தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பரிசு

பட்டுக்கோட்டை தமிழ்மதி
மெல்ல மெல்லச் சுற்றுகிறேன்!
மேசை மீது உலக உருண்டை.!
என்!
துணைக் கண்டம் தொட்டுச் சிலிர்க்கிறேன்.!
கடலில் நனைந்து கைவிரல்...!
ஈரத்தோடு தொடுகிறது ஈழத்தை.!
நான்!
கால் வைத்த மண்!
கண்ணுக்குத் தெரியாத புள்ளியாய்...!
சிங்கைச் சிறுதீவாய்...!
என் கையில் இந்த பூமி.!
o!
ஊருக்குப் போன தோழன்!
வாங்கி வந்த!
உருண்டைப் பூமியின் அடியில் அதன் விலை!
ஆ எனும் மறை குறியில்.!
இந்தப் பூமியை!
அச்சில் பொறுத்திய அச்சின் சாய்வு!
இருபத்து மூன்றரை பாகையில்!
இருக்கும்தானா?!
இதைச்!
செய்தவனுக்கு விளங்கியிருக்குமா!
இந்தச்!
சாய்வின் சங்கதி.!
கவையில் இப்படி மாட்டியது!
கண்ணில்பட வசதிக்குத்தான் என்பானா?!
மண்ணின்!
மேற்பரப்பு மேடுபள்ளம் போல!
இந்த உருண்டையில்!
ஒழுங்குக் கொஞ்சம் குறைந்து.!
அச்சு!
நேர்க்கோட்டில் இல்லாததால்!
துள்ளிக் குதிக்கிறது.!
சுற்றுகையில்!
நிலம் நடுங்குவது போல!
உறுதிப் போதா!
இந்தக்!
கம்பிக் கவைப் பிடிமானத்தால்.!
ஆனாலிந்த நிசப் பூமி!
எந்தப் பிடிமானமும் இல்லாமல்!
இந்தப் பேரண்டத்தில் இயங்குகிறது.!
இன்னொன்றில் பயணிக்கும் எதற்கும்தான்!
பிடிமானம் வேண்டும்.!
இந்தப் பூமிக்கு எதற்கு?!
இல்லை!
இருக்குமோ பிடிமானம்...?!
சுற்றிச் சுற்றிப் பார்க்கிறேன்!
எல்லா தேசங்களையும்!
இருந்த இடத்தில் இருக்க!
இந்தப் பூமி உருண்டை.!
பல்லைப் பிடித்துப் பார்க்கிறேன்.!
பாசமாய்!
ஊரிலிருந்து ஓட்டி வந்த!
ஓர் உழவு மாடாய்!
இந்த உலக உருண்டையை.!
இந்த!
உருண்டைப் பூமியில்!
ஒரு குழி மண்ணாவது வாங்கலாம்தான்.!
ஆனால்!
மண்ணுக்கென தருவது பெறுவது!
மண்ணின் விலையாகுமா?!
கொடுப்பதும் கொள்வதுமாயிருக்கும்!
மண்ணுக்கு!
மனிதனென்ன விலை வைப்பது?!
உள்ளன்பில் கொடுத்த இந்த!
உலக உருண்டைப் பரிசுக்கும்தான்?!
விலையில்லா இந்த உலக உருண்டையில்!
ஈழத்தைத் தொட்டு எழுதுவே‎ன்!
இது!
தமிழனின் மண் !
எ‎ன்று

