தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இவனுக்கு வராதது

செண்பக ஜெகதீசன்
வானில் பறவைகள்!
வரிசையாய்ப் பறக்கின்றன,!
வாய்விட்டு எண்ணுகிறது குழந்தை-!
ஒன்று, இரண்டு, மூன்று!
என்றாக!!
மனிதனே,!
இந்த!
ஒழுங்குமுறை உனக்கு!
ஒத்துவரமாட்டேன் என்கிறதே!!
ஏக்கம்...!
ஏங்குகிறது மனது-!
இப்போது!
மண்டையோடுகளை!
மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும்!
மனிதன்,!
எப்போது பார்க்கப்போகிறான்!
இதயத்தை!!
இயற்கையும்..!
மண பந்தங்கள்,!
பணத்தைப்!
பணத்துடன் இணைக்கின்றன!!
இவர்களைப் பார்த்துத்தான்!
இப்படிச் செய்கிறதோ!
இயற்கையும்-!
கரையில் உள்ளவரை!
கண்ணீர் விடவிட்டுக்!
கடலில் பெய்கிறதே!
மழை

பனியும்.. சிரிப்பதும் .. காத்திரு

கிரிகாசன்
பனியும் வெயிலும் இவளே.. சிரிப்பதும் அழுவதும் ஏன்??.. காத்திரு ! காற்றில் வருவேன்!
01.!
பனியும் வெயிலும் இவளே!
---------------------------------------!
மானென் றிடவேழம் மதமெடு!
பூவும்பொலி தேனென் றழகொடு!
நானும் உயிர்தானும் துடிபட!
காணும் அவள் தேரென் றுலவிட!
வானும் மழைகாணும் சிறுமயில்!
ஆடும் எனப்பூவை நடைகொள!
ஏனென் கனவாகும் நினைவுகள்!
காணும் மனமேகு மிவளிடை!
பாலும் பழநீரும் கலந்திடப்!
பாயும் மதிதாரு மொளிகொள!
நூலும் எனக் காணு மிடைகொள!
நூறும் எனயாரும் அளவிட!
மேலும் பலமின்னும் நினைவெழ!
மேனிமழை கொண்டோர் நிலமென!
ஆலும் அதுதாரும் நிழலென!
ஆசைமொழி கூறிக் குளிர்பவள்!
சேனைபடைகொண்டோர் அரசெனச்!
சீறும் பெருவேங்கை திமிரென!
தான்ஐம் பொறியாவும் ஒருங்கிடத்!
தாரும் பெரிதாகும் சுவையென!
பூநெய்தனை உண்ணும் உயிரெனப்!
போதில் இருள் கூடும் பொழுதிடை!
ஏனை மலரென்னும் கணைகளை!
என்னில் எறிந்தாடு மிவள் அவள்!
தானோ? எமன்போலும் உயிர்கொளத்!
தாவும் எருதேறும் நிலைதனில்!
ஊனும் உருயாவும் உருகிட!
உள்ளம் மெழுகென்றே இளகிட!
கோனும் அவன் கொள்ளும் வாளினைக்!
கொண்டே இருகண்கள் வீச்சிட!
நானும் அழிவேனோ என்னுடன்!
நாளும் உயிர் கொல்வாள் போரிட !!
நாளும் வரும் என்னைத் துணையென!
நானும் மலர்மாலை தோளிட!
தோளும் வலி கொள்வோ னிவனிடம்!
தோற்றே னெனத் துறவிப் தனமொடு!
நாலும் அதில் நாணம் மிழந்திட!
நேரம் மலர்மூடும் பனியிடை!
கோலம் நிலவென்றே நிகரிட!
கொடுமை தனை விளையென் றுழறுவள் !!!
!
02.!
சிரிப்பதும் அழுவதும் ஏன்??!
-----------------------------------------!
நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்!
நித்திய சூரியனே - நினைப்!
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்!
பாரிலிருக் கையிலே!
கால விதியிதோ மாலைமதி கெட்டு!
காணும் பிறை யொளியாய்-பலர்!
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்!
கூடியிருப்ப தென்ன?!
மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை!
மேவி இருள் பரவும் - அதி!
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்!
காணும் இரண்டுவிதம்!
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்!
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்!
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை!
