தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நழுவுதல்.. உருண்டைச்சோறு

முத்துசாமி பழனியப்பன்
01.!
நழுவுதல்!
---------------!
நடைபற்றி வந்த நிலா!
கால் இடறிக் குளத்தில் விழுந்து!
தத்தளித்துக் கொண்டிருந்தது!
அதைக் கைகளில் அள்ளியள்ளி!
கரையில் ஊற்ற!
மீனைப் போல!
நழுவி நழுவி மீண்டும் மீண்டும்!
குளத்தில் சேர்கிறது!
02.!
உருண்டைச்சோறு!
------------------------!
அப்பா மிரட்டுவதோடு சரி!
அம்மா வற்புறுத்தி ஊட்டுவாள்!
அக்கா பிடுங்கித் தின்பதாய் பாசாங்கு செய்வாள்!
தாத்தா இருக்கும் வரை யானைச் சவாரிக்கு பஞ்சமில்லை!
பாட்டி தான் ஒரு வாய்க்கு ஒரு கதை சொல்லி!
தானாகவே என் வாய் பிளக்க வைப்பாள்

தீவிரவாதம்

எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
நெட்டி முறித்து எழுகையில் கூடவே எழுகின்றன!
மனித மாமிச வாசனைகள்!
என் எழுதலுக்காகவே ஏங்கிக் கிடந்தவனாய்!
அறுபட்ட பிண்டமொன்றை தொப்பென முன் கடாசி!
தோய்ந்த குருதி துடைத்தபடி விரைகிறான் ஒருவன்!
நேரிய குறுகிய அகன்ற பாதைதோறும்!
இளித்தபடியான சிரங்கள் இறைந்து கிடக்கின்றன!
தெரு முச்சந்தியில் மண் கவ்விக் கிடக்குமோர்!
எதுவுமற்ற எலும்போட்டுடலில் இணைக்கச் சொல்லி!
கெஞ்சும் தோரணையில் என் பால் நீண்டு கிடக்கிறது!
பிண்டமற்ற வெற்று இடக்கையொன்று!
ஒரே இடத்தில் மாண்ட ஒரு குழும எண்ணிக்கையை!
இன்னோரிடத்துக் குழுமம் மிஞ்சியதாக!
நின்று துணிந்து மரண ஓலமிட்டுக் கொண்டிருக்கிறது!
வானொலிகளும் தொலைக்காட்சிகளும்!
மனிதனாயிருந்திருக்காத பெருமூச்செறிந்தபடி!
வடித்திறக்கிய தூய வெண் சோற்றில்!
இழுத்திரைத்த இரும்பு வாளியில் ததும்பம்!
கிணற்றூற்று நன்னீரிலெல்லாம்!
ததும்புகின்றன இரத்தச் சாயங்கள்!
தொட்டுத் தொடரும் தீவிரவாதங்களென்று!
சாடிக் கழித்து பின் கூடியும் கழிக்கிறார்கள்!
பெருஞ்ஜன ஆளுமை ஆதிக்கர்கள்!
இருண்டு சூழ்ந்த தோலுலகைக் கிழித்து!
கருக்கள் ஜனித்திறங்கும் பாதையைப் போல்!
மாள நேரும் பாதையும் ஒருமையாயிருந்திருக்காத!
கைசேதத்தில் தேகம் நோகிறார்கள் எஞ்சியவர்கள்!
!
-எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்

