தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அறிவு தரும்.. என் தாய் வீடு.. சமைக்கிறவன்

வித்யாசாகர்
அறிவு தரும் ஆனந்தம்.. என் தாய் வீடு.. சமைக்கிறவன் சொல்லாத கதை!
01.!
அறிவு தரும் ஆனந்தம்!
------------------------------!
உலகே உலகே காது கொடு!
ஒரு குழந்தைப் படிக்கப் பாதைக்கொடு!
மனமே மனமே பாடுபடு – படிப்பால்!
வாழ்வை வென்று எடு!!
படிக்கப் படிக்க வளர்ந்துவிடு!
எம் வறுமைக் கோட்டை யழித்துவிடு!
ஏழை எளியவர் துயரத்தை – அறிவுக்!
கண்ணைத் திறந்தே யொழித்துவிடு!!
படிப்பு கொடுக்கும் தைரியத்தில்!
பட்டம் சுமந்துக் காட்டிவிடு!
படிப்பால் நாளை உலகத்தின்!
பசுமைப் போற்ற முயற்சி யெடு!!
சேர்த்து சேர்த்து வைத்தப் பணம்!
வீடு போனால் போனதுதான்!
படித்து உழைத்துப் பெற்றக் கல்வி!
ஒரு கடுகும் குறையாதுக் காத்திடுமே!!
மிரட்டி மிரட்டிப் போகின்றார் – உலகை!
கல்லார் மிரட்டி வாழ்கின்றார் –!
என்னாளென்றுத் தெரியாது – வெளிச்சம்!
எம் கல்வியாலன்றுப் பிறந்திடுமே!!
பாடம் சுமக்கும் மாணவரே!
காலம் சுமக்க வாழ்பவரே !
உடம்பை சுமக்கும் நத்தைப்போல்!
எம் தேசம் சுமந்து நடப்பவரே!!
உறங்கா கடலின் அலைபோலே!
உழைத்து உயரும் மழலைகளே!
விரிந்த வானக் குடைபோலே!
மண்ணைக் காக்கப் போகும் மறவர்களே!!
மாறும் மாறும் உலகமெலாம்!
மாற்றிப் போடப் படித்திடுவோம்!
மாறுதல் காணும் ஒருதினத்தில் !
நல்லோர் வாழக் கற்றிடுவோம்!!
!
02.!
என் தாய் வீடு.. !
------------------------!
முன்பெல்லாம் எனக்கு!
அம்மா என்று அழைக்கவாவது!
ஒருத்தி இருந்தாள்;!
என்றேனும் அவளைப் பார்க்கப்!
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்!
எனக்கொரு புடவை வாங்கி!
வைத்திருப்பாள்;!
முடியாவிட்டாலும்!
எழுந்து எனக்குப் பிடித்ததை!
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;!
உதவி செய்யப் போனால் கூட!
வேண்டாண்டி இங்கையாவது நீ!
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.!
என்னதான் நான் பேசாவிட்டாலும்!
இரண்டொரு நாளைக்கேனும்!
எனை அழைத்து எப்படி இருக்க..!
என்னடி செய்த..!
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;!
இப்போது எனக்கென்று யாருமேயில்லை.!
நானெப்படி இருக்கேனோ என்று!
வருந்த அம்மா போல் யார் வருவா???!
அவள் ஊட்டிவளர்த்த சோறும்!
கட்டி அனைத்த அன்பையும் தர!
அவளைப்போல் இனி யாரிருக்கா???!
அம்மா இல்லாத வீடென்றாலும்!
எப்பொழுதேனும் அங்கேச் சென்று!
அவள் இருந்த இடத்தை, அவள் தொட்டப் பொருட்களை யெல்லாம்!
தொட்டுப் பார்க்க நினைப்பேன்,!
எனக்கென்று அங்கே ஏதேனும்!
வாங்கி வைக்காமலாப் போயிருப்பாளென்று கூட நினைப்பேன்.!
ஒரு சொட்டுக் கண்ணீராவது!
விட்டுத் தானே போயிருப்பாள்’!
இல்லாவிட்டாலென்ன, பொருளென்ன பொருள்!
எனக்கென்று அவள்!
அங்கே எத்தனை நினைவினை சேர்த்துவைத்து!
அழுதிருப்பாள்?? அந்த ஒரு சொட்டுக்!
கண்ணீரேனும் ஈரம் காயாமல் எனக்காக இருக்காதா? என்றுத்!
தோன்றும்.!
ஆனால் –!
எத்தனை இலகுவாகச் சொல்கிறதுயென் வீடு!
அம்மா இல்லாத அந்த வீட்டில்!
உனக்கென்னடி வேலை'யென்று!!!
!
03.!
சமைக்கிறவன் சொல்லாத கதை

