தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஓடு மீன் ஓட

இப்னு ஹம்துன்
ஆழ்ந்தும்...!
ஒருமித்த மனதோடும்....!
என்னுள்ளும் தேடிப்பார்க்கிறேன்!
இன்னும் பணம்...!
இன்னும் பணம்... என!
எண்ணும் முதலாளிகளைப்போல!!
பறந்துவரும்!
பட்டாம்பூச்சியைப் போல!
வண்ணங்களாலும்!
வாசனைகளாலும்!
ஈர்க்கப்படவே செய்கிறேன்.!
காணும்போதெல்லாம்!
காதலை எதிர்பார்க்கும்!
விடலையைப் போல்!
கண்ணில் படுபவற்றை!
நிராகரிக்காமல்!
நிறுத்துப்பார்க்கிறேன்.!
பாகுபாடில்லாமல்!
ஏற்றுக்கொள்கிறேன் நதிகளை!
ஒரு கடலைப்போல்!!
என்றாலும்...!
எப்போதாவது தான்!
அகப்படுகின்றன!
எதிர்பார்க்கும் விதத்தில்!
கவிதைகள்!!
!
-- !
H.FAKHRUDEEN!
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)!
+966 050 7891953

இரண்டு கவிதைகள்

சுப்பிரமணியன் ரமேஸ்
கவிதை ::1 !
நான் யாருக்கேனும் எழுதும் !
வரிகளிலும் உனக்கான !
வார்த்தைகள் இருக்கும் !
நீ யாருக்கேனும் இசைக்கும் !
கானத்திலும் எனக்கான !
இதமிருக்கும் !
அடையாளம் காணும் !
ஆழ் பரப்பில் !
அர்த்தப்படுகின்றன எல்லா வரிகளும் !
எல்லோருக்குமான பாடல்களும். !
!
கவிதை ::2 !
வண்ணம் மாறும் !
சோப்புக்குமிழிகளை !
கையிலேந்த ஓயாமல் துரத்திடும் சிறுமி !
அவள் புன்னகையை !
சேகரித்துக் கொண்டிருக்கிறான் !
குமிழ் ஊதுபவன்... !
குமிழாக சில காலம் !
புன்னகையாய் சில காலம் !
கழிந்தழியும் வாழ்நாள்

அவர்கள் துரத்த வேண்டிய வண்ணத்திகள்

ஸமான்
அசைவிழந்த சுவரோவியத்தில்!
தீனமாய் கேட்கிறது!
அவர்களுடைய பிஞ்சுக் குரல்கள்!
தூக்கு கயிறில் கழுத்தை இறுக்கியபடி!
கைகளை அசைத்துக் கொண்டிருந்தது!
அவர்களுக்கான கனவு!
விம்மி அழுதபடி!
திரித்த கயிறுகளில் பிணைக்கப்பட்ட!
இருள் தின்ற நிலாவும்!
உதிர்த எரி நட்சத்திரங்களும்!
துரு உறைந்த பெரு நிலங்களைவிட்டு!
பெயர்ந்து கொண்டிருந்தன!
கை பிடி வரிசைகளைப்போல!
நீளமாயும் குறுக்கலாயும் பாதைகள்!
முதுகு அழுத்தும் பாரத்தோடு!
துரிதமாக டடந்து கொண்டிருந்தார்கள்!
குழந்தை தொழிலாளர்கள்!
கந்தக குண்டுகளை உருட்டி விளையாடிய படியும்!
கிழிந்த பாடப் புத்தகங்களை!
மிதித்த படியும்!
அவர்களின் பெயர்வோடு கூடவே!
நகர்ந்து கொண்டிருக்கிறது நிலா!
அடிவான் நட்சத்திரங்கள் கருகி வீழ்ந்!
நதியின் குளிர்ந்த வெளியில்!
தாளப் பறக்கின்றன!
அவர்கள் துரத்த வேண்டிய!
அவர்களுக்கான வண்ணத்திகள்!
கண்ணீர் ஊறி!
தூக்கம் பாரித்த விழிகளின்!
பின் இருட்டில் மலை துகள்களை!
தின்று கொண்டே இருக்கிறது!
விடியல்களை தொலைத்த குழந்தை நிலா

கவனச்சிதறல்

ச.கோபிநாத், சேலம்
நம்பிக்கை துளிர்க்கும் தருவாயில்!
அதன் முனைகளை மழுங்கசெய்கிறது!
உனது வார்த்தைகள்.!
காதுகளை செயலிழக்க செய்து செவிடனாகி!
முயன்று முன்னேறுகிறேன்!
கண்களின் முன் சில செயல்கள் நிகழ்த்தி!
மீண்டும் திசை திருப்ப முனைகிறாய்.!
இப்போது கண்களை கட்டிக்கொண்டு!
கண்ணிருந்தும் பார்வையற்றவனாகிறேன்.!
தொடர்ந்து திசைதிருப்புகிறாய்!
என் கவனத்தை நீ!
தொடர்ந்து முயன்றுகொண்டிருக்கிறேன் நான்!
தீர்மானமாய் உணர்ந்துகொண்டேன் நான்!
திசைதிருப்புவதில் நீயும்!
இலக்கின் உச்சம் அடைவதில் நானும்!
நம்பிக்கையோடிருப்பதாய்

