தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இதுதான் நீ

பிரான்சிஸ் சைமன்
நான் சிறு குழந்தயையாய் இருந்தபோது!
என்னைப்போல் உன்னையும் கடவுள் என்றே கருதினேன்!
விளையாட்டு வயதில் உன்னை நண்பனாக நேசித்தேன்!
பருவ வயதில் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்தது!
நட்பை நீ நாசமாக்கினாய் என்று!
அனுபவம் போதிக்கும் வயதில்!
அன்புப் பரிமாற்றத்தின்!
அமுதம் அறியாதவன் என உணர்ந்தேன்!
காதோரம் நரை விழுந்த காலத்தில் !
நீ ஒற்றுமையை விலை பேசுபவன் என்று!
மனம் நொந்தேன்!
கொஞ்சம் முதிர்ந்த வயதில்!
பொறாமைமை உள்ளடக்கி!
புறமுதுகில் குத்துபவன் !
எனப் புரிந்துகொண்டேன்!
எத்தனை வயதானாலும்!
மற்றவனுக்கு கைகட்டி!
கூலி செய்பவன் என மூர்க்கமானேன்!
இப்போது நான் அந்திமத்தில் விளிம்பில்!
உன்னை உன்னையாக்க!
முயற்சியில் என்னால் எதுவும் முடியாது போலும்.!
!
- பிரான்சிஸ் சைமன்

தலைவி

சின்னு (சிவப்பிரகாசம்)
தலைவி!
--------------!
தொள்ளுறு புலன்கள் போற்றும்!
தோகையர் உருவில் உழன்று!
பாவையர் பார்வை கேட்டு!
பதறும் இமைகளை கொண்டோன்!
செப்பிய பணிகள் முடித்து!
காப்பியக் கோவை பாடி!
கயல்விழி கண்டு நின்றான்!
செவ்விதழ் சிலம்பமாட!
சிற்றிடை சினந்து ஆட!
பெருநடை பொரு புலியை ஒப்ப!
வெறுப்புடன் விரைந்து வந்து!
செருக்குடன் கொங்கை சிலிர்க்க!
சினத்துடன் சொல்லி நின்றாள்!
ஒவ்வாது ஒவ்வாது காண்பாய்!
உனக்கென ஒரு செயல் புரிந்திலை காண்பாய்!
செப்பிய பணிகள் முடிக்க!
செக்கிழு மாடு போதும் !!
இச்சைக்கு கவி பாடி!
இளமைக்கு துதி பாட!
முகத்தொரு மீசை கொண்ட!
செம்மீன் போதும் போதும்!
உனக்கென்று எண்ணம் விளைந்து!
உனக்கான வழியை தேடி!
உன்மனம் விளையும் பொது!
நிழல் கண்டு நானும் வருவேன்!
நாணாமல் போய்வா என்றாள்!
தன் காலில் நிற்கும் தலைவனாய்!
தலைவனை காண நினைக்கும் தலைவி

முரண்பாட்டுச் சிந்தனைகள்

சுதாகரன், கொழும்பு
நான்!
கடந்துவரும்!
கல்லறைகளில் எல்லாம்!
எத்தனையோ கதைகள்!
புதைந்து!
கிடக்கின்றன,!
!
மரங்கள்!
எல்லாம் என்னை!
பார்த்து ஏதோதோ!
கடந்தகால சம்பவங்களை!
சொல்ல நினைப்பதாய்!
எனக்குப்படுகிறது,!
நான்!
நடந்துவரும்!
சாலைகளில் எல்லாம்!
எழுதப்படாத எத்தனையோ!
வரலாறுகள்!
சிதிலமாகி!
கிடக்கிறது,!
!
உருவம் எல்லாம்!
ஏதோ ஒரு பயம்,!
என் மனதின் எங்கோ!
ஒரு மூலையில்!
விஸ்வரூபம் எடுத்துக்கொண்டே!
இருக்கிறது.!
இரவுகளில் எல்லாம்!
என்னை மீறின!
சிந்தனைகள்!
எமக்கு மட்டும் தான்!
ஏன் இப்படி!
நடக்குதென்று.....!
!
சுதாகரன், கொழும்பு!
அடையாள இலக்கம்: 356

