தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விரிகின்ற தாமரையோ!

சத்தி சக்திதாசன்
நித்தமொரு மாலையிலே!
முத்தமிடும் வேளையிலே!
சத்தமின்றித் தென்றலது!
யுத்தமொன்று புரியுதன்றோ!
மலரொன்றின் ஏக்கத்திலே!
புலர்கின்ற மாலையிலே!
துலர்கின்ற இன்பத்தினை!
உணர்கின்ற தாக்கமது!
இயற்கையின் கானத்தில்!
கேட்கின்ற ராகத்தில்!
பிறக்கின்ற சாரத்தில்!
சுரக்கின்ற நாதமழை!
நினக்கின்ற வேளையிலே!
நனைக்கின்ற நினவுமழை!
கனக்கின்ற சுமைகளெல்லாம்!
மறக்கின்ற கோலமது!
சிதறுமந்த எண்ணத்துளிகள்!
சேர்ந்து ஒரு குட்டையாகி!
மலர்கின்ற கவிதையது அதிலே!
விரிகின்ற தாமரையோ !

உதிரத்தின் வாடை.. ஒரு பயணம்

துர்கா
01.!
உதிரத்தின் வாடை!
-----------------------!
உறைந்து கிடக்கும் உதிரத்தின் வாடைகளுக்கிடையில்..!
ஒப்பாரி ஓலங்கள் பதிய வைத்துச்!
சென்ற நினைவுச் சிதறல்கள்!
பரந்த வெளியில் மௌனித்து!
உறங்கும் தருணமிது!
எங்கெங்கு தேடினாலும்!
தமிழனின் வாடை!
நிசப்தமாய்...!
ரீங்காரமாய்...!
நடுக்கமாய்...!
ஒய்யாரமாய்..!
அழுகையாய்...!
உறைந்து கிடக்கும் பனியாய்...!
இப்படி மண்ணெங்கும் பல தோரணையில்...!
துர்நாற்றம் வீசும்!
பெண்ணின் கற்பப்பைகள்!
உடலுக்குள் ஏற்றப்பட்ட சுமை!
உடைபட்டு வெளியேறும் தருணம்!
உதிரத்தின் வாடை!
பகிர்ந்தளிக்கப்படா கொந்தளிப்பாய்!
உருமாறி உயிர் கொல்லும்!
மௌன நிலையில்!
நுகர்ந்து கொள்ளப்பட்டு!
மீண்டும்...!
உதிரத்தின் வாடை!
விஸ்வரூபமாகி வெடிக்கத் தயாராகிறது!
விதையாகித் துளிர்க்க....!
!
02.!
ஒரு பயணம் ...!
------------------------!
உடல் உணவைத் திண்கிறது!
மனம் எண்ணங்களைத் திண்கிறது!
மௌனம் சொற்களைத் திண்கிறது!
விழிகள் அன்பைத் திண்கிறது!
சுவாசம் உயிர்பைத் திண்கிறது!
எத்தனையோ முறை எத்தனையோவற்றை!
விழுங்கி தான் வாழ்க்கை!
பிரதிபலிக்கிறது...!
கடத்து வந்த காலப் பயணங்கள்!
சொல்லிச் சென்ற அனுபவங்களால்!
செதுக்கப்படும் சிற்பமாய் வாழ்க்கை!!
எத்தனையொ தருணங்கள்!
துரத்தியடிக்கப்படுகின்றன!!
அறிவின் செம்மை சூழ்நிலைக்குள்!
சிக்கிக் கொண்டு எதிர்திசையில்!
போராடுகிறது...!
துர்நாற்றம் வீசும் பொழுது!
மூக்கின் துவாரங்கள் துடைக்கப்படுகின்றன!
நாற்றத்துடன் மனம் பேசிய!
ரகசியத்தால்..!
விடைகொடுக்கப்படாத பயணங்கள்!
தொடர்ந்து கொண்டு தானிருக்கும்!!
எதை எதையோ தின்று தான்!
பயணம் தொடர்ந்து கொண்டுறிருக்கிறது!
நித்தமும் யோசிக்கும் பொழுது!
செயலூக்கம் பெறும் நினைவுகள்

