தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மூன்றாவது இதயம்

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
உன்னிடம் அடைக்கலமாக !
இருந்த எனது !
எனது இதயத்தை !
ஒரு அழுக்குப் பாறையில் !
கொழுவி விட்டு !
நீ ஒதுங்கிக் கொண்டாய் !
கறைபடிந்த உன் இதயத்தை !
கழுவிக் கொள்ள !
ஒரு மூன்றாவது !
இதயத்தையும் !
நீ தேடிக்கொண்டாய்..!
கால நெருக்குதலில் !
துவானமிழந்த !
மழைகளையும்.....!
ஈரலிப்பில்லா காற்றையும்..!
நீ வசமக்கினாய் !
இதயத்தின் வெற்று உருவத்தை !
சுமந்து பயணிக்கும் நீ !
உனக்குரிய குழியை நீயே!
தோண்டி அதற்குள் அமர்ந்து கொண்டாய் !
நடக்கவே முடியாத நீ !
பறக்க ஆசைப்பட்டாய்...!
உன் பறத்தல் பற்றிய !
ஆசைத்தீயில் அமிழ்ந்து !
அழுகின்றாய்..!
உனக்கு தெரியுமா..!
பொய்களும் வஞ்சனைகளும் !
என்றும் ஜெயிப்பதில்லை

தொலைச்சிட்டுத் தேடுறேண்டி

இனியதாசன்
கவிஆக்கம்: இனியதாசன்!
அழகுதான் ஒம்பேரு!
அதயாரு மறுப்பாரு!
பழகினோம் வெளயாடி!
மறக்குமா? யம்மாடி..!
புரியா வயசுலேயே!
புரிஞ்சுது காதலுன்னா!
ஆறியாம நாமிருந்தா!
அப்படியா நடந்திருக்கும்!!
வரிவரியா எப்போதும்!
வச்சவமுத்தம் இனிக்கும்படி!
கன்னத்துல கோலமிட!
எண்ணத்துல வந்தவளே!!
பாவாட சட்டயில!
பாத்து ரசிக்கவச்சு!
பாவாட தாவணிக்கு!
பட்டுன்னு மாறிட்டியே!!
அச்சமே இல்லாத!
அன்பா இருந்தவளே!
உச்சமா ஒனக்குள்ளே!
உருமாறி போயிட்டியே!!
வெக்கமா சிவந்துக்கிட்டு!
வேறபக்கம் திரும்புறியே!
பக்கமா வந்தாக்க!
படுகூச்சம் காட்டுறியே!!
துங்கமா தோனுறியே!
தக்காளிப் பழங்கணக்கா!
எங்கிருந்து வந்ததிந்த!
எலுமிச்ச நெறமொனக்கு!
வெடிச்ச வெள்ளரியா!
வெடலப்புள்ள நீமாறி!
புடிச்சமாதுறியே!
பொன்னழகா பூத்திட்டியே!!
எனக்கதுல சந்தோசம்!
தலகாலு புரியாம!
ஏதேதோ ஆகுதடி!
எதமாத்தான் கொல்லுமடி!!
வருவ வருவேன்னு!
வழிநெடுக கண்ணவப்பேன்!
ஒருதடவ பாத்திடவே!
பலமணியா காத்திருப்பேன்!
வந்தாத்தான் எந்திரிப்பேன்!
வல்லேன்னா நொந்திருக்பேன்!
பந்தாவ நானிருந்து!
பருவத்த ஏங்கவப்பேன்!
வெந்த வெறகாட்டம்!
வேதனய சொல்லியழ!
தந்தாயே சோகமொன்னு!
தாங்கலயடி எம்மனசு!
பட்டப் படிப்புக்கு!
பட்டணந்தான் போகனுன்னு!
பட்டுத்தான் ஆகனுன்னு!
பளிச்சினு தெரிஞ்சாலும்!
பட்டமா பறந்தோமே!
பாதய மறந்தோமே!
விட்டனறம் கொஞ்சமில்ல!
கட்டுப்பாடு போடவில்ல!
தொட்டிழுக்க முடியாம!
துண்டுபட்ட நூலாட்டம்!
தொலைச்சிட்டு தேடுறேண்டி உன்ன!
தொலைக்க மனமில்லயடி!!
கவிஆக்கம்: இனியதாசன்!
006591094789

