தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இரவுவகளில் தொலைந்து போன

சஹ்பி எச். இஸ்மாயில்
என் வர்ணம்!
----------------------------------------------------!
இரவு,இருள்!
மயான அமைதி!
திடீர் திடீரென மின்னும் சென்நிற மின்னல்!
பேர் இரைச்சல்!
இவைகளுக்குள் உரைத்து போனது என் வாழ்வின் வர்ணங்கள்!
!
எனக்காக பிறர் நடந்த பொழுதுகளில்!
எனக்காக பிறர் பேசிய தருணங்களில்!
என் தாயின் கைகளில் தவழ்ந்த போது!
எனக்காக நான் நடக்க வேண்டும்!
எனக்காக நான் பேச வேண்டும்!
என்ற என் கனவுகள் இவ் இரவுகளில்!
நிறம் இழந்து போனது.!
!
பல்கலை நுழைவதாய்!
காதலியின் மடியில் மெய் மறந்து இருப்பதாய்!
தாயின் பெருமூச்சில் பங்கெடுப்பதாய்!
நான் கண்ட கனவுகளை காவு கொண்டது இந்த இரவுகள்.!
!
எம் வன்னியில்!
இரை தேட !
விடியலை காத்திருந்தது பறவைகள்!
நாம் இரையாகி போன சாடல்களை தேட காத்திருந்தோம்.!
!
அந்தோ சமாதான புறா விண் எழுகிறது!
இரவின் பயங்கரம் அதையும் கொன்று தீர்த்து.!
--------------------------------!
வன்னி மக்களின் நினைவாக

ஊமையானேன் நான்

தமிழ் ராஜா
நீ வருவதற்கு முன்னால்!
இங்கு புறாக்கள் சுற்றிக்!
கொண்டிருந்தது என்றேன்!
எப்பொழுதுமே என்னால்!
புறாக்களை காண முடிவதிலலை!
என்று லேசாக சிணுங்கினாய்!
இல்லை! இல்லை! பறவைகளையே!
என்னால் காண முடிவதில்லை ஏன்?!
என்று வருத்தப்பட்டாய் என்னிடம்!
நீ வெளியே வந்ததும்!
உன் கூந்தலைப் பார்த்துக்!
கார் மேகம் சூழ்ந்து கொண்டதாக!
நினைத்துக் கொண்டது பறவைகள்.......!
அதனாலேயே உன்னைப் பார்த்ததும்!
எல்லாப் பறவைகளும் கூண்டுக்குள்!
சென்று விடுகிறது என்றேன்....!
அமைதியாக இருந்த உன் முகம்!
லேசாக சிவந்தது கோபத்தால்!
சே! இதை மட்டும் பறவைகள்!
பார்த்திருந்தால் உன் பின்னாலேயே!
விடாமல் சுற்றி வருமென்றேன்!
என்ன செய்வது?!
அதை உன் கருங்கூந்தல்!
மறைப்பதால் பறவைகளால்!
காண முடிவதில்லை என்றதும்!
உன் சிவந்த முகத்தில்!
பளிச்சென்ற வெண்மைப் புன்னகை...!
என் காதுகளில் லேசாகப் பாய்ந்தது!
உன் சிரிப்பின் இசை..............!
அய்யோ! நான் குடை கொண்டு வரவில்லையே!
மின்னலும் இடியும் சேர்ந்து!
வருகிறதே என்றதும்...........!
மேலும் என் வார்த்தைகளை!
பொறுக்க முடியாமல்!
உன் விரல்களால் என்னிதழை!
மூடினாய் மெதுவாக!
அந்நொடி ஊமையானேன் நான்..!
-தமிழ் ராஜா