த.எலிசபெத், இலங்கை
காயங்கள் காய்ந்தாலும்!
வடுக்களென்றும்!
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...!
வெற்றிக்களிப்பில்!
வீரமெனப்படுவது!
மூழ்கிக்கிடப்பினும்!
முறித்துப்போட்ட எம்!
முழு நிலவுகளை எந்த வானம்!
முழுமையாக தந்திடும்...!
இருகிய இதயத்தினை!
இறைவழியின் துணைகொண்டு!
சுமைக‌ளின் வ‌ழித‌னை!
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்!
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்!
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...!
உற‌வுக‌ளை இழ‌ந்து!
உரிமைக‌ளை துற‌ந்து!
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்!
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்!
ஊன்றி நிற்கின்றோம்...!
விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்!
விடிய‌ல்க‌ள்!
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்!
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு!
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து!
அக‌தி இல‌ச்சினையே!
அந்த‌ஸ்தான‌து...!
போதும் போதுமிறைவா!
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு!
புதிய‌ பாதை க‌ண்டிட‌!
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு!
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...!
விடைக‌ளுக்குள்ளே!
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்!
விழித்த‌தெல்லாம் போதும்!
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை!
ஒதுக்கிவிட்டு!
ஒற்றுமை குர‌லோடு!
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்!
ஒழிக்க‌ப்போகிறோம்

மதகு செதுக்கும் உளியின்பால்

ரவி (சுவிஸ்)
பெண்ணியத்தை ஒரு தோசைபோல் !
சுட்டுக் காட்ட !
சவால்விட்டபடியே வந்தனர் அவர்கள். !
இரத்தமும் சதையுமாய் உடல் !
மாறுதலை நேசித்து !
வளர்கிறது !
நம்மைச் சுற்றியதெல்லாம் மாறுகிறது !
மாறாத தத்துவங்களை திணித்தவர்களும் !
காணாமல் போயினர். !
ஆனாலும் கல்தோன்றா காலத்து முன் தோன்றியவர்கள் !
நாம் !
கலாச்சார உளியுடன் அலைகின்றோம் !
பெண்சிலை வடிக்க. !
காதலின் வயப்படலில் எழும் !
உணர்வுகளை !
பெண்ணிடமிருந்து களவாடுகிறாய். !
போதைப் பொருளாய் !
மிதக்கிறாள் அவள் உன் நினைவில். !
பெண்விடுதலை என்றதுமே !
பெண்குறிமேல் மொய்க்கும் கருத்துகளோடு !
இரைச்சலிடும்வரை !
பெண்ணியம் என்ன !
பெண்ணையும் நீ !
புரிந்துகொள்ள முடியாது போ! !
- ரவி (சுவிஸ்,24122003)

முடிச்சுக்கள்

கவிதா. நோர்வே
எமன் கைகளில் !
இருந்தா எறிப்படுறது?!
பாசக்கயிறுகளாய்!
வீசப்படும் ஒவ்வொரு!
முடிச்சிலும்!
எனது உணர்வுகள்!
இறுக்கபடுகிறது!
வலியில் இருந்து!
விலகும் அவசரத்தில்!
தொலைந்து போகிறது!
எனது சித்தம்!
ஒவ்வொரு முடிச்சுக்களாய்!
மூச்சிரைக்க !
அவிழ்க்கும் அறுக்கும்!
கணங்களையும்!
பயன் படுத்தி!
எறியப்படும்!
புதிய முடிச்சுக்கள்!
அகோரமாய்ச்சிரிக்கின்றன!
வலுவிழந்து தொய்ந்த!
என் கைகளில்!
விழுந்திழுக்கிறது!
ஒரு கொடும்பாறை!
என் வளையல்கள்!
நொருங்கி!
கொட்டிக்கிடக்கிறது!
கிழிந்து கழன்ற!
என் புடைவைக்கருகில்!
அவையள்ளி நிமிர்கையிலே!
நிற்கிறாய் நீ!
நீ எறிந்க !
வார்த்தைக்கயிறுகளும்!
மயான அமைதியும்!
அறுந்து கிடக்கிறது!
எம்மைச்சுற்றி!
உன் முகத்தில்!
விரிந்து நிற்க்கும்!
திருப்தியில்...!
எந்த வார்த்தையும்!
சிந்திவிடாமல்!
உன்னையும் தாண்டி...!
பயணப்படும் !
எனது வாழ்க்கை...!
குற்ற உணர்வுகளை!
இனியாவது தொலைக்கட்டும்.!
-கவிதா நோர்வே

