தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தாகம்

நீதீ
தினம்தோறும் !
திரளாக செல்கிறோம்!
திரவியதேசத்திற்கு!
சொல்லித்தான் பிரிகிறோம்!
எங்களின் வீட்டை!
மீண்டு வருவோம் என!
மிதமான நம்பிக்கையில்!
சமுத்திரத்தின் நிச்சலனத்தினூடே!
கரைசேரும் கனவில்!
இருண்மையின் தழுவலில்!
எங்களின் பயணம்!
அலைகளின் விழிம்பில்!
எங்களின் அழுகையின் நீரும்!
இருண்மையின் விலகல்வேண்டி!
தொடர்கிறது!
தொடுவானமாய்!
எங்களின் தாகம்!!
கவிஆக்கம்: நீ தீ

வாழ்க்கைப் பயணம்

ரசிகவ் ஞானியார்
நீ யாராகிலும் இருக்கலாம்!
உன் எண்ணங்கள் ...!
உன் பழக்கங்கள் ...!
உன் கலாச்சாரம் ...!
வேறாயிருக்க கூடும் !!
என் பயணம் முழுவதும் ...!
நீ வேண்டும் !!
உன் ஜாதி , மதம் , மொழி பற்றி!
எனக்குக் கவலையில்லை!
என் பயணம் ...!
உன்னால் இனிமையாக வேண்டும்!
அவ்வளவுதான்!!
எனக்காக நீயும் ...!
உனக்காக நானும் ...!
சின்ன சின்ன விட்டுக்கொடுத்தல்கள் !!
காத்திருந்து உணவுண்ணும்!
கண்ணியம் !!
நீ எனக்குமாய் ...!
நான் உனக்குமாய் ...!
தவணை முறை பாதுகாப்புகள் !!
தங்குகின்ற இடம் ...!
யாருக்கும் நிரந்தரமில்லை!!
நட்பு நிரந்தரமாகட்டும் !!
பேச்சு, சிரிப்பு, அன்பு!
எல்லாம் ...!
பொய்யின்றி கடைசிவரை !!
என் பயணத்தின்!
இறுதிவரையிலும் இப்படியே ...!
இனிய துணையாக!
அமைந்துவிட்டால் ...!
அழகாகவே இருக்ககூடும்!
இரயில்பயணமும், வாழ்க்கையும் !!
- ரசிகவ் ஞானியார்!
!
-- !
K.Gnaniyar!
Dubai

பொங்கட்டும் பொங்கல்

இமாம்.கவுஸ் மொய்தீன்
பொங்குக பொங்கல்!!
பொங்கட்டும் பொங்கல்!!
தமிழர் இல்லந்தோறும்.!
பொங்குக பொங்கல்!!
பொங்கட்டும் மகிழ்ச்சி!!
தமிழர் உள்ளந்தோறும்.!
பொங்குக பொங்கல்!!
பொங்கட்டும் தமிழுணர்வு!!
தமிழர் இதயந்தோறும்.!
பொங்குக பொங்கல்!!
முழங்கட்டும் தமிழே!!
தமிழர் நா யாவும்.!
பொங்குக பொங்கல்!!
தழைக்கட்டும் முயற்சி!!
தமிழர் ஏற்றம் பெறவே.!
பொங்குக பொங்கல்!!
வேண்டுக இறைவனை!!
தமிழர் ஈழம் பெறவே.!
பொங்குக பொங்கல்!!
பொங்கட்டும் இனஉணர்வு!!
செழிக்கட்டும் தமிழர் வாழ்வே.!
பொங்குக பொங்கல்!!
பொங்கட்டும் விவேகம்!!
அழிக தமிழர் பகையே! !
-இமாம்.கவுஸ் மொய்தீன்

காதலாகி

இ.இசாக்
இ.இசாக்!
கருவமரத்துப் பிசினில்!
சிக்கியிருந்த!
வண்ணத்துபபூச்சியை!
எடுத்துப்!
பறக்க விட்டபோது!
ஓடிவந்து!
ஒட்டிக்கொண்டது!
காதல்!
நான்!
பணியில் ஆழமூழ்கியிருந்தபோது!
நண்பன்!
கொண்டு வந்து கொடுத்தான்!
உன்மடலை!
பிரிக்காமலே படித்துக்கொண்டிருந்தது!
மனசு!
வெளியீடு:!
சாரல்,!
189.அபிபுல்லா சாலை,!
தியாகராயர் நகர்!
சென்னை-17