இமையிரண்டு காதல்.. அவளாய் போன

காவிரிக்கரையோன்
இமையிரண்டு காதல் ஒன்று!.. அவளாய் போன அவன்!
!
01.!
இமையிரண்டு காதல் ஒன்று!!
-------------------------------------!
வார்த்தைகளை தேக்கி வைத்ததில் !
உள்ளத்து அணை உடைந்திடுமென்ற !
பயம் லேசாக பற்றிக் கொண்டது,!
உயிர் நிறைக்கும் துயில் களைந்து !
இன்னும் பிரியாமல் இருக்கும் இருளையும்!
நிலவையும் பார்த்துக் கொண்டே சாளரம்!
வழி கண்கள் பயணித்தது,!
சூரியன் வர வர மரியாதை நிமித்தம் !
அதிகம் காட்டி தன் முழு உருவத்தையும்!
வீட்டுக்குள் இழுத்து கொண்டது நிலா,!
எழுந்திருந்த சிலருக்கும், உறக்கக் காதல்!
கொண்ட சிலருக்கும் சூரிய வரவின் அறிவிப்பு !
செய்து கொண்டே இரை தேடி கடந்து செல்கிறது!
முருகனின் கொடிச் சின்னத்து பறவை,!
உறக்கம் கலையாத கண்களும் உறக்கம் !
கலைத்து விடும் கால்களுமாய் அம்மா பால்!
என்று இயந்திரமாய் மிதிவண்டி அழுத்திச்!
சென்றார் ஒரு பால்காரர்,!
இத்தனை வித்தியாசங்களையும் சுவாசித்தாலும்!
என்னால் வித்தியாசப்பட்டு நிற்க முடியாமல் தான்!
போனது, என் கண்ணிமைகள் இரண்டுக்கும் அப்படி ஒரு!
காதல், இறுகப் பற்றிக் கொள்ளத் துடித்தன,!
சரி காதலை பிரித்தப் பாவம் நமக்கெதற்கு என்று!
இமைகளின் தழுவலுக்கு வழி விட்டு கனவு பயணத்துக்கு!
மீண்டும் ஒரு பயணச்சீட்டு பற்றி பறக்க ஆரம்பித்தேன்!!
!
02.!
அவளாய் போன அவன்...!
------------------------------!
முள்ளிருக்கும் ரோஜா எனினும் உன்னைத் !
தள்ளி வைக்கப் போவதில்லை என்ற !
கர்வமுனக்கு,!
செருப்பாயிருந்தாலும் ஒரு முறை பெட்டியினுள் !
அமர்ந்து விட்டதால் எத்தனை முறை !
அழுக்குகளை மிதித்தாலும்!
தேய்மானம் ஆகா தன்மானமுண்டுனக்கு,!
உள்ளுணர்வு அதட்டி சொன்னாலும் பெண்மையின் !
காதலை துணிந்து கேட்கும் தன்னம்பிக்கை!
உண்டு எல்லா ஆணுக்கும்,!
விழுக்காடுகளில் தான் இருக்கிறது வாழ்க்கை!
முறை என்றாலும் பெண்ணியம் உண்டு அதில்!
தெய்வீக அன்புண்டு எல்லா பெண்ணிற்கும்,!
கழிப்பறையில் கூட அவதிப்பட்டு!
நிற்கும் இந்த இனத்திற்கு இந்த உலகத்தில்!
ஏதெனும் அடையாளம் விற்கப்படுகிறதா?

