தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விதி

இளந்திரையன்
அம்மி மிதித்து !
அருந்ததி தேடி !
அந்தணன் காட்டிய !
பகலிலும் பார்த்ததாகப் !
பல்லிளித்து !
மோதிரம் மாத்தி !
மொய் எழுதிப் !
போன உறவுகளும் !
சாட்சியாக !
சக வாழ்வுக்காய் !
கைப் பிடித்ததென்னவோ !
உண்மைதான் !
நான் வரும் வரை !
நடு நிசியென்றாலும் !
நாக்கு வரண்டு !
தண்ணீர் குடிக்கும் !
உன்னைப் பார்த்து !
சிரிக்கின்றாள் !
அருந்ததி !
- இளந்திரையன்

சுதந்திரம் : ஒரு தியாகியின்

துரை.ந.உ
சுதந்திரம் : ஒரு தியாகியின் மீள் பார்வையில் ..!
-----------------------------------------------------!
!
””அன்று!
அடிமை நாட்டில்.....!
சுதந்திரம் !
அது ஒன்றே!
எங்களுயிர் மந்திரம்!
ஒரே தலைமை!
ஒன்றே இலக்கு!
வேற்றுமையைப் போக்கும்!
ஒற்றுமையே நோக்கம்!
அமைதியாய் ஆர்ப்பாட்டம்!
அகிம்சையேப் போராட்டம்!
பலன் எதிர்பாராத எண்ணம்!
நாட்டின் எதிர்காலமே திண்ணம்!
தன்வாரிசுகளை மறந்த கூட்டம்!
தாய்மண்ணின் எதிர்காலமே திட்டம்!
வாங்கித்தந்தோம் சுதந்திரம் - பாதுகாக்கக்!
கொடுத்துவைத்தோம் உங்களிடம்!
இதோ..!
கடந்துவிட்டது!
அறுபத்திரண்டு ஆண்டுகள் !!
இன்று ...!
சுதந்திர நாட்டில்!
சுதந்திரம்........?!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........???!
சுதந்திரம் என்றால்........?!
சாதிக்கொரு தலைமை!
சாதிக்க இல்லை நிலைமை!
வீதிக்கொரு கொள்கை!
விதியே என்ற வாழ்க்கை!
காலையில் சாதி ஓழிப்புப் போராட்டம்!
மாலையில் இடஒதுக்கீடு ஆர்ப்பாட்டம் !
தாய் நாட்டையே மறந்த கூட்டம்!
தன் வாரிசின் எதிர்காலமே திட்டம்!
!
சுதந்திரம்......?!
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.........??!
சுதந்திரம் என்றால்......???!
ஊர் வம்பே சுதந்திரம்!
வெட்டிப் பேச்சே சுதந்திரம்!
ஆணவப் போக்கே சுதந்திரம்!
ஆடைக் குறைப்பே சுதந்திரம்!
வீட்டினுள் மதுசேர்த்தல் சுதந்திரம்!
வெளியில் மாதுசேர்தல் சுதந்திரம்!
முதியோர் மதியாமை சுதந்திரம்!
பெரியோர்சொல் கேளாமை சுதந்திரம்!
அதிகாரிகாரங்கள் தேனெடுக்க சுதந்திரம்!
அதிகாரிகளுகள் புறங்கைநக்க சுதந்திரம்!
மதத்துக்குள் மோதல் சுதந்திரம்!
மதத்துக்கே மதம்பிடித்தல் சுதந்திரம்!
கலாச்சார சீரழிவு சுதந்திரம்!
பாலியல் சீர்கேடு சுதந்திரம்!
இன்றைய இளைஞர்களுக்கே!
இதுதான் தெரிந்த சுதந்திரம் ..............!
நாளைய நமது!
வருங்காலத் தூண்களுக்கு ????!
காந்திஎன்றால்....!
கம்பூன்றிய தாத்தாவாகவும் .,!
விடுதலையென்றால்.....!
விடுமுறையும் இனிப்பும் .,!
தமிழக வரலாற்றில் முதன்முறையாக!
புத்தம்புதுத் திரைப்படத்தோடும் .,!
சிறப்புப் பட்டிமன்றத்தோடும்!
முடிந்தே போகும்...!!
ஏ ., இளைஞனே !!
இந்தியக் குடிமகனே !!!
ஏமாளிகள் நாங்கள்!
சந்ததியர் உங்களை நம்பி!
வெள்ளையனிடம் போராடி!
வாங்கித்தந்த சுதந்திரமதை!
தானென்ற அகந்தையில்!
தெரியுமென்ற போதையில்!
மதிகெட்டு மமதையில்!
வீதியில் தொலைத்துவிட்டு!
எங்களைப்போல உங்களின்!
வாரிசுகளிடம் சேர்க்காமல் !
வாரிக் கொடுத்துவிட்டு!
மீண்டும் அடிமையாகிக் கொண்டிருக்கிறாய்!
அந்நிய மோகமென்னும்!
கிழக்கிந்தியக் கம்பெனியின்!
மாற்று உருவிடம் !!
வேண்டும் வேண்டும்!
இன்னும் ஒரு சுதந்திரம் !!
இனியாவது சுதந்திரம் !!!
ஆனால்.......!
யாரிடமிருந்து !?!?!?!?!?!?!?!
முடிவு செய் இன்றே !!
முயற்சி செய் நன்றே !! !
-------------------------------------!
சகோதர சகோதரிகளுக்கு!
இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் ,!
விடுதலைப் போராட்ட தியாகி ஒருவர்!
தொடர்கிறார் உங்களிடம்

