தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நான்

பாண்டித்துரை
ஓவ்வொரு!
காலகட்டத்திலும் - என்!
ஏதிர்பார்ப்புகள்!
மறுதலிக்கப்படுகின்றன!
எதிர்பார்ப்பு இல்லாமல்!
நான் நானாக!
இருக்க முயல்கிறேன்!
உள்ளுணர்வு!
அவற்றையெல்லாம் உதாசினப்படுத்திவிடுகிறது!
நான் நிஜமென!
நம்பியதெல்லாம்!
என்னை விட்டு!
விலகும் போது!
மாய உலகத்தில்!
உலவும் பிம்பமாய்!
நான்...!

உனக்காக

சு.முருகேசன்
எழுதா எண்ணத்தில்!
எழுந்த எண்ணம்!
வண்ணம் தீட்டிய அழகின்!
மெருகு பதிந்த பருவம்!
பலரும் உன் விழியில் சிக்கியது!
என்னுள் உருகிய பார்வை!
மழையின் துளியாய் பதிந்தது!
ஒளியின் அலைகளாய் அன்பே!
விடியலின் சாரலில்!
தவமாக!
கடல் தாண்டி!
உனக்காக காத்திருக்கிறேன்!
!
எழுத்து: சு.முருகேசன்

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

தீபச்செல்வன்
போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த!
உடல்களும்!
--------------------------------------------------------------!
01!
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு!
திரும்பிக்கொண்டிருந்த!
அம்மாவை அக்கராயனில்!
நான் தேடிக்கொண்டிருந்தேன்!
ஷெல்களுக்குள்!
அம்மா ஐயனார் கோயிலை!
விழுந்து கும்பிட்டாள்!
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.!
நேற்று நடந்த கடும் சண்டையில்!
சிதைந்த கிராமத்தில்!
கிடந்தன படைகளின் உடல்கள்!
கைப்பற்றப்பட்ட!
படைகளின் உடல்களை!
கணக்கிட்டு பார்த்தபடி!
சிதைந்த உடல்கள்!
கிடக்கும் மைதானத்தில்!
பதுங்குகுழியிலிருந்து!
வெளியில் வந்த!
சனங்கள் நிறைகின்றனர்.!
பக்கத்து வீட்டில்!
போராளியின் மரணத்தில்!
எழுகிற அழுகையுடன்!
இன்றைக்கு நாலாவது தடவையாக!
திடுக்கிட்டு எழும்பிய அம்மா!
முறிகண்டி பிள்ளையாரை!
கும்பபிட்டபடி ஓடுகிறாள்!
பூக்களும் மண்ணும்!
கைகளில் பெருகுகிறது.!
02!
போன கிழமை விட்டு வந்த!
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது!
குசினிக்குப் பக்கத்தில்!
கிடந்த பதுங்குகுழியில்!
படைகளின் ஏழு சடலங்கள்!
மூடுண்டு கிடந்தன.!
போராளிகள் கைப்பற்றிய!
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த!
கிளைமோர்களைக் கண்டும்!
எறிகனைகளைக்கண்டும்!
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.!
போர் வாழ்வை அழித்தபொழுது!
கிராமங்கள் போர்க்களமாகின!
அக்கராயன்குளம் காடுகளில்!
ஒளிந்திருக்கும் படைகளிடம்!
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது!
03!
அகதிகள் வீடாயிருந்த!
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன!
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த!
மணியங்குளம் கிராமம்!
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.!
நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது!
வெளியில் வந்து விடுகிறேன்!
தலைகளில் விழும் எறிகனைகளை!
ஏந்தும் பிள்ளைகளை!
நினைத்து துடிக்கிற!
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.!
செஞ்சிலுவைச்சங்கம்!
கொண்டு வந்த போராளியின் உடல்!
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.!
இலங்கையில் ஒரு சிங்களத்தாய்!
துடித்தழுகிறாள்!
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்!
துடித்தழுகிறாள்!
சிதைந்த கிராமங்களில்!
பரவிக்கிடந்தன!
படைகளின் உடல்கள்!
மதவாச்சியை கடந்து!
படைகள் வரத்தொடங்கியபொழுது!
வவுனியாவைக்கடந்து!
போராளிகள் போகத்தொடங்கினர்.!
தெருமுறிகண்டி மடங்களில்!
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.!
புதுமுறிப்பில் வீழ்ந்த!
ஏறிகனைகளில் இறந்த!
குழந்தைகள்!
வரிச்சீருடைகளை அணிந்த!
காட்சிகளை!
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.!
படைகளை நோக்கி சுடுகிற!
போராளிகளின் மனங்களில் இருந்தன!
பசுமையான கிராமங்களும்!
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.!
-தீபச்செல்வன்!
04.09.2008