மீது துயில் சிலர்க்கும்!
கானமிடும் நல்ல வானில் குருவிகள்!
ஊர்வலம் செய்யழகும் அங்கு!
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென!
கோலமிடும் எழிலும்!
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்!
தீபங்கள் வைத்தவளோ - மன!
மானது ரம்மிய மாகக் களித்திட!
மஞ்சள் நிலவு வைத்தாள்!
ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு!
அத்தனை கோபங்கொண்டு - பல!
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட!
மின்னலை கொண்டுவைத்தாள்!
வானம் அழுவது போல மழையுடன்!
வாரிப் புயலடித்து - பெரி!
தான முரண்படும் பேய்மழை ஊதலும்!
ஏனோ நிகழவிட்டாள்!
பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்!
பூவுலகே யறியும் - அலை!
மேவுகடல் மீது மீனழுதால் அலை!
யோடு கலந்துவிடும்!
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்!
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி!
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்!
தாலும் துயர் இருக்கும்!
பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து!
பற்றிடத் தேவையில்லை - மலர்க்!
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட!
வீழும் விதிமுடியும்!
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்!
நெஞ்சில் குடியிருக்கும் -இதை!
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்!
உண்மை நிலைதிகழும் !
03.!
காத்திரு ! காற்றில் வருவேன்!!
--------------------------------------------!
தேனிற் குழைத்த தீங்கனியாய் !
தேவி எந்தன் அருகிருந்தாய்!
வானிற் குழைத்த ஓவியமாய்!
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்!
பச்சைப்பசுமைப் புல்வெளியும் !
பனிநீர் தூங்கும் அதனிதழும்!
இச்சையுடன் நீ பக்கமதில்!
இருந்ததை எழுந்து கூறாதோ!
கொத்துமலர்களின் தோட்டமென!
கோடிநிலவுகள் கூட்டமென!
நித்தம் அருகினில் நீ இருந்தாய்!
நினைவுகள் மீண்டும் வாராதோ!
வெற்றாய் விரியும் விண்ணில் நீ!
விட்டுச் சென்றது எங்கே சொல்!
உற்றே நோக்கும் உன்விழிகள்!
உயரச் சென்றது உண்மையெனில்!
பஞ்சு போன்றோர் வெண்மேகம்!
பரந்தநீலப் பிரபஞ்சம்!
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்!
எங்கும்நீயே நீயேதான்!
சுட்டுத் தீய்க்கும் சூரியனும்!
சுடர்போல் நினது விழிதன்னை!
சுட்டி காட்டி எரிகிறதே!
சோர்ந்தே தவிக்கு மென்மனதை!
கட்டிக் காக்கமுடியவில்லை!
காற்றும் தீண்டிச் செல்லுகையில்!
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்!
பனிநீர்விழவும் உன் தேகம்!
தொட்டுக் காணு மின்பமென!
தோன்றச் சிந்தை வாடுகிறேன்!
வட்டச் சந்திரன் உன்வதனம்!
வடிவம் காட்டி எனைக்கொல்லும்!
சிட்டுக் குருவி ஜோடிகளும்!
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்!
வெட்டிக் கொல்லும் வகையாக!
வேதனை யாகிக் கொல்லுதமா!
நின்னை பிரிந்து நானொருவன்!
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ!
கண்ணை விழித்துக் காண்பவளே !
காதலன் வருவேன் காத்திரடி

