வனதேவதையின் போராட்டம் - புதியமாதவி, மும்பை

Photo by Mishaal Zahed on Unsplash

மண்ணில் ஆழப்பதிந்த!
வேர்களின் வலியுடன்!
முறிந்து விழுகிறது!
எங்கள் கிளைகள்.!
ஒவ்வொரு பூக்களாய்!
ஒவ்வொரு இலைகளாய்!
தேடித் தேடி!
தொடுவதில்லை காற்று!
!
காற்று விலக்கிய!
இலைகளும்!
காற்றை விலக்கிய!
மலர்களும்!
இருப்பதில்லை எங்கள்!
தோட்டத்தில்.!
!
இலைகளைக் கிழிக்கும்!
காற்றின் கைகளை!
மலரிதழ்களே!
முத்தமிடும் போது!
மன்னிக்க முடிவதில்லை!
எங்கள் மரங்களை.!
எங்கள் பயணத்தில்!
எப்போதும்!
எங்களுக்காய்!
வேர்கள் சுமக்கின்றன!
முள் கிராடங்களை.!
*!
புயலின் போர்வையில்!
காற்று நடத்திய!
வன்புணர்ச்சியில்!
பச்சை இலைகள்.!
வரிய இருட்டில்!
ஆயிரம் கைகளுடன்!
கிளைகளின் கண்ணெதிரே!
இலைகள் மீது வல்லாங்கு.!
சருகளாய் உதிர்ந்தப் பிறகும்!
தொட்டுப் பார்க்கிறது!
மீண்டும் காற்று.!
அதை விட்டுப் பறக்கிறது!
மண்தேடி!
மண்ணின் வேர்த்தேடி!
இலைகள்.!
*!
வாயு மண்டலத்தில்!
வனதேவதைகளின்!
நிர்வாணப் போராட்டத்தின்!
சாட்சிக் கல்லாய்!
ஊர் எல்லையில்!
ஆடைகள் களைந்து!
உறங்கிக் கொண்டிருக்கிறது!
மாசானத்து அம்மன்
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.