தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தண்ணி பட்ட பாடு

ரவி அன்பில்
ஏழெட்டு மாசமா!
எங்கூரில் மழையில்ல!
யாரு செஞ்ச குத்தமுன்னு!
யாருக்குமே தெரியல்ல!
சமைக்கத் தண்ணியில்ல!
தொவைக்கத் தண்ணியில்ல!
குளிக்கத் தண்ணியில்ல!
குடிக்கத் தண்ணியில்ல!
ஊருணியும் மணலாச்சு!
ஒலந்த மீன் முள்ளாச்சு!
தூரெடுத்தும் கெணத்திலே!
துளிக்கூடத் தண்ணியில்ல!
குச்சிமகா காளியம்மன்!
கோவிலிலே பூசாரி!
நச்சுன்னு ஒடச்ச தேங்கா!
ஒண்ணுலயும் தண்ணியில்ல!
போரு கொழாய்த் தண்ணி!
போட்டுவெச்ச சீமாங்க!
மனசிருந்தா வாம்பாங்க!
மாறுபட்டாச் சீம்பாங்க!
தாகத்தைத் தீத்து வெக்க!
இளனியில்ல நொங்குமில்ல!
பாவத்தைக் கழுவக் கூட!
பச்சத் தண்ணி எங்குமில்ல!
நஞ்சையும் புஞ்சையாச்சு!
புஞ்சையும் புழுதியாச்சு!
பஞ்சப் பாட்டையெல்லாம்!
பத்திரிக்கை எழுதியாச்சு!
தேர்தலுக்கு வந்த கட்சி!
தேறுதலுக்கு வரவுமில்ல!
ஓட்டு வாங்கிப் போனவங்க!
ஒத்தாசை தரவுமில்ல!
வேலி கொவ்வாக்கொடி!
வெக்கையில காஞ்சிருச்சு!
காரச் செடி சூரச் செடி!
கருமுள்ளாத் தேஞ்சிருச்சு!
உசல மரம் புங்க மரம்!
மஞ்ச நெத்தி ஈச்ச மரம்!
உசிரு போற வெய்யிலில!
ஒலகத்த வெறுத்திருச்சு!
புரவ ஆட்டுத் தீனிக்கு!
புல்லுமில்ல பொதருமில்ல!
தொரட்டி எட்டும் தூரத்திலே!
மரத்து மேல தழையுமில்ல!
முட்டிபோட்டு வால்துடிக்க!
முட்டிமுட்டி பால்குடிக்க!
குட்டி ஆடு பசி அடக்க!
சொட்டுப்பாலும் சொரக்கலயே!
முண்டக்கண்ணி சாவலுக்கும்!
தொண்டத்தண்ணி வத்திருச்சு!
விடிஞ்சாத்தான் என்னன்னு!
கால் நீட்டிப் படுத்திருச்சு!
குறி சொல்லும் சோசியனும்!
தலையில அடிச்சுக்கிட்டான்!
கிளி செத்துப் போச்சுன்னு!
கடைய அடச்சுப்புட்டான்!
கால்ஊனி கால்மடிச்சு!
நாலாய் நின்ன கொக்கு!
வீசா வாங்கிக் கிட்டு!
வெளிநாடு போயிருச்சு!
அறுவடைய நம்பித்தான்!
நடக்குதுங்க விவசாயம்!
பருவமழை தவறிப்புட்டா!
குடுத்தனமே கொடைசாயும்!
தண்ணிபட்ட பாடாத்தான்!
தவிக்குதுங்க இடையபட்டி!
வருண கருண பகவானே!
வந்திருங்க நடையக்கட்டி

சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கிறேன்

இளந்திரையன்
சிறுகச் சிறுக !
சேர்த்து வைத்திருக்கிறேன் !
என்னைப் பற்றியும் !
என் வேர் பற்றியும் !
யாரும் கவனிக்கவில்லை !
அவரவர்க்கு !
அவரவர் அவசரம் !
யாருக்கும் நேரமில்லை !
மண்ணின் வாசனை !
மனங்களின் நேசம் !
மலர்களின் வாசம் !
மலரும் நினைவுகள் !
சொல்ல வேண்டும் !
உரக்கச் சொல்ல வேண்டும் !
மண்ணை நேசிக்கும் !
மனங்கள் பற்றி !
உயிரைத் துறக்கும் !
உயிர்ப் பூக்கள் பற்றி !
இனவாதம் எதிர்க்கும் !
இதயம் பற்றி !
சிறுகச் சிறுக !
சேர்த்து வைத்திருக்கிறேன் !
என்னைப் பற்றியும் !
என் வேர் பற்றியும் !
- இளந்திரையன்