எதையும் இதயம்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
சுற்றிப் பார்த்தேன் முட்புதர்கள் !
எட்டிப் பார்த்தேன் ஏணிப்படிகள் !
தாவிப் பார்த்தேன் நீண்ட சுவர்கள் !
எதையும் இதயம் ? !
விழிகளை மூடினேன் கனவும் மறந்தது !
பேனவை மூடினேன் இதயம் கனத்தது !
கைகளை மூடினேன் வெறுமை நிறைந்தது !
எதையும் இதயம் ? !
மாலை வந்தது மலர்கள் துவண்டன !
காலை வந்தது கனவுகள் கலைந்தன !
நேரம் வந்தது நாடியன ஓடின !
எதையும் இதயம் ? !
காலம் மறைத்தது கற்பனைத் தேரை !
கண்கள் மறைத்தன கனவின் சுகத்தை !
நெஞ்சம் மறைத்தது நேற்றைய வளங்களை !
எதையும் இதயம் ? !
இனிமேல் வேண்டாம் பொருந்தாத வாழ்க்கை !
இனாமாயும் வேண்டாம் எட்டா ஆசைகள் !
கைகளில் வேண்டாம் கனத்த விலங்குகள் !
எதையும் இதயம் ?

ஒரு குடிமகனின் தீர்மானம்

எசேக்கியல் காளியப்பன்
செத்துச் செத்து வாழ்வதைநான் விட்டுவிட்டேன் -இனிச்!
சீவனுடன் வாழ்வதற்குக் கற்றுவிட்டேன்!!
புத்திகெட்ட செயல்களையும் விட்டு விட்டேன்!` -இனிப்!
புதுவாழ்வு வாழ்வதெனத் துணிந்து விட்டேன்!!
முத்து முத்துக் குழந்தைகளின் முகம்நினைத்தேன் -அவர்!
முகம்தொலைத்த சிரிப்புகளுக்கு இனியுழைப்பேன்!!
சக்திகெட்டு வாழ்வதுவும் வாழ்க்கையில்லை -பலர்!
சக்திபெற நானுழைப்பேன்! தாழ்வுமில்லை!!
ஆசையெனும் மயக்கினிலே அமிழ்ந்துவிடேன்! -வெட்டி!
அரசியலில் குரல்கொடுத்துத் தவழ்ந்துகெடேன்!!
கூசியினி இலவயங்கள் மறுத்திடுவேன்! -நாட்டைக்!
கூறுகட்டி விற்பவரை வெறுத்திடுவேன்!!
மொழிசாதி மதம்,இனத்தை மறுத்திடுவேன்! -தேச!
முன்னேற்றம் தடுப்பவரை அறுத்திடுவேன்!!
விழிமூடிப் பலபொறுத்த நிலைவிடுத்தேன்! -எந்த!
வேலையிலும் ஊழலறத் தலையெடுத்தேன்!!
மத்தளம்போல் அடிவாங்கி அழுதவொலி -இனி!
மாறிவிடும்! புதுராகம் எழுந்ததடி!!
வாழ்ந்தநடை மாற்றியிதோ எழுந்துவிட்டேன்! -பூமி!
வாழ்த்துமொலிப் பட்டாசாய் முழங்குதடி!!