விதி விழுங்கிய இன்பம்

தியத்தலாவ எச். எப். ரிஸ்னா
நிலவெரியும் ஓர் இரவில்!
விதியென்ற பாம்பு!
முழுமையாய் விழுங்கிற்று!
என் வாழ்நாள் இன்பத்தை!!
கூரான கத்திரி முனைகளுக்குள்!
அகப்பட்டது போல்...!
என் சந்தோஷ காகிதமும்!
சதாவும்!
நறுக்கி அரியப் பட்ட படியே!!
அன்புக்கும்!
பொய்மைக்குமிடையில்!
அகப் பட்டு விட்ட!
பாவம் செய்த ஜீவன் நான்!!
பெரும் கோபம் வருகிறது!
எனை பந்தாடிப் பார்க்கிற!
அந்த ஆண்டவனிடம்!!
நேசம் என்ற முகமூடி அணிந்து!
நெருப்பு வார்த்தை கக்கும்!
எத்தனை கயவர்களை!
கண்டவள் நான்?!
ஒரு நாளும்!
அன்பு கிடையாது என்றும்!
கவலைகள் உடையாது என்றும்!
தலை கீழாய் எழுதப் பட்டிருக்குமோ!
என் தலையெழுத்து?!
என் மனசாட்சி!
உயிர் விட்டதன் காரணம்....!
என் மேல் நானே கொள்கிற!
கழிவிரக்கம் தாளாமல் தான்

ஆறாவது விரல்

நீதீ
கவிஆக்கம்: நீ “ தீ ”!
அவ்வப்போது முளைத்து!
எரிந்துபோன!
சாம்பலாய் உதிர்ந்தாலும்!
என்னை!
முழுமையாய்!
எரிக்கும் வரை!
தினமும்!
தினமும்!
புகையின் நடுவில்!
புதிதாய் முளைக்கும்....!
கவிஆக்கம்: நீ “ தீ ”!
தொடர்புக்கு: 006582377006

புதுவருடத்தை நோக்கி

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன் !
!
புத்தம் புதியதோர் !
புதுவருடத்தை நோக்கி !
புதியாய் மேற்கொள்ளும் !
புதுப்புனல் போன்றதோர் !
பயணம் !
சித்திரைத் திருமகள் !
இத்தரை மீது போர்த்தும் !
புற்தரை போன்றதோர் !
பொற்திரைக் கம்பளம் !
நிஜங்களைத் தேடி !
நிழல்களை மிதித்து !
நீயும் நானும் தேடிய !
நிலையற்ற முடிவுகள் !
கடந்து போகட்டும் !
கரைந்து மறையட்டும் !
கனிந்து வருவது புதிய !
கச்சிதமான வருடம் !
சூறாவளியாக தென்றல் !
சூறையாடிய கடற்கோள் !
வனியமான வாழ்க்கை !
சுடராகிப் போகட்டும் !
புரட்சிக் கவி பாரதி !
புனைந்த கவிதைகளை !
புதிய வேதமாய்க் கொண்ட !
புனர்ஜென்ங்கள் மலரட்டும் !
தமிழின் தனயர் கண்டேன் !
தழைத்து எழுகின்ற நிகழ்வு !
தரணியில் எனக்கு என்றும் !
தருவது இன்பம் தானே !
புதுவருடத்தை நோக்கி !
புலரும் பொழுதினிலே !
பொங்கும் உள்ளத்துடன் !
போகின்றேன் பயணமே

காணாமல் போகிறார்கள்

பட்டுக்கோட்டை தமிழ்மதி
காணாமல் போகிறார்கள்!
நின்ற இடம் விட்டு!
நிலை குலைந்தோடுகிறார்கள்.!
கைகால் இழக்கிறார்கள்!
கண்டதுண்டமாகிறார்கள்.!
கொல்லப்பட்டவர்களை!
காணாமல் போனார்கள் என!
கணக்குத் தருகிறார்கள்.!
முன்னகர்தல் பின்னகர்தல்!
பதுங்கல் பாய்ச்சலென!
எதுவும் பார்க்காமல்!
போரின் வெள்ளம்!
புரட்டிக் கொண்டோடுகிறது!
புகலிடமில்லா ஓரிடம்.!
முகவரிகள்!
முகங்களை தேடுகின்றன.!
காணாமல் போனவர்களிடம்!
கையெழுத்து வாங்கிப்போய்!
அனுப்பியவரிடம் காட்ட!
அஞ்சலகங்களில் மூட்டை மூட்டையாய்!
பதிவுக் கடிதங்கள்.!
காணாமல் போகிறார்கள்!
இனம் அழிக்கும்!
எதிரி படையில் சேர்ந்த வீரர்கள்!
களத்தில்!
காணாமல் போகிறார்கள்.!
-பட்டுக்கோட்டை தமிழ்மதி!
சிங்கப்பூர்