மரணமும் மனிதர்களும்

ரா.கணேஷ்
பள்ளிக்கூட வாசல்..!
மிட்டாய் காரன்!
இறந்து போனான்!
வடக்கே போன!
மகனோ!
வரவேயில்லை..!!
பள்ளிக் குழந்தைகள்!
விடாமல் அழுதன..!!
மிட்டாய் காரி!
மிட்டாய் விற்கத்!
துவங்கினாள்...!?!
-ரா. கணேஷ்

எனக்காகவே ஓர் எறும்பு

டீன்கபூர்
ஒரு சீனிக்கட்டியை இழுத்துச் செல்லதைப்போல!
என்னை லாவகமாகப் பிடித்துச் செல்கிறது!
ஓர் எறும்பு!
என் செவிகள் இழுக்கப்பட்டு!
தலையில்; ஒரு குட்டும் போட்டு அழைத்துச்செல்கிறது. !
தலைமையிடம் நான்; தவறாகப் பேசப்படுகிறேன்.!
எனது ஒவ்வொரு அங்கங்களும் எறும்பின்!
கோர நகங்களால் கிழிக்கப்பட்டு!
துண்டுகளாக்கப்பட்டு!
இனங்காண இயலாத ஒரு நிலத்தின் துளைக்குள்!
அடக்கப்படுகின்றன.!
தலைமை துவைத்தெடுத்த என் பாசம்!
அவர் மேசையின் மீது!
ஒரு மொட்டைக் கடிதமாக அல்லது!
சுவர்களின் பூச்சுக்களில் பேசப்படுகின்றன.!
மானம் என்பது உயிர்; இருக்கும்வரை தான்!
அழகிய கனவு இயற்கையாக அடுக்கப்படும்வரை தான்!
வெளிச்சம் இருளுக்காகவே என்பதை!
எறும்புகளும் மறந்தே விட்டன.!
எலியின் மரண வேதனை பூனைக்கு!
எங்கு தெரியப்போகிறது?!
அதுக்கு விளையாட்டு!
எனக்காகவே ஓர் எறும்பு படைக்கப்பட்டிருக்கிறது.!
தினமும் நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்.!
கொல்லப்படுகிறேன்.!
ஒரு மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வரை.!
!
-- டீன்கபூர்

பாரதம்

s.உமா
இரவில் வாங்கிய!
விடியல்!
எங்கள் விவேகத்தின் !
வெளிச்சம்...!
எங்கள் கொடியை!
உயர்த்தவே!
'குமரன்' கள் நாங்கள்!
கொலையுண்டோம்...!
மாற்றானுடையதை!
மிதிக்க அல்ல !
மறுக்கவே!
ஆசைப்பட்டோம்... !
இறக்கப் படாமல் இறங்கிய!
கொடியின்!
இடத்தை பற்றியது!
ஏற்றாத போதும்!
எங்கள் உள்ளத்தின்!
உச்சியில் பறந்த !
எம் கொடி!
இன்னா செய்தார்க்கு!
நாண!
நன்னயம் செய்யும்!
நோக்கு அது...!
பெற்ற பிள்ளைக்கு!
பால் என்ன!
பழஞ்சோறும்!
புகட்டாதாள் எம் !
பாரதத்தாய்...!
என்றாலும்!
பிச்சை வாழ்க்கை!
அச்ச உணர்வை!
ஊடட்வில்லை எங்கள் !
உதிரத்தில்... !
அத்து விட்டது!
விலங்கு - ஆக!
பெற்றுவிட்டோம் !
புதுவாழ்வு...!
கட்டிவிட்டோம்!
மனக்கோவில்...!
அங்கே....!
ஜாதி பேய்களை!
கொண்று!
மத பேதங்கள்ற்ற!
ஓர்வாயில்...!
காமங்கள் குரோதங்கள்!
விட்டு!
கடன் தொல்லை!
அழித்ததோர் வாயில்...!
பட்டப் பகலில்!
கொள்ளை மற்றும்!
பட்டினிச் சாவுமிங்கில்லை!
என!
பறைச்சாற்றி!
நிக்குதோர் வாயில்...!
திறந்து கிடக்குதோர் !
வாயிலாங்கே!
திறமையுள்ளோர்!
எல்லோர்க்கும்!
வேலை...!
நட்ட நடுவினில்!
எம் நாடு!
பச்சை பசுமை!
போர்த்த பூங்காடு...!
பூக்களின் நடுவினில்!
புதுநங்கை நல்லாள் !
பட்டத்துன்பங்கள்!
மறந்துவிட்டாள்!
பந்தைபிடித்தே !
ஆடுகின்றாள்!
பாடுகின்றாள் எங்கள்!
பாரதத்தாய்