இறைவாழ்வு.. ஒரு கோப்பை

ந.அன்புமொழி
இறைவாழ்வு.. ஒரு கோப்பை தேனீர்..!
-----------------------------------------!
01. !
இறைவாழ்வு!
..............!
பசித்து பசித்து!
வலியால் வதங்கும் !
உடல்களுக்கிடையில்,!
பசித்து பசித்து !
வலித்துச் சுருங்கும் !
குடல்களுக்கிடையில், !
முட்டிமோதி !
முடிந்த வரை !
போராட்டம்.!
வலியினை !
ஏற்று !
இயன்றவரையில்!
உயிரினைக் காக்க!
தொடர் போரில் !
இறைவன். !
தன் மாபெரும்!
மனிதப் படைப்பு!
மடிந்துவிடக்கூடாதே!
என்று..!
மொழியாம் மதமாம் !
இனமாம் தாய்மண்ணாம்.!
இதில் மதச்சிறப்போ ?!
இறைவன் வகுத்தளித்த!
வழிமுறையாம்.!
பல கடவுள்களாம்!
பல மதங்களாம்!
பல மதவுட்பிரிவுகளாம்.!
இவைகளுக்குள்!
சண்டைகள்!
வன்முறைகள்!
படுகொலைகள்.!
ஓ !
மாண்புமிகு மனிதயினமே..!
இறைவனுக்கு நீங்கள் !
இன்பத்தைத் தான் !
தரவில்லை..!
தயவுசெய்து !
துன்பத்தைத் தராதீர்கள். !
இறைவன் !
மனம் தளர்ந்தால்..!
இறைவன் !
மனம் தளர்ந்தால்..!
பேரிழப்பு.!
பேரழுகை.!
பேரழிவு. !
நிச்சயம்..!
நிச்சயம். !
பசிக்கும் வலியின் !
உடமையாளர்களுக்கல்ல.!
02. !
ஒரு கோப்பை தேனீர் !
..........................!
காலை எழுந்து !
கடன்களை முடித்து,!
கசக்கியதை கட்டி !
குளித்தும் கூழின்றி, !
ஒப்பனையில் ஒளிந்து!
கல்லூரி கிளம்பினாள் !
அவள்.!
கரும்பாய்!
பேரூந்தில் நுழைந்தவள்!
சக்கையாய் வெளிப்பட்டாள்!
கல்லூரி வாசலில்.!
புதிய தமிழில் ஆய் ஆய்கள், !
விசாரிப்புகளாம்..!
பேரூந்தால் தாமதம் !
வேகமாய் நடந்தால்!
உடன்படிப்பவன் !
கல்லூரி வாசலில்,!
அதே ஆய் ஆய்.!
என்ன தாமதமா? அவன்!
சாப்பிட தாமதமாகியது அவள். !
ம்.. நீ கொடுத்து வைத்தவள்!
ஏன்!
சாப்பிட்டு வருகிறாயே!
இரண்டு வயிறுகளும் !
ஏளனமாய் சிரித்தன!
இரண்டு முட்டாள்களை நினைத்து.!
ஆம் இரண்டுமே பொய்கள்.!
சரி கூட வாயேன் சாப்பிட்டு வரலாம்!
அய்யய்யோ நான் வரலப்பா.. !
ப்ளீசு!
சரி டீ வேண்டும்னா சாப்பிடறேன். !
அதுவும் சொல்லிடறேன் !
என்னிடம் பணமில்ல!
அந்த கவல உனக்கெதுக்கு !
நீ வந்தால் போதும்,!
சரி ஒரு நிமிடம் இரு வந்துடறேன்!
கல்லூரிக்குள் ஓடியவன் !
கடன் காரனாக திரும்பி வந்தான். !
வா போகலாம்!
கல்லூரி சினிமா அரசியல் என !
தேனீர் கடையில் தேவையில்லா பேச்சுக்கள். !
இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்தவள் !
மகிழ்வோடு அருந்தினாள், !
கொஞ்சம் கொஞ்சமாய்!
பார்த்து பார்த்து!
உறிஞ்சி உறிஞ்சி!
சுவைத்து சுவைத்து,!
ஒரு கோப்பை சிறப்புத் தேனீரை. !
மயக்கம் தெளிந்து நிமிர்ந்து அமர்ந்தது !
அவளின் பரிதாப வயிறு. !
அநிச்சையாய் நடைபெறும்!
இவ்வளவு பெரிய நாடகம் !
ஒரு !
தேனீருக்குத்தானென்பது !
இங்கு எந்த (..........க்கு) !
இழிவுக்குத் தெரியப்போகிறது !
இவளையும் சேர்த்து.!
வெறுத்துப் பேசியது!
அவளின்!
வலிக்கும் வயிறு.!
!
அன்புடன்!
ந.அன்புமொழி!
சென்னை