நலம் விரும்பிகளே!.. காகித கப்பல்

வேல் கண்ணன்
01.!
நலம் விரும்பிகளே!!
----------------------!
நானிருப்பது கரையான்புற்றுக்குள்!
பாம்புகள் வருவதற்குள் வேறிடம் சென்றடைவேன்!
பறவைகளின் கூடு!
ஆமைகள் அடைகாக்கும் குழிகள்!
தவறினால் விழி திறந்த நிலம்!
ஊதாரிகளுக்கு உங்களின்!
கதவுகளிலும் சன்னல்களிலும்!
தெரியும் வானம் பற்றாது!
முடிவிலிகளை தேடிக்களைத்த!
கால்கள் இளைப்பாறுகின்றன அலைகளில்!
வெடிப்பில் கசியும் இரத்தத்தில்!
பசியாறுகின்றன மீன் குஞ்சுகள்!
வெளுத்து பிளந்த உதடுகள்!
ஈரக்காற்றில் சுவாசிக்கின்றன!
சுமந்த புத்தகங்கள்!
இறக்கைகள் அல்ல என்பதை நான் அறிவேன்!
சிலுவைகள் அல்ல என்பதை நீங்கள் அறிக!
படைப்பு அனுபவம் பார்வை உலகம் ;!
எனக்கும்.!
அவ்வப்போது!
காறியுமிழ்ந்த எச்சிலை துடைத்துவிடுகிறேன்!
மேல்விழுந்த கற்களை புதைத்துவிடுகிறேன்!
வீச்சமும் வடுக்களும் இருக்கத்தான் செய்கின்றன!
தளர்த்திய கச்சையின்!
இடைத்துணியின் பின்னிருக்கும்!
இளஉறுப்புகளினால் பெரிதான சலனமில்லை!
தன்னை சூடேற்றி கொள்வதை தவிர!
நேர்ப்பார்வையை தவிர்ப்பது நானல்ல.!
நீளஅகலங்களை குறித்து!
குழி வெட்டுதலுக்கோ!
சிதையூட்டுவதற்கோ !
சொல்லியனுப்ப வேண்டியதில்லை!
சில நொடிகளில்!
மரணிக்க நேரிடும் என்னை!
இந்த நதியே இழுத்து செல்லும்!
கரையொதுக்காமல்!
(ஆத்மாநாமிற்க்கு.... )!
!
02.!
காகித கப்பல்!
-----------------!
மண்வாசம் வீசும் திசையில் விரைகிறேன்!
வழியெங்கும் மழை!
எதிர் வரும் காற்றிலும் இழுத்து செல்லும் நீரிலும்!
பேரிரைச்சலும் பெரும் சேதத்தையும் ஏற்படுத்துகிறேன்.!
நீ அனுப்பிய காகித கப்பல் கடந்து செல்கிறது!
துளியும் சலனமில்லாமல்

அகிலம் காக்கும் தொழில் செய்வோம்

அருணன்
காவியம் பலப்பல சொல்லி நம்மைக்காலி செய்து விட்டார்கள்.!
பாவியம் பாடிப் பாடியே பழமைப்!
போலி நட்டு வைத்தார்கள்.!
நீயிதை ஏனோ ஆதரித்தாய்?!
மீளுதற்கு இனியும் வழியுமில்லை!
சத்தியம் மறந்த வாழ்க்கையினை!
நித்தமும் வாழ இலக்கியம் ஏன்?!
புத்தனும் ஏசுவும் வாழ்ந்ததினும்!
புதிய இலக்கியம் ஏதுமுண்டோ?!
எழுதுதல் மட்டும் போதுமென்றால்!
எவர்தான் அதனை வாழ்வது?!
பழுதுகள் கலையா வாழ்க்கையிலே!
பயனேதும் உண்டோ நீ கூறு!
பிறர்க்கென வாழா உன்வாழ்க்கை!
குறைப்பிறப்பென்று நீ உணராய்!
தரக்குறைவான இலக்கியத்தால்!
தாழ்வது என்னவோ மொழிதானே!
தமிழுக்கென்று சிறப்புண்டு!
தமிழால் யாவர்க்கும் சிறப்புண்டு.!
புதுமையும் பழமையும் இருகண்கள்!
பொதுமையும் கடவுளும் உயிர்த்தளங்கள்!
வெறுமையே பேசி வீணாக்கும்!
பொறுமை இல்லா மானிடரே!
வறுமை தாழ்ந்த இலக்கியங்கள்!
குறுமை உள்ளக் குனிவாகும்!
தமிழ் மகன் உலகில் நீயென்றால்!
உலகியல் முதலில் நீயறிக!
அமிழ்தென விளங்கும் நம் தமிழால்!
அகிலம் காக்கும் தொழில் செய்வோம்

அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

பர்ஸான்.ஏ.ஆர்
என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.!
காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே!
கொஞ்ஞம் கொஞ்ஞமாக கால் பதித்து!
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.!
என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்!
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.!
நீண்ட தூரங்கள் கடந்துசென்று!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்!
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.!
!
வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று!
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.!
!
வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்!
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்!
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்!
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்!
நீல நிழலின் அழகில் நின்றது.!
காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்!
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.!
!
நிறங்களுடன் மெய்த பெருமழையில்!
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.!
!
நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்!
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது!
சிறிய கடலின் நீண்ட வெளியில்!
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.!
!
பர்ஸான்.ஏ.ஆர் !
20.02.2008