தமிழன் துணிந்தால்

அகரம் அமுதா
தனக்கென்று நாடொன் றில்லாத்!
தமிழனே! இன்னல் என்ப(து)!
உனக்குற்றால் அன்றி நெஞ்ச!
உணர்வுறா உயிர்ப்பி ணம்மே!!
கணக்கற்றோர் ஈய நாட்டிற்!
களங்கண்டுக் சாகும் போதும்!
'எனக்கென்ன?' என்று நீயும்!
இருப்பதே மாட்சி யாமோ?!
நம்மினம் உரிமை யற்று!
நளிவெய்தித் தாழக் கண்டும்!
நம்மினம் இடமொன் றின்றி!
நானிலம் அலையக் கண்டும்!
நம்மினம் வாழ்க்கை யற்று!
நமனிடஞ் சேரக் கண்டும்!
கம்மென இருப்ப தாநீ?!
கண்ணில்தீ கனலச் செய்வாய்!!
தமிழரென் றினமொன் றுண்டேல்!
தனியவர்க் கோர்நா டெங்கே?!
தமிழரென் றினமொன் றுண்டேல்!
தனித்தமிழ் ஆட்சி எங்கே?!
தமிழரென் றொன்று பட்டுத்!
தனியீழம் பேணு கின்றார்!
தமிழரென் றுணர்வுண் டென்றால்!
தகைந்தவர்க் குதவ வேண்டும்!!
துமியினம் ஒன்று பட்டால்!
தோன்றிடும் வங்கம் என்றால்!
இமிழினம் ஒன்று பாட்டால்!
இயலும்பா கிசுத்தான் என்றால்!
உமியினம் ஒன்று பட்டால்!
உயிர்பெரும் இசுரேல் என்றால்!
தமிழினம் ஒன்று பட்டால்!
தரணியே கைவ ராதா?!
துயில்சேயுங் கிள்ளி விட்டுத்!
தொட்டிலும் ஆட்டும் வஞ்சம்!
பயில்நெஞ்சத் திந்தி யாதன்!
படைவலி இலங்கைக் கீந்தும்!
இயம்பிடும் 'பேசித் தீர்ப்பீர்!'!
எந்தமிழ் இனத்தைக் கொல்ல!
முயன்றெம்மின் வரிப்ப ணத்தில்!
முடிக்கிறார் தடுத்தோ மாநாம்?!
இழுதைபோல் இன்னல் செய்தே!
இன்புறும் கீழ்ம னத்தர்!
கழுதைபோல் உதைத்த போதும்!
கலங்கிடா உரனும் பெற்றோம்!!
பழுதைபோல் கடித்த போதும்!
பதுங்கிடோம்! தடைகள் இட்டுப்!
பொழுதையார் நிறுத்தக் கூடும்?!
புலிக்குமுன் பூசை ஒப்பா?!
பொடாச்சட்டம் பொருதும் போதும்!
புத்தீழம் புலரக் காண்போம்!!
தடாச்சட்டம் தாக்கும்போதும்!
தனியீழம் தழைக்கச் செய்வோம்!!
இடாச்சட்டம் எதிர்த்த போதும்!
இனிதீழம் எழுக என்போம்!!
எடா!சட்டம் என்ன செய்யும்?!
இன்றமிழன் துணிந்தா னென்றால்!!
!
-அகரம்.அமுதா

பரம்பொருள் பார்த்தோமே.. காதலுற்றேன்

மார்கண்டேயன்
01.!
பரம்பொருள் பார்த்தோமே . . . !
------------------------------!
பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே!
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில் !
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய!
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில் !
பதிவுசெய்ததை!
பலர் பார்க்கும் படக்கருவியில்!
பலமுறை பலரோடு!
பார்த்து பரவசமடைந்து!
பரம்பொருள் பார்த்தோமே . . . !
!
02.!
காதலுற்றேன்.. !
----------------------!
கருவுற்றபோதே காதலுற்றேனா ?!
இல்லை . . .!
காதலுற்றதால் கருவுற்றேனா ?!
இல்லை . . .!
ஈன்றவள் ஈந்ததோ ?!
இல்லை . . .!
தகப்பன் தந்ததோ ?!
இல்லை . . .!
உறவுகள் உணர்த்தியதோ ?!
இல்லை . . .!
உற்றார் உரைத்ததோ ?!
இல்லை . . .!
நட்புகள் நவின்றதோ ?!
இல்லை . . .!
பால்ய வயதின் பழக்கமோ ?!
இல்லை . . .!
பள்ளியில் பயின்றதோ ?!
இல்லை . . .!
பருவ வயதில் படர்ந்ததோ ?!
இல்லை . . .!
பல்கலையில் படித்ததோ ?!
இல்லை . . .!
பல பிறப்பில் பதிந்ததோ ?!
பின் எப்போது காதலுற்றேன் ?!
உன்னை கண்டவுடன் காதல் சொல்ல . . .!
உன்னை கண்ட நாள் முதல் காதலுற்றேனா?!
இல்லை நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?!
காதல் இருந்ததால் காதலுற்றேனா ?!
இல்லை . . .!
உன் காதலால் காதலுற்றேனா ?!
இல்லை . . .!
என் காதலால் காதலுற்றேனா ?!
நான் எப்போது காதலுற்றேன் ?

