தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காணாமல் போன காதல்

மன்னார் எம். ஷிபான்
வீணாய்ப்போன பொழுதொன்றில்!
காணாமல் போயிற்றென்!
காதல்…!!
மனம்தான் பெரிதென்று!
காதலில் பிதற்றியவள்!
மயக்கம் தெளிந்தவுடன்!
பணத்தின் மகிமை சொன்னாள்.!
உள்ளம் ஒத்தென்ன!
உணர்வுகள் ஒத்தென்ன!
கலைத்துவக் கண்களால்!
காதலைப் பார்த்தென்ன!
புழுதி அடங்கியதும்!
தெரிகின்ற கழுதைபோல்!
காதல் கழிந்தபின்தான்!
சகலமும் புரிகிறது.!
தூளாகிப் போகுமென்று தெரிந்தும்!
பாழாய்ப்போன மனம்!
மணல்கோட்டை கட்டத்தானே!
மல்லுக்கு நிற்கிறது.!
உன்மீது குற்றமில்லை,!
சராசரிக் காதலியாய்!
மன்னியுங்கள்,!
மறங்களென்றாய்.!
உன்மீது குற்றமில்லை.!
வீணாய்ப்போன பொழுதொன்றில்!
காணாமல் போயிற்றென்!
காதல்…

அதிசயமான நதி நீ

ப்ரியன்
;!
கலந்துவிட்ட பின்னும்!
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்!
காட்டாற்றின் வெள்ளமாக!!
*!
ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்!
வான் நிலவு!!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்!
மண்நிலவு நீ!!
*!
எந்த செடியில்!
மலர்ந்த பூ!
நீ!!
*!
உன்னால் கிழிக்கப்படுகின்றன!
என் காயங்கள்!
வாசிக்கப்படுகின்றன அவையே!
கவிதைகளாய்!!
*!
உன் கண் இடறி!
காதல் கடலில் விழுந்துவிட்ட!
குருடன் நான்!!
*!
ஒடிந்து கிடந்த!
புல்லாங்குழலெடுத்து!
மகுடி ஊதினேன்!!
நீயோ!
இசையாக வழிகிறாய்!!
!
- ப்ரியன்

மீண்டும் வேண்டும் ஓர் உயிர்ப்பு

s.உமா
கருவாய் உன்னுள்!
நான் கலந்தபோது!
அந்த!
இருட்டுச் சிறையில்!
இருந்த சுதந்திரம்!
வெளிச்ச வெளியில்!
வெட்டப்பட்ட சிறகுகளாய்...!
மடிகிடந்து!
மார்பணைத்து!
கழுத்து வளைவில்!
முகம் புதைத்து!
கண்ணங்குழிய!
கண்ட என் கனவு!
பஞ்சு மெத்தை தலையணையில்!
எட்டாகனியாய்!
வட்ட மாத்திரைக்குள்...!
அறியா பருவத்தில்!
உணரா இனிமைகள்!
காலம் கடந்து!
தூங்கா என்!
கண்களில்!
எழுதா கவிதைகளாய்...!
கனவு மெய்ப்பட!
வேண்டும்!
ஓர் உயிர்ப்பு!
உன்னுள் கருவாய்!
மறுபடியும்..!
உமா

நான் இப்படித்தான்

பாஷா
சுவாரஸ்யமற்றுதான் போய்விட்டது !
காற்றில் மகரந்தமில்லை !
உனது வெறுப்பு !
எனது வேர்களை !
கருக்கிவிட்டது. !
இதழ்கள் இழந்த ஒற்றை ரோஜாவாய் !
காற்றில் ஆடி !
கடைசிமுறையாக உன் !
கருனணதுளி பருக காத்திருக்கிறேன்! !
உன் தோழி,உன் மரப்பாச்சிபொம்மை !
உன் கவிதையென !
உனக்கு பிரியமானவைகளில் !
உன்னையே கண்டேன். !
விட்டுவிடு என்றா சொன்னாய் !
சொன்ன கணத்தில் !
என் செல்களிலெல்லாம் பொதிந்த நீ !
சிதறி போகிறாய்...... !
சிதறல் சேகரிப்பதில் சிந்தைபோகுதன்றி !
சீ.....போ என்று உதறிப்போகுதில்லை !
நான் இப்படித்தான்