தாய்மண்.. பெண்விடுதலை

வேதா. இலங்காதிலகம்
01.!
தாய்மண்!
-----------------!
பச்சைப் பூமி, பளிங்குக் குடிநீர்!
எச்சிலாகிவிட்டது எங்கள் பூமியில்!!
பெரும் பட்டினி குடியிருக்க இடமில்லை.!
கருக்கலைப்பு, தமிழர் உயிர் அழிப்பு!!
தீ! பெரும்தீ! மண்மீது! மக்கள்மீது!!
தீய்ந்த பட்டமரத்தில் பறவைகளும்!
தீம்பின்றி அமரவியலாத பதட்ட நிலை!!
தீயுதெம் மனம் கோபமாய், ஆக்ரோசமாய்!!
ஆதிகாலமோ எனும் ஊர்ச் சிதைபாடு!!
வீதிகளும் உடைந்த பெரும் கட்டிடங்களும்!!
மோதிய குண்டுகளால் எரிந்த மரங்களும்!!
சேதி சொல்கிறது பயங்கர இனஅழிப்பென்று!!
நாளும் பெரும் தொகை மக்களிறப்பு!!
நீளும் செய்திகள் ஊடகங்களில் பதிவு!!
ஊடகவியலாளர்கள் உயிர் ஆயத முனையில்!
ஊசலாடுகிறது! கொலை பூமியாய் தாய்மண்!!
காலடி வைக்கவே பூமி இல்லாது!
கவரப்படக் கூடாது எம் மண்!!
கையிணைந்து தமிழர் அனைவரும் ஒன்றாக!
வைக்கும் போராட்டம் இனம் காக்கட்டும்!!
9-03-2009.!
!
02.!
பெண்விடுதலை!
------------------!
பெண்ணுரிமை பெண்விடுதலை!
பெண்ணெழுச்சி என்று!
பொன்மொழி பேசுகிறோம்!
வீண் அல்ல அவை.!
ஓன்று உறுதியானது!!
ஆண்களுக்கெதிராக இது!
ஆண்களை வெல்லும் !
ஓன்றுபட்ட குரலல்ல!!
தொன்றுதொட்டு உலகில்!
பெண்களை அடிமைகளாக!
நின்றழிய வைக்காதீர்!
என்ற குரலே இது!!
ஆணோடு பெண்ணும்!
பெண்ணோடு ஆணும்!
தூணோடு தூணாக நின்று!
இணங்கி இயங்குதல் வாழ்வு!!
ஒருவருக்கொருவர் உதவி!
பெருமையிலும் சிறுமையிலும்!
உரிமை கொண்டு சமமாக!
இருவரும் வாழ்தலே விடுதலை.!
24-3-2009

நானொருவன் மட்டிலும்

ஜதி
நான்தான் உங்களிடமிருந்து !
தனிமைப் படுகிறேனோ !
என்ற ஐயமிருந்தது !
ஆனால் காலமும் நிகழ்வுகளும்!
உரைத்துவிட்டன உண்மையை!
'உங்களைப்போல்தான் நானும்'!
என்று நான் சொல்லவில்லை!
ஆனால் இச்சமுதாயச் சமுத்திரத்திலே!
அயராது நீந்தப் போராடும் !
மற்றொரு மீன்தான் நானும்.!
நேற்றைய நேற்றுகளின் நினைவுகளும்!
நாளைய நாளைகளின் கனவுகளும்!
எனக்குமுண்டு. !
எதனைக் கொண்டு !
என்னைத் தணிக்கை செய்கிறீர்கள் !
என்ற திட்டவட்டமில்லையெனக்கு.!
தீப்பட்ட முதுகின்மேல் மூட்டைப்பூசிகளாய்!
அவ்வப்போது வந்து!
தனியாய்த்தான் இருக்கிறேனா என!
எட்டி எட்டிப் பார்த்துச் செல்கிறீர்கள்...!
அருவருப்பாயிருக்கின்றது.!
சிரித்துக் கொள்கிறீர்கள்!
களித்துக் கொள்கிறீர்கள்!
மறக்காமல் என்னைமட்டும்!
முறைத்துக் கொல்கிறீர்கள்.!
ஜன்னலின் திரைச்சீலையினால்!
ஒரு கைம்பெண்ணின் கண்ணீரைத் துடைக்க!
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப் !
போகும் தென்றலைப் போல!
வார்த்தைகளினால்!
என்னைப் புரியவைக்க !
முயற்சித்து முயற்சித்துத் !
தோற்றுத் தோற்றுப்!
போகிறேன்.!
என்னைத் தனிமைப்படுத்தியவர்களே...!
இறுதியாய்க் கேட்கின்றேன்!
இப்படியேதான் இருக்கப்போகிறீர்களா இனியும்?!
அப்படியே ஆகட்டும்; நான் விடைபெறுகிறேன்...!
ஆம்!!
நகரத்து வீதியில்!
அநாதைப்பிணமாய்க் கிடப்பதிவிடப்!
பாலைவனத்தில் புதையுண்டு போவது!
குறைவான அவலமே...!
போகும்முன் ஒரேயொரு வேண்டுதல்...!
எதற்காக என்னைத் தனிமைப்படுத்தினீர்கள் என்று!
எக்காலத்திலும் எனக்குத் தெரிவிக்கவேண்டாம்.!
!
-ஜதி!
14-03-2008