முதிர்ச்சி

பா.திருமுருகன்
கவி ஆக்கம்: பா.திருமுருகன்!
பொங்கல் தீபாவளி!
எத்தனையோ பண்டிகைகள்!
ஞாபகத்தில்!
சின்னபிள்ளை மச்சான் மட்டும்!
நடந்துகொண்டேயிருக்கிறார்!
காரணம்!
அவரிடம்!
சித்ரகுப்தனாய்!
சிலகாலம் கணக்கெழுதியிருக்கிறேன்!
ஆடுகளின்!
ஆயுள் ரேகையை!
கூறுப்போட்டு!
கூப்பிட்டுக் கொடுத்திருக்கிறேன்!
இரத்தம் தனியாய்!
சதை தனியாய்!
தலை தனியாய்!
கால் தனியாய்யென்று...!
நானும்!
ஆடு மேய்க்கப்போய்!
அழுதிருக்கிறேன்!
அது!
அடுத்தவன் தோட்டத்தில்!
மேய்ந்ததால்!
அப்பாவிடம் அடியும் வாங்கியிருக்கிறேன்!
ஒரு நாள்!
கட்டியிருந்த ஆடு!
காணவில்லை!
அம்மாவிடம் கேட்டேன்!
அருப்புக்கு கொடுத்துவிட்டதாய்!
சொன்னாள்!
என்!
படிப்புச் செலவுக்கு!
பணமில்லையாம்!
பாவம்!
அந்த ஆடுகள்!
இன்னும்!
என்னைப்போல்!
யார்யாருக்கோ!
உயிரை விட்டிருக்கலாம்!
இன்று!
விட்டில் பூச்சிகளுக்காக!
விளக்குள் கூட!
எதிரியாய் தெரிகிறது!
எனக்கு!
!
கவி ஆக்கம்: பா.திருமுருகன

விடுதலையே வேர்

ஜென்சன்
உயிரோடு குளிக்குள்ளே உடலங்கள் உறங்க! !
கல்லறைக் கடிதங்கள் நன்றியுடன் முடிக்க! உண்மைக்கு அங்கே உருவம் இல்லை!!
எம் அழிவு அயல் நாட்டிற்க்கு ஒரு இழிவு! மண்தெறிக்க மழை பொழிப்பினும் வானம் கிழிய இடி இடிப்பினும்! !
புளுதி புலர காற்றடிப்பினும்!... !
உச்சி வெயில் மேல் மண்டையில் வேர்வைகளால்! !
ஏதேனும் எழுதினும்......! !
ஈழத்திற்காய் விழுந்தால் விதை!.. எழுந்தால் மரமென்போம்..! !
யார் யாரோ ஈழத்தின் பெயரை வைத்து அரசியல் நடாத்துகின்ரனர்.. ''உயிரைக்கொடுப்பான் வன்னித்தமிழன் அதற்கு உரத்தைக் கொடுப்பான் உலகத் தமிழன்'' குரல் கொடுக்க சனமுண்டு!! இருந்தும் கை கொடுப்பார் யாருமின்றி எம்மை..!
விருந்துண்ட கைகளைப்போல் !
கழுவிச் சென்ரனர் பலர்?! !
மாவீரர்கள் தாங்களே உயிரின் எழுத்தாகி கல்வெடினுள் பதிந்தார்கள்.., !
துளையிட்ட மூங்கில்களாய் இருந்து மௌனத்தின் சப்தத்தால் கானமாய் இசைந்தார்கள்..!
எவ்வளவு தான் அழிவின் மத்தியில் அழகாய் அலைந்தாலும்.! !
பகை அவன் பதுங்கி வருவான் பகலில் பயந்து!!! !
