தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மணிகண்டன் கவிதைகள்

வா.மணிகண்டன்
இன்று !
புதிதாய் பிறந்தேன். !
சொல்லி !
இறந்துகொண்டிருக்கிறேன். !
ஒவ்வொரு நாளும். !
2 !
சொற்களற்ற !
மொழியொன்றில் !
கவிதை வேண்டும். !
என் !
அம்மாவுக்கு பரிசாக. !
வா.மணிகண்டன்

வாழ்க்கை எதார்த்தம்

ராசை நேத்திரன்
ஒரு முறை தோல்வியின் !
வலி உயிரின் வேரை !
பிடுங்கிவிட்டு திரும்பும் !
போது தோல்வியோடு !
வலியும் மனப்பாடமாகி !
போவதில் ஆச்சரியமில்லை !
இரவை தோற்று பகல் !
அழிவதில் !
மழை தோற்று வெயில் !
அழிவதில் !
இரைச்சல் தோற்று மௌனம்!
அழிவதில் !
கனவுகள் தோற்று வாழ்க்கை!
அழிவதில் !
பிணி தோற்று உடல் !
அழிவதில் !
முதுமை தோற்று அழகு !
அழிவதில் !
துன்பம் தோற்று இன்பம் !
அழிவதில் !
உலகமயமாக்கல் தோற்று விவசாயம் !
அழிவதில் !
அரசியல் தோற்று மக்கள்ஆட்சி!
அழிவதில்.. !
வறுமை தோற்று ஆசை !
அழிவதில்!
ஆணவம் தோற்று புகழ் !
அழிவதில் !
வறட்சி தோற்று பசுமை !
அழிவதில் !
ஏதோ ஒன்று அழிந்து ஆக்கம் !
பெறுகிற இயற்கை நியதில் !
கிடைக்க வேண்டும் என்பது !
தோற்று கிடைப்பதை ஏற்பதில் !
வாழ்கை எதார்தமாகிறது

ஆயுத பூசை

விடிவெள்ளி
? !
-------------------- !
அதிர்ச்சியாகத்தான்!
இருந்தது!!
இருக்காதா பின்னே,!
பகத்சிங் பிறந்த நாளன்று!
அரசு விடுமுறை! !
எப்படி சாத்தியம் இது?!
அவனென்ன,!
காந்தியா?!
கதராடை உடுத்தி,!
மக்களின்!
கோவணம் உருவ!!
வெள்ளைக்காரன்,!
கால் நக்கி!
மெடல் வாங்க! !
என்னதான் நடந்தது,!
நடந்தபடியே யோசித்த போது!
ஞாபகம் வந்தது,!
நேற்று!
ஆட்டோக்கார காம்ரேடு!
கடலை பொரி கொடுத்தாரே!!
அடடே!!
ஆயுத பூசை! !
என்ன பொருத்தம்? !
தூக்கிய!
துப்பாக்கியை மட்டுமல்ல,!
தன்!
வார்த்தைகளையே தோட்டாக்களாக்கி,!
வாரிசுகளிடம்!
வழங்கியவனின்!
பிறந்தநாளில்!
வாழத்துடிக்கிறோம்!
வற்றாத,!
அவன் நினைவுகளைப் போல!!
இன்னும்,!
தெரிந்து சிலரும்!
தெரியாமல் பலரும்!
கொண்டாடுகிறார்கள்!
ஆயுத பூசை! !
யாருக்கான ஆயுதம்!
யாருக்கான பூசை? !
சும்மாவே இருந்து,!
சோறு தின்று,!
தொந்தி வளர்ப்பவனுக்கு!
திரிசூலம் ஆயுதமென்றால், !
ஊரையே வெளிச்சமாக்க,!
உயிரைப் பணயம் வைத்து!
உயரக் கம்பங்களில்!
ஏறும் எமக்கு!
செருப்புதான் ஆயுதம்! !
கண நேரம்!
கடந்து செல்லும் முன்!
மூக்கைப் பிடிக்கச் செய்யும்!
உன்!
மலச்சாக்கடையில்,!
மூச்சடக்கி,!
மூழ்கி எழும் எமக்கு!
மலவாளிதான் ஆயுதம்! !
உன் நுகர்வு வெறியின்!
எச்சங்களால்,!
உன் மனதைப் போலவே!
குப்பை கூளமாகிப் போன!
சாலைகளை!
பெருக்கித் தள்ளும்!
எமக்கு,!
துடைப்பமே ஆயுதம்! !
அனைவரும்!
இந்து என்றாய்,!
செய்யும் தொழிலே!
தெய்வம் என்றாய், !
சேர்த்து வைத்துக்!
கொண்டாடு பார்க்கலாம்,!
உன் நவராத்திரிக் கொலுவில்,!
செருப்பையும்,!
மலவாளியையும்,!
துடைப்பத்தையும்,!
திரிசூலத்தின்!
மூன்று முனைகளாய்!
நினைத்து

