோர் போக கற்புடையோர் வாருங்கள்!
பொறுப்புடைய மாந்தரென !
பொறுமை காப்போம் எருமை என!
சிங்கள பாலியல் வல்லூறுகள்!
பற்றாலியன் படையாய் !
இருக்கட்டும் எம் மண்ணில் !
பசி எடுக்கும் வேளையில்தான் !
கொத்தித் தின்பார்கள் உங்கள் உடலை!
ஆறில் போனாலென்ன அறுபதில் போனாலென்ன!
போகும் உடல்தானே போகட்டும் மறந்திடுங்கள் !
விடுதலைக்காக உயிரை விடோம்!
கதிரைக்காக கால் பிடிப்போம் !
பொன்னான வாக்குகளை!
மண்ணாக்காது வாக்களியுங்கள்!
ஆறுதல் பரிசுகளாக - எமக்கு!
அமைச்சர் பதவி தருகின்றார்கள் !
தேசியம் தேய்ந்தாலும் தேயவிடோம்!
தமிழ் தேசிய கூட்டமைப்பை. !
02.!
இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான்!
-------------------------------------------------!
இருக்கின்றான் தலைவன் இருக்கின்றான்!
இளி நிலை அகற்றி உயர் நிலை தந்திட்ட!
எம் தலைவன் பிரபாகரன் இருக்கின்றான்!
வானமே தலையில் வீழட்டும்!
வாசலில் கோலம் அழியட்டும்!
புத்தனின் சிலைகளும் முளைக்கட்டும்!
எத்தரும் எழுந்து வெல்லட்டும்!
வெற்றிகளெல்லாம் நிச்சையம் அல்ல!
தோல்வி என்பதும் முடிவுரை அல்ல!
அனீதியை அழித்திடும் அறநெறி நெருப்பே!
இருண்ட வாழ்வுக்கு ஒளி கொண்டு வா!
பிறந்தாய் எமக்கென நீ ஒரு முறைதான்!
இறந்தாய் என்றார் பல முறைதான்!
ஐந்தின் அருகே ஐந்தும் அளைக்கிறது!
இறவா தலைவனே இடியாய் வா!
வார்ப்புகள் தானே வாழ்வின் வசந்தம்!
எழுச்சிகள்தானே ஏற்றத்தின் உயர்ச்சி!
சொன்னவன் நீ தானே!
கொற்றவரென்றே குற்றங்கள் இளைக்கும்!
கொடியவர் வாழ்வை முடிவாக்கு!
உற்றவர் வாழ்வையும் உறவையும் சுறண்டும்!
ஊனக் கொடியோரின் உளம் மாற்று!
எதிர் காலம் என்றும் எமதாகட்டும்!
புவி வாழ்வின் புயல்களும் நிலை சாயட்டும்!
அன்பெனும் அக ஊற்றின் அலை தழுவ!
ஆதி சேசனே!
உன் விழிக் கனல் ஊற்றாகட்டும்!
புரட்ச்சி நிலவே எழுச்சித் தீயே!
தமிழின விடிவின் தேசியத் தலைவனே!
எழுச்சி எழுச்சி என்றுமே எழுச்சி!
உன் ஆற்றலின் ஒளியே தமிழீழ மலர்ச்சி