கண்ணீர்.. கவிதை..காதலின் சறுக்கல்

கல்முனையான்
01.!
கண்ணீர்!
-------------!
எனது இதயத்தின் இடுக்குகளிலே!
கண்ணீரின் பாசி படிந்துள்ளதால்!
என் இதயத்தினுள் வர நினைப்பவர்கள்!
கவனம் பாசியில் வழுக்கி விழுந்துவிடுவீர்கள்!
சற்று தள்ளி நின்று எட்டிப்பாருங்கள்!
அங்கே நைல் நதியாய் என் கண்ணீரும்!
எவெரெஸ்ட் சிகரமாய் என் பெரு மூச்சும்!
மனதில் பாரமாய் இமய மலைச்சாரல்கள்!
என் இதயத்தின் இரத்த குழாய்களில்!
கண்ணீர்த்துளிகளும் இரத்தமும்!
போட்டி போட்டு மரதன் ஓட்டம் ஓடுகிறது!
யார் இறுதியில் மரணப் பரிசை பெறுவது என்று!
பரவாயில்லை என் கண் மட்டும்!
இன்னும் உறங்கவில்லை ஏனென்றால்!
அது வற்றாத கண்ணீரைச் சிந்தும்!
நயாகரா நீர் வீழ்ச்சியாகிட்டே....!
02.!
கவிதை!
------------!
காதலித்தால் கவிதை வருமாம்!
உண்மையோ நானறியேன்!
ஒன்று மட்டும் சொல்வேன் நான்!
க(னவு) விதை என்று!
காதலனும் காதலில் தோற்றவனும்!
புதிய, பழைய கனவுகளை மீட்க!
பண்படுத்திய இதய மண்ணிலே!
விதைக்கின்ற விதைகள்தான் இது!
சில வேளை அழகு என்ற கறையானும்!
வசதி என்ற எறும்புகளும்!
குடும்பம் என்ற நத்தையும்!
க(னவு)விதைகளை நாசம் செய்யும்!
அப்போதே விடடுக்கொடுக்க தயாராக!
உங்கள் கைகளிலே ஏந்துங்கள்!
நீங்கள் கனவுலகில் பெற்றெடுத்த உங்கள்!
அன்புக் குழந்தையை மட்டும்!
அது மட்டுமே உங்களுக்கு சொந்தம்!
மற்றதெல்லாம் மாறிவிடும்!
சந்தர்ப்ப சூழ்நிலை என்ற!
வெள்ளப் பெருக்கினால்....!
03.!
காதலின் சறுக்கல்..!
-------------------------!
வெண்மையான உடலுக்குள்ளே!
உண்மையை மறைத்து!
ஆண்மையை ஏமாற்றும்!
திறமை அது பெண்மை.!
இனிக்க இனிக்க பேசி!
பின் கண் சிவக்க சிவக்க அழுது!
உன் நாசி வழியே நீர் வடிய!
உன்னை அழ வைப்பதும் பெண்மை.!
உந்தன் மனதினை மாற்றி!
அதன் கோலத்தை குறைத்து பின்!
இவ் அகிலத்தையே ஏமாற்றும்!
ஒரு விச ஜந்து பெண்மை.!
ஒரு தடவை மனிதனும் ஏமாந்தான்!
இக் காதல் என்ற பெண்மையில்!
அதனால்தான் வாழ்க்கைப் பாதையில்!
சற்று சறுக்கி பின் எழுந்து விட்டான்.!
சற்று உற்றுப்பாருங்கள் அவனை!
தெரிகின்றதா காதல் வடு அவன் கண்ணில்!
தெரியாது... அது தெரியாது....!
அது கரைந்து போனது அவன் இதயத்தினுள்ளே..!
யாரும் அழவேண்டாம் இனிமேல்!
ஏன் தெரியுமா எமக்காகத்தானே!
அந்த வானம் அழுகிறது அதோடு!
அவனும் அழுகிறான்.!
அழுது முடித்து விட்டான்!
ஆனால் அவன் கண்கள் மட்டும்!
அடம் பிடிக்கிறது இமை மூட!
பரவாயில்லை பார்க்கலாம் நாளை..!
மன்னியுங்கள்.. உங்களையும்!
இந்த பெண்மையையும்!
அழ வைத்ததற்கு!
சென்று வருகிறேன் நான்

