தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விண்ணிலிருந்து கோமகன

பவித்திரா
். !
அன்புடை அக்காமாரே! அறிவுடை அண்ணாமாரே!!
அழகுதமிழ் பேசுகின்ற இளையதம்பி தங்கைகளே! !
இன்புறு ஈழத்தாய் இனிதே ஈன்றெடுத்த !
எழில்மிகு தமிழினமாய்ப் புவிதனில் வந்துதித்தோம்!
தன்புக ழோங்கிடத் தலைவனொடு துணையெனத் !
தகைசார் வீரரைத் தந்தளித்த தமிழன்னை !
அன்னவரிற் சிலபேரைச் சிலகால விடுமுறைக்காய் !
அனுப்பினள் ஆண்டவன் திருவடி நிழலிற்கே! !
!
இவர்களுடன் இளையோனும் இங்கிதமாய் இணைந்துள்ளேன் !
ஏற்றகல்வி தொழில்நுட்பம் எல்லையிலாப் போர்க்கலைகள், !
கவின்மிகு கவித்துவம் கணக்கிலாக் கலைஞானம் !
கடமை கண்ணியம் கட்டுப்பாடு நல்லொழுக்கம் !
இவையாவும் இவ்விடத்தே இயல்பாய் இழையோடி !
இணையற்ற சோதரர்பால் இசைந்திருக் கையிலே !
அவர்களின் தம்பியென அன்பனாக நானொருவன் !
ஆதரவு பெற்றிங்கு ஆனந்தமாய் வாழ்கின்றேன். !
!
விதைகளா யாகிய வீரரிவரிற் பலரங்கே !
விருட்சமென வளர்தற்காய் விடைபெற்று வந்துள்ளார்!
கதையல்ல சோதரரே கற்பனையும் இவையல்ல !
கடமைகள் இவர்க்கிங்கு கணிசமாய் முடிந்திடவே !
உதயமாகும் தமிழீழம் செப்பனிடப் புறப்பட்டார் !
உத்தமர்தம் மகத்துவத்தை ஊர்சென் றறிவீரே! !
இதமான வாழ்வியல் இன்பங்கள் துறந்து !
இளையோன் யானும் விரைந்தங்கு பிறந்திடுவேன்! !
!
பிறக்கமுன் சிலவார்த்தை பிரியமான சோதரரே! !
பிரதாபம் பேசுகின்றான் பின்னவன் இவனென்றே !
சிறந்தவும் சிந்தையில் சிறிதேனும் எண்ணிடாதீர் !
சிந்தனைக்கு நான்வழங்கும் சீரியவா சகங்கள் !
மறம்நிறை மக்கள்நாம் மாண்புடை யினமென !
மயிர்நீப்பின் உயிர்வாழாக் கவரிமா னொத்தரென !
இறையவன் உலகிதில் ஈங்கிவர் இயம்புகின்றார்! !
ஈடில்லாப் புகழ்தனில் இலங்கிட வாழ்த்துகின்றார்! !
!
தாயகம் துறந்தங்கு சீவிதம் புரிபவ, !
தம்பியென் சொற்களைச் சற்றுநீர் செவிமடுப்பீர்! !
மாயையில் மூழ்கிடும் மானிடர் சிலராங்கே !
மறக்கவும் துறக்கவும் துணிந்தனர் தமிழ்தனை !
சேயிடை செந்தமிழ் நாவதனைத் துண்டித்தே !
சிறப்பென ஆங்கிலம் மட்டுமே புகுத்துகிறார்! !
காயதனை உண்ணுகின்றார்! கனிதனைப் புறக்கணித்தார்! !
கற்கண்டா யூட்டிடுவீர் தமிழமுதை மழலைகட்கே! !
!
கல்விதனை மேன்மையுறக் கற்றுவரும் உமக்கங்கு !
கடல்போற் பொறுப்புக்கள் கட்டாயம் உண்டன்றோ?!
செல்வம் கொழிக்கின்ற சீரான தேசமென்றே !
செகத்தினில் மாந்தரெலாம் செப்பியே வியந்திட !
பல்கலையும் பயின்றே பக்குவமா யுமதறிவைப் !
பாங்குடனே நம்நாட்டு விருத்திக்காய்ப் புகுத்திடுவீர்! !
எல்லையிலாப் பெருமையுடன் எம்தாயார் விளங்கிடவே !
இரவுபகல் விழித்திருந்து ஏற்றமுடன் உழைத்திடுவீர்!!
!
சமத்துவம் பேணிடுவீர்! சமரசம் காத்திடுவீர்! !
தார்மீக சமுதாயம் தழைத்திட விழைந்திடுவீர்! !
அமைதியொடு ஆக்கம், அன்புடமை, அறிவுடமை !
அணிகளாய்க் கொண்ட புதியயுகம் படைத்திடுவீர்! !
இமயமென நான்கொண்ட இலட்சியங்கள் நிறைவேற!
இங்கிருந்து வேகமாக உங்களுடன் இணைந்திடுவேன்!
தமிழீழ அன்னையவள் தாள்பணியும் திருநாள் !
தனயன் எந்தனுக்கும் தொலைவில் இல்லையே! !
!
(உலகத்தமிழர் மாணவர் அமைப்பிற் சேவையாற்றி, 1999ம் ஆண்டு மார்கழித் திங்கள் பதின்மூன்றாம் நாள் இறைவன் தாள்பற்றிய திருநிறை செல்வன் கோமகன் அவர்களின் மாணவர் சமுதாயத்தை நோக்கிய கூற்றாக இப்பாடல் அமைகிறது.)

