தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஏற்கனவே சொல்லப்பட்டவை

மு. பழனியப்பன்
மு, பழனியப்பன் !
இது இப்படித் தான் !
இவன் இப்படித்தான் !
இவையெல்லாம் !
ஏற்கனவே சொல்லப்பட்டவை !
!
புதிதாக ஒன்றும் !
புறப்படப் போவதில்லை !
பழைய செய்திகள் !
பழைய தத்துவங்கள் !
பழையன !
புதிதாக ஒன்றும் உருவாவதில்லை !
ஓடும் நீரில் !
அருந்தும் போது மட்டும் !
சுவை தெரிகிறது !
அதனால் அது புதுமையுடையதாகிறது !
!
நூலகப் புத்தகங்களைப்போல !
பழைய வாசனை !
புதிதாய் எதுவும் இல்லை !
நமக்குத் தெரிந்து கொள்ளும் எல்லாம் !
நமக்குப் புதிது !
ஆனால் பழையது !
வேண்டும்போதெல்லாம் !
பழையதை புதுப்பித்துக் கொள்கிறோம் !
!
அதுவே !
பழமையின் புது வடிவம

குழந்தை

கொ.நூருல் அமீன்
குழந்தை -!
ஓர் விஞ்ஞான வியப்பா?!
ஓர் அற்புதப் படைப்பா?!
குழந்தை -!
கடவுளின் அருளா?!
அவனின் பொருளா?!
குழந்தை -!
இனம் பெருக்கும் பிறவியா?!
அறிவு சேர்க்கும் அமுதசுரபியா?!
குழந்தை -!
வாழ்க்கை ஆனந்தத்தின் பன்னீரா?!
அதன் அவலங்களின் கண்ணீரா?!
குழந்தை -!
செலவான உறவுகளின் அழகா?!
செல்லாத உறவுகளின் அழுக்கா?!
குழந்தை -!
அவசரக் காதலின் முத்தமா?!
தேதி குறிக்காத முகூர்த்தமா?!
முடிந்துபோகும் அந்த முத்தமா?!
குழந்தை -!
தனித்திருக்கும் தாய்மார்களுக்கு!
சவால்களை சமைத்த போராட்டமா?!
சங்கடங்களை கிழிக்கும் பேரின்பமா?!
குழந்தை -!
மனித வளர்ச்சிக்குப் பாலமா?!
சமுதாய பிரச்சனைகளின் பள்ளமா?!
குழந்தை -!
உலகின் எதிர்கலாமா?!
வளர்ந்து வரும் அடிமை எந்திரங்களா?!
குழந்தை -!
அடுத்த அப்துல்கலாமா?!
போர்க்களத்தின் மனித அணுகுண்டுகளா?!
!
குழந்தை -!
அனாதையென தெரிந்தால்!
பிறப்பது பாசமா?!
பார்த்தால் பாவமா?!
குழந்தையெலாம் ஓர் வினா!!
ஓர் வாழ்க்கை வினா.!
விடை தருவது நாம்!
அதை நன்று சிந்தித்து சீர்தூக்கி!
சிறப்பாய் எழுதுவோம் நாம்

2013...

ரவி (சுவிஸ்)
இலையுதிர்கால ஓவியர்கள் தீட்டிச்சென்ற !
ஓவியங்கள் உருவழிந்துபோன !
வரலாற்றை பனிக்கால தேவதைகள்!
நிலமெங்கும் மலையெங்கும்!
ஏன் மரமெங்கும்கூட அவசரமாய்ச்!
சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். !
அவர்கள் திரும்பிப் போய்விடவேண்டும்.!
நதியிடம் சொல்லி !
அல்லது சொல்ல முயற்சித்து!
மறைந்துபோகின்றனர் அவர்கள்.!
எனது கடந்தகாலத்தின் சிதறல்களை!
அதன் துகள்களைக்கூட இந்த நதியின் !
இரைச்சல்களிடம் வீசியெறிகிறேன்.!
அது திரண்டு திரண்டு அழிகிறது.!
முகில்களின் மடியினில் கிறங்கிப்போன !
நதியைப் பெயர்த்துவிட்டு!
நான் புகுந்து, இப்போதான்!
நாளிகையாகிப் போயிருக்கலாம் !
அல்லது !
பல மணி நேரமாகவும் இருந்திருக்கலாம்.!
நான் இறகாகிப் போய்!
பறவையொன்றை வெளியெங்கும் !
மிதக்கவிட்டிந்தேன். !
பின்னொருநாள்!
முகில் கோதியுதிர்த்த என்; துளிகளில்!
நனைந்து சுகம் கண்டாள் என்னவள்!
நதியிலும் விழுந்தன என் துளிகள்.!
ஈரத்தின் குருத்துகளில் வழிந்த!
நிறங்களையெல்லாம்!
அவள் கூந்தலின் நுனிகள்!
எதற்காக சேர்த்து வைக்கின்றன.!
ஒருவேளை !
உருவழிந்த நம்பிக்கைகளை !
வழமைபோல் மீண்டும்!
ஓவியமாய் அவள் வரைதல்கூடும். !
அதன் தொகுப்பை!
2013 என பெயரிடவும் கூடும்.!