அரசியல்.. சமுதாயம்

கல்முனையான்
01.!
அரசியல்!
------------!
ஆன்மாக்களை அறுத்துப் பிழிந்து மனச்சாட்சியை எரித்து!
சுயநலம் என்ற அமிலமூற்றி மைபோல் குழைத்தெடுத்து!
சமுதாய மேனியிலே முழுவதுமாய் பூசிவிட்டு ஏமாற்ற வெயிலினிலே!
ஆயுள் வரை வெறுமையாய் நிற்கின்ற ஊமை.!
வாக்குறுதிகளின் வாய்களெல்லாம் கட்டப்படும் தொழுவமாய்!
ஏழைகளின் கண்ணீரால் நிரம்பிவிட்ட தடாகமாய்!
பொய்யிலே மையெடுத்து ஊமையின் இமைக்கு மை பூசி!
நிர்வானக் குறிக்கோளுடன் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் நெடுமரம்!
கால் வயிற்றுக் கஞ்சியினையும் கனிவோடு ஏற்கின்ற!
ஏழையின் எலும்புகளில் வாக்குச் சீட்டை ஒட்டிவிட்டு!
பலகோடி ரூபாய்க்கு வாழ்க்கைப்பட நினைக்கின்ற கோளைகளுக்கு!
மனிதனாய் பார்த்து வழங்கும் நிச்சயதார்த்த தாம்பூலத் தட்டு!
நேர்மை என்ற சொல்லிற்கு விளக்கம் கொடுப்பதற்காய்!
விலைக்கு வாங்கப்பட்ட வெள்ளைச்சட்டையுடன்!
அடிதடியில் முதுமானிப் பட்டம் முடித்துவிட்டு!
இரவிலே காரிகையுடன் தஞ்சம் புகும் இலவச சத்திரம்!
ஆக, அரசியல் என்ற பூக்கடையில் சாக்கடையை கலந்துவிட்டு!
ஒய்யாரமாய் ஓய்வெடுக்கின்ற பெரிய மனிதர்களின்!
அந்தப்புரங்களில் ஏழையின் உண்மையான உணர்வுகள் இன்னும் கொத்தடிமையாய்!
சிறைப்பிடிக்கபட்டு சின்னாபின்னமாகின்ற நிலை எப்போது மாறுமோ?? !
02.!
சமுதாயம்!
------------------!
இதயத்தின் இடுக்குகளில் இலைமறையாய் வாழ்கின்ற!
இளமையின் இரண்டாம் ஜென்மப் பிறப்பினைப்போல்!
அடிக்கடி புனர் ஜென்ம்ம் எடுக்கின்ற ஏழைக் குலத்தின்!
ஆறாவது அறிவாய் ஆக்ரோசிக்கிறது என் சமுதாயம்.!
முதியோரைக் கண்டால் மரியாதை செய்து பழக்கப்பட்ட!
சின்னஞ் சிறு பிள்ளைகளின் சிறகடித்த சிந்தனைகள்!
இன்று கால் மேல் கால் போட்டு சரிசமமாய் பழகும்!
பக்குவப்பட்ட சமூகத்தின் பாசாங்கு வேசங்களாயிற்று.!
மாணாக்கராய் கண்சிமிட்டும் மனித குலக் கொழுந்துகளின்!
கல்விப்பாதைகளை முளையிலேயே கிள்ளிவிட்டு!
சினிமாவின் மோகத்தில் சிலிர்த்துவிட்ட மேனியினை!
தட்டிக்கொடுத்துவிட்டு எட்டிப்பார்க்கும் எட்டப்ப சமூகம்.!
நவீனத்து இளவல்களை நாகரீக சாயம் புசி!
நாட்டு நடப்பினையும் வீட்டுப் பொறுப்பினையும்!
குழியினுள்ளே இறுமாப்பாய் கொட்டிவிட்டு போதை என்ற!
மாயக் குகையினிலே மல்லாக்க படுக்கவைக்கும் சமூகம்.!
பெண்மை என்ற உண்மையின் வெண்மையை அறியாது!
சோஷலிசக் கொடியின் கீழ் ஆடைகளின் கஞ்சத்தனமும்!
பார்வைகளில் காமத்துளியை கரைத்துவிட்ட வீராப்புமாய்!
வெறிச்சோடிப்போன நெஞ்சங்களாக்கும் சமூகம்!
முதியோர்கள் என்ற முன் மாதிரியை முறித்துவிட்டு!
அநாதை விடுதிகளில் அம்மாக்களும் அப்பாக்களும்!
அலைமோதும் அருவருப்பான அடையாளங்களை!
முத்திரை பதித்து முக்தி பெற்ற என் சமூகம்.!
சிறார்கள், மாணாக்கர், இளைஞர்கள், பெண்கள், முதியோர்!
போன்ற சமூகத்தின் ஐம் புலன்களும் மலடாகி!
கொலை, கொள்ளை,கற்பழிப்பு சீழ்கள் வடிந்தோடும்!
சாக்கடை சகதியாய் படிந்து கிடக்கிறது சமூகம்