நீள் காலம்

சின்ன பாரதி
விடிந்தும் விடியாத காலைப்பொழுது!
நிலவன்!
இரவுக்காவல் முடித்திருந்தான்...!
விண்வெளிகள்!
வெளிச்சத்தின் வீரியம் குறைத்துக்கொண்டன...!
வானம் அதிசயித்தது!
பகலம் இருட்டைத் தின்றான்!
பகல் மிச்சத்தில் பனித்துளி!
இறகுவாங்கிப் பிறந்தது!
மொட்டுகள்!
புல்வெளி திறந்து!
அந்தரங்கள் காட்டின...!
அல்லி மூடிய சிரிப்பை!
தாமரை தாரைவாங்கிக் கொண்டது...!
காற்று!
எல்லாப்பக்கமும் கலவியோடி!
அயர்ந்துகிடந்தது...!
மரங்களும் செடிகளும் கொடிகளும்!
வேர் நிறுத்தி மெல்ல தலையசைத்தன!
தென்றல் அப்பொழுது தான்!
நந்தவனப் பூக்களின்!
நலம் விசாரித்துத் திரும்ப!
தெருக்களின் நான்கு எல்லையும்!
ஆக்கிரமித்து, தன்!
கட்டுக்குள் வைத்து மணத்தது!
வயல்களில் பாய்ந்து!
வடிகால் வந்த நீர்!
வேர்களின் விசால வரவேற்பை!
வெளியெங்கும் சொன்னது.!
தாளம் தப்பியக் குரலில் தவளை!
தன் இருப்பிடம் சொன்னது பாம்புக்கு!
கோக்கு குளக்கரையோரம்!
குத்தவச்சது மீனுக்கு!
ஏரியில் நரியிடம் முகம்காட்டி!
நண்டு வளைக்குள் போனது!
தாய்மடி முட்டுவதும்!
தள்ளித்துள்ளிக் குதித்தாடிவரும்!
பசுவோடு கன்றுக்குட்டி...!
மார்க்காம்பு கொடுக்க மறுத்தது குட்டிக்கு –ஆடு!
நாய் குரைக்கக் கேட்டு...!
கோழி இறகுக்குள் காத்தது, தன்!
குஞ்சுகளை வல்லூறு வருவதாய்!
சேவல் உரைத்தது செவிலிகளில்...!
கிழக்கே!
கடளைக்குக் களையெடுக்கக் கருப்பாயி வாரேன்னா!!
இருபதாளு வரச்சொல்லு இண்ணிக்கே முடிச்சிடலாம்!
அம்மா –அக்காவுக்கு.!
வாழை குலைதள்ளும் காலம்!
கீழ்கட்டை வெட்டி மண்ணணைக்க ஆள்கூப்பிடு!
அப்பா –அண்ணனுக்கு.!
ஆடிப் பெருக்கை முன்னிட்டு!
அம்மன் கோயில் தேர்த்திருவிழா!
ஊர்ப்பெரியவர்கள் கூடி முடிவு.!
தண்டோராச் செய்தி.!
ஒருவாரத்திற்கு முன்பே!
உறவுகளுக்குச் சொல்லியனுப்பு!
திருவிழாவுக்கு வந்திருந்து!
தின்னு குடிச்சிப் போக...!
தாத்தா - அப்பாவுக்கு.!
விடியும் பொழுது - இது திருச்சி வானொலி நிலையம்!
ஆணித்திங்கள் இருபதாம் நாள்!
வளரும் வேளாண்மை பற்றி!
தஞ்சை மாவட்ட விரிவாக்கப் பணியாளர்!
பஞ்சாயத்து ஒலிபெருக்கி... !
சோறு எழுத்து வர!
சுடலைமுத்துக்கு சொல்லிடுறேன்!
பழஞ்சோறும்!
அடைமாங்காயும் மோரும் மிளகாயும்!
வடக்கு வயலுக்கு வந்தாப் போதும்!
எட்டுரெண்டு பதினாறாளுக்கு!
கரும்புக்கு வடம்பிடிக்க கலப்பை எடுத்துப்போறேன்!
சித்தப்பா - சித்தி!
இந்த பால மட்டும்!
குடிச்சிடடாச் செல்லம்!
பாட்டி – எனக்கு !
அழுது அடம் பிடிச்சா!
பூம்பூம் மாட்டுக் காரன்கிட்ட!
புடிச்சிக் கொடுப்பதாய்!
அத்தை அறைக்குள்ளிருந்து... !
ஈருழவு மழைபொழிஞ்சதால!
கடைமடை வரை நீர்கனத்திருக்கு!
கிராமவாசி உழவரிடம். !
இப்படிச் செல்லமாய் நானிருந்த!
சிறப்பெல்லாம் அக்காலம்...!
சிங்காரமாய் ஊரிருந்த!
பெருமையெல்லாம் அக்காலம்...!
கூட்டாய்க் குடும்பமிருந்த!
குலப்பாசமெல்லாம் அக்காலம்...!
நலமாய் மக்களிருந்த!
நன்னில நாடும் அக்காலம்.!
!
-சின்ன பாரதி