காற்றுவெளியில் காத்திருப்பு

இராமசாமி ரமேஷ்
காற்றுவெளியில்!
என் கவிதைகளை!
உலவிவரச் செய்கிறேன்!
ஏனெனில்...!
சிலவேளைகளில்!
நீ வானில்!
வலம் வரும்போது!
அவைகளை இரசிக்கக்கூடும்!
என்பதினால் சகியே...!
அந்திமப் பொழுதுகளில்!
அஸ்தமனத்தை இரசித்தவாறு!
கடற்கரைகளில் காத்திருக்கிறேன்...!
ஏனெனில்...!
நீ மேனிமிளிர!
வெண்பஞ்சு மேகங்களிடையே!
மிதந்துவந்து!
என்னுடன் சங்கமிப்பாய் எனும்!
நம்பிக்கையில்...!
சந்தனங்களையும்!
சங்குகளையும்!
உனக்காய் சேமிக்கிறேன்...!
நீ!
பாலருந்த சங்குகளும்!
பள்ளிகொள்ள!
சந்தனமுமாய் இருக்கவே தோழி...!
வெள்ளி நிலவே...!
நீ!
என்னில் நிறைந்திருந்து!
காதல் செய்யச் சொல்கிறாய்!
இந்த பிறப்பில்!
இருவரும்!
இணையாது போனால்!
இனிவரும் மறுமைகளிலும்!
உன் நினைவுகளோடே!
வாழ்ந்திடுவேன்...!
நிலவின் காதலன் எனும்!
அடைமொழியோடு

குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை

ஹெச்.ஜி.ரசூல்
என் நெஞ்சின் மீது படுத்துறங்கும்!
சின்னமகள் பர்வீனுக்கு!
கனவில் ஒரு பூதம் வந்தது!
பூதத்தின் உருவம் வடிவம் பற்றி!
சொல்ல முடியவில்லை எதையும்!
அலறிப் பயந்து நடுங்கி!
வீறிட்டழுதாள் விடுபடா துக்கத்தில்.!
சிலேட்டில் எழுதிப்படித்த எழுத்துக்கள்!
ஞாபகங்களிலிருந்து விலகிப்போனது!
பேச எத்தனித்தபோது!
வார்த்தைகள் வெளிவரவில்லை!
கனவில் துரத்தி வந்த பூதம்!
பூனையாக உருமாறிக் கொண்டது!
காலடியில் சுற்றிக் கொண்டு திரியும்!
ஒலியெழுப்பல்களையும்!
உருண்டு திரண்டுநிற்கும்!
அதன் விழிக்கும் கண்களையும்!
கூடவே மீசைமுடிகளையும்!
தடவிப் பார்த்த விரல்களின் நுனியில்!
தீராத ஏக்கம் திரண்டிருந்ததது!
பூனையிடம் பேசிப் பார்த்தாள்!
எதற்கும் முடியாமல் போகவே!
கேவிக் கேவி அழுது முடித்த!
மாமரமூட்டின் நிழலில் விம்மல் நிறைந்தது!
இரவு முழுதும் தன் கூடவே!
படுக்கையில் கிடந்த பூனை விடிகாலையில்!
பஞ்சுப்பொதி பொம்மையாகிக் கிடந்தது!
கண்தொட்டு கைதொட்டு வருடி!
அழகு கொஞ்சியது போக!
பீங்கான் தட்டில் சோறெடுத்து!
ஒரு கவளம் உருட்டிக் கொடுக்க!
வாய் திறந்து அதிசயமாய்!
பொம்மை சோறுதின்றது.!
நீர் நிரப்பி மேசையில் வைத்திருந்த!
கண்ணாடி குவளையில் மீன்கள் துள்ளின!
குட்டி பொம்மை பார்த்து சிரித்தது!
தானும் சிரித்தாள்!
சாயங்காலம் வரை!
பொம்மையோடு விளையாடியவள்!
தன் பூனையைத் தேடி அழுதாள்!
ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்த!
அதன் குட்டிகளிடம் பொம்மையை நீட்டினாள்!
குட்டிப் பூனையாக அலைகிறது பொம்மை