போதுமடா சாமி...2

த.சு.மணியம்
நாற்சார வீடுமங்கே நடுவாய் நிற்க!
நாலுபக்க வேலிகளும் முருங்கை காய்க்க!
காற்றோடு சலசலத்து தென்னை வாழை!
காலையிலே சாமி வைக்க மரத்தில் பூவும்!
தூற்றோடு துரவுகளும் சுரத்து முட்ட!
சுற்றிவந்து நீர் பருகும் கோழி, ஆடும்!
நேற்றோடு முடிந்திடுத்தே அவளின் வாழ்வில்!
நெஞ்சமின்று கலங்குகுதே நினைவை எண்ணி.!
பிள்ளைகளின் பின்னலினால் விமானம் ஏறி!
பிறந்தமண்ணைப் பிரிந்துவந்த அவளின் வாழ்வும்!
கொள்ளைபோயோ வருடமது இரண்டாய் நீள!
கொடுத்தஅந்த சோசல் பணம் எதுவோ ஆக!
பிள்ளைபெறு பார்க்கவந்து வருடம் இரண்டும்!
பெரும் பகுதி அவள் உழைப்போ சமையல்கட்டாய்!
வெள்ளையென நம்பி வந்தாள் கள்ளும் வெள்ளை!
வேதனையில் குமுறுகிறாள் மகனாய்ப் போச்சே.!
போகவிடு என்றவளும் பல நாட்கேட்க!
பொறுத்திரணை பேரனுக்கு ஆண்டு இரண்டும்!
தாகமுடன் களைப்படைந்த தாயின் சோகம்!
தனம்தேடும் தவிப்புடனே தனயன் ஏக்கம்!
வேகமுடன் முடிவெடுக்கும் திறனும் உள்ளாள்!
வேற்றிடத்தில் ஏதறிவாள் ஏதைச் செய்வாள்!
சோகமுடன் வாழ்வுமது கழிந்தே போக!
சொற்பதினம் பொறுத்திருக்காள் ஊர் போய்ச்சேர.!
கேடுகெட்ட மானுடனே கேளும் கொஞ்சம்!
கேள்வியது உன் வாழ்வோ தினமும் இங்கே!
பாடுபட்டு வழர்த்துவிட்ட பாசத்துக்கா!
பணம் தேட பக்குவமாய் இதனைக் கொண்டாய்!
கூடுகட்டி முட்டையிட்ட குற்றம் என்றால்-நீ!
கூண்டோடு இங்கிருக்க ஏதோ காதை!
நாடுவிட்டு நாடு வந்தும் உன்தன் மூளை!
நல்லவற்றை நினைக்குதில்லை ஏனோ தானோ.!
த.சு.மணியம்