எம்மவரோ கொஞ்சம் தும்மினால் பதறியடித்தோடுவான் அவன் பன்மை சிதற புலிகளால் முடிந்தது உயிரின் முகம் கலையும் வரை உண்மையாய் களமாடுவது என்வயதிற்கு தகுந்தது அலங்கரித்த தமிழினால் தரை தளைக்க தன்மானத்துடன் போராடுவது.. முட்கம்பிகளோ முன்னே!! காவலரண்களோ பின்னே; பிறப்பும் முன்னே இறப்பும் பின்னே; கவலைகளோ! முன்னே சில கவிதைகளோ பின்னே இருந்தும்! !
ஏன் எம் நாடோடி வாழ்க்கை மட்டும் நடுவில் நிலைக்கின்றது? உண்மையில் நான் தாயகத்தில் இருந்தபோது! !
ஈழத்தின் அருமை புறியேன்! !
பெருமை அறியேன்! ''இது சூழ்நிலை''. நன்மை தனை நான்கு பேருக்கு நன்றி பாராது உழைத்தவன் கடைசி வரலாற்றை சற்று வகுத்து கூறுகின்றேன் சற்று சிந்தியுங்கள்- ((இரும்புத்தொப்பி அணிந்து ஒருவன்,!
சில பல ஆயுதங்கள் ஏந்தி இன்னொருவன்!! !
நட்ட நடு நிசியில் சுதந்திரக்கனவு காணவிடாமல் கதவை தட்டும் ஒரு நல்லவர் கூட்டம்)) !
திறந்து பார்த்தால்!!!...?;;!
என் நிசியின் உறக்கம் கழித்து விழி ஓரம் இமைகள் மெல் திறக்க! !
வீதியோரம் ஏதோ கருகிய வாடை கண்டு கொண்டேன் அதில் எரிவது அவன் இடது கால் தொடடை என்று!! !
ஐயகோ! !
அங்கே பாருங்கள் எம் அழகிய தேசத்தில் அழுகியவாடை! !
உற்று நோக்குங்கள் அவர்களின் சுதந்திர தேசம் சுந்தர வீதியில் எரிகின்றது..! தாயின் உடலம் கிழித்தவனை அண்ணனின் தேகம் புதைத்தவனை! !
மண்ணின் பெருமை வீதிக்கு இழுத்தவனை! உயிரோடு உலவ விடலாமா?? அங்கே பொய்மை உருவமாகிறது உண்மை அருவுருவமாகிறது!! !
கிழக்கிலே பகலவன் படை எடுக்க மேற்க்கிலே அஸ்தமனமாக வடக்கும் தெற்க்கும் என்ன நாதியற்று போனதா?...! ஒரு முறை நான் இலங்கையனை கேட்டேன்! !
ஈழத்தவனை அல்ல இலங்கயனை!! தமிழரின் நிலம் எங்கே என்று! அதற்க்கு அவன் இதோ!! !
என்றான் உச்சி குளிர்ந்தது!.. !
அங்கே பிணங்களின் தடையம் சுடுகாடுதான் விடையம் சரி மாவிர மக்களின் ஆலயம் கேட்டேன்! !
இதற்க்கும் அவன் மூடிய குளிகளை காண்பித்தான் ம்..ம் அந்த மடையன் ஒரு விடையத்தை அறிவில் இருந்து விலக்கி விட்டான் குளிக்குளே விதை மூடி இருப்பினும் அதன் வாழ்விடம் ஏனோ நாளை பகலவன் பார்வையில் தான்