பூனைகள்

நீதீ
நினைப்பெல்லாம்!
உயர்ந்து விட்டதாக!
தலைகால் புரியதா!
கடுவன் பூனைகள்!
புதிதாய் வரும் பூனைகளை!
எலியாய் நினைத்து!
ஏப்பம் விடுகிறது!
கடுவன் பூனைகள்!
பக்கத்தில் வரும் போதெல்லாம்!
உறுமிச்செல்கின்றன!
பயமறியா பூனைகள்!
பக்குவப்பட்டதாலே!
கண்களை மூடிச்செல்கின்றன!
திரும்பிப் பார்க்க !
திராணியற்ற கடுவன் பூனை!
பூனையை சுரண்டியே!
பிரபஞ்சத்தில் மினுமினுக்கிறது!
பூனைகளின் வளர்ச்சிக்கு !
கடுவன் காரணமாம்!
சந்திக்கும் இடங்களிலே!
சல்லாபப் பேச்சுக்கள்!
சப்தங்களாக தொடர்கின்றன!
பூனைகளுக்கும் புரியும்!
நித்திக்கப்பட்ட நிர்பந்தத்தாலே!
சாதுவாக ஓடுகிறது!
!
கவிதை: நீ “ தீ”

எழுத்து

கலாநிதி தனபாலன்
எழுதினேன் எழுதினேன்!
எவர்முகமும் பாராமல்!
என்மனம் பார்த்து எழுதினேன்!
மனமொழியை எழுத்தாக்கி!
மற்றோர்க்கு மறுமொழியாய்!
வைத்தேன்!
எழுதினேன் எழுதினேன்!
மெய்மையை மெருகூட்டி!
பொய்மையைப் புதைத்து!
புரிதலைத்தரவே புதுக்கவிதை!
எழுதினேன்!
மறைத்து மறைத்து !
மார்பைக் காட்டி!
மற்றோர் பார்ப்பதில்!
மகிழ்சி கொள்ளும்!
மங்கையைப் போலே!
எனக்குள் ஏதோ!
எழில்மிகும் இனிமை!
இதனால் இதயம் திறந்து!
இன்னும் எழுதுவேன்!
புரிந்தவர் புணர்ச்சியில்!
புதுமைக்கருவாய்!
கவிதைக்குழந்தை !
களத்தில் பிறப்பாள்!
கண்டு மகிழ்வேன்!
தலைமுறை கண்ட!
தமிழும் வாழ்வாள்!
வாழும் தமிழை வாழ்த்தி!
எழுத வருவோர்க்கெல்லாம்!
வாழ்த்துச் சொல்லி!
வணங்கி நிற்பேன்.!
-கலாநிதி தனபாலன்

இளைஞனே காதலித்து பார்

லலிதாசுந்தர்
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன்னை!
உன் இரத்தகுழாய்களுக்குள் புதுரத்தம் பாய்ந்து ஓடி வரும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் உழைப்பை!
உன் நரம்புகள் திசைதெரியாது உதவ தெரித்து ஓடி வரும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் தன்னம்பிக்கையை !
உன் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு ஓளி பளீர் என்று வீசும்!
இளைஞனே காதலித்து பார்!
பெண்ணை அல்ல உன் முயற்சியை!
உன் முட்டுகட்டைகள் இருந்த இடம் தெரியாது ஓடி ஒளியும்!
இளைஞனே அடைய விரும்பு!
பெண்ணை அல்ல உன் இலட்சியத்தை !
உன் கால்கள் சிகரங்கள் நோக்கி வேகமாக ஏறத்தொடங்கும்!
- லலிதாசுந்தர்

