தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

எத்தனை வருடங்கள்

கவிதா. நோர்வே
தேசத்திற்காய்!
குரலும் கொடுத்து!
உயிரும் கொடுத்து!
இல்லை!
எடுத்து...!
எனக்கும் விருப்ம்தான்!
தேசியவாதி என்று சொல்லிக்கொள்வதில்!
இருந்தும் நெருடுகிறது!
தேசம்விட்டு வந்தபின்னே!
தமிழுக்காய் குரல் கொடுப்போம்!
எனச் சொன்னவர்கள் எல்லாம்!
தமிழ்பற்றாளர்களாயும்!
தேசப்பற்றாளர்களாயும்!
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!
புலம் பெயர் தமிழர்கள்!
என்ற போர்வையில்!
உயிர் கொடுத்தவரகள்!
பலரைத்தாம்!
நாம் கண்டுகொள்வில்லை!
அதெல்லாம்!
அரசியலாம்!
விட்டுவிடுவோம்!
ஆனாலும்!
இப்படி விட்டுவிட்டுப் போனதில்தான்!
விட்டுப்போனது!
எத்தனை வருடங்கள்?!
!
இன்னும் எத்தனை!
வருடங்கள்...சொல்ல!
என் பேத்திக்கு?!
-கவிதா. நோர்வே

இறைமகிழ்ச்சி... கடன்

ந.அன்புமொழி
1. இறைமகிழ்ச்சி!
!
விண்ணைத் தொடும்,!
ஏழை எளியோரின்!
உரிமைப் !
பொருள்களால் ஆன!
புனிதநேயப் பேராலயம்.!
எதிரில் துரும்பாய்,!
கண்களில் !
தேவை ஒளியோடு,!
விண்ணரசின்!
உரிமையாளர் எனப்பட்டும்,!
வறுமைவிரி கோலமாய்,!
செல்லன்புச் சிறுமி.!
தடையில்லை என்பதால்!
தைரியமாய் நுழைந்தாள்.!
மரியன்னை குழந்தை இயேசு,!
புனிதர்கள், மனிதர்கள்.!
மின்னொளிப் பெருவெள்ளத்தில்!
அனைவரையும் கடந்துவிட்டாள்!
இலக்கை நோக்கி.!
நொருங்கியதும்!
நின்றுகொண்டாள்.,!
மெழுகுவர்த்திகள் பீடம்.!
சுற்றும் முற்றும் பார்த்தாள்!
யாருமில்லை. !
மேலே சுவரில்.. !
அன்பே சவமாய் !
இயேசு கிறிஸ்து. !
அணைத்தெடுத்து !
அன்போடு வணங்கி!
நன்றியோடு முத்தமிட்டாள்.!
கையில்!
இரண்டு மெழுகுவர்த்திகள்.!
அன்று இரவு !
அவள் வீட்டில் தேவஒளி...!
வேக வேகமாக !
படித்தாள் !
பள்ளிப் பாடங்களை,!
இறைஒளி !
மறைவதற்குள்.!
இறைவனின் !
வலது பக்கத்தில் !
தன் !
வழி நடப்பவர்களின்!
செயல்களால் !
தலை குனிவோடிருந்து.,!
நீண்ட!
காலத்திற்குப் பிறகு !
மெதுவாகப் !
பிதாவைப் பார்த்து,!
மெலிதாகப் !
புன்னகைத்தார்!
இறைமகன் இயேசு.!
2.கடன்!
!
உண்ண விரும்பாத !
உணவுப்பொருளை !
உதவநினைத்து !
உடன் வைத்துக்கொண்டேன்.!
மனம்சரியற்ற !
மங்கலக்கோலத்தில் !
மாசுடைதரித்த !
மண்ணுரிமை மாது. !
நடைவழிவேகம் !
அனைத்தையும் திருத்தி !
அவளை கடந்தேன் !
அவள்வழிநிற்க. !
காகிதம் மூடிய !
திண்பண்டத்தோடு !
வெறுத்ததை !
கொடுப்பதால் !
நான்கு பணம்!
நட்டஈடு.!
பொருளையும் !
பணத்தையும் !
ஒன்றாய் பார்த்ததில் !
கலங்கிநீட்டி !
விரலால்கேட்டாள், !
என்ன அது!
என்னவென்று. !
பெறபயந்தவளுக்கு !
பிரித்துக்காட்டி !
பெற்றுக்கொள்ளென்றேன் !
பய மனத்தோடு. !
பவ்யமாய் பெற்றவள் !
பற்களை காட்டினாள் !
கறைபடிவம் பின்னால் !
தெய்வீகச் சிரிப்பு. !
நாகரீகமாய் சிரித்தேன் !
பதிலுக்கு நானும்!
வாரிவழங்கும்!
வள்ளளைப்போல. !
திடீரென!
எனக்காய் அவள்தரும் !
சிரிப்பின் விலையுருத்த !
சிக்கனமாய் !
சிரிப்பை நிறுத்தி !
வழிவிலகி !
வேகநடை போட்டேன். !
கடன்காரனாய் !
தலைகுனிவோடு.!
அன்புடன்!
ந.அன்புமொழி!
சென்னை

எங்கே தொடங்கும் ? ... எங்கே முடியும் ?

