தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

யாராகினும் மனிதன்

இராம. வயிரவன்
தாயோ தாரமோ!
தந்தையோ பிள்ளையோ!
ஊரோ உறவோ!
யாராகினும் மனிதன்!
அன்புக்கு ஏங்கிடும் ஆன்மா!!
நீ!
நினைத்தால்!
மயிலிறகால்!
மனம் வருடலாம்!
ஆதரவாய்ப்பேசி!
ஏக்கம் போக்கலாம்!
கண்களால்!
கைது செய்யலாம்!
சிரித்துச்!
சிறையெடுக்கலாம்!
காது கொடுத்துக்!
கவலை தீர்க்கலாம்!
கண்டு!
கொள்ளாமலும்!
இருந்து விடலாம்!
தள்ளி!
வைத்தும்!
தண்டனை தரலாம்!
என்ன செய்யப்போகிறாய் நீ!
ஒரு சொல் போதும்!
சில்லுகளாய் உடைத்துப்போட!
ஒரு பார்வை போதும்!
அன்பால் கட்டிப்போட!
ஒன்றும் செய்யாதிருந்தால் போதும்!
உணர்வுகளைக் கொன்றுபோட!
என்ன செய்யப்போகிறாய் நீ!
குறைந்த பட்சம்!
செலவில்லாமல் புன்சிரித்து!
வரவு வைத்துக்கொள் உன் கணக்கில்!!
-இராம. வயிரவன்

உடன் பிறப்பு

பனசை நடராஜன், சிங்கப்பூர்
பிள்ளைப் பேறே !
தொல்லை என்றெண்ணியதால்.... !
அரிதாகப் !
பெற்றுக் கொண்டாலும் !
ஒன்றோடு நின்றதால்.. !
அக்கா, தங்கை, !
அண்ணன், தம்பி எல்லாம் !
அறியாத வார்த்தைகளாகி... !
அடையமுடியாத !
பேராசையானது !
இன்றைய குழந்தைக்கு! !
- பனசை நடராஜன், சிங்கப்பூர்

வாழ்ந்து பார்க்கவேண்டும், அறிவில்

வேதா. இலங்காதிலகம்
வயலில் இருக்கும் புற்கள் களைந்தால்!
இயல்பாய் விளைச்சல் அள்ளிக் கொள்ளலாம்.!
செயலில் கேடு நினைக்கும் சிந்தையை!
செழிக்க விடாது தடுத்தாட்கொண்டால்!
கொழிக்கும் நன்மை உலகில் ஏராளம்.!
அழியாது அறிவை வளமாக்க முயன்றால்!
துளிர்க்கும் மகிழ்வால் கூடி ஆடலாம்.!
வாழ்வு, கவிதை, காதல், பாடலாய்!
வாழ்ந்து பார்க்கலாம் நல் மனிதனாகலாம்.!
வாழ்த்துப் பாடுமுலகம், வாழ்ந்து பார்

வேண்டுதல்

துர்கா
காவு கொள்ளப்பட்ட வாழ்வு!!
கதறும் மன ஓட்டத்தின் இடையில்!
சம்மனமிட்டு தடுமாறும் தண்டனைகள்!!
வாழ்க்கைச் சுவடுகள்!
செல்லறிக்கப்பட்ட ஏடுகளாயின!!
தாராளமாக்கப்பட்டத் தருணங்களில்!
ஏனோ மண்ணின் மணம் விஷமாகின!!
கொடுமைகள் கொத்தளிப்புளாய் மாறி!
மெளன போராட்டம் நடத்தும் மனவேதனை?!
சென்ற காலம் அடிமைகளாய் வாழ்ந்தது போதும்!!
வரும் காலம் விடிவெள்ளியாகட்டும்!!
இறைவா......!
!
-துர்கா

நட்பு

புலவர் சா இராமாநுசம்
உடுக்கை இழந்தவன் கைபோல-துயர்!
உற்றால் நண்பனும் உடன்சால!
தடுக்கத் தானே முன்சென்றே-உதவி!
தந்திட வேண்டும் அஃதொன்றே!
இடுக்கண் களைதல் நட்பென்றே-குறள்!
இயம்பிய கருத்தும் மிகநன்றே!
எடுப்பின் நட்பில் முடிவொன்றே-பெயரும்!
எடுப்பார் பிரியா இணையென்றே!
உணர்ச்சி ஒன்றே நட்பாகும்-இருவர்!
உள்ளம் ஒன்றின் பொட்பாகும்!
புணர்ச்சி பழகுதல் வேண்டாவே-இது!
புரிந்தால் போதும் ஈண்டாவே!
தளர்ச்சி இன்றி நடைபோடும்-நட்பு!
தமிழ்போல் அழியா நிலைநாடும்!
வளர்ச்சி காணும் எழுமதியாம்-தேய்வு!
வாரா என்றும் முழுமதியாம்!
நவில்தொறும் நூல்நயம் போலுமென-நல்!
நட்பினைச் சொல்லல் சாலுமென!
பயில்தொறும் பண்புளர் தொடர்புயென-அவர்!
பழகினால் அவர்பால் ஆகும்மென!
முகநக நட்பது நட்பல்ல-நண்பர்!
முறையின்றி நடப்பின் தடைசொல்ல!
அகமது மலரல் நட்பென்றே-ஐயன்!
அறைந்ததை அறிவீர் நீரின்றே