வேலைக்கு போகிறேன்

அக்மல் ஜஹான்
இப்படித்தான் தொலைகிறது!
நமது புன்னகைகள்!
விபத்துக்களாய்...!
தலையணை நனைக்கும்!
தூக்கம்..!
தெருமுனையில் தொங்கும்!
காத்திருப்புக்கள்..!
என்கண்கள் காலடியில் தான்..!!
ஆனாலும்!
நெருஞ்சி முள்ளாய் இறங்கும்!
தெருக்களின் எச்சில்கள்..!
பேரூந்து நெரிசலில்!
புரண்டு தவிக்கும் மானம்..!
நீ அனுப்பி வைத்த புன்னகைகள்!
கொட்டுண்டு போகிறது!
உம்மா..!!
இத்தனை தொலைவுகளிலும்!
என்னை தொலைக்காமல்!
இறுக்கி பிடித்தபடி..!
வேலைக்கு போகிறேன்..!!!
எனக்குள் தொங்கும்!
எல்லாக் கேள்விகளோடும்!
அலுவலக முகங்களின்!
அதிகார பார்வைகள்!
நெருக்குவதும் ..!
நெருடுவதும்..!
சில நேரம்!
சலுகைகளுக்கு மட்டுமே!
என்னை சரக்காக்கும்!
உங்கள் சுயநலங்களில்!
நான் முறிந்து வீழ்வதும்....!
சுவர்களோடும் மரங்களோடும்!
மட்டுமே!
சுவாசிக்கிறதென் மெளனங்கள்..!
இப்போதெல்லாம்!
மன்னிக்கவே முடிவதில்லை..!
என்னை மௌனமாக்கி தூக்கிலிட்ட!
உங்கள் வார்த்தைகளை..!
ஓடி முடித்துவீடுதிரும்பும்!
மனசு..!
உராய்வும் கீறலும்!
ஒரு சொட்டு கண்ணீரும்!
உள்ளே ஒளித்தபடி...!!
எதையாவது தின்னேன்..!
என்ற அக்கறையிலும்!
ஓடி ஓடி ஊற்றி தரும் தேநீரிலும்!
என் உதிர்ந்து போன புன்னகை!
இனி திரும்புவதேயில்லை!
உம்மா

பத்தினி ஓதும்.. அவனும் எனக்கு

வே .பத்மாவதி
பத்தினி ஓதும் வேதம்.. அவனும் எனக்கு சொந்தம்!
01.!
பத்தினி ஓதும் வேதம்!
---------------------------- !
காற்றில் கவிபாடும்!
குழலை விரித்து!
உனக்கு கம்பளி போட சொன்னாய்!
நித்தம் நித்தம்!
நிலவு தவழும் மேனியென!
நீந்தி போகும் விண்மீன்கள்!
எத்தனை எத்தனை ..!
என் யௌவன தாள்கள் எல்லாம்!
பலரின் மோகன!
எழுத்துக்களால் கிறுக்கப்பட்டு!
மூலையில் எறியப்பட்டபோது!
வருந்தினேன்!
என்றோ மூலையில் அமர்ந்ததற்காக .....!
யாருக்குத் தெரியும்!
என் உடன் பிறப்போடு!
உதிரம் கலந்திருக்கலாம்!
என் அன்னைக்கும் தெரியாது!
தந்தையின் ரெத்தம்!
எதுவென்று!
என் இளமை பிராயத்தில்!
எனக்கு பால் ஊட்ட!
என் தாய்!
சொல்லிகொடுத்த!
அதே சூத்திரம் தான்!
அவள் முதுமை பிராயத்தில்!
பால் ஊற்றவும்!
பின்பற்றுகிறேன்!
இரண்டாம் ஜாமத்தில்!
மட்டுமே பிழைப்பு!
நடத்தும் எனக்கு!
இன்னும் புரியவில்லை!
பத்தினிகள் ஓதும்!
தலையணை மந்திரம் ...!
02.!
அவனும் எனக்கு சொந்தம்!
-----------------------------!
நான் அவனை பெற்றெடுக்கவில்லை!
நான் அவன் சகோதரியும் இல்லை!
அவனுக்கு நான் அத்தை மகளும் இல்லை!
அவன் கைபிடிக்கும் மாமன் மகளும் இல்லை!
அவன் மடிசேரும் மனைவி என்றும் நிச்சயிக்கப்படவில்லை!
எந்த வினாடியும் அவனை பற்றி நினைத்ததில்லை!
எந்த ஊரிலும் அவனை பார்த்ததில்லை!
கனவில் கூட சந்திக்க விழையவில்லை!
அவன் பெயர் கூட எனக்கு தெரியவில்லை!
எனினும் நாங்கள் சொந்தமானோம் ..!
அந்த மருத்துவமனியில்!
மனிதநேய ஊசி வழியாக!
என் ரெத்தம் அவன் உடலில் சென்ற பொது