முத்தம் போதும்

தியாகு
நீ வந்து சென்றதாலெயே!
தலைகுனிந்த பூக்கள்!
நிறைந்ததாய்!
மாறிய காடு!!
அன்னங்கள் எல்லாம்!
பறக்க துவங்கின!
நடக்கும் உரிமை!
உனக்கென சொல்லி!!
நகைப்பதை நிறுத்தடி!
நட்சத்திரங்கள்!
சிதறி சில விபத்துகள்!
நடக்கலாம்!
வேல் விழி காயத்துக்கு!
மருந்தில்லை எனவே!
ஆயுத ஒழிப்பை!
ஆதரிக்கலானேன்.!
மொத்தமாய் தர உன்னை!
வற்புறுத்த மாட்டேன் -ஒரு!
முத்தம் போதும்!
முகத்துடன் பிறந்த!
நோக்கம் சிறக்க!!
தியாகு

வாழ்க்கை

பாரதிமோகன்
முதல் தேதிகளில்!
கவலைகளை!
மறக்க எண்ணி..!!
ரயிலோ!
பஸ்ஸோ!
நெரிசல்களில் சிக்கி!
வேலைக்கும் வீட்டுக்குமாக!
தினசரி அல்லல்கள்..!
மாதம் பிறந்துவிட்டது!
பாலுக்கும் அரிசிக்கும்!
பாக்கி போக!
மிச்சப்பட்டிருப்பது!
விரல்கள் மட்டுமே!
தினசரி!
விடிகிறது பொழுது!
கழிகிறது நிமிஷ்ம்!
காலம் என்ற ஓட்டைப்பானையில்!
உயிர் சிந்தி!
உழைப்பைக் கொட்டி!
தொலைந்துபோகிறது!
வாழ்க்கை

மண்ணின் குழந்தைகள்

இளந்திரையன்
எப்போதும் போல் !
வாழ்க்கை இல்லை !
வாழ்க்கையின் அளவு !
புரிதல் இல்லை !
அப்போது போல் !
எல்லாமும் இல்லை !
இருந்ததும் எப்போதும் !
தொடர்ந்ததும் இல்லை !
!
எல்லோரும் போல் !
நானும் இல்லை !
இருப்புக்கான நம்பிக்கை !
எங்கும் இல்லை !
!
மனங்களின் ஆழத்தில் !
கவிந்தது போல் !
மரண பயம் - ஒரு !
மனப் பிரக்ஞை !
!
யாரைப் பார்த்தாலும் !
காற்றில் அசையும் !
நிழல்கள் போல் !
நினைவற்ற தோற்றம் !
!
புழுதித் தரையில் - கீறி !
முளைத்த புல் போல் !
கீழ் வானத்து செம்மை தேடி !
இன்றும் நான் !
!
- இளந்திரையன்