பெரும்பாக்கியம்

வீ.இளவழுதி
உன்னின் ஒவ்வொரு செயலையும்!
உள்ளத்தின் பெருஉவகையுடன்... !
உடனிருந்த பார்த்து!
உன்னை ரசித்த !
அந்த தருணங்களும்...!
உன் செல்ல சண்டைகளின்!
உளமான அன்பையும்...!
மீண்டுமொரு முறை!
அனுபவித்திடும் பாக்கியம்!
கிடைத்திடுமா - என் அன்பே?!

பயணங்களின் விரையங்கள்

ராம்ப்ரசாத், சென்னை
பயணங்களின் கண்களில் படாமல்!
போர்வைக்குள் பதுங்கியிருந்தான் அவன்...!
ஓட அவனுக்கு விருப்பமென்றாலும்!
துரத்த எனக்கு விருப்பமில்லை...!
எத்தனை தூரம் அவன் ஓடினாலும்!
அவனுக்கு மூச்சிரைப்பதில்லை...!
ஆனால் என் பணப்பை!
மூர்ச்சையாகிவிடுகிறது...!
ஆக பலவீனங்கள் என் பக்கமென்றாலும்!
அவன் பதுங்கியே இருந்தான்...!
முடிவில் போர்வையை வில‌க்கினேன்!
நான் துரத்தவில்லையெனில்!
அவன் பதுங்கலில்!
விரைந்துவிட‌க்கூடும்