பழகிப்போனவை

சீலன் நவமணி
பங்கரில் இருந்தே!
பாதி வாழ்க்கை போனதும்!
பாம்பு கடிபட்டு பல பேர் சாவதும்!
கூரை இல்லாமல் பள்ளி நடப்பதும்!
பாடசாலையில் படிக்கும் போதே!
பாதி கால் போவதும்!
பள்ளிக்கூடமே இல்லாமல்!
பரீட்சை எழுதுவதும்!
பாழாய்ப்போன தமிழனின்!
வாழ்வில்!
பழகிப்போனவை!
பாவம் சிங்களவன்!
பங்கரும் தெரியாது!
பாதிப்பேருக்கு பாம்பே தெரியாது!
பொம்மரை கண்டேய்!
பேயாய் சுடுகிறான்!
குண்டு போட்ட பின்னே!
பித்தலாடுகிறான்!
பழகட்டும் அவனும்!
நாம் பட்ட வேதனையின் பாதியை!
அப்போது தெரியும்!
ஈழம் தான் முடுவு என்று. !
-சீலன் நவமணி

பிம்பங்கள்

அமானுஷ்ய புத்ரன்
தாமிரபரணி ஆற்றில்!
குளித்து எழும்போதெல்லாம்!
என் மீது!
யாரோ!
தங்க முலாம் பூசிவிட்டது!
போன்ற ஒரு பிரமை.!
அந்த சிந்து பூந்துரையில்!
எதிர்க்கரையில்!
படித்துறையை பார்க்கும்போது!
அங்கெ புதுமைப்பித்தன்!
வேப்பங்குச்சியில்!
பல் துலக்கிக்கொண்டிருப்பதாய்!
ஒரு பிம்பம்!
நிழலாடுவது உண்டு.!
அந்த கயிற்றரவு!
என் காலைச்சுற்றிக்கொண்டது!
த‌ண்ணீர்ப்பாம்பை போல்.!
உயிர்க்கயிறு !
உடல்திரித்தது தான்.!
உள்ளே உள்ள‌ம் ம‌ட்டும் !
எதையும் தொடாமல் !
எப்படி திரிந்தது?.!
அதனுள் உடைந்த !
க‌ண்ணாடி வ‌ள‌ய‌ல்துண்டுக‌ள்!
க‌லைடோஸ்கோப்பாய்!
வ‌ண்ணாத்திப்பூச்சிக‌ளை ப‌ற‌க்க‌வைத்தன.!
ஏதோ ஒரு தெரு முனையில்!
ஏதோ ஒரு முக‌த்தைப் பார்த்த‌து!
ம‌ல்லிகைப் பூ போல்!
ம‌ண‌ம் க‌சிந்து கொண்டிருக்கிற‌து.!
அது எந்த‌ முக‌ம்?!
துணிக்க‌டை வாச‌லில்!
விள‌ம்ப‌ர‌த்துக்காக‌!
ஒரு முக‌த்தை !
க‌ண்ணின்றி மூக்கின்றி வாயின்றி!
மொழுக்கென்றுவைத்திருப்பார்க‌ளே!
அந்த‌ மூளிமுக‌மா?!
க‌யிற்றுப்பாம்புக‌ள்!
க‌ன‌வுக‌ள் தோறும் கொத்திப்பிடுங்கின‌.!
ம‌ர‌ண‌ப‌ய‌த்தின் இனிமையான‌!
ம‌றுப‌க்கம்!
காத‌ல் சிதையில் எரிந்துகொண்டே!
இனிப்பை தீயின் பிம்ப‌ம் ஆக்குகிறது.!
வயதுகள் நீண்டு நீண்டு !
ஒரு கயிறாகி இறுக்கும்போதும் !
அது கயிறா பாம்பா இல்லை !