சத்தி சக்திதாசன்
உள்ளத்தின் தவிப்புகள் !
உணர்ச்சித் துடிப்புகள் !
உண்மையின் விழிப்புகள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
கண்களில் நீர்த்துளி !
பாசத்தின் தேன்துளி !
பருவத்தின் காதல்துளி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
மூடாத விழிகளின் இரவுகள் !
தேடாத சொந்தத்தின் உறவுகள் !
பாடாத ராகத்தின் கீதங்கள் !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
வேண்டாத வேலைக்குக் கூலி !
தாண்டாத எல்லைக்கு வேலி !
தீண்டாத நீருள்ள ஏரி !
எங்கே தொடங்கும்? எங்கே முடியும்? !
எங்கோ தொடங்கி !
எங்கோ முடியும் !
ஏதோ நிகழ்வுகளுக்காக !
ஏனிந்த ஏக்கம் !
எனக்கின்று பகர்வீரோ?

எதுவும் புரியவில்லை?

த.சு.மணியம்
தைப்பொங்கல் திருநாளாம்!
தமிழர்களின் பெருநாளாம்!
புத்தரிசி கொண்டு பொங்கும்!
புதுப் பானைப் பொங்கலதாம்!
ஆதவனை நினைப்பதற்காய்!
அன்று பொங்கும் பொங்கலதாம்!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
நன்றி பல செய்திட்ட!
நற்கடவுள் சூரியனை!
தையில் விழாவெடுத்து!
தமிழ் முற்றம் பொங்கலிட்டு!
நன்றிக் கடன் தீர்க்கும்!
நன்நாளாம் தைப்பொங்கல்!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
முக்கனிகள் கரும்பினுடன்!
முத்தான சக்கரையும்!
புத்தம் புது நெல்லின்!
புது சுகந்த அரியுடன்!
சொத்தாக மணி அளித்த!
சூரியனுக்கொரு பொங்கலென!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
புத்தாடை போட்டு அன்று!
புதுப் பானை முற்றமதில்!
பொங்கலுடன் பலகனியும்!
பொங்குகின்ற நேரமதில்!
பட்டாசும் பல விட்டு!
பகிர்ந்துண்டு உண்பதென!
எல்லோரும் சொல்லுகிறார்!
எனக்கெதுவும் புரியவில்லை.!
வீடு விட்டு அகதிகளாய்!
வீதியிலே நாள் படுத்து!
காடு தந்த இலை கொண்டு!
கஞ்சி காய்ச்சி பசி போக்கி!
தேடுகின்றோம் அரிசியை நாம்!
கிடைக்காத இந் நிலையில்!
எல்லோரும் பொங்கலென்றார் !
எனக்கெதுவும் புரியவில்லை.!
!
த.சு.மணியம்

வெறிச்சோடிய முற்றம்

அமைதிச்சாரல்
முற்றத்துத்தூணில் சாய்ந்துகொண்டுதான்!
கீரை ஆய்வாள்,!
பொன்னம்மாச்சி..!
வெயில் காயும் நெல்லில் சிறிதில்!
பசியாறும் புறாவுக்கு,!
முற்றத்து தொட்டியில்!
தண்ணீரும் கிடைக்கும்.. அவள் புண்ணியத்தில்.!
அவளமைத்த!
கலயவீடுகளில்!
நிம்மதியாய் குடும்பம் நடத்துகிறது குருவி!
நன்றி சொல்லியபடி..!
பேச்சும் சிரிப்புமென!
தோழிகளில் ஒருவராகிப்போன!
அந்த முற்றத்தில்தான்!
பொரணியும் ஆவலாதியும்!
சேர்ந்தரைபடும் அரிசியுடன்..!
கானகமும் இல்லமுமாய்!
அனைவரும் போய்ச்சேர்ந்தபின்..!
வெயிலாடிக்கொண்டிருக்கிறது!
துவைத்த கல்லும், வளர்த்த முருங்கையும்;!
காலியான முற்றத்தில்