உதிர்கவிதைகள்

ரவி (சுவிஸ்)
1. நிறவெறி!
நான் கையைக் கழுவுகிறபோது!
நீரில் கலைந்த அழுக்குளைப் பார்த்து!
உன் நிறம் கரைகிறது என்று சொல்லிச்!
சிரித்தான் சகதொழிலாளி.!
அவனது வெள்ளைத்தோலில் அப்பிக்கொண்டிருந்தது!
நிறவெறி.!
2. மனிதாபிமானம்?!
எனது முகத்துக்கு முன்னால் எனது பெயரையும்!
முதுகுக்குப் பின்னால் எனது கறுப்புநிறத்தையும்!
அவன் அடையாளப்படுத்திக் கொண்டேயிருந்தான்.!
இரண்டையும் பிணைத்து!
எல்லா மனிதர்களும் சமம் என்றபடி பல்லிழித்தான்!
!
3. அமைதியின்மை!
இலக்கினைச் சரியாகவே ஊடுருவிக் காண்பிக்கிறது என் பார்வை – ஆனாலும்!
விரலசைப்பில் குறி!
தவறிப்போய்விடுகிறது.!
மீண்டும் துருத்திற்று என் அமைதியின்மை.!
!
4. ஆணாய்ப்பட்டவன்!
அவர்கள் தொடைகளுக்கிடையிலும் மார்புகளுக்கிடையிலும்!
கவிதையை ஒளித்துவைத்திருந்தார்கள் - எனது!
குறிவிறை பார்வை பிசகாமலிருக்க.!
நான் ஆணாய் நீண்டுபோய்க் கிடந்தேன்.!
!
ரவி (2008 மார்ச்)

சதைகளில் இல்லை மானம்

சு.சிவா
ஆடைகள் இழந்த!
என் உடலைத் தின்னும்!
உங்கள் கண்களில்!
எத்தனை பெருமை!
நான் உங்கள் சகோதரி என்றோ!
மகள்போல் என்றோ!
கால்களில் மண்டியிட்டு!
உறவின் தூய்மையை!
களங்கம் செய்யேன்!
காணாமல்போன!
என் சகோதரிகளின்!
உடல்களில்!
உங்கள் வன்முறையை!
படித்திருக்கிறேன்!
நான் அழமாட்டேன்!
எனக்குத் தெரியும்!
என் கண்ணீர்தான்!
உங்கள் உற்சாக பானம்!
நான் சிதைந்தாலும்!
காயங்களின் வழியே!
உயிர் வடிந்து சென்றாலும்!
என் கண்ணீரால்!
பெருமைப்படுத்த மாட்டேன்!
உங்கள் இயலாமையை!
எனக்கு பின்னும்!
என் சகோதரிகள்!
இங்கு இழுத்துவரப்படலாம்!
மரணத்தின் கடைசி நிமிடம்வரை!
மானம் தேடலாம்!
அவர்களும் என்னைப்போல்!
உரக்கச் சொல்வார்கள்!
சதைகளில் இல்லை!
எங்கள் மானம்!
கடைசியாய் ஒன்று!
தாயின் மரணத்தின் போதோ!
தலைப்பிரசவத்தில்!
துணைவி துடிக்கும் போதோ!
அழுதுவிடாதே!
உன் கண்களுக்கு!
அந்தத் தகுதியில்லை!
-சு.சிவா