தொடரும் வாழ்வினில்

அறிவுநிதி
எரிந்துகொண்டு இருக்கிறேன்!
என்மீது ஏவப்பட்ட வார்த்தைகளால்!
நொறுங்கிக்கொண்டிருக்கும் கணத்தில்!
எங்கும்!
பரவிக்கொண்டிருககும் வலியை!
கண்கள் வடித்துக்கொண்டிருக்கிறது!
மொத்தமும் பெரும் புறக்கணிப்பில்!
மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது!
மரணமும் ஏதுவாகிறது!
சலிப்புகள் வெளிவேறாக பாவித்தாலும்!
நாட்குறிப்புகள் போல ஒன்றன்பின் ஒன்றாக!
காத்து நிற்கின்றன!
கனவுகள் தீர்ந்தபாடில்லை!
நினைவெங்கும்!
நெளிந்துகொண்டும் கனன்றுகொண்டும் இருக்கிறது!
தேடல்கள் இழப்புகளை நிறைவுசெய்கின்றன!
ஏதுமில்லாதது போல் இருந்தும்!
எதன்பின்னால்!
வாழ்க்கையும்!
நானும்.!
கவிதை: அறிவுநிதி

வைக்கட்டுமா

பாண்டித்துரை
பாண்டித்துரை!
ஏன் பதட்டமோ!
உனக்கு!
போன்பண்ணவரும்போது மட்டும்!
தலை கால் புரியவில்லை!
தடுமாற்றம்றின்றி!
உன் நம்பர் அடிக்கிறேன்!
ஒரு ரிங்கில் நீ எடுக்க!
ஓராயிரம் முறை!
ஊன்னிடம் வேண்டினேன்!
கேட்டிருக்க வேண்டும்!
எடுத்ததும் பேசவில்லை!
எதிர் முனையில் - நீ!
இருப்பது தெரிந்து விட்டது!
முதலில் பேசியது - நம்!
மூச்சு காற்றுதான்!
முப்பது நிமிடம் ஆகியிருக்கும்!
முடிவாய் நாம் பேசியது!
நேரமாச்சு!
வைக்கட்டுமா போனை

ஏய் குழந்தாய்.. முடிவை நோக்கி…

ஜே.ஜுனைட், இலங்கை
01.!
ஏய் குழந்தாய்…!!
--------------------!
பூவில் ஒருபூவாய்!
அழகிற்கோரணியாய்!
அடியோ தாமரையிதழாய்!
அகம்பாவம் அறியாதவளாய்!
குணம் வெள்ளை நிறமாய்!
குறுநகையால் வெல்வாய்…!
மகிழ்ந்தால்!
மங்கலப்புன்னகையாய்…!
மதியால்!
மாநிலம்!
காப்பவளாய்…!
அழுதால்!
ஆற்றிடை ஆம்பல் மலராய்…!
அதிர்ந்தால்!
நாற்றிடை நாதஸ்வரமாய்…!
அயர்ந்தால்!
தென்னங்கீற்றிடைப் பூவாய்!
உறைவாய்.!
சீருடைச் சிப்பிக்குள்!
முத்தாய்…!
தேரிடைப் பூவுக்குள்!
தேனாய்…!
நேர்த்தியாய்!
பாடசாலையில் பயில்வாய்!
சீரிய குழந்தாய்!
சுறுசுறுப்பாய்...!!
!
02.!
முடிவை நோக்கி… !
--------------------------!
முடிவை நோக்கி…!
வாழ்க்கை செல்கிறது!!
வாழ்வை விரும்பினாலென்ன…!
விரும்பாமல் சலித்தாலென்ன!
முடிவை நோக்கி!
ஆயுள் செல்கிறது….!
ஆசைகளை அடைந்த போதும்!
நிராசைப்பட்டு சடைந்த போதும்!
எமது முடிவுப் புள்ளி!
பிறந்ததில் இருந்து!
எமை நோக்கி!
வந்து கொண்டேயிருக்கிறது…..!
இலட்சியம்!
வெளுத்துப் பிரகாசிக்கலாம்…!
கசந்து காய்ந்து போகலாம்…!
“வெற்றி” சுவை கூறலாம்..!
மறுத்து தொலைவாகலாம்.!
பூமி புதிர் போடலாம்..!
காற்று கவி பாடலாம்..!
சோகம் வதை பண்ணலாம்..!
இன்பம் கதை சொல்லலாம்..!
நாம் கடி மலரில் துயிலலாம்..!
காற்றில் பறக்கலாம்..!
கீதம் பாடலாம்!
ஓளிக்கீற்றில் நடக்கலாம்..!
எத்திசையில் போனாலும்!
“முடிவை” நோக்கியே செல்கிறோம்!
அதை முகர்ந்து பார்க்கத்தான்!
இன்னமும்!
இதயங்கள் துடிக்கின்றன