காலம்

புஸ்பா கிறிஸ்ரி
இன்று வந்தது!
நாளையும் வரும்!
ஆனால் நேற்று வராது!
மூடிக்கொண்ட கதவு அது!
திறந்து பார்க்க சாவியும்!
இல்லை!
சேர்த்து வைக்க வழியும்!
இல்லை!
துரத்திப் பிடிக்க ஒடுவோம்!
எங்கே தான் போய் விடும்!
நாம் இவ்வுலகை விட்டுப் போகும் முன்னர்!
இந்த நேரத்தைத் துரத்திப் பிடிக்கலாம்!
நேரத்தின் பின்னால்!
ஓடிப்போவோம் வாருங்கள்!
வேகமாய் ஓடுவோம், விரைவாய் ஓடுவோம்!
நேரம் போகிறது, ஓடுவோம் வாருங்கள்

பெய்பேய் மழை

வ.ந.கிரிதரன்
வ.ந.கிரிதரன்!
மழையே! மழையே! வா! வா! வா!!
மழையே! மழையே! வா! வா! வா!!
மாமழையே! மழையே! வா! வா! வா!!
மாமழையே! மழையே1 வா! வா! வா!!
இரவிரவாய் பெய்யுமேயிந்த அடை மழை.!
அடம் பிடித்துஅடாது பெய்யும் பேய்!
மழையாய்! பெருமழையாய்.!
விண்ணிடித்துப் படம்பிடித்த!
பேரரவாய் காரிருளில்!
மின்னல். புந்தி!
நடுங்கிக் கிடந்தும், புரண்டும்!
கண்ணயர விடாது!
கொட்டும் வானம் இரவின்!
மோனம் சிதைத்தபடி.!
என்ன மழையிது ? என்ன மழை ?!
இயற்கைப் பெண்ணே! உன்!
இதயம் குமுறியதேனோ ?!
மழையென்றால் நினைவில்!
மழைக்காளான், வயற்புறத்!
தவளை, வாற்பேத்தை, விரால்!
சிறகொடுங்கிய கிளிப்புள்,!
இருண்டதோர் மோனத்தில்!
மருண்டிருக்கும் மழைவான்,.!
வந்து வந்து போகும்.!
வந்து வந்து போகும்.!
மின்னல், இடி, கோடிழுக்கும்!
மழைத் தாரை, பெருவெள்ளம்!
இவையெல்லாம் கதைபல!
கதைபல கூறும்.கூறும். கூறும்.!
காகிதக் கப்பல், 'மழை வா ',!
'வெயில் போ!
'படம் விரிக்கும் நினைவுத்!
திரை.!
விரிந்திருக்கும் பெருவான் பார்க்க!
விரிவெளியில் கிடப்பதென்!
பெருவிருப்பு. அது போல்!
படுத்திருந்து பெய்பேய்மழை!
பார்த்துருளல்!
இன்னுமோர் இலயிப்பு.!
ஆண்டு போயென்ன ?!
அடைமழையில் இன்னும்!
அடங்கிவிடும் ஆழ்மனது.!
நடுப்பகல் மழை நள்யாம!
மழை கண்டும் ஆடாத!
மனமும் உண்டோ!!
கவிவடிப்போர் கற்பனைக்குப்!
புவியில் பஞ்சம் வைக்குமோ!
பெய்யுமிந்தப் பெருமழை.!
அன்னைபூமி அவலம் கண்டு!
அகல்வான் உதிர்க்கும் கண்ணீர்.!
அகதி அலைச்சல் கண்டு மேகம்!
வடிக்கும் கண்ணீர்.!
மழையில் புனலாடுதல்!
பேரின்பம் ஒரு போதில்.!
மாசற்றபுறம் நீங்கி!
மாசுற்று வரும் நீரில்!
நிலப்பெண்ணும்!
நிலைதளர்வாள்.!
பூவுலகின் தோழர்களோ!
நீரில், நிலத்தில்,வெளியில்!
நீரரித்து நீலம் பாரிப்பர்.!
இயந்திரப் பேயரக்கர்!
புகை கக்கும் நகரத்துப்!
பெரும்பரப்போ கனலடங்கிக்கண்சாய!
பெய்யும் மழையோ!
பெய்யும்! பெய்யும்! பெய்யும்!!
பெருமழையாய்ப் பெய்யும்.!
பேய்மழையாய்ப் பெய்யும்.!
மழையே! மழையே! போ! போ! போ!!
மழையே! மழையே! போ! போ! போ!!
மாமழையே! மழையே! போ! போ! போ!!
மாமழையே! ம்ழையே! போ! போ! போ!!
திண்ணை, Saturday May 25, 2002