என் தேசத்தை பற்றி

மித்யா கானவி
என்னடி தோழி!
எப்படி சுகம்?!
சிட்டுக் குருவி!
இசை மறந்த எம்!
தேசத்தைப்பற்றி!
என்னத்தை சொல்ல -நான்!
துருப்பிடித்த துப்பாக்கிகள்!
எல்லைதாண்டியே வருவதால்!
சத்தமின்றி கொல்லும்!
சுவாச நோய் பற்றி.......!
வாகை மரங்கள்!
உதிரும் கண்ணீரில்!
அரசமரங்கள்!
உயீர்ப்பித்தல்!
பற்றி-எப்படி!
சொல்ல நான்!
வற்றிப் போகாத!
வரட்டுப் பிடியில்!
ஒற்றை காலில்!
நிற்கும் கொக்கை-பார்த்து!
வெக்கி போகும்!
தூரோகத்தை பற்றி!
எப்படி சொல்லுவேன்!
செம் பருந்தை புணரத்தூரத்தும்!
கானாங்கோழிகளின்!
நப்பாசை பற்றி!
யாரிடம் சொல்லுவேன்!
ஆறிடா ரணங்களில்!
ஆழ்மனதில் பதிந்திட்ட!
அவலங்கள் -ஈரம்!
காயாமல் இன்னும்!
பிசு பிசுக்கும்!
புயலடித்த தேசத்தில்!
சிதறுண்டு போன!
பறவைக் கூட்டங்களின்!
இருப்புகள் பற்றி!
உயிர்களை நிலைநிறுத்த!
உண்மைகளை உரு மறைக்கும்!
என் பேனாவை வைத்து!
எப்படி சொல்லுவேன்!
என் தேசத்தைப்பற்றி

சில மனிதர்கள் இருக்கிறார்கள்

ஸமான்
சில மனிதர்கள் இருக்கிறார்கள்!
அவர்கள்!
மரணித்துபோன!
மனிதர்கள்!
அவர்கள் வெறுமையாய்!
சுவாசிக்க தெரிந்தவர்கள்!
மடி கணணியோடு மட்டும்தான்!
அவர்கள்!
நட்பு பாராட்டிகொள்கிறார்கள்!
அவர்கள்!
புன்னகைக்க!
தெரியாத மனிதர்கள்!
கண்ணீரின் வாசனையை!
அறியாதவர்கள்!
ஒரு விளையாட்டு!
பொம்மையை போல!
காலம் அவர்களை!
உருட்டிக்கொண்டே இருக்கிறது!
அவர்கள்!
கோப்புகளுக்குள்ளும்!
கம்பி ரேழிக்குள் சுற்றும்!
கடிகாரத்திற்குள்ளும்!
அவர்கள்!
தொலைந்து கொண்டிருக்கிறார்கள்!
அவர்கள்!
சுவாசிக்க மட்டுமே!
மனிதர்களாக பிறந்திருக்கிறார்கள்

எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்

ஷஸிகா அமாலி
மழைக் காலநிலையென்ற போதும்!
தெளிவானதும் அமைதியானதுமான அந்தி நேரம்!
வாசிகசாலை முற்ற சீமெந்து வாங்கின் மீது!
நாங்கள் அமர்ந்திருந்தோம்!
எவ்வளவு அழகியது அம் மாலை நேரம்!
இறந்த காலத்துக்கு மீளச் செல்ல இயலாத!
கதைத்துக் கொள்ளாத போதிலும்!
இதயங்களில் ஒன்றே உள்ள,!
கவிதைகள் எழுதிய போதிலும்!
வாழ்க்கையை விற்கச் செல்லாத!
நட்புக்கள் இடைக்கிடையே வந்து அமர்ந்துசென்ற!
சீமெந்து வாங்கும் கூட ஆறுதலைத் தரும்!
காலத்தின் தாளத்திற்கேற்ப மாற்றங்கள் நேராத போதும்!
வெளியே உரைக்க முடியாத் துயரம் உள்ளத்தில் உறைந்த போதும்!
வில்லோ மரக் கிளைகள் காற்றோடு இணைந்து சரசரக்கும்போது எழும்!
எம் புன்னகை கண்டு திறக்கும் எம் மாயலோக இல்லம்