ஜிகாத்

காஜா
எல்லாவற்றையும் !
நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன் !
உன் ஒவ்வொரு அசைவையும் !
நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன் !
டிசம்பர் ஆறாம் தேதியிலிருந்து !
வெள்ளப் பெருக்கில் மிதந்துவரும் !
பிணங்களை !
கண்ணீர் ததும்பும் விழிகளோடு !
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன் !
யார் அடியெடுத்து வைத்தாலும் !
மனிதர்கள் மனிதர்களாக !
மாறப்போவதில்லை !
வைக்கப்படும் ஒவ்வொரு காலடியும் !
கற்களாகவும் வெறியர்களாகவும் !
மாறுவதை !
நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் !
என் பசித்த வயிற்றுக்கும் !
என் ஒருபிடி சோற்றுக்கும் இடையில் நின்ற !
அல்கபீர் கேரோ, !
ஹீப்ளி ஈதாக் மைதானத்தில் !
திரிசூலத்தைப் போலப் பாய்ந்து நின்ற !
அந்தக் கொடிமரம், !
என் சாணக்கிய மூளைக்கும் கீழே !
நொறுங்கிய மதுரா !
எல்லாவற்றையும் நான் !
கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். !
இந்தி வாரம் என் வீட்டிற்கு வந்த !
ஒளிவிளக்கு என்று நினைத்தேன் !
ராஜீவம் என் மரபின் !
நறுமணம் என்று நினைத்தேன் !
அவற்றை என் தலையால் தாங்கினேன் !
என் கனவு மலர்களின் மீது !
நடந்த பிறகு !
என் பைஜாமாவைத் திறந்து !
என் மதநம்பிக்கையை !
பார்த்த பிறகு !
நீங்களும் மாறினீர்கள் !
வாமனின் காலடியாக !
கொடூரமாக !
என்னை வெட்டிய பிறகு !
என் இரத்தத்தால் திலகமிட்ட பிறகு !
காகிதப்பூ குடியுரிமையுடன் மட்டும் !
நான் எஞ்சி நிற்கிறேன் !
இடிப்பதற்கு எதுவுமே இல்லாமல் !
நீங்கள் எரிச்சலடைந்திருக்கலாம் !
பொறுமையிழந்திருக்கலாம் !
உங்கள் கழுகுக் கண்கள் !
ஒருமுறை நோட்டம் விடட்டும் !
எங்கள் பைத்தியக்காரப் பாட்டன் ஒருவன் !
எங்கள் பாட்டியின்மீது !
கொண்ட காதலை !
பால்நுரையாக மாற்றிக் கட்டிய !
அந்த நிலவொளி மாளிகை !
யமுனைக் கரையின் ஓரத்தில் !
இன்னமும் இருக்கத்தான் செய்கிறது !
தில்லியின் மேட்டில் !
கிழக்கு வானத்தைத் துண்டித்து !
வைத்தது போலவும் !
இரத்தத்தைப் பூசிக் கொண்டது போலவும் !
இருக்கிறது அந்தக் கோட்டை. !
உன் மதவெறிக்கு !
இன்னும் இருக்கிறது தீனி !
குதுப்மினார், சார்மினார் !
புலாந்த், தர்வார், ஜீம்மா மசூதி !
மெக்கா மசூதி, மகாராஜா அரண்மனை !
அனைத்தும் என் சுவடுகள். !
இடித்துக்கொண்டே இரு !
நீ இடித்தபோதும் சரி !
தொண்டைகளை அறுத்தபோதும் சரி!
கேள்விகளே இல்லை !
ஆனால் நீங்கள் !
நாட்டைப் பிளந்து !
கிராமங்களில் வளர்ப்பது மிருகங்களை. !
என்னால் தாங்க முடியவில்லை !
பிணத்தைப் புணர்ந்து பிழைக்கும் !
உனக்கு !
ஊயிர்த்தெழ வைக்க !
பிணங்கள் தேவையென்றால் !
இனி தவிர்க்க முடியாது !
விழும் முதல் பிணம் !
உன்னுடையதாகத்தான் இருக்கும். !
- காஜா (புதிய கையெழுத்து: தற்கால தெலுங்குக் கவிதைகள் தொகுப்பு) !
- காஜா 1969 இல் பிறந்தவர். பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர்