துயில் எழுதல்

சித்தர்
அப்பாவை முதல் ஷிப்ட் !
மில் சங்கு எழுப்பும் !
தாத்தாவை எழுப்புவது !
காலையில் வருகிற தொடர் இருமல் !
என்னை எப்பொழுதும் !
அலாரம்தான் எழுப்பும் !
பொட்டப்புள்ளைக்கு இன்னும் !
என்னடி து£க்கமென்று தங்கையை !
அம்மா எழுப்புவாள் !
குளித்து பூஜை செய்து !
அப்பாவுக்கு சோறு கட்டிக் கொடுத்து !
தாத்தாவுக்கு மருந்து தந்து !
எனக்கு காப்பி கொடுத்து !
தங்கைக்கு பின்னல் இட்டு !
ஈயச் சட்டியோடு தீப்பெட்டித் !
தொழிற்சாலைக்குப் !
போகிற அம்மாவை காலையில் !
யார் எழுப்புவார்கள் ? !
!
நன்றி : ஆனந்தவிகடன்

அணையா தீபம் - கேணல் கிட்டு

வித்யாசாகர்
உயிரின் அடிநாதத்தில் எழுகிறது!
உனக்கான கூக்குரல் -!
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை!
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;!
தோல்வி நெருங்கிடாத உன் !
ராஜா பாட்டையில் -!
ஒரு வெற்றி குறுக்கிட்டு!
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;!
எதிரியின் உறக்கத்திலும் -!
உயிர் தைக்கும் மரணபயத்தை !
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் - அதை!
காலம் தின்று வரலாறு பேசுகிறதே - வருத்தமில்லையா;!
இரண்டில் ஒரு கால் இழந்தும் !
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி!
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை!
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???!
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு!
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;!
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் -!
உன் நினைவுகளால் உன்னை -!
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்!
வரலாற்றில் இருக்கட்டும்;!
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்!
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;!
ஒரு சபதம் புரி;!
என்று வரை ஈழ காற்று வீசுமோ!
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ!
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ!
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ!
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே!
உயிர் பூண்டிருக்கும்;!
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்!
சொட்டிக் கொண்டே இருக்கும்

சராஜிவோவில் கொல்லப்பட்ட

நிர்வாணி
“சராஜிவோ“ வில் கொல்லப்பட்ட !
காதலர்களுக்காக இவர் அழுகிறார் !
கவிதை எழுதுகிறார் !
இவர் வாழுகின்ற இதே தளத்தில் !
என் மக்கள் கொல்லப் படும்போது !
ஆனந்தமாய் ”பெரேரா” கொண்டாடுகிறார் !
ஏன் ? !
இறந்து போனவரெல்லாம் மனிதராகத் !
தெரியவில்லையா ? !
தமிழரென்பதால் மனிதரில்லையா ? !
இன்று புரிகிறது !
எப்போதோ எங்களின் பழசுகள் சொன்னது !
இக்கரையில் ஏதோவொன்றுக்கு !
அக்கரை பச்சையாம்

பறந்து போவதில்லை

நட்சத்ரவாசி
அடித்து துவைக்கும்!
பெண்களை!
எதிரொலி!
எழுப்பி!
நகைக்கிறாயே!
உன் சப்தத்தின்!
கூடு எங்கே!
திறந்து காட்டு!
**!
பூக்களைக் கொய்யும்!
சிறுமிகளை கவனியுங்கள்!
அவர்களின் கொய்தலுக்கும்!
சேகரிப்பிற்க்கும் இடையே!
எத்தனை சிரிப்புகள்!
யாராவது சொல்லியிருக்கவேண்டும்!
மறு நாளும் சிரிப்பொலிக்காகவே!
பூத்து குலுங்கும்!
மரத்தின் காத்திருப்பை!
**!
மழை பெய்து ஓய்ந்தாலும்!
வெள்ளம் கட்டி கிடக்கும்!
முற்றம் மாத்திரம்!
மழையை தானோ!
ஞாபக படுத்துகிறது!
வெறுங்கல்லோ!
மழையில் அடித்து!
வரப்பட்டதோ!
பூமியிழகி மேலெழுந்ததோ!
முற்றத்தை பெருக்காத!
போதும்!
முற்றத்தை யன்றோ!
பார்க்க தோன்றுகிறது!
**!
எழுதி எழுதி களைத்தாயோ!
என்று கேட்குமட்டும்!
ஆன உனக்கு!
நீண்ட நெடிய!
ஒரு இருப்பு!
ஆகவே ஆகாதடி!
கிளியே!
**!
பழைய கல்மண்டபத்தின்!
தூணிலிருக்கும்!
நாட்டிய மங்கை!
தீராத நடனத்தை!
முடிக்க கூடாதோ!
காலம் முடித்து!
வைக்கும்!
என்றொரு!
யோசனையோ?