சுவாசலயம்

புதியமாதவி, மும்பை
மௌனவெளியில் !
என் இருத்தலை !
நிச்சயப்படுத்தும் !
சுவாசத்தைப்போல !
சத்தமின்றி ஒலிக்கிறது !
காற்றுடன் கைகோத்த !
சங்கீதம். !
செவிப்பறைகள் தீண்டாத !
ஒலியின் அலைகளில் !
எழுதப்பட்டிருக்கிறது !
இதன் சங்கீத மொழி. !
எப்போதும் என்னுள் இசைக்கும் !
பின்னணி இசையாய் !
என் சுவாசலயத்துடன் !
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும் !
உன்னத ராகத்தில் !
பாடிக்கொண்டிருக்கிறது !
அந்தப் பறவை. !
பெயர் தெரியவில்லை. !
பெயரிடவும் விருப்பமில்லை. !
எனக்காகப் பாடுகிறதா? !
எல்லாமே கற்பனையா? !
விழிதிறக்க அச்சப்பட்டு !
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது !
வெளிச்சத்தின் கைகள். !
கண்விழித்தால் !
கண்ணில் பட்டுவிடும் !
பட்டுப்போன மொட்டைமரங்களின் !
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு. !
------------------------------ !
புதியமாதவி

கனவின் துண்டு

டீன்கபூர்
கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
துண்டு துண்டுகளாக !
அந்தரத்தில் தொங்கும் என் இளமை!
பழுக்கத் தொடங்கிவிட்டது.!
ஒரு மயிர்!
கோழி கிளறிய என் குப்பைக்குள்!
மின்னியது.!
நெஞ்சுக்குள் உடைந்த!
மலை முகட்டின் பாறை!
வேர்விட்ட நிலையிலே!
அண்ணார்ந்து பனிப்படரின் வீதியில்!
என் கனவை நடக்கவைத்தது ஊன்றுகோல்!
கனிந்த மாம்பழத்தின் பக்கம்!
அணில் ஆட்கொள்ளவில்லை!
இவன் கொக்கையுடன் கனவுகளுக்காக.!
ஒரு பாதி இரவுக்குள்!
இன்னும் என் கனவு வாயு கலையாத வயிறு.!
கனவின் துண்டுகளை !
இரவின் பாதிக்குள்!
புதைத்து விழிப்பதற்குள்!
நரகத்து மொழியின் விபரீதம்!
இன்னமும் செவிகளை நசுக்கின.!
-- டீன்கபூர்!
திண்ணைக் கவிதைகள் தொகுப்பிலிருந்து

மீண்டும் பிறந்திருப்பேன்..! சரித்திரத்தின்

எசேக்கியல் காளியப்பன்
முதலெழுத்து!
01.!
மீண்டும் பிறந்திருப்பேன்..!!
--------------------------------!
உன்றன் அருகில் வந்தேன் – உனது!
உணர்ச்சிக் காற்றேடுத்தேன்!
இன்றும் வாழ்ந்திருப்பேன் –என்!
இதயம் நன்றிசொலும்!!
உன்முகம் அருகில் கண்டேன் – அது!
உதிர்த்த பூக்கள் கொண்டேன்!!
என்மனம் மணக்குதடீ –அங்கே!
இன்றுமுன் பூசையடீ!!
காந்த விழிகள் கண்டேன் ! –எனக்குள்!
காயங்கள் ஆறுதடீ!!
மாந்த அருகில்வந்தேன் –இதழ்கள்!
மறுக்கப் பசித்திருப்பேன்!!
சேர்ந்த கருங்கோந்தல்- எனக்குள்!
சிலிர்ப்பைத் தந்தடீ!!
நேர்ந்த கவிதைகளை –உலகும்!
நித்தம் படிக்குதடீ!!
மீந்த நாட்களிலே –உந்தன்!
மெல்லிய நினைவுகளைச்!
சோர்ந்தே விழும்வரைக்கும் –நெஞ்சில்!
சுகமெனப் பூட்டிவைப்பேன்!!
மீண்டும்,உன் நாள் வரவே –இறையை!
வேண்டித் தவமிருப்பேன்!!
மாண்டும்,அந் நினைவுகளில் –நான்!
மறுபடிப் பிறந்திருப்பேன்!!
!
02.!
சரித்திரத்தின் முதலெழுத்து!
------------------------------------!
ஆதிரையில் வந்தவளே!!
ஆண்டவனின் மறுவுருவே!!
மார்கழியில் பிறந்தவளே!!
மார்கொடுத்து வளர்த்தவளே!!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!!
தேவனவன் திருக்கொடையே!!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!!
பேறெனவே நெகிழ்ந்தவளே!!
சோர்வுடனே தானிருந்தும்!
சுகமெனக்கு விழைந்தவளே!!
நீர்குடித்துப் பாற்சோறு!
நிதமெனக்குத் தந்தவளே!!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்!
செய்தபிழை மறந்தவளே!!
யார்கழித்துப் பேசிடினும்!
எனைஉயர்த்தி நின்றவளே!!
வேர்எனவே எனைப்பிடித்து!
வெளித்தெரியா திருப்பவளே!!
ஊர்தெரியச் சண்முகமாய்!
உள்ளழுது வாழ்பவளே!!
சார்ந்திருக்க மறுத்தவனின்!
சரித்திரத்தின் முதலெழுத்தே!!
தீர்ந்தெனது நாள்முடிந்து!
தேவனிடம் சேருகையில்!
நேர்ந்திடப்போம் தண்டனையை!
நீகுறைக்க வேண்டம்மா

என்ன தான் தேடுகிறான்???