உறைவு

அசரீரி
நாலே வருடங்கள் புணர்ந்ததும்!
ஒரு பிள்ளை மட்டுமே பெற்றுக் கொண்டதுமான!
யோனியையுடையவளாய்!
பெருமூச்சையும் சேர்த்தே!
நீள் கபுறுக்குள் அடக்கிவிட்டவள்!
அவளின் இளமையைப் பற்றியோ!
பற்றியெரிந்த ஏக்கங்கள் பற்றியோ!
பீறிட்டு வரப்பார்த்த விரகம் பற்றியோ!
குஞ்சி விறைக்காத காலம்!
எதையுமே பேசாமல் நகர்ந்திற்று!
இப்போது வருவதும் நின்றுபோயிருக்கும் அவளுக்கு!
எல்லா உணர்ச்சிகளும் சேர்த்துத்தான்!
மலைகளென உருவகம் செய்தெழுதிய!
அவளின் விதவைத் துயர் பற்றிய காலத்துக் கவிதையெல்லாம் பிழையோவென்று தோன்றுகிறது!
இக்கணம்!
அதையும் சுமந்து கடந்து விட்ட வலியும் திடமும்!
அவள் கொண்டிருக்கும் நியாயத்தால்!
இருபது வயதில் பிள்ளையிருக்கும் அவளின்!
உம்மாத்தனத்தின் புனிதத்திலிருந்தே!
வரலாறு அவள் பற்றி முதலாவதாகக்!
கதைக்கத் தொடங்கலாமினி!
அப்படியும் இல்லாமலும் போகலாம்!
ஆயினும்!
பெரும் பாறைக்கனத்துடன்!
துணியோடு உறைந்து தீர்ந்த அவளின்!
சுக்கிலத் துளிகளுக்கு நியாயம் தேடி!
அவர்கள் வருவார்கள்!
நீ முக்கியமாகத் தெரிந்து கொள்!
அவர்களுக்காய் சூரியன் கலந்த இந்திரியம்!
செலுத்தப்பட்டிருக்கும்!
!
-அசரீரி

சிலந்தி வலையில் சிறைபட்ட சிங்கங்கள்!

பால்ராஜன் ராஜ்குமார்
நாங்கள் யார்?!
குழந்தைகளா ?!
தொழிலாளர்களா?, இல்லை!
குழந்தைத் தொழிலாளிகள்!
நாங்கள்......!
பூவாகாமலே!
புதைக்கப்பட்ட!
மொட்டுக்கள்!
நாங்கள்......!
துவக்கத்தையே!
தொலைத்த!
முடிவுகள்!
நாங்கள்......!
முகவுரையிலேயே!
முடிவுரையாய்!
போனவர்கள்!
நாங்கள்......!
கல் உடைக்கும்!
செதுக்கப்படாத!
சிற்பங்கள்!
நாங்கள்......!
சிலந்தி வலையில்!
சிறை பிடிக்கபட்ட!
இளம் சிங்கங்கள்!
நாங்கள்......!
ஐம்பதிலும் வளைவோம்!
சம்மட்டி அடித்து!
ஐந்திலேயே வளைந்துவிட்டோமே!
நாங்கள்......!
இந்தியாவின் எதிர்கால தூண்கள்!
இப்போதைய வேலை!
செங்கல் சூளையில்!
நாங்கள்......!
மத்தாப்பு தொழிற்சாலையில்!
புஸ்வாணம் ஆகிபோன!
எதிர்கால நட்சத்திரங்கள்!
நாங்கள்......!
இறக்கைகள் இருப்பதையே!
இருட்டடிப்பு செய்யப்பட்ட!
பறவைக் குஞ்சுகள்!
நாங்கள்......!
கிழக்கிலேயே!
அஸ்தமிக்கும்!
சூரியன்கள்!
நாங்கள்......!
தீப்பெட்டி தொழிற்சாலையில்!
கருகிப்போன!
தீக்குச்சிகள்!
நாங்கள்......!
இந்நாட்டு மன்னர்களாம்!
மாடு மேய்க்கும்!
மாயாண்டியுமா ?!
எங்கள்!
இந்தியாவின் எதிர்காலம்!
இளைஞர்கள் கையிலாம்!
பூ விற்கும் சிறுமி கைலோ பூக்கூடை!
நாங்கள்......!
சுண்டல் விற்கும்போது!
இளமைப் பருவமே!
சுனாமியால் சுருண்டுவிடும்!
நாங்கள்......!
சாலையில் 'குழந்தைகள் ரைம்ஸ்'!
புத்தகம் விற்கும்!
பள்ளிசெல்லா குழந்தைகள்!
நாங்கள்......!
திருவிழாவில் தொலைந்ததுபோல்!
திக்கு தெரியாமல்!
தொழிற்சாலையில்!
நாங்கள்......!
குழந்தை என்ற!
முகவரி இழந்த!
முகங்கள்!
நாங்கள்......!
கொண்டாட்டங்கள் கேட்கவில்லை!
கூடங்கள்!
பள்ளிகூடங்கள் தான்!
அப்பா......!
பள்ளிகூடம் செல்லும்!
பாதை மட்டும்!
காட்டேன் எனக்கு!
அம்மா.....!
பட்டரை சுத்தியலைவிட!
பாடப்புத்த்கம்!
கனமானதா ?!
அண்ணா...!
சட்டைக்கு காஜா!
போட்டது போதும்!
பள்ளிச் சீறுடை வங்கித்தா எனக்கு!
அக்கா....!
சிலேட்டும் பலப்பமும்!
வாங்கி கொடேன்!
உளிகள் சுமந்து கை வலிக்கிறது!
எங்களுக்கு வேண்டாம்!
மே தினக் கொண்டாட்டம்!
எங்களை குழந்தைகளாகவே!
இருக்க விடுங்கள்!
கைமட்டும் கொடுங்கள்!
எங்கள் கால்கள்!
வாழ்கையின் அடுத்த!
அடி எடுத்து வைக்க !!

