தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஏழை வீட்டுச் செல்லம் நான்

கோகுலன். ஈழம்
ஏழை வீட்டுச்!
செல்லம் நான்.!
ஆசைப்பட்ட இடத்திற்க்கு!
அழைத்துப் போனதில்லை!
என்னை.!
ஒற்றை!
குழந்தை என்பதால்!
உணர்வு பின்னிய!
பாதுகாப்பு எனக்கு.!
அமாவாசைப்!
பின்னிராப்பொழுதில்!
அழுங்குப்பிடியில்!
இழுத்துச்செல்கிறார்கள்.!
நான்!
ஆசைப்பட்ட!
கிளிநொச்சி!
போகிறோம்!
நாங்கள் மட்டுமில்ல!
ஊரே ஓடி வருகுது.!
அமாவாசை இருட்டில்!
அக்கினித்துகழ்கள்!
எறிதலும்!
எரிதலுமாய்!
வீழ்ந்து சிதற.!
ஓடிவந்த தெருவை!
உயிரில்லா!
உறவுகள்!
ஊர்ப்பிணங்களாய்!
சிதறிப் போயின.!
எரிகற்களாய்!
வீழ்கின்றபோது!
நூறுபேராய் இறந்து!
பத்துப்பேராய்!
எழுகின்றோம்.!
இரண்டு பேர்மீது!
இருபதுபேர்!
ஏறி நடக்கிறார்கள்!
சைனாக்காரன் குண்டில்!
அப்பாவை இழந்தேன்!
இரசிய்க்கரன் குண்டில்!
அம்மாவை இழந்தேன்!
நான்...!
இந்தியக்காரன் குண்டில்!
முடமாகிப்போனேன்

உதட்டு வரிகள்

ரா. சொர்ண குமார்
உதட்டு வரிகள்!
கவிதைக்கு!
எத்தனை வரிகள்!
கட்டாயம் இரூக்க வேண்டும் ?!
கேள்விக்கு!
பதில் தெரியவில்லை...!
எண்ணிக்கொள்ளவா!
உன் உதட்டு வரிகளை ?!

என் டெஸ்க்டாப்

துளசி
கொஞ்ச நாள் சேகுவேரா!
அழகு தொப்பியும்!
குறுந்தாடியும்!
கொள்ளை கொண்ட நாள்கள் அவை!
அப்புறம் மாவோ!
கிறுகிறுக்க வைத்தவை!
அழுக்குக் காக்கியும்!
கூர்மைக் கண்ணும்!
கீழை மார்க்சியமும்.!
சிறிது நாள் மார்க்குவெஸ்!
சில நாள்கள் குந்தர் க்ராஸ்!
அப்புறம் சட்டென!
ஒரு நாள் பாரதி!
வீரக்கொம்பூன்றி!
செல்லச் செல்லம்மாளோடு.!
அன்னையும் அரவிந்தரும்!
அலங்கரித்தது!
பின்னொரு நாள்.!
சில நாள் சாமி!
சில நாள் கோயில்!
சில நாள் குடும்பம்!
அலங்கரித்த எவரும்!
அதிக நாள் நீடித்ததில்லை.!
எப்போதும்போல்!
சுகமாய் இருக்கிறது!
சுத்தமாய் இருக்கும்!
டெஸ்க்டாப்

என் இதயம் ஒரு புல்லாங்குழல்

ராம்ப்ரசாத், சென்னை
கண்டம் விட்டு கண்டம் பாயும்!
ஏவுகணைகளை ஓரவிழிப்பார்வைகளாக்கி!
என் மேல் செலுத்துவாய்,!
பார்த்துக்கொண்டிருக்க நான் என்ன!
சோதனைதளமா!!!!
பெண்ணே,!
நீ பறித்துச்சூட மட்டுமே!
மலரச்செய்கிறேன் எனக்குள்!
காதலை...!
உன் பார்வை துளைத்தெடுத்த!
என் இதயத்தில் வாசித்துவிடு!
காதல் இசை...!
உன் நினைவு உதடுகள்!
வாரிக்கும் புல்லாங்குழலாகவாவது!
அது இருந்துவிட்டுப்போகட்டும்....!
- ராம்ப்ரசாத், சென்னை