அவள் நினைவின் மின்னல் கொடியா?என‌க்குள் பிம்ப‌ங்க‌ள்!
உத‌டு பிதுக்கிக்கொண்ட‌ன‌.!
புதுமைப்பித்தன் அந்த ஆற்றங்கரையில் பனங்குட்டியின் ஓலை சலசலப்புகளில் கேலியாக சிரிக்கிறார்.!
கயிறு..பாம்பு எது ஆத்மா!
என்ற‌ க‌பில‌முனிவ‌னின்!
சாங்கிய‌த‌த்துவம் காதலுக்குள் எப்ப‌டி குடை சாய்ந்த‌து?!
வேதங்களின் அப்பென்டிக்ஸ் !
எனும் குடல் வால் உபநிஷத்துகள் ப்ரச்னோபநிஷத்தில்!
இந்த பிரபஞ்சமே !
ஒரு ப்ரக்ஞை என்கிறது.!
பிறக்க நினைத்த ப்ரக்ஞை பிறக்கிறது.!
இறப்பின் சந்திப்பில் !
இன்னொரு பிறப்பின் ப்ரக்ஞை!
கடைசிச் சொட்டு செல்லில் டி.என்.ஏ,ஆர்.என்.ஏ க்களின் !
பிம்ப பிஞ்சுகளின் பிரளயம் ஆகின.!
முறுகிய !
இத்தீ வாசனையில்...!
இன்னும் அவள் முறுவல்கள்.!
பிம்பங்கள் !
பிசைந்து கொண்டேயிருக்கின்றன.!
இன்னும் இன்னும் !
பிறப்புகளாய் இறப்புகளாய்.!
சிந்துபூந்துறையில்!
அந்த‌ தாமிர‌ப‌ர‌ணி ஆறு!
புதுமைப்பித்த‌னின்...ஓர்!
ப‌ளிங்கு பிம்ப‌ம்,!
!
-அமானுஷ்யபுத்ரன்

முற்றுப் பெறாதவையாய்!

நடராஜா முரளிதரன், கனடா
எழுந்து நடக்கும் என்னிருப்பைத்!
தக்க வைத்தது என் மொழி என்பாய்!
அந்த மொழியின் கழுத்தைத் திருகி!
மூச்சுக்குழல் வாய் இறங்கி!
அகத்தைப் புறத்தே!
உருக்கி வார்ப்பதற்காய்!
எழுதுவேன் ஒரு கவிதை!
தொன்மங்களின் சுகானுபவம்!
வாதைகளாய் மாற்றம் பெறும்!
நவீனத்துவ முகம்!
உன்னுடையதென்பாய்!
மரபுகள் வழியாக!
உன் முன்னோர்!
வஞ்சிக்கப்பட்டதாய்!
சரிதங்கள் விரிக்கின்றாய்!
பழமையைக் கொழுத்தும்!
நெருப்பின் நதிமூலத்தைத்!
தேடியலைவதாக!
சீற்றம் கொள்கிறாய்!
பாறையின் ஆழத்திலிருந்து !
மயிர்துளைக்குழாய்!
வழியே எழுகின்றது!
ஒரு துளி நீர்!
வெப்பக் காட்டின் உக்கிரம்!
அதைத் துடைத்தழிக்கின்றது!
அழித்தலிலும் முற்றுப் பெறாதவையாய்!
அவை இயக்கமாய் இயங்குதலாய்!
இன்னோர் வடிவம் நோக்கி!
எனவேதான் இரத்தம் சிந்தாத!
போர்களங்களை நோக்கி!
என் மனம் அவாவுகின்றது!
ஆனாலும் மனிதர்கள்!
இரத்தம் சிந்தும்!
போர்களங்களையே விரும்புகிறார்கள்!