நிலவின்மீதான காதல்

ந.பரணீதரன்
காதல்தான் எனக்கு புத்துயிர் தருகின்றது. !
தாயின் மீது தாய்நாட்டின்மீது உற்றார் !
உறவினர் மீது உண்மை நட்பின் மீது !
எல்லாவற்றிற்கும் மேலாக இந்த கறுப்பு !
நிலவின்மீதான காதல்.. உங்களிற்காய் !
ஓரு சில துளிகள். . .காதல் துளிகள்... !
!
1) !
இன்றைய பெண்ணா !
இலக்கியப்பெண்ணா நீ !
இப்படித் தயங்குகின்றாய் !
என் பெயர் சொல்லிக்கொள்ள . . !
2) !
உனக்காக ஏதேதோ ஏக்கத்துடன் !
காத்திருந்தேன் கால்கள் வலிக்க !
தென்றல் வருடவில்லை !
திங்கள் ஓளியூட்டவில்லை !
மலரோ வாசம் பகரவில்லை !
மங்கை உன்தன் வருகைமட்டும்.. !
3) !
ஒற்றைத்துணிவுடன் என் காதலை !
துளித்துளியாய் மொழிந்துவைத்தேன் !
பிரசவத்திற்காய் காத்திருந்த !
நிறைமாத கர்ப்பினிபோல் !
பொத்திவைத்த ஆசைகளை !
பூட்டிவைத்த உன் வெட்கத்தை !
தூக்கியெறிந்து நீ தந்த முத்தம் !
இன்றுவரை இனிக்கின்றது !
நீ தான் தொலைவில் !
நினைவுகளுடன்தான் நாம் வாழ்கின்றோம் !
4) !
வேலைக்களைப்பில் வீழ்ந்து படுக்கும் எனக்கு !
பீப் பீப் இசையுடன் வரும் உன் !
எஸ் எம் எஸ் தான் உற்சாகம் தருகின்றது !
ஏழைச்சிறுவனிற்கு கிடைத்த ஓற்றை மிட்டாய் போல !
5) !
உன்னைத்தான் கருவாய் வைத்து !
வரைகின்றேன் ஓர் கவி !
இன்றுவரை உனக்கு ஏன் புரியவில்லை ! !
இல்லை புரிந்தும் மௌனிக்கின்றாயா ? !
அதை நான் சொல்லவேண்டும என.. !
நானும் காத்திருக்கின்றேன் நீ !
சொல்லிக்கொள்வாய் என . . !
6) !
நண்பர்களின் கிண்டல் மத்தியிலும் !
நாசூக்காய் நான் அனுப்பும் எஸ்எம்எஸ் !
அதற்காய் நீ அனுப்பும் பதில் !
புரிகின்றது காதலை மறைத்துவைப்பதிலும் !
ஓர் சுகம் இருக்கின்றது !
சந்தித்துக்கொள்ளாமல் இப்படியே காதலிப்போமா ? !
7) !
கருவறைக்குள் உழன்றபோதே !
புரிந்தேன் எனக்காய் ஓருத்தி எங்கோ இருப்பதாய் !
அவள் நீதான் என்று இன்றுவரை ஊகிக்கவில்லை !
எங்கிருப்பாய் நீ என ஏங்கித்திரிந்தேன் !
இங்குதான் நீ இருந்தாய் என !
இன்றுதான் அறிநதுகொண்டேன் !
8) !
விழிமூடிக்கொண்டாலும் விலகமறுக்கும் ஓளி !
போர்த்திப்படுத்தாலும் புரட்டிப்போடும் குளிர் !
கட்டிவைத்தாலும் துள்ளியோடும் மனம் !
எல்லாமே உன் அருகாமை, உன் ஸ்பரிசம் !
அன்று தந்த இன்றைய நினைவுகள் !
என் சுவாசம்கூட உன்வாசம் தேடுது !
9) !
சுயம் என்னைவிட்டு போனாலும் !
நிதம் உன் நினைவுகள் போகாது !
வானவில் காட்டிய உன் விழிகள் !
வாசல்வரை வந்துபோன உன் கொலுசொலிகள் !
மனதின் ஓரம் வருடிச்சென்ற இதழின்மென்மை !
என்றுமே என்னைவிட்டு விலகாது !
10) !
அழகழகாய் கவிவடித்தேன் !
வார்த்தைக்குள் வாசம் சேர்த்தேன் !
உனக்காய் எங்கேயோ தேடி !
எடுத்து கோர்த்தேன் மாலைகளாய் !
ஒன்றுமே உன்னைப்போல மென்மையாய் இல்லையே ! !
நீ தான் என் இனிய கவிதை ! !
உன்னைவிட வேண்டுமா எனக்கு வேறு கவிதை ! !
11) !
என்றுதான் திறந்துகொள்ளுமோ !
என்மீதான உன்காதல்வெளிச்சம் !
ஒற்றைக்கால் தவமிருக்கும்கொக்குபோல !
இலவுகாக்கின்றேன் உன்தன் இதழ்மொழிக்காக !
எழுதம் மடலின் முடிவில் என்றுதான் !
எழுதிக்கொள்வாய் காதலுடன் என !
12) !
மாலையானதும் மனம் அலைபாய்கின்றது !
ஓடி ஒளிந்து தூணின் பின்னிருந்து நோக்கும் !
பிஞ்சுக்குழந்தைபோல் சின்னதொரு சிரிப்புடன் !
வாசல் வந்து நோக்குகின்றேன் !
உன் கொலுசொலி கேட்காதா ? !
உன் கூந்தல் வாசம் வீசாதா ? !
மாட்டின் சலங்கையொலிகளையும் !
மலர்களின் மகரந்த வாசங்களையும் !
விஞ்சிக்கொண்டே. . ! !
இன்னமும் வளரும் இந்த துளிகள்