ஒரு வடையும் பல நரிகளும்

அரசையூர் மேரா
கா….. கா….கா….. கா……!
1987 இல் காகம் கரைந்தது.!
உரிமைப்பசி!
இந்தியப் பாட்டி!
அப்போது சுட்டவடை இன்னும் பழுதாகவில்லை.!
ஆனாலும் அதன் அருமையை!
காகங்களும் அறியவில்லை.!
படையை நிறுத்தி!
வடையைச் சுட்டுக்கொடுத்த!
பாட்டிக்கு முன்புபோல்!
காகங்கள் பற்றி அதிகம் கவனம் இல்லை.!
ஆண்டுகள் ஓடினும் வடையைத் திருடும்!
நரியின் திட்டம் ஓயவில்லை.!
ஊழையிடத் தொடங்கின அவை.!
‘காகங்களுக்கு வடையெதற்கு!
காகங்களுக்கு உரிமை வடையெதற்கு’!
எலும்புகளை வாசம் காட்டி!
நரம்புகளுக்கு வார்த்தை ஊசியேற்றி!
‘எல்லோரும் நரிகளாவோம்!
வடைகளைப்பறிப்போம் வாருங்கள்’!
பெரும்பாண்மை தேடி பயணமாகின அவை!
தாடி வளர்த்த குழப்ப நரியின் தலைமையின் பின்னால்!
காற்றுத்தந்தி கொண்டு வந்த ஒலியை வாங்கிய!
வெண்புறாவொன்று!
1956 ஐ நினைத்துப்பார்த்து!
உடலைச்சிலிர்த்துக்கொண்டது.!
1983 இலும் பின்னரும் நடந்த!
உயிர்க்கொலையின் வலியதன்!
கண்ணால் ஒழுகியது

வேலைக் காளான்கள்

மு. பழனியப்பன்
மு.பழனியப்பன்!
வேலைகள் அதிகமாகிவிட்டன!
ஒரு குழந்தை!
மற்றொரு குழந்தை!
இந்த குழந்தை மாற்றி அந்தக் குழந்தையின்!
தேவைகள்!
அலுவலக கொடுக்குகளில்!
தொக்கியிருக்கும் வேலைக் காளான்கள்!
பிடுங்குவதற்கு நேரம் ஆகாதென்றாலும்!
காளான்கள் மழைக்காலத்தில்!
மலியும்!
குடியிருக்கும் வீட்டில்!
மாடி வீட்டுக்காரரின் அட்டகாசத்தில்!
நாமே பார்க்க!
நாளுக்கு நாள் வேலைகள்!
சொந்த வேலை!
பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது!
பாங்கில் பணம் எடுக்க!
எல்ஐசியில் பணம் கட்ட!
டெலிபோன் பில்!
கரண்ட்பில்!
மாதத்தவணைகள் செலுத்த!
என!
வேலைகள் அதிகமாகி விட்டன.!
ஆனால்!
ஆள் ஒன்றுதான்!
மதிப்பு ஒன்றுதான்!
சம்பாத்யம் ஒன்றுதான்!
செலவு பல!
!
palaniappan

மழை ஓய்ந்த நேரம்

இ.இசாக்
இ.இசாக் !
முள்மரம் !
முத்துச் சிதறல்கள் !
மழைத் துளி !
!
மழை பெய்த காலை !
வாசல் முழுக்க !
ஈசல் இறகு !
!
அடைமழை !
தெருவில் !
குப்பைகளின் ஊர்வலம் !
!
கொட்டும் மழை !
குடையில் நான் !
மகிழ்ச்சியாய் ஆடுகள் !
!
மழைக்காலம் !
நினைவில் !
பழைய கூரைவீடு !
!
தொடர்மழைக் காலம் !
குப்பைகளுக்கும் குடைகள் !
காளான்கள் !
!
பக்கங்கள்: 80 !
விலை : ரூ 30 (தமிழகத்தில்) !
வெளியீடு !
சாரல் !
189, அபிபுல்லா சாலை !
தியாகராயர் நகர் !
சென்னை 600 017. !
தமிழ் நாடு

திரும்பிப் போகும் அணில்

சிதம்பரம் நித்யபாரதி
இன்று அவளுக்கு!
அணில் மேல் கோபம்!!
மாடியின் ஜன்னல் மூடாத!
என் மேல் கோபம்!!
கொஞ்சம் இடம் கொடுத்தாலும்!
குளியலறையில்!
பஞ்சு நார் எனக் குவித்துக்!
கூடு கட்டும்! !
சுத்தம் செய்ய முதுகு ஒடிகிறதாம்.!
எனக்கோ- !
ராமர் கோட்டு முதுகை வருடிட ஆசை!!
கற்பனையாய்!
வாலில் முத்தமும் உண்டு!!
அவ்வப்பொழுது!
கண்ணாமூச்௪¢ காட்டி ஓடிவிடும் அதற்கு!
இன்று ஜன்னல் திறக்காது!!
அரைகுறைக் கூடு கலைந்திருக்கும்!
என உள்ளுணர்ந்த துயரத்தில்!
தோட்டத்தில் அது சுற்றிடுமா?!
குறுகுறுக்கும் மனத்துடன்!
மூடிய ஜன்னலின் உட்புறம் நான்.!
- சிதம்பரம் நித்யபாரதி