தூரமும் பக்கம்தான்

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
!
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
காலங்கள் பல நாம் இணைந்தே வந்தோம் !
கண்டது பாதையில் கற்களும் , முட்களுமே ! !
அதோ பார் ! !
பசுந்தரையன்று பச்சையாய் நம்முன்னே !
தூரம் கொஞ்சம்தான் கூட வா நண்பனே ! !
துன்பத்திலே பங்கெடுத்தாய் !
இன்பம் னரம் ஆதிகமில்லை !
இப்போது ஏன் பாதை மாற்றம் !
தூரம் கொஞ்சம்தான் !
கூட வா நண்பனே ! !
வாடிநின்றவேளை பசியால் , நாம் !
புசித்திருந்தது நமது நட்பையே !
வயிறார உண்ணும் ஓர் வசதி !
வரும் வேளை ஏன் தோழா !
வழிமாறப்போகிறேன் என்கிறாய் ? !
எதிர்காலம் ஒன்று வெளிச்சமாய் தெரிகிறதே !
தூரம் அதிகமில்லை என்னோடு கூட வா ! !
பாசம் எனும் விலங்கினால் பிணைத்து !
வாசம் அற்ற !
வாழ்க்கையில் காலம் எனைத் தள்ளி விட்ட போது !
வழித்துணையாய் வந்தவனே !
விடுதலை எனும் ஊரை நெருங்கி விட்டோம் !
விரக்தியோடு ஏன் இன்று !
விடைபெற்றுப் போகின்றாய் னரம் !
கொஞ்சம்தான் கூட வா ! !
நட்புக்கோர் இலக்கணமானவனே !
நன்றியை நான் செலுத்தும் முன்னே !
நெஞ்சத்திரையில் ஏன் உந்தன் காட்சியை !
நிறைவு செய்ய துடிக்கின்றாய் ? !
தொடர்ந்து செல்வோம் வா தோழனே !
விடுதலைக் காற்றை சுவாசித்துக் கொள்வோம் !
வேதனைகளை விற்று கொஞ்சம் சாதனைகளை !
வாங்கிக் கொள்வோம். !
நட்பெனும் தோணியில் ஆழ்கடலைத் !
தளும்பாது தாண்டி விட்டோம் !
தயங்காமல் தரை மட்டும் கூட வா

பனித்துளி புகட்டிடும் பாடம்

சத்தி சக்திதாசன்
பச்சைப் பசேலெனும்!
பசும் புற்தரையினில்!
பொன்னொளி பூத்தது!
போலொரு பனித்துளி!
மின்னுது நுனியில்!
உள்ளத்தின் விசாலம்!
உருவத்தில் இல்லை!
உண்மை அதனை!
உணர்த்திடும் பனித்துளி!
சின்னஞ்சிறிய பனித்துளியினுள்!
அழகாய்த் தெரியுது!
ஆலமரத்தின் அழகிய வடிவம்!
அறியும் உள்ளம் வாழ்வின் உண்மை!
இயற்கையின் வனைப்பில்!
இத்தனை படிப்பினை!
இருப்பதை அறியாமல்!
இறுமாப்புக் கொள்வது சரியோ!
இதயம் விரித்து அன்பைப்!
பொழிந்து இன்பம் காண!
செல்வம் வேண்டாம்!
இளகிய மனமே போதும்

இப் புத்தாண்டிலாவது உணருமா?

இமாம்.கவுஸ் மொய்தீன்
இப் புத்தாண்டிலாவது உணருமா?!
---------------------------!
அச்சு ஊடகம்!
காட்சி ஊடகம்!
எதைத் திறந்தாலும்!
கொலை கொள்ளை!
கடத்தல் கற்பழிப்பு!
நாச வேலைகள்!
அத்துமீறல்கள்!
அராஜகங்கள்!
ஆக்கிரமிப்புகளென!
நாள்தோரும்!
நெஞ்சைப் பதைக்கும்!
செய்திகளாய்!
அழிவுச்சக்திகளின்!
ஆதிக்கம்!!
ஒரு கன்னத்தில்!
அறைந்தால் !
மறு கன்னத்தைத்!
திருப்பிக் காட்டு!
என்றார் ஏசுபிரான்!!
அவரின் போதனைகளைக்!
காற்றில் விட்டதின்!
விளைவே!
இந்நிகழ்வுகளின்!
பிரவாகம்!!
அஹிம்சையைக்!
கடைபிடித்ததுடன் -அதைப்!
போதிக்கவும் செய்தார்!
மஹாத்மா காந்தி!!
இந்தியாவும் கடைபிடித்தது!!
அதன் மகத்தான !
சாதனையே!
இந்தியாவின் விடுதலை!!
உலகமே கண்டு!
வியந்து போற்றும்!
இப் பேருண்மையை!
விடுதலைக்காக இன்னும்!
போராடிக் கொண்டிருக்கும்!
நாடுகள்!
இப் புத்தாண்டிலாவது!
உணருமா?!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