கசக்கின்றது காலம்

நவஜோதி ஜோகரட்னம்
குத்தும் குளிரிலும் - என்!
குருதி மிதமான சூடு!
உரிமையிழந்த மண்ணின்கோலம்!
பார்வையில் படியும்போது!
உடல் இறுகி உதிரம் உறைகிறது!
சரித்திர வட்டத்தில்!
நெருப்பு இடி பூகம்ப வெடிகள்…!
மூடாத குழிகளில்!
அம்மா அப்பா மட்டுமன்றி!
ஐயோ எம்!
எதிர்காலச் சோளக் கதிர்களெல்லாம்!
சிதறிப் போய்க்கிடக்கிறது…!
இளவேனில் மழைத்தூறல்!
சிவப்பாகி பெருக்கெடுக்கிறது…!
இரும்பு இதயங்களின் வேற்றுமை படர்ந்து!
மண்ணும் வெடுக்கெடுக்கிறது…!
இனவாதச் சகதிக்குள் மனிதக் கருகல்கள்…!
மனிதத்துக்குக் கண்ணீர் அஞ்சலி!!
நாமோ மண் எங்கும் ஓடுகின்றோம்…!
கனத்து கரைந்து கசக்கிறது காலம்…!
எரிகிறது இதயம்…!
ஒளி செத்த தேசம்…!
சிவப்பாகும் கோபம் உங்களை திரட்டி விழுங்காதா? – எம்!
குருதியைச் சீராக்கி!
சிரிப்பைக் கண்டெடுத்து!
சுதந்திரம் விரைந்து விரைவில்!
மாலைகளாய் எம்!
கழுத்தில் வீழாதா?...!
-நவஜோதி ஜோகரட்னம்!
லண்டன்.!
2.2.2009

முக வரிகள்

இளந்திரையன்
முக வரிகள் நிறைந்து!
முறுவலிக்க மறந்த!
முகம்!
முதிர்ச்சியாய்!
கடும் பனியில்!
கட்டிடக் காட்டினுள்!
இயந்திரத்துடனான போராட்டத்தில்!
இறுகிச் சிவந்து!
வார இறுதியின்!
வரவுக்கும்!
மாசம் தவறாத!
மருட்டும் செலவுக்குமான!
இடைவிடாத போராட்டத்தில்!
இன்னும் தொலைந்தது நித்திரை!
மலர்கள் மழலைகள்!
மரத்துப் போன இதயத்தின்!
மானசீகக் கற்பனை!
மயக்கமூட்டுவதாய்!
கடிகார முள் பார்த்து!
கால் ஓட!
சாத்திய கதவின் பின்னால்!
கவனமாய் ஒரு வரி - என்!
முகத்திலேற!
முறுவலிக்க மறந்த!
முகம் முதிர்ச்சியாய்!
முக வரிகள் நிறைந்து.!
- இளந்திரையன்

