தூக்கம் விற்ற காசுகள் - ரசிகவ் ஞானியார்

Photo by Chris Barbalis on Unsplash

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை !
வந்தவனுக்கோ சென்று விட ஆசை !
இதோ !
அயல்தேசத்து ஏழைகளின் .. !
கண்ணீர் அழைப்பிதழ் ! !
விசாரிப்புகளோடும் !
விசா அரிப்புகளோடும் வருகின்ற ... !
கடிதங்களை நினைத்து நினைத்து !
பரிதாபப்படத்தான் முடிகிறது ! !
நாங்கள் பூசிக்கொள்ளும் !
சென்டில் வேண்டுமானால்... !
வாசனைகள் இருக்கலாம்! !
ஆனால் !
வாழ்க்கையில்...? !
தூக்கம் விற்ற காசில்தான்... !
துக்கம் அழிக்கின்றோம்! !
ஏக்கம் என்ற நிலையிலேயே... !
இளமை கழிக்கின்றோம்! !
எங்களின் !
நிலாக்கால நினைவுகளையெல்லாம்... !
ஒரு !
விமானப்பயணத்னனூடே விற்றுவிட்டு !
கனவுகள் புதைந்துவிடுமெனத் தெரிந்தே !
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ! !
மரஉச்சியில் நின்று ... !
ஒரு !
தேன் கூட்டை கலைப்பவன் போல! !
வாரவிடுமுறையில்தான்.. !
பார்க்க முடிகிறது !
இயந்திரமில்லாத மனிதர்களை! !
அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு !
எழுந்த நாட்கள் கடந்து விட்டன! !
இங்கே !
அலாரத்தின் எரிச்சல் கேட்டு !
எழும் நாட்கள் கசந்து விட்டன! !
பழகிய வீதிகள் !
பழகிய நண்பர்கள் !
கல்லூரி நாட்கள் !
தினமும் !
ஒரு இரவு நேர !
கனவுக்குள் வந்து வந்து !
காணாமல் போய்விடுகிறது! !
நண்பர்களோடு !
ஆற்றில் விறால் பாய்ச்சல் !
மாட்டுவண்டிப் பயணம் !
நோன்புநேரத்துக் கஞ்சி !
தெல்கா பம்பரம் சீட்டு கோலி என !
சீசன் விளையாட்டுக்கள் ! !
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து... !
விளையாடி மகிழ்ந்த !
உள்ளுர் உலககோப்பை கிரிக்கெட் ! !
இவைகளை நினைத்துப்பார்க்கும்போதெல்லாம்... !
விசாவும் பாஸ்போட்டும் வந்து... !
விழிகளை நனைத்து விடுகிறது.! !
வீதிகளில் ஒன்றாய் வளர்ந்த !
நண்பர்களின் திருமணத்தில் ! !
மாப்பிள்ளை அலங்காரம் ! !
கூடிநின்று கிண்டலடித்தல் ! !
கல்யாணநேரத்து பரபரப்பு! !
பழையசடங்குகள் மறுத்து போராட்டம் ! !
பெண்வீட்டார் மதிக்கவில்லை எனகூறி !
வறட்டு பிடிவாதங்கள் ! !
சாப்பாடு பரிமாறும் நேரம்... !
எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை! !
மறுவீடு சாப்பாட்டில் !
மணமகளின் ஜன்னல் பார்வை! !
இவையெதுவுமே கிடைக்காமல் !
கண்டிப்பாய் வரவேண்டும் என்ற !
சம்பிரதாய அழைப்பிதழுக்காக... !
சங்கடத்தோடு !
ஒரு !
தொலைபேசி வாழ்த்னனூடே... !
தொலைந்துவிடுகிறது !
எங்களின் நீ..ண்ட நட்பு! !
எவ்வளவு சம்பாதித்தும் என்ன? !
நாங்கள் !
அயல்தேசத்து ஏழைகள்தான்! !
காற்றிலும் , கடிதத்திலும் வருகின்ற !
சொந்தங்களின்... !
நண்பர்களின் ... !
மரணச்செய்திக்கெல்லாம் !
அரபிக்கடல் மட்டும்தான்... !
ஆறுதல் தருகிறது! !
ஆம் !
இதயம் தாண்டி பழகியவர்களெல்லாம்... !
ஒரு !
கடலைத்தாண்டிய கண்ணீரிலையே... !
கரைந்துவிடுகிறார்கள்;! !
இறுதிநாள் நம்பிக்கையில்தான்... !
இதயம் சமாதானப்படுகிறது! !
இருப்பையும் இழப்பையும் !
கணக்கிட்டுப் பார்த்தால் !
எஞ்சி நிற்பது !
இழப்பு மட்டும்தான்... !
பெற்ற குழந்தையின் !
முதல் ஸ்பரிசம் ... !
முதல் பேச்சு... !
முதல் பார்வை... !
முதல் கழிவு... !
இவற்றின் பாக்கியத்தை !
தினாரும் , திர்ஹமும் !
தந்துவிடுமா? !
கிள்ளச்சொல்லி !
குழந்தை அழும் சப்தத்தை... !
தொலைபேசியில் கேட்கிறோம்! !
கிள்ளாமலையே !
நாங்கள் தொலைவில் அழும் சப்தம் !
யாருக்குக் கேட்குமோ ? !
!
ஒவ்வொருமுறை !
ஊருக்கு வரும்பொழுதும்... !
பெற்ற குழந்தையின் !
வித்தியாச பார்வை... !
நெருங்கியவர்களின் !
திடீர்மறைவு ... !
இப்படி புதிய முகங்களின் !
எதிர்நோக்குதலையும்... !
பழையமுகங்களின் !
மறைதலையும் கண்டு... !
மீண்டும் !
அயல்தேசம் செல்லமறுத்து !
அடம்பிடிக்கும் மனசிடம்... !
!
தங்கையின் திருமணமும்... !
தந்தையின் கடனும்... !
பொருளாதாரமும் வந்து... !
சமாதானம் சொல்லி !
அனுப்பிவிடுகிறது !
மீண்டும் அயல்தேசத்திற்கு! !
- ரசிகவ் ஞானியார் !
துபாய் !
!
Mob : 050 - 4231109
ரசிகவ் ஞானியார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.