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்

தமிழ்நம்பி
செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்!
சிறைக்குச் சென்று!
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்!
நனிவாய்ந் தாரே!!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென!
இயம்பி வந்தார்!!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.!
படத்தில், தாளில்!!
கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி!
களிக்கத்தோன்றி!
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்!
கடுகிச் சென்றார்!!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்!
ஆனார் பின்னர்த்!
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்!
தேர்ந்து சென்றார்!!
!
தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்!
திமிர்கொள் ஆட்சிச்!
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;!
சற்றும் சோரா(து)!
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்!
கதிக நாட்கள்!!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!!
சிறப்ப றிந்தார்!!
தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்!
தனியே தோற்றி!
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்!
றியற்றுங் காலைத்!
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்!
தனிய ராக!!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு!
தொகுதி என்றே!!
செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்!
செய்வீர் இன்னே!!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி!
உயர்வைச் செய்வீர்!!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!!
தகைமை காப்பீர்!!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்!
எழுதி பேசி! !
இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி!
இணையி லாதாய்!!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு!
ஏழ்ந்த போது!
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!!
சொல்வ துண்மை!!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்!
சிறையுஞ் சென்றார்!!
பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட!
பெரிய மீசை!
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி!
சிலவும் மீட்டார்!!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்!
சென்ற போதும்!
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை!
ஓம்பக் கண்டோம்!!
!
பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு!
பொலிசெங் கோட்டை!
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி!
திறத்தில் மூண்டு!
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே!
பீடிற் சென்றே!
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்!
சார்பு தந்தார்!!
நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்!
நுட்ப மாக!!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்!
எடுப்பாய்ச் சொல்வார்!!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர் !
சறுக்கல் ஆகும்!!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்!
அகத்தில் கொள்வோம்!!
!
(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)

இழத்தல் இழத்தலாய்

சகாரா
எப்படியும் ஒரு கை பார்த்துவிடுவதென்று !
முட்டி மோதி முயன்றாயிற்று இதுவரை !
எதுவும் முடியவில்லை !
எதா£¢த்தமாய் !
தீமூட்ட வருவார்களென்று !
பந்தங்ளைத் தயார்ப்படுத்தினோம்!
இதுவரை !
மூட்ட யாருமில்லை !
தீயாய் !
இதுமட்டுந்தான் இதுமட்டுந்தானென்று !
பொய்மேல் பொய்யாய்ச் சொல்லும்படியாயிற்று !
இதுவரை !
எதுவுமில்லை வாழ்வில் !
மெய்யாய் !
பெரிய்ய சந்தோசத்தை எதிர்பார்த்து!
சின்னச்சின்ன சந்தோசங்களையெல்லாம் !
உதறும்படியாயிற்று இதுவரை !
எந்தச் சந்தோசமுமில்லை !
பெரிதாய்!
!
நன்றி :: !
”-நதிக்கரையில் தொலைந்த மணல்” !
வெளியீடு : பயணம் புதிது !
புலியூர் 639 114 !
கரூர் வட்டம் !
தொலைபேசி :: 04324 - 50292

தாய்மை

ஷீ-நிசி
மறந்தே போனதடா!!!
தலை சுற்றும் வாந்தியும்!
தள்ளாடும் மயக்கங்களுமாய்;!
நான் கடத்தின!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
விரும்பிய உணவுகள்!
எதிரிலே இருந்தும்!
உனக்கு ஒவ்வாது என்பதால்!
உண்ண முடியாத!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நேராக படுத்தால்!
உன்க்கு ஆகாது என்பதால்!
ஒருக்களித்து படுத்தே!
ஒரு பக்கம் முழுவதும்!
வலியினைப் பெற்ற!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தாய்மை அடைந்ததில்!
பயணம் செய்யக்கூடாது -என்று!
என் தாய்வீடு செல்ல முடியாமல்!
பரிதவித்த!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
தலைவலி, காய்ச்சல்!
எது வந்தாலும்!
மாத்திரைகள் கூடாது என்பதால்!
நோயோடு பழகி குணமான!
அந்த நாட்கள்!!
மறந்தே போனதடா!!!
நீ இந்த உலகை!
காண விரும்பி அவதரித்த -அந்த!
வேதனை நிறைந்த!
அந்த நிமிடங்கள்!
மறந்தே போனதடா!!!
என் எல்லா வலிகளும்!
உன் புனிதமான!
இந்தச் சிரிப்பினால்...!
ஷீ-நிசி