கறுப்புத் துணி மூடுகிற நகரம்

தீபச்செல்வன்
பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்!
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.!
சனங்கள் என்ன செய்ய முடியும்?!
முதுகுகள் எங்கும்!
துவக்குகள் குத்தயபடியிருக்கின்றன.!
விலக்க முடியாத பேரணியில்!
சொல்லித்தரப்பட்ட வாசகங்கள்!
முழுவதுமாய்!
நமக்கு எதிராய்!
நமது வாயில் ஒலிக்கின்றன.!
திணிக்கப்பட்டிருக்கிற கொடியின்!
பற்களுக்கிடையில்!
சிக்கித்தவிக்கிற தேசத்தின் வெற்றிக்கு!
நமது சகோதரர்களாலே!
பரணியெழுதப்படுகிறது.!
சனங்கள் தமது சனங்களுக்கு!
எதிராய் கிளப்பப்படுகின்றனர்.!
துப்பாக்கி எல்லாவற்றையும்!
ஆண்டு கொண்டிருக்கிறது!
அதிகாரம் எல்லாவற்றையும்!
மாற்றி அமைக்கிறது.!
ஒடுங்குகிற சனங்களின்!
வார்த்தைகள் நசுக்கப்படுவதற்கு!
சனங்களையே திரட்டப்படுகிற நகரத்தில்!
எதிரியின் அதிகார மொழிப்பாடல்!
காதை கிழித்தொலிக்கிறது.!
நாம் பாடலின் அர்த்தத்தை!
புரியாதவர்களாயிருக்கிறோம்.!
கறுப்புத்துணிகளால்!
மூடுண்டு வாழுகிற நகரத்தின்!
தலைகள் ஆடுகிறபோது!
துப்பாக்கிகளே பேசுகின்றன.!
சொற்களற்ற நகரத்தில்!
மனிதர்கள் துண்டிக்கப்பட்டு!
திரட்டப்படுகின்றனர்.!
பழாய்ப்போன சனங்களின்!
கையில் திணிப்பதையெல்லாம்!
பார்வையிடுவதற்கு முன்பே!
படம் பிடிக்கப்படுகின்றனர்.!
எல்லோருடைய கால்களும் உருகுகிறது.!
கறுப்புத்துணி தலைகளை தின்று விடுகிறது.!
முண்டங்கள் திரியும் வீதியில்!
அடிமைக்கு வலுவான!
வாசங்கள் தொங்குகின்றன.!
அதிகாரம் தனது வெற்றியை!
திணித்துவிட்டு!
அடிமையை கட்டாயம் செய்து தருகிறது.!
வீதியை கடக்கிற அவகாசத்தில்!
விடுதலை மறக்கிறது!
நாடு மறக்கிறது!
கறுத்த நகரத்தின் சந்தையுடன்!
வாழ்வு முடிகிறது.!
நமது கண்களை நாமே!
பிடுங்குவதைப்போலவும்,!
நமது உடலை நாமே!
கூறிடுவதைப்போலவும்!
அதிகாரம் எல்லாவற்றையும்!
எல்லாரையும் பிரித்தாழுகிறது.!
பாம்புகள் வழிகாட்டுகிற வீதியில்!
தொன்மையான சொற்கள் பலியிடப்பட!
முகங்களை குத்துகிற வாசங்கள்!
எழுதித்தரப்பட்டிருக்கின்றன.!
எனது பாழாய்போன சனங்களே!
துவக்குள் சுட முடியாத!
என்றைக்குமான எல்லாவற்றுக்குமான மனது!
விலக்க முடியாத பேரணியில்!
மிதிபடுவதை கண்டு செல்லுங்கள்.!
கடைசியில் உணவில் விஷமிருக்கிறது!
படுக்கை சுடலையாகிறது.!
எழுதித்தரப்பட்ட வாசங்கள்!
தூக்கத்தில் கொலை செய்துவிட்டு போகிறது.!
பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்!
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.!
அதிகாரம் எல்லாவற்றையும்!
தனக்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கிறது.!
சனங்கள் என்ன செய்ய முடியும்?!
-தீபச்செல்வன் !
--------------------------------------------------------------------!
28.12.2008. யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலர்!
இலங்கை அரசின் வன்னி இராணுவ நடவடிக்கைகு ஆதரவாக பேரணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.!
-----------------------------!
தீபம் பதுங்கு குழியிலிருந்து ஒரு வலைப்பதிவு!
தீபம்