கால்கள் .. பதுங்குகுழி

சங்கைத்தீபன்
கால்கள்.. பதுங்குகுழி !
01.!
கால்கள் !
--------------!
அப்போது பிறந்த!
கால்களை அப்பி நிற்கிறது!
செம்பருத்தி!
வண்டில்!
காலுடைந்து கிடக்கிறது!
வண்டில்!
உறுட்டிய கால்கள்!
வயசுக்கு விளைஞ்சகால்கள்!
கிளைஞ்சு நிற்கிறது!
பத்திரிகை!
அம்மி மிதித்த கால்கள்!
தனித்து!
விம்மி நிற்கிறது!
அம்மி.!
உடைந்தே போகும்கால்கள்!
உடைந்ததிண்ணையில்!
உடைந்து.!
கால் நூற்றாண்டைக்கடந்த!
இந்தப்போர்-பல!
கால் குடைந்து நூறைக்கடந்து!
!
02.!
பதுங்குகுழி !
----------------!
படைக்கலம் பயந்து!
அடைக்கலம் தந்த-ஆறு!
படைத்தலம் என்றான் ஒருவன்!
மெழுகுவர்த்தி!
உருகும் பிரார்த்தனை!
தேவாலயம் என்றான் ஒருவன்!
பிரசவம் முடித்து!
பிள்ளை முகம்பார்த்து!
வைத்தியசாலை என்றான் ஒருவன்!
மண்ணுப்போரில் மண்ணில் இருக்கும்!
மண்ணாய்ப்போவோரின்!
கோட்டை என்றான் ஒருவன்!
சத்தமாய்ப்போடு மொத்தமாய் அள்ளும்!
சவக்குழியே- இவர்கள்!
பதுங்குகுழி என்றான் அரசாங்கம்

என் வாழ்க்கை

ப்ரியன்
வரைகின்ற !
பொழுதுகளில் !
மீறி சிந்திவிடுகின்ற !
ஒரு வர்ணத்துளியாகத்தான் !
வந்தாய் நீ !
என் வாழ்வில்! !
விட்டில் பூச்சியினுடையதாய் !
இருந்த வாழ்க்கை !
வண்ணத்துப் பூச்சியினுடையதாய் !
மாறியது என்னவோ உண்மை! !
- ப்ரியன்