தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நெடுந்துயர் அகன்றேயோடும்

எம் . ஜெயராமசர்மா, அவுஸ்திரேலியா
வான்முகில் வளாது பெய்கவென!
வாயார வாழ்த்துப் பாடி!
வையத்தில் விழாக்கள் தோறும்!
மனமாரப் பாடி நிற்போம்!
வாழ்த்தினைக் கேட்டு விட்டு!
வானுறை தேவர் எல்லாம்!
வையகம் வாழ்க எண்ணி!
மாமழை பொழியச் செய்வர்!
வரண்டு நிற்கும் பூமியெல்லாம்!
வான் மழையக் கண்டுவிட்டால்!
மகிழ்வு கொண்டு வானோக்கி!
மனதார நன்றி சொல்லும்!
வயல்நிறையும் குளம் நிறையும்!
வயலுழுவார் மனம் மகிழும்!
தினமும் மழை பெய்கவென!
தீர்மானம் எடுத்தும் நிற்பார்!
அகமகிழ வைக்கும் மழை!
ஆபத்தைத் தந்த திப்போ!
அனைவருமே மழை பார்த்து!
அலமந்தே நின்று விட்டார்!
பார்க்கு இடம் எல்லாம்!
பாய்ந்தோடும் வெள்ள மதால்!
பரி தவித்து நிற்கின்றார்!
பல இடத்தில் மக்களெலாம்!
நீர் பெருகி நிற்பதனால்!
நிவாரணப் பணிகள் எல்லாம்!
யார் செய்வார் எனவேங்கி!
நாளும் அவர் அழுகின்றார்!
மேடைகளில் ஏறி நின்று!
வாய் கிழியப் பேசியவர்கள்!
அறிக்கைகளை விட்டு விட்டு!
அவர் பாட்டில் இருக்கின்றார்!
ஆளுகின்ற கட்சி தனை!
அனுதினமும் திட்டி நிற்கும்!
எதிர்க் கட்சிக் காரரெலாம்!
இதை வைத்தே திட்டுகின்றார்!
எதிர்க் கட்சித் திட்டினுக்கு!
ஏற்ற பதில் சொல்லவதிலே!
இதைச் சாட்டாய் கொண்டுள்ளார்!
ஏறி நிற்கும் அரியணையார்!
வாதங்கள் புரிவதிலும் வழக்குகள் இடுவதிலும்!
பேதங்கள் யாதுமின்றி பேயாட்டும் போடுகின்ற!
சாதனைச் செம்மல்கள் சராசரி மக்களது!
வேதனைகள் புரியாது விடுகின்றார் அறிக்கைமழை !!
வடிகால்கள் அமைக்கவென வந்திருக்கும் பணமெல்லாம்!
வட்டாட்சி மாவட்டம் மந்திரிகள் வசமாகும்!
மழைவந்த பின்னாலே மழைவெள்ளம் தனைப்பார்த்து!
மந்திரிகள் மற்றவர்கள் மாடிநின்று படமெடுப்பார் !!
அவர்களது தொலைக்காட்சி அதைக்காட்டிப் பணமாக்கும்!
அவதிப்படும் மக்கள்தமை ஆருமே பார்க்கார்கள்!
அவர்நிலையை பெரிதாக்கி அனுதாபம் தேடியவர்!
அவர்பொருட்டு வரும்நிதியை அமைதியாய் சுருட்டிநிற்பார் !!
வெள்ளப் பெருக்குக்குக்காய் வேதனையாய் இருப்பதுபோல்!
வெள்ளை வேட்டிசட்டையுடன் விதம்விதமாய் கதைவிடுவார்!
உள்ளமெலாம் அழுதபடி ஓர்வழியும் புரியாமல்!
வெள்ளத்தில் அகப்பட்டார் விழிபிதுங்கி நிற்பார்கள் !!
மாடிவீட்டில் வசதியுடன் மனைவி மக்களோ டிருப்பார்!
மாவெள்ளப் பாதிப்பால் மகிழ்வையெல்லாம் இழந்துநிற்கும்!
மக்கள்தமை மனங்கொள்ளா மாமனிதராய் இருப்பர்!
மக்களெலாம் வெள்ளத்தில் மரணத்தை அணைத்துநிற்பார் !!
பொறியியல் படித்தவர்கள் பொறுப்புதனை அறிந்தவர்கள்!
நெறிமுறையில் செயல்பட்டால் நீரழிவு வந்திடுமா!
அறநெறியைக் கடைப்பிடித்து ஆட்சிதனை ஆற்றிவிடின்!
அநியாய வெள்ளமது அனைவரையும் அழிக்காதே !!
குடிகளைக் காக்கவேண்டும் குறையெலாம் போக்கவேண்டும்!
நடித்திடும் செய்கைதன்னை நாட்டிலே அகற்றவேண்டும்!
அரசியல் செய்கின்றாரும் அதிகாரம் செய்கின்றாரும்!
நினைவெலாம் தூய்மைபெற்றால் நெடுந்துயர் அகன்றேயோடும்