தூக்கம் விற்ற காசுகள்

ரசிகவ் ஞானியார்
இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை !
வந்தவனுக்கோ சென்று விட ஆசை !
இதோ !
அயல்தேசத்து ஏழைகளின் .. !
கண்ணீர் அழைப்பிதழ் ! !
விசாரிப்புகளோடும் !
விசா அரிப்புகளோடும் வருகின்ற ... !
கடிதங்களை நினைத்து நினைத்து !
பரிதாபப்படத்தான் முடிகிறது ! !
நாங்கள் பூசிக்கொள்ளும் !
சென்டில் வேண்டுமானால்... !
வாசனைகள் இருக்கலாம்! !
ஆனால் !
வாழ்க்கையில்...? !
தூக்கம் விற்ற காசில்தான்... !
துக்கம் அழிக்கின்றோம்! !
ஏக்கம் என்ற நிலையிலேயே... !
இளமை கழிக்கின்றோம்! !
எங்களின் !
நிலாக்கால நினைவுகளையெல்லாம்... !
ஒரு !
விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு !
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே !
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ! !
மரஉச்சியில் நின்று ... !
ஒரு !
தேன் கூட்டை கலைப்பவன் போல! !
வாரவிடுமுறையில்தான்.. !
பார்க்க முடிகிறது !
இயந்திரமில்லாத மனிதர்களை! !
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு !
எழுந்த நாட்கள் கடந்து விட்டன! !
இங்கே !
அலாரத்தின் எரிச்சல் கேட்டு !
எழும் நாட்கள் கசந்து விட்டன! !
பழகிய வீதிகள் !
பழகிய நண்பர்கள் !
கல்லூரி நாட்கள் !
தினமும் !
ஒரு இரவு நேர !
கனவுக்குள் வந்து வந்து !
காணாமல் போய்விடுகிறது! !
நண்பர்களோடு !
ஆற்றில் விறால் பாய்ச்சல் !
மாட்டுவண்டிப் பயணம் !
நோன்புநேரத்துக் கஞ்சி !
தெல்கா பம்பரம் சீட்டு கோலி என !
சீசன் விளையாட்டுக்கள் ! !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து... !
விளையாடி மகிழ்ந்த !
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் ! !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்... !
விசாவும் பாஸ்போட்டும் வந்து... !
விழிகளை நனைத்து விடுகிறது.! !
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த !
நண்பர்களின் திருமணத்தில் ! !
மாப்பிள்ளை அலங்காரம் ! !
கூடிநின்று கிண்டலடித்தல் ! !
கல்யாணநேரத்து பரபரப்பு! !
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் ! !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி !
வறட்டு பிடிவாதங்கள் ! !
சாப்பாடு பரிமாறும் நேரம்... !
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை! !
மறுவீடு சாப்பாட்டில் !
மணமகளின் ஜன்னல் பார்வை! !
இவையெதுவுமே கிடைக்காமல் !
கண்டிப்பாய் வரவேண்டும் என்ற !
சம்பிரதாய அழைப்பிதழுக்காக... !
சங்கடத்தோடு !
ஒரு !
தொலைபேசி வாழ்த்னனூடே... !
தொலைந்துவிடுகிறது !
எங்களின் நீ..ண்ட நட்பு! !
எவ்வளவு சம்பாதித்தும் என்ன? !
நாங்கள் !
அயல்தேசத்து ஏழைகள்தான்! !
காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற !
சொந்தங்களின்... !
நண்பர்களின் ... !
மரணச்செய்திக்கெல்லாம் !
அரபிக்கடல் மட்டும்தான்... !
ஆறுதல் தருகிறது! !
ஆம் !
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்... !
ஒரு !
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... !
கரைந்துவிடுகிறார்கள்;! !
இறுதிநாள் நம்பிக்கையில்தான்... !
இதயம் சமாதானப்படுகிறது! !
இருப்பையும் இழப்பையும் !
கணக்கிட்டுப் பார்த்தால் !
எஞ்சி நிற்பது !
இழப்பு மட்டும்தான்... !
பெற்ற குழந்தையின் !
முதல் ஸ்பரிசம் ... !
முதல் பேச்சு... !
முதல் பார்வை... !
முதல் கழிவு... !
இவற்றின் பாக்கியத்தை !
தினாரும் , திர்ஹமும் !
தந்துவிடுமா? !
கிள்ளச்சொல்லி !
குழந்தை அழும் சப்தத்தை... !
தொலைபேசியில் கேட்கிறோம்! !
கிள்ளாமலையே !
நாங்கள் தொலைவில் அழும் சப்தம் !
யாருக்குக் கேட்குமோ ? !
!
ஒவ்வொருமுறை !
ஊருக்கு வரும்பொழுதும்... !
பெற்ற குழந்தையின் !
வித்தியாச பார்வை... !
நெருங்கியவர்களின் !
திடீர்மறைவு ... !
இப்படி புதிய முகங்களின் !
எதிர்நோக்குதலையும்... !
பழையமுகங்களின் !
மறைதலையும் கண்டு... !
மீண்டும் !
அயல்தேசம் செல்லமறுத்து !
அடம்பிடிக்கும் மனசிடம்... !
!
தங்கையின் திருமணமும்... !
தந்தையின் கடனும்... !
பொருளாதாரமும் வந்து... !
சமாதானம் சொல்லி !
அனுப்பிவிடுகிறது !
மீண்டும் அயல்தேசத்திற்கு! !
- ரசிகவ் ஞானியார் !
துபாய் !
!
Mob : 050 - 4231109