பசி

ஜாவேத் அக்தர்
ஜாவேத் அக்தர்!
!
பொழுது புலர கண்கள் திறந்து!
மீண்டும் உயிர் பிழைத்தேன்!
வயிற்றின் இருளிலிருந்து!
மூளையின் புகைமூட்டம் வரை!
பாம்பாய் ஊர்ந்தோர் எண்ணம்!
இன்று மூன்றாவது நாள்!
இன்று மூன்றாவது நாள்!
அறையில் ஒருவித அமைதி!
உறைந்து கிடக்கிறது!
ஒரு தரை, ஒரு கூரை!
நான்கு சுவர்கள்- என்னுடன்!
எவ்வித தொடர்புமில்லாமல்!
பார்வையாளர்களாய் பார்த்தபடி!
எதிர் ஜன்னல் வழி!
படுக்கையில் படரும்!
சுடு வெயில் கதிர்கள்!
குத்துகிறது முகத்தில்!
உறவுகளின் கூர்மையோ!
வேலி முட்களைப் போல்!
ஏழ்மையைக் குத்திக் காட்டும்!
கண்களைத் திறக்கிறேன்!
வெறுமையாய் இருக்கிறேன்!
ஓடு மட்டுமே மிஞ்சியிருக்கிறது!
படுக்கையில் கிடக்கிறது!
என்னுடைய பூத உடல்!
ஜீவனற்றக் கண்களுடன்!
அறையை அலசுகிறேன்!
இன்று மூன்றாவது நாள்!
இன்று மூன்றாவது நாள்!
!
நன்பகல் வெம்மையில்!
நடக்கிறேன் திக்கற்று!
நீண்ட சாலையின்!
இருபுறக் கடைகளிலும்!
பார்வையில் பட்டது!
பெயர்ப் பலகைகளை!
வாசிக்க முடியாது!
வந்து போகிறார்கள்!
வழிப்போக்கர்கள்!
அருகிலிருந்து கடந்தும்!
மங்கலாகத் தெரிகிறார்கள்!
முகமற்றவர்களைப் போல!
பாதை நிரப்பும்!
கடைகளில் பெருஞ்சத்தம்!
கெட்டவார்த்தை வார்த்தைகள்!
வானொலி ஓசைகள்!
தூரத்தின் எதிரொலிகள்!
அனைத்தும் கேட்கிறது!
பார்ப்பது அனைத்தும்!
கனவாய் தெரிகிறது!
இருப்பது போலும்!
இல்லாதது போலும்!
நன்பகல் வெம்மையில்!
நடக்கிறேன் திக்கற்று!
எதிர்வரும் சந்தியில்!
பார்வையில் படுகிறது !
நீர்க் குழாய் ஒன்று!
திடமாய் இருக்கும் நீர்!
சிக்குகிறது தொண்டையில்!
வயிற்றில் காற்று!
நிரப்பியதாய் காட்சியளிக்கிறது!
மயக்கமாக வருகிறது!
உடலெங்கும் வேர்க்கிறது!
இனியும் வலுவில்லை!
இன்று மூன்றாவது நாள்!
இன்று மூன்றாவது நாள்!
எங்கும் இருள் சூழ!
கரையில் நிற்கிறேன்!
கல்லாலான படிகளில்!
படுத்துக் கிடக்கிறேன்!
என்னால் எழ முடியாது!
வானத்தைப் பார்க்கிறேன்!
வானமெனும் தட்டில்!
நிலாவெனும் சப்பாத்தி!
கனத்த இமைகள் தாழ்கின்றன!
நிலவெளிகள் மறைகின்றன!
சுழல்கிறது இவ்வுலகம்!
வீட்டில் அடுப்பிருந்தது!
தினமும் சமையல் நடந்தது!
தங்கமாய் சப்பாத்திகள்!
சுடச்சுடச் சாப்பாடு!
திறக்கவில்லை கண்கள்!
காரணம் நான் சாகப் போகிறேன்!
மாறுபட்டவள் அன்னை!
தினமும் உணவூட்டுவாள்!
அந்த குளிர்ந்த கைகளால்!
தீண்டுகிறாள் முகத்தை!
ஆணைக்கு ஒரு பிடி!
குதுரைக்கு ஒரு பிடி!
கரடிக்கும் ஒரு பிடி!
இது மரணமா?!
இல்லை மயக்கமா?!
எதுவானாலும் ஏற்புடையதுதான்!
இன்று மூன்றாவது நாள் !
இன்று மூன்றாவது நாள் !
!
மொழிபெயர்ப்பு!
மதியழகன் சுப்பையா

ஆடுகளுக்காக

சம்பூர் வதனரூபன்
அடைக்கப்பட்ட ஆடுகளின் விடுதலை யாசகம்!
விமர்சிக்கப்பட்டு முடிவதற்குள்ளாக!
சலனமின்றி மூப்படைகிறது!
சந்ததிகளின் ஆயுள்.!
விடியலைப் பறைசாற்றும் நோக்கில்!
ஆர்ப்பரித்த சேவல்களால்!
வாழ்தலின் வேட்கை அதிகரித்து!
உயிர்த்தெழுந்த போதெல்லாம்!
சேவல்களின் தலைகள் பலியிடப்படுகின்றன.!
சிறை மீட்பாளர்கள்!
சிந்திக்கும் அவகாசத்தில்!
கூண்டுக்குள் வேட்டையாடல்கள்!
விஸ்தரிப்புடன் அரங்கேறி முடியும்.!
கசாப்புக் கடைக்காரனின்!
நீட்டப்பட்டிருக்கும் கைகளின் முடிவிலுள்ள!
பிடியளவு தழைகளையும்!
ருசித்துத் தின்னும் ஆட்டின்!
இறுதி நிமிட வாழ்தலின்!
நிதானத்திற்கு நிகரானது!
ஆதிக்குடிகளின்!
நம்பிக்கையும், தீர்மான நிராகரிப்பும், எதிர்ப்பும்.!
ஓர்மத்துடன்!
ஒவ்வொரு கத்திவீச்சுக்கும்!
தலை மறுக்கும் ஆற்றலுடன்!
ஆடுகள் துணியும்.!
ஓர் தினம் பட்டி உடைக்கும்.!
பச்சைப் பெருவெளிகள் தேடி!
படையெடுக்கும்.!
பின்னாக வயிறு புடைக்க மேயும்.!
வெளி முழுவதும் உலவும்.!
அவ்வெளியே!
பின் நாளில் பட்டியாக்கப்படும்.!