வெறும் மனிதன்.. அங்கதன் வரும் வரை

சத்தி சக்திதாசன்
வெறும் மனிதன் தான்.. அங்கதன் வரும் வரை !
01.!
வெறும் மனிதன் தான்..!
----------------------------!
ஏதோ வடிக்கின்றேன்!
கவிஞனல்ல நான்!
எதையோ தேடுகிறேன்!
அறிஞனல்ல நான்!
மனிதனாக நடந்து விட!
மனம் கொஞ்சம் துடித்தெழும்ப!
மூலைகளில் இருளுக்குள்!
முடங்கிக் கிடக்கும் மாண்புகளை!
தூசு தட்டி எடுத்து!
தோளிடத் துடிக்கின்றேன்!
இலக்கியமும் தெரியவில்லை!
இலக்கணமும் புரியவில்லை!
உள்ளத்தின் உணர்வுகளை!
வடித்துவிட அன்னைமொழி!
வார்த்தைகளைக் கோர்க்கின்றேன்!
அன்று கண்ட நிலவுக்கும்!
இன்று காணும் நிலவுக்கும்!
இல்லை ஒரு வேறுபாடு!
பார்க்கும் எந்தன் விழிகளில்!
பூக்கும் அந்தக் காட்சிகள்!
புரியவைக்கும் அர்த்தங்கள்!
புதுமலராய் பூக்குதம்மா .....!
பூமியது உருள உருள!
கூடியது அகவைகள் மட்டுமே!
நெஞ்சிலின்று மலரும் எண்ணங்கள்!
நேற்றை போல் இல்லை!
கண்டதெல்லாம் வேண்டும்!
உள்ளம், காண்பதெல்லாம்!
அடையும் ஆசை!
அற்றுப் போகும் சூழலில் இன்று!
அதனால்தான்!
வெற்றுக் காகிதத்தில்!
கொட்டுகின்ற வார்த்தைகள்!
கட்டுகின்றன அர்த்தங்கள்!
கனக்கின்ற மாற்றங்கள்!
ஆமாம் ......!
கவிஞனல்ல நான்!
வெறும் மனிதன் தான் . . .!
02.!
அங்கதன் வரும் வரை .....!
-------------------------------!
அங்கதன் வரும் வரை!
அர்த்தமில்லா ஆட்டங்களை!
அந்தரத்தில் ஆடுகின்ற!
அவசர வாழ்க்கை இது!
அங்கொன்றும் இங்கொன்றும்!
ஆசைகளின் விளிம்புகளில்!
அடையமுடியாக் கனவுகளில்!
அலைகின்ற கோலமிது!
ஆடும்வரை ஆட்டம்!
ஆடியதும் ஓட்டம் அவ்!
ஆட்டத்தின் விட்டம்!
அறிவதுதான் சித்தம்!
அகிலத்தின் இயக்கம்!
அறிந்து கொள்ளா விளக்கம்!
அடங்காத தாகம் அதையும்!
அடக்கி விட்டால் விவேகம்!
அறிஞர்கள் ஒருபுறம்!
அள்ளித்தரும் அருள் வரம்!
அடர்த்தியான வனத்தினுள்!
அலைகின்ற விடலை யான்