தந்தையின் நினைவாக

சத்தி சக்திதாசன்
தந்தை உன்!
எண்ணங்கள்!
தனயன் என்!
நெஞ்சினில் துள்ளி!
விளையாட!
அப்பா என்றொரு!
சொல்லுக்கு!
அறிவு என்றொரு!
கருத்தை எண்ணிரண்டு!
வயதினில் மறந்த!
முட்டாள் நான்!
நீ நடக்கும் மண்!
நடுக்கம்!
கண்டால் கூட!
அமைதியை!
கைவிடா மனம்!
கொண்டவன் தான் நீ!
ஜந்து வருடங்கள்!
உருண்டோடின!
ஜயன் உன்னைத்!
தன்னோடு அழைத்தின்று!
இன்றும் என்னெஞ்சில்!
பசுமையான உனது!
நேச நினைவுகள்!
தென்றலாய் வீசுதே!
அறிவுரை என்று நீ!
அன்று கூறிய!
அழுத்தமான!
வார்த்தைகளின் அர்த்தம்!
முன்பு புரியவில்லையே!
ஆது!
இளமையின் மூர்க்கத்தனமா ?!
சிரித்தபடியே வாழ்வின்!
அனர்த்தங்களை அளந்தவன் நீ!
நீ கண்ட மனத்திடத்தின்!
அரைப்பங்கு கூட!
அடையாதவன் நான்!
அடி எடுத்துக் கொடுத்தாய்!
தந்தையாய்!
அன்று நீ!
அதே அடியில் தொடர்ந்து!
தந்தையானேன் நான்!
உன் மகன் நான்!
பெற்ற அனுபவங்கள் அனைத்தும்!
என் மகனும் பெற்றிட!
உன்னருள் வேண்டுமே!
உன் பாதைகள் என்றுமே!
எளியவைதான்!
உன் வழிகள் யாவையும்!
தூய்மையானவையே!
ஊன் எண்ணங்கள் எப்போதுமே!
தொளிவானவைதான்!
ஒன்று மட்டும் நானுரைப்பேன்!
என்னுடல் எரியும் போதும்!
உன் நினைவுகள் மட்டும்!
பசும் புல்லென!
நிலைத்திருக்கும்!
!
சத்தி சக்திதாசன்

விடுதலை

இ.இசாக்
பூங்கா !
அருங்காட்சியகம் இவை மட்டுமின்றி !
இப்போது புதிதாக !
வெளிநாட்டு பறவைகள் !
வந்திருக்குமிடம் பற்றியும் !
சொல்லிச் செல்கிறார்கள் !
பார்த்து வந்தோர் பலர். !
செய்தி தாள்களும் !
வண்ணப்படங்களுடன் கதைவிடுகின்றன !
சுற்றிப்பார்த்தலின் சுகங்கள் பற்றி. !
எனக்கும் !
இல்லாமலில்லை !
சென்று பார்க்கும் ஆசை !
விரும்பியபடி !
சென்று !
பார்த்து ரசித்து திரும்ப !
ஒப்பந்தக் கூலிகாரனுக்கும் !
வாய்க்க வேண்டும் !
பறவைகளைப் போல !
சுதந்திரமான !
வாழ்க்கை