இழவு நாடு

ஜெ.நம்பிராஜன்
எல்லா வீடுகளையும் போன்று!
விடிவதில்லை!
இழவு வீட்டின் இரவு!
தூங்கா விழிகளுடன்!
இழப்பின் வலியுடன் கூடிய!
விடியாத இரவு அது!
பிரிந்த நண்பர்களையும்!
பேசாத சொந்தங்களையும்!
அழைத்து வந்து விடுகிறது!
மிக எளிதாய்...ஒரு மரணம்!
எல்லோரும் சேர்ந்து!
வழியனுப்புவர் கண்ணீருடன்!
இறந்தவரை!
இவையெல்லாம் வழக்கமான மரியாதை!
மரிப்பவருக்கு...!
ஆனால்!
வழியனுப்ப எவருமில்லை!
அழும் உறவுகள் எல்லாம்!
அகதிகளாய் எங்கோ!
பதுங்கு குழிகளுக்குள்!
பதுங்கியிருக்கிறது!
ஒரு தேசம்!
பாஸ்பரஸ் குண்டுகளுக்கு!
அஞ்சி!
நித்தம் நூறு சடலங்கள்!
மொத்தமாய்...கொத்துக் கொத்தாய்!
சாவின் குறைந்தபட்ச!
மரியாதையும் அற்று!
மனிதம் மறந்த மரங்களாய்!
ரத்தத்தின் மிச்சங்கள்!
வேடிக்கை பார்க்கும்!
அண்டை நாட்டில் அமைதியாய்

மர்மத் திரை

பாண்டித்துரை
இமைகள் விலக!
விழிகளின் ஸ்பரிசத்தால்!
கருத்தரித்து!
நொடியினும் வேகமாய்!
பிரசவிக்கும் குழந்தை!
பேசதுடிக்கும் உதடுகளுடன்!
ஊமையாக பயணிக்கிறது!
இருண்மையின் விலகல்!
இருண்மையின் தழுவல் என!
கண நேரமும் கண்காணிப்பில்!
பூனையின் பார்வையை!
புறக்கணித்து செல்லும்!
புலம்பல் ஒலிகள்!
குறுக்கும் நெடுக்குமான!
பயணத்தின்!
ஒரு கட்டத்தில்!
திரை விலகுகிறது.!
சிறு புன்னகையை உதிர்த்தோ!
விசும்பல்களின் நீர்வீழ்ச்சியாகவோ!
கவிஆக்கம்;: பாண்டித்துரை!
தொடர்புக்கு:006597345497

வாழ்வியற் குறட்டாழிசை

வேதா. இலங்காதிலகம்
பெற்றோர் உயர்ச்சி!
உலக உறவின் ஆரம்பச் சுருதி!
உன்னதமான அம்மா அப்பா.!
அன்புப் பெற்றோர் அனுபவ மொழி!
வென்றிடும் வாழ்விற்கு ஏணி.!
மதியற்று மனிதன் அந்நியமாய் பெற்றோரை!
மதித்தால் அவன் அற்பன்.!
பெற்றோர் மனமிசை வீற்றிருக்கும் பிள்ளை!
குற்றப் பாதையை நாடான்.!
வாழ்வுக் கோயிலின் மூல விக்கிரகங்கள்!
தாழ்விலா வாழ்வுடைய பெற்றோர்.!
கற்று உயர் பதவி வகித்தென்ன!
பெற்றோரைப் பேணாதோன் கீழோன்.!
உயர்வு தாழ்வற்ற பெற்றோர் அன்பு!
துயர்வற்ற படகுத் துடுப்பாகும்.!
கனிவுடை பெற்றோர் பிள்ளைகளிற்கு நல்ல!
துணிவு தரும் தோழராகிறார்.!
இறைவனுக்குச் சமமான பெற்றோர் இல்லத்து!
கறையற்ற தூண்டாமணி விளக்குகள்.!
நன்றாக வாழ்ந்து தமது பெற்றோர்!
நற்பெயர் காத்தல் பிள்ளைகட்கழகு

பொறாமை.. தேடல்.. கருவறை

பிரதீபா,புதுச்சேரி
01.!
பொறாமை !
-------------!
உன்னிடம் ஓயாமல் பேசும் !
என் இதயத்தின் மீது பொறாமை!
என் இதழ்களுக்கு......!
02. !
தேடல்!
---------!
தேடல்!
என் கண்களுக்கு மட்டும் அல்ல!
உன் கால் தடம் தேடும்!
என் பாதங்களுக்கும் தான்...!
03.!
கருவறை!
-------------!
உன்னை நினைத்த மாத்திரத்தில்!
நான் கற்பவதி ஆனேன் !
என் இதய கருவறையில்!
ஜீவனாய் நீ உதித்தாய் வளர்ந்தாய்!
பேறுகாலம் அற்று