வாழ்க்கை நினைவுகளின் எச்சம்

வி. பிச்சுமணி
நினைவு தெரிந்த நாள்!
யாதென யாருக்கு தெரியும்!
உடனே நினைவில் வருவது !
அடம் பிடித்து!
அட்டை போட வைத்திருந்த!
பழுப்புதாள் கற்றையை !
ஒன்றாம் வகுப்பு ஆசிரியை!
எடுத்து கொண்டது !
அம்மாவை பெத்த தாத்தா!
இறந்த விட்ட பொழுது!
ஐந்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு!
தனியே பேரூந்தில் சென்றது !
தனி பயிற்சிக்கு செல்லாது!
மாட்டிகொண்டு!
அம்மாவிடம் அடிவாங்கியதென!
சின்ன சின்ன நினைவு திட்டுகள் !
நினைவுகள் மங்கும் நாளில்!
நினைவுகளில் நிற்கும் நினைவுகள்!
பத்து பக்கம் கூட தேறாது !
மற்றவர்கள் நினைவுக்கு!
விட்டு செல்லபோவதென்னவோ!
பெயரும் தோற்றமும் மறைவும்!
ஆக்கிரமிப்பு அகற்றலிலோ!
சாலை விரிவாக்கத்திலோ!
அதுவும் கூட அகற்றபடலாம் !
எள்ளுபெயரன் காலத்தில்!
என்னை பற்றிய!
எல்லாமும் போய்விடும் !
வாழ்க்கை நினைவுகளின் எச்சம்!
எச்சமும் சொச்சமில்லை!
சொச்சமில்லை யென்றாலும்!
சொர்ககம் தான் வாழ்க்கை

பருவ மழை

லலிதாசுந்தர்
மழலைப்பருவத்தில்!
மண் வாசனை கிளப்பிய மழையில்!
அப்பா குடைப்பிடிக்க தம்பியுடன்!
காகிதக்கப்பல் விட்ட ஞாபகம்!
பள்ளிப்பருவத்தில்!
விடுமுறைகிடைக்குமென்று!
அதிகாலை மழை வேண்டி!
கடவுளுக்கு காசுகொடுத்த ஞாபகம்!
கல்லூரி நாட்களில்!
பையில் குடையிருந்தும்!
அதை கையில் எடுக்காமல்!
நண்பர்களுடன் நனைந்த ஞாபகம்!
இன்று!
கையில் குடை இல்லாவிடினும்!
நனையாமல் செல்லும்!
ரெயின் செட்டரில் சென்றாலும்!
ஏனோ!
அந்த நாள் ஞாபகம்!
நெஞ்சில் ஊஞ்சலாடுகிறது!
மழைக்காலம்!
அது ஒரு கனாக்காலம்

மழைக் காட்சி

விடிவெள்ளி
கானகத்து மிச்சமாய்!
கடந்த காலத்தின் எச்சமாய்!
கல்லூரியின் கருத்த மூலையில்!
கம்பீரமாக!
நெருப்பின் மலர்களை வீசி!
காற்றைக் கொளுத்தி!
கதிரவனைக் கலங்கடிக்கும்!
அந்த!
மஞ்சள் கொன்றை,!
இன்று மௌனமாக!
தலை குனிந்து!
தன் உடல் வழியே!
வழிய விடுவதை!
மழை நீர் என்கிறாய் நீ!!
இல்லை நண்பா!
இல்லை!!
மண்ணைத் தொட்ட!
நீரின் சிலுசிலுப்பில்!
வேர் சிலிர்க்கும் முன்பே,!
நீரூற்று பாறைகளின்!
வேர்க்கால்களை துளைத்த!
பெப்சியின் ஆழ்துளை பைப்புகள்,!
வானத்தின் ஈரத்தை!
களவாடும் ஈனத்தை!
உணர்த்த – உனக்கு!
உணர்த்த!
கசிய விடுகிறது!
தன் உயிரை!
கிளை வழியே!
இலை வழியே