இது உனக்கும் எனக்கும் தான்

சேயோன் யாழ்வேந்தன்
பாதிக்கப்பட்ட பின் !
போராடத் துணிந்தால் !
நீ என்ன புரட்சிக்காரன் !
பழிவாங்குவதற்காய் மட்டும் !
ஆயுதம் ஏந்துபவனா !
சமூகக் காவலன்? !
உசுப்பிவிட்டால் தான் !
எழுந்திருப்பேன் என்றால் !
நீயா போர்வீரன்? !
ஓர் அபயக்குரல் போதாதா !
போர்ப்பரணி பாட !
சக f¦விக்கு இழைக்கப்படும் !
ஓர் அநீதி போதாதா !
யுத்தம் செய்ய !
சுய இழப்புக்காய்க் காத்திராதே- !
அழைப்புக்காய்

மனகவலை ஏதுமில்லை

கருவெளி ராச.மகேந்திரன்
அந்த ஒருவழிப் பாதையிலே... !
உனக்கு வழிவிட்டு எதிர்முனையில் காத்திருப்பேன்...!
நான் உனைக் காண கிடைக்கும் ஓரிரு மணித்துளிக்காக! அதை நீ அறிந்திருக்க!
வாய்ப்பில்லை தான்... !
ஒரு வெயில் கால மழையில் வரும் மின்னல் போல... !
முடிந்து போகும் அந்த கணங்கள் தான் என் வாழ்நாளுக்கு எல்லாம் வெளிச்சம்!!
என்றிருந்தேன்... !
அதை நீ அறிந்திருக்க !
வாய்ப்பில்லை தான்... !
இதோ... மாலை மாற்றி... !
உனக்கு நான்... !
எனக்கு நீ என ஆன இந்நொடியில்... !
அந்த ஒரு வழிப்பாதையை!
ஓடோடி நீ கடந்தது... !
என் விழியின் வழியே பாயும் அன்பில் அங்கேயே சிலையாகி போவதை!
தவிர்க்கத்தான் என்கிறாய்! வாழ்க்கையை நினைத்து புன்னகைக்கிறோம்... !
நீயும் நானும்! மனம் அறிந்தால்.... மனக்கவலை ஏதுமில்லை... - என்று எங்கோ படித்ததாய் ஞாபகம்!!
கருவெளி ராச.மகேந்திரன் - தேனி

தமிழ் படிப்போம்

வேதா. இலங்காதிலகம்
வாருங்கள்! வாருங்கள்!!
வண்ணத் தமிழ் படிப்போம்.!
வசீகரத் தமிழ் படிப்போம்.!
வளமான தமிழ் படிப்போம்.!
ஆரியத்தின் மூலமொழி!
திராவிடத்தின் தாய் மொழி.!
உலக முதன் மொழியென்று!
மொழிந்தார் பாவாணர்.!
ஓளவை மொழி பயில்வோம்.!
வள்ளுவர் மொழி படிப்போம்.!
கள்ளமற்ற நல்வழியால்!
வெள்ளை மனமாய் வாழ்வோம்.!
வளர்ப்பது தமிழெனும் எண்ணத்தால்!
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.!
வாக்குத் திறமை கூட்டி!
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.!

கவிதைத் தீவு

றஞ்சினி
ஆகாயமாக!
விரிந்து கிடக்கும் !
கடலின்னலை தாலாட்ட!
தென்னை மரக்கீற்றடியில்!
பஞ்சுமணல் தரையில்!
பறவைகள் துயிலெளுப்ப!
ஒருபொழுதேனும்!
கண்விழிக்கவேண்டும் .... ....!
எமை இணைத்த விடுதலை!
உலகெங்குமாய் விரிய!
இயற்கையைத் தின்று!
சூரியன் சுட்டெரிக்கும்வரை!
அங்கேயே கிடப்போம் !
பலகதைகள் பேசி!
உன்னை நான் கவிதையாக்க!
என்னை நீ ஓவியமாக்கு!
எம் கனவுகளை நிஜமாக்கும்!
அந்த அழகிய தீவு .!
-- றஞ்சினி

இரண்டாம் தாய்

அன்பாதவன்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை !
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் !
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை !
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை!
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும் !
மவுனம்கவிந்த பொழுதுகள் !
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு !
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள் !
பாறையாயிருந்தேன்; !
சிற்பமானேனுன் செதுக்கலில் !
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா !
கடன் பெற்ற நெஞ்சம் !
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய் !
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை.!
OOOOO !
அன்பாதவன் !
2006

ஏமாற்றம்

கலியுகன்
எமக்கொன்றும் புதிதல்ல!
உறவுகள் கூட [தேச]!
துரொகிகளாய் மாறும் போது!
பேச்சு வார்த்தை!
உதவி வழங்கும் நாடுகள்!
நேர்வேயின் அனுசரனை!
கண்காணப்புக் குழு !
சர்வகட்சி மாநாடுகள்!
எம்மைப் பொறுத்தவரை!
எல்லாம் ஏமாற்றுத் தான்!
தனியரசு அமைப்தைத் தவிர!
-கலியுகன்

கலவரமா? கொலைவரமா?

கிரிகாசன்
வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்!
வீசியது சூறைக்காற்று, மழையுடன்!
கெட்டி மேளமிடு சத்தமென வானம்!
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட!
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு!
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ!
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்!
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்!
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்!
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு!
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்!
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,!
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல!
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்!
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை!
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்!
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை!
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு!
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்!
கோலமென்று சொல்லலாமோ?!
ஏறிவிழுந்த மனிதன் துடித்திட!
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட!
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட!
துன்பமிடும் புயல்காற்று நடந்திட!
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி!
மங்குமிருள் மறைபாதை நடுவினில்!
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்!
சேர்ந்து வரலாமோ நாதா!
பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட!
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட!
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்!
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து!
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்!
கூக்குரலிட்ட கணவன், சிரசினை!
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு!
ஆனதும் ஏன் கணநாதா!
புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி!
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு!
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே!
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு!
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை!
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்!
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை!
கேட்க வாடா கணநாதா! !