மவுனப் பயணி

மதியழகன் சுப்பையா
இருக்கை மேல்!
கால்கள் பரப்பி!
அமர்கிறாய்!
இருட்டில் ஊடுருவி!
வெளிச்சம் தேடுதுன் !
பார்வைகள்!
உனக்குப் பின்னாலிருந்த!
முகம் மலித்த இளைஞனும்!
இறங்கிப் போய் விட்டான்!
புத்தகத்தை மடித்து!
வைத்துவிட்டு!
உன் முகம் பார்த்து!
புன்னகைத்தபடியிருக்கும்!
என்னைப்பார்த்து!
குறைந்தபட்சம் !
புன்னகைத்திருக்கலாம் நீ!
அடுத்த ரயில்!
எப்பொழுது வருமென்று!
கவலையோடு கேட்டாய்!
இருபது நிமிடங்களில் என !
நம்பிக்கையோடு பதிலளித்தேன்!
ரயில் வரும் வரை!
நீ எதுவும் கேட்கவில்லை!
நான் எதுவும் சொல்லவில்லை!
நம் மவுனம் கலைக்க!
வந்து சேர்ந்தது!
மின்ரயில்!
தோள் சாய்ந்திருக்கிறாள்!
தேவதையாய் ஒருத்தி!
ஐந்து ரூபாய்க்கு ஆறு !
எனக் கூவுகிறான் !
அரைநிஜார் பையன்!
கார்டூன் பாத்திரமொன்றை!
நினைவூட்டும் ஜாடையில்!
பல்தெரிய சிரிக்கிறான்!
பைஜாமாக்காரன்!
முலைபெருத்தவளோடு!
ரகசியம் பகிர்கிறான்!
புஜம் பருத்தவன்!
துண்டு துண்டாய் ஏப்பம்!
விட்டபடி வயிறு!
தடவுகிறான் தடியன்!
கம்பி தொங்கியபடி நால்வர்!
வாசல் நின்றபடி ஐவர்!
இறங்க ஆயத்தமாய் அறுவர்!
எதையும் கவனியாது!
விரித்த புத்தகத்துள்!
படுத்துக் கிடக்கிறாய்!
என்ன படிப்பாளி நீ?!
கிடைத்து விடுகிறது!
ஜன்னலோர இருக்கை!
கண் கூடுகிறது!
வழிநெடுக பசுமைகள்!
கொரிக்கக் கிடைக்கிறது!
கடலையும் மிட்டாயும்!
பருக கிடைக்கிறது!
தூயக் குடிநீர்!
ஊர் விசாரிக்கிறான்!
சாப்பாடுக் காரன்!
கதை சொல்லி காசு!
வாங்குகிறான் பிச்சைக்காரன்!
அத்துமீறி ஏறும் ஆட்கள் கூட !
போகுமிடம் கேட்கிறார் சைகையால்!
பயணமுடிவிலும் பேசாது!
இறங்கிப் போகிறாய் நீ!
-- மதியழகன் சுப்பையா,!
மும்பை

முடிவென்ன?

கவிதா. நோர்வே
நாங்கள் எறிந்த!
ஆயதங்களைத்தான்!
நீங்கள் பற்றியிருக்கலாம்;.!
ஆனாலும்...!
நீங்கள் தெளித்த!
பொய் சாயங்களால்தான்!
எமது வழிகள் சிவப்பாகிப் போயின.!
எதுவானாலும்...!
நாம் நிற்கும் தெருவில்!
இரண்டே பாதைகள்...!
ஒன்று போர்களம் செல்கிறது!
இன்னொன்றில் எம் புறாக்கள் காத்து நிற்கின்றது.!
இரண்டு வழியிலும்!
சென்று திரும்பிய பின்!
எடுத்த முடிவென்ன..!
புறாவையும்!
கொல்வதென்றோ?!!
!
கவிதா. நோர்வே!
18.02.08

பிரிவுகளும் பேதமையும்

ராமசுப்ரமன்யன்
தற்காலிகமான பிரிவுகளிலும் கூட!
பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தையாய்!
அடம் பிடித்திருக்கிறது என் மனசு....!
நிரந்தரமானதோர் பிரிவிலோ!
முதியோர் இல்லத்தில் தந்தையை!
விட்டுச்செல்லும் மகனைப்போல!
இரக்கமற்றதாக இருக்கிறது உன் மனசு...!
கல்லென்று தெரிந்தும் கடவுளை!
நம்பும் பக்தனை போல!
பித்தனாயிருக்கிறது என் மனசு...!
-ராமசுப்பிரமணியன்