வாய்ப்பாடு

தணிகை அரசு
கடுகைக் கதையாக்கி !
நிழலை நிஐமாக்கி !
ஊதிப் பெரிதாக்கி !
உறவைக் கெடுத்த உத்தமர்களே ! !
முகமலரச் சிரித்துவிட்டு !
முள்ளால் சொல் செய்து !
முதுகில் குத்திய !
முன்னாள் தோழர்களே ! !
நாவுக்கு நரம்பும் !
வாந்திக்கு வரம்பும் !
நெஞ்சுக்கு ஈரமும் !
கோழைக்கு வீரமும் !
இல்லை என்று நினைவூட்டி !
ஈடற்ற நன்மை செய்தீர். !
என் பேனா செதுக்கிய பேரழகியோ !
எங்கு போனாள் என்றே தெரியவில்லை. !
தானே வந்தாள் !
ஒரு நாள் அருகில் !
தவித்தாள் தாங்கினேன் !
அழுதாள் தேற்றினேன் !
நானோ இன்று !
நிற்கிறேன் தெருவில் !
விழித்துக்கொள்வீர் ! !
வாழ்வில் நம்பிக்கெட்டோர்க்கு !
வாய்ப்பாடு நான்

கோடை விடுமுறை.. முதல் கோணல்

இ.பு.ஞானப்பிரகாசன்
கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்.. முதல் கோணல்!
01.!
கோடை விடுமுறைப் பள்ளித் தோட்டங்கள்!
-------------------------------------------------!
துரத்தி வர!
வாண்டுகள் இல்லாமல்!
வண்ணம் இழந்து திரிகின்றன!
பட்டாம்பூச்சிகள்...!
பறித்துச் சூடிக் கொள்ளும்!
பாவாடைத் தோழிகளைக் காணாமல்!
வாடித் தொங்குகின்றன!
நந்தியாவட்டையும் செம்பருத்தியும்...!
பாட்டும் கூத்தும்!
ஆட்டமும் அமர்க்களமுமாய்!
அவர்களுடன் கழித்த நாட்களை!
அசைபோட்டபடி நின்றிருக்கிறது!
காற்று இறங்கிய!
பள்ளிப் பேருந்து...!
பொன்னாய்க் காய்ந்த!
இலைகளைக் கூட உதிர்க்காமல்!
ஆயிரம் ஆயிரம் இலைக் கண்களால்!
பார்வைக்கு எட்டிய தொலைவு வரை!
விழி வைத்துக் காத்திருக்கிறது!
எல்லோரையும் விடப் பெரிதான!
வாத மரம்...!
விடுமுறையில் ஒருவேளை!
அவர்கள்!
வேடந்தாங்கல் வரக்கூடும் என்று!
அங்கே போக!
வழி விசாரித்துக் கொண்டிருக்கின்றன!
கிளிகளும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும்...!
பள்ளி திறக்கும்!
நாள்!
கிழமை!
எதுவும் தெரியாத!
பள்ளிக்கூடங்களின் தோட்டத்து உயிர்களுக்கு!
இப்படித்தான் கழிகிறது!
ஒவ்வொரு விடுமுறைக் காலமும்!
என்பதை!
யார் எடுத்துச் சொல்வது!
விடுமுறைக்குப் பின்!
பள்ளி செல்ல அழும்!
குழந்தைகளுக்கு...?!
02.!
முதல் கோணல்!
-----------------------!
ஒரு பொய்...?!
ஒரு போலியான வாக்குறுதி...?!
சில ஆயிரம் ரூபாய் கையூட்டு...?!
பல ஆயிரங்களில் ஊழல்...?!
இவை எதுவும் இல்லை!
பிடிக்காத நிறத்திலான துண்டை!
அரசியலுக்காக!
அணியத் தொடங்கியதில்!
ஆரம்பமானது!
என்!
பொதுவாழ்வின் பொய்மை