மெஹந்தி

ருத்ரா
பட்டி விக்கிரமாத்தித்தன்களிடம் போய்!
இந்த வரம் வாங்கி வந்தேன்.!
கூடு விட்டு கூடு பாய்ந்து!
மெஹந்தி பிழியும்!
இந்த கூம்புக்குள்!
கண் கூம்பி தவம் இருந்தேன்.!
இந்த பியூட்டி பார்லருக்குள்!
அவள்!
இன்று இதே நேரம் வருவாள்!
என்று எனக்குத்தெரியும்.!
அப்படித்தான் அவள் தோழியிடம்!
பெசிக்கொண்டாள்.!
அதோ சல்வார் கம்மீஸ்களின்!
சரசரப்புகள் ஒலிக்கிறதே.!
கண்கள் மூடி காத்திருந்தேன்.!
கனவு விரித்து கூம்புக்குள்!
சுருண்டு கிடந்தேன்.!
இன்னும் சற்று நேரத்தில் அவள்!
பொன் காந்தள் விரல்களில்!
மின்னல் பூங்கொடிகளாய்!
பின்னிக்கிட‌ப்பேன்...அவ‌ள்!
உள்ள‌ங்கையில் என்!
உள்ள‌ம் ப‌திப்பேன்.!
செம்ப‌ஞ்சுக்குழ‌ம்பில் அவ‌ள்!
நாண‌த்தை பூசிய‌போதெல்லாம்!
அந்த ந‌றும்பூச்சில் நான்!
பூக்க‌லாகாதா? என்ற‌!
ஏக்க‌த்தையெல்லாம்!
இப்போது போக்கிக்கொள்வேன்.!
இந்த‌ பூ ஓவிய‌ம் கொண்டு!
அவ‌ள் முக‌ம் மூடிக்கொள்ளும்!
போதெல்லாம்!
சூரிய‌னைக்க‌ரைத்து!
ச‌ந்திர‌னில் ஊற்றிக்குடித்த‌து போல்!
வெப்ப‌மும் த‌ட்ப‌மும்!
க‌ல‌ந்து சுவைப்போம்.!
ச‌ரி.இருங்க‌ள்.!
மெஹ‌ந்தி!
ஏழுவ‌ர்ண‌ அருவியாய்!
இற‌ங்கி விட்ட‌து.!
அடடா! ஐயோ!!
அமில‌க்க‌ட‌லில் விழுந்த‌து போல்!
உட‌லெல்லாம் எரிகிற‌தே.!
ஆயிரம் ஆயிரம் வாட்ஸ்!
மின்சாரம்!
பாய்ந்தது போல் அல்லவா!
இருக்கிறது.!
கற்பு எனும் நெருப்பு!
இது தானோ..!
அய்யய்யோ!
தாங்க முடியவில்லையே!!!
என்ன‌ கூத்து இது?!
மெஹ‌ந்தி ப‌ட‌ர்ந்த‌து!
அவ‌ளுக்கு அல்ல‌.!
அவ‌ள‌து தோழிக்கு!!
அவள் வரவில்லை.!
அவள் தோழி..!
அதான்..அந்த‌!
நெட்டக்கொக்கு!
கழுத்தாள் தான்!
வந்திருக்கிறாள்..!
அய்யகோ என் செய்வேன்..!
அட! சட்!!
நிறுத்து!!
ஏன் இந்த புலம்பல்?!
இது கொலவெரி யுகம்.!
21.. 22 ...23..ஆம் நூற்றாண்டுன்னு!
போய்க்கினே இருக்கணும்.!
இப்ப‌!
என்னாண்ற?!
சும்மா..ஜாலியாய்!
டைம் பாஸ்ஸுக்கு!
தோழி மேல் தான்!
படர்ந்தால் என்ன?!
வண்ண வண்ண பூங்கொடியாய்!
அவள் கைகளில் இறங்கினேன்.!
என் தாவு தீர்க்க‌!
தோள் கொடுத்த‌!
தோளி அவ‌ள்!!
அய்யோ! அய்யோ!!
உட‌ம்பெல்லாம் எரிகிற‌தே!!
யாராவ‌து காப்பாத்துங்க‌..!
ஆயிர‌ம் ஆயிர‌ம் க‌ம்ப‌ளிப்பூச்சிக‌ளாய்!
கையெல்லாம் ஒரே கொப்ப‌ள‌ம்..!
சீக்கிர‌ம் காப்பாத்துங்க‌...!
இப்போ..!
அந்த‌ தோழி தான்!
அல‌றினாள்! அர‌ற்றினாள்!!
ம‌ய‌ங்கிச்சாய்ந்தாள்.!