ஓர் இறைவனின் சோகம்

நண்பன்
நண்பன் !
!
இயற்கையேற்க !
மறுக்கும் விளக்கத்தில் !
சிக்கித் தவிக்கும் !
பிறப்பு !
இறையேற்க !
மறுக்கும் மனிதர்கள் !
மத்தியில் வாழ்ந்த !
வாழ்க்கை !
இரக்கமற்றவர்கள் !
மறுத்த நீதியால் !
சிதைந்த உடலுகுத்த !
உதிரத்தால் மரணம் !
வடிந்த ரத்தம் ஏந்தப்பட்டது !
ஒரு அன்பான பெண்ணினுடைய !
மற்றுமொரு !
நம்பிக்கையாளனுடைய கோப்பைகளில். !
புலம் பெயர்ந்த கோப்பைகள் !
நிழலுலகின் !
இருண்ட வீதிகளில் !
தொலைந்தே போய்விட்டது !
நம்பிக்கையாளர்களின் !
மீண்டும் !
ஒரு தேடலுக்காக. !
குறியீடுகளில் !
புதைந்து போன !
வரலாற்று மோசடிகளில் !
அனைத்தையுமிழந்துவிட்டு !
நான் மட்டுமே மிஞ்சினேன் !
இறைவனாக உயர்த்தப்பட்டு