முன்பொரு காலத்தில் இந்த நாள்

தீபச்செல்வன்
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது!
---------------------------------------------!
எந்தப் பறவைகளும் வந்தமராத மரத்தின்!
காய்ந்த கிளைகளில்!
பழங்கள் காய்த்து கனியும் என்று நம்பியிருந்தோம்.!
அம்மா அந்தப் பறவைகளை எங்கேனும் கண்டாயா?!
அதன் மரம் நீண்ட காலங்களாய் பட்டுப்போயிருந்தது.!
தலைகளில்!
ஒடிந்து விழுந்துகொண்டிருக்கிற முற்றத்தில்!
இப்பொழுது எந்தத் தடிகளும் இல்லை.!
இந்த வருடம்!
எங்கள் வீட்டை உடைத்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன்!
அச்சம் தரும் நாட்களையே!
ஒவ்வொன்றாய் விரித்துக்கொண்டிருந்தது.!
வெறும் ஒரு இரண்டு தடிகளைத் தவிர ஒன்றுமில்லை.!
பறவைகள் மறந்துபோன எங்கள் கிராமத்தில்!
சைக்கிள்கள் உடைந்து உக்கிப்போன எங்கள் நகரத்தில்!
ஒரு புன்னகையை பரிமாற!
கூடியிருந்து ஒரு கோப்பை மதுவை அருந்துவதற்கு!
யாரம்மா இருக்கிறார்கள்.!
உன் கைகளில் மலை நேரத்தை கொண்டு வருகிற!
தேனீர்க்கோப்பைகளை காணவில்லை.!
திரும்பாத கிராமத்திற்கும்!
இறங்காத நகரத்திற்கும் ஊடாக செல்லும் பேரூந்தில்!
நாளை நான் பயணிக்கப்போகிறேன்.!
இந்த நாள் கழிந்துபோன வருடத்தின்!
இனிப்பாயிருந்த நாட்களையே ஞாபகப்படுத்துகிறது.!
வேடி அதிரும் இரவு இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது.!
யார் யாரே வந்து செல்லுகிறார்கள்.!
எனக்கு முன்னால் ஏதேதோ கிடக்கிறது.!
முடிந்து போன இந்த வருடத்தில்!
ஏராளமானவற்றை இழந்துபோயிருக்கிறோம்.!
வார்த்தைகளற்று என் சைக்கில் அலைகிறது!
என் வீடு தேடுகிற தெருக்களில்.!
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது.!
அந்தப் பறவைகளையும்!
அதன் பட்ட மரத்தையும் அதன் கீழிருந்த எங்கள் வீட்டையும்!
எங்களிடம் தருவார்களா?!
பட்ட மரம் எரிந்து சாம்பலாகிப்போக!
பறவைகள் அதில் புதைந்து போயிருக்கின்றன.!
வீடு கரைந்துபோன கிராமத்து வெளியில்!
எந்த அடையாளங்களுமில்லை.!
இந்த நாளில் முன்பொரு காலத்தில்!
என்னிடம் இருந்த புன்னகையையும் வார்த்தைகளையும்!
கோரிக்கொண்டிருக்கிறேன்.!
பெருநிலத்தில் புதிய வருடம் நள்ளிரவுக்கு பின் கொண்டு வரப்படுகிறது