ஆசையாகத்தானிருக்கிறது

ஷீ-நிசி
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசைகளை எல்லாம்!
உன்னிடம் சொல்லிவிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
விடியல் தலை காட்டும் வரை!
மடியில் தலை சாய்த்துக்கொண்டு;!
நொடியும் இடைவெளியின்றி,!
பேசிக்கொண்டிருக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
மங்கிய நிலவொளியில்!
பொங்கிய சாதத்தை!
இங்கிதம் பார்க்காமல்ஊட்டிவிட;!
ஆசையாகத்தானிருக்கிறது!!
கண்ணிறம் கருப்பல்லவா!!
செந்நிறம் உதடல்லவா!!!
பொன்னிறம் மேனியல்லவா!!!!
உன்னைப் பாடிவிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
சோர்வோடு நீ இருக்கும்போது!
மார்போடு அனைத்துக்கொண்டு;!
உயிரோடு கலந்த உன்னைப்!
பரிவொடு விசாரிக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
பின்னால் உன்னை அமரவைத்து!
முன்னால் போகும் வாகனங்களை!
என்னால் முடிந்த மட்டும்!
விரட்டிப் பிடிக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
குளித்து விட்டு நீ தலை துவட்ட!
தௌ¤த்து விழும் அந்த துளியில்!
சிலிர்த்துக்கொண்டு நான் எழுந்து,!
அப்படியே உன்னைக் கட்டிக்கொள்ள!
ஆசையாகத்தானிருக்கிறது!!
காதருகில் வைத்த அலாரம்!
12 மணி இரவில் கதற!
அலற லோடு நீ எழும்!
அந்த தருணத்தில்!
பிறந்த நாள் வாழ்த்துக் கூறி,!
முத்தமிட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
நகத்தை நீ கடிக்கும்போது!
நானும் அப்படியே செய்து!
முகத்தை நீ திருப்பும்போது!
நானும் அப்படியே செய்து!
கோபத்தில் இருக்கும்!
உன்னை மேலும் கோபமூட்ட!
ஆசையாகத்தானிருக்கிறது!!
நீ சிரிக்கின்றபோது!
உனக்கு பின்பாகவும்;!
நீ அழுகின்றபோது!
உனக்கு முன்பாகவும்;!
நீ நடக்கின்றபோது!
உனக்கு பக்கமாகவும்!
என்றுமே காவலனாயிருக்க!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஆசைகள் எல்லாம்!
உன்னுடன் நடந்துவிட,!
ஆசையாகத்தானிருக்கிறது!!
ஷீ-நிசி

வீடு வாடகைக்கு

ரசிகவ் ஞானியார்
அங்குமிங்கும் அலைந்து திரிந்து,!
பொருட்களின் இடங்கள் மாற்றி,!
அடுத்தடுத்து அழுகை சிரிப்பு,!
எதுவும் தனக்குரியதென அடம்பிடித்தல்!!
குழந்தைகள் ...!
இல்லாத வீடும்,!
காதல் ...!
இல்லாத இதயமும்,!
மிகவும் பரிதாபத்திற்குரியது!!
!
-ரசிகவ் ஞானியார்
-- !
K.Gnaniyar,!
Software Developer,!
TransIT mPower Labs,!
Bangalore

இவ்வளவுதான் உலகம் இவ்வளவுதான்

சத்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்!
கையளவு மண்ணெடுத்து!
கலந்து கொஞ்சம் நீருற்றி!
பிசைந்தெடுத்த களிமண்ணில்!
பிடித்து வைத்த மனிதபொம்மைகள்!
நினைவுகளை விற்று விட்டு!
நீதிதனை விட்டு விட்டு!
நெஞ்சம் நிறைய அள்ளி!
வஞ்சம் கொண்ட பூமியிது!
கனிவு கொண்ட உள்ளங்களைக்!
காயப்படுத்தி பார்க்க எண்ணி!
கயமை எனும் சாயம் பூசி!
கலந்துறவாடும் சொந்தங்கள்!
தர்மம் என்னும் எடைதனை!
தாராசு எனும் இதயத்தில்!
நிறுத்துப் பார்த்து வாழ்ந்திடும்!
நியாயமான உள்ளங்கள் பல!
நிம்மதி என்னும் அமைதியை!
நிழலினுள் தொலைத்திட்டு!
நிஜம் கொடுத்த வேதனையால்!
நீராக கண்களால் உகுக்கின்றார்!
போனால் போகட்டும் போடா!
பூமியே பாவிகள் இராஜ்ஜியம்!
பாவியர் உறவுகள் இனியும்!
பாதிக்க வேண்டாம் எமையே!
இவ்வளவுதான் உலகம் மனிதா!
இவ்வளவேதான் உலகம் என!
இதயத்தை ஆற்றிக் கொஞ்சம்!
இமைகளை இன்றாவது மூடிவிடு