அந்த வீடு

புஸ்பா கிறிஸ்ரி
மனம் வியாகுலமாய் !
அழுது கொண்டது !
காலாரக் கொஞ்சம் நடந்து போக !
அந்தப் பெரிய வீடு வந்தது !
நாயும் தெரியவில்லை !
வாசலில் பலகை இல்லை !
நாய்கள் ஜாக்கிரதை என்று !
காவல் காரனும் இல்லை !
மஞ்சள், சிவப்பு என்று !
பலவர்ண கலவையில் !
குரோட்டன் செடிகள் !
வீட்டைச் சுற்றி !
அழகு காட்டினாலும் !
சுவர்கள் மட்டும் !
அழுக்காகிக் கிடந்தன !
உள் வீட்டு மனிதர் !
மனத்தைப் போல் !
இரவு மட்டுமே பல்துலக்கி !
காலை தேனீர் குடித்து !
வாரம் ஓருமுறை குளித்து !
மறு நாட்களில் !
வாசனைத் தைலம் பூசி !
அழகாய் உடுத்திக் கொண்டு !
குளிருக்குப் பயந்து !
குளிக்க மறந்த !
வெள்ளைக் காரனாய் !
உயர்ந்து நின்றது !
அந்த வீடு !
புஷ்பா கிறிஸ்ரி

கூதலும் கூடிய குளிர் காலம்

எதிக்கா
தேயிலைச் செடிகளின் மேல்!
நீர்த் துளிகள் என்னை!
கற்பனை உலகிற்கு இழுத்துச் சென்று!
கன்னா பின்னா எனக் கவிதைகள்!
பலவும் எழுத வைக்கும்!
முகிலிடையின் மேலே!
மலைத்தொடரின் உச்சியில்!
சரிந்து கிடக்கும் லயக் கதவுகள்!
அதன் ஊடே...!
தாயின் வரவை எதிர்நோக்கி நிற்கும்!
பிஞ்சு முகங்கள்...!
பார்ப்போர் விழிகளில்!
நீரை வழியச் செய்யும்!
விறைத்துப் போன கரங்களால்!
துளிர்களைக் கொய்து!
விதியினை நொந்து!
வேதனையில் தோய்ந்த தாயுள்ளங்கள்!
ஒரு வாய் ரொட்டிக்காய் - தம்முயிரைப்!
பணயம் வைத்து மலைச்சரிவில்!
தடம் பார்த்து நடப்பதுவும்!
நடைமுறையில்... நம்!
கண்ணோட்டத்துக்கு அப்பால்!
ஒளிந்திருக்கும் அவர்கள் வாழ்க்கை!
இது ஒன்றும் மலையகப் பெண்களுக்கு!
புதிதல்லவே

50 வெள்ளி

பீலி
கையில நூறு பணமும்!
கறிச்சோறு பொட்டலமும்!
கொடுத்து ஆள் சேர்த்து!
கூட்டத்தை கூட்டுவதெல்லாம்!
கட்சி மாநாட்டிற்காக!
கைத்தடிகள் செய்யும் வேலை!
சிங்கை!
தரமான தமிழ் நிகழ்வுகள்!
தருவதுதான் வரலாறு!!
தமிழ் கேட்க கூலி – அது!
தன்மான கோளாறு!!
தமிழ் கேட்க அழைத்து!
தராதீர்கள் வெள்ளி! – அது!
தமிழ் தாக உணர்வுக்கு!
வைக்கின்ற கொள்ளி!!
தாய்ப்பால் பருகிட!
தருகின்ற கூலி – அது!
தாய் சேய் உறவுக்கு!
தடைபோடும் வேலி!
தமிழ் என்றால்!
வருவோமே ஆர்வத்தோடு!
தமிழ் என்றும்!
வாழட்டுமே கர்வத்தோடு!!
!
- பீலி