நாம் புதியவர்கள் - புதியமாதவி, மும்பை

Photo by Jr Korpa on Unsplash

நான் தென்றலாக !
வரவில்லை !
அதனாலெயே !
புயல் என்று !
யார்.. சொன்னது? !

நான் கனவுகளாக !
வரவில்லை !
அதனாலேயே !
நிfம் என்று !
யார்.. சொன்னது? !
நான் காதலியாக !
வரவில்லை !
அதனாலேயே !
சகோதரி என்று !
யார்.. சொன்னது? !

நான் மழையாக !
வரவில்லை !
அதனாலேயே !
சூரியன் என்று !
யார்.. சொன்னது? !
நான் விடியலாக !
வரவில்லை !
அதனாலேயே !
இருட்டு என்று !
யார்.. சொன்னது? !
நான் அதாக !
வரவில்லை !
அதனாலேயே !
இதாக இருக்க !
யார்.. சொன்னது? !
நான் நானாக !
நீ நீயாக !
நீயும் நானும் !
புதிதாகப் பிறந்தவர்கள்.. !
நான் யார்....? !
நாளைய !
அகராதி !
எழுதும்.... !
அதுவரை !
இருக்கின்ற சொற்களில் !
என்னைக் கழுவேற்றி !
உன்னை !
முடித்துக்கொள்ளாதே
புதியமாதவி, மும்பை

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.