கனவு தேவதை.. இலையுதிர்.. மண்

ப . ஜெயபால்
கனவு தேவதை.. இலையுதிர் காலம்.. மண் வாசனை!
01.!
கனவு தேவதை !
----------------------!
தூங்க எத்தனிக்கும் நிமிடம் !
மூளையிலிருந்து ஒரு காதல் கவிதை !
வந்து விழுந்தது !
படிக்க நினைத்து!
விரித்துப் பார்கையில்!
குடைப் பிடித்துச் சென்ற !
தேவதை ஒருவளின்!
பாதங்கள் மட்டுமே பதிந்திருந்தது ....!
02.!
இலையுதிர் காலம் !
--------------------------!
ஒரு வேனிற்கால வேளையில்!
ஏனோ!
காற்றுடனான உரையாடலை!
முறித்துக்கொண்டிருந்தன!
இலைகள் ........ !
03.!
மண் வாசனை !
-------------------!
மழை!
மண்ணோடு பேசும்!
மௌனமொழி

தேடல் வலி

த.சு.மணியம்
முற்றத்துப் பூவரசில் சேவலொன்று!
முதற்சாமம் கூவுகுதே துயில் மறந்து!
பற்றைகளில் சலசலப்பும் கேட்கவில்லை!
பாவியரைக் காக்கவென்றா உறங்குதில்லை!
சுற்றத்து உறவுகளும் விலகத் தூரம்!
சுதந்திரமாய்க் கூவிடவோ துணிவுமற்று!
கற்றவைகள் கடந்தவைகள் மனத்தில் உந்த!
கண் விழித்து மனத்திருத்திக் கூவுதங்கே.!
தொலைக்காடசிப் பெட்டிகளின் தொடரும் நீள!
தொல்லை தரும் சேவையெனப் புரிந்தும் நாளும்!
விலை மதிக்கா நேரமதை ஒதுக்கி ஓய்ந்து!
விடிவதையும் மறந்தபடி கோழி தூங்க!
கலைத்துவிட்ட தூக்கமுடன் சேவல் எல்லாம்!
கரையாமல் கூவாமல் எழுந்து ஓடி!
மலை போலப் பணம் சேர்க்க ஊண் மறந்து!
பாதையெது என்றறியாப் பறக்குதிங்கே.!
ஆறறிவு படைத்தவராம் சொல்லும் மாக்கள்!
அல்லலுறும் தம் சொந்தம் நிலை மறந்து!
தேறிவரும் செல்வமதில் முழுதே மூழ்க!
தெருவினிலே தம் பொழதைச் செலவும் செய்ய!
முறித்துவிட்ட உறவினைப்போல் அவரின் செல்வம்!
முரண்டுபட்ட சங்கமத்தில் தேடிச்சேர!
பறித்ததுவே அமைதியினைக் குடும்பம்தோறும்!
பார்த்திருக்கப் பொறுக்குதில்லை அகதிவாழ்வும்.!
!
த.சு.மணியம்