கூலி

ருத்ரா
எத்தனை பேர்?!
எத்தனை நூல்!
எத்தனை சொற்பொழிவுகள்?!
பாத்திரம் விளக்கிக்கொண்டே இருக்கிறோமே!
இது தேவையா? திருக்குறளுக்கு!
சிலர் முகம் திருப்பிக்கொள்ளலாம்.!
தேவை தான்.!
விளக்கிக்கொண்டேயிருக்கவேண்டும்!
பாத்திரத்தை.!
பாத்திரம் என்றது!
திருக்குறளை அல்ல.!
நம்மை.!
ஆம்.நம்மை நாமே தான்.!
திருக்குறளை வைத்து!
விளக்கிக்கொண்டே தான் இருக்கவேண்டும்.!
ராமாயணம் என்றால்!
அந்தக்காலத்து நரசிம்ம பாரதி!
என்.டி.ராமராவ்!
இப்போ!
தனுஷ் ஆர்யா வரைக்கும்!
வில் வளைத்து!
சீதையோடு!
கண்ணோடு கண்ணோக்கி!
பத்து தலை அரக்கனோடு!
வதம் செய்வது வரை!
காட்டிக்கொண்டே இருக்கலாம்!
பாராயணங்கள்!
தொடந்து கொண்டே இருக்கலாம்.!
உரை மேல் உரைகள் இருக்கலாம்.!
கால ஓட்டத்தின் காட்சி சக்கரங்களில்!
ஓடும் வேகத்தில்!
நசுங்கிய!
வரலாற்று சதைக்கூளங்களில்!
பிதுங்கியவை எத்தனை எத்தனையோ?!
அவை எழுதும் உரைகளில்!
குறள் எழுப்பிய குரல்களுக்கு!
பிசிறு தட்டியதே இல்லை.!
தெய்வத்தான் ஆகாது...என்றானே!
வள்ளுவன் என்ன நாத்திகனா?!
ஆம்.!
அவன் வாழ்ந்த காலத்தில்!
தெய்வங்கள்!
கதைகளாவும்!
ருசிகரச்சம்பவங்களின்!
தொகுப்புகளாகவும்!
குறுகிப்போனார்கள்.!
அரசர்ககளின்!
செல்லப்பூனைக்குட்டிகளாகவும்!
ஆகிப்போனார்கள்.!
பதினெண்கீழ் கணக்கு இலக்கியங்கள் தான்!
அப்போது மருந்து புகட்ட வந்தன.!
வாழ வேன்டிய‌!
மானுட அறத்துக்கு!
கண் காது மூக்கு ஒட்டி!
கதைகள் சொன்ன போதும்!
அறத்தின் கூர்மை மழுங்கியதே மிச்சம்.!
அதற்கும் ஒரு!
அரம் செய்ய வேண்டிய அவசியமே!
அப்போதைய தேவை.!
அதனால்!
இந்த நீதி நூல்கள் கூட‌!
அங்கங்கே!
அழகிய உவமைகள் பூத்து!
அறம் காட்டின.!
கடவுளை நம்பி கல்லாய் கிட‌!
என்று!
அந்த கல் கூட போதிக்கவில்லை.!
கல்லைப் பிளந்து வா என்றுதான்!
அந்த கல்லும் சொன்னது.!
ஒரு அணுவும் அசையாது என்று!
உன்னை அசையாது படுத்திரு என்றா!
அது சொன்னது.?!
அணுவைத்துளைத்து ஏழ்கடலைக் காண்!
என்று தான் அதுவும் சொன்னது.!
இருப்பினும்!
இன்னும்!
கூடங்குளங்கள்!
கூடி வரவில்லை.!
அரசியலே மதம் ஆகிப்போனது!
நம் நாட்டில் மட்டும் தான்.!
விஞ்ஞானம்!
வியர்க்க வியர்க்க‌!
சிந்திப்பதே முயற்சி.!
நம் கைகளையும்!
கால்களையும் இயக்கும் கயிறு!
அதில் தான்!
கட்டப்பட்டு இருக்கிறது.!
அந்த மெய்வருத்தம்!
எத்தனை!
கழுமரங்களால்!
தூக்கு மரங்களால்!
சிரச்சேதங்களால்!
மிரட்டப்பட்டிருக்கும்.!
மனிதன்!
அதைக்கடந்த பின்!
அடைந்த கூலியின்!
பரிமாணாம்!
புரிகிறதா?!
ஆம்.அது!
பரிமாணம் இல்லை.!
பரிணாமம்.!
உள்ளங்கையில்!
சுக்கிரமேடும் சூரியமேடும்!
பார்த்துக்கொண்டிருந்தவர்களே!!
சோழி குலுக்கியது போதும் என்று!
கையை உதறி வீட்டு!
கணினியுகம் வந்த பின்!
அந்த!
சுக்கிரனை நோக்கியே!
சுற்றுலா போகலாம்!
என்று டிக்கட் புக் பண்ண‌!
தயார் ஆகி விட்டீர்களே!!
இது எவ்வளவு பெரிய கூலி.!
திருக்குறளை நாம் நினைக்கவில்லை.!
திருக்குறள் தான்!
நம்மை நடத்திக்கொண்டு இருக்கிறது