திறப்பதற்கு மறுக்கட்டுமே

அனாமிகா பிரித்திமா
பிற்பகல் இரண்டு மணி...!
முருங்கை குழம்பு...!
வெண்டை பொரியல்...!
நெய் மீன் வறுவல்...!
பரிமாற தயாராக நான்...!
அழைப்புமணி ஒலித்தது...!
சாவியுடன் ஓடினேன்... !
என்னவர் பசியுடன்...!
ஆவலாய் ...!
கதவு திறக்க மறுக்கிறது...!
நல்ல வேளை...!
அவரிடம் மாற்றுச்சாவி உண்டு...!
அதுவும் கை கொடுக்கவில்லையே?...!
பூட்டை திறப்பவனை அழைத்தால்...!
வர இரண்டு மணி நேரம் ஆகும்...!
மீண்டும் வேலைக்குச்செல்ல வேண்டுமே?...!
உள்ளே நான்...!
வெளியே என்னவர்...!
நான் கதவின் வழி ஊட்ட...!
என் குழந்தை சாப்பிட்டது ...!
அடுத்த வீட்டு மலாய் பாட்டி...!
கேலியாய்...!
“கணவர் மேல் இத்தனை பாசமோ” ?...!
என் மனதில் சின்ன ஆசை ...!
தினமும் கதவு ...!
திறப்பதற்கு ...!
மறுக்கட்டுமே

கேள்போல் பகை

முருகடியான்
ஒன்றுபட மாட்டார் உருப்படவும் மாட்டாமல்!
நண்டுகதை போன்றே நடந்திடுவார்! -மண்டுகளாய்!
வெண்டா மரைத்தேனை வேட்காமல் வேற்றுமொழித்!
தண்டுகளைத் தண்மலரென் பார்!!
மூவேந்தர் ஆட்சி முடிந்து முளைத்தவிதை!
சாவேந்திப் போய்வரையில் சாவாதோ? -தாவடிமைப்!
பிட்டேந்தி உண்ணப் பெரிதும் விரும்பியெங்கும்!
தட்டேந்து வார்தமிழ ரே!!
தட்டிக் கொடுத்துவிட்டுக் கால்தொட்டுக் கைதொழு(து)!
எட்டி உதைத்தால் இளித்துவிட்டு -மட்டிகளாய்!
இன்னும் இறைதமிழை ஏற்றமுடி யாதிருக்கும்!
மண்ணே மறத்தமிழர் மண்!!
சூரியனின் சூடாய்ச் சுடுந்தொலைக் காட்சிவழி!
ஆரியத்தோ டாங்கிலத்தின் ஆளுகையால் -வீரியமே!
இல்லாத் தமிழ்பரப்பி ஏய்க்குந் தலைவ(ர்)களை!
நல்லாராய் நம்புவதேன் நாம்?!
ஆதித்தர், அண்ணா, அருந்தலைவர் மா.பொ.சி!
சாதிக்க மாட்டாமல் சாவடைந்தார் -பாதிக்கப்!
பட்டதெல்லாம் நீக்குவதாய்ப் பாலொழுக்கம் பேசிவிட்டு!
வெட்டுகிறார் வெல்தமிழின் வேர்!!
பிள்ளை மகுடமிட் பேரரெல்லாம் கொள்ளையிட்!
நல்ல தமிழழிக்கும் நாடகத்தால் -கள்ளமுடன்!
சேற்றில் அமுதமிட்டுச் செம்மொழியென் றார்ப்பரித்தல்!
காற்றைக் கயிறாக்கல் காண்!!
!
- பாத்தென்றல்.முருகடியான்

முற்றும் தொடரும்

சகாரா
கண்களைக் குருடாக்கும் பெருமை!
வெற்றியை விலைபேசும் பொறாமை!
இருப்பைத் தின்னும் சோர்வு!
அடிக்கடி குழம்பித் தடுமாறும் பலவீனம்!
புன்னகையை மறைத்தழிக்கும் பொய்ப்புழுதி!
மகிழ்ச்சியைக் கொத்தத் துடிக்கும் துரோகம்!
நேர்மையை நோகடிக்கும் குரூரம்!
நட்பைத் தூரவிரட்டும் மௌனம்!
எதிரியையும் நெகிழ வைக்கும் துயரம்!
துயரங்களைத் தித்திக்கவைக்கும் விரக்தி!
விரக்தியைத் துளித்துளியாய்க்!
கரைய வைக்கும் கவிதை!
சூன்யத்தில் கயிறுதிரிக்கும் குடும்பம்!
சுயத்தைச் சாகடிக்கும் உலகம்!
தன்னம்பிக்கையின் மறுபரிசீலனையில்!
தள்ளிப் போடப்படும் மரணம்!
எல்லாம் உறிஞ்சித் தீர்த்தபின்னும்!
எப்படியோ மிச்சமிருக்கிறது!
இன்னும் கொஞ்ச வாழ்க்கை.!
நன்றி ::!
”-நதிக்கரையில் தொலைந்த மணல்”!
வெளியீடு : பயணம் புதிது!
புலியூர் 639 114!
கரூர் வட்டம்!
தொலைபேசி :: 04324 - 50292