கனவு காணுங்கள்

இராஜ. தியாகராஜன்
அவை வணக்கம் (கட்டளைக் கலித்துறை)!
நெகிழ்ந்தே எமதரும் கன்னற் றமிழால் நிறைஞரவர்;!
இகம்புகழ் பாக்களைப் பாட மகிழும் *அருளரசன்;!
தகவான சிந்தனைப் பூவதால் பாமாலை தந்திடுவேன்;!
அகமகிழ்ந் தேற்றிட வேண்டுமிவ் வன்பி னரங்கினிலே!!
!
கனவு காணுங்கள் (கொச்சகக் கலிப்பா)!
-----------------------------!
நாற்றிசையும் ஆள்கின்ற நம்பரிதிச் செம்படராய்!
மேற்றிசையில் வீழ்ந்தாலும் வெம்பிழம்பாய் நானிலத்தில்!
சீர்த்தியொளி பாய்ச்சிநலஞ் சேர்த்திடவேக் கீழ்த்திசையில்!
ஆற்றலொடு மீண்டெழுமே அம்புவிக்குக் காவலென!!
!
சிற்றலையாய் மாமலையில் தோன்றுகின்ற சிற்றாறோ!
மற்றெதையும் தன்மனதில் வாங்கிடவே எண்ணாமல்!
சுற்றிநிலங் காடுமலை வழ்ந்திருக்கும் பேராழி!
பற்றிடத்தான் ஓடுவதைப் பார்த்திருப்பாய் என்தோழா!!
!
மண்ணுலகில் ஊழ்த்துவிட்ட மன்னுயிர்கள் அத்தனையும்!
தன்வழியில் ஓர்முடிவைத் தானெடுத்து அவ்வழியே!
சிந்தனையை ஓர்முகமாய்த் தேர்ந்தழகாய் வாழ்கையிலே!
விந்தையென ஆறறிவால் மேன்மையுற்ற இந்தியர்நாம்;!
!
மோழையெனத் தான்மயங்கி மூலையிலே குந்திவிட்டு!
சூழுகின்ற காரெனவே தோன்றுகின்ற வீண்கனவில்!
வாழுகின்ற நாள்வரையில் வாழ்வதையா நம்கலாமும்!
தாழ்விலாத தன்னுரையாய்த் தந்திடுவார்? இல்லையில்லை!!
!
நீணிலத்தில் காணுகின்ற நேரறிவை நம்வாழ்வில்!
வாணுதலின் நங்கையவர் கல்வியதை நம்வாழ்வில்!
தேநிகர்த்த நந்தமிழின் மேன்மையதை நம்வாழ்வில்!
கானகத்துக் கல்வியினை கற்பதையே நம்வாழ்வில்!
!
ஒன்றெனவே வாழ்ந்திருக்கும் ஒற்றுமையை நம்வாழ்வில்!
எண்ணறியா நூல்களுறை நுண்ணறிவை நம்வாழ்வில்!
இந்தியர்கை ஒங்கியொரு அறிவியலால் வானகத்து!
அண்டவெளி மண்டலத்தை ஆள்வதையே நம்வாழ்வில்!
!
ஓர்கனவாய் இன்றிளையர் ஏற்றிடத்தான் வேண்டுமென்றார்;!
ஏற்றமது வாழ்க்கையிலே எத்தனையோ தந்தாலும்!
தூற்றுதலும் பாதையிலே சேறெனவே வந்தாலும்!
தேர்ந்தெடுத்த நேர்கனவை சீர்கனவாய் போற்றுவமே!!
இவண் அன்பன்

4 கவிதைகள்

நிர்வாணி
1. !
வயோதிபன் தீட்டிய சித்திரத்தில் !
அவனின் கைநடுக்கம் !
நிதர்சனமாய் !
அந்தி வானில் தெரிந்தது !
2. !
கண்டும் காணாமல்ப் போகும் !
மனிதர்களின் பின்னால் போகும் !
எல்லைகளில்லாத என் !
சிந்தனை !
3. !
காலையில் பார்த்தேன் !
எனக்காக ஒரு புன்னகை செய்தாள் !
எவன் கண் பட்டதோ !
மாலையில் மானமுள்ளவள் !
மரணித்துவிட்டாள் !
முள்ளோடு பிறந்த !
சிகப்பு ரோஜா!
!
4. !
என் உடலென்ன !
சுமைதாங்கியா ? !
அவளின் இதயமும் என்னிடமல்லவா !
இருக்கிறது