வெளிப்பட்டது.. மூலவரா? உற்சவரா?

கோவிந்தபிள்ளை, சிறீதர்
01.!
வெளிப்பட்டது!
------------------!
காலம் நமக்கு கற்று தந்தது !
மிகவும் குறைவு -ஆனால் !
களம் நமக்கு கற்று தந்தது!
மிகவும் அதிகம்!
அதிலும் முள்ளிவாய்க்கால்!
நமக்கு விட்டு சென்றது அதிகம்!
கற்றதற்கு நாம் கொடுத்த !
விலை மிக அதிகம்!
கொடுங்கோலர்கள் நமக்கு !
நம்மை அடையாளம் காட்டியிருக்கிறார்கள்!
நம்மில் இருக்கும் கவிஞர்களை!
நமக்கு வெளிபடுத்த உதவினார்கள்!
நம்மால் முடிந்தது!
அது மட்டும் தான்,!
பல தலைவர்களை!
நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறார்கள்!
நம்மிடையே இருப்பது!
அனைவரும் தலைவர்கள் தான்!
மேடை பேச்சாளர்களை!
உருவாக்கி இருக்கிறார்கள்!
நாம் பேசுவதற்கு மட்டுமே !
தகுதியானவர்கள்!
நம்மை நம்மைவிட நம் !
எதிரி புரிந்துகொண்டான் -ஆனால்!
இனத்தான் புரியாமல் ஏமாந்தான்.!
இனியும் நம்பியிருக்கிறான் !
கை கொடுப்போம் என்று -என்றோ!
கை கழுவியது அறியாமல் ...... !
!
02.!
மூலவரா ? உற்சவரா?!
---------------------------!
பார்த்திருந்த நாள் முதலாய் -உன் !
பார்வை வரம் வேண்டி !
காத்திருந்த காலத்திலே !
கை தவற விட்ட பின்பு !
காலம் கடந்த பின்னர் !
கண்டெடுத்து கரை சேர -உன் !
இதயக் கோயிலின் பூஜைக்கு !
காத்திருக்கும்- நான்!
மூலவரா ? உற்சவரா?