ஆள்களற்ற தொலைபேசி

தீபச்செல்வன்
ஆள்களற்ற தொலைபேசி!
நமது மொழியில் ஏதோ!
பேசுகின்றன!
நீயும் நானும் பேசுவது!
கம்பிகளின் வழியாய்!
பாடலாக வழிகிறது!
நேற்று நீ பேசிவிட்டுப்போக!
நாள் முழுக்க!
கொட்டிக்கொண்டிருந்தது!
உனது சொற்கள்!
உனது கண்களும்கூட!
கம்பிகளின் ஊடே!
பேசிக்கொண்டிருந்தது!
தொலைபேசியின் ஊடாக!
நமது குரல்கள்!
இணைந்துகிடக்கிற!
காற்றின் வெளியில்!
நீயும் நானும்!
எங்கிருக்கிறோம்!
எனது கண்கள் கரைந்து விட!
உனது முகம்!
நிரம்பிவிடுகிறது!
நமது இருதயங்களை சிலுவையில்!
அறைகிறது!
நீ இல்லாத நிமிடத்தின் ஒரு துளி!
நேற்று!
நமது உரையாடலை!
அறுத்த வேகமான காற்று!
இன்று!
என் தனிமைமீது!
உன் சொற்களால்!
பேசிக்கொண்டிருக்கிறது!
காற்றில்!
கலந்திருந்தன நமது சொற்கள்!
நாம்!
இன்னும் பேசியபடியிருப்போம்!
காற்று நமதருகில் வீசுகிறது!
நீ பேசாத!
தொலைபேசி!
கையிலிருந்து தவறி வீழ்கிறது.!
-தீபச்செல்வன்

முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை

ரோஷான் ஏ.ஜிப்ரி
முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை!
----------------------------------------------------!
இது இக்கணமே!
உடைந்துநொறுங்கும் சாத்தியங்களால்!
நிரப்பப்பட்டிருப்பது தெளிவாகிற்று !
இன்றைக்கும் கனவுகள்!
எழுந்து விழிப்பதற்கு ஏதுவாக!
அழகும்,பதுமையும் நிறைந்த!
பெரும் தரித்திரங்களை அழைத்துவந்து!
நிறுத்திவிடுகிறது வாசலில்!
இதிலிருந்தே அறியமுடிகிறது!
இவை பாதுகாப்பற்ற மேற்பூச்சுநிறைந்த!
படாடோபமென்று!
ஒழுங்கு படுத்தல்களோ,உறுதிப்பாடோஇன்றி!
சிக்கல்களை தோற்றுவிக்கிறபடி!
தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த நொடிவரை!
எவரையும் பயமுறுத்தி வீழ்த்த பயிற்றப்பட்ட!
மிருகத்தைப்போல்!
உறுமியபடி துரத்திக்கொண்டிருக்கிறது காலம்

பயமாகவேயிருக்கிறது எனக்கு

கோகுலன்
நீயின்றி என்னால் வாழமுடியுமாவென !
பயமாகவேயிருக்கிறது!
நமது சமீபத்திய நெருக்கத்தில்...!
துருவங்களின் கடைசி அணு வரையிலுமான!
உலகின் அனைத்தையும் ஒளிபொருந்திய !
உன் முகத்தில் காண்கிறேன் நான்!!
என் மகிழ்ச்சிக்கும் ஊக்கத்திற்குமான!
விமர்சனங்களை உன் முகவரிகள்!
தினமும் தாங்கியபடியிருக்க, !
தூங்கும் நேரத்தினும் அதிகப்படியாய் !
உன் முகத்தையே மொய்த்துக்கிடக்கின்றன !
என் கண்கள்!!
உன் மடியிலும் மார்பிலும் !
ஊர்ந்துகொண்டிருப்பதிலேயே சுகம்கண்ட !
என் விரல்நுனிகளுக்கு நீ ரேகைகளின் வழியே!
புத்துயிர் பாய்ச்சுவதையும் என்னால்!
மறுக்கமுடியாதுதான் !
விரல்களின் இயக்கத்தினூடே !
தூக்கம் வென்றுவிடும் நள்ளிரவிலும் !
நான் தூங்கியபின் சற்றுநேரம் விழித்திருந்தே !
நீ தூங்கிப்போவாய் என்பதையும் அறியும் நான் !
அதே எண்ணங்களின் மிச்சங்களோடே!
அதிகாலை முகம் கழுவும் முன்னரே!
உன்னை உசுப்பவும் தயாராகிறேன்!
என் படுக்கையின் மேல் !
தலையணையின் இருப்பைவிடவும்!
என் படுக்கையிலும் உனது இருப்புதான் !
முக்கியமாய்ப்போகிறது !
இப்போதைய இரவுகளில்!!
மார்பின்மீதும் மடியின்மீதும் !
உன் வெப்பம் இதமாகவே இருந்தாலும்!
உன் சமீபத்திய நெருக்கம் குறித்து !
கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது,!
என் மடிக்கணினியே! !