வாழ்வும் ஒரு காதல

நவஜோதி ஜோகரட்னம்
்!
--------------------------------------!
இந்த மண்ணுக்குள்!
ரகசியங்கள் புதுமைகள் !
மறைந்து கிடப்பதுபோல்!
எனக்குள்ளும் எத்தனை எத்தனையோ…!
கணங்கள் தோறும்!
என்னுள் கவிதைகள் திரள்கின்றன…!
கவிந்து மிதந்து செல்லும்!
மேகத் திரள்கள்!
நிலவருகே வரும்போது!
ஒளிமயமாகவும்!
விலகிச் செல்லும்போது!
கரிய நிழலாகவும்!
ஜாலம் செய்கிறதே! !
அது அன்றைய நிலவா?!
அதே நிலவுதானே இன்றும்…!
அந்த நிலவு கறள் படிந்து!
நினைவை நனைக்கிறது…!
இரக்கமற்ற பூமியில்!
தினசரி நடக்கிறது போர்…!
நிதம் போகும் உடல்களின் பயணங்கள்…!
மண்ணில் பாய்கின்ற சோக அருவிகள்…!
துக்கங்களை பூசிக்கொள்கின்ற முகங்கள்…!
எனது ராகம் குழைந்து!
குரல் இழைக்கையிலே நீ!
அசிங்கத்தைப் பார்க்கிறமாதிரி !
பெண் என்னை!
முகத்தைச் சுளிச்சுக்கொண்டு !
முறைச்சுப் பார்க்கிறாய்!
பயந்து நடுங்கி!
சுருங்கும் என் முகம்…!
என் மென் உடலில் !
வீரியத்தை வரவழைக்கின்றன…!
வாழ்க்கை குரூரமானது என!
திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டாலும்!
அதன் மீதுள்ள காதலை !
என்னால் உதறமுடியவில்லையே! !
!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
8.7.2008

கவிதையின் காதல்

கீதையின் நாயகன்
விடியலில் வேகம் தெரிகிறது!
இரவு நீளமாய் இருக்கிறது !
நிலவின் பொறுமை புரிகிறது!
கனவுகளின் முகவரி தெரிகிறது!
தூக்கம் தானாய் தொலைகிறது!
தென்றலின் அமைதி புரிகிறது!
கண்ணாடியின் அர்த்தம் விளங்கியது!
அட , எனக்கும் கவிதை வருகிறதே !!
ஓ ... என்னுள் காதல் பூத்துள்ளதா....?!!
-கீதையின் நாயகன்

கட்டுமான அடுக்குகள்

மாதங்கி
பிறந்தநாள் பரிசாக!
100 கட்டுமான அடுக்குகள் உள்ள பெட்டி!
மினுக்கும் உறையை!
ஆவலோடு பிரித்தான்!
அட்டையிலேயே ராக்கெட் விமானம்!
கணினி படம் செய்முறை உள்ளே!
எதாவது செய்வோமா அப்பா!
ராக்கெட் செய்யவோமா!
அவனுக்குப் பிடிக்கவில்லை!
விமானமும்தான்.!
இயந்திர மனிதன் செய்தேன்!
உதட்டைப் பிதுக்கினான்!
உலங்கு வானூர்தி!
ஊ ஹ¥ம்!
!
பால் காய்ச்சி ஆறவைத்துவிட்டு!
வந்தபோது!
பறவை வீடொன்று குச்சி உதவியுடன்!
கதவிடுக்கில்!
ஊசலாடிக்கொண்டிருந்தது!
அவன் அம்மா!
வந்தபின்னும் !
அடுக்குகள் விழாதிருக்க!
வேண்டும்!
என்ற விரதம் !
பூண்டவாறு

நீ முதல் நான் வரை

சகாரா
வெற்றி பெற !
வாழ்த்துகிறேன் !
வெளிப்படையாய் !
கைகுலுக்குகிறேன் !
வெற்றிபெற்று வருகையிலோ !
உள்ளுக்குள் பொருமுகிறேன் !
உதட்டளவில் பாராட்டுகிறேன் !
என்னிலும் ஒருபடி !
ஏறிவிடாதபடி !
எச்சரிக்கையாய் இருக்கிறேன் !
முட்டி மோதி !
மூச்சுத் திணறுகையில் !
குழிபறிக்க வழிபார்க்கிறேன் !
முயன்று முன்செல்கையில் !
குறிவைக்க வெறி கொள்கிறேன் !
எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் !
இந்த மனித நாடகத்தில் !
என் பாத்திரம் எம்மாத்திரம் ? !
அதைமட்டும் ஏனோ !
அவ்வப்போது மறந்துவிடுகிறேன். !
சகாரா !
நன்றி :: !
”-நதிக்கரையில் தொலைந்த மணல்” !
வெளியீடு : பயணம் புதிது !
புலியூர் 639 114 !
கரூர் வட்டம் !
தொலைபேசி :: 04324 - 50292