வசிப்பதற்காக

அறிவுநிதி
ஆக்கம்: அறிவுநிதி!
வீட்டைக் கட்டியும்!
முகவரி நிரந்தரமாகியும்!
வாழ்வு தேடி!
புதுப் புது முகவரிகளுடன்!
சேமிப்புளுக்காக!
சிதறிப்போன விசுவாசங்கள்!
தூரம் தூரமாய்!
பிரிவின் பாரம் சுமந்து!
முரண்களுக்கு மத்தியில்!
பயணித்துக் கொண்டு!
வாழ்க்கை காத்திருப்பதாக!
எண்ணி!
வயது கடந்துகொண்டிருக்கிறது!
கனவுகள்!
ஒன்றென் பின் ஒன்றாக!
யாசிக்கின்றன!
பல வண்ணங்களில்!
அரிதாரங்களற்ற!
அவதாரம்பூண்டி ஏதேச்சைகளில்!
யத்தனிக்கும்!
அடுத்த இலக்கில் பெறும் பகுதி!
இருப்பது அறியாமல்!
நகர்ந்துகொண்டே இருக்கும்!
வாழ்க்கை!
திரும்பிப் பார்க்கும் போது!
குழப்பங்களின் மிச்சம்!
தேடல்களில்!
எங்கே எங்கோ!
கடைசியாய்!
மௌனத்தில் உறைந்து போகும்!
மூச்சுப் பை!
முற்றுப் புள்ளியாய்!
வாழ்வின் அடிவாரத்தில்!
நினைவிடங்களாக!
பூர்விகம்!
!
ஆக்கம்: அறிவுநிதி!
006590054078

சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே

துரை.ந.உ
கோழிப் பண்ணையின் சுற்றுச் சுவரில்லா!
கிணற்றில் தவறிவிழுந்த திருட்டுப் பூனை!
பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !!
காப்பாற்ற கயிறு கடப்பாரையோடு தீயணைப்புத்துறை!
காவலுக்கு கடமை உணர்வோடு காவல்துறை!
பார்த்துக்கொண்டு இருக்கின்றன கோழிகள் !!
ஓர் உயிரை காப்பாற்ற ஒற்றுமையாய்!
ஒட்டுமொத்த ஊரும் திரண்டு வந்துநிற்கிறது!
பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் !!
காப்பாற்றிய திருட்டுப் பூனையை கையிலேந்தி !
ஆர்ப்பாட்டமாய் ஊர்நுழையும் அதிரடிவீரர்கள்!
பார்த்துக்கொண்டே இருக்கின்றன கோழிகள் ! !
உயிர்பற்றிய கவலையோடு அப்பாவியாய்!
உயிர்பறிக்கவே வளர்க்கப்படும் உயிர்கள் !!
பார்த்துக்கொண்டே...!!
வாழும் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் - ஆனாலும்!
வழியேயில்லாத ஆயிரமாயிரம் அனாதை சீவன்கள் !!!
சாட்சிகளாய்ப் பார்த்துக்கொண்டே