சும்மா

ரவி (சுவிஸ்)
ஒவ்வொரு அழிவின்போதும் அவர்கள் !
நாலு வார்த்தைகளுடனும் !
கையில் ஒரு கொப்பியுடனும் வந்து போகிறார்கள். !
சாவை நினைத்து அழுகிறது மனம். !
என்னுள் ஏதோவோர் குற்றவுணர்வை !
புதைத்துவிட்டேனும் தம்மைச் சாதிக்க !
பயிற்சி எடுக்கிறது அவர்களின் வார்த்தைகள். !
ஓயாது சலிப்பின்றி !
துயர் பாடும் பாட்டுக்களும் !
நகங்களை எடுத்து வாள்களாய்ச் சுழற்றிக் !
காட்டும் வித்தைகளுமாய் !
அறையைக் காட்சிகள் வியாபிக்கின்றன. !
உடல் சறுகச் சறுக !
சீர்செய்து !
மீண்டும் மீண்டும் இருக்கையைப் பேணுகிறேன். !
தொலைக்காட்சி தொடர்ந்தும் !
காட்சிகளைச் செய்து !
தள்ளிக்கொண்டிருக்கிறது. !
கலாச்சாரம் பற்றி கவலைப்பட்டபடி !
தொப்புள்வெளி விரிய ஆடும் கதாநாயகியின் இடுப்பில் !
காணாமல் போய்விடுகிறேன். !
நேரம் வேகவேகமாய் நகர்ந்து முடிக்கிறது. !
ஒவ்வொரு பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போதும் !
மெல்லத் தொடங்குகிறது உரையாடல். !
சினிமா அரசியல் என தொடர !
சொற்களின் சேர்க்கைளிலும் மோதல்களிலும் !
வைன் கிளாஸ் மெல்ல மெல்ல !
காலியாகிக் கொண்டிருக்கிறது. !
வார்த்தைகளின் கனத்தை அழிப்பதில் !
வைன்போதையைவிட ஏதோவொன்று !
முந்திக்கொள்கிறது. !
பட்டியலை சரிபார்த்து !
வழமையான சிரிப்புகளைச் செய்து நாம் !
கலைந்து கொள்கிறோம். !
பனிக்காலமிது. !
பனித்திரள் தன்னழகை வெண்ணிறகில் !
விரிக்கிறது வியாபகமாய். !
இயந்திரக் காட்டினுள் வேலை என்னைத் !
தின்று தின்று துப்புகிறது. !
கிடைக்கும் ஓய்வினில் இந்த இயற்கை தன்னும் !
சம்பந்தமற்றுப் போகிறது எனக்கு. !
இன்றைய ஓய்வையும் !
ஒரு திரைப்படம் போலவொரு காட்சி நெய்தலிலோ !
அல்லது பட்டிமன்றம் போன்றதொரு !
நரம்பிசைக்கும் புனைவுகளிலோ !
நான் தமிழனாகி இன்னமுமாய் !
தமிழன் மட்டுமேயாகி வாசிக்கப்படுவதற்காய் !
மண்டப விலாசத்தைத் தேடுகிறேன். !
வாழ்க்கை நகர்கிறது அதுவாய். !
-ரவி (சுவிஸ் 01032005)

எச்சக் குறிகள்

கு.றஜீபன்
எனது பழைய தெருக்களின் வழியே!
எப்பவோ,எவரோ!
சென்றமைக்கான சுவடுகள்!
சருகுகளால் மறைப்புண்டு கிடக்கிறது!
விளங்கிக்கொள்ள முடியாத!
அதன் வளைவுகளில்!
இன்னுமின்னும் அச்சத்தின் அதிர்வுகள்!
கேட்டவண்ணமிருக்கிறது!
எமது எல்லா அச்சம் நிறைந்த ஒழுங்கைகளில்!
மிதிபட்ட சருகுகளுக்குத் தெரியும்!
வன்மம் நிகழ்ந்ததற்கான அசைவெச்சம்!
செருப்புகளோடு சிநேகிதம் கொள்ளாத சப்பாத்துகளும்!
சப்பாத்துகளோடு சிநேகிதம் கொள்ள மறுத்த செருப்புகளும்!
அலைந்தமைக்கான!
எச்சக் குறிகள் மீது இப்போது!
அடா்ந்த சருகுகளின் குவிப்பை!
காற்று கலைத்தபடி இருக்கிறது