ஜீவஜோதி

ஜான் பீ. பெனடிக்ட்
எண்ண முடியா விண்மீன்களும்!
எரிந்து என்றோ விழுகிறதே!
விடியும் காலைப் பொழுதினிலே!
விரல்விட் டெண்ணவும் முடிகிறதே!
அள்ள அள்ளக் குறையாத!
ஆற்று மணலும் அத்துப்போச்சே!
மெரினா பீச் மணற் குப்பையும்!
மெஷினால் சலித்து சுத்தமாச்சே!
நீலவானை மூடி நிற்கும்!
நிறங்கருமை மேகம் பெய்ய!
நிலமகள் உள் வாங்கிய!
நிலத்தடி நீரும்கூட வற்றிப்போச்சே!
பீதியூட்டும் ஜாதி மதங்கள் மட்டும்!
ஜோதியாய் சுடர்விட் டெரிகிறதே!
ஊதியணைக்க முடியாமல்!
ஊரெல்லாம் பற்றி எரிகிறதே!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

உதாசீனம்.

ராம்ப்ரசாத்
தோழி காண்கிறாள்!
இவன் தன் தங்கையிடம்!
காட்டாத பரிவை...!
மனைவி காண்கிறாள்!
இவன் தன் தாயிடம்!
காட்டாத பாசத்தை...!
தந்தையானவன் தேடுகிறான்!
பணி ஓய்வு வரைதனில்!
இவன் காட்டிய‌!
மரியாதையை...!
இல்லாள் காண்கிறாள்!
தன் தங்கையிடத்தே,!
தன்னிடத்தே சேரவேண்டிய‌!
காதலை...!
உதாசீனத்திற்க்கித்தனை!
முகமூடிகள்.!
அற்ப ஆண்மகனுமிந்த‌!
முரணும் இணைபிரியா!
கோடுகள்.!
அவர் சிந்தனையில்!
இந்த இளமை,!
மழைக்குத்தாங்கா ஓடுகள்...!
எவ்விடத்தும் நிறைந்திருப்பது!
இறையென்றால்,!
அற்ப மனிதரிடத்தெல்லாம்!
நிறைந்திருப்பது நீயன்றோ!!!!

முதுமை

வேதா. இலங்காதிலகம்
முதுமை காலத்தின் தூது - இது!
பொதுமைப் பருவம் உயிர்களுக்கு!
உடற்பயிற்சியுடன் கொழுப்பற்ற!
உணவு நலம் பேணுவோருக்கு!
முதுமையும் இளமையான மகிமை.!
சுமையற்ற பெருமை, அருமை.!
முதுமையெனும் கொடும் விலங்கிட்டு!
கைது செய்கிறது காலம் உயிர்களை.!
பதுமையாகி சிலர் அசைவில்!
புதுமையற்று வாழும் காலம்.!
இது பூ தூவி வரவேற்கும்!
தோதுடை மைதானமல்ல.!
முதுமை மனச்சாட்சி பரிசுத்தமானது.!
இளமை மிடுக்குத் தவறுகளை!
முதுமையில் எண்ணி வருந்துவார்.!
அருமை நாயன்மார், சித்தர்!
ஆழ்வார் பாடல்கள், உரைகளை!
ஆழ்ந்து மீண்டும் மீண்டும் படிப்பார்.!
அனுபவக் கிரீடமிடும் நரையாக.!
அன்பு பொதுவுடைமைச் சிந்தனை!
ஒதுங்கும் சாது மனமாக, ஆரோக்கிய!
முதுமை பேரறிவுப் பசுமை.!
முதுமை வாழ்க்கையின் பத்மாசனம்!
ஆதரவாய் அணையுங்கள் முதுமையை!
09-10-09

சூர்யா கண்ணன் கவிதைகள் 11-11-07

சூர்யா கண்ணன்
பூ!
பாடைக்கு வைத்தாலும் !
பரமனுக்கு வைத்தாலும்!
வாடத்தானே செய்யும் ...பூ!!
சாலை!
இந்த சாலைக்கு தெரியுமா ?!
மேலே கடக்கிற வாகனம்!
எந்த ஊருக்கென்று..?!
நாணயம்!
பூ விழுந்தால்!
வெற்றி எனக்குத்தான்!
சுண்டிக்கொண்டேயிருக்கிறேன்!
பூ விழும் வரையில் !
நாணயத்தை..!
-சூர்யா கண்ணன்!
குன்னூர்