ரம்சின் நிஸாம்
இயந்திர வாழ்க்கையின்!
இயக்கத்தில் மனிதனின்!
இதயம் இயங்க மறுத்துவிட்டதில்!
பிழை யாரிடம்?!
பணத்திடமா?!
பதவியிடமா?!
ஏக்கங்களை மறந்து விட்டு!
தூக்கங்களை தொலைத்துவிட்டு!
துரத்திக் கொண்டிருப்பது!
காசையா?!
கல்வியையா?!
எல்லோருமே மறந்து விட்டோம்!
அந்த அழகான நாட்களையும்!
அமைதியான நிமிஷங்களையும்!
நகர வாழ்க்கையில்!
நரக வாழக்கை தான் தெரிகிறது.!
எல்லாப் புன்னகைகளும்!
எதையோ நாடுகிறது!
எல்லாப் பார்வைகளும்!
ஆதாயத்தின் அருவைகள் தான்..!
இருப்பாதோ ஒரு வாழ்க்கை!
அதையும் தொலைத்து விட்டு!
இருண்ட காண்டத்துக்குள் இன்பம்!
தேடுகிறான் மானிடன்.!
வசீகரமான இளமையை!
காலத்தின் கைப்பிடிக்குள்!
கருவருத்து விட்டு!
வயோதிபத்தின் போது முயல்கிறான்..!
இளமையாய் இருக்கக் கொஞ்சம்…

தனிமையின் பிடியில்

மதியழகன் சுப்பையா
மதியழகன் சுப்பையா !
மும்பை !
ஒன்று !
புத்தகங்களை !
புரட்டியாயிற்று !
தொலைக்காட்சியின் !
அலைவரிசைகளையும் !
அலசியாயிற்று !
நான்கைந்து முறை !
தேனீர் குடித்தாயிற்று !
கோட்டோவியத்தில் !
உருவம் எழுத !
முயற்சித்தாயிற்று !
இறுதியாய் !
கவிதை எழுத அமர்ந்தேன் !
வெறுமை நீங்கி !
இருமையாகிப் போனேன். !
இரண்டு !
கிறுக்கல்கள் !
கிழிசல்கள் !
சிதிலமடைந்த சுவர்கள் !
ஓவியப் பரப்பாய் விரிகிறது. !
சிறிய அசைவுகள் !
நிச்சய விணைகள் !
அற்ப பொருட்கள் !
உன்னத இசையாய் !
ஒலிக்கிறது. !
தட்டப் படாத கதவு !
ஊமையான தொலைபேசி !
வெளிச்சமில்லா வீடு !
அடிக்கடி திறந்து !
மூடப்படுகிறது !
கழிப்பறையின் கதவு. !
மூன்று !
இன்று காலை !
பேரூந்தில் பார்த்தவள் !
தொடங்கி !
பட்டியல் முடிந்து போகவே !
தளர்ந்த நடையுடன் !
வண்ண அட்டை !
வார இதழ் தேடுகிறேன் !
உருவங்கள் வேண்டி. !
நான்கு !
ஒற்றை பிம்பம் காட்டி !
அலுத்துக் கொள்கிறது !
நிலைக் கண்ணாடி. !
இளையராஜாவின் !
இசையில் பிசிரடிக்கிறது. !
ஆயுள் தூக்கம் !
தூங்கியாயிற்று. !
புழுங்கி நாறுகிறது !
உடலும் உடையும். !
சுவர்கள் நெருங்க !
பரப்பு குறைகிறது. !
காற்று வரவே !
கதைவை திறந்தேன். !
கூறை அகற்றினால் !
ஒளியும் வருமே. !
ஐந்து !
எலிகளுக்கு !
விசம் வைப்பதில்லை. !
ஒட்டடை அடித்து !
காலங்களாகி விட்டது. !
கரப்பான்களுக்கும் !
பாட்சைகளுக்கும் !
மருந்து தௌ¤ப்பதில்லை. !
கொசுவத்திகள் !
கொளுத்துவதே இல்லை. !
ஆனாலும் !
எப்பொழுதாவது !
வாசல் வழி !
எதிரொளி மட்டுமே !
எட்டிப் பார்க்கிறது