ஏழை

முனைவென்றி நா சுரேஷ்குமார்
ஏழை!
------------!
கரைந்தது காகம்!
விருந்தாளிகள் வரவில்லை!
ஏழையின் குடிசைக்கு!
மின்சாரம் தேவையில்லை!
நிலவொளி போதும்!
ஏழையின் குடிசைக்கு!
வயிற்றுவலி இல்லை!
வயிற்றில் ஈரத்துணி!
கண்ணீரில் ஏழை!
ஏழை சிரித்தான்!
இறைவனைக் காணவில்லை!
முதுமொழி பொய்யானது!
பணமழை பெய்தது!
ஏழை சிரித்தான்!
தேர்தல் வரவால்...!
கோடிகளில் ஊழல்!
கோடிகளில் வாழ்க்கை!
நாதியில்லாத் தமிழன்!
செல்போன் இலவசம்!
பிச்சைக்காரன் மகிழ்ந்தான்!
சா(வே)தனை இந்தியா!
அம்மனுக்கு கூழ் ஊற்றினார்கள்!
வயிறு நிறைந்தது!
ஏழைகளுக்கு!
வறுமையில் வாடாத!
உழவனையும் புலவனையும்!
பார்ப்பதரிது

மாறாதவன்

செண்பக ஜெகதீசன்
எந்த விதைக்கும் பிடிப்பதில்லை!
பிழிந்து!
எண்ணெய் எடுக்கப்படுவது,!
எண்ணமுண்டு எல்லா விதைக்கும்-!
மண்ணில் விழுந்து!
மரமாகவேண்டும் முளைத்து,!
மகசூல் கொடுக்கவேண்டும் கிளைத்து,!
மக்களுக்கு உதவவேண்டும் தளைத்து…!!
மாறுதலாய் இருக்குதே!
மனிதனின் எண்ணம் மட்டும்-!
விதையை நசுக்கி!
எண்ணெய் எடுக்கிறான்,!
மரத்தை வெட்டி!
கரியாக்குகிறான்..!
மாறவில்லையே மனிதன்,!
மாறியபோதும் காலம்…!!

சங்கேத வார்த்தை

ப. மதியழகன்
உன் சங்கேத வார்த்தைக்கு!
அர்த்தமென்ன என்பதை!
இப்போது தான் தெரிந்து கொண்டேன்!
வாழ்க்கையைவிட கொடூர தண்டனை!
வேறு என்னவாக இருக்க முடியும்!
சங்கடங்கள் இல்லாது!
அக்கடா என்று விட்டம் பார்த்து!
படுத்துக் கிடக்க எவரால் முடிகிறது!
இங்கே!
மயிரிழையில் உயிர்ப்பிழைத்தவனிடம்!
கேட்க வேண்டும் உயிரின்!
மகத்துவம் என்னவென்று!
சிறிய தவறு பின்னால்!
பூதாகரமான பிரச்சனையாகிவிடுவதை!
யார் தான் கணிக்க முடியும்!
மரணத்தாகத்துடன் அலைபவன்!
இந்தக் கிணற்று நீரை குடிக்கலாமா!
என யோசிப்பானா!
உன் கவிதையை நான் எழுத!
வேண்டுமென்றால்!
என் வாழ்க்கையை!
நீ வாழ வேண்டும்!
சிந்தனைக்கு எல்லை வகுக்கும்!
உனது சட்டதிட்டங்களை!
அமல்படுத்தினால்!
பூமியே கல்லறைத் தோட்டமாகத்தான்!
இருக்கும்!
உனது நடவடிக்கைகளை!
சகித்துக் கொண்டு வாழ!
எனது சுதந்திரத்தை தாரை!
வார்க்க வேண்டும்!
எனது மனக்குதிரை!
விருப்பம்போல் மேயாமல்!
உனது லாயத்தில்!
கட்டிப் போடப்பட்டிருக்கும்!
அடிவானத்துக்கு அப்பால்!
சுதந்திரத் தீவொன்று!
இருக்கிறதாம்!
முயற்சி செய்து அங்கே!
போகிறேன்!
இல்லையேல் மீன்களுக்கு!
இரையாகி!
நடுக்கடலில் சாகிறேன்.!