ஒரு காகம் பல.. கனவுகளின்

முஹம்மட் மஜிஸ்
ஒரு காகம் பல நம்பிக்கை.. கனவுகளின் தொடர்ச்சி!
!
01.!
ஒரு காகம் பல நம்பிக்கை!
---------------------------------!
இரவு கழித்து!
தூங்கிய ஒர் பொழுதில்!
நிர்வாணக்கனவுகளுக்கு!
இடைஞ்சலாய்!
கிணற்றடி வேலியில்தனித்திருந்த!
நரை கலந்த ஓர் கிழட்டு!
காக்கை கத்தி ஆடை!
களையாமலே கனவு!
முடிந்தாயிற்று!
காக்கைகளின் தொன்மையான!
ஜீவியத்தில் இது வரவுச்செய்தியென்று!
அதன் அழுகை வந்த திசை பார்த்து!
பழய கதையை!
புதுமையாக சொல்லி முடித்தாள்!
அம்மா!
இனந்தெரியாதோரால்!
இணங்காணப்பட்ட என்!
அப்பனும் வெற்றிடம் நிரப்பிய!
விஸயம் தெரியாமல் எழுதிப்போட்ட!
வேலையும் வரப்போவதாக!
ஆரூடம் சொன்னால்!
அம்மா!
பகல் கடத்தி!
பவுடர்பூசிய சாயங்காலப்பொழுது!
நிறத்தால் தனித்துவம் காடடிய!
அந்த காகம்!
சொண்டு;சொரியத்தான்!
போயிருக்கனும் போல!
மின்சாரக்கம்பியில்!
அதன் இறுதி அத்தியாயம்!
எழுதப்பட்டிருந்தது!
கிணற்றடி வேலியில்!
அதன் சாவை அது முன்னறிவிப்பு!
செய்திருந்தது!
பாவம் அம்மா!
நாளையும் எனக்கு விரசமாய்!
கனவுகள் வரலாம்!
ஒன்றல்ல பல நூரு காக்கைகள்!
கிணற்றடி வேலியில்!
ஒன்று சேர்ந்து கத்தலாம்!
இப்போதெல்லாம் அம்மாவின்!
நாட்கள் நம்பிக்கையோடு!
மட்டுமே நகர்கிறது!
!
02.!
கனவுகளின் தொடர்ச்சி!
----------------------------!
நீண்டதொரு பயணத்தின்!
இடைவெளியில் சுயம் பற்றிய!
கனவுகளோடு விழிக்கிறேன்!
இருள் சூழ்ந்து மரணத்தின்!
காலடிச்சத்தம்இடைவிடாது கேட்கும்ம பிரம்மைக்குள்!
மனது மூழ்கிப்போனது!
பத்திரப்படுத்த முடியாத கனவுகளின் எண்ணிக்கை!
அதிகரிக்கிறது கோரிக்கையும் விண்ணப்பமும்!
நீளுகிறது இந்த இரயிலை போல!
போகுமிடமோ வந்து விட்டது!
கனவுகள் மடடுமே தொடர்கிறது!
இந்த உலகமும் ரயில்!
பயணமும் ஒன்றுதான்!
இறுதியில் பயணச்சீட்டுக்கூட!
மிஞ்சுவதில்லை