உடைந்த சிரிப்புகள்

தினேசுவரி, மலேசியா
உன்!
அழுக்குகளை!
நீ மறைத்துக்!
கொண்டாய்!
நான்!
அழகாய்!
இருப்பதாகக்!
கூறி...!
மறைக்கப் பட்ட!
உன்!
உண்மைகளை!
நானும்!
மறக்கப் பழகிக்!
கொண்டேன்...!
சிரிப்புகளோடு!
உன் கனவில்!
நானும்!
பறந்தேன்.....!
சப்தமில்லாமல்!
என் சிறகுகளை!
நீ உடைத்தும்...!
கற்பனைகளைக்!
கொடுத்து!
என் உணர்வுகளை!
கொன்று!
போனாய்.....!
உடைந்த!
என் சிரிப்புகளையும்!
கிழிந்த என் வாழ்வையும்!
இன்னும்!
ஒட்டிக் கொண்டுதான்!
இருக்கிறேன்!
பிசு பிசுக்கும்!
என் கண்ணீரில்

தீபாவளி

இமாம்.கவுஸ் மொய்தீன்
தீபாவளி!!!
-------------!
மகிழ்ச்சி அளிக்கவில்லை!
இத் தீபாவளி!!
எவருக்கும் வாழ்த்து சொல்லவும்!
தோன்றவில்லை!!
ஒலிக்கும் வெடிச் சத்தமும்,!
சாலையில் சிதறிக் கிடக்கும்!
பட்டாசுத் துகள்களும்,!
ஈழத் தமிழர்களையே!
கண்முன் தோற்றுவிக்கின்றன

எனதாக நீயானாய்

எம்.ரிஷான் ஷெரீப்
ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான!
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்!
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்!
செழிக்கிறேன் நானும் !
காலங்காலமாக மென்மையில்!
ஊறிக்கிடக்கும் மனமதில்!
எக் கணத்தில் குடியேறினேனோ!
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது!
இடர்கள் தீர்ந்தன!
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்!
உன் நம்பிக்கையின் கரங்களால்!
ஊன்றப்பட்ட நாளதில்தான்!
தூய சுவனத்தின் மழையென்னை!
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன் !
கலக்கின்றதுயிரில்!
செவிகளுக்குள் நுழைந்த!
உனதெழில் பாடல்களினூடு!
ஆளுமைமிகு தொனி !
இரைத்திரைத்து ஊற்றியும்!
வரண்டிடா அன்பையெல்லாம்!
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா!
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்!
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு !
மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்!
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த!
சோலையில் விளையாடும்!
வசந்தகாலத்தின் காலையொன்றில்!
நானினி வாழ்வேன்!
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்!
நீயிருப்பாய் என்றென்றுமினி

காத்திருப்பு

ஸ்ரெபினி
உன் நினைவுகளின்!
ஆழுகைக்குள்!
என் நினைவுகள்!
தண்டவாளத்தில்!
பயணிப்பதுபோல்!
திருப்பங்களில்லாத!
பயணங்களில்!
இணையவேண்டிய இடம் வரை!
இரட்டையாகவே!
ஓடிக்கொண்டிருக்கின்ற தெருக்களில்!
சொல்லிக்கொள்ளாத மௌனம்!
இறங்குதலும் ஏறுதலுமான!
பயணங்களில்!
மீண்டும் ஒரு முறை!
சந்திக்க நேரலாம்!
அப்பொழுதாவது சொல்லி விடு!
பதில் தெரியாத!
கேழ்விகளுக்குத்தான்!
நீண்ட அர்த்தங்கள்!
ஏதாவது சொல்லி விடு!
மௌனித்து விடாதே!
உன் மௌனத்துக்குப் பின்!
மீண்டும் ஒரு சந்திப்புக்காக!
நான் காத்திருக்க நேரலாம்!
-ஸ்ரெபனி

மனத்திரையில் காட்சிகள்

மதிசிவன்
மாத்திரைக்கு வேலையில்லையா ?!
-------------------------------------------------------------------!
வேலையின் சுமை !
எப்போதும் போல் ! !
எப்போதையும் விட !
அதிகமாய் ! !
எந்நிலை புரியா ! அறியா ! !
என் உறவுகள் !
என்னோடு பகை !
உடல் வெல வெலத்தது !
மறுபடியும் !
மருத்துவர் !
ரத்த பரிசோதனை !
அனைத்தும் நன்றாகத்தானே !
இருந்ததாய்ச் சொன்னார் !
பின் ஏன் இன்னும் !
இப்படி ஆராய்கிறார் ? !
உலகில் உறைய !
கடமைகள் உள்ளதே ! !
குடும்பத்தில் குழப்பத்தால் !
அதிர்ச்சி.... !
வினவுகிறேன் !
தூக்கமாத்திரகள் !
பரிசளிக்கப்படுகின்றன ! !
மனத்திரையில் காட்சிகள் !
ஓடாமல் இருந்தாலன்றோ ! !
மாத்திரையால் எனக்கு !
மாநித்திரை கிடைக்கும் ! !
!
-மதிசிவன்