----
01.
துயரத்தின் வாசனை!
என் அறையெங்கும்!
நிரம்பியிருந்தது!
தீர்ப்பு எழுதும் போது!
கைகள் நடுங்குகின்றன!
எல்லோரையும்!
சந்தேகக்கண்ணோடு நோக்குவது!
எனக்கு வாடிக்கையாகிவிட்டது!
கடவுள் தன்மைக்கு!
இடம் கொடுக்க மறுக்கிறது!
மனம்!
கடவுளுக்கு படுக்கையறையில்!
இடம் கிடையாது!
சாத்தானை விரும்பும்!
பெண்களின் கண்களில்!
காமம் கொழுந்துவிட்டு எரிந்தது!
இரவு நெருங்க நெருங்க!
இறையுணர்விற்கு விடை!
கொடுத்துவிட்டு!
பேயாய் மனம ஆட்டம் போடுது!
இருளுக்கு ஏங்கியலையும்!
சமூகம் தான்!
கூடிய விரைவில்!
பைத்தியமாக திரியப் போகிறது.!


02.!
விவகாரத்தில் மாட்டினால்!
தப்பிக்கும் வழி!
தானே தெரியும்!
எதையும் தனதாக்கிக் கொள்ள!
ஆசைப்படாதவன்!
கையேந்த யோசிக்க மாட்டான்!
அடுக்களையில் வடித்துக்!
கொட்டுபவளுக்கு வசதி!
செய்து கொடுக்க ஆசைதான்!
ரயில்பூச்சி போல்!
இருந்து கொண்டிருக்கலாம்!
யார் கண்ணுக்கும் உறுத்தாமல்!
குயில் போல கூவி!
தன்னிருப்பை காண்பித்தால்!
துரத்தப்படுவோம் கூட்டை விட்டு.!
!
03.!
இவன் பார்வையில்!
அவர்களெல்லாம்!
சுவர்க்கவாசிகள்!
வீடே கோட்டை மாதிரி!
என்றால்!
மற்ற வசதிகளைப் பற்றி!
கேட்கவா வேணும்!
வர்ற வட்டி போதும்!
குடும்பம் நடத்த!
இருந்தாலும் உத்தியோகம்!
புருஷலட்சணமல்லவா!
பட்ஜெட்டில் துண்டுவிழாதது!
இவர்களுக்கு மட்டும்தான்!
மத்திய தர வர்க்கம் தான்!
வாழ்வு வந்தால் குதிப்பதும்!
தாழ்வு வந்தால் அழுவதும்!
மேல்தட்டுவர்க்கத்தை வேடிக்கைப்!
பார்த்தால் கற்றுக் கொள்ளலாம்!
இன்னும் நிறைய.!
!
04.!
சமூகம் பணமுதலைகளைத்தான்!
ஹீரோவாக அடையாளம் காட்டுகிறது!
சுயமுன்னேற்ற புத்தகங்களைத்தான்!
வாசிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது!
அறிவுவிருத்திக்காக படிப்பவர்களை!
அடையாளங்காட்ட முடியாது!
கோயிலுக்குள் சென்று!
பணத்தை யாசகமாகக் கேட்கும்!
பிச்சைக்காரர்களாகத் தான்!
இந்த வெகுஜனத்தை!
சமூகம் பழக்கிவைத்துள்ளது!
பணக்கட்டுகளுக்கு முன்னால்!
சித்தாந்தம் தோற்றுத் தான்!
போகிறது!
தலைவிதியென்று பொறுத்துக்!
கொண்டால்!
தரித்திரம் ஓடிவிடுமா என்ன!
வரம் கொடுத்த சிவன் தலையில்!
கைவைப்பது போல்தானே!
இடித்த கோயிலுக்குள்ளும்!
இறைவன் தானே இருக்கிறான்!
மீட்பரின் மலைப்பிரசங்கம்!
மீண்டும் தொடங்கட்டும்!
இம்மண்ணுலகில்.!
05.!
நீங்கள் இப்படி சொன்னால்!
எப்படி!
கண்களைத் தாழ்த்தி!
இப்படிக் கேட்பவரை!
நெஞ்சில் ஈரமில்லாமல்!
எதிர்கொள்வதற்கு பயிற்சி!
வேண்டும்!
காரியமாகவில்லை எனபதை!
சூம்பிப் போன முகம்!
காட்டிக் கொடுத்தவிடுகிறது!
இறப்புச் சான்றிதழ்!
பெறுவதற்கு கூட காசு!
தேவையாயிருக்கிறது!
இவர்களிடம் தேவைக்கதிகமாக!
பணம் சேர்ந்ததால்!
இயேசு பிரகடனப்படுத்திய!
விண்ணரசைக் கூட!
விலைக்கு வாங்க!
பேரம் பேசுகிறார்கள்!
அங்கு இது செல்லுபடியாகாது!
என்று அறிவித்தால்!
அதை ஏற்க மறுக்கிறார்கள்!
இறுதியில் நோய்!
வாய்ப்பட்டு!
சேர்த்ததையெல்லாம்!
மருத்துவ சிகிச்சையில்!
தொலைக்கிறார்கள்.!
06.!
எல்லா கேள்விகளுக்கும்!
விடை கிடைத்துவிடுகிறதா என்ன!
துக்கவீட்டில் யாராவது!
இறந்தவனின் வாழ்க்கையை!
சீர்தூக்கிப் பார்ப்பார்களா!
பழக்கப்பட்ட தெருவில்!
வீடுமாறி புகுந்து!
சங்கோஜப்பட்டு திரும்பும் போது!
முத்து பரல்கள் சிதறுவதைப் போல!
பின்புறத்திலிருந்து சிரிப்பொலி!
கேட்குமே அது அந்தவீட்டைக்!
கடக்கும் போதெல்லாம்!
இனி எதிரொலிக்கும்!
திக்குத்தெரியாமல் அலைபவர்களின்!
கண்கள் வேட்டையாடப்பட்ட!
மானைப் போன்றிருக்கும்!
வனவாசம் புகுந்தாலும்!
மனம் நசியாமல்!
பாம்பாய்ப் படமெடுக்கும்.!
!
07.!
தேவைப்படும்போது உபயோகித்துவிட்டு!
தூக்கி எறிந்துவிடுகிறோம்!
நிர்மூலமான நகரத்தில்!
ஆங்காங்கே முனகல் கேட்கிறது!
வண்ணத்துப்பூச்சியை பின்தொடர்ந்து!
சென்றால் வண்ணங்களைத்தான்!
யாசகமாக பெறலாம்!
மெளனத்தின் கால்தடங்களைப்!
பின்பற்றிச் செல்லும் போது!
வாழ்வின் மகத்தான தருணங்கள்!
புரிதலின்றி நகர்கிறது!
அப்போது பிரிதலின் அர்த்தம்!
புரிபட ஆரம்பித்தது போலிருந்தது!
வழக்கத்திற்குமாறான காலநிலை!
என்னை வாவென்றழைத்தது!
பெய்தது போதுமென்று!
பூமி நினைத்தது!
ஈசனின் சொரூபம்!
வானுக்கும் மண்ணுக்குமாக!
ருத்ரதாண்டவம் ஆடிக்களைத்தது.!
!
08.!
இந்த சமயத்திற்காகத்தான்!
நான் காத்திருந்தேன்!
நிழல் பொய் சொல்லாது!
ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையை!
அனுசரித்துச் செல்லும்!
நிர்பந்தம் யாருக்கு!
விளக்கு வெளிச்சத்தில்!
இருளைத் தேடினேன்!
மின்மினியின் வெளிச்சத்தில்!
பாதையைக் கண்டறிய முடியாது!
நாளையப் பொழுதை!
நம்பினால் தான்!
காரியத்தில் இறங்க முடியும்!
பிறப்புக்கு முந்தியும்!
இறப்புக்கு பிந்தியும்!
என்ன நடக்குமென்று!
யாருக்கும் தெரியாது!
காலம் போடும்!
புதிருக்கு யாராலும்!
விடை காண முடியாது.!
!
09.!
கால தேச எல்லைகளைக் கடந்து!
ஒழுங்கமைவுடன் எல்லாவற்றையும்!
நடத்திக் கொண்டிருப்பவன் யார்!
தூக்கத்தில் ஒடுங்கிவிடுகிற மனது!
விழித்ததும் ஆரவாரிக்கிறது!
மத்திம வயதில் காசுக்காக!
அலைந்த மனது!
அந்திம காலத்தில் இறைவனின்!
காலடியைத் தேடுகிறது!
கட்அவுட்க்கு பாலாபிஷேகம் செய்யும்!
ரசிகர் மன்றங்களை நம்பித்தான்!
நாளைய இந்தியா உள்ளது!
பேனா முனையில் உரசலினால்தான்!
நீதி இன்னும் சாகாமல் இருக்கிறது!
காந்தி பிறந்த நாட்டில் தான்!
மரணதண்டனை நிறைவேற்றப்படுகிறது!
ஏழை ஜனங்கள் தான்!
வாக்குரிமையை விற்றுப் பிழைப்பது!
பாமர மக்களின் தலையெழுத்தை!
யார் இங்கு நிர்ணயிப்பது.!
!
10.!
எழுத்து அவ்வளவு சீக்கிரத்தில்!
வசப்பட்டுவிடாது!
பாத்ரூமில் வார்த்தைகள்!
வந்து விழும்!
குறித்துக்கொள்ள காகிதம்!
இல்லாதபோது கரு பிறக்கும்!
சொற்களை தனதாக்கிக் கொள்ள!
நினைக்கும்முன் தப்பிவிடும்!
பாடுபொருளைத் தேடுவதில்!
சிக்கல் எழும்!
சரக்கை உள்ளே ஊற்றினால்தான்!
கற்பனைகள் சிறகுவிரிக்கும்!
அனுபூதி இருந்தால்தான்!
ஆற்றொழுக்காய் வரி பிறக்கும்!
தரையில் விழுந்த மீனைப் போல்!
துடித்தால் தான்!
எழுத்துலகில் அசைக்கமுடியாத!
ஓர் இடம் கிடைக்கும்.!
!

நாகரிகம் ஏனோ இன்னும்?

எதிக்கா
காலம் கடந்து உயிர் மூச்செறிந்து !
வானம் பொசுங்கியது !
வைகுண்டம் முதல் வங்கம் வரை !
பேரதிர்வு !
புத்தி பேதலித்துப் போன !
மனிதக்கூட்டம் !
சுத்திச் சுத்தித் தலையாட்டியே !
வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள் !
கடந்து விட்டன !
வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும் !
அழிக்கப்பட்டு !
சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ !
இதனால் மீதியில் தொலைந்துபோனது !
இயற்கையும் மனிதத்தலைகளும் தான் !
காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை !
மீண்டும் மேடையேறியது !
தெளிவற்ற கருத்துக்கள் !
முடிவுகள் !
மனித வம்சத்தையே புதைக்க !
ஊன்றுகோலாகியது இப்போதான் !
போர்க்கால மேகங்கள் மெல்ல !
விலகுமென இருக்க !
போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்? !
பகட்டான வாழ்க்கை !
பாதகர் யாரும் உய்யவே வேண்டாம் !
உங்கள் வாயசைப்புக்கள் !
இன்னும் இன்னும் எத்தனையோ !
பாதகர்களை உரமிட்டுச் செல்லும் !
பேதமின்றி சமத்துவம் தொலைந்து !
போன பின்னும் !
நாகரிகம் ஏனோ இன்னும்? !
!
எதிக்கா

ஆட்டு மந்தைகள்!

பிரான்சிஸ் சைமன்
ஒரு வருடத்திற்கு முன்பு..!
மலையடிவாரத்தில்!
ஆட்டு மந்தைகளைப்போல்!
உன்னை வளைத்துப் பிடித்து!
ஜல அபிஷேகம் செய்து!
பின்னர் காவல்நாய்களிடம்!
ஒப்படைத்தன!
செம்மறி ஆடைத் தரித்த!
நரிகள்!
சீறி எழுந்தன!
ஆட்டு மந்தைகள்!
போகமாட்டோம்!… போகமாட்டோம்!!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று !
உறுதி மொழி கொண்டன!
ஒரு வருடத்திற்கு பின்பு…………!
பகல் கொள்ளை நரிகளின்!
உறைவிடமான !
அந்த “மலையடிவாரத்தில்!
மீண்டும் சங்கமத்தின!
ஆட்டு மந்தைகள் !
செய்தியை படித்தேன்!
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்!
எனக்கு தரிசனம்!!!!
அடுத்த வருடமாவது!
ஆட்டு மந்தைகளுக்கு!
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று!
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த!
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.!