வன்முறை வாழ்க்கை

சுதாகரன், கொழும்பு
ரத்தம்!
உறைந்த சாலையில்!
பிரேதங்களின் மீது!
நடப்பதாகவே!
ஒரு உணர்வு.!
மனித!
எச்சங்கள் எல்லாம்!
வளமாகிப் போனதால்!
பூக்களை கூட!
நெருங்கமுடிவதில்லை!
பிணவாடை.!
கல்லறைகளுக்கு!
வைத்தே தேசத்தின்!
மலர்கள் தீர்ந்து விட்டதால்!
விற்பனைக்கெல்லாம்!
இப்போது பிளாஸ்டிக்கில்.!
துப்பாக்கி தோட்டாக்களில்!
கணிதம் படிக்கும்!
அந்த அழகுச் சிறுவன்!
நாளை!
என்னவாவான் ?!
இந்த இடுகாட்டுப்!
பூமியில்!
நாளை பிறக்கும்!
குழந்தைக்கும்!
கந்தக ஆயுதம்!
தயாராகிவிட்டது.!
கதந்து போகின்றன!
நாட்கள்!
என்று தீரும்!
இந்த!
வன்முறை வாழ்க்கை ?!
!
-சுதாகரன்!
கொழும்பு

மனிதர்கள் பலவிதம்

சித. அருணாசலம்
நிலை தாழ்ந்து!
சோம்பலைச் சுமந்து!
காலத்தின் மீது !
பழி சுமத்துபவன்!
முன்னேற்றத்திற்குத் தானே!
முட்டுக்கட்டையாய் இருப்பான்.!
சாதாரண மனிதன்!
கனிந்து போய் விழும்!
பழத்திற்குப்!
பார்த்திருப்பது போல்!
சாதகமாய் வரும்!
சந்தர்ப்பத்திற்காய்!
காத்திருப்பான்.!
இலக்கை நிர்ணயித்து,!
லட்சியத்தை மனதிலும்,!
முயற்சியை செயலிலும்!
முடிவாக்கிய மனிதன்!
சந்தர்ப்பங்களை உருவாக்கி!
சாதித்துக் காட்டுவான்.!
!
- சித. அருணாசலம்

இறையருளோ?

முருகடியான்
நாயர் பிடித்த புலிவால்போல்!
நானும் பிடித்தேன் கவிவாலை!!
காயும் கனியும் பறித்துண்டு!
களிப்பில் கசப்பில் கலக்குண்டு!
தேயும் வயதும் தெரியாமல்!
திரையும் நரையும் புரியாமல்!
ஓயும் உடலென் றுணராமல்!
உழைக்கச் செய்வதும் இறையருளோ?!
!
மரபுச் சிலுவை சுமந்தாலும்!
மரண மனக்கவல் தொடவில்லை!!
சிறகை உறவுகள் அறுத்தாலும்!
செந்தமிழ்த் தாய்க்கை விடவில்லை!!
பரவிச் சென்றன உணர்வலைகள்!
பழியில் புகழில் சிலநிலைகள்!!
திரவஞ் சிலநாள் திடஞ்சிலநாள்!
திரிந்திட வைப்பதும் இறையருளோ?!
!
எண்ணத் தறியில் நூலிழையில்!
எத்தனை உடைகள் நெய்தாலும்!
வண்ணப் பணமெனும் நிறப்பூச்சு!
வாய்த்தால் வளர்வது புகழ்ப்பேச்சு!
இன்னல் இழப்பும் எத்தனையோ,!
இறைவன் தந்ததென் றெண்ணாமல்!
என்னால் வந்ததே எனநினைக்கும்!
இயல்பைக் கொடுத்ததும் இறையருளோ?!
!
-பாத்தென்றல்.முருகடியான்

நகர்வு

மு. பழனியப்பன்
மு. பழனியப்பன் !
!
இடம் விட்டு நகர்வதாய் முடிவாகிவிட்டது !
எல்லாம் உறுதி !
எவர் வந்தும் எங்களைத் தடுத்துவிட முடியாது !
மகிழ்வோடு நாங்கள் கிளம்புகிறோம் !
வரும்போது பெரிதாய் எண்ணி !
வந்தோம் !
போகும்போது பெரிதாய் எண்ணி வந்திருக்கத் தேவையில்லை !
என்று தோன்றுகிறது !
வாழ்க்கையின் ஒரு காட்சி இது !
இது நிறைவுக் காட்சியுமல்ல தொடக்கக் காட்சியுமல்ல !
இடைவேளைக் காட்சி !
அவ்வளவுதான் !
வந்தோம் !
ஆனால் செய்ததெல்லாம் நன்மை !
அது மட்டும் உறுதி !
இதனால் !
இருப்பவர்களைக் குறை கூற முடியாது !
அவர்களின் இருப்பின்படி !
இருக்க வேண்டிய கட்டாயம் !
சரி !
நாங்கள் கிளம்பிவிட்டோம்

என்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்

சத்யா
என்னை போலவே திணருகிறதே..! சிகரெட்டை போலவே.. பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!!
!
01.!
என்னை போலவே திணருகிறதே..!!
--------------------------------------!
உன்னிடம்!
கொடுத்துவிட்ட!
நிழலை!
இனி எப்படி பூமியில்!
பிரதிபலிக்க செய்வது!
என என்னை போலவே திணருகிறதே!
என் மேல் வீசும்!
ஒளிகள் எல்லாம்..... !
02.!
சிகரெட்டை போலவே..!
---------------------------!
என்னை பார்த்ததும்!
நீ மறைக்கும்!
சிகரெட்டை போலவே!
நானும் மறைக்கிறேன்..!
உன்னை பார்க்கும் போதெல்லாம்!
உன் மீதான ஆசையை.!
!
03.!
பேர்ல மட்டும் மிச்சம் வச்சோம் நம்ம ஒரவ..!!
------------------------------------------------------!
முண்டி அடிச்சு எனக்கும்!
சேர்த்து சாப்பாட்டுக்கு!
நிப்பியே பள்ளிக்கொடத்துல.....!
ஜன்னலோரம் சீட்டு பிடிச்சு!
எனக்கா விட்டு கொடுப்பியே!
பஸ்சு ஏறயிலே..!
என் மேல உரசிக்கிட்டு!
ஊர் கத பேசுவியே!
எறங்குற வரையில..!
பருவம் திறந்து விட!
பாவாடை மறச்சி என்னை!
கொண்டாந்து சேத்தியே வீடு வரையில..!
கல்யாணம் கட்டாம கடைசி வரைக்கும் இருப்போம்ன்னு கதை!
அளந்துகிட்டோமே படிக்கையில..!
சொல்லி தான் வாய் மூடல!
வருசம் கூட ஒன்னு ஏறல..!
கல்யாண சந்தையில கட்டி விட்டாக!
நாங்க காணாத தூரமா பிரிச்சி வச்சாக..!
பிரிகையில ஒரு தடவ பாத்துகிட்டோம்..!
ஒன் பிள்ளைக்கு என் பேரும்!
என் புள்ளைக்கு ஓன் பேரும்!
வைக்கனும்னு சொல்லி வச்சுக்கிட்டோம்.. .!
நெனச்சபடியே பேரு வச்சோம்..!
அந்த பேர்ல மட்டும் thaana!
நம்ம உறவ மிச்சம் வச்சோம்

நான்குமணிக் கவிதை

நீச்சல்காரன்
வார்த்தைகள்!
இடைமறிக்கப்பட்டு!
இனம்காணும்!
பொழுதில் எங்கோ!
உதிக்கும் கற்பனை.!
தூக்கத்தைத் தியாகம்!
செய்து!
அதில் கவிதைகளை!
ஒத்திகை பார்க்கும்!
கவிஞன்...!
இவ்வாறுயிருக்கையில்!
உறக்கத்தில் பறிபோன!
எண்ணக்காட்சிகள்!
வார்த்தை வடிவம்!
பெறும்முன்னே!
கனவாகிவிடும்!
அந்த சாமத்தில்!
வார்த்தைகள்!
பரிமாறப்பட்டு!
கொள்ளும்!
வள்ளுவனுடனும்!
பேசலாம்..!
விரட்டிவந்த கேள்விக்கு!
தீணி கிடைத்துவிடும்!
பேனாக்களில்லாமல்!
நெஞ்சில் தைக்கும்!
கவிதைகள்!!
சிறைபட்ட கருத்துக்களை!
பொறுக்கி!
சிந்திக்கையில்!
அதிகாலை நான்குமணி

விரல்களின்.. விழித்துக்கொள்

கு.சிதம்பரம், சீனா
விரல்களின் பயணம்.. விழித்துக்கொள்!
01. !
விரல்களின் பயணம் !
--------------------!
அவனின் அய்ந்து விரல்களும்!
அவசரமாக பயணம் செய்துக்கொண்டிருக்கிண்றன!
ஆறாவது விரலை நோக்கி!
அவனின் முதல் பயணம்!
பதிமூன்று வயதில் தொடங்கியது!
முப்பது வயதைக் கடந்தும்!
அவன் விரல்கள் செல்லும் பாதையில் மாற்றமில்லை!
ஆறாவது விரலைத் !
தொட்டவாரே தொடர் யுத்தம்!
இடை இடையை சில இடைவேலைகள்!
அய்ந்து விரல்களின் அரவணைப்பில்!
அடுத்த தலைமுறை ஆக்ரோசமாக வெளியேரியது!
எங்கள் பெண்டீரை கொன்று!
குவித்துவி;ட்டால் எங்கள் இனம்!
மறைந்துவடுமென்று கனவு கான்கிறாயா?!
மண்ணில் கலந்துள்ள !
அவள் செல்களை சென்றடைந்து!
என் தமிழினத்தை தளைக்கச்செய்யும்!
என் வீரியமுள்ள விந்துக்கள்.!
!
02.!
விழித்துக்கொள்!
-----------------!
அம்மா என் தாய்மொழி!
என்னம்மா?!
ஏண்டா,உனக்கு!
அதபத்தி இப்ப என்ன கவல?!
இல்லம்மா சொல்லும்மா?!
எதுக்குடா கேக்குற?!
எங்க வாத்தியார் கேட்டாரும்மா!
தமிழ்மொழின்னு சொல்லுடா!
நாம பேசர மொழி!
என்ன மொழிம்மா?!
அதுவும் தமிழ்தாண்டா!
தமிழ்மொழி பேசறவங்க!
தமிழர்களாம்மா?!
ஆமாண்டா!
இலங்கையில பேசர மொழியும்!
தமிழ்மொழியம்மா?!
ஆமாண்டா!
அப்ப அவங்க தாய்மொழியும்!
தமிழாம்மா?!
ஆமாண்டா!
அப்ப அவர்களும் !
தமிழர்களாம்மா?!
ஆமாண்டா!
அப்படின்னா ஏம்மா என்ன மாதிரி!
பள்ளிகூடத்துல தமிழ் படிக்கிற !
குழந்தைகளை இலங்கையில !
குண்டுபோட்டு கொல்றாங்க?!
சொல்லும்மா அப்படின்னா!
எங்களையும் கொன்னுடுவாங்கலா?!
சொல்லும்மா…!
எங்களையும் கொன்னுடுவாங்கலா?!
சொல்லும்மா…!
தமிழ் படிக்கிற குழந்தைகளையெல்லாம்!
குண்டுபோட்டு கொன்னுடுவாங்கலா? !
சொல்லும்மா…!
சொல்லும்மா…!
சொல்லும்மா…!
!
-கு.சிதம்பரம்,சீனா

வெற்றியில் கிறக்கம்

ராமலக்ஷ்மி
இலக்கைத்!
தொட்டு விட்ட!
புள்ளியில் நின்று!
தன்னை மறப்பதும்!
தற்பெருமை பேசுவதும்!
சிறையில் இருப்பவன்!
அறையின் விசாலத்தை!
சிலாகிப்பதாகாதா?!
அடைந்த உயரம்!
அளிக்கலாம் ஊக்கம்!
ஆனால் அதுவே!
தரலாமா தலைக்கனம்?!
பரந்தது உலகம்!
உணர்வது முக்கியம்;!
வெற்றியில் கிறக்கம்!
வீழவும் வைக்கும்.!
எத்தனை நேரம்தான்!
ஏந்தியே நிற்போம்?!
கிடைத்த கோப்பையை!
கீழே வைத்துவிட்டு!
வந்த பாதைக்குஒரு!
வணக்கம் சொல்லிவிட்டு!
இந்தப் பக்கம்!
திரும்பினால்தானே-!
தென்படும் தூரத்தே..!
சவாலாய் நமக்குக்!
காத்திருக